செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

ஜோதிடம் என்றால் ரொம்ப பிடிக்கும்


எனக்கு ஜோதிடம் என்றால் ரொம்ப பிடிக்கும்..ஜோதிடம் ஒரு அறிவியல்..ஜோதிடம் ஒரு கணக்கு...காலம் கணித்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம்..அதே சமயம் நம்,உழைப்பும்,முயற்சியும் அவசியம்..திறமை இருந்தும் ஜெயிக்காதவன்,கடுமையாக உழைத்தும் ஜெயிக்காதவன்,முயற்சி செய்தே ஓய்ந்தவன் பல கோடி...காலம் பார்த்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம்..எனக்கு ஜோதிடத்தின் மீது அதிக நம்பிக்கை உண்டு..அது பற்றி நிறைய புத்தகம் ஆர்வமாக வாங்கி படிச்சிக்கிட்டே இருக்கிறேன்..என் அலுவலகத்தில் 2000க்கும் மேற்பட்ட ஜோதிட புத்தகங்களை அடுக்கி வைத்திருக்கிறேன்..தினசரி ஒன்றை படிக்கிறேன்..ஜோதிடம் பிறருக்கு சொல்வதையும் தொழிலாகவும் மாற்றிக்கொண்டு விட்டேன்..பிடிக்காத வேலையை செய்வதை விட பிடிச்ச வேலையை செய்வது,அதன் மீது பொருள் ஈட்டுவது தான் சரி என நினைக்கிறேன்..ஜோதிடம் என்பது ஏமாற்று,பொய் என அதை பற்றி சிறிதும் முயற்சித்து ஆராயாமல் பொத்தாம் பொதுவாக பேசுபவர்களை நான் ..அவர்களது அறியாமை என ஒதுங்கிவிடுவேன்..

நான் இன்னும் செய்ய வேண்டியது என யோசிக்கும்போது நான்
 படிச்சதுல பிடிச்சது,ஜோதிடத்தில் முக்கியமான சின்ன சின்ன தகவல்களை இங்கு பகிர ஆரம்பிச்சிருக்கேன்..ஏன்னா என் பக்கத்துல எனக்கு பிடிச்சதை தான் எழுத முடியும்.என்னைபோல ஜோதிடத்தில் ஆர்வமாக இருக்கும் நண்பர்களுக்கு இது பயன்படும்..ஜோதிடம் பற்றி முடிந்தளவு எளிமையக பகிரும்போது,அதை பற்றி சிறிதும் அறியாதவர்களுக்கு கொஞ்சம் புரியவும் தொடங்கும்...ஜோதிடத்தை அவநம்பிக்கையாக பார்ப்பவர்களுக்கு கொஞ்சம் நம்பிக்கை உண்டாக்க முடியும் என்றாலும் மகிழ்ச்சியே..அது 10 பேரா இருந்தாலும் சரி..

வெறும் ராசிபலன் மட்டும் ஜோதிடம் அல்ல...பிறந்த ஜாதகம் மட்டும் ஜோதிடம் அல்ல..உலகில் ஒவ்வொரு அசைவிலும் ஜோதிடம் இருக்கிறது..முக்காலமும் சொல்ல முடியும்..நான் அந்தளவு மகான் அல்ல...ஆனால் முக்காலமும் சொல்வது ஒரு கணக்குதான்....கணக்கிடும் திறமை,வேகத்தை பொறுத்து எதையும் முன்கூட்டியே கணித்து சொல்ல முடியும்..அதற்கு இறையருள் ஆசியும் வேண்டும்..நான் தொடர்ந்து பயிற்சி பெறுவேன்..ஜோதிடம் என்பது ஜோதி திடம்..மனதை திடப்படுத்துவது..நம்பிக்கை அற்றவர்களுக்கு நம்பிக்கை உண்டாக்குவது..அதுதான் என் நோக்கமும்..

4 கருத்துகள்: