முதலில் லக்னாதிபதியை எடுத்துக் கொள்வோம். லக்னாதிபதி பகை_ நீச்சமடைந்து பலவீனப்பட்டிருந்தாலும், அல்லது லக்னாதிபதி அஸ்தங்க தோஷமடைந்திருந்தாலும், ஜாதகர் எடுப்பார்கைப்பிள்ளையாக இருப்பார் .எல்லோர்க்கும் கீழ்படிந்து யார் என்ன சொன்னாலும் தட்டாமல் செய்வார் . இவர் உடல் ஆரோக்கியக் குறைவாக இருப்பார் .
ஒல்லியான தோற்றமும் தலை சீவாதமுடியும், பபூன் போன்ற தொளதொள உடையும் அணிவார் . எனவே இவரை எல்லோரும் அலட்சியப் படுத்துவது இயற்கை . இதனால் இவரிடம் எல்லோரும் பக்குவமாகப் பேசிவேலை வாங்கிடுவர் . இருந்தாலும், ஜாதருக்குப் பிறரை கவிழ்க்கும்குணமே அமைந்திருக்கும் . பெருமை,புகழ் முதலியவற்றிக்கு இவர்கள் ஆசைப்படமாட்டார்கள் .குணத்துக்கு தகுந்த விதமே இவர்களுக்கு யோகம் அமையும். அதாவது, வறுமைதான். நாவம்ஸத்தில், லக்னாதிபதி பனிரெண்டாமிடம் பெற்று விட்டால் ஓரிடத்திலும் நிலையகாத் தங்கமாட்டார்கள். ஊர் சுற்றிக்கொண்டே இருப்பார்கள். அதனால் மூளை குழப்பம்டைந்து எதிலும் முரண்படுவார்கள். இவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கலாகாது .
எந்தலக்னாதிபதியும், இரண்டாம் வீட்டில் இரண்டுக்குடையவரோடு சேர்ந்திருந்தால் ஜாதகருக்கு அதிர்ஷ்டமுண்டு . விலை உயர்ந்த கற்கள் பதித்த ஆபரணங்களை வாங்குவார்கள். அந்த கற்களின் நிறம் இரண்டாம் வீட்டுக்குடையவனின் நிறமாக அமையும். வெள்ளி, தங்க நகைகள் ஏராளாமாக வாங்குவார் ஜாதகர். ஜாதகர் ஈடுபடும் எல்லா வேலைகளிலும் வெற்றியே பெறுவார் .ஆரம்பத்தில் சிறிதாக இருந்த குடும்பம் கூட ஜாதகர் வளர வளர பிரமாதமாக முன்னேறி பெரிய குடும்பமாக படர்ந்திருக்கும். குடும்பத்தில் எல்லோரிடமும் அமைதி தாண்டவமாடும். ஜாதகரின் புன்சிரிப்பும் வாக்கு சாதுரியமும் பிறரை காந்த சக்தி போல் இழுக்கும் வல்லமை பெற்றதாக இருக்கும்.
ராசி சக்கரத்தில் இது போல் லக்னாதிபதி வலுவுடன் காணப்பட்டாலும், நவாம்சசக்கரத்தில் இரண்டிற்குடைய கிரகம் நின்ற இடத்துக்கு 6,8,12 ல் லக்னாதிபதி அமைந்து விட்டால், நாம் மேலே சொல்லிய பலன் அற்பமாகப் பலனளிக்கும் .
லக்னாதிபதி 3ம் இடத்தில்,3 க்குடையவனுடன்காணப்பட்டால், சகோதரர்கள் அதிகமாகப்பிறப்பார்கள். ஜாதகர் சகோதரர்களின் மேல் பாசமாக இருப்பார்கள். சகோதரர்களும் யோகவான்களாயிருப்பார்கள். பல செளகரியங்களையும் பெறுவராகையால்மன அமைதி ஏற்படும். ஜாதகரை ஆண்களும் பெண்களுமாக விரும்புவார்கள். ஆனால், ராசிக்கட்டத்தில் லக்னாதிபதி மேலே சொன்னது போலிருந்து, அம்ச சக்கரத்தில் 3 ம் அதிபதிக்கு 6,8,12ல் லக்னாதிபதி அமைந்து விட்டால் சகோதரர்களுடன்பகைமை உணர்வு ஏற்படும். சகோதரர்களுக்கு ஜாதகரால் துன்பங்கள் ஏற்படலாம்
லக்னாதிபதி நாலாமதிபதியோடு நாலாம்வீட்டில் இருந்து வலுவடைந்தால், ஜாதகருக்கு பலஆப்த நண்பர்கள் முன்னின்று காரியத்தை செய்வார்கள் .உறவினர்களால் ஜாதகர் கெளரவிக்கப்படுவார்கள். ஜாதகருக்கு பங்களாவாசம் கிடைக்கும். தாயாரிடம் அன்பு செலுத்துவார். தாயார் சுகம் நல்லபடியிருக்கும் . அதிகம் படித்த மேதாவிகளின் நேசம் கிடைக்கும் .அவர்களுடன் தர்க்கவாதம் செய்து கொண்டும் இருப்பார் ஜாதகர். அதனால் அவருக்கு நல்லதொரு அனுபவமுதிர்ச்சி ஏற்படும் .
அம்சசக்கரத்தில் நான்காமதிபதி இருந்தஇடத்திற்கு 6, 8,12 ல் லக்னாதிபதி வீற்றிருந்தால் தாயருடன் பகைமை ஏற்படும் .அல்லது ஜாதகர் துரோகம் செய்வார்.அது மட்டுமல்லாமல் பந்து ஜனங்களிடத்தில் விரோதம் பாரட்டுவார் . எதிர்பாராத விதமாக விபத்துகள் ஜாதகருக்கு ஏற்படும் .மற்றும் தேவையற்ற வழக்கு வியாஜியமும் ஏற்படலாம் .
லக்னாதிபதி ஐந்தாமிடத்ததிபதியோடு சேர்ந்து ஐந்தாமிடத்திலிருந்து விட்டால் அரசாங்கசலுகைகள் பெறுவார். அரசாங்கத்தால் பாராட்டப்படுவார். நல்ல மனஅமைதி ஏற்படும். மதத்தலைவராகவோ அல்லது சமூகத்தில் ஒரு முக்கிய
புள்ளியாகவோ ஜாதகர் திகழ்வார். அயல் நாட்டு தூதராகும் வாய்ப்பும் கிட்டும்.ஆண் சந்ததிகள் பிறக்கும் .அரசியலில் தீவிரமாக இறங்குவார்கள். மந்திரி, எம்.எல்.ஏ, எம்.பி யாகும் வாய்ப்பு இவர்களுக்குக் கிடைக்கும் .
அம்சசக்கரத்தில் ஐந்தாமதிபதி நின்ற இடத்துக்கு 6,8,12 ல் லக்னாதிபதி நின்று விட்டால், மேலே சொல்லிய பலன்கள் தலை கீழாக மாறும்.
ஆறாமதிபதியோடு லக்னாதிபதி சேர்ந்து ஆறாமிடத்திலேயே நின்று விட்டால் எல்லாவிதமாநோய்களும் ஜாதகரை ஆட்டிப்படைக்கும். ஆறாமதிபதி சுக்கிரனாக இருந்துவிட்டால் பெண்கள் வியாதி நிச்சியமாக உண்டு. உடலில் வெட்டுக்காயம் ஏற்படும்.சர்க்காரின் அதிருப்திக்கு ஆளாவர் .அடிக்கடி சர்க்காரால் வழக்கு ஏற்படும் .கிரிமினல், சிவில் வழக்குகள் ஏற்படலாம். தாயாதிபங்காளிகளால் தொந்தரவுகள் ஏற்படும். கோர்ட்டும் கையுமாக திரிவார். வறுமையும் வாட்டிப் படைக்கும்.
இவர்களையாராவது முன்னுக்கு கொண்டு வர முயற்சித்தாலும் அவர்களுக்கே ஆயினும் அம்சத்தில் ஆறுக்குடையவர் நீச்சமடைந்து லக்னாதிபதி உச்சமடைந்து விட்டால் சொல்லிய கெடுபலன்கள் நடக்காது. ஜாதகர் மிலிடெரி ,போலீஸ் இலாகாவில் தலைமைப்பதவிபெறுவார். ஆறாமதிபதி இருந்தவீட்டிற்கு 6,8,12 ல் அம்சசக்கரத்தில் லக்னாதிபதி வீற்றிருந்தால் ஏற்படவிருக்கும்.நண்பர்கள் குறையலாமே தவிர தீயதில்லை .
லக்னாதிபதி ஏழாமிடத்ததிபயுடன் சேர்ந்துஏழிலேயே இருந்தால்,ஜாதகர்யாத்திரை செல்லுவார்.திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணமாகும். ஏழாமிடம் சர ராசியானால் ஜாதகர் பல நாட்டிற்கு விஜயம் செய்வார். ஸ்திர ராசியானாலும் உள் நாட்டிலேயே கூட சுற்றி வருவார். உபய ராசியானால் அயல் நாடுகளுக்குப் போய் வருவார். ஆயினும் இங்கே எந்த கிரகம் வலுவுள்ளது என்று பார்க்க வேண்டும். ஏழாமதிபதியை விட லக்னாதிபதி வலுக்குன்றியிருந்தால் பிராயாணத்தில் லாபமில்லை என்றுதான் சொல்லவேண்டும்.
அம்சசக்கரத்தில் ஏழாமிடத்துக்கதிபதி இருந்த இடத்துக்கு 6, 8.12 ல் லக்னாதிபதி நின்றுவிட்டால் கணவன் மனைவி உறவுசரிப்பட்டுவராது. எந்தநேரமும்ஏதாவது பிரச்சனகள் தோன்றிக் கொண்டே இருக்கும். நல்ல நண்பர்கள் கிடைக்கமாட்டார்கள். நண்பர்களால் கெடுதல்கள் ஏற்படும். பிரயாணத்தால் சிக்கல்கள் தோன்றும்
.ஜாதகருக்கு அபகீர்த்திகள் உண்டாகும். வறுமை தொற்றிக் கொள்ளும்.சம்பாதிப்பது சாப்பாட்டுக்குப் போதாதவையாக இருக்கும். பிரயாணத்தால் சிக்கல்கள் தொற்றிக் கொள்ளும். சம்பாதிப்பது சாப்பாட்டுக்குப் போதாதவையா இருக்கும். உடல் நலம் கெடும் செய்யும் தொழிலே நிம்மதி இல்லாதது மட்டுமல்ல. தொழிலில் மந்தநிலை அடையும். வியாபாரம் செய்தாலும் நஷ்டம்தான் காணும் எடுக்கும் முயற்சிகள் வீண் பிரயாசையாகத்தான் முடியும்.
லக்கனாதிபதி எட்டாமிடத்ததிபதியோடு எட்டாமிடத்திலிருந்தால், ஜாதகர் அதிக துன்பத்தையும், வறுமையையும் அனுபவிப்பார். ஏகப்பட்ட கடன் ஏற்படும் பல பாபகாரியங்களை செய்து வருவார் .கெட்ட நண்பர்கள் சேர்க்கை எப்போதும் பிறர்க்கு கெடுதலை உண்டாக்கும் எண்ணம் குடி கொண்டவராக இருப்பார். எட்டுக்குடைய கிரகம் அம்சத்தில் நீச்சமடைந்து, லக்னாதிபதி வலுப்பெற்றிருந்தால் இவ்வளவு கெடுதல்கள் இல்லையென்றாலும். ஜாதகருடைய எண்ணம் நல்லதாக இருக்காது. இதனால்தான் நான் பொதுவாகவே லக்னாதிபதியை விட ஆறு, எட்டுக்குடையவர் , வலுப்பெற்றிக்கக்கூடாது என்று சொல்லி வருகிறேன் .
லக்னாதிபதி 9 க்குடையவனோடு ஒன்பதாமிடத்தி லிருந்தால் லக்னாதிபதியின் திசையில் தகப்பனார் மிக மிக சந்தோஷமாக வாழ்ந்து வருவார்.ஜாதகர், தகப்பனாருக்கும் மற்ற குடும்ப பெரியவர்களுக்கும் அடங்கி நடந்து,அவர்கள் அன்புக்கு நன்றாகவே இருக்கும். எப்போதும் பிறர் போற்றக்கூடிய நல்ல செயல்களையே ஜாதகர் செய்து வருவார். அம்சசக்கரத்தில் லக்னாதிபதி 9 க்குடையவனுக்கு 6,8,12ல் மறைந்திருந்தால் மேலே சொல்லியவற்றிக்கு நேர் lஎதிரிடையான பலன்களாகவே நடந்து வரும். பெரியவர்களுடைய சொத்து விஷயமாக வழக்கு விஜியங்கள் நடக்கும். நவாம்சசக்கரத்தில் 9க்குடையவனோ அல்லது லக்னாதிபதியோ உச்சமடைந்திருந்தால், ஜாதகர் சுய சம்பத்தியமாக பல லட்சக்கணக்கில் பொருள் சேர்ப்பார். செலவினங்கள் மிக நியமானதாக இருக்கும். எவ்வளவு செலவு செய்தாலும் ஒரு பக்கம் வரவு இருந்து கொண்டே இருக்கும்.
