வியாழன், 22 மார்ச், 2018

செல்வவளம் பெருக்கும் அற்புத நாள்

செல்வவளம் பெருக்கும் அற்புத நாள்

ஆன்மீக சூட்சும வழிபாடு செய்து வரும் பெரியவரின் நட்பு கிடைத்தது .முறையான வழிபாடு இல்லாததால் நம் வேண்டுதல்கள் கோயில்களில் நிறைவேறுவதில்லை..கோயிலுக்கு செல்வதில் திதி ,நட்சத்திரம் மிக முக்கியம் என சொல்லி பல விசயங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டார்..அதில் முக்கியமான ஒன்று வளர்பிறை சஷ்டி வழிபாடு ..


செல்வம் பெருகவும் கடன் தீரும் தொழிலில் ஏற்படும் பிரச்சினைகள் தீர்ந்து முன்னேற்றம் உண்டாகவும் இந்த வழிபாட்டை முறையாக செய்ய வேண்டும்

நாளை 23.3.2018 முக்கியமான நாள்..செல்வபெருக்கு நட்சத்திரமான ரோகிணி....சுக்கிரன் வீட்டில் உச்சம் ஆகும் சந்திரன் நாளாகும் ..மகாலட்சுமி அனுகிரகம் நிறைந்த நாளாகும்..அந்நாளில் வளர்பிறை சஷ்டி அமைவது மிக அபூர்வம்.இந்நாளில் உங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் முருகன் சன்னதிக்கு காலை 6.30 முதல் 7.30க்குள் சுக்கிரன் ஓரையில் சென்று முருகனை வழிபட வேண்டும்..

முதல் தரமான நெய் மண் செட்டி விளக்கில் விட்டு தீபம் 6 ஏற்றி முருகனுக்கு முல்லை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ பெருக்கு உண்டாகும்....கடன் பிரச்சினைகள் குறையும்..சித்தர்கள் ஜீவ சமாதியில் இதனை செய்து ரோஜாமாலை அணிவித்து கல்கண்டு படைத்து வழிபட்டால் இரு மடங்கு பலன் கிடைக்கும்..!!

புதன், 7 மார்ச், 2018

குரு வக்ரம் எந்த ராசியினருக்கெல்லாம் யோகம்?

குரு வக்ரம் ராசிபலன் 2018

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் 


ஜோதிடரீதியாக கோட்சாரப்படி இப்போது குரு துலாம் ராசியில் இருக்கிறார் குரு பெயர்ச்சியில் யாருக்கெல்லாம் அவயோகமான பலன்களை குரு கொடுத்தாரோ அவர்களுக்கு எல்லாம் குரு நன்மையான பலன்களை தனது வக்ர காலத்தில் செய்வார் என்கிறது ஜோதிடம் 

பங்குனி மாதத்தில் மீனம் ராசியில் சூரியன் இருப்பார் அந்த சூரியனுக்கு எட்டாவது ராசியில் குரு சஞ்சரிக்கிறார் இது வக்ரகாலம்..இது மூன்று மாதங்கள் வரை இருக்கும் 

வக்ர காலத்தில் எந்தெந்த ராசியினருக்கு குரு நன்மையை செய்வார் யாருக்கெல்லாம் தீமையான பலன்களை செய்வார் என சுருக்கமாக பார்க்கலாம் 

குரு எந்த லக்னம் எந்த ராசியினருக்கு இயற்கையில் பகையாக இருக்கிறாரோ அவர்களுக்கு எல்லாம் முதலில் நன்மையே உண்டாக்கும் ..உதாரணமாக ரிசபம்,துலாம் இந்த இரு ராசியினருக்கும் குரு நன்மையை செய்ய மாட்டார் கெடுதல்தான் அதிகம் செய்வார் மிதுனம் ,கன்னி ராசி லக்னத்தாருக்கும் குரு பாதகம் செய்பவர் தான் ..கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம் அடிப்படையில் நம்ம கடன்காரனுக்கு உடம்பு சரியில்லைன்னா அப்பாடி தப்பிச்சோம்..இன்னும் கொஞ்சம் நாளைக்கு கடன் காசை கேட்டு தொல்லை பண்ண மாட்டான்னு சந்தோசப்படுவீங்கதானே அது மாதிரிதான்குரு வக்ர காலத்தில் கொஞ்சம் நற்பலன்கலும் கிடைக்கும் குரு பெயர்ச்சிக்கு பின் யாருக்கெல்லாம் தொடர்ந்து கெடு பலன்கள் அதிகம் நடந்துதோ அவங்களுக்கு எல்லாம் குரு இந்த காலத்தில் நன்மையை செய்வார் ...

வரும் வெள்ளிக்கிழமை குரு வக்ரம் ஆரம்பம்...குரு வக்கிரமாகும்போது குருப்பெயர்ச்சியில் பாதகமான பலனை அடைந்தவர்கள் சற்று நன்மையான பலன்களை காண்பார்கள் ..மூன்று மாதங்கள் வரை இருக்கும் ..குறிப்பாக ரிசபம்,கடகம்,சிம்மம்,துலாம்,விருச்சிகம்,கும்பம்,மீனம் ராசியினருக்கும் நல்ல பலன்களை செய்வார் என எதிர்பார்க்கலாம்