புதன், 25 ஜூலை, 2012

வினாயகர் சிலைக்கு உயிர் உண்டா..?

வினாயகர் சிலைக்கு உயிர் உண்டா..?


80 வருடங்களுக்கு முன்பு குற்றாலத்தில் சிவய்யா என்ற யோகி மெளனமாக இருக்க ஆரம்பித்தார்...அவரை அனைவரும் மெளன ஸ்வாமிகள் என்றே அழைக்க ஆரம்பித்தனர்...அவர் அமைத்த மடத்துக்கும் மெளன ஸ்வாமிகள் மடம் என்றே பெயர் வந்தது...

ஒருமுறை அங்கு வினாயகப்பெருமான் பிரதிஷ்டை நடந்த பிறகு ஆங்கிலேயர் ஒருவர் பார்வையிட வந்தார்...''அங்கு நடக்கும் பூஜைகளுக்கு என்ன பெயர்..''என்று கேட்க,பிள்ளையாருக்கு உயிர் கொடுக்கிறார்கள் என்றார்..அவர் அவநம்பிக்கையுடன் மெளன ஸ்வாமிகளை பார்க்க,மெளனஸ்வாமியும் ,சந்தேகம் இருந்தால் பிள்ளையாரை ஒரு மருத்துவரை வைத்து பரிசோதனை செய்யுங்கள் என சைகையால் சொன்னார்...அவ்வாறு பரிசோதித்தபோது நாடித்துடிப்பு தெரிந்ததாக மருத்துவர் கூறினார்..இது அன்று பதிவு செய்யப்பட்டுள்ளது..

தெய்வத்தை சிற்ப நூல் கூறியபடி செய்யும்போது அதனுள் ஒரு கலை ஜீவதுடிப்புடன் தானெ வந்துவிடும்..மீதி 15 கலைகள் முறையாக செய்யும் வழிபாடுகளால் உண்டாகும்..கல்லில் கூட ஆண்,பெண்,அலி என்று உண்டு...ஆண் கல்லில் தட்டினால் தாம்பாள ஓசையு,பெண் கல்லில் தட்டினால் நாதமும் எழும்...அலி கல்லில் தட்டினால் எவ்வித ஓசையும் எழும்பாது...

ஆண் கல்லில் ஆண் தெய்வமும் பெண் கல்லில் பெண் தெய்வமும் அலி கல்லில் தூண்கள் ,படிக்கற்கள் செய்யவும் பயன்படுத்துவார்கள்!!!


ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவி ஏற்ற தினம் நல்ல நேரமா..?

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவி ஏற்ற தினம் நல்ல நேரமா..?


உச்ச ஜென்ம சனியில் கன்னி ராசி கன்னி லக்னத்தில் செவ்வாய் திசையான அஷ்டம திசையில்,லக்னாதிபதி புதன் வக்ரமாகி கெட்ட ஜாதகத்தில் இந்தியாவின் முதல் குடிமகனாக பிரணாப் ஜனதிபதியாகி இருக்கிறார்...லக்னத்தில் செவ்வாய்,சனி,சந்திரன்...நாட்டில் குழப்பத்துக்கும்,பஞ்சத்துக்கும்,மேலும் பொருளாதார சரிவுக்கும் கியாரண்டி கொடுக்கிறார்!!! பத்தாதுன்னு பேய் நம்பரா 13 வது ஜனாதிபதி வேற!! விளங்கிடும்!!!

செவ்வாய்,சனி சேர்க்கை நாட்டுக்கு கெடுதலா..?

ஆடி 20 வரை சனி, கன்னியில் செவ்வாயுடன் இருக்கிறது...சனி,செவ்வாய் சேர்ந்து ஒரு ராசியில் இருக்கும்போது புதிதான நோய்,கலவரம்,பெண்கள் எதிரான பிரச்சினை,பூகம்பம்,பெரிய விபத்துக்கள்,மத்திய மாநில அரசுகளுக்கு பெரும் சிக்கல்,மத்தியில் ஆட்சி கவிழ்ப்பு....முக்கிய மக்கள் தலைவர்கள் மரணம் போன்றவை இதுவரை நடந்திருக்கின்றன...இன்னும் 10 தினங்கள் இந்த சூழலுக்கு வாய்ப்பிருக்கிறது..

ஆனால் குரு பார்வை இதை முடிந்தளவு தடுத்து வருகிறது...துலாம் வீட்டில் மறுபடியும் இரு கிரகங்கள் சேர்கின்றன...அப்போது குரு பார்வை இல்லை..அப்போ செவ்வாய்,சனி செய்யும் பாதிப்பை தடுக்க இயலாது...இதற்கு அடுத்த வீட்டில் ராகுவும் உச்சத்தில் இருக்கிறது...இது ஆகஸ்ட்,செப்டம்பர் மாதத்தில் நிகழ்கிறது...இவை எல்லாம் நாட்டிற்கு துர்பலனே...மேற்சொன்னபலன்கள் அப்போது நடக்க அதிக வாய்ப்புண்டு...

செவ்வாய் சகோதரகரகன் என்பதால் சகோதர யுத்தமும் நடக்கும்..செவ்வாய் ஆயுதம் என்பதல் ஆயுத போரும் நடக்கலாம்...செவ்வாய் இப்போது கன்னியில் இருப்பதால் கடலும் வற்றும் என்ற பழமொழிக்கு ஏற்ப பொங்கி வரும் காவிரியும் ஆடி மாதத்தில் வறண்டு இருக்கிறது...நாடெங்கிலும் நிலத்தடி நீரும் வற்றிக்கொண்டிருக்கிறது!!!

புதன், 18 ஜூலை, 2012

சுப காரியம் செய்யக்கூடாத நட்சத்திரங்கள்# ஜோதிடம்

சுப காரியம் செய்யக்கூடாத நட்சத்திரங்கள் #ஜோதிடம்

27 நட்சத்திரங்களில் 12 மிகவும் ஒதுக்கப்பட வேண்டும் என்பது ஜோதிட சாஸ்திரம் சொல்லும் முக்கிய குறிப்பாகும்...

பரணி,கிருத்திகை,திருவாதிரை,ஆயில்யம்,பூரம்,பூராடம்,பூரட்டாதி,கேட்டை,விசாகம்,சித்திரை,மகம் ஆகியவை ஆகும்..

இந்த நட்சத்திரங்களில் வெளியூர் பயணமோ ,கொடுக்கல் வாங்கலோ கூடாது..வெளியூர் தூரப்பயணம் சென்றவர் திரும்பி வருவது மிகவும் கடினம் ஆகும்..உடல் நலக்குறைவு ஏற்பட்டால் ஆரோக்கியம் உண்டாவதும் கடினம்...

ஒருவருடைய ஜென்ம  நட்சத்திரமும் 3,5,7,10,14,19,22,27 ஆகிய நட்சத்திரங்களும் சுப காரியங்களுக்கு முகூர்த்தம் போன்ற முக்கிய காரியங்களுக்கு தவிர்க்க வேண்டும்..கெடு பலன்களை இவை தரும்....