லக்னாதிபதி 10 க்குடையவனோடு சேர்ந்து பத்தாம்மிடத்திலேயே இருந்தால் ஜாதகர் பல நல்ல காரியங்களைச் செய்வார். ஹோமம், யகஞம் முதலியவற்றைச் செய்வார். மதசம்பந்தமான எந்த காரியத்திலும் தீவிர சிரத்தையுடையவராக இருப்பார். தாய் தகப்பனுக்கு செய்ய வேண்டிய எல்லா கர்மங்களையும் செய்வார். யாரவது சாந்தி பரிகாரம் சொன்னால் தவறாமல் செய்யக் கூடியவர். ஜாதகர் சர்க்காரில் நல்ல உயர்ந்த பதவியை பெறுவார். நீதிபதி, மேஜிஸ்ரேட், செகரட்டரி முதலிய பல பதவிகளைப் பெற்றிடுவார்
பெரிய புள்ளிகளினன் ஆதரவு நிச்சயமாக இவருக்கு உண்டு. அம்ச சக்கரத்தில் பத்துக்குடையவனிருந்த வீட்டுக்கு 6,8,12 ல் லக்னாதிபதி இருந்து விட்டால் சொல்லிய நற்பலன்கள் அனைத்தும் தலை கீழாக மாறும். அவர் மூலமாக ஜாதகரும் நன்மை பெறுவார். எந்த வித வியாபாரம் ஒருக்கால் நவாம்சத்தில் 11 க்குடையவனின் நிலையும், லக்கனாதிபதிநிலையும் கெட்டிருந்தால் இதற்கு பாதகமில்லை. லாபம் குறைந்திருக்கும் அவ்வளவுதான். மூத்த சகோதரனுடன் பகைமை உணர்வு தலை தூக்கும். 11 க்குடையவன் லக்னாதிபதி முதலியவர்களின் தாரமம்மியத்தை சரியாக எடை போட்ட பின்தான் பலன்களைச் சொல்ல வேண்டும்
லக்னாதிபதி 12க்குடையவனுடன் சேர்ந்து, பனிரெண்டமிடத்திலிருந்தால் எவ்வளவுதான் பெரியவர்களின் சொத்து இருந்தாலும் ஜாதகர் அழித்து விடுவார். வறுமையால் வாடுவார். காரணமின்றி ஊர்சு ற்றி வருவார். எல்லாவிதமான பொருளாதாரத் தொந்தரவுகளும் சமாளிக்க வேண்டி வரும்.நவாம்சத்தி லக்னாதிபதி வலுப்பெற்றிருந்தால், அயல்நாடுகளில் பெருத்த லாபம் பெறுவார்.
சுய சம்பாத்தியத்தில் ஸ்திர சொத்து முதலியவைகளை சேர்ப்பார். நவாம்சத்தில் லக்னாதிபதி இருந்த வீட்டுக்குடையவன் உச்சம் பெற்று விட்டால் பிரமாதம்
இந்த விதமாக லக்னாதிபதியின் திசையில் மற்றும் லக்னாதிபதியுடன் சேர்ந்த பார்த்த கிரகத்தின் தன்மையையும் கருத்தில் கொண்டுதான் ஜோதிடர் சொல்ல வேண்டும் .லக்கனத்திலிருக்கும் கிரகங்களுக்குச் சொல்ல வேண்டும். லக்னத்திலிருக்கும் கிரகங்களுக்குச் சொல்லியபடியே மற்ற பாவங்களில் நின்ற கிரகங்களுக்கும் ஆட்சி, உச்சம், பகை, நீச்சம் முதலியவகளைக் கொண்டு அந்தந்த திசை புத்தி அந்தரக்காலங்களை கொண்டு ஜோதிடர் சாமர்த்தியமாக பலன்களை சீர்தூக்கி, சமதட்டில் பார்த்து பலன்களைச் சொல்ல வேண்டும். அப்படி கிரக பலன் சொல்லும் போது நவாம்சத்திலும் அந்த கிரகங்களின் தன்மைகளைப் பார்த்த பின்புதான் தீர்மானிக்க வேண்டும்.