மேசம்,கடகம்,துலாம்,மகரம் இவை எல்லாம் சர ராசிகள்.வேகம் அதிகம்.,எதுவா இருந்தாலும் இப்பவே நடக்கனும் என்பார்கள்...ராசி,லக்னம் இரண்டுமே மேலே இருக்கும் நான்கு ராசிகளில் இருந்தால் ஜெட் வேகம்தான்.எதையும் அவசரமா செஞ்சுட்டு அப்புறம் கலங்கி நிற்பார்கள்..ராசிகளில் இவை முழுமையானது முதன்மையானது என்பதால் ஊரில் பெரிய மனிதர்கள் பெரிய மனசுக்காரர்கள் இவர்கள்தான்.தன் மனசாட்சிபடி நடந்துகொண்டால் மட்டுமே இவர்கள் புகழ் பெறுவர்.கம்பீரமான தோற்றமும் நெடிய உயரமும் கூர்மையான கண்களும் ,அநியாயத்தை உடனே தட்டி கேட்கும் துடிப்பும் இவர்கள் யார் என சொல்லும்.
நிறைய பயணம் இவர்கள் தான் செய்வார்கள்..காலில் சக்கரம் என்பது இவர்களுக்குதான்.எதையாவது முயற்சி செய்து கொண்டே இருப்பது,யாரிடமாவது பேசிக்கொண்டே இருப்பது,தனக்கு செய்ய வேலை இல்லைன்னா அடுத்தவங்க வேலையை தன்னுடையது போல இழுத்துப்போட்டுக்கொண்டு செய்வார்கள்..!!
நல்ல மனசு,தங்க குணம்...சொந்த வாழ்வில் நிறைய போராட்டம் இருந்தாலும், மனதில் அழுதாலும், வெளியே சிரிக்கும் அன்புள்ளம் கொண்டவர்கள்..!! கடவுள் துணை நிற்க்கட்டும்
----------------------------
சகுனி, சதுஷ்பாதம், நாகவம், கிம்ஸ்துக்கினம் என்ற நான்கு கரணங்களும் மிகவும் பொல்லாதவை. இந்தக் கரணங்கள் குறித்தே கரணம் தப்பினால் மரணம் என்ற பழமொழி கூறப்பட்டது. இந்த நான்கு கரணங்களில் எந்தவித முக்கியமான காரியங்களையும் செய்யாமல் இருப்பதே நல்லது. ஏனைய பவம் முதல் கரஜை வரையுள்ள ஐந்து கரணங்களும் நன்மை தருவன.
சகுனி, சதுஷ்பாதம், நாகவம், கிம்ஸ்துக்துக்கினம் இவை நான்கும் பெரும்பாலும் அமாவாசையை ஓட்டியே வரும். அமாவாசைக்கு முதல் நாள் அல்லது அமாவாசையன்று அல்லது மறுநாள் என மாறி மாறி வரும். அதனால்தான் அமாவாசைக்கு முதல் நாள், அமாவாசை நாள் மற்றும் அதற்கு மறுநாள் எதையும் தவிர்ப்பது நல்லது என்றனர் முன்னோர்.
---------------------------------
ரிசபம் ,துலாம் ,கடகம் எப்போதும் இளமையானவர்கள் ஒரு துள்ளல் ,சுறுசுறுப்பு ,இனிமை எப்போதும் இவர்களிடம் ஒட்டிக்கொண்டிருக்கும் புலம்பல் ,அழுகை ,தாழ்வு மனப்பான்மை எல்லாம் பெரும்பாலும் இவங்ககிட்ட பார்க்க முடியாது..
நண்பர்களே உலகம் ,நிறைய சம்பாதிக்கனும் சந்தோசமா செலவு செய்யனும்.
நீட்டா டிரஸ் பண்ணனும் அலங்காரம் செய்துக்கனும் இப்ப என்ன டிரண்டோ அதுக்கேத்த மாதிரி வாழனும் சினிமா சுற்றுலா எல்லாம் முக்கிய அங்கம். ருசியான சமையல் ,அல்லது ருசியான சாப்பாடை தேடி செல்வது பொழுதுபோக்கு. ஆனா நேர்மாறா வாழ்க்கை துணை அமைஞ்சிடுது என்ன செய்ய விதி வலியது