திங்கள், 16 ஜனவரி, 2017

ஏன் அமாவாசையில் கார்,பைக் வாங்க கூடாது..?

ஏன் அமாவாசையில் கார்,பைக் வாங்க கூடாது..?
பஞ்சாங்கத்தில் நேத்திரம்,ஜீவன் என்ற கணக்கு ஒன்று உண்டு...அதாவது கண்கள் ,உயிர் என பொருள்படும்..நேத்திரம் என்றால் கண்...இது பஞ்சாங்கத்தில் 2-1,1-0 என்ற வரிசையில் தினசரி குறிக்கப்பட்டிருக்கும்..அமாவாசை தினத்தில் மட்டும் 0-0 என குறிக்கப்பட்டிருக்கும்.எனவே அமாவாசை நேத்திர ஜீவன் இல்லாத நாளாகும்.
கண்களும்,உயிரும் இல்லாத நாள் அமாவாசை.நேத்திர ஜீவன் இல்லாத நாளில் தொடங்கும் காரியம் தோல்வி அடையும்.வாங்கும் பொருள் நிலைக்காது.விபத்து உண்டாகும்.எனவே கண்ணில்லாத அமாவாசை தினத்தில் கோயிலில் வழிபடலாமே தவிர வாகனங்களை வாங்கி பூஜை போடுதல் தவறு.அது நிலையில்லாதது.கண்ணில்லாமல் வண்டி ஓட்டுவதை போன்றது

கருத்துகள் இல்லை: