வெள்ளி, 16 நவம்பர், 2012

பழனி கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் அற்புதம்

இன்று மூலம் நட்சத்திரம் என்பதால் குருவை,ஞானியை பத்தி எழுதனும்னு இந்த சிறப்பு பதிவு;


சுமார் 10 வருடங்களுக்கு முன்பு,பழனி இடும்பன் மலை அருகில் இருக்கும் கணக்கன்பட்டி  கிராமத்தில் மூட்டை சாமியார் இருந்தார்..நானும் என் நண்பரும் பைக்கில் சென்றோம்...ஏதோ பஞ்சாயத்து நடப்பது போல சின்ன கூட்டம்...ஒரு ஓரத்தில் அழுக்கு மூட்டை சாமியார் கயித்து கட்டிலில் அமர்ந்து இருந்தார்...கட்டிலா,தரையிலா என நினைவில்லை...அம்பாசிடர் காரில் வந்த நீதிபதி ஒருவர் பழத்தட்டுகளுடன் அவர் அருகில் போக ,சாமியார் கோபமாகி அசிங்க அசிங்கமாக கெட்ட வார்த்தையில் திட்ட ஆரம்பித்தார்...நானும் நண்பரும் அதிர்ச்சியானோம்..இதென்னடா வம்பா போச்சுன்னு.விசாரிச்சா அவர் ஆசிர்வாதமே இதானாம்...!

கொஞ்ச நேரம் அங்கேயே இருந்தோம்...எங்களை போலவே அவரை பார்க்க வந்தவர்களும் என்ன செய்றதுன்னு முழிச்சுக்கிட்டு இருந்தாங்க...கால்ல விழுந்து விபூதி வாங்கிட்டு போலாம்னு வந்தவங்கதான்..கிட்ட போனாலே அசிங்க அசிங்கமா வார்த்தை வருதே..அது கலெக்ட்டரா இருந்தாலும் அதான்..

அவர் நடக்க ஆரம்பித்தார்.அவர் பின்னால் போனோம்..நாங்கள் மொத்தம் 10 பேர் இருந்தோம்...இடும்பன் மலைக்கு வந்தவர் மலை ஏற ஆரம்பித்துவிட்டார்..பின்னால் நாங்களும் ஏறினோம்..ஒரு பெரிய உருண்டை கல் 10 டன் எடை இருக்கும்...சும்மாதானே இருக்கீங்க..இந்த கல்லை நகத்துங்க..என சொல்லிவிட்டு வேடிக்கை பார்ப்பது போல உட்கார்ந்துவிட்டார்..எனக்கும் நண்பருக்கும் சிரிப்பு வேற..அது குட்டி மலை மாதிரி இருந்துச்சி..அதை தள்ளுன்னா...நாங்க 10 பேர் நடக்குறதா இது...

எல்லோரும் கல்லை தள்ளுவது போல செய்தோம்..பெண்களும் 4 பேர் இருந்தனர்...யாராலும் சிறு அசைவை கூட கொடுக்க முடியாது என தெரியும்...அதுல ஒருத்தர் ஒரு மூங்கில் முட்டு கொடுத்து தூக்கினா தள்ளிடலாம்ங்க..சாமி சொன்னா அதுல அர்த்தம் இருக்கும்..வாங்க தள்ளலாம்னார்..எங்களுக்கு சிரிக்கிறதா...கோபபடுறதான்னு தெரியலா..ஒரு இத்துப்போன மூங்கிலை ஒருத்தர் எடுத்து வந்து முட்டுக்கொடுத்து தள்ளினார்...

இது ஆகறதில்ல..என நானும் என் நண்பரும்...மலையை விட்டு கொஞ்சம் இறங்கி ,அவர் திட்டாத அளவுக்கு பாதுகாப்பா நின்னு,சில சமயம் அடிக்கவும் செய்வாராம்..அவரை பார்த்து தலைக்கு மேல் கைகளை உயர்த்தி கும்பிடு போட்டு விட்டு ,விழுந்து கும்பிட்டு பார்த்தோம்..எங்களை பார்த்தார்..லேசாக சிரிப்பது போல இருந்தது..இதுவே போதும் என கிளம்பிவிட்டோம்!!

இவர் அற்புதங்கள் பல செய்தவர் என பழனி மக்கள் நிறைய சொல்கிறார்கள்...பழனி முருகன் தரிசனம் சிலருக்கு இவர் மூலம் கிடைத்ததாகவும் சொல்கிறார்கள்...எல்லா அஷ்டமா சித்துகளும் அறிந்தவர் என சொல்கிறார்கள்...எப்படியோ ஒரு சித்தரை தரிசித்தோம் என்ற நம்பிக்கையில் வீடு வந்து சேர்ந்தோம்...

சற்குருவே போற்றி!!!

3 கருத்துகள்: