வெள்ளி, 7 ஜூன், 2013

குருப்பெயர்ச்சி எந்த ராசியினருக்கு நல்ல நேரம்..? 2013-2014

குருப்பெயர்ச்சி ராசிபலன் பொறுத்தவரை ராசிக்கு 2,5,7,9,11 ல் குரு வரும்போது நல்ல யோகம் உண்டாகிறது அதாவது குருபலம் வந்து சேர்கிறது அந்த குருபலம் இருந்தால் பண பலம் உண்டாகும் செய்யும் காரியம் தடையின்றி நடைபெறும்...கல்யாணம் விரைந்து நடக்கும் குழந்தை பாக்யம் உண்டாக்கும்..நிலம்,வீடு வாங்கும் யோகம் உண்டாக்கும்...பணம் சரளமாக வந்து சேரும் இதனால்தான் மக்கள் குருப்பெயர்ச்சியை ஆர்வமாக எதிர்பார்க்கிறார்கள்..குருப்பெயர்ச்சி சாதகமாக இல்லாவிட்டாலும் என்னென்ன செய்யுமோ என்ற பதட்டமாக படிப்பார்கள் திசா புத்தி ஜாதகத்தில் வலுவாக இருப்பினும் ஜனன் ஜாதகம் சிறப்பாக இருந்தாலும் இது அவ்வளவாக பாதிக்காது..இருப்பினும் குருபலம் முக்கிய காரியங்களுக்கும் சுபகாரியங்களுக்கும் அவசியம்...ஜாதகத்தில் சுக்கிர புத்தி,செவ்வாய் புத்தி,7க்குடையவன்,9க்குடையவன் புத்தி எல்லாம் நடைபெறும்போது கல்யாணம் குருபலம் இல்லாதபோதும் நடக்கும்...

இப்போது மிதுனத்தில் குரு சஞ்சரிக்கிறார்....யாருக்கெல்லாம் இது சாதகமாக இருக்கிறது என்று பார்த்சபம்,சிம்மம்,துலாம்,தனுசு,கும்பம் ,ராசியினருக்கு மிகவும் சாதகமாதால் ரிக அதிர்ஷ்டமாக இருக்கிறது இதுவரை அவர்கள் பட்ட துன்பம் குறையும்....பணக்கஷ்டம் தீரும்....நினைத்த காரியம் தடையின்றி நடைபெறும் தொழில் பிரச்சினை தீரும்...மருத்துவ செலவுகள் முடிவுக்கு வரும்..சரி இதிலும் யாருக்கு இன்னும் யோகமாக இருக்கிறது குருபலம் இருக்கு சனி பலம் யாருக்கு இருக்கு..ரிசபத்துக்குத்தான் சனி 6ல் யோகமாக இருக்கிறார் எனவே அவர்களுக்கு முதல்தரமாக இருக்கிறது சிம்ம ராசியினருக்கு ஏழரை சனி முடிந்துவிட்டதால் அவர்களுக்கும் சிறப்பாக இருக்கிறது..துலாம் ராசியினருக்கு ஜென்ம சனி நடப்பதால் அவர்களுக்கு பாதி யோகமாக இருக்கிறது...தனுசும்,கும்பமும் சனி பெருசா பாதிக்கல...சனி வக்ரமாக இருப்பதால் விருச்சிக ராசிக்கு ஏழரை சனி பாதிப்பு இப்போ தெரியாது....அஷ்டம குரு அவர்களுக்கு பாதிப்புதான் அதிக கவனமாக இருக்க வேண்டியது விருச்சிக ராசிக்காரங்கதான்..!!!