மனிதன் இறக்கும் பொழுதும் ,பிறக்கும் பொழுதும் திதி ,,நட்சத்திரம் பார்த்து சடங்கு சாங்கியும் செய்யபடுகிறது .
மனித வாழ்வில் இவைகள் முக்கிய பங்கு கொண்டு இருக்கிறது என்று
கவனித்தால் புரியும் .
திதிகளை எப்படி பிரித்து உள்ளார்கள் என்று புரிந்து கொள்ளல் வேண்டும் .
1.குருட்டு திதி
2.ஒரு கண்ணுள்ள திதி
3.இரு கண்ணுள்ள திதி
4.நந்தை திதி
5.பத்ரை திதி
6.சபை திதி
7.பூரண திதி
என்றும்
அமரபட்சம் என்னும் தேய்பிறை
பூர்வபட்சம் என்னும் வளர்பிறை
இப்படி பிரித்து உள்ளார்கள் .
1.குருட்டு திதி என்பது
தேய்பிறையில் வரும் ஏகாதசி ,துவாதசி ,த்ரியோதசி,சதுர்தசி,
அமாவசை .
2.ஒரு கண்ணுள்ள திதி என்பது
தேய்பிறையில் வரும் அஷ்டமி ,நவமி ,
வளர்பிறையில் வரும் பஞ்சமி ,சஷ்டி ,சதுர்தசி.
3.இரு கண்ணுள்ள திதி என்பது
தேய்பிறையில் வரும் துவிதியை ,திரிதியை ,சதுர்த்தி ,பஞ்சமி ,சஷ்டி ,சப்தமி .
வளர்பிறையில் வரும் அஷ்டமி ,நவமி ,தசமி ,ஏகாதசி ,துவாதசி ,த்ரியோதசி
4.நந்தை திதி என்பது பிரதமை ,சஷ்டி,ஏகாதசி
5.பத்ரை திதி என்பது துவிதியை,சப்தமி,துவாதசி
6.சபை திதி என்பது திரிதியை,அஷ்டமி,த்ரியோதசி
7.பூரண திதி என்பது பஞ்சமி,தசமி,பௌர்ணமி .
குருட்டு திதியில்–சுப காரியம் செய்ய கூடாது .
ஒரு கண்ணுள்ள திதியில்-செய்யும் காரியும் அரை பலன்
இரு கண்ணுள்ள திதியில்–முழு பலன்
.நந்தை திதியில்–கலைகள் ,திருவிழா செய்ய
பத்ரை திதியில்–வாகனம் வாங்க, பிரயாணம் செய்ய
சபை திதியில்–கொடி மரம்,பந்தல் கால் நட
பூரண திதியில்–திருமணம் ,யாத்திரை செய்ய .
இப்படி வகுக்க பட்டது திதிகள் .
சுபகாரியம் செய்ய திதிகளை நன்கு கவனித்து செய்யுங்கள் சிறப்பான முன்னேற்ம் உண்டாகும்...
1 கருத்து:
sir i want to speack to u
கருத்துரையிடுக