குருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் குரு மங்கள யோகம் ஏற்படுகிறது .
இதனால் பூமி யோகம் , மனை யோகம் , அசையாத சொத்துக்கள் சேரும் அற்புத யோகம் யாவும் உண்டாகும் .
. சூரிய பகவான் 3 , 6 , 11
ல் இருக்கும் போது அபரிதமான ராஜ யோகம் ஏற்படுகிறது .
சூரியன் 7 ல்
இருக்கும் போது களத்திர தோஷம் ஏற்படும் .
சூரியன் 5 ல் இருக்கும் போது புத்திர தோஷம் ஏற்படும் .
சூரியன் 3 ல் இருக்கும் போது சகோதர தோஷம் ஏற்படும் .
. கால சர்ப்ப தோஷத்தால் பாதிக்கப்பட்ட ஜாதகர் சர்ப்ப சாந்தி செய்வதன் மூலமும் , நவக்கிரக ஹோமம் செய்வதன் மூலம் ராகு , கேது தோஷம் அனைத்தும் விலகும் .
. ஒருவருடைய வீடு வளமாக இருக்க தென்கிழக்கு திசையில் சமையல் அறை , தென் மேற்கு திசையில் படுக்கை அறை , வட கிழக்கில் பூஜை அறையும் , கன்னி மூலை , உயர்ந்து , ஈசான்யம் வளர்ந்து காணப்பட்டால் வீட்டில் வளமாக வாழலாம் .
. ஜாதகத்தில் ஒரு கிரகத்தின் காரகத்துவம் மற்றும் கிரகம் ஏற்றுள்ள ஆதிபத்தியத்தின் தன்மைகளைத் தராவிடாமல் முழுமையாகத் தடுக்கும் .( அ ) குறைக்கும் ஆற்றல் நவகிரகங்களில் இராகுவிற்கு மட்டுமே உண்டு என்று அறியும் .
. ஜாதகத்தில் இராகுவிற்கு 8 எட்டு டிகரிக்குள் நெருக்கும் கிரகம் இராகுவினால் சுத்தமாக பலவீனமாக்கப்பட்டு தனது இயல்புகள் அனைத்தையும் பறி கொடுத்துவிடும் .
அதாவது அதிக ஒளியையும் , ஒளியே இல்லாத இருட்டையும் நெருங்கும் கிரகங்கள் தங்களின் சுய தன்மையை இழப்பார்கள் .
. ஜாதகத்தில் இராகுவிடம் மிக நெருங்கும் குரு பகவான்
குழந்தைகளையும் , அதிகமான பண வசதியையும் , நேர்மையான குணத்தையும் ஆன்மிக ஈடுபாட்டையும் தரும் சக்தி அற்றவர் ஆவார்
. இராகுவிடம் நெருங்கி இணையும் சுக்கிர பகவான் பெண் சுகத்தையும் , உல்லாசத்தையும் , காதல் அனுபவம் மற்றும் சுக வாழ்வு தர மாட்டார் .
. செவ்வாய் பகவான் தன் இயல்புகளான கோபம் , வீரம்
, வெறித்தனம் கடின மனம் சகோதரம் போன்றவற்றை இழப்பார் .
.
இராகுவிடம் இணையும் சனியால் ( சரணடையும் ) சனியால் வறுமை
, தரித்தரம் , கடன் , நோய்
, உடல் ஊனம் போன்றவறைத் தர இயலாது .
. சந்திரன் மனத்திற்கும் , மனம் எடுக்கும் முடிவுகளுக்கும் காரணமானவர் என்பாதால் இராகுவிடம் நெருங்கும் போது மனத்தைக் கட்டுபடுத்தும் ஆற்றலை ஜாதகர் இழந்து மன நலம் குன்றுவார் . தாயன்பு பரிபோகும்
.
. இராகு புதனுடன் இணையும் போது நிபுணத்துவம் குறையும் அறிவாற்றல் அளவோடுதான் இருக்கும் .
கணிதத் திறமை காணாமல் போகும் .
. இராகு சூரியனுடன் இணையும் போது அரசுத் தொடர்பு , அரச லாபம் , தந்தையின் ஆதரவு போன்றாவற்றைத் தரும் வலிமையை இழப்பார் .
. ஒரு கிரகம் உச்சம் , மூலத்திரிகோணம் , ஆட்சி போன்ற எத்தகைய வலிமை நிலையில் இருந்தாலும் சரி , அது இராகுவுடன் மிகவும் நெருங்கினால் அத்தனை வலிமையையும் இழக்கும் .
. ஒரு கிரகம் ஒரு ராசியில் ராகுவுடன் குறிப்பிட்ட டிகரி இடை வெளி தள்ளி இணையும் போது அந்த சுப கிரகங்களின் இயல்பை ராகு பகவான் பெற்று தனது திசையில் அந்த கிரகங்களின் காரகத்துவம் மற்றும் ஆதிபத்திய பலனைத் தருவார் .
. அதே போல் பாபக் கிரகங்களுடன் இணைந்த ராகு அவர்களின் கெட்ட காரகத்துவங்களை தனது திசையில் பிரதிபலித்து கஷ்டங்களுக்கு உள்ளாக்குவார் .
குறிப்பாக சனி , செவ்வாயின் பார்வைப் பெற்ற ராகு தன் திசையில் நல்ல பலன்களை செய்வது கடினம் சனி , செவ்வாய் லக்னம் சுபர்களாக இருந்தாலும் கஷ்டங்களை கொடுத்து விடுவார் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக