வியாழன், 22 நவம்பர், 2012

ஏழரை சனி,அஷ்டம சனி துன்பங்கள் விலக பரிகாரம்

ஏழரை சனி,அஷ்டம சனி துன்பங்கள் விலக பரிகாரம்

ஏழரை சனி,அஷ்டம சனிக்கு ஒரு நல்ல பரிகாரம் என்றால் அது சுவாமி ஐயப்பனுக்கு மாலை அணிந்து 48 நாட்கள் கடுமையான விரதம் இருந்து சபரிமலை செல்வதாகும்...இதனால் சனி பாதிப்புகள் நீங்குகிறது!!! 

அப்போ பெண்களுக்கு..? பாத யாத்திரையாக தனது இஷ்ட தெய்வத்தை வணங்கினால் கடுமையான நெருக்கடிகள் விலகும்..!! பழனி பாத யாத்திரை,திருப்பதி பாத யாத்திரை முயற்சி செய்யலாம்..முடியாதவர்கள் மலை மேல் உள்ள கோயிலுக்கு உதாரணமாக திருப்பதி மலை ஏறி பெருமாளை வழிபடலாம்..திருவண்ணாமலை சென்று கிரிவலம் வரலாம்..


48 நாட்கள் விரதம் இருப்பதால் நம் உடல் முழுமையாக சுத்தம் அடைகிறது...மனம் தெளிவாகிறது...உடலில் உள்ள அனைத்து அழுக்குகளும் நீங்கி உணவு முறை ஒழுங்காகிறது..கடுமையான வழிபாடுகள் பலவற்றை பார்த்தால் அவை நம் உடலுக்கு வலிமையை உண்டாக்குவதாகவும்,மனதுக்கு அதிக வைராக்கியத்தை உண்டாக்குவதாகவுமே இருக்கின்றன..சோதனைகளை தாங்கும் மனப்பகுவத்தை இவை கொடுத்துவிடுகின்றன..

ஏழரை சனி,அஷ்டம சனி யில் என்ன நடக்கிறது அதிக வீண் அலைச்சலும்,துன்பங்களும்,உடல் பாதிப்பும் உண்டாகிறது அதை இவ்வாறு ப்வழிபாடாக செய்தால் பரிகாரமாக சோதனைகள் நம்மை கடந்து செல்வதை காணலாம்...இதற்காகத்தானோ என்னவோ நம் முன்னோர்கள் ஐயப்பன் வழிபாடு,பழனி முருகனுக்கு பாத யாத்திரை போன்றவற்றை வைத்துள்ளனர்...

வீட்டிலியே முடங்கி கொண்டு பிரச்சினையை எண்ணி எண்ணி அழுதுகொண்டு இருப்பவர்களுக்கு மன ஆறுதல் தருவதும் மட்டுமில்லாமல் நம்பிக்கையையும் இந்த வழிபாடுகள் தருகின்றன...

கறுப்பு வேஷ்டி,நீல வேஷ்டி,துண்டு என ஐயப்பன் வழிபாட்டில் எல்லாம் சனிக்குண்டான நிறத்தில் அமைந்திருப்பதையும் காணலாம்.....இது கார்த்திகை மாதம் ஐயப்பன் வழிபாட்டு மாதம் என்பதால் இதை உங்களுக்கு நினைவு படுத்துகிறேன்..

இன்னொரு முக்கியமான பரிகாரம் என்னவெனில்,கறுப்பு நிற காராம் பசுவை கொம்புகளும் கறுத்து இருக்கும்..அதனை தானமாக கொடுத்தால் சனிக்குண்டான தோசம் விலகும் என்பது காலம் காலமாக இருக்கும் நம்பிக்கை ..முடிந்தவர்கள் இதையும் முயற்சிக்கலாம்...

சனிக்கிழமை அவசியம் நல்லெண்ணை தேய்த்து குளியுங்கள்...பெண்கள் வெள்ளிக்கிழமை இவ்வாறு குளிக்கலாம்...ஏழரை சனியில் நம் உடலில் ஒரு மந்த நிலை உருவாகிறது ஜீரண உறுப்புகள் மந்தமடைகின்றன்...இவற்றை உணவு பழக்கங்களை முறைபடுத்தி சரி செய்ய வேண்டும்..இஷ்டம் போல சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்..இவை நம் செயல்களையும் திசை திருப்பும்..எண்ணங்களையும் குழப்பமாக்கும்..கோபம்,பிடிவாதத்தை அதிக படுத்தும்...

சனிபகவான் ஆலயத்திற்கு சென்று ஒவ்வொரு சனிக்கிழமையில் நீல சங்குப்பூ போட்டு நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபடவும்...முடியாவிட்டால் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வணங்கி வரவும்!!

ஊனமுற்றோருக்கு,ஆதரவற்றோர்க்கு,முதியோர்க்கு உதவினால் ஏழரை சனிக்கு முக்கிய பரிகாரம் ஆகும்...இதை செய்ய விரும்புவர்களுக்கு உதவ காத்திருக்கிறேன்..சில மிக ஏழ்மையான காப்பகங்கள் இருக்கின்றன..அவற்றிற்கு உதவலாம்..அவை பற்றி அறிய விரும்புபவர்கள்;.எனது செல்;9443499003 அழைக்கலாம்...!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக