திங்கள், 13 பிப்ரவரி, 2012

சனி வக்ரம் ;ராசிபலன்-எண் ஜோதிடம்

சனி வக்ரம் ;ராசிபலன்-ஜோதிடம்-எண் ஜோதிடம்-வாஸ்து-கைரேகை


சனி வக்ரம் ராசிபலன் அடிப்படையில் கடந்த இரு பதிவுகள் எழுதியிருக்கிறேன்..எல்லா ராசிகளுக்கும் எழுதுவத்ற்குள் சனி வக்ரம் முடிஞ்சிரும் போலிருக்கு..ஓகே இனி வேகமா எல்லா ராசிக்கும் எழுதிடுறேன்.மேசம்,ரிசபம் ராசிபலன் படிக்காதவர்கள் அருகில் உள்ள் கூகிள் தேடலில் நல்ல நேரம் ப்ளாக் சைட்ல இருக்கு பாருங்க..அதுல சனி வக்ரம் அல்லது sani peyarchi என தேடினால் கிடைக்கும்.

இன்றைய பலன்கள் மிதுனம் ராசியினருக்கு;

சனி வக்ரம் 8 ஆம் தேதியே துவங்கி விட்டது..இன்னும் 4 மாதங்கள் வரை இது இருக்கும்.அதாவது சனி வக்ரம் துவங்கிய பின் தான் மின்வெட்டு பிரச்சினை தமிழ்கத்தில் பூதாகரமாகி உள்ளது..சனி மின்சாரத்துக்கும் அதிபதி அல்லவா.ஏற்கனவே அரசியல் கிரகம் செவ்வாயும் வக்ரகதியில் உள்ளது.எனவே இது அரசியல் பிரச்சினையாகவும் உருவெடுத்துள்ளது.இது மூத்த அரசியல் தலைவர்களுக்கும் கண்டமான காலம்.விஜயகாந்த் ஜாதகம் கணித்து அவர் மீது வழக்கு பதிய அதிக வாய்ப்பு இருக்கிறது.வாயால் அவர் கெடுவார் என உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பே எழுதியிருந்தேன்..அது இன்று பலிதம் ஆகியிருக்கிறது..இது குறித்து பாராட்டிய சென்னை விஜய் க்கு நன்றி.இன்னும் நிறைய எழுத விருப்பம்தான்..அதுவுமில்லாமல் பப்ளிக்காக பல விசயங்களை எழுதி வைப்பது கொஞ்சம் பிரச்சினைதான்.ஜெயலலிதா ஜாதகம் குறித்து ஒரு கட்டுரை எழுதி வைத்திருக்கிறேன்...நல்ல நேரம் பார்த்து ! தான் வெளியிடணும்!!

மிதுனம் ராசியினர் புதன் கிரகத்தின் ஆதிக்கத்துக்கு உட்பட்டவர்கள்.நுட்பமானவர்கள்..யாரையும் எளிதில் நம்ப மாட்டார்கள்.யார் எது சொன்னாலும் சொல்பவர்களின் யோக்யதையை தராசு மீது வைத்து அளந்து பார்ப்பது போல மனக்கண்ணில் பார்த்துவிட்டுத்தான் முடிவெடுப்பார்கள்.ஆராய்ச்சி குணம்,பகுத்தறிவு குணம் அதிகம் உண்டு....மிதுன்பம் ராசிக்காரர்கள் சொன்னால் அது சரியாக இருக்கும்.பலருக்கு ஏணிப்படியாக விளங்குவார்கள்..இவர்களுக்கு அவர்கள் உதவுவதும் இல்லை.இவர்கள் எதிர்பார்ப்பதும் இல்லை.நல்ல பேச்சுதிறமை நிறைந்தவர்கள்.இவர்கள் பலம் பலவீனமே பேச்சுதான்.

