வியாழன், 22 செப்டம்பர், 2016

மகாளயபட்ச புரட்டாசி அமாவாசை அன்னதானம் 30.9.2016

மகாளயபட்ச புரட்டாசி அமாவாசை அன்னதானம் 2016

நணபர்களே வணக்கம் ,

முன்னோர்களுக்குரிய வழிபாட்டினை மேற்கொள்ள சிறப்பான நாள் அமாவாசை. இந்தநாளில் முன்னோர்களை நினைத்து புனித நீர் நிலையில் தர்ப்பணங்கள் செய்தால் பிதுர்தோஷம் நிவர்த்தியாவதுடன், முன்னோரின் ஆசியும் கிட்டுமென்று தர்மநூல்கள் கூறுகின்றன. மாதந்தோறும் வரும் அமாவாசைகளில், தை, ஆடி, புரட்டாசி அமாவாசைகள் மிகவும் சிறப்பானவை. இதில் மகாளயபட்ச அமாவாசையென்று சொல்லப்படும் புரட்டாசி மாத அமாவாசைக்கு கூடுதல் சிறப்புண்டு.
அது என்னவென்றால், அமாவாசை திதியில் மட்டுமின்றி, அதற்கு முன்னுள் தேய்பிறை நாட்கள் அனைத்திலுமே முன்னோர் வழிபாட்டை மேற்கொள்ளலாம். இந்த பூர்வபட்ச நாட்களில் நம் மூதாதையர் பூமியை மிக நெருங்கி வருவதாக ஐதீகம்..

அன்றைய நாளில் நம் முன்னோர்களுக்கு திதி,தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால் முன்னோர்களின் ஆசி நமக்கு கிடைக்கும்..நம் துன்பங்கள் தீரும்..இத்தயக புண்ணிய நாளில் தான தர்மம் செய்வதும் அன்னதானம் செய்வதும் அளவில்லாத நன்மைகளை வாரிவழங்கும் பல மடங்கு புண்ணியத்தை தரும்...

அன்றைய நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கும் முதியோர்களுக்கும் ,உடல் ஊனமுற்றோர்களுக்கும் அன்னதானம்,ஆடை தானம் 5 வது ஆண்டாக இந்த ஆண்டும் செய்ய இருக்கிறோம்..நண்பர்களும் இதில் கலந்து கொள்ளலாம் உங்களால் முடிந்தளவு அவர்களுக்கு உதவி செய்யலாம்...நமது பழைய பதிவுகளை பாருங்கள்..போன வருட புரட்டாசி அமாவாசை அன்னதானம் படங்கள்,செய்திகள் கிடைக்கும்..

கலந்து கொள்ள விரும்புவோர் மெயில் அனுப்ப sathishastro77@gmail.com

நன்கொடை அனுப்ப;

 
k.sathishkumar 20010801181 State bank of India ,bhavani Ifsc;sbin0000971

 


வெள்ளி, 9 செப்டம்பர், 2016

ஆண் குழந்தை பிறக்க,குழந்தை திடகாத்திரமாக பிறக்க

ஆண் குழந்தை பிறக்க,குழந்தை திடகாத்திரமாக பிறக்க;

பூசம் நட்சத்திரம் நாளில் ஆலமரத்த்தின் இரண்டு மலராத மொட்டுக்களை பறித்து பசும்பாலில் அரைத்து ,கர்ப்பிணி பெண்ணுக்கு சாப்பிடகொடுக்கவும்...இது பும்சவனம் எனப்படும்...இது நான்காம் மாதத்தில் செய்யப்படும் சடங்கு.இதை பெரும்பாலும் நாம் செய்வதில்லை..ஏழாம் மாத்த்தில் வளைகாப்பு செய்வதோடு சரி.ஆனால் அக்காலத்தில் இதை கடைபிடித்து இருக்கிறார்கள்..இத்துடன் இரண்டு உளுந்து ,கொஞ்சம் எள்ளு சேர்த்து இடித்து தயிருடன் கலந்தும் கொடுப்பர்..

 கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு நான்காம் மாதத்தில் அவர்களுக்கு பிடித்தமான தின்பண்டங்களை கணவன் வாங்கி கொடுக்க வேண்டும்..இந்த காலத்தில் கர்ப்பிணி விருப்பத்தை பூர்த்தி செய்யாவிட்டால் வயிற்றில் வளரும் குழந்தை பாதிக்கப்பட்டு அங்கம் குறைவாகிவிடும்..

ஆண் ஜாதகத்தில் 5ஆம் இடமும் பெண் ஜாதகத்தில் 9ஆம் இடமும் குழந்தை பிறப்பை சொல்கின்றன..குரு,சுக்கிரன் கெடாமல் இருந்து 5ஆம் அதிபதியும் கெடாமல் இருந்தால் குழந்தை பாக்யம் உண்டு.5ஆம் அதிபதி ஆண் ராசியில் இருக்கிறாரா பெண் ராசியில் இருக்கிறாரா..அவர் நின்ற அதிபதி அதன் சாரம் நவாம்சத்தில் அவர் நிலை அறிந்தும் பலம் அறிந்தும் அறிய வேண்டும்...பார்த்த கிரக பார்வைக்கும் கணக்கு இருக்கிறது சனி பார்த்தால் எத்தனை பிறந்தாலும் பெண் என்றும் சொல்வர்.

ஜாதகத்தையும் கணித்து ,குறைகளை போக்கி கொள்வது நல்லது..முன்னோர் வழி சாபம் இருப்பின் அதை சரி செய்து கொள்ள வேண்டும்.