திங்கள், 30 மே, 2011

எம்.ஜி.ஆர் வாழ்வில் திருப்பம் தந்த அதிர்ஷ்ட எண்-7


எம்.ஜி.ஆர் வாழ்வில் திருப்பம் தந்த அதிர்ஷ்ட எண்-7


எம்.ஜி.ஆர் வாழ்வில் பல திருப்பங்கள் ஏற்படுத்திய ஆண்டுகளில் கடைசி எண்ணாக ஆச்சர்யமாக 7 ஆம் எண் இருக்கிறது.....

1917 -ம் ஆண்டு எம்.ஜி.ஆர் கேரளா பாலக்காட்டில் பிறந்தார்...

1927-ம் ஆண்டு வறுமையால் தொழில் தேடி குடும்பத்துடன் இலங்கை கண்டிக்கு எம்.ஜி.ஆர் குடும்பத்தினர் செல்கின்றனர்.

1937-ம் ஆண்டு இலங்கையிலிருந்து தமிழகம் வருகிறார்கள் கும்பகோணத்தில் நாடக கம்பெனியில் தன் அண்ணனுடன் சேர்ந்து நடித்து,வாழ்கிறார்

1947-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் முதன்முதலாக சினிமாவில் நுழைகிறார்



 1957-ம் ஆண்டு முதன்முதலாக சொந்த படம் நாடோடி மன்னன் தயாரிக்கிறார்...நண்பர்கள் இது விஷபரிட்சை..வேண்டாம் என தடுக்கிறார்கள்..படம் தோல்வியடைந்தால் என்ன செய்வாய் என்று கேட்கிறார்கள்....


படம் ஓடினால் நான் மன்னன்...ஓடாவிட்டால் நான் நாடோடி என பதில் சொல்கிறார்...


படமும் பெரிய வெற்றி....

1957-ம் ஆண்டு தேர்தலில்,காங்கிரசை எதிர்த்து அண்ணா வின் தி.மு.க கட்சி..30 சீட்டுகளை எம்.ஜி.ஆர் பிரச்சார உதவியுடன் பிடித்தது....
1967-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று 137 எம்.எல்.ஏக்களுடன் அண்ணா முதல்வர் ஆகிறார்...உன் பிரச்சார பலத்தால்தான் இந்த வெற்றி கிடைத்தது...உனக்கு போக்குவரத்து துறை மந்திரி பதவி தருகிறேன் வாங்க்ஜி கொள் என்கிறார் அண்ணா..உங்கள் அன்பே எனக்கு போதும் அண்ணா....எனக்கு சினிமா தொழிலில் நல்ல மார்க்கெட் இருக்கிறது..நான் சினிமாவிலேயே இருக்கிறேன் என்கிறார் எம்.ஜி.ஆர்

1969-ஆம் ஆண்டு அண்ணா புற்றுநோயால் சாகும் தறுவாயில் உங்களுக்கு பின் அடுத்த முதல்வர் யார் என கேட்க..என் தம்பி என கைநீட்டி விட்டு இறக்கிறார் அண்ணா....
அண்ணா கைகாட்டியது நெடுஞ்செழியனை......

அப்போது தி.மு.க வின் பலம் வாய்ந்த தலைவர்கள்....அண்ணாவின் தம்பிகளாக சொல்லப்பட்டவர்கள் ஐந்து பேர்...எம்.ஜி.ஆர்,கலைஞர்,மதியழகன்,ஈ.வே.ரா.சம்பத்,நெடுஞ்செழியன்.....தான் அவர்கள்...


அண்ணாவின் மறைவிற்கு பின் எம்.ஜி.ஆர் வீட்டிற்கு ஓடிவருகிறார் கலைஞர்...கதவை சாத்திவிட்டு தொப்பென எம்.ஜி.ஆர் காலில் விழுகிறார்..என்னென்னே இது..என பதறுகிறார் ,கலைஞரை தூக்கி உட்கார வைக்கிறார்...எம்.ஜி.ஆர்...

இல்ல தம்பி...நான் கதை வசனம் எழுதும்போது தம்பி எம்.ஜி.ஆருக்கு சான்ஸ் கொடுங்கள் என்பேன்..நீ நடிக்கும்போது கலைஞருக்கு வசனம் எழுத சான்ஸ் கொடுங்கள் என்று சொல்வாய்..அப்படி ஒருவருக்கு ஒருவர்....தோள் கொடுத்து வளர்ந்தோம்..இன்று நீ சினிமாவில் யாரும் பிடிக்க முடியாத உயரத்தில் இருக்கிறாய்..ஆனால் நான் புகழ் இல்லாமல் மங்கி கிடக்கிறேன்...எனக்கு முதல்வர் பதவி வேண்டும்...நெடுஞ்செழியன்,சம்பத் எனக்கு தரக்கூடாது என போட்டி போடுகின்றனர்...மதியழகன் எனக்கு ஆதரவு தருவதாக சொல்லி இருக்கிறார்..நீயும் சப்போர்ட் செய்தால் நான் முதல்வர் ஆகி விடுவேன்...என்றார்...

தன்னிடம் உதவி என்று யார் வந்தாலும் அவர்களிடம் இல்லை என சொல்லும் பழக்கம் எம்.ஜி.ஆருக்கு இல்லை...காலில் விழுந்த பிறகு மறுப்பது என்பது எம்.ஜி.ஆர் வரலாற்றில் இல்லை.....

சரி நான் பார்த்துக்கொள்கிறேன்..கவலைப்படாதீங்க..நீங்கதான் முதல்வர்...என சொல்லி அனுப்பி வைத்துவிட்டு,மீதி தலைவர்களிடம் கருணாநிதி ஆசைப்படுகிறார்...முதல்வராக அவரே இருக்கட்டும்..தப்பு செய்தால் ராஜினாமா செய்ய சொல்லிடலாம் என சொல்லிவிட்டார்...எம்.ஜி.ஆர் பிரச்சார கவர்ச்சியை நம்பி,தி.மு.க இருந்ததால் அதை மறுக்க முடியவில்லை..

அதன்பிறகு,
உதய சூரியனின் பார்வையிலே உலகம் விழித்துக்கொண்ட வேளையிலே....
அவர் வரவேண்டும்..புகழ் பெற வேண்டும்..என ஆசை துடிக்கிறது..

என பாடி நடித்தார் இது கலைஞரை முதல்வராக்கிய ஆசையை சொல்கிறது...

அதன் பின் பின்னொரு நாட்களில் மதியழகனும் கலைஞர் மீது கோபமாகத்தான் இருந்தார் என்பதை எம்.ஜி.ஆர் புரிந்துகொண்டார்...மு.க.முத்துவுக்கு எம்.ஜி.ஆர் வேசம் போட்டு...நம் கட்சிக்கு நம் குடும்பத்திலேயே ஒரு எம்.ஜி.ஆர் இருந்தால் நல்லது என கலைஞரின் சுயரூபங்கள் மெல்ல மெல்ல தெரிய வந்து,எம்.ஜி.ஆருக்கு ஆத்திரமூட்டியது....

கணக்கு வழக்கில்லாமல்,கட்சிப்பணம்,அரசு பணம் மாயமாகி கொண்டிருப்பதை கண்டு கொதித்து போய்,கலைஞரிடம் கணக்கு கேட்டபோது...எம்.ஜி.ஆரை கட்சியை விட்டு நீக்கினார்....



நீதி கேட்டு எம்.ஜி.ஆர் ரசிகர்கள் படை திரண்டனர்..அவர்களை அமைதியாகும்படி கூறியபோதுதான்..புரட்சிதலைவர் வாழ்க...என்ற முதல் கோஷம் கிளம்பியது....

அந்த சமயத்தில் பாடிய பாடல்தான் ....

நேரம் வரை பார்க்கிறேன்....நானும் ஒரு கை பார்க்கிறேன்.....

1977-எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கிய முதல் தேர்தலில் திண்டுக்கல்லில் நின்றார்..கட்சிக்கு மாபெரும் வெற்றி....தமிழக முதல்வர் ஆனார் எம்.ஜி.ஆர்...எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்ட அநீதியை கண்டு மக்களும் கொதிதெழுந்ததால் .எம்.ஜி.ஆருக்கு சுலபமாக வெற்றி கிடைத்தது..

1987-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் மரணம்......

அவர் உயிருடன் இருக்கும் வரை கலைஞர் ஆட்சியை பிடிக்க முடியவில்லை....அவர் ராஜதந்திரம் எதுவும் பலிக்கவில்லை...எம்.ஜி.ஆரை மிக மோசமாக தி.மு.க பிரச்சாரம் செய்தது...அட்டைகத்தி வீரன்..தொப்பி தலையன்...குழந்தை அவருக்கு இல்லை என்பதை வைத்து மிக மோசமாக அவரை வர்ணித்தார்கள்...


எம்.ஜி.ஆர் தன் முதல் மனைவி இறந்தது முதல் இனி நான் எந்த கடவுளையும் கும்பிடமாட்டேன்..கடவுள் இருந்திருந்தால் என் மனைவி செத்திருப்பாளா என சொல்லிவிட்டு .....எந்த கோவிலுக்கும் செல்லாமல் வழிபடாமல் நாத்திகராக வாழ்ந்தவர்....

கடைசி காலங்களில் ஜானகி அம்மாளின் வற்புறுத்தலின் படி..கொல்லூர்..மூகாம்பிகை ஆலயத்திற்கு தங்கவாள் கொடுத்து வழிபட்டார்

நடப்பதை முன்கூட்டியே சொன்ன ஜோதிடர்கள்


நடப்பதை முன்கூட்டியே சொன்ன ஜோதிடர்கள்-துக்ளக் சோ

ஜோதிட சாஸ்திரத்தின் கூர்மையை காட்ட ஒரு சில உதாரணங்களை கூறுகிறேன்...இவை நான் அறிந்தவை...கேள்விபட்டவை அல்ல...

சஞ்சய்காந்தி ,விமான விபத்தில் மரணம் அடைந்த போது துக்ளக் ஆஃபீஸில் ஓவியராக பணிபுரிந்து கொண்டிருந்த திரு ஸாரதி திகைத்துப்போனார் ஒரு பெரிய அதிசயம் ,எல்லோரும் கொஞ்சம் காத்திருங்கள் என்று கூறிவிட்டு தன் வீட்டிற்கு சென்று பாபுராவ் பட்டேலின் மதர் இந்தியா பத்திரிகையின் பழைய இதழ் ஒன்றை கொண்டு வந்தார் 




பாபுராவ் படேல் அதில் ஜோதிடமும் எழுதிக்கொண்டிருந்தார் அந்த பழைய இதழில் சஞ்சய்காந்தி இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஒரு விமான விபத்தில் உயிர் இழக்ககூடும்...என்று தன்னுடைய ஜோதிட குறிப்புகளில் பாபுராவ் பட்டேல் கூறியிருந்தார் 

எப்படி, இந்த மாதிரி அவரால் சொல்ல முடிந்தது..?ஜாதகத்தை கணித்து அவர் சொன்ன முடிவு அப்படியே பலித்து விட்டது எப்படி..?
குருட்டாம்போக்கு என்று சொல்லி விடலாம்..அப்படி சொல்வது சுலபம்...ஆனால் இந்த மாதிரி ஒரு விசயத்தில் இப்படி முன்கூட்டியே கணிக்க முடிந்தது என்பது ஜோதிட சாஸ்திரத்தின் வலிமையைத்தான் காட்டுகிறது...

இன்னொரு நிகழ்ச்சி...சி.என்.அண்ணாத்துரையின் மரணம்...,தி.மு.க பிரிவினை (எம்.ஜி.ஆர் வெளியேற்றப்பட்டது )இரண்டையுமே 1967 லேயே ஒரு ஜோதிட நிபுணர் கூறியிருந்தார் அவர் பெயர் சுந்தர்ராஜன் (என்னுடன் பள்ளியில் படித்தவர்)அவர் தி அஸ்ட்ரலாஜிக்கல் மாகஸின் என்ற பிரபல ஜோதிட பத்திரிக்கையில் ..1967 ல் தி.மு.க பெரிய வெற்றி பெற்ற போதே ,’’இன்னும் ஒரு சில ஆண்டுகளில் தி.மு.க பிளவுபடும்..அதன் நிறுவனதலைவர்களில்  முக்கியமானவர் மரணம் அடைவார் ‘’என்று எழுதியிருந்தார்..

இந்த கணிப்பு வெளியான இதழை 1972-ல் அவர் என்னிடம் காட்டியபோது ,எனக்கு ஆச்சர்யமாக இருந்தது தி.மு.க ஆரம்பிக்கப்பட்ட நேரத்தை வைத்துக்கொண்டு தான் இதை கணித்ததாக அவர் என்னிடம் விளக்கினார் 

இன்னுமொரு நிகழ்ச்சி,என் நண்பன் ஒருவன் பெரிய கடனில் சிக்கியிருந்தான் எதுவும் அவன் வாங்கிய கடன் இல்லை ஷ்யூரிட்டி கையெழுத்து போட்டு அவன் சந்தித்த பிரச்சனை அது.......பித்து பிடித்தவன் போல அவன் மாறிவிட்டான் தற்கொலை செய்து கொள்ளவும் முயன்றான் அவனுடைய நண்பர்களாகிய நாங்கள் ஏதோ உதவி செய்தோம்...அதுவும் போதவில்லை திண்டாடிக்கொண்டிருந்தான்...

இந்த நிலையில் என்னை ஒரு ஜோதிடர் சந்தித்தார் என் ஜாதகத்தை பற்றி கூறினார் நான் அவரிடம் என்னை பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும்..அதனால் சரியாக சொல்ல முடிகிறது..என் நண்பர் ஒருவர் இருக்கிறார் அவரது ஜாதகத்தை பார்த்து சொல்ல முடியுமா..? என்று கேட்டேன்...அவரும் சம்மதித்தார்.

என் நன்பன் ,கடனில் சிக்கியது,அவனுடைய தற்கொலை முயற்சி என்று எல்லா விவரத்தையும் சரியாக சொல்லி கொண்டே வந்தார் ..பிறகுதான் அதிசயமாக அவர் ஒன்று சொன்னார் 



கவலைவேண்டாம் இவருக்கு நல்ல காலம்தான் இவருடைய கவலை முழுமையாக தீர்ந்து விடும் இரண்டே மாதத்தில் எல்லா கஸ்டங்களும் மறைந்து விடும் என்று அவர் சொன்னார் நாங்கள் இதை நம்ப முடியாமல் இருந்தோம்...ஏன் என்றால் ,அவன் சிக்கியிருந்த குழப்பம் அப்படிப்பட்டது...

ஆனால் இரண்டு மாதத்திற்குள்ளேயே அந்த நண்பரின் மகன்,தனக்கு தெரிந்த ஒரு அரசியல்வாதியின் உதவியுடன் கடன் கொடுத்திருந்த சிலரின் உதவியுடன் ,கடன் கொடுத்திருந்த சிலரை சந்தித்து பெரும் வட்டி கொடுத்ததையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளுமாறு செய்து முழு கடனையும் பைசல் செய்து விட்டான்...எல்லோருக்கும் நிம்மதி......

இப்படி எல்லாம் கணிக்க வழி சொல்கிற ஜோதிடத்தை பொய் என்று கூறுவது சரியாக இருக்காது..
ஆனால் ஒன்று.. மிக நன்றாக கற்றறிந்த ஜோதிடர் கூட எதிர்காலத்தை துல்லியமாக கணித்து விடுவார் என்று உறுதியாக சொல்லிவிட முடியாது 

வராஹிமிஇரரே கிரகங்களின் போக்கை வைத்து சூசகமாக பலன் சொல்லலாம் ஆனால் என்ன நடக்கும் என்பது பிரம்மனுக்கு மட்டுமே துல்லியமாக தெரியும் என்று கூறியிருந்தார் ஆகையால் ஜோதிடத்தை நம்பியே ஒவ்வொரு காரியத்தையும் செய்வது புத்திசாலித்தனமல்ல...’’

நன்றி-துக்ளக்



வெள்ளி, 27 மே, 2011

காதல் தோல்வி பற்றிய ஜோதிடம்


காதல் தோல்வி
8-ம் இடத்தில் சுக்கிரன் இருந்து, அவர் பார்வை கிடைக்காவிட்டால், ஜாதகர் காதல் தோல்வி அடைவர். பாலியல் நோய் ஏற்படும். நாய்க்கடியால் தொல்லைப் படுவார். எய்ட்ஸ் நோய் கூட தாக்க வாய்ப்பு உண்டு!

காதல் நிலவு
ஜோதிட சாஸ்திரப்படி காதலுக்கும், நட்புக்கும் சந்திரனே காரணம் வகிக்கின்றான். பௌர்ணமியன்று சந்திரன் ஆண், பெண் இருபாலருக்கும் ஒருவித மனக்கிளர்ச்சியை உண்டு பண்ணுவார். காதலுக்கு அதிபதி சந்திரன் என்பதால் தான் அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை காதல் பாடல் பெரும்பாலனவற்றில் நிலவு இடம் பெற்றிருபப்தை அறியலாம். மேலும் அந்த நிலவு எத்தனை காதலுக்கு சாட்சியாக இருந்திருக்கிறது என இந்த உலகம் அறியும்.

ஜோதிடம்;ரத்தக்கொதிப்பு நோய் யாருக்கு ஏற்படும்? blood pressure


ரத்தக்கொதிப்பு நோய் யாருக்கு ஏற்படும்?
உயர் ரத்த அழுத்த நோய், குறைந்த ரத்த அழுத்த நோய் (பிளட் பிரஷர்) உள்ளவர்கள் அதற்கான வைத்தியங்களைச் செய்து கொள்ள வேண்டும்.  மேலும் நவக்கிரகத்தில் உள்ள குரு பகவானுக்கு மஞ்சள் துணி அணிவித்து, கொண்டக்கடலையை நிவேதனம் செய்து, மஞ்சள் பூ கொண்டு அவரை அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.  'ஓம் குருவே நமஹ' என 108 தடவை கூறி குரு பகவானை 9 முறை வலம் வந்து வணங்க வேண்டும்.  இந்தப் பரிகார வழிபாட்டை மூன்று வியாழக்கிழமை செய்ய வேண்டும். பின் நிவேதனம் செய்து கொண்டக்கடலையை அர்ச்சகருக்கு தானமாய் கொடுத்துவிட வேண்டும்.  இவ்வாறு செய்தால் பிளட்பிரஷர் குணமாவதைக் காணலாம

செவ்வாய், 24 மே, 2011

எம்.ஜி.ஆர் ஜாதகம் m.g.r horoscope


எம்.ஜி.ஆர் ஜாதகம் -ஒரு விளக்கம்

எம்.ஜி.ஆர் ஜாதகம் ஒரு விளக்கம்...இது என் ஜோதிட கணிப்பும், கருத்தும் மட்டுமே...மறைந்தவர் ஜாதக விளக்கம் எதற்கு என்றால் புகழ்பெற்றவர்களின் ஜாதகத்தில் இருக்கும் சில நல்ல அம்சங்களை வைத்துதான் சில ஆய்வுகளை மேற்கொண்டால்தான் பல ஜோதிட புதிர்களை அறிய முடியும்...இது ஜோதிடம் பற்றிய ஆர்வம் உள்ளவர்களுக்கு பயன்படும் என நினைக்கிறேன்!




மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ;பிறந்த தேதி;28.1.1917
பிறந்த நேரம்;6.30 a.m
பிறந்த ஊர்;இலங்கை கண்டி
ராசி;மீனம்
நட்சத்திரம்;ரேவதி





எம்.ஜி.ஆர் பிறந்த தேதி 17 என்பதுதான் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது..ஆனால் இந்த பிறந்த தேதி குறிப்புகள்தான் சரி என பல வருடங்களுக்கு முன்,ஒரு ஜோதிடர் பத்திரிக்கையில் எழுதியிருந்தார்...இது சரியாக பொருந்தி வருகிறது...

