திங்கள், 29 ஜூலை, 2013

கடன் பிரச்சினை உடனே தீர வேண்டுமா.? ஜோதிடம்

கடன் பிரச்சினை உடனே தீர வேண்டுமா.? ஜோதிடம்



கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கி நின்றான் இலங்கை வேந்தன் என சொல்வார்கள் கடன் வாங்கிவிட்டு அதை கட்ட இயலாமல் தவிப்பது நரகம் போன்றது..வாழ்க்கையின் அத்தனை பிடிகளும் அந்த நேரத்தில் போய்விடும் மன உளைச்சல் இன்னும் மோசமானது...

ஜாதகத்தில் 6,8 ஆம் ராசியில் இரண்டாம் அதிபர் அமர்ந்துவிட்டாலும் சுக்கிரன் கெட்டு போய் இருந்தாலும் இந்த நிலை உண்டாகிறது குரு கெட்டிருந்தாலும்,குருவுக்கு 6,8ல் சந்திரன் இருந்தாலும் பணம் எவ்வளவு வந்தாலும் கையில் தங்குவதில்லை..கடன் உண்டாகிறது அல்லது கொடுத்த கடன் திரும்புவதில்லை...வருமானம் இருப்பதில்லை...

கடன் நிறைய இருக்கு வட்டி கட்டிக்கிட்டே இருக்கோம் எப்போ இதை அடைப்போம் என தவிக்கிறீர்களா..நல்ல நாள் பார்த்து கொஞ்சம் கடன் அடைத்தாலும் வெகு விரைவில் கடன் அடையும்..அது என்றைக்கு..?


கடன் வாங்கிவிட்டு சிரமப்படுபவர்கள்,பேங்க்ல லோன் வாங்கியிருக்குறவங்க கவனிக்கவும்;

வரும் புதன்கிழமை ஜூலை 31 காலை 11 முதல் 12 மணிக்குள் உங்க கடனில் சிறு தொகையை கட்டினால் கடன் வேகமாக தீரும்..

 அன்று குளிகை காலம்....12 மணி வரைக்கும் இருக்கு..குளிகையில் எதை செய்தாலும் அது திரும்ப நடக்கும் அதாவது நீங்க தொடர்ந்து பணத்தை கட்டி அடைச்சிடுவீங்க..காலப்புருச லக்னத்துக்கு சந்திரன் 2ல் வருதல்...தேய்பிறை நவமி...ஆடிகிருத்திகை எனும் சிறப்பான நாள்....எதிரிகள்,ருண் ரோகத்தை ஒழிக்கும் முருக கடவுளுக்கு சிறப்பான நாள் என்பதால் அன்று நல்லது..முயற்சித்து பாருங்களேன்..

வெள்ளி, 26 ஜூலை, 2013

ஜோதிட ரகசியம் ;பாகம் 2

ஜோதிட ரகசியங்கள் பாகம் ;2

 
51, வருட கிரகங்கள் இணைவு நல்ல யோகம் அதனுடன் மாத கிரகம் இணைய பாதள யோகம்.                                                                

52, 10-க்குடையவன் 6-க்குடையவன் சேர கடன் வாங்கி தொழில் செய்யக்கூடாது,                                                                   

53, புதன் தவணை கிரகம், ராகு அடமானம் கிரகம்,                                                                    

54, புதன் திசையோ அல்லது புதன் புத்தியோ நடக்கின்ற காலத்தில், தவணை வாங்குவார்கள்.                                                                    

55, ராகு திசை அல்லது ராகு புத்தி நடக்கின்ற காலத்தில் நகை அடமானம் வைப்பார்கள். மற்றும் வட்டிக்கு பணமும் வாங்குவார்கள்.                                                         

56, ஜோதிடருக்கு உண்டான கிரகம் சந்+கேது, செவ்+கேது, புத+கேது, அதாவது சந்+கேது ஜாதகம் படிக்காமல் ஜாதகம் சொல்வார்கள் செவ்+கேது அருள்வாக்கு சொல்வார்கள். புதன+fகேது கணித அறிவுடன் சொல்வார்கள்.                                

57, சந்திரன் எந்த ராசியில் இருக்கிராரோ அந்த பாவத்தில் மச்சம் இருக்கும். சந்திரன் உள்ள நட்சத்திரம் வீக்காக இருக்கும்.                                    

58, பேசாமல் இருந்தால் கும்பம் அதிகம் பேசினால் மகரம்                                  

59, புதன் வக்கிரமாக இருந்தாலோ, புதன் கேது நட்சத்திரத்தில் இருந்தாலோ, டிகிரி முடிக்க மாட்டார்கள். புதன், கேது இருந்தால் பட்டம் முடிக்க மாட்டார்கள்.                        

60, அப்படியே முடித்தாலும் அது சம்பந்தமாக வேலை செய்ய மாட்டார்கள்.                        

61, செவ்வாய் வக்கிரம் ஆனால், கணவனை விட்டு பிரிந்து  விடுவார். இது பெண் சாதகத்தில்                                                                

62, சுக்கிரன் வக்கிரம் ஆனால்  மனைவியை விட்டு பிரிந்து செல்வார். இது ஆண் சாதகத்தில்.                                                                         

63, கருப்பு டிரஸ் போட்டு வேலை கேட்டால் உடனே வேலை கிடைக்கும்.                      

64, காலனில் கடன் வாங்கி குளiகையில் கடன் அடைக்லாம். குளiகையில் ஆபரேசன் செய்யக் கூடாது. அதே போல் பௌaர்ணமி அன்றும் ஆபரேசன் செய்யக்கூடாது.                                                                       

65, 7-கிரகங்களுக்கு மேல் ஒரு ராசியில் இருக்க அதை லக்னமாக பாவித்து பலன் கூற சரியாக இருக்கும்.                                                        

66, குரு நீச்சமாக இருந்தால் சொந்த ஊரில் இருக்க மாட்டார்கள்.                                

67, புனர்பூ யோகம் உள்ள ஜாதகத்திற்கு முகூர்த்த லக்னத்திற்கு குரு சம்பந்தபட்டே ஆக வேண்டும்.

                                                               

68, சந், சனி புனர்பூ யோகம். சந், சனி சேர நடக்கப் போகிறது. சந், சனி பார்வை நடந்து விட்டது.                                                                

69, நவாம்சத்தில் பெண் சாதகத்தில் சந் சனி பரிவர்த்தனை ஆனால் திருமணத்திற்கு முன் தவறு நடக்க வாய்ப்புள்ளது.                                                       

70, செவ் ராகு, சேர பல் தொந்தரவு இருக்கும். செவ் ராகு 3-பாவத்தில் இருக்க தம்பி, மைத்துனர், இருக்க மாட்டார்கள்.                                                

71, சந்+சனி+சூரி சேர்க்கை பிட்ரியூட்டி சுரப்பி பாதிக்கபட்டு குட்டையாக இருப்பார்கள.                                                                    

72, 4-தலை முறைக்கு 1-முறை பிரிவு நோய் வரும்.                                                         

73, கோட்சார கேது எந்த ராசிக்கு வருகின்றதோ அந்த வீட்டில் ஆரம்பத்தில் குரு இருந்தால் கெடுதலை செய்யவிட மாட்டார்.                                    

74,குருவும் சந்திரனும் 1-டிகிரியில் அல்லது நெருங்கிய டிகிரியில் இருக்க குடும்பம் அல்லது பொருளாதரத்தை குறைக்கும்.                                           

75, குருவுக்கு 5-ல் சந்திரன் 7-ல் சந்திரன் வரும் சமயம் எந்த பாதிப்பும் வரவில்லை எனில், நேரடியாக குழந்தையை கடுமையாக பாதிக்கும்.                        

76, குரு+சந் யோகம் வீரியம் குறைய வேண்டுமானால் சனியோ ராகுவோ சேர வேண்டும்.                                                                          

77, 1,5,9-க்குடையவர்கள் கெடாமல் இருக்க வேண்டும்.                                     

78, சூரி+சந்+குரு இவர்கள் ராகு கேதுவுடன் சேர இடம் மாற வேண்டும்.                    

79, சூரியன் புதன் பரிவர்த்தனை ஆனால் சூழ்நிலை மாறிப் படித்தல் சூரியன் 8-டிகிரி புதன் 4- டிகிரி ஆகாது.                                                                 

80, சூரியன் சனி நல்ல வேலை, நல்ல உழைப்பாளi, குழந்தை தாமதமாக பிறக்கும்.

81, 2-கிரகங்கள் பரிவர்த்தனை ஆகும் போது பரிவர்த்தனை ஆகாத பாவத்தில் ராகு இருக்க கூடாது.                                                             

82, சூரியனுக்கு 5-டிகிரியில் எந்த கிரகம் இருந்தாலும் அஸ்தமனம் ஆகிவிடும்.

83, சூரியனுக்கு முன் பின் 2பாதத்திற்குள் எந்த கிரகம் இருக்கினறதோ அந்த கிரகம் அஸதமனம் ஆகிவிடும்

84, ஒரு மோசமான கிரக கூட்டு எனில், அதே கிரகம் கோச்சாரத்தில் வரும் போது அந்த இடத்தில் ராகு அல்லது கேது வரும் போது மோசமான சம்பவம் நடக்கும்.                                                                    

85, பிறந்த சாதகத்தில் உள்ள சனியை கோச்சார செவ்வாய் தொடும் போது விபத்து நடக்கும்.                                                            

86, கோட்சார செவ்வாய் பிறந்த சாதகத்தில் உள்ள சனியை கடக்கும் போதும் கோட்சார சனியை பிறந்த சாதகத்தில் உள்ள செவ்வாய் கடக்கும் போதும் விபத்து நடக்கும்.                                                                     

87, குரு சனியையோ செவ்வாயையோ பார்க்க விபத்து நடக்காது.                           

88, 2-பகை கிரகங்கள் 5-டிகிரியில் அமைவது கிரகயுத்தம். கிரகத்தில் ஒரு கிரகம் வக்கிரம் ஆனால் கிரகயுத்தம் இல்லை.                                       

89, பிறந்த சாதகத்தில் அஸ்தமனமான கிரகத்துடன் மாந்தியும் சேர்ந்து திரிகோணத்தில் இருக்க விஷம் சாப்பிடுவார்.                                              

90, காலவிதி சக்கரப்படி செவ்வாய் 1,8-டையவர் ஆவார் 3,6,10,11-உப ஜெயஸ்தானம் இவ்விடங்களiல் செவ்வாயின் நட்சத்திரம் உள்ளது எனவே செவ்வாய் நோய் என்று எடுத்துக் கொள்கின்றோம்.                                     

91, ஜென்ம நட்சத்திர தினத்தன்று பொருள் திருடு போனால் அல்லது காணாமல் போனாலும் கண்டிப்பாக திரும்ப கிடைக்கும்.

92,(1) லக்னத்திற்கு 5-க்குடையவனுக்கு 6-ஆம் அதிபதி கேந்திரத்தில் இருந்தாலும், 6-க்குடையவனுக்கு 5-ஆம் அதிபதி கேந்திரத்தில் இருந்தாலும் இந்த யோயகம் சங்கு யோகம் என்பார். அல்லது கொடியோகம்.                                       

92,(2)  இந்தயோகம் உள்ளவர்கள் தான் செல்லும் கார்களiல், கொடி கட்டி செல்வார்கள். (அதாவது கட்சி கொடி, அல்லது தேசியகொடி)

93, இந்த சங்கு யோகம் உள்ளவர்கள் உயர்பதவிகளiல் உள்ளவர்கள், அமைச்சர்கள், ஆளுநர், பிரதமர், மற்றும் கட்சி தலைவர்கள், கார்களiல் கொடியை கட்டி செல்வார்கள்.                                                               

94, சந்திரனுக்கு 6,8,12-இல் குரு இருந்தால் சகட யோகம். இந்த யோகம் உள்ளவர்கள், காலம் பூராம் கடனாளiகளாக இருப்பார்கள்.                                        

95, இதில் சந்திரன் - செவ்வாய், சூரியன், சனி வீட்டில் இருந்தாலும், அல்லது இந்த மூவரும் நட்சத்திரத்தில் சந்திரன் இருந்தாலும் காலம் முழுவதும் கடன்காரர்களாக இருப்ப்பார்கள்.                                                         

96, இதே சந்திரன் செவ்வாய், சூரியன், சனி வீடுகளiல் இல்லாமல் மற்ற வீடுகளiல் சந்திரன் இருந்தால் கடன் அதிதிகமாக இருக்கும் இருந்தாலும் கடன் இருப்பதை காட்டி கொள்ள மாட்டார்கள் வெள்ளையும் சொள்ளையுமாக இருப்பார்கள்.

97, ராகு+சுக்கிரன், சேர்க்கை இருந்தால் அவர்கள் வைப்பாட்டி வைத்துக் கொள்வார்கள். அதுவும் விதவை யாக இருக்கும் வேறு மத பெண்கள்.. மேலும் ராகு+சுக்கிரன் சேர்க்கை திடீர் பணம் வரும், மனைவி நேயாளiயாக இருப்பாள். இது எப்பொழுது நடக்கும் ராகு, சுக்கிரன் தசா புத்தி காலங்களiல் தான் நடக்கும்.

98, சுக்கிரன், கேது, சேர்க்கை உள்ளவர்கள் விஷம் சாப்பிடுவார்கள். சுக்கிரன் கேது சேர்க்கை மனைவி அல்லது சகோதரி அல்லது அக்கா அல்லது அண்ணி விஷம் சாப்பிடுவார்கள். சுக்கிரன் கேது தசா புத்திகளiல் நடக்கும்.                                 

99, அது போல் எந்த கிரகம் சுக்கிரனோடு சேருகிறதோ, அந்த கிரக காரகத்துவத்தால், விஷம் சாப்பிடுவார். உதாரணம் கேதுவுடன் சந்திரன் சேருகிறது, அப்ப தாயாலும் அல்லது மாமியாராலும் விஷம் சாப்பிடுவார்.

100, ஒருவருக்கு அஸ்டமசனி நடக்கும் காலம் பேராசையை உண்டு பண்ணும்.                

குறிப்பு;ஜோதிட பலன் அறிய விரும்புபவர்கள்,ராசிக்கல் மோதிரம் வாங்க விரும்புபவர்கள் எனது மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும் sathishastro77@gmail.com

கட்டணம் ரூ 500...உங்கள் பிறந்த தேதி,நேரம் ,பிறந்த ஊர் உங்கள் கேள்விகள் எழுதி அனுப்பவும்..

ராசிக்கல் உங்கள் ஜாதகத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து தரப்படும் இதனை ஐம்பொன்னில் பதித்து பூஜித்து அனுப்பி வைக்கிறேன்,,


வியாழன், 25 ஜூலை, 2013

ஜோதிட ரகசியங்கள் பாகம் 1

ஜோதிட ரகசியங்கள் ;

ஜோதிட ரகசியங்கள் பாகம் 1

1, புதன் புதியன  விரும்பி..சூரியனுடன் இருக்கும் போது பல பெண்களை விரும்புவார்கள்....ஆசைகள் மாறிக்கொண்டே இருக்கும் ..தொழிலில் கெட்டிக்காரர்கள் படிப்பில் சுட்டி..                                                      

2, குரு கெட்டிருக்க கணவன் மனைவிக்குள் சண்டை வரும்.                                               

3, சனி கர்மா சம்பந்தமில்லாமல் உடல் இணையாது. சனி  - லக்னம், லக்னாதிபதி, 7-மிடம், 7-ம் அதிபதிகளை பார்க்க திருமணம் ந விரும்பி சூரியன் + புதன் சம்பந்தம் மதன கோபாலயோகம் பல பெண்கள் தொடர்ப.<         டைபெறும்.                                        

4, சந் + ராகு திருட்டு கிரகம்

5, சந்திரனுடன் எத்தனை கிரகம் சம்பந்தப்பட்டிருக்கின்றதோ அதனுடைய தாக்கம் இருக்கும் சந் + சுக் காமம் அதிகம்.                                                  

6, பிரிந்து போக நினைப்பது ராகு, பிரித்து வைப்பது  கேது.                                      

7, குருவிற்கு 1-படை ராசியில் 3-5-7-9-11 ல் சுக்கிரன் இருக்க நன்றாக இருக்கும.                                                                       

8, 2,11-ல் தொடர்பு வைப்பாட்டி வைத்துக் கொள்வார்கள்.                                  

9, திருமணத்தன்று 5,12-ன் கிழமை, நடசத்திரங்கள் வரக் கூடாது.                   

10, சூரி + சனி பெண் வீட்டுடன் மாப்பிள்ளையாக இருக்க நேரிடும். அப்பா பெண் மேல் அதிக பாசமாக இருப்பார்.                                                    

11, பெண் சந்திரனுக்கு ஆண் சந்திரன் 11-ல் இருக்க சுபம். சந்திரனுக்கு 11-ல் லக்னம், லக்னத்திற்கு 11-ல் சந்திரன் இருக்க இனிய திருமணம்.                              

12, 1,2,8-க்குடையவர்கள் திருமணத்தை நிர்மாணிக்கிறார்கள்

13, சனி + ராகு + சந் சேர கிட்னீ ஸ்டோன் பிரச்சனை வரும். மூவரும் சேர்ந்தோ அல்லது மூவரும் நீர் ராசிகளiல் இருந்தாலும் ஸ்டோன் பிரச்சனை வரும். எப்போது? மூவரும் இணையும் காலம் நீர் வீடு மீனம், கடகம், விருச்சிகம்.

14, ஒரு ஜாதகத்தில் திசாநாதன் இன்னொரு ஜாதகத்தில் அஸ்தமனம் ஆனால், பிரிவினையை இழப்பை தரும். நல்ல யோக நிலையில் இருக்க மிக்க யோகம்.

15, 5-ம் அதிபதி குருவாகி சூரியன், ராகு, கேது, நட்சத்திரத்தில் இருக்க குழந்தை பிறக்காது.

16, சனி 5,7-ல் அமர்வது சனி தோஷம் சந் + சனி சேர்க்கை பார்வை புனர்பூ யோகம்.                                                                        

17, இரு ஆதிபத்தியமுள்ள கிரகங்கள் பரிவர்த்தனை ஆகும் போது, பரிவர்த்தனை ஆகாத பாவங்கள் பலி வாங்கும். அல்லது பலி எடுக்கும். பரிவர்த்தனை ஆகாத பாவத்தில் ராகு அமரக் கூடாது.                                          

18, நிலம் வாங்க பிறந்த கால செவ்வாய்க்கு கோட்சார செவ்வாய் 2-12, 6-8, ஆக இருக்க கூடாது. குரு, செவ்வாய் சம்பந்தம் ராசி அல்லது அம்சம் ஆகியவைகளiல் இருப்பவர் மட்டுமே வீடு வாங்க இயலும், செவ்வாய் கட்டிய வீடு, புதன் காலி இடம்.                                                             

19, நீண்ட கால பலனுக்கு திசாநாதன் சம்மதிக்க வேண்டும் குறுகிய கால பலனுக்கு புத்திநாதன் சம்மதிக்க வேண்டும்.                                                 

20, சந்திரன் 6,8-ல் உள்ள ஜாதகம் உடல் ரீதியான தொந்தரவு கொடுக்கும்.

21, ரேவதி குறுகிய நட்சத்திரம் குளiர்ந்த மொட்டு விசாகம் அதிக காம நட்சத்திரம் நெருப்பு குழம்பு உஷ்ணம்.                                                 

22 வக்கிர கிரககங்கள் தன் காரகத்துவத்தின் தனித் தன்மையை தக்க வைத்துக் கொள்வதில்லை.                                                                

23, சிம்மம், கும்பம், லக்னம் உள்ளவர்கள் தத்து போக கூடிய லக்னம். குழந்தை வெளiயே வாழம்f.                                                                 

24, 7-ம் அதிபதி 3-ல், 3-அதிபதி -7 ல் இருக்க மணப் பெண் தானே தேர்ந்தெடுப்பர்கள்.

25, 9-கிரகத்தில் எது குறைந்த பாகையில உள்ளதோ அதுவே மனைவியின் ராசியாக அமையும்.                                                                  

26, அதிக பாகை, கலை, எந்த கிரகம் பெற்றுள்ளதோ அதன் காரகத்துவ வேலையை செய்வார்.                                                               

27, உச்ச வீடுகளை பரிமாறிக்கொள்ளும் கிரகம் திடீர் முடிவுகளை எடுக்கும். விபரிதம் என்று தெரிந்தும் செய்வார்கள். வாழ்க்கையை புரட்டிப் போட்டு விடும்.

28, அங்காளi, பங்காளi, குறிக்கும் கிரகம்  புதன். புதன் நீச்சத்தில் இருக்க, அங்காளi, பங்காளi, ஆகாது.                                                                

29, சனி மகரம் செவ்வாய் துலாம் இருக்க காரகத்துவ ரீதியான முடிவுகளை எடுக்கும். இவர் உடன் பிறந்த அக்காவை கற்பழித்தார். ( சனியும் செவ்வாயும் உச்ச பரிவர்த்தனை ஆகியுள்ளது. )                                    

30, உச்ச வீடுகளை பரிமாறிக் கொள்ளும் கிரகம் விபரிதம், என்று தெரிந்தும், திடீர் முடிவுகளை எடுக்க வைக்கும்.

31, ஒரு கிரகம் தன் நின்ற வீட்டின் 8-ஆம் அதிபதியோடு தொடர்பு கொண்டால் தனது காரகத்துவத்தின்f மூலம் அவமானம் அடையும்.

32, ஒரு கிரகம் தான் நின்ற வீட்டின் 12- ம் அதிபதியோடு தொடர்பு கொண்டால் தனது காரகத்துவத்தினை இழக்கிறது.                                       

33, ராகு கேது அச்சை விட்டு வெளiயேறிய கிரகம் தனது காரகத்துவ அடிப்படையில் தனித்து நிற்கிறது.                                                   

34, மேசம் லக்னம் சூரி + சந் 7-ல் குரு சூரியனுக்கு 12-ம் அதிபதி குருவின் தொடர்பு எனவே 3-மகன்களும் இறந்து விட்டார்கள் லக்னத்திற்கு 5-வீடு சூரியன் எனவே மகனைக் குறிக்கும்.                                                     

35, ஸ்திர லக்னத்தில்  மூத்த பையன் பிறக்க பாதிப்பையும் பெண் பிறக்க யோகத்தினையும் செய்யும் 12-வருட காலம் மட்டும் செய்யும்.                                 

36, நல்லதையோ கெட்டதையோ செய்ய வேண்டுமானால் அந்த கிரகம் நடப்பில் உள்ள கிரகங்கள் சேர பார்க்க வேண்டும்.                                               

37,  சனி கேது பிறப்பில் உள்ள ஜாதகருக்கு சனி மகத்தில் வரும் காலம் தொந்தரவு செய்யும். கண் பாதிப்படையும்.                                          

38, வீட்டை விட்டு ஓடிப் போபவர்கள் வக்கிர கிரக திசையில் போனால், திரும்பி வருவார்கள். வக்கிரம் ஆகி அஸ்தமனமும் ஆகி அந்த திசையில் போனால் திரும்ப வர மாட்டார்கள்.                                                             

39,  சனி கேது தொடர்பு எந்த வகையில் வந்தாலும், அதிர்ஷடத்தை நம்பி செய்யும் ரேஸ், லாட்டரி, கிளப், சூதாட்டம், தொழில் வீழ்ச்சி அடையும்.                                                 

40, கோட்சார சந்திரன் சுக்கிரனை தொடும் காலம் பணம் வரும்.                                       

41, சனி பிறந்த ஜாதகத்தில் அசுபதி 1,2,3-ஆம் பாதத்தில் உள்ளவர்களுக்கு கோர்ட் கேஸ் வரும். சனி பிறந்த ஜாதகத்தில் மகம் 1,2,3-ஆம் பாதத்தில் உள்ளவர்களுக்கு வீடு aIதியான வழக்கு வரும். கோட்சார சனி அசுபதி 1,2,3- பாதத்திலும் மகம் 1,2,3- பாதத்திலும் வரும் போது இச்சம்பவம் நடைபெறும்.

42, கோட்சார சந்திரனை எத்தனை கிரகம் பார்க்கின்றதோ அதன் காரகத்துவத்தை செய்யலாம் என்று சொல்லலாம்                                                      

43, தொழிழைப் பற்றி கேட்கும் போது சனியை சந்திரன் தொடர்பு இருக்க வேண்டும் அப்போது தான் வேலை கிடைக்கும.                                       

44, குரு சந்திர யோகத்தில் தான் ஒருவர் வீட்டை விட்டு ஓடுவார்.                                            

45, பிறந்த கால சந்திரன், கோட்சார புதனை பார்த்தாலும், கோட்சார சந்திரன் பிறந்த கால புதனை பார்த்தாலும் படிப்பு மந்தம்.                                         

46, குழந்தை உண்டா என்ற கேள்விக்கு, கோட்சார சந்திரன், குருவை பார்க்க வேண்டும். இருவர் ஜாதகத்திலும் பார்க்க வேண்டும்.                                       

47, உச்ச கிரக காரகத்துவத்தை மதிக்க வேண்டும்.                                  

48,புதன் உச்சம் பெற, கடன் காரரை கண்டு பயப்படுவார்கள். காலச்சக்கர விதிப்படி புதன் 6-க்குரியவர். லகனத்திற்கு 6-க்குயைவருடன் புதன் சேர பெருத்த கடன் காரராக இருப்பார்.                                                           

49, ஒரு ஜாதகத்தில் ஒரு கிரகம் நீச்சமாக இருக்கும் பட்சத்தில், அவர் கால புருஷனுக்கு எத்தனையாவது ஆதிபத்தியம் உள்ளவரோ, அப்பாவக காரகத்துவம் வழியாக தொந்திரவு இருக்கும். தொந்தரவுக்கு பயப்படமாட்டார்.                            

 50, காலபுருஷன், விதி, பிறந்த, ஜாதகம், அனுமதி, கோட்சாரம், எப்போது, எப்படி, எங்கே, தசா, புத்தி, எவ்வளவு காலம்.

(தொடரும்)

ஜோதிட பலன் அறிய விரும்புபவர்கள்,ராசிக்கல் மோதிரம் வாங்க விரும்புபவர்கள் எனது மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்..
கட்டணம் ரூ 500...உங்கள் பிறந்த தேதி,நேரம் ,பிறந்த ஊர் உங்கள் கேள்விகள் எழுதி அனுப்பவும்...

ராசிக்கல் உங்கள் ஜாதகத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து தரப்படும் இதனை ஐம்பொன்னில் பதித்து பூஜித்து அனுப்பி வைக்கிறேன்,,

செவ்வாய், 23 ஜூலை, 2013

உத்தரகாண்ட் அழிவு ஏன்..? கூட்டாக மரணிப்பது ஏன்.? ஜோதிடம்


உத்தரகாண்ட் அழிவு மட்டுமல்ல...கும்பகோணம் தீ விபத்து,அமெரிக்கா இரட்டை கோபுர தாக்குதல்,மெரினாவில் சுனாமி இது போன்ற பேரழ்வில் இறந்தவர்கள் எல்லோருக்கும் ஆயுள் கெட்டுப்போச்சா..? அது எப்படி ஒரே நேரத்தில் அவ்வளவு பேர் இறந்தார்கள்..? 




இவங்க எல்லோர் ஜாதகத்திலும் ஒரு ஒற்றுமை இருந்தது....அந்த விபத்து நடந்த கோட்சாரத்திலும் ஒரு ஒற்றுமை இருந்தது...யார் ஜாதகத்தில் குருவும் ராகுவும் ஒன்றாக சேர்ந்து இருக்கிறதோ அல்லது குருவுக்கு 1,5,7,9 ல் ராகு இருக்கிறதோ அவர்கள் கூட்டு மரணத்தில் மரணிக்கிறார்கள் அதாவது கூட்டத்தோடு கூட்டமாக மரணம்...அது எப்போது நடக்கும்..? குருவும் ராகுவும் கோட்சாரத்தில் பார்க்கும்போது...!! இப்போது 2013 முடியும் வரை குருவும் ராகுவும் 5ஆம் பார்வையாக பார்த்துக்கொள்கிறார்கள்...உத்தரகாண்ட் மற்றும் பாலியல் கொடுமைகள் என இதனால் தொடர்ந்துகொண்டே இருக்கு..குரு பார்க்க கோடி நன்மை என்பது ராகு விசயத்தில் கோடி கொடுமையாக மாறும்..!

குரு ராகு சேர்க்கை ஜாதகத்தில் எந்த ராசியில் இருக்கோ அந்த ராசிக்குறிய பலன்கள் பாதிக்கப்படும் காலையில் ஒரு பெண் ஜாதகம் பார்க்க நேர்ந்தது அவருக்கு 4ல் குரு ராகு...குரு குழந்தை பாக்யம் பற்றி சொல்லக்கூடிய முக்கிய கிரகம் அவர் தான் நாகரீகம்,ஆன்மீகம்,ஒழுக்கம் பற்றியும் சொல்லக்கூடியவர்...பணபலத்தையும்,செல்வாக்கையும் குறிப்பவர்...அவருடன் ராகு சேர்ந்து இருக்கும்போது மேற்க்கண்ட பலன்கள் பாதித்தது...அப்பெண் 4 முறை அபார்சன் செய்துகொண்டார்...ஒரு ஆண் குழந்தை அதன் பின் பிறந்தது...பின் கர்ப்பப்பை பாதிப்பால் ஆப்ரேசன் செய்து அதை அகற்றும் சூழல் உண்டானது...அவர் கணவன் வங்கியில் நல்ல பணியில் இருந்தாலும் இவர் பணத்தையெல்லாம் தன் உறவினர்களுக்கு தானம் வழங்கியதால் கடன் உண்டானது...இப்போ பண நெருக்கடி..குழந்தை இவர் சொல் கேட்பது இல்லை மிக அதிக பிடிவாதம்..குரு ராகு இணைந்ததால் குழந்தை சார்ந்த பிரச்சினைகள்,பண நெருக்கடி,அடிக்கடி மருத்துவ செலவு காரணம் சுக ஸ்தானம் 4ல் இவர்கள் கூடி இருந்ததுதான்....!!

திங்கள், 22 ஜூலை, 2013

நிறைய சொத்துக்கள் சேர்க்கை யாருக்கு..? ஜோதிடம்-ராசிபலன்


நிறைய சொத்துக்கள் சேர்க்கை யாருக்கு..?

நிலத்திற்கு அதிபதி செவ்வாய். ஜாதகத்தில் செவ்வாய் பலம் பெற்றவர்கள், நாலாம் இடம் வலுவடைந்தவர்களுக்கு நிறைய சொத்துக்கள் சேரும். ஜாதகத்தில் பத்தாமிடம், நான்காமிடம், செவ்வாய் ஒன்றுக்கொன்று தொடர்பு பெற்றவர்கள் ரியல் எஸ்டேட் எனப்படும் நிலம் வாங்கி விற்றல் தொழில் செய்கின்றனர். இதற்கு செவ்வாய் பலம் பெறுவதும் அவசியம். ஜாதகத்தில் சில குறைபாடுகள் இருந்து, ரியல் எஸ்டேட் தொழில் மந்தமாக இருப்பவர்கள் பவழம், கோமேதகம் அணியலாம். பவழம் அணிவதால் செவ்வாய் கிரகத்தின் சக்தி இவர்களுக்கு கிடைக்கும். நிலம் சம்பந்தமான காரிய அனுகூலங்கள் கிடைக்கும். கோமேதகம், ராகுவிற்கு உண்டானது. ராகுவை போல கொடுப்பவனும் இல்லை. கேதுவைப்போல் கெடுப்பவனும் இல்லை என்பார்கள். பவழத்தை விட கோமேதகமே ரியல் எஸ்டேட் மற்றும் சொத்துக்கள் சேர்க்கைக்கு சிற்ப்பானது..இது பணம் தங்காமை,கடன் பிரச்சினை உள்ளவர்களுக்கும் ஏற்றது..

அந்தளவு ராகு நினைத்தால் ஒரேபொழுதில் ஒருவனை கோடீஸ்வர நிலைக்கு உயர்த்தி விடுவார்கள். தந்திரம், முரட்டுத்தனம், குறுக்குவழி அனைத்து சட்ட ஓட்டைகளும் அறிந்தவர் ராகு பகவான். பல மிகப்பெரிய அரசியல் ஊழல்களுக்கு காரணமாக இருந்தவர்கள் பலர் ஜாதகத்தில் ராகுவே கொடுப்பவராக இருந்திருக்கிறார். ராகு புதையல் போல செல்வத்தை தரக்கூடியவர். அக்காலத்தில் பலர் புதையல் எடுக்க கோமேதகத்தை பயன்படுத்தினார்கள். தீயசக்திகளை அடக்கவும், சாபம் உள்ள நிலங்களின் கெட்ட சக்திகளை கட்டுப்படுத்தவும் கோமேதகம் பயன்படுகிறது.

ராசிக்கல் மோதிரம் வாங்க விரும்புபவர்கள்..பிறந்த தேதி,நேரத்துடன் மெயில் செய்யவும்...ஐம்பொன்னில் மோதிரம் செய்து ராசிக்கல் பதித்து தருகிறேன்..மெயில்;sathishastro77@gmail.com

புதன், 17 ஜூலை, 2013

ஆடி மாசத்தில் செய்யக்கூடாதவை ..ஜோதிடம்


ஆடி மாசம் பொறந்துடுச்சி..சூரியன் கடக ராசிக்கு போகிறார் அது சந்திரன் ராசி...சந்திரன் உடல் மனக்காரகன் அங்கு நெருப்பு கிரகம் சூரியன் போவது ...என்றால் தண்ணீருக்குள் நெருப்பை போட்டா என்னாகும்..?கொதிக்கும்...ஆவியாகும்..நெருப்பும் அணையும்..அதனால் இந்த மாசம் சுப காரியத்துக்கு ஆகாது...நோய்கள் பெருகும் மாசம்..அதனால் நோய் எதிர்ப்பு சக்திகளான இயற்கை கொடுத்த மருந்துகள் வேப்பிலையும் ,மஞ்சளையும்..அதிகம் உபயோகித்து அம்மன் திருவிழாக்கள் தொடங்கும்..காதல் ராசியான கடகத்தில் நெருப்பு கிரகம் புகுந்தா காதல் விளங்குமா..? அதான் இந்த மாசத்துல கல்யாணம் வேண்டாம்னு பெரியவங்க சொன்னாங்க..கருவும் தங்காத மாசம் என்றுதான் புது ஜோடிகளையும் பிரிச்சு வெச்சாங்க அப்படி உருவாகும் கரு சித்திரையில் பிறந்து கொடூர எண்ணங்களும்,கோபமும் நிறைந்த குணவானாகவும்,அனைவரிடமும் பகை உண்டாக்கி கொள்கிறவனாகவும் இருப்பான்..!!

இன்னிக்கு தலையாடி...தேங்கா சுடுற நோன்பின்னு சின்னக்குழந்தைகள் சந்தோசமா சொல்வாங்க..பள்ளிக்கூடம் 3 மணிக்கே விட்ருவாங்க...இளம் தேங்காயை பாறையில் தேய்த்து மொழு மொழுன்னு செஞ்சி,அதோட கண்ணுக்குள்ள ஓட்டை போட்டு ஊற வெச்ச பச்சரிசி,வெல்லம்,எல்லாம் போட்டு குச்சியால குத்தி அதை நெருப்பில் சுடுவோம்...தேங்காய் ஓடு வெடிக்கும் வரை சுட்டு ,சாப்பிடும்போது ரொம்ப ருசியாக இருக்கும்...சின்ன வயசு சந்தோசம் தனி..இந்த வருசம் ஆடி 18க்கு காவிரி கரை புரண்டு ஓடும் என்பதை நினைத்தால் சந்தோசமா இருக்கு..ஆடி அமாவாசை,ஆடி வெள்ளி,அம்மன் ,கூழ்,மஞ்சள் காப்பு என கிராமங்கள் களைகட்டும்....!!! அனைவருக்கும் அம்மன் அருள் உண்டாகட்டும்..!!!

வெள்ளி, 12 ஜூலை, 2013

இரண்டு தார தோசம்; ஜோதிடம் பலன்

இருதார தோசம் என்பது முதல் கல்யாணம் முடிந்து இருவருக்கும் ஒத்து வராமல் பிரியும் நிலை உண்டாகி வேறு திருமணம் செய்யும் அமைப்பு எனலாம்...கல்யாணமாகி குடும்பம் நல்லா போய்க்கிட்டு இருக்கும்போதே சந்தர்ப்ப சூழ்நிலையால இன்னொருத்தருடன் பழக்கம் உண்டாகி தாலி கட்டாம குடும்பம் நடத்துறதையும் சொல்லலாம்..இப்படி இருதார தோசம் இருவகைப்படும்..இருதார தோசம் என்பதே பிறர் மயங்கும்படி கவர்ச்சியாக இருத்தல்,எதிர்பாலினரை தூண்டும் அழகு,காதலில் பலவீனமாக இருத்தல்தான்..சின்னக்குறைன்னாலும் மத்தவங்கக்கிட்ட ஆறுதல் தேடும் பலவீன மன்சு மட்டுமல்ல..அழகா பேசக்கூடியவங்க..சுலபமா மத்தவங்களை கவர்ந்துடுவாங்க...

உணர்வுகளையும் ஆசைகளையும் தூண்டி விடுவதும் அதை அனுபவைக்க தைரியம் கொடுப்பதும் கவர்ச்சி,அழகு அள்ளி வழங்குவதும் சுக்கிரன்,குரு,சந்திரன்,புதன் தான்...

ஒரு ஜாதகத்தில் குருவுக்கு மேற்க்கண்ட சுபர்கள் லிங்க் கொடுத்தால் இவங்க மத்தவங்களுக்கு லிங்க் வைக்கப்போறாங்கன்னு அர்த்தம்...குருவுக்கு 12,1,2,5,7,9,11 ல் சந்திரன் இருந்தா மூத்த பெண்களுடனும்,சுக்கிரன் இருந்தா இளம்பெண்களுடனும்,புதன் இருந்தா வயது குறைந்த சிறிய பெண்களுடனும் உறவு உண்டாகும்...மேற்க்கண்ட மூன்று கிரகங்களில் இரண்டு கிரகங்கள் குருவுடம் சம்பந்தம் பெற்றாலே போதும்..இருதார அமைப்பு உண்டாகிவிடும்..

உதாரணமாக ஒருவருக்கு குருவுக்கு இரண்டில் புதனும் சந்திரனும் இருந்தாங்க..குருவுக்கு 12ல் சுக்கிரனும் இருந்தது...இவருக்கு இரண்டு மனைவிகள்....முதல் மனைவியின் அக்காவை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார்...

திருமண பொருத்தம் பார்க்கும்போது கிரக சேர்க்கைகளை கவனமாக பார்த்தால் மட்டுமே இது போன்ற சிக்கலான பிரச்சினைகளை சமாளிக்க முடியும்...இந்த கிரக அமைப்பு இருப்பவர்கள் சரியான முறையில் பரிகாரம் செய்துகொண்டால்,பாதிப்புகளில் இருந்து விடுபடலாம்..

புதன், 10 ஜூலை, 2013

சினிமாவில் புகழ் பெற வைக்கும் ஜாதகம் அமைப்பு - சினிமா துறையில் முன்னேற வைக்கும் கடவுள்

சினிமாவில் புகழ் பெற வைக்கும் ஜாதகம் அமைப்பு எது..? சினிமா துறையில் முன்னேற வைக்கும் கடவுள் எது..?

எனது நண்பர் பாலு,ஒரு இயக்குனரை அழைச்சிட்டு வந்தார் ஏம்பா உனக்குத்தான் பெரிய ஆளுங்களையெல்லாம் தெரியுமே ..அப்படியே இவருக்கு ஒரு தயாரிப்பாளர் இருந்தா சொல்லு என்றார்...அவரும் என்னை வி.ஐ.பி ரேஞ்சிக்கு நினைச்சுக்கிட்டார் சார், என்கிட்ட ஒரு கதை இருக்கு ஒரு கோடி பட்ஜெட் .என ஆர்வமாக சொல்ல துவங்க,நான் உடனே மைனா மாதிரி இருக்குமா..அதுவும் ஒரு கோடி பட்ஜெட் தான் ..சூது கவ்வும் மாதிரி இருக்குமா..எனக்கு ரொம்ப பிடிக்கும்..என்றேன் அவர் கதை சொல்றதுக்கு முன்னாடியே நான் எதிர்பார்ப்பின் உச்சத்தில் இருந்ததால் அவர் தலையை சொறிந்துகொண்டே கதை சொல்ல வேண்டியதாயிற்று..(என்னமோ நாந்தான் தயாரிப்பாளர் மாதிரி)படம் ஓபனிங் சீன் ஆத்தங்கரை....( அட...நிஜத்திலும் இப்படித்தான் கதை சொல்ல ஆரம்பிக்கிறாங்க..)அங்க நம்ம ஹீரோயின் மனநிலை சரியில்லாத பொண்ணு துணி துவைக்கிறாங்க...நான் உடனே சலிப்பாக சார் இதெல்லாம் மணிவண்ணன் முதல் படம் கோபுரங்கள் சாய்வதில்லை படத்துகியே பார்த்துட்டோம் அதுல இதான் ஓபனிங் சீன்..என்ன சார் பழைய ஸ்க்ரீன் ப்ளே கொண்டாந்துருக்கீங்க..உங்கள நம்பி ஒரு கோடி எப்படி போடுறது என தயாரிப்பாளர் சார்பில் நானே நெட்டி முறித்தேன் நண்பருக்கு ஏண்டா கூட்டிட்டு வந்தோம்னு ஆகியிருக்கும்..

சரி விசயத்துக்கு வருவோம்... சினிமா துறையில் புகழ் பெறனும் என்றால் நடிகைன்னா சந்திரன்,சுக்கிரன் 1,7 சம்பந்தம் பெறனும்..அப்போதான் அழகும், கவர்ச்சியும் போட்டி போடும்..அப்புறம் இயக்குனர் ,நடிகர் ஆகனும்னா 7ஆம் இடத்தில் புதன்,சுக்கிரன்,சந்திரன் தனித்தோ இணைந்தோ இருக்கனும்...

சினிமா துறையில் முன்னேற உதவும் கடவுள் குருவாயூர் கிருஷ்ணர் தான்..அப்புறம்  திருப்பதி பெருமாள்...

வளர்பிறை ஏகாதசி திதியில் தங்கள் குலதெய்வத்துக்கு காணிக்கை எடுத்து வைத்துவிட்டு ,கிருஷ்ணர் அல்லது பெருமாள் ஆலயம் சென்று நெய்தீபம் ஏற்றி 12 முறை வலம் வந்து வணங்கவேண்டும்

உங்க ஜாதகத்தை ஆய்வு செய்து சினிமா துறைக்கு போவீங்கலான்னு சொல்றேன் பிறந்த குறிப்புகளை மெயில் பண்ணுங்க..அப்புறம் ஐம்பொன்ல ராசிக்கல் மோதிரம் போட விரும்புறவங்களும் மெயில் பண்ணலாம்..sathishastro77@gmai.com

..இதனால் சினிமா துறையில் விரைவில் இடம் கிடைக்கும்!!