செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

கடன் தொல்லை பணம் தங்காத பிரச்சினைக்கு ஜோதிட தீர்வு

எவ்வளவு சம்பாதித்தாலும் சேமிக்க முடியவில்லை. பணம் தங்குவதில்லை. உடனே செலவாகிவிடுகிறது. வருமானத்திற்கும் அதிகமாக செலவினங்கள் கூடிக்கொண்டே போகிறது என்பவர்களும், தொழிலில் வேகமான முன்னேற்றம் அடையவும், புஷ்பராகம் மற்றும் கோமேதகம் இவற்றில் எந்த கல் உங்கள் ஜாதகப்படி பொருந்துகிறதோ அந்த கல்லை வெள்ளி மோதிரத்தில் அணியலாம். 

வெள்ளி சுக்ரனின் உலோகம். வெள்ளி, ரத்னத்தின் சக்தியை வேகமாக நம் மூளை நரம்புகளுக்கு கடத்தகூடியது. ஜாதகத்தில் லக்னத்திற்கு இரண்டாமிடமாகிய தனஸ்தானாதிபதி 6,8, 12ல் மறைந்தாலும், இரண்டாம் இடத்தில் பாவகிரகங்கள் அமர்ந்தாலும் பணம் எவ்வளவு வந்தாலும் தங்கவில்லை. மேற்கொண்டு கடனும் ஏற்படுகிறது. வட்டி கட்டியே போராட்டம் நடத்தும் வாழ்க்கை அமைந்துவிடுகிறது. வசியமான பேச்சும் இல்லை. இவர்களுடைய பேச்சே இவர்களுக்கு பகையாகி விடுகிறது. சவால் விட்டு பேசுவார்கள். எதெற்கெடுத்தாலும் வாக்குவாதம் செய்வார்கள். பணம் வந்துவிட்டால் கண்டபடி அள்ளி இறைப்பார்கள்.
    
பிறந்ததேதி 4,13, 22, 31 உடையவர்களும், பிறந்ததேதி கூட்டு எண் 4 உடையவர்களுக்கும் 13, 22,31 போன்ற எண்களில் பெயர் அமைந்தார்களுக்கும் 29, 30, 26, 30 பிறந்த தேதி கூட்டு எண் உடையவர்களுக்கும் இது பொருந்தும்.
    ஜாமீன் கையெழுத்து நண்பர்களுக்கு போட்டு மாட்டிக் கொள்பவர்கள், பிறர் கடனுக்கு பொறுப்பேற்று, விழிபிதுங்குபவர்களும் இவர்களே.
    
குடும்பத்திலும் பலவித பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். இவர்கள் கோமேதகம் அணியலாம். இது அனுபவத்தில் நல்ல பலன் தருகிறது..ஜாதககப்படி யார் தனாதிபதியோ அவர்களுக்கு தகுந்தார்போல வழிபாடு செய்தால் பிரச்சினையின் தீவிரம் குறையும்..கோமேதகம் மோதிரம் ஐம்பொன்னிலும் அணியலாம்..இது ஐந்து விதமான உலோகங்களால் செய்யப்பட்ட மோதிரம் இதை எனது நண்பர் ஒருவர் செய்து தருகிறார்..என் வாடிக்கையாளர்கள் பலருக்கு இட்ய்ஹன் படி செய்து கொடுத்துள்ளேன்..இது பெரும்பாலும் கறுப்பதில்லை..தங்கம் போலவே இருக்கிறது..

மோதிரம் தேவைப்படுபவர்கள்,உங்கள் பிறந்த தேதி பிறந்த நேரம் குறிப்புகளுடன் மெயில் செய்யுங்கள் sathishastro77 @gmail.com

கருத்துகள் இல்லை: