புதன், 25 ஜூலை, 2012

செவ்வாய்,சனி சேர்க்கை நாட்டுக்கு கெடுதலா..?

ஆடி 20 வரை சனி, கன்னியில் செவ்வாயுடன் இருக்கிறது...சனி,செவ்வாய் சேர்ந்து ஒரு ராசியில் இருக்கும்போது புதிதான நோய்,கலவரம்,பெண்கள் எதிரான பிரச்சினை,பூகம்பம்,பெரிய விபத்துக்கள்,மத்திய மாநில அரசுகளுக்கு பெரும் சிக்கல்,மத்தியில் ஆட்சி கவிழ்ப்பு....முக்கிய மக்கள் தலைவர்கள் மரணம் போன்றவை இதுவரை நடந்திருக்கின்றன...இன்னும் 10 தினங்கள் இந்த சூழலுக்கு வாய்ப்பிருக்கிறது..

ஆனால் குரு பார்வை இதை முடிந்தளவு தடுத்து வருகிறது...துலாம் வீட்டில் மறுபடியும் இரு கிரகங்கள் சேர்கின்றன...அப்போது குரு பார்வை இல்லை..அப்போ செவ்வாய்,சனி செய்யும் பாதிப்பை தடுக்க இயலாது...இதற்கு அடுத்த வீட்டில் ராகுவும் உச்சத்தில் இருக்கிறது...இது ஆகஸ்ட்,செப்டம்பர் மாதத்தில் நிகழ்கிறது...இவை எல்லாம் நாட்டிற்கு துர்பலனே...மேற்சொன்னபலன்கள் அப்போது நடக்க அதிக வாய்ப்புண்டு...

செவ்வாய் சகோதரகரகன் என்பதால் சகோதர யுத்தமும் நடக்கும்..செவ்வாய் ஆயுதம் என்பதல் ஆயுத போரும் நடக்கலாம்...செவ்வாய் இப்போது கன்னியில் இருப்பதால் கடலும் வற்றும் என்ற பழமொழிக்கு ஏற்ப பொங்கி வரும் காவிரியும் ஆடி மாதத்தில் வறண்டு இருக்கிறது...நாடெங்கிலும் நிலத்தடி நீரும் வற்றிக்கொண்டிருக்கிறது!!!

1 கருத்து: