செவ்வாய், 2 மார்ச், 2021

மேசம்,கடகம்,துலாம்,மகரம் ராசி ரகசியம் : ஜோதிடம்

 மேசம்,கடகம்,துலாம்,மகரம் இவை எல்லாம் சர ராசிகள்.வேகம் அதிகம்.,எதுவா இருந்தாலும் இப்பவே நடக்கனும் என்பார்கள்...ராசி,லக்னம் இரண்டுமே மேலே இருக்கும் நான்கு ராசிகளில் இருந்தால் ஜெட் வேகம்தான்.எதையும் அவசரமா செஞ்சுட்டு அப்புறம் கலங்கி நிற்பார்கள்..ராசிகளில் இவை முழுமையானது முதன்மையானது என்பதால் ஊரில் பெரிய மனிதர்கள் பெரிய மனசுக்காரர்கள் இவர்கள்தான்.தன் மனசாட்சிபடி நடந்துகொண்டால் மட்டுமே இவர்கள் புகழ் பெறுவர்.கம்பீரமான தோற்றமும் நெடிய உயரமும் கூர்மையான கண்களும் ,அநியாயத்தை உடனே தட்டி கேட்கும் துடிப்பும் இவர்கள் யார் என சொல்லும்.

நிறைய பயணம் இவர்கள் தான் செய்வார்கள்..காலில் சக்கரம் என்பது இவர்களுக்குதான்.எதையாவது முயற்சி செய்து கொண்டே இருப்பது,யாரிடமாவது பேசிக்கொண்டே இருப்பது,தனக்கு செய்ய வேலை இல்லைன்னா அடுத்தவங்க வேலையை தன்னுடையது போல இழுத்துப்போட்டுக்கொண்டு செய்வார்கள்..!!
நல்ல மனசு,தங்க குணம்...சொந்த வாழ்வில் நிறைய போராட்டம் இருந்தாலும், மனதில் அழுதாலும், வெளியே சிரிக்கும் அன்புள்ளம் கொண்டவர்கள்..!! கடவுள் துணை நிற்க்கட்டும்

----------------------------
சகுனி, சதுஷ்பாதம், நாகவம், கிம்ஸ்துக்கினம் என்ற நான்கு கரணங்களும் மிகவும் பொல்லாதவை. இந்தக் கரணங்கள் குறித்தே கரணம் தப்பினால் மரணம் என்ற பழமொழி கூறப்பட்டது. இந்த நான்கு கரணங்களில் எந்தவித முக்கியமான காரியங்களையும் செய்யாமல் இருப்பதே நல்லது. ஏனைய பவம் முதல் கரஜை வரையுள்ள ஐந்து கரணங்களும் நன்மை தருவன.
சகுனி, சதுஷ்பாதம், நாகவம், கிம்ஸ்துக்துக்கினம் இவை நான்கும் பெரும்பாலும் அமாவாசையை ஓட்டியே வரும். அமாவாசைக்கு முதல் நாள் அல்லது அமாவாசையன்று அல்லது மறுநாள் என மாறி மாறி வரும். அதனால்தான் அமாவாசைக்கு முதல் நாள், அமாவாசை நாள் மற்றும் அதற்கு மறுநாள் எதையும் தவிர்ப்பது நல்லது என்றனர் முன்னோர்.

---------------------------------
ரிசபம் ,துலாம் ,கடகம் எப்போதும் இளமையானவர்கள் ஒரு துள்ளல் ,சுறுசுறுப்பு ,இனிமை எப்போதும் இவர்களிடம் ஒட்டிக்கொண்டிருக்கும் புலம்பல் ,அழுகை ,தாழ்வு மனப்பான்மை எல்லாம் பெரும்பாலும் இவங்ககிட்ட பார்க்க முடியாது..
நண்பர்களே உலகம் ,நிறைய சம்பாதிக்கனும் சந்தோசமா செலவு செய்யனும்.
நீட்டா டிரஸ் பண்ணனும் அலங்காரம் செய்துக்கனும் இப்ப என்ன டிரண்டோ அதுக்கேத்த மாதிரி வாழனும் சினிமா சுற்றுலா எல்லாம் முக்கிய அங்கம். ருசியான சமையல் ,அல்லது ருசியான சாப்பாடை தேடி செல்வது பொழுதுபோக்கு. ஆனா நேர்மாறா வாழ்க்கை துணை அமைஞ்சிடுது என்ன செய்ய விதி வலியது

மிதுனம் ராசியினர் சந்திக்கும் அஷ்டம சனி

 அஷ்டம சனி முடிஞ்சது எல்லா பிரச்சினையும் தீரலையே என தவிக்கும் ரிசபம் ராசியினர் அஷ்டம சனி என்றால் என்னவென்று புரிஞ்சுகிட்டா போதும்.ராசிக்கு எட்டில் சனி மறைவது அஷ்டம சனி.

உடலுக்கும், உயிருக்கும் ஆபத்து ஸ்கேன், எக்ஸ்ரே ,மாவுக்கட்டு, கர்ம காரியம், பிரேத சாபம் உண்டாகுதல் ,முன்னோர் சாபம் பலன் கொடுக்கும் காலம் .இதில் தொழில் வருமானம் அடிபடும். காரணம் உங்கள் உடல் ஒத்துழைக்காததால்தான் மாவுக்கட்டு போட்டு ஆஸ்பிடலில் இருந்தால் நெருங்கிய உறவு மரணமடைந்தால் மன உளைச்சல், மன அழுத்தம் இவற்றால் தொழில் கவனம் இருக்காது.
பல ரிசபம் ராசியினர் தந்தையை இழந்தனர் .பலர் வேலையை இழந்தனர் பர்பாமன்ஸ் குறைவு தகுதி குறைகிறது இதனால் வேலை இழப்பு அல்லது சக போட்டியாளனின் தகுதி நம்மை விட அதிகமாகிவிடுகிறது
அஷ்டம சனி முடிஞ்சிருச்சே பிரச்சினை முடிஞ்சதா இல்லை...தாய்க்கு அறுவை சிகிச்சை தாய் வழி கடன்,சொந்த தொழில் இன்னும் மந்த நிலை..சிலர் இட மாறுதல் பிரச்சினை ...சந்தித்து கொண்டுள்ளனர் ஒன்பதில் சனி சமுதாய நற்பெயர் இன்னும் கிடைக்கவில்லை சொந்த தொழில் முதலீடு லாபம் இன்னும் எடுக்கவில்லை ...சுப விரயம் தண்ட செலவு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது...பத்தில் சனிதான் தொழில் லாபம்.
சரி மிதுனம் ராசிக்கு இப்ப அஷ்டம சனி ஆரம்பிச்சிருக்கு என்ன செய்யனும்..? உடல் நலனை கவனிங்க பணம் தொழில் எல்லாம் அப்புறம்.உங்கள் உடல்நலனும் மோசம் தந்தை உடல்நலனும் மோசம்.தந்தைக்கு 12ல் சனி வந்திருக்கிறார் உங்கள் வயது 40 பிளஸ் என்றால் இது பொருந்தும்.
சிறுவர்களுக்கு மிதுனம் ராசி என்றால் தந்தை பெரிய ஏமாற்றத்தை தொழிலில் சந்திக்க போகிறார் ஒரு இழப்பை சந்திக்கிறார் பெரிய கடன்காரராக மாறப்போகிறார் .மருத்துவ செலவை சந்திக்க போகிறார் என அர்த்தம்.சிறு குழந்தை எனில் தாத்தா ,பாட்டிக்கு கண்டம்.
பெண்கள் அஷ்டம சனி கணவன் மனைவி உறவு நிலை பாதிக்கும்.உறவினர் பகை உண்டாகும்.தீராத வியாதிகளான சர்க்கரை முழங்கால் வலி ரத்த அழுத்தம் சந்திக்க போகிறிர்கள் .அண்டை வீட்டாருடன் பகை ,பண விசயத்தில் ஏமாற்றம் உண்டாக்கும்