அரசியலில் புகழ்பெற்றவர்கள் ஜாதகம் என்றாலே நாம் செவ்வாய் அவர்களுக்கு எப்படி என்பதைத்தான் பார்ப்போம்.அந்த வகையில் எம்.ஜி.ஆர் தமிழ்கத்தின் அரசியலில் சிம்ம சொப்பனமாக விளங்கியவர் அல்லவா..1933 முதல் 1987 வரை - 55 ஆண்டுகள் தமிழக அரசியலில் இருந்தார்.அவர் ஜாதகத்திலும் ராசியில் செவ்வாய் உச்சம் பெற்றும், நவாம்சத்தில் பத்துக்குடைய சுக்கிரனை செவ்வாய் பார்வை செய்தும் பலம் நிறைந்து இருப்பதை அரசியல் பலத்தை குறிக்கிறது..அம்சத்தில் செவ்வாய்,சந்திரன் பார்வை....சசிமங்கள யோகத்தை ஏற்படுத்தி சந்திர திசையில் சரித்திர புகழை கொடுத்தது.

புத்திர ஸ்தானம்,5 ஆம் அதிபதி சுக்கிரன்,பாக்யாதிபதி புதன் 12 ல் மறைந்து,அவர்களுடன் பாம்பு கிரகம் ராகு கூடியதால் புத்திர தோசம்.அம்சத்திலும் 5 க்குடைய புதன் எட்டில் மறைந்திருப்பதை காணலாம்...


புதன்,சுக்கிரன் இணைவு ஸ்ரீ வித்யா யோகம் ஏற்பட்டு,9,10 க்குடையவன் சேர்க்கையும் ஏற்பட்டு ராஜயோகம் அமையப்பெற்றுள்ளது...கலைத்துறையில் அவர் சாதிக்க இந்த கிரக சேர்க்கைகள் முக்கிய காரணி எனலாம்.

சனி 7ல் அமர்ந்து அவர் குடும்ப வாழ்வில் பல சோதனைகளை தந்தது...

நவாம்சத்தில் பாக்கியஸ்தானத்தில் அமர்ந்த சந்திர திசை அவருக்கு பெரும்புகழை கொடுத்தது ..சந்திர திசை கேது புக்தியில் முதல்வர் ஆனார் (30.6.1977)அடுத்து வந்த செவ்வாய் திசை அவரை அரசியலில் அழியா புகழை கொடுத்தது.....

அரசில் உயர் பதவி வகிக்கவும்,அரசியலில் புகழ் பெறவும்,சூரியன்,செவ்வாய்,குரு,சுக்கிரன் பலம் அவசியம்...1,4,7,10 ஆம் இடங்களுடன் இந்த கிரகங்கள் சம்பந்தம் பெற வேண்டும்...

எம்.ஜி.ஆர் ஜாதகத்தில் 1ல் சூரியன் ,செவ்வாய் அமர்ந்தனர்..4 ல் குரு அமர்ந்தார்.7மிடத்தை சூரியன்,செவ்வாய் பார்த்தனர்.10 ஆம் இடத்தை குரு 7 ஆம் பார்வையாக பார்த்தார்.

எதிரிகளையும் பணிய வைத்த எம்.ஜி.ஆர்


ஆறாமிடத்தில் தீயக்கோள்கள் இருந்தால் ஜாதகர் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குவர்.தீமை செய்வோருக்கு தீமையும் நன்மை செய்வோருக்கு நன்மையும் ,தனக்கு பகைவராக இருப்பவரை எல்லாம் தனக்கு பயந்து யாவரும் தன்னை வந்து வணங்கதக்கதாய் மேன்மை அடைவார்கள் என ஒரு ஜோதிட பாடல் சொல்கிறது..எம்.ஜி.ஆர் ஜாதகத்தில் ஆறாமிடத்தில் கேது அமர்ந்து அநிலையை அவ்ருக்கு தருகிறது. காள சர்ப்ப யோகமும் 30 வயதுக்கு மேல் அவருக்கு பெரும்புகழ்,செல்வம்,அழிவில்லாத மக்கள் செல்வாக்கை தர முக்கிய காரணம்.