ஞாயிறு, 9 அக்டோபர், 2011

ஜோதிடம்;புதுமையான குறிப்புகள் astrology tips

ஜோதிடம்;புதுமையான குறிப்புகள்;

ஒவ்வொரு மாதத்திலும் சிறப்பான நாட்கள் வரும் இல்லையா.அதாவது ஆடி மாதத்தில் ஆடிப்பூரம்,வைகாசி மாதத்தில் வைகாசி விசாகம்,சித்திரை மாதத்தில் சித்ரா பெளர்ணமி, என வரும் சிறப்பான நாட்களில் பிறப்பவர்கள் வாழ்வில் தனித்திறமை,தெய்வ அருள் பெற்று சிறப்பாக வாழ்வார்கள்.

---------------------------------
ஜாதகத்தில் அசுர குரு தேவ குரு சாரத்தில் இருந்தாலும் தேவ குரு அசுர குரு சாரத்தில் இருந்தாலும் சிறப்பான பலன் இல்லை.
-----------------------
நீங்கள் விருச்சிக லக்னம்,விருச்சிக ராசியா...உங்களுக்கு முருகன் அருள் பரிபூரணமாக உண்டு.முருகன் ஆலயங்களில் தொடர்ந்து வழிபட்டு வந்தால் நினைத்ததெல்லாம் நடக்கும்.

நீங்கள் மீன லக்னம் ,மீன ராசியா நீர் நிலைகள் அருகில் குடியிருந்தால் ,அதாவது குளம்,ஆறு முன்னேற்றம் உண்டாகும்.

------------------------------
ஜாதகத்தில் சுக்கிரன்,சனி பார்வை உறவுகளை முறித்துவிடும்.
திருமண பொருத்தம் பார்க்கும்போது கும்பம்,சிம்மம் சேர்க்க கூடாது.
மகரம்,கடகம் ஆகாது
-----------------------
சனி,புதன் இணைந்து லக்கினத்திற்கு இரண்டில் இருந்தால் அவர்கள் உளறினாலும் இனிமையாக இருக்குமாம்..அவ்வளவு சிறப்பான பேச்சு திறமை.
------------------
விரயாதிபதி எனப்படும் 12 க்குடையவன் ஜாதகத்தில் லக்கினத்துக்கு இரண்டில் இருந்தால் எதை விற்றாலும் லாபம்.
---------------------
அஷ்டவர்க்கம் பலன் பார்க்கும்போது,3,6,8,12 ஆம் கட்டங்கள் எண்ணிக்கையில் வலுக்கக்கூடாது..
---------------
குழந்தை பிறக்கும்போது கொடி சுற்றி பிறத்தல் இருக்கு இல்லையா.அது இயல்புதான் அதில் என்ன இருக்கிறது என்கிறீர்களா.காலம் காலமாக அவ்வாறு பிறக்கும் குழந்தைகள் குடும்பம் எப்படி மாறியது என்பதை கணித்து நம் முன்னோர் பழமொழியே சொல்லியிருக்கின்றனர்.மாலையுடன் பிறந்த குழந்தை மன்னனுக்கு ஆகாது.
கொடியுடன் பிறந்த குழந்தை கோட்டைக்கு ஆகாது.

மன்னன் என்பது குழந்தையின் தந்தையை குறிக்கும்.
கோட்டை என்பது குடியிருக்கும் வீட்டை குறிக்கும்.

குழந்தை பிறந்ததும் கடன் பிரச்சனை ஏற்பட்டு வீடு இழந்தவர்கள் பலரை பார்த்திருக்கிறேன்.

4 கருத்துகள்: