புதன், 9 மே, 2018

ராஜயோகம் தரும் ஜாதகம் 2

திசா நாதனும்  , புத்தி நாதனும்  ஒருவருக்கொருவர்  எந்த  விதத்திலாவது  சம்பந்தம்   பெற்று  நட்போடும்  , பலத்தோடும்ஒற்றுமையோடும்  இருந்து  விட்டால்   தங்களின்   திசா  புத்தி  நடைபெறும்   காலங்களில்  ஜாதகருக்கு   மேன்மையான  பலன்களைத்  தருவார்கள்   என்பது உண்மை .

   சூரியன்சந்திரன்  , செவ்வாய்  ,  கேது   ஆகியோர்  குருவின்  நண்பர்கள்  ஆவர் .
புதன் , சனி  , ராகு  ஆகியோர்  சுக்கிரனின்  நண்பர்கள்   ஆவர் .
குருவின்   பிரிவில்  உள்ள   நண்பரின்  லக்கினங்களுக்கு 
சுக்கிரனின்  நண்பர்கள்  தரும்  யோகங்கள்  வேலை  செய்யாது  .
அதைப்போலவே  சுக்கிரனின்  பிரிவில்  உள்ள   நண்பரின்  லக்கினங்களுக்கு


குருவின் நண்பர்கள்   தரும்  யோகங்கள்  வேலை  செய்யாது  .  குறிப்பிட்ட   லக்கினங்களுக்கு    அதன்    நட்பு  கிரகங்கள்  தரும்   யோகங்கள்   மட்டுமே    செயல்  படும்  .  மற்ற  கிரக யோகங்கள்  அவ யோகங்களாகும் .

 நட்புக்கிரகங்களின்  யோகங்களே   ஒரு  மனிதனை   முன்னுக்கு   கொண்டுவரக்   கூடியவை  .
பகைக்கிரகங்கள்   யோகத்தைத்  தரும்  சூழ்நிலையில்   இருந்தாலும்
முமுமையாக  யோகம்  செய்யாது  .

  முக்கியவிதியாக  யோகம்  தரும்  வீடுகளில்  அதாவது  அந்த   பாவங்களில்    நட்புக்கிரகங்கள்  இருக்க  வேண்டும்  ,
பகைக்கிரகங்கள்   இருக்கக்  கூடாது  .

 நட்பு  வீட்டில் , நண்பருடன்  இருக்கும்  கிரகங்கள் யோகம்  தர  வேண்டிய  சூழ்நிலையில்  மிகப் பிரதமான  யோகங்களைத்  தருகின்றன.
       பகை வீட்டிலோ  , பகைவருடனோ  இருக்கின்ற  கிரகங்கள்   யோகத்தை  தர   வேண்டிய  நிலையில்  இருந்தாலும்  சும்மா  இருந்து  விடும் .

  லக்னாதிபதிக்கு  நட்புக்கிரகங்கள்   பலவீனமடைந்து  கெட்டிருந்தாலும்  அவர்களது   திசை  நடக்கும்  போது  பகை  கிரகங்களைப்  போல்  கெடுதல்  செய்யாது  .


 குல தெய்வ  சாபம் நீங்க   திருமியச்சூர்  கோவில்  சென்று   ஸ்ரீ  லலிதாம்பிக்கை   சமேத  நாதஸ்வாமியும்  ஸ்ரீ மின்னும் மேகலை  சமேத  ஸ்ரீ  ஸகல  புவனேஸ்வரர் எனும்    இளங்கோயில்   தெய்வத்தை  வழிபட வேண்டும் .   மயிலாடுதுறை   வழி  திருவாரூர் சாலை  பேரளம்  பஸ் நிலையம்  1 , கி  .மீ  தூரம் .

கருத்துகள் இல்லை: