வியாழன், 12 ஜனவரி, 2012

ஜாதகத்தில் சுக்கிரன் அமர்ந்த ராசி பலன்கள்


ஜாதகத்தில் சுக்கிரன் அமர்ந்த ராசி பலன்கள்


ஒருவருடைய ஜனன ஜாதகத்தில் சுக்கிரனை குரு பார்வை செய்தால் ஒன்றுக்கும் மேற்பட்ட களத்திரம் உண்டாகிறது.இவைகளில் முதல் மனைவிக்கு மூன்று பிள்ளைகளும் இரண்டாம் மனைவிக்கு இரண்டு குழந்தைகளும் உண்டாகும் என ஜோதிடம் சொல்கிறது.

சுக்கிரன் சர ராசியில் அமையப் பெற்றுக் கேது சாரம் உண்டானால் மனைவிக்கு பிறக்கும் குழந்தைகள் இறக்கும் நிலை உண்டாகும்.
ஸ்திர ராசியில் சுக்கிரன் அமையப்பெற்றாலும் சுக்கிரனோடு சூரியன்,புதன் ஆகியோர் கூடினாலும்,பார்த்தாலும் இரண்டு மனைவிகள் உண்டாவார்கள்.முதல் மனைவிக்கு புத்திர இழப்பும் இரண்டாம் மனைவிக்கு சற்புத்திர அமைப்பும் உண்டாகிறது.

சுக்கிரன் உபய ராசியில் இருக்க அவரோடு ராகு,செவ்வாய் இணைந்து காணப்பட்டால் மூன்று மனைவிகள் அமைகிறார்கள்....

சுக்கிரன் 7ல் அமையப்பெற்று ஜென்மத்தில் குரு அமையப் பெற்ற ஜாதகருக்கு எண்ணற்ற மனைவியர் உண்டு.ஆனால் அந்த மனைவிகளுடன் தாம்பத்யம் மட்டும் வைத்துக்கொண்டு,அவர்களை காப்பாற்றாமல் ஏமாற்றுவார்.

களத்திரகாரகனாகிய சுக்கிரன் நீசம் பெர்று 6,8,12ல் அமையப்பெற்றால் மனைவிக்கு கெடுதியும் உடல் நலக்குறைவும் கண்டமும் அமையப்பெறுகிறது.

ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் எந்த வீட்டில் இருக்கிறாரோ அந்த வீட்டுக்கு அதிபதி 6,8,12 ல் மறையப் பெற்றால் மனைவிக்கு அசுப பலன் அமையப் பெறுகிறது...!!

சுக்கிரன் ஆட்சி அல்லது உச்சம் பெற்று லக்கினத்துக்கோ அல்லது சந்திரனுக்கோ கேந்திரம் பெற்று அமையப்பெற்றால் மாளவியா யோகம் கிட்டுகிறது.சுக வாழ்வில் குறிப்பாக பெண்கள் சுகத்தில் அதிக ஈடுபாடு இருக்கும்.நல்ல உடல் அமைப்பு,மற்றவர்களை வசீகரம் செய்யும் நிலை,அசையாத ஸ்திர சொத்துக்கள் சேரும்.பெருமை,புகழ் யாவும் உண்டாகும்!!!

1 கருத்து: