செவ்வாய், 19 டிசம்பர், 2017

ஏழரை சனி, அஷ்டம சனி , ஜென்மசனி என்ன செய்யும்..? சனிபெயர்ச்சி பலன்கள் 2017-2020

அஷ்டம சனி,ஜென்ம சனி,கண்டக சனி என்ன செய்யும்..? சனிபெயர்ச்சி பலன்கள் 2017-2020


வணக்கம் இன்று 19.12.2017 வாக்கிய பஞ்சாங்கப்படி காலை 9.58 க்கு சனி விருச்சிகம் ராசியில் இருந்து தனுசு ராசிக்கு மாறுகிறார்..

சனிப்பெயர்ச்சி எந்தெந்த ராசியினருக்கு பாதிப்பாக இருக்கிறது என பார்த்தால் ரிசபம் ராசியினருக்கு அஷ்டம சனி ,மிதுனம் ராசியினருக்கு கண்டக சனி,கன்னி ராசியினருக்கு அர்த்தாஷ்டம சனி,விருச்சிக ராசியினருக்கு பாத சனி,தனுசு ராசியினருக்கு ஜென்ம சனி ,மகரம் ராசியினருக்கு ஏழரை சனி ஆரம்பம் ஆகிறது..

துலாம் ராசியினருக்கு ஏழரை சனி முடிகிறது மேசம் ராசியினருக்கு அஷ்டம சனி முடிகிறது சிம்மம் ராசியினருக்கு அர்த்தாஷ்டம சனி முடிகிறது..விருச்சிகம் ராசியினருக்கு ஜென்ம சனி முடிகிறது...கும்பம் ராசியினருக்கு கர்ம சனி முடிந்து லாப சனி ஆரம்பிக்கிறது...மீனம் ராசியினருக்கு பாக்ய சனி முடிந்து கர்ம சனி ஆரம்பிக்கிறது கடகம் ராசியினருக்கு ஜெய சனி ஆரம்பம்..சிம்ம ராசியினருக்கு பஞ்சம சனி ஆரம்பம்

ஜெய சனி ,பஞ்சம சனி ,லாப சனி இவையெல்லாம் நல்ல யோகத்தை தரும் துலாம் ராசியினருக்கு சனி மூன்றாம் ராசிக்கு செல்வதால் அது இனி நல்ல யோக பலன்களை கொடுக்கும்

அஷ்டம சனி என்பது தந்தைக்கு விரய ஸ்தானம் தந்தை வழியில் கர்ம காரியங்கள் மருத்துவ செலவினம் சமூகத்தில் மதிப்பு மரியாதையை கெடுத்தல் ,பணம் நஷ்டம் தொழில் மந்தம் இவற்றை அஷ்டம சனி தரும் சமூகம் என்பது உறவையும் குறிக்கும் சனி 3 மாதங்களுக்கு முன்பே பலன் கொடுக்க ஆரம்பித்து விடுவார் ...அஷ்டம சனி என்றால் எல்லோரும் பயப்படக்காரணம் சனி தொழில் காரகன் ..அவர் ராசிக்கு மறைந்தால் காலில் அடிபடுதல் சனிக்குண்டான தொழிலில் வசியம் இல்லாமல் போதல் போன்ற பலன்களை கொடுக்கும் என்பதாலும் நம்மை விட தாழ்ந்தவர்களால் அவமானம் உண்டாக்கும் என்பதால்தான்.

.தொழிலாளி என்பது சனி ..அவர் மறைந்தால் வேலைக்காரர்கள் இல்லாமல் ஒரு முதலாளி என்ன செய்ய முடியும்..சரி அடிமையாக இருப்போருக்கு ..? அவர்களுக்கு கையும் காலும் தான் வேலைக்காரன்...கை கால்கள் சோர்ந்து போனால் முதலாளி என்ன செய்ய முடியும்..கைகால்களில் பிரச்சினை உண்டானால் என்ன செய்ய முடியும்..? நான் பயமுறுத்துகிறேன் என எண்ண வேண்டாம் எச்சரிக்கையாக நீங்கள் இருக்க வெண்டும் என்பதற்காக சொல்கிறேன்.உங்கள் ஜாதகப்படி நல்ல திசாபுத்திகள் நடப்பின் உங்களை பெரிதாக சனி பாதிக்க மாட்டார்..

ஏழரை சனியில் இரண்டாம் சுற்று பொங்கு சனி எனப்படும் இதில் கடுமையாக உழைத்தால் மட்டும் முன்னேறலாம் இதுதான் பெரும்பாலோனோர்க்கு நடக்கும் குழந்தையாக இருக்கும்போதே முதல் சுற்று முடிந்திருக்கும்...பொங்கு சனியில் நீங்கள் அதிகம் உடல் உழைப்பில்லாதவர் என்றால் உங்களை ஒரு வழி செய்யாமல் சனி போகமாட்டார்...சனிக்கு தேவை கடுமையான உழைப்பு அது இல்லாதவர்களுக்கு அதற்கு சமமாக அலைச்சலையோ சோதனையோ தராமல் போக மாட்டார்..ஒருத்தன் கேஸ் போட்டுட்ட்டான் எங்கியோ ஒரு கிராமத்தில் சுகமாக அதுவரை வாழ்ந்தவர் நகரத்துக்கு வழக்குக்காக அலைந்து அலைந்து ஒரு வழி ஆகிவிட்டார்..எல்லோருக்கும் இப்படி ஆகும் என சொல்ல முடியாது அவரவர் சூழ்நிலைக்கு ஏற்றவாரு சனி வேலை வாங்குவார் .எது சொன்னாலும் கேட்கலைன்னா  நான் சுகவாசியாதான் இருப்பேன்னு சொன்னாதான்  காலை கையை முடக்கம் செய்கிறார்

கண்டக சனி என்பது மனைவி அல்லது கணவன் வழியில் வரும் மன உளைச்சல் ..கணவனுக்கு அறுவை சிகிச்சை அல்லது மனைவி செய்து வந்த தொழிலில் நஷ்டம் என்பதால் கணவனுக்கு பன விரயம் ஆகிரதுய் என்றால் அது கண்டக சனியாகும்

அர்த்தாஷ்டம சனி என்பது ராசிக்கு நான்கில் வருவதால் இது தாய்க்கு பாதிப்பு நான்கு என்பதால் நம் உடல் சுகத்துக்கும்பாதிப்பு சிலர் வெளிநாடும் வெளிமாநிலமும் வெளியூரும் செல்வர் அப்படி சென்றால் தாய் தந்தைக்கு பாதிப்பு குறையும் இல்லையேலிருவருக்கும் மாறி மாரி மருத்துவ செலவு பங்காளி வகையில் இறப்பு,சிலர் வீடு கட்ட கடன் வாங்குவர் ...அல்லது நஷ்டத்துக்கு சொத்தை விற்பர் ..சிலர் குடும்பத்தில் எதிர்பாராத திருப்பங்கள் பிரச்சினைகள் உண்டாகும்..இது கன்னி ராசியினருக்கு இப்போது ஆரம்பத்திருக்கிறது ஏற்கனவே சோதனையில் தானே இருக்கோம் என்றாலும் சனி நகரும் ராசிக்கு ஏற்ற பலனை கொடுக்கத்தான் செய்வார்

சனிக்கிழமையில் பெருமாள் கோயிலில் நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள் உடல் ஊனமுற்றோர்க்கு உதவி செய்யுங்கள் ...






திங்கள், 18 டிசம்பர், 2017

சனிப்பெயர்ச்சி 2017 -2020 உங்க ராசிக்கு நல்லது கெட்டது தெரிஞ்சுக்குங்க



சனிப்பெயர்ச்சி ராசிபலன்கள் 12 ராசிக்கும் சுருக்கமாக தெளிவாக ஏற்கனவே எழுதி இருக்கிறேன் அதை படிக்காதவர்கள் கீழே இருக்கும் இணைப்பில் சென்று படிக்கவும்



                        http://www.astrosuper.com/2017/01/2017-2020.html





மேசம் ராசிக்கு அஷ்டம சனி முடிகிறது..ரிசப ராசியினருக்கு அஷ்டம சனி ஆரம்பிக்கிறது..!!!.துலாம் ராசியினருக்கு ஏழரை சனி விலகுகிறது....மகரம் ராசியினருக்கு ஏழரை சனி ஆரம்பிக்கிறது கன்னி ராசியினருக்கு அர்த்தாஷ்டம சனி ஆரம்பம்..விருட்சிக ராசியினருக்கு ஜென்ம சனி முடிகிறது.தனுசு ராசியினருக்கு ஜென்ம சனி ஆரம்பம் ஆகிறது!! மிதுனம் ராசிக்கு கண்டக சனி ஆரம்பம்




துலாம் ராசியினருக்கு ஏழரை சனி முடிகிறது நல்ல விசயம்..அடுத்த ஐப்பசியில் ஜென்ம குருவும் முடிந்தால்தான் முழு நிம்மதி கிடைக்கும்.ஜென்ம குரு அலைச்சல்,விரயம்,பண முடக்கம்,வருமான தடையை உண்டாக்கும்..நல்ல பெயர் மட்டும் வாங்கி என்ன செய்றது அரிசி பருப்பா வாங்க முடியும் நிலைதான்


சிம்ம ராசியினருக்கு சனி ராசிக்கு 5ல் வருகிறார் இது கெடுதலான இடம் அல்ல..கடந்த இரண்டரை ஆண்டு அர்த்தாஷ்டம சனியுடன் ஒப்பிட்டால் இனி வரும் காலம் நிம்மதியான காலமே....!!

சோம்பலும் ,சலிப்பும் சனியின் நண்பர்கள்...சனியின் தாக்கம் குறைய உங்கள் வீட்டுக்கு மேற்கு திசையில் இருக்கும் பிரபலமான கோயில் சென்று வழிபடுங்கள்..அது எந்த கோயிலாக இருந்தாலும் சரி.சனிக்கிழமையில் அல்லது அமாவாசை ,பெளர்ணமியில் போகலாம்...பிறந்த நட்சத்திரம் வரும் நாளில் கோயில் செல்வது ஆயுள் பலம் தரும்.


விருச்சிகம் ராசியினருக்கு பாத சனி நடக்கிறது...பாத தரிசனம் செய்தால் சனியின் பாதிப்புகள் குறையும்..தாய் தந்தைக்கோ அல்லது குருவுக்கோ பாத பூஜை செய்தாலும் பாதிப்புகள் குறையும்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் பள்ளிகொண்ட கோலத்தில் இருக்கும் எல்லா பெருமாள் கோயிலிலும் சனிக்கிழமையில் இரண்டு நெய்தீபம் ஏற்றி வழிபடவும்..ஸ்ரீரங்கம் சென்றால் இன்னும் சிறப்பு.
பரந்தாமனான மகாவிஷ்ணுவைத்தான் பள்ளி கொண்ட திருக்கோலத்தில் தரிசிக்க முடியும். ஆனால், சுருட்டப்பள்ளிக்குச் சென்றால் பரமேஸ்வரனும் பள்ளி கொண்டிருக்கும் திருக்கோலத்தை தரிசிக்கலாம்.
தமிழக – ஆந்திரா எல்லை பகுதியில் ஊத்துக்கோட்டை அருகே இந்த சுருட்டப்பள்ளி அமைந்துள்ளது. இங்குள்ள இறைவன் `பள்ளி கொண்டீஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார். இவரையும் சனிக்கிழமையில் வழிபடலாம்

புதன், 6 டிசம்பர், 2017

சுபகாரியம் செய்ய நல்லநாள் பார்த்து செய்யுங்கள்



மனிதன் இறக்கும் பொழுதும் ,பிறக்கும் பொழுதும் திதி ,,நட்சத்திரம் பார்த்து சடங்கு சாங்கியும் செய்யபடுகிறது .
மனித வாழ்வில் இவைகள் முக்கிய பங்கு கொண்டு இருக்கிறது என்று
கவனித்தால் புரியும் .

திதிகளை எப்படி பிரித்து உள்ளார்கள் என்று புரிந்து கொள்ளல் வேண்டும் .
1.குருட்டு திதி
2.ஒரு கண்ணுள்ள திதி
3.இரு கண்ணுள்ள திதி
4.நந்தை திதி
5.பத்ரை திதி
6.சபை திதி
7.பூரண திதி
என்றும்
அமரபட்சம் என்னும் தேய்பிறை
பூர்வபட்சம் என்னும் வளர்பிறை

இப்படி பிரித்து உள்ளார்கள் .
1.குருட்டு திதி என்பது
தேய்பிறையில் வரும் ஏகாதசி ,துவாதசி ,த்ரியோதசி,சதுர்தசி,
அமாவசை .

2.ஒரு கண்ணுள்ள திதி என்பது
தேய்பிறையில் வரும் அஷ்டமி ,நவமி ,
வளர்பிறையில் வரும் பஞ்சமி ,சஷ்டி ,சதுர்தசி.

3.இரு கண்ணுள்ள திதி என்பது
தேய்பிறையில் வரும் துவிதியை ,திரிதியை ,சதுர்த்தி ,பஞ்சமி ,சஷ்டி ,சப்தமி .
வளர்பிறையில் வரும் அஷ்டமி ,நவமி ,தசமி ,ஏகாதசி ,துவாதசி ,த்ரியோதசி

4.நந்தை திதி என்பது பிரதமை ,சஷ்டி,ஏகாதசி
5.பத்ரை திதி என்பது துவிதியை,சப்தமி,துவாதசி
6.சபை திதி என்பது திரிதியை,அஷ்டமி,த்ரியோதசி
7.பூரண திதி என்பது பஞ்சமி,தசமி,பௌர்ணமி .
குருட்டு திதியில்–சுப காரியம் செய்ய கூடாது .
ஒரு கண்ணுள்ள திதியில்-செய்யும் காரியும் அரை பலன்
இரு கண்ணுள்ள திதியில்–முழு பலன்
.நந்தை திதியில்–கலைகள் ,திருவிழா செய்ய
பத்ரை திதியில்–வாகனம் வாங்க, பிரயாணம் செய்ய
சபை திதியில்–கொடி மரம்,பந்தல் கால் நட
பூரண திதியில்–திருமணம் ,யாத்திரை செய்ய .
இப்படி வகுக்க பட்டது திதிகள் .
சுபகாரியம் செய்ய திதிகளை நன்கு கவனித்து செய்யுங்கள் சிறப்பான முன்னேற்ம் உண்டாகும்...