வியாழன், 30 மார்ச், 2017

யார் பெயரில் தொழில் தொடங்கினால் அதிர்ஷ்டம்


மிதுனம்,கன்னி,தனுசு,மீனம் லக்னத்தார் திருமணம் ஆகும் வரை தாயை தெய்வமாக மதிப்பர்.திருமணத்துக்கு பின் மனைவியை அதிகம் நேசிப்பர்...மனைவி சொல்படி நடப்பர்.மாமியார் மருமகள் பிரச்சினை இவர் வீட்டில்தான் அதிகம்...
இவர்களில் புத்திசாலிகள் பலர்,இரண்டு பக்கமும் ஆமாம் சொல்வார்...நீ சொல்வதுதான் கரெக்டு என அம்மாகிட்டயும் ,மனைவி கிட்டயும் சமமாக சொல்லி நல்ல பிள்ளையாக இருப்பர்.
தாய்க்கு முன் மனைவியை பாராட்டினால் நம்ம அம்மாவா இப்படி என நினைக்குமளவு அம்மா ருத்ர தாண்டவர் ஆடுவார்...அம்மா சொல்வதுதான் எனக்கு முக்கியம் என மனைவிக்கிட்ட சொல்லிட்டா போச்சு..அப்புறம் எதுக்குடா என்னை கட்டிக்கிட்ட என பொண்டாட்டி பெட்டியை தூக்கிடுவா ..பாவம் இவர் படும் பாட்டை பார்க்கனுமே.கம்பி மீது தினமும் நடப்பது எல்லாம் அதிசயமே இல்ல இவர் செய்ற பேலன்ஸ் க்கு முன்னாடி.
தனிக்குடித்தனம் இவர் போயிட்டா அதிர்ஷ்டம் இவரை விட்டு போய்விடும்.நிம்மதி,சுகமும் போயிடும்.இருவரும் இவருக்கு இரு கண்கள் அம்மா,மனைவி இருவரும் ஒரு வீட்டில் இருந்தால்தான் அதிர்ஷ்டம்,தொழில் இரண்டும் நடக்கும்...
மேற்க்கண்ட நான்கு லக்னங்களில் பிறந்து,அம்மா சொல்வதைதான் கேட்பேன் என சொல்லி மனைவியை துன்புறுத்தியதால், தொழிலில் நிறைய நஷ்டம் வந்து பாதிப்படைந்தவர்கள் நிறைய பேரை பார்த்திருக்கிறேன்...
சிம்ம லக்னத்தில் பிறந்தவர் சிம்ம ராசிக்காரர்கள் தாய் தந்தை பெயரில் தொழில் செய்தால் அபிவிருத்தி ஆகும்...மிதுன லக்னத்தார் தன் குழந்தை பெயர்,அல்லது மனைவி பெயரிலும்,ரிசப லக்னத்தார் தந்தை பெயரிலும்,கன்னி லக்னத்தார் தாய் அல்லது மனைவி பெயரிலும் ,தொழில் தொடங்கலாம்

திங்கள், 20 மார்ச், 2017

மூலிகை சாம்பிராணி மூலம் கடன் பிரச்சினை தீருமா..?

மூலிகை சாம்பிராணி என்றால் என்ன..?


பாறை போல் இறுகிக் கிடக்கும் சாம்பிராணிக் கட்டிகள், தீயில் பட்டவுடன் புகையாக வெளிப்படும். அதுபோல், நம்முன் பூதாகரமாக, மிகக் கடினமாகக் கிடக்கும் துன்பங்கள் எல்லாம், அக்னி உருவாக உள்ள இறைவனின் அருள் கடாட்சம் கிட்டியவுடன் புகையைப் போன்று லேசாகி விலகிவிடும் என்பது நம்பிக்கை.
இந்து, கிறிஸ்தவர், முஸ்லிம் என எந்த பாகுபாடும் இல்லாமல் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் சாம்பிராணி தூபம் காட்டப்படுகிறது. வீடுகளில் சாம்பிராணி புகை போடுவதன் மூலம் தேள், பூரான் போன்ற விஷ ஜந்துக்கள் வீட்டில் இருந்தாலும் அவை விலகிச்சென்றுவிடும். ஆகவேதான் சில வீடுகளில் மாலை நேரங்களில் சாம்பிராணி தூபம் போடுவார்கள். சுமங்கலிப்பெண்கள், மங்கல நாட்களான செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மாலை வேளையில் குளித்துவிட்டு தெய்வப்படங்களுக்கு விளக்கேற்றி வைத்து, சாம்பிராணி தூபமிட்டால் அந்த வீட்டில் இருக்கும் பீடைகள், தரித்திரம் விலகிச்செல்லும், லட்சுமி கடாட்சம் கிடைக்கும், செல்வம் பெருகும் என்பார்கள்.
மழைக்காலங்களில் அல்லது சளி, ஜலதோஷம் போன்றவற்றால் பாதிக்கப்படும்போது தலைக்கு குளித்ததும் சாம்பிராணி புகை காட்டுவதை இன்னமும் வழக்கமாக கொண்டுள்ளனர். ஈரத்தலையை உலர வைப்பதற்கு சாம்பிராணி தூபம் உதவிகரமாக இருக்கும். குழந்தைகளை குளிப்பாட்டி சாம்பிராணி புகை காட்டுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்...
இந்த சாம்பிராணியுடன் வெண்கடுகு,அகில்,தேவதாரு,வெண்குங்கிலியம் போன்றவற்றையும் கலந்து மூலிகை சாம்பிராணியாக கொடுத்து வருகிறேன் இது மேலும் உங்கள் பல பிரச்சினைகளை தீர்க்கும் அதி சக்தி வாய்ந்த வழிபாட்டு பொருளாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை..அரைகிலோ பாக்கெட்டுகளாக விற்பனைக்கு என் நிடம் ஜாதகம் பார்ப்பவர்களுக்கும் பேஸ்புக் நண்பர்களுக்கும் கொடுத்து வருகிறேன்..தொடர்ச்சியாக இதை வாங்குவோர்தான் அதிகம்....ஹோமம் வீட்டில் வளர்ப்பதுக்கு ஒப்பான சக்தியை இது கொடுக்கிறது...மன அழுத்தம்,மன உளைச்சல் தீர்க்கிறது.ஆரோக்கியம் உண்டாகிறது.கடன் தொல்லை தீர்கிறது.காரணம் அகில்,தேவதாரு போன்ற தெய்வீக மூலிகைகள் நம் தரித்திரத்தை நீக்கி அதிர்ஷ்டத்தை உண்டாக்க வல்லவை.தெய்வ சக்தியை நம் இல்லத்தில் குறையாமல் வளர செய்பவை.

அரை கிலோ ரூ 550.கொரியர் சார்ஜுடன் சேர்த்து.

வங்கி கணக்கில் பணம் செலுத்தி விட்டு வாட்சப் அல்லது மெசேஜ்ஜில் முகவரி அனுப்பவும்.கொரியர் செய்கிறோம்...

k.sathishkumar 20010801181 State bank of India ,bhavani Ifsc;sbin0000971.

 மெயில் ..sathishastro77@gmail.com 
வாட்சப் 9443499003

திங்கள், 6 மார்ச், 2017

திருமண பொருத்தம் பார்க்குறீங்களா..இதப் படிங்க முதல்ல

திருமண பொருத்தம் ஜோதிட விதிமுறைப்படி பார்க்கும் ஜோதிடர்கள் மிக குறைவாகிவிட்டனர்.நட்சத்திர பொருத்தம் மட்டும் பார்ப்பதோடு சரி.பையன் வீட்டார்,பெண் வீட்டார் மனநிலை புரிந்து ,பொருத்தம் சொல்லிடுறாங்க.ஜாதக கட்டம் கூட பார்ப்பதில்லை.ஒருவருக்கு நாகதோசம் இருந்தால் இன்னொருத்தருக்கும் நாகதோசம் இருக்கனும்..செவ்வாய் ஒருவருக்கு இருந்தால் இன்னொருத்தருக்கும் செவ்வாய் தோசம் இருக்கனும்.இவை சாதாரணம் அல்ல.இருவரது உடல் தாம்பத்யம்,மனப்பொருத்தம் சார்ந்த முக்கிய பொருத்தங்கள்...
இரவு வாழ்க்கை முக்கியம் ..இரவும் இல்லை..உறவும் இல்லை என ஒருவருக்கு ஜாதகத்தில் இருந்துவிட்டாலும் பிரிவை தடுக்க முடியாது.ராசி பொருத்தம்,லக்ன பொருத்தம்,அதன் பின் தான் நட்சத்திர பொருத்தம்,ஜாதக பொருத்தம்,பார்க்கனும்.இருவருக்கும் நடக்கும் திசை இருவர் குடும்பத்தையும் முன்னேற்றுமா குப்புற தள்ளுமா என்பதையும்,பையன் ஜாதகத்தில் மனைவியை மதிப்பானா ,மிதிப்பானா,பொறுப்பாக குடும்பம் நடத்தும் தகுதி இருக்கா என்பதையும் ,அவன் ஒழுக்கம்,தாம்பத்ய நிலை,சம்பாத்யம்,தொழில் ஸ்தானம்,மாமனார் மாமியார் ஸ்தானம் உட்பட கவனிக்க இயலும்...
3ஆம் இடம் காம ஸ்தானம்..அது மிகப்பலமாக இருந்துவிட்டாலும் சிக்கல்....ரொம்ப பலவீனமாக இருந்துவிட்டாலும் சிக்கல்...12ஆம் இடம் இரவில் நடக்கும் உறவை சொல்லுமிடம்...அது பலமாக இருந்துவிட்டால் இரவு தாண்டி பகலும் படுக்கை சுகம்.12ஆம் இடம் கெட்டால் இரவு நரகமாகிவிடும்..இப்படி நிறைய இருக்கு.பொருத்தம் பார்ப்பதில் அதிக அக்கறை தேவை என்பதற்காக இதை எழுதுகிறேன்.

----------------------------------------------------
சுக்கிரன் உச்சமாக இருக்கிறார்.ஒரு துறையில் சர்ச்சை வருகிறது அதன் அதிபதி கிரகம் கோட்சாரப்படி பலமோ பலவீனமோ அடைந்திருக்கும். சர்ச்சை வந்ததால் இதனால்தான் என யோசித்தேன்.எழுதுகிறேன் அவ்வளவுதான்.
..சினிமாவுக்கு சுக்கிரன் தான் அதிபதி.சுக்கிர பலம் இல்லையேல் கலைத்துறைக்கு வர முடியாது.ஆட்டம்,பாட்டம்,கொண்டாட்டம்தான் சுக்கிரனின் குணமே..சுக்கிரன் என்றாலே ஆடம்பரம்,எல்லாவித சுகம் அனுபவித்தல் தான்.சுக்கிரன் கெட்டவர்களுக்கு சுகம் கிடைக்காது.கஷ்டப்பட்டு சுகம் அனுபவிக்கனும்.சுக்கிரன் பலமா இருந்தா சுகம் தேடி வரும்.சுக்கிரன் பணத்துக்கு அதிபதி என்பதால்தான் சிறிது தகுதி இருந்தாலும் சினிமா துறையில் பெரும் பணம் கிடைக்கிறது.
.துலாம் ராசியின் குணமும் அதுதான்.சுக்கிரனின் ராசியல்லவா.எல்லோரிடமும் கூடி கொண்டாடவே விரும்புவர்.தனிமை இவர்களுக்கு பிடிக்காது.சுக்கிரன் உச்சமாக தற்போது இருப்பதால் உல்லாசம் சார்ந்த சர்ச்சைகள் வருகின்றன..புதன் விரைவில் நீச வீடு மீனத்துக்கு செல்வார்.அப்போது புதனுக்குண்டான கணக்குகள் துறை சார்ந்தவை,கல்வி துறை சார்ந்த சர்ச்சைகள் வெளியாகும்..
=================
கடந்த 7 வருடமாக குழந்தைகளுக்கு நியூமராலஜிபடி பெயர் வைத்துக்கொண்டிருக்கிறேன்.அதிர்ஷ்ட ஜோதிடம் நியூமராலஜி புக் எழுதிய சமயத்தில் அதிகம் தபால் வரும்...குழந்தைக்கு ஜாதகம் கணித்து பிடிச்சதை வெச்சிக்கலாம்னு ஏழு விதமான பெயர்கள் எழுதி ஜாதக பலனும் எழுதி தபாலில் அனுப்புவேன்.இப்ப வாட்சப்,மெயில் பிரபலம் ஆகிட்டதால இதில்தான் அதிகம்.இப்போதெல்லாம் நட்சத்திரப்படி மட்டும் அல்ல,நியூமராலஜிபடி பெயர் வைப்பதும் ஒரு கட்டாய சம்பிரதாயம் ஆகிவிட்டது...!!!
============================
மேசம்,கடகம்,துலாம்,மகரம் இவை எல்லாம் சர ராசிகள்.வேகம் அதிகம்.,எதுவா இருந்தாலும் இப்பவே நடக்கனும் என்பார்கள்...ராசி,லக்னம் இரண்டுமே மேலே இருக்கும் நான்கு ராசிகளில் இருந்தால் ஜெட் வேகம்தான்.எதையும் அவசரமா செஞ்சுட்டு அப்புறம் கலங்கி நிற்பார்கள்..
நிறைய பயணம் இவர்கள் தான் செய்வார்கள்..காலில் சக்கரம் என்பது இவர்களுக்குதான்.எதையாவது முயற்சி செய்து கொண்டே இருப்பது,யாரிடமாவது பேசிக்கொண்டே இருப்பது,தனக்கு செய்ய வேலை இல்லைன்னா அடுத்தவங்க வேலையை தன்னுடையது போல இழுத்துப்போட்டுக்கொண்டு செய்வார்கள்..!!
நல்ல மனசு,தங்க குணம்...சொந்த வாழ்வில் நிறைய போராட்டம் இருந்தாலும், மனதில் அழுதாலும், வெளியே சிரிக்கும் அன்புள்ளம் கொண்டவர்கள்..!! கடவுள் துணை நிற்க்கட்டும்.