சனிப்பெயர்ச்சி ஆனது உங்கள் ராசிக்கு 5 ஆம் இடம்....இப்போது வக்ரம் ஆகியிருப்பது நான்காம் இடம்..இரண்டுமே பாதகம் தான்..நான்காம் இடம் சுகம் ஸ்தானம் என்பதால் போன வாரம் முதலே சொத்துக்கள் வில்லங்கம்,உடல்நலன் பிரச்சினை,மருத்துவ குறிப்புகள் நாடுதல் என்று இருப்பீர்கள்...தொழிலில் அதிக மன உளைச்சல் ஏற்படும்படியான சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கும்.அதிக பண விரயமும் உண்டாகி வருகிறது.பெற்றோர்களால் கவலையும் வாட்டும்.திருப்பதி பாலாஜி யை தரி8சனம் செய்து வந்தால் ,வெங்கடேஸ்வரா எல்லா பிரச்சினையையும் தீர்த்து வைப்பார்.பிரியாணி சாப்பாடு எல்லாம் எல்லாம் லிமிட்டாக இருக்கட்டும்.சமையல் விசயத்தில் பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்..தீயால் காயம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.சனி,செவ்வாய் வக்ரம் என்பதால் இரும்பு சம்பந்தமான தொழிலில் இருப்பவர்கள் அதிக கவனம் தேவை.நிதி,மற்றும் பங்கு வர்த்தகம் பிரச்சினையை கொடுக்கும்.மகளிர் பிரச்சினைகள் உண்டாகும் என்பதால் பெண்களிடம் அதிக கவனம் தேவை.குழந்தை சம்பந்தமான சிகிச்சைக்கு செல்பவர்கள் இன்னும் 3 மாதம் கழித்து முயற்சிக்கலாம்.

எண் ஜோதிடம்;

எண் ஜோதிடம் பொறுத்தவரை எனக்கு 7 வருட அனுபவம் உண்டு.பண்டிட் சேதுராமன் முதல் கொண்டு தமிழில் வெளியான அனைத்து எண் ஜோதிட நூல்களையும் ஆய்வு செய்து,பார்த்துவிட்டேன்..இதுதான் எண் ஜோதிடம் என்ற முறையை நான் வகுத்து குழந்தைகளுக்கு அதிர்ஷ்டபெயர் அமைத்து வருகிரேன்..திருச்சி கோபால் தாஸ்,திருப்பூர் அசோக் பாரதி,சேலம் ஜெயவஸ்ரூபா போன்ற எண் நியூமராலஜி பார்ப்பவர்களிடம் பார்த்தவர்களும் பண்டிட் சேதுராமன் மகனிடம் ஜோதிடம் பார்த்தவர்களும் என்னிடம் வந்து பெயர் திருத்தம் செய்து கொண்டு இப்போது நன்றாக இருக்கின்றனர்.அவர்கள் வாங்கும் கட்டணம் 4,000 ரேஞ்ச்..நான் வாங்குவது..மிக சொற்பம்..அவர்கள் டிவி விளம்பரம் செய்து பில்டப் கொடுக்கின்றனர்..எனக்கு வயது குறைவாக இருப்பதால் இப்போதே ஓவராக வளர வேண்டாம் என பொறுமையாக இருக்கிறேன்..என் வாடிக்கையாலர் ஒருவர் விஜய் டிவியில் நான் நிகழ்ச்சி நடத்த தானே பணம் கட்டிவிடுகிறேன்.வாரம் அரை மணி நேரம் பேசுங்கள்..என்றார்..அவர் சொல்லி இரண்டு வருடம் இருக்கும்..நான் மறுத்துவிட்டேன்..என் கூச்ச சுபாவமும் ஒரு காரணம்..என் அலுவலகத்தில் தில்லா பேசிவிடுவேன்...மேடை என்றால் கொஞ்சம் உதறும்.எனது நண்பரும்,வாடிக்கையாருமான ஈரோடு கணேஷ் வீடியோஸ் உரிமையாளர் திரு ஜெயபாலன்அவர்கள்..ஜோதிட நிகழ்சிக்கான ஒளிப்பதிவு செய்து தருகிறேன் என சொல்லியிருக்கிறார்..பார்ப்போம்.. 

நியூமராலஜி யில் என் ஸ்டைல் என்னவெனில், என் ஜோதிடம் விதிப்படி நான் பெயரில் இரண்டு ஏ எழுத்துக்கள் இரண்டு எஸ் எழுத்துக்கள் எல்லாம் சேர்த்து நியூமராலஜியை கற்பழிப்பதில்லை.உச்சரிப்பு முறையை பயன்படுத்திதான் சக்ஸஸ் கொடுக்கிறேன்...பெயரின் உச்சரிப்பு ஒலியை மாற்றினால் வெற்றி கிடைக்கும்.இது என் அனுபவம்...இது எப்படி சாத்தியம் என்பதையும் நியூமராலஜி தொழிலில் நான் சந்தித்த வித்தியாசமான மனிதர்களையும் பற்றி எழுத நிறைய விசய்மிருக்கிறேது..அவ்வப்போது எழுதுகிறேன்...

1 கருத்து: