வெள்ளி, 26 மே, 2017

உங்க ஜாதகத்தில் தொழில் அதிபர் ஆகும் யோகம் இருக்கா..? ஜோதிட ஆய்வு

உங்க ஜாதகத்தில் தொழில் அதிபர் ஆகும் யோகம் இருக்கா..? ஜோதிட ஆய்வு செய்ய உதாரண ஜாதகத்துடன் விளக்கி இருக்கிறேன் ஜோதிடம் கற்பவர்களுக்கான விளக்கத்துடன் எழுதி இருக்கிறேன்..

கு ,சு,சனி
சூ,புத,கேது



    
        ராசி
செ
சந்தி



ரா



சந்தி


செ,ரா,சு,சனி

   அம்சம்
பு

கேது
சூ




இந்த ஜாதகர் 11.5.1939ல் பிறந்தவர்…திருவோணம் நட்சத்திரம் மகரம் ராசியில் பிறந்தவர்..
கடக லக்னத்தில் இருப்பு திசை சந்திரன் 7 வருடம் 9 மாதத்தில் பிறந்தவர்..அடுத்து என்னென்ன திசை வந்தது எப்படி வாழ்ந்தார் என்பதை கவனிக்கனும்..

இந்த ஜாதகத்தில் இருக்கும் முக்கியமான யோகங்கள் இருக்கிறதா என பார்க்கனும்..

இந்த ஜாதகத்தில் லக்ன யோகாதிபதிகள் எப்படி இருக்காங்கன்னு பார்க்கனும்..

லக்னாதிபதி தனாதிபதி தனகாரகன் எப்படி அவர் பொருளாதார நிலை இவர்களை வைத்துதான் ஆராயனும்..


அடுத்து தொழிலாதிபதி தொழில் காரகம் அதிர்ஷ்டகாரகன் பாக்யாதிபதி எப்படின்னும் பார்க்கனும்..

நாம பார்க்கப்போறது அவர் பொருளாதார நிலை தொழில் நிலை பத்திதான் எனவே அதை நன்கு ஆய்வு செய்தால் போதும்..

இவர் ஜாதகத்தில் என்ன யோகம் இருக்கிறது சந்திர மங்கள யோகம் இருக்கிறது…சந்திரனும் செவ்வாயும் இணைந்து செவ்வாய் உச்சம்…இதில் முக்கியமான விசயம் என்னன்னா…இருவருமே லக்னத்துக்குகெட்டவர்கள் இல்லை என்பதுதான் ஒரு யோகம் உண்டாகும்போது அவர்கள் லக்னத்துக்கு கெட்டவர்களாக கெட்ட ஆதிபத்தியம் உடையவர்களாக இருக்க கூடாது…

இங்கு லக்னாதிபதியும்,பூர்வ புண்ணியாதிபதியும் சேர்ந்து சந்திர மங்கள யோகமாக இருக்கிறார்கள் மிகச்சிறப்பு.
அடுத்து இவருக்கு சூரியன் உச்சம்,சுக்கிரன் உச்சம்,குரு ஆட்சி..

இவர் சந்திர திசையில் பிறந்தார்…செவ்வாய் திசை அடுத்து வந்தது..அதன் பின் 14 வயதில் ராகு திசை வந்தது..இவருக்கு ஒன்பதில் குரு இருக்கிறார் பாருங்கள்..ஓடிப்போனவனுக்கு ஒன்பதில் குரு என்கிறார்கள் அல்லவா..அது கோட்சார குருவை சொல்லவில்லை இந்த குருவைதான் சொல்கிறார்கள்…

இவர் சர லக்னம் சர ராசியில் பிறந்தவர்…ராசியும் லக்னமும் சரமாக இருந்தால் வெளியூரில் பிழைப்பார்கள் ஸ்திரமாக இருந்தால் உள்ளூர்..

இவருக்கு ராசி லக்னம் சரமாக இருந்ததால் 4ல் அமர்ந்த ராகு திசையில் சொந்த ஊரை விட்டு வெளியேறினார் சவுதி அரேபியா சென்றார்…அங்கு நன்கு சம்பாதித்தார்..4ஆம் இடம் தாய்வீடு..தாய்நாடு..அங்கு இருக்கும் கிரகம் பாவராக இருந்து திசை ஆரம்பித்தால் தாய்வீட்டை பிரியும் நிலை உண்டாகும்.

12ஆம் அதிபதி பத்தில் இருந்தால் 11ஆம் அதிபதி ஒன்பதில் இருந்ததாலும் வெளிநாட்டு வாழ்க்கை…
12ஆம் 11 ஆம் இடம் நன்றாக இருந்தால் தொழில் ஸ்தானத்துடன் தொடர்பு கொண்டால் வெளிநாடு யோகம்.அங்கு தொழில்..


ஒன்பதில் குரு இருந்தாலும் வெளிநாடு சிறப்பு…ஒன்பதாம் இடம்தான் நீண்ட தூர பயணம் 3ஆம் இடம் குறுகிய பயணம்.

இந்த ஜாதகத்தில் நான்குக்கும் உடையவரும் லாபத்துக்கு உரியவருமான சுக்கிரன் திரிகோணத்தில் உச்சம் ஆகி இருக்கிறார் திரிகோணத்தில் இருக்கும் கிரகம் பாதகாதியானாலும் கெடுதல் செய்யாது பாவராக இருந்தாலும் நன்மை செய்யும் என்பது ஒரு விதி..இதை மறக்க கூடாது.


இவர் ஜாதகத்தில் பாக்யாதிபதி கெடவில்லை ஆட்சியாக இருக்கிறார்..தனாதிபதி சூரியன் கெட்டிருக்காரா இல்லை.அவர் லாபத்தில் உச்சம் ஆகி இருக்கிறார் ..பேங்க் பேலன்ஸ் குறிப்பது 11ஆம் இடம்..முன்னேற வேண்டும் என்ற தீரா தகத்தை தரும் அஸ்திவாரமான லக்னாதிபதி சந்திரன் கேந்திரத்தில் பூர்வபுண்ணியாதிபதியுடன் இருக்கிறார் அதுவும் உச்சம் பெற்ற கிரகத்துடன்…

அப்படி எனில் பொருளாதர நிலைக்குண்டான 2ஆம் அதிபதி வலிமை
சேமிப்புக்கான 11ஆம் இடம் வலிமை…அதன் அதிபதி உச்சமாகி வலிமை
தொழில் ஸ்தானம் வலிமை…அதன் அதிபதி கேந்திரத்தில் உச்சம் ..இது சம்பளத்துக்கு போகிற ஜாதகமா இல்லை.பலருக்கு சம்பளம் கொடுக்கும் ஜாதகம்..எப்படி..?

இவர் சவுதி அரேபியாவில் சம்பளத்தில் இருந்து கொண்டே இந்தியாவில் ஒரு தொழில் தொடங்கினார் உறவினரை கொண்டு நடத்தினார்,

தனது 30 வது வயதில் குரு திசை ஆரம்பித்த போது அங்கு வேலையை ராஜினாமா செய்துவிட்டு இங்கு வந்து பெரிய ஸ்டார் ஹோட்டல் கட்டினார்..100 பேர் வேலை செய்கின்றனர் கோடீஸ்வரர் ஆனார்..
குரு திசை அவருக்கு நிலையான தொழில் தந்தது பெரும் பணத்தை லாபத்தை கொடு்த்தது தொழில் அதிபர் ஆக்கியது…

குரு பாக்யாதிபதி பாக்யஸ்தானத்தில் உச்சம்..அது மகாலட்சுமி ஸ்தானம் அல்லவா..பணம் அள்ள அள்ள குறையாமல் சம்பாதித்தார்..
சில கிரக வலிமைகள் பல தோசங்களை நீக்கிவிடும்..அதில் ஒன்றுதான் திரிகோணாதிபதி வலிமை..குரு வலிமை.

ராகு திசையில் பெரும்பகுதி வெளிநாட்டில் இருந்தார் குரு திசையில் பெரும்பகுதி கொஞ்சம் கொஞ்சமாகத்தான் முன்னேறினார் உடனே பெரிய ஹோட்டல் கட்டவில்லை..

அடுத்து சனி திசை 52 வயதில் ஆரம்பம்..அதுவும் திரிகோணத்தில்..என்பதால் பெரும் கெடுதல் என சொல்ல முடியாது…வயதுக்குண்டான மருத்துவ செலவுகள் தரலாம்..ஆனால் வேறு குறை இல்லை

செவ்வாய், 16 மே, 2017

குருப்பெயர்ச்சி சனி பெயர்ச்சி எப்போது..?

குருப்பெயர்ச்சி சனி பெயர்ச்சி எப்போது..?

குரு இந்த வருடம் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு செல்கிறார்..சனி இந்த வருடம் கடைசியில் டிசம்பர் மாதம் திருநள்ளாறு கோயில் முறைப்படி வாக்கிய பஞ்சாங்கப்படி விருச்சிகம் ராசியில் இருந்து தனுசு ராசிக்கு செல்கிறார்...

ராகு சிம்ம ராசியில் இருந்து கடகம் ராசிக்கும் கேது கும்பம் ராசியில் இருந்து மகரம் ராசிக்கும் வரும் ஜூலை மாதம் வாக்கிய பஞ்சாங்கப்படி மாறுகிறார்கள்..பலன்கள் விரைவில் வெளியாகும்...


திங்கள், 15 மே, 2017

ஜோதிடம் சூட்சுமங்கள்- சுக்கிரன் தரும் சுகம்

ஜோதிடம் சுக்கிரனை நல்ல ஒளி கிரகம் என்கிறது..பிரகாசமான சுக்கிரனின் ஒளி மனிதனுக்கு சுகம் ,சந்தோசம்,மகிழ்ச்சி,ரசனையை தருகிறது இன்பத்தை,காதலை கொடுக்கிறது ..ஆணையோ பெண்ணையோ கவர சுக்கிர பலம் வேண்டும்..சுக்கிரனில்லையேல் சுகம் இல்லை...சொத்துக்கள் இல்லை வசதி வாய்ப்புகள் இல்லை.

லக்னத்துக்கு கேந்திரம் ,திரிகோணத்தில் சுக்கிரன் இருந்தால் நல்ல வசதி ,பண வரவு ,சுகம்,அழகான மனைவி,பெரிய வீடு,கார் எல்லாம் அமையும்...சுக்கிரன் பாவருடன் சேராமல் பகை வீட்டில் இல்லாமல் இருக்கனும்...லக்னத்துக்கு சுபரா இருந்தா சூப்பரா அமையும்..லக்னத்துக்கு கேந்திரம் இன்னும் நல்ல பலத்தை சுக்கிரனுக்கு கொடுக்கும்...4ல் சுக்கிரன் சுகவாசி..நல்லா சாப்பிட்டு நல்லா தூங்கி எதைப்பத்திய்டும் கவலைப்படாம வாழலாம் அப்பா மூலம் சொத்து கிடைச்சிடும் மாமனார் மூலமா சொத்து கிடைச்சிடும்..மாமனார் க்கு இரண்டாம் இடத்தில் சுக்கிரன் இருப்பதால் மாமனார் பணக்காரரா இருப்பார் நிறைய பண உதவி சங்கடமில்லாம செய்வார்..மனைவி அழகா அமைஞ்சிடும்..நச்சரிப்பு இருக்காது..ஊட்டி போகலாமான்னு கேட்டா..சுவிட்சர்லாந்து போகலாம் வாங்கன்னு சொல்லும் ஆளாக இருந்தா எப்படி இருக்கும்..அப்படி அமையும்.

7ல் சுக்கிரன் அழகு மங்கை மனைவியா வருமா என்பது விட மனைவி மையுமான்னு பல பேர்க்கு சந்தேகம்..சுக்கிரன் காரக நாஸ்தி ஆச்சேன்னுதான்..ஆனால் தாமதம் ஆனாலும் சொர்க்கம் காட்டும் மனைவி அமையும்...பங்காளி சொத்து எதிர்பாராம இவருக்கு கிடைக்கும் கூட்டாளி சம்பாஹிச்சு இந்தாப்பா உன் பங்குன்னு வீட்டுக்கே வந்து பெரிய அமவுண்டை கொடுப்பார்..

பத்தில் சுக்கிரன் தந்தை பணக்காரர் ..அப்பா சொத்தே பல கோடி மூணு தலைமுறை சாப்பிடலாம்னு ஊரார் சொல்லுமளவு வசதி இருக்குமான்னு கேட்டா சுக்கிரன் எந்தளவு வலிமையா இருக்கோ..9ஆம் அதிபதி வலிமையை பொறுத்து அப்படி அமையும்..மிதுன லக்னம் சனி 9ல் ஆட்சி..பத்தில் சுக்கிரன் உச்சம் என்றால் அவருக்கு இப்படி அமையும்.தந்தையால் பெரும் அனுகூலம்..ராஜாவீட்டு கன்னுக்குட்டி.

சுக்கிரனுடன் சேரும் கிரகம் சுப கிரகங்களாக இருந்தால் அதுவும் நிறைய அள்ளிக்கொடுக்கும்..4,5 ஆம் அதிபதிகள் சேர்க்கை 1,4 ஆம் அதிபதிகள் சேர்க்கை,1,9 அதிபதிகள் சேர்க்கை,10,11 ஆம் அதிபதிகள் சேர்க்கை,5,11 அதிபதிகள் சேர்க்கை,4,2 அதிபதிகள் சேர்க்கை ,2,5 அதிபதிகள் சேர்க்கை எல்லாம் மிக்கப்பெரிய யோகங்கள்..எக்காரணம் கொண்டும் இவர்களுடன் 6,8,12 ஆம் அதிபகள் கூடக்கூடாது எல்லாம் மொத்தமா போயிடும்..

சுக்கிரனுடன் பாம்பு கிரகங்கள் சேர்ந்தாலும் தவறு...பணம் கிடைப்பது கடினம்..சனி,செவ்வாய்,சூரியன், சேர்ந்தாலும் அவ்வளவு சிறப்பல்ல..ஆதிபத்தியம்,காரகத்துவம் நன்றாக இருந்தால் தவறில்லை..ஆனாலும் பாவ கிரகத்துடன் சிறுபாதிப்பை தராமல் இருக்காது..

சுக்கிரன் நீசமானாலும் ,சுக்கிரன் கேதுவுடன் இருந்தாலும் பணம் வருவதில் தடை இருக்கும்..சுக்கிரன் 6,8ல் இருந்தாலும் கடன் பிரச்சினை உண்டாக்கும்..

சுக்கிரன் கெடாமல் இருப்பதே சுகம் தரும் சொத்து தரும் இன்பம் தரும்.சுக்கிரன் வலுத்தவர் சுகவாசி..சுக்கிரன் கெட்டவர் சாமியார்.ரசனை இருக்காது எந்த சுகமும் அனுபவிக்க முடியாது..சதா நேரமும் அலைந்து கொண்டிருப்பர்.




செவ்வாய், 9 மே, 2017

தமிழ் மொழிக்கு இவ்வளவு சிறப்புகளா..?

தமிழில் டீக்கு "தேநீர்',
காபிக்கு "குளம்பி' என்று
பெரும்பாலோருக்குத் தெரியும்.
மற்ற சில முக்கியமான உணவு
பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம்!

சப்பாத்தி - கோந்தடை

புரோட்டா - புரியடை

நூடுல்ஸ் - குழைமா

கிச்சடி - காய்சோறு, காய்மா

கேக் - கட்டிகை, கடினி

சமோசா - கறிப்பொதி, முறுகி

பாயசம் - பாற்கன்னல்

சாம்பார் - பருப்பு குழம்பு, மென்குழம்பு

பஜ்ஜி - தோய்ச்சி, மாவேச்சி

பொறை - வறக்கை

கேசரி - செழும்பம், பழும்பம்

குருமா - கூட்டாளம்

ஐஸ்கிரீம் - பனிக்குழைவு

சோடா - காலகம்

ஜாங்கிரி - முறுக்கினி

ரோஸ்மில்க் - முளரிப்பால்

சட்னி - அரைப்பம், துவையல்

கூல்ட்ரிங்க்ஸ் - குளிர் குடிப்பு

பிஸ்கட் - ஈரட்டி, மாச்சில்

போண்டா - உழுந்தை

ஸர்பத் - நறுமட்டு

சோமாஸ் - பிறைமடி

பப்ஸ் - புடைச்சி

பன் - மெதுவன்

ரோஸ்டு - முறுவல்

லட்டு - கோளினி

புரூட் சாலட் - பழக்கூட்டு

-----------------------------------------------------------


தமிழகக் கோயில் சிற்பங்களில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகளாகட்டும், தூண்களில் ஒரு நூல் இழை கூட கோணல் இல்லாமல் கட்டபட்ட 1000 கால் மண்டபங்கலாகட்டும், இன்னும் ஆதித்தமிழர்கள் செய்த அற்புதமான விசயங்களை பற்றி வியப்புடன் பேசும் நாம், இதைப்பற்றிய தேடலை நாம் மேற்கொள்ள வேண்டாமா..?!

தமிழர் பயன்படுத்திய  அருமையான கணிதம்
1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை 
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு --> 6,0393476E-9 --> nano = 0.000000001
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்.

இவ்வளவு நுண்ணியமான கணிதம் அந்தக் காலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது. இந்த எண்களை வைத்து எத்தனை துல்லியமான வேலைகள் நடந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள், கணினியையும், கணிதப்பொறியையும் (கால்குலேடரையும்) தொழில் நுட்ப வளர்ச்சி என்று இன்றைய தலை முறை கூறிக்கொண்டு இருக்கும் போது, அதை விட ஆயிரம் மடங்கு மேலாக அந்த காலத்திலேயே நாம்
சாதித்து விட்டோம்..!

'''வாழ்க தமிழ் வளர்க தமிழ்.'''

அழகர் ஆற்றில் இறங்குவது ஏன்..? சித்திரை திருவிழா

அழகர் ஆற்றில் இறங்குவது ஏன்? 10 நாள் விழாவின் சுவாரஸ்யக் கதை!!!


எல்லோருக்கும் ஐப்பசியில் தீபாவளி வரும். ஆனால், மதுரைவாசிகளுக்கு, சித்திரையிலும் ஒரு தீபாவளி. அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை அந்த அளவுக்கு மிக விமரிசையாகக் கொண்டாடி வருகிறார்கள். திருவிழா நடக்கும் பத்து நாட்களும் ஊரே திமிலோகப்படும். மதுரை மற்றும் சுற்றிலுமுள்ள ஊர்களில் இருந்து குடும்பத்துடன் புறப்பட்டு வந்து சேருவார்கள். சுமார் பத்து லட்சம் பேருக்கு மேல் ஒரே இடத்தில் கூடும் திருவிழா இது. கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தைச் சொல்வதற்கு முன், அவர் குடிக்கொண்டிருக்கும் அழகர்மலையின் சிறப்பையும் சொல்லியாக வேண்டும்.

மதுரைக்கு வடக்கே சுமார் இருபது கிலோ மீட்டர் தொலைவில், அழகர்மலை கம்பீரமாகக் காட்சி தருகிறது. பார்ப்பதற்கு காளை வடிவிலிருப்பதால் இந்த மலைக்கு 'விரிஷபாத்ரி' என்று ஒரு பெயர் உண்டு. தன்மேல் ஏவி விடப்பட்ட சாபத்துக்கு விமோசனம் கேட்டு, எமதர்மன் இந்த மலைக்கு வந்து பெருமாளை வேண்டித் தவமிருந்தான். தவத்தை மெச்சி, எமதர்மனுக்கு பெருமாள் சாபவிமோசனம் தந்தபோது, 'இதேபோல் இங்கேயே தங்கியிருந்து பூலோக பக்தர்களுக்கும் அனுக்கிரகம் பண்ண வேண்டும்' என்று எமதர்மன் கேட்டுக்கொண்ட காரணத்துக்காக, இந்த மலையில் பெருமாள் குடிகொண்டதாகப் புராணம் சொல்கிறது.

எங்கும் இல்லாத சிறப்பாக இங்கு கள்ளழகராக அவதாரம் எடுத்து எழுந்தருளியிருக்கும் சுந்தரராஜப் பெருமாள் சங்கு, சக்கரம், வில், வாள், கதை என பஞ்சாயுதங்களுடன் காட்சி தருகிறார். அதுமட்டுமின்றி, இங்கு மட்டும்தான் பெருமாளின் கையில் உள்ள சக்கரம் புறப்படத் தயாராக இருக்கிறது. பக்தர்களிடமிருந்து அபயக்குரல் வந்தால், கண நேரமும் தாமதிக்காமல் துஷ்டர்களை அழிக்க வேண்டும் என்பதற்காக சக்கரத்தைப் பிரயோக நிலையிலேயே வைத்திருக்கிறார் பெருமாள்.

மூலவருக்கு அடுத்தபடியாக அதிமுக்கியமானவர் சோலைமலைக்கரசராக விளங்கும் உற்சவர்தான். 'அபரஞ்சி' என்ற அரியவகை தங்கத்தாலானவர் சோலைமலைக்கரசர். 'அபரஞ்சி' என்பது தேவலோகத் தங்கம் என்பதால், இந்தப் பெருமாளையும் தேவலோகப் பெருமாளாக பூஜிக்கிறார்கள். உலகத்திலேயே அபரஞ்சி தங்கத்திலான பெருமாள் சிலைகள் இரண்டு இடங்களில்தான் இருக்கின்றன. ஒன்று - அழகர் கோயிலில்! இன்னொன்று திருவனந்தபுரத்திலுள்ள அனந்த பத்மநாபசுவாமி கோயிலில்.

அழகர் ஆற்றில் ஏன் இறங்குகிறார் என்று பார்ப்போமா?

சுதபஸ் என்ற முனிவர், நூபுரகங்கையில் தீர்த்தமாடி, பெருமாளை நோக்கித் தவமிருந்தார். அந்தச் சமயத்தில் துர்வாச மகரிஷி, தன் பரிவாரங்களோடு அவ்வழியாக வந்தார். பெருமாளையே நினைத்துக் கொண்டிருந்த முனிவர், ரிஷி வந்ததைக் கவனிக்காமலிருக்கவே ஆத்திரமடைந்த துர்வாசர் 'மண்டூகோ பவ' (தவளையாக போகக் கடவாய்!) என சாபமிட்டார். உடனே தவளையாகிப் போன சுதபஸ், சாபவிமோசனத்துக்கு வழிகேட்டபோது, 'விவேகவதி தீர்த்தக்கரையில் (வைகை) நீ தவம் பண்ணிக்கொண்டிரு. சித்ரா பௌர்ணமிக்கு மறுநாள் அழகர் அங்கு வந்து உனக்கு சாபவிமோசனம் கொடுப்பார்' என சொல்லியிருக்கிறார் துர்வாசர். அதன்படி வைகைக் கரையில் தவம் பண்ணிக் கொண்டிருந்த சுதபஸ் முனிவருக்கு, விமோசனம் கொடுக்க அழகர் மதுரைக்கு வந்து போனதாகப் புராணங்கள் விவரிக்கின்றன.

சித்ரா பௌர்ணமிக்கு நான்கு நாள் முன்னதாகச் சித்திரைத் திருவிழா தொடங்கிவிடுகிறது. முதல் இரண்டு நாட்கள் கோயிலில் இருப்பார் அழகர். மூன்றாம் நாள் மாலை மதுரையை நோக்கிப் புறப்படுகிறார். ஆரம்ப காலத்தில் கோயிலைவிட்டு கிளம்பும் அழகர், அலங்காநல்லூர் போய்ச் சேருவார். அங்கு அழகரை குதிரை வாகனத்தில் தூக்கிவைத்து (ஆற்றில் இறங்குவதற்காக) அலங்காரம் செய்வார்கள். அழகருக்கு அலங்காரம் செய்யும் ஊர் என்பதால், அலங்காரநல்லூராக இருந்து, பின்பு அலங்காநல்லூராக மாறிப்போனதாகச் சொல்கிறார்கள். அலங்காநல்லூரில் இருந்து தேனூருக்கு வந்து வைகை ஆற்றில் இறங்கும் அழகர், அதன் பிறகு வண்டியூருக்கு வந்து மண்டூக முனிவருக்கு (சுதபஸ்) சாபவிமோசனம் கொடுப்பார். இதனால் மண்டூர் என அழைக்கப்பட்டு அதுவே மண்டியூராகிப் பிறகு வண்டியூராகிப் போனதாம்.

கள்ளர் கொண்டை, கொண்டையில் குத்தீட்டி, கையில் வலைதடி (பூமராங்), இடுப்பில் ஜமதாடு (ஒருவகை கத்தி) என விதவிதமான ஆயுதங்களுடன் மதுரை நோக்கிப் புறப்படுகிறார் கள்ளழகர். அழகர் மலையிலிருந்து தங்கப்பல்லக்கில் புறப்பட்டுவரும் அவர், வழிநெடுக பக்தர்களால் ஏற்பாடு செய்யப்படுகிற ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் ஆசி வழங்கிவிட்டு, நான்காம் நாள் இரவு தல்லாகுளம் பெருமாள் கோயிலுக்கு வந்து சேருகிறார். அதற்கு முன்னதாக மதுரை எல்லையான மூன்றுமாவடியில் அழகரை மக்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி களைகட்டுகிறது.

நான்காம் நாள் இரவு தல்லாகுளம் பெருமாள் கோயிலில் கள்ளழகருக்கு அபிஷேகம் நடக்கும். இந்த அபிஷேகத்துக்கும் நூபுரகங்கையிலிருந்து தீர்த்த நீர் தலைச்சுமையாகக் கொண்டு வரப்படுகிறது. அபிஷேகம் முடிந்ததும் அழகருக்கு அலங்காரம். இதிலும்கூட ஒரு நம்பிக்கை. அழகருக்கான ஆடைகள், அலங்காரப் பொருட்கள் அனைத்தும் ஒரு பெரிய மரப்பெட்டியில் இருக்கும். இந்தப் பெட்டிக்குள் சிவப்பு, வெள்ளை, பச்சை, மஞ்சள், ஊதா...என பல வண்ணங்களில் பட்டுப்புடவைகள் இருக்கும். கோயிலின் தலைமைப் பட்டர் அந்தப் பெட்டிக்குள் கைவிட்டு ஏதாவதொரு புடவையை எடுப்பார். அவர் கையில் எந்த வண்ணப் புடவை சிக்குகிறதோ, அது அன்றைய தினம் அழகருக்கு அணிவிக்கப்படும். அழகர் எந்த வண்ணப் புடவை கட்டி ஆற்றில் இறங்குகிறாரோ அதற்கேற்ப அந்த வருடத்தில் நல்லது - கெட்டது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பச்சைப்பட்டு கட்டி வந்தால் நாடு செழிப்பாக இருக்கும்.
சிவப்புப் பட்டு கட்டிவந்தால் அந்த வருடம் போதிய விளைச்சலுமிருக்காது. நாட்டில் அமைதியும் இருக்காது. பேரழிவு ஏற்படும்.

வெள்ளை மற்றும் ஊதாப்பட்டு கட்டி வந்தால் நாடு இடைப்பட்ட நிலையில் இருக்கும். மஞ்சள்பட்டு கட்டிவந்தால், அந்த வருடத்தில் மங்களகர நிகழ்வுகள் நடக்கும். இப்படி நம்பிக்கை இருப்பதால் 'ஆற்றில் இறங்க வரும்போது அழகர் என்ன கலர் பட்டுடுத்தி வரப் போறாரோ?' எனப் பக்தர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

ஐந்தாம் நாள் பௌர்ணமியன்று, அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம். இதற்கு தல்லாகுளத்தை விட்டு கள்ளழகர் கிளம்பியதுமே தண்ணீர் பீய்ச்சும் வைபவம் தொடங்குகிறது. அந்தக் காலத்தில் அழகர் வருவதற்குப் புதிதாகப் பாதை அமைத்ததால் தூசி கிளம்பாமல் இருப்பதற்காகவும், வெப்பத்தைத் தணிப்பதற்காகவும் தண்ணீர் பீய்ச்சும் வழக்கத்தை வைத்திருக்கிறார்கள். காலப்போக்கில் தண்ணீர் பீய்ச்சுவது ஒரு முக்கிய வைபவமாக மாறிப்போனது. அழகர் ஆற்றில் இறங்கி வண்டியூர் போய்ச் சேரும் வரை இந்த வைபவம் கலகலப்பாக நடக்கிறது. ஆற்றிலிறங்கும் அழகரை மதுரையில் உள்ள வீரராகவப் பெருமாள் எதிர்கொண்டு அழைப்பார். ஆற்றுக்குள் இருவரும் மாலை மாற்றி மரியாதை பண்ணிக் கொள்வார்கள். அதன்பிறகு மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் தருவதற்காக வண்டியூரை நோக்கிக் கிளம்புவார் அழகர். வழிநெடுக வரவேற்பு பெற்றுக்கொண்டு ஐந்தாம் நாள் இரவு வண்டியூர் போய்ச் சேருகிறார் அழகர். ஆறாம் நாள் அதிகாலையில் அழகருக்கு ஏகாந்த சேவை. பயணக்களைப்பு நீங்குவதற்காக சந்தன அலங்காரம் பண்ணிக்கொள்ளும் கள்ளழகர், வண்டியூர் பெருமாள் கோயிலை வலம் வருவார். அதன்பிறகு சர்ப்பவாகத்தில் புறப்பட்டு தேனூர் மண்டபம் (இந்த மண்டபம் வைகை ஆற்றுக்குள் திருமலைநாயக்கரால் கட்டிக் கொடுக்கப்பட்டது. ஏற்கெனவே தேனூரில் நடந்து கொண்டிருந்த வைபவங்கள் இப்போது இந்த மண்டபத்தில் நடக்கிறது) வந்து சேருகிறார் அழகர்.

தேனூர் மண்டபத்தில் தங்க கருட வாகனத்துக்கு மாறும் அழகர், அங்கிருந்து மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் தருகிறார். பிறகு தேனூர் மண்டபத்திலிருந்து மதுரை நோக்கிவரும் அழகர், ராமராயர் மண்டகப்படி மண்டபத்துக்கு ஆறாம்நாள் இரவு வந்து சேருகிறார். அன்றிரவு அங்கு தங்குகிறார். இரவு முழுவதும் தசாவதார அலங்காரங்களில் தோன்றி பக்தர்களைப் பரவசப்படுத்தும் அழகர், ஏழாம் நாள் காலையில் அங்கிருந்து அனந்தராயர் பல்லக்கில் (திருமலை நாயக்கரின் திவானால் செய்து கொடுக்கப்பட்ட இது முழுக்கத் தந்தத்தால் இழைக்கப்பட்டது) தல்லாகுளத்திலுள்ள சேதுபதிராஜா மண்டபம் வரைக்கும் வருவார். அன்றிரவு அங்கு அழகருக்கு அலங்காரம் கலைக்கப்பட்டு பூப்பல்லக்கில் ஜோடனை நடக்கும்.
எட்டாம்நாள் அதிகாலையில் பூப்பல்லக்கில் மலைநோக்கிக் கிளம்பும் அழகர் வழிநெடுக பூஜை புனஸ்காரங்களை ஏற்றுக்கொண்டு ஒன்பதாம் நாள் காலையில் அழகர் கோயிலைச் சென்றடைவார். பத்தாம் நாள் பயணக்களைப்பு நீக்குவதற்காக உற்சவசாந்தி அபிஷேகம் நடக்கிறது. அத்துடன் சித்திரைத் திருவிழாவின் பத்து நாள் கொண்டாட்டங்கள் சுபமாக நிறைவுற்று மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புகிறது மதுரை.

காவல் ஜமீன்!
அந்தக் காலத்தில் கள்ளழகரின் பாதுகாவலராக வெள்ளியங்குன்றம் ஜமீன்தார் நியமிக்கப்பட்டிருந்தார். இன்றுவரை அந்த ஜமீன் வாரிசுகள்தான் கள்ளழகருக்குப் பாதுகாப்பு. இன்றும் ஜமீன்தார் வந்து அவருக்குரிய மரியாதைகள் வழங்கப்பட்ட பிறகுதான் கோயிலைவிட்டு மதுரைக்குக் கிளம்புவார் அழகர். அந்தக் காலத்தில் அழகருக்குப் பாதுகாவலாகக் குதிரை பூட்டிய சாரட் வண்டியில் அழகரைப் பின்தொடர்ந்து வந்துகொண்டே இருப்பார் ஜமீன். இப்போது வண்டிதான் மாறியிருக்கிறது. பத்து நாட்களும் அவர் அழகருடன் இருப்பார். இப்போதும் அதே வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.