திசா
நாதனும்
, புத்தி நாதனும்
ஒருவருக்கொருவர்
எந்த விதத்திலாவது சம்பந்தம் பெற்று நட்போடும் , பலத்தோடும் , ஒற்றுமையோடும் இருந்து விட்டால் தங்களின் திசா புத்தி நடைபெறும் காலங்களில் ஜாதகருக்கு மேன்மையான பலன்களைத் தருவார்கள் என்பது உண்மை .
சூரியன் , சந்திரன் , செவ்வாய் , கேது ஆகியோர் குருவின் நண்பர்கள் ஆவர் .
புதன் , சனி
, ராகு ஆகியோர் சுக்கிரனின் நண்பர்கள் ஆவர் .
குருவின் பிரிவில் உள்ள நண்பரின் லக்கினங்களுக்கு
சுக்கிரனின் நண்பர்கள் தரும் யோகங்கள் வேலை செய்யாது .
அதைப்போலவே சுக்கிரனின் பிரிவில் உள்ள நண்பரின் லக்கினங்களுக்கு
குருவின்
நண்பர்கள்
தரும் யோகங்கள் வேலை செய்யாது . குறிப்பிட்ட லக்கினங்களுக்கு அதன் நட்பு கிரகங்கள் தரும் யோகங்கள் மட்டுமே செயல் படும் . மற்ற கிரக யோகங்கள் அவ யோகங்களாகும் .
நட்புக்கிரகங்களின் யோகங்களே ஒரு மனிதனை முன்னுக்கு கொண்டுவரக் கூடியவை .
பகைக்கிரகங்கள் யோகத்தைத் தரும் சூழ்நிலையில் இருந்தாலும்
முமுமையாக யோகம் செய்யாது .
முக்கியவிதியாக யோகம் தரும் வீடுகளில் அதாவது அந்த பாவங்களில் நட்புக்கிரகங்கள் இருக்க வேண்டும் ,
பகைக்கிரகங்கள் இருக்கக் கூடாது .
நட்பு வீட்டில் , நண்பருடன் இருக்கும் கிரகங்கள் யோகம் தர வேண்டிய சூழ்நிலையில் மிகப் பிரதமான யோகங்களைத் தருகின்றன.
பகை வீட்டிலோ , பகைவருடனோ இருக்கின்ற கிரகங்கள் யோகத்தை தர வேண்டிய நிலையில் இருந்தாலும் சும்மா இருந்து விடும் .
லக்னாதிபதிக்கு நட்புக்கிரகங்கள் பலவீனமடைந்து கெட்டிருந்தாலும் அவர்களது திசை நடக்கும் போது பகை கிரகங்களைப் போல் கெடுதல் செய்யாது .
குல தெய்வ சாபம்
நீங்க திருமியச்சூர் கோவில் சென்று ஸ்ரீ லலிதாம்பிக்கை சமேத நாதஸ்வாமியும் ஸ்ரீ மின்னும் மேகலை சமேத ஸ்ரீ ஸகல புவனேஸ்வரர் எனும் இளங்கோயில் தெய்வத்தை வழிபட வேண்டும் . மயிலாடுதுறை வழி திருவாரூர் சாலை பேரளம் பஸ் நிலையம் 1 , கி .மீ தூரம் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக