வியாழன், 23 ஜூலை, 2015

எல்லா பிரச்சினைகளும் தீர எளிமையான பரிகாரம் ;ஜோதிடம்

எல்லா பிரச்சினைகளும் தீர எளிமையான பரிகாரம் ;ஜோதிடம்

அதிகாலை 4.30 முதல் காலை 7.30 வரை சூரிய உதயத்தில் பிராண வாயு பூமியில் நிறைந்திருக்கும்.இக்காலங்களில் மூளைக்கு மனப்பாட பயிற்சி ,உடலுக்கு உடற்பயிற்சி அளித்தால் சக்ல உள் உறுப்புகளும் ஆக்சிஜனை குடித்து வலுவாகும்..இளம் சூரிய ஒளியையும் தோலின் துவாரங்களின் வழியே ஆக்சிஜனுடன் பரவுவது ஹைப்போ தலமசையும்,உயிர் ஹார்மோன் சுரக்கும் பினியல்,பிட்யூட்டரி,தைராய்டு அட்டிரனல் சுரப்பிகளையும் வலுப்படுத்தும்.அன்று முழுவதும் சோம்பலும் வராது.கண் ,குரல்,முகப்பொலிவு போன்ரவை உண்டாகி சர்வஜன வசியம் உண்டாகும்...

அதிகாலையில் எழுதல் தினசரி ஆறுமுறை தியானம் செய்தல் ,உடற்பயிற்சி,மெள்னவிரதம்,சிக்கனப்பழக்கம், போன்றவை மன உறுதியை வளர்க்கும்..சோம்பலை போக்கும்.தீய கிரக திசாபுத்தியை சமாளிக்கும் அறிவு மனோபலம் தரும்..ஏழரை சனி,அஷ்டம சனி,அஷ்டம குரு இவற்றுக்கு பயப்பட தேவையில்லை...

உயிரை வளர்க்கும் விதம் அறிந்தே உடலை வளர்த்தேனே என்று திருமூலர் கூறியது போலவே பக்தி உஷ்ணத்தால்தான் உயிர் சக்திகளை உடலில் பலப்படுத்த முடியும் உள்ளத்தில் உள்ளவன் கட-உள்.

செவ்வாய் கெட்டால் வாகனத்தால் பிரச்சினை,வீண் வம்பு,கோர்ட் கேஸ் பிரச்சினை உண்டாகிறது சனி கெட்டால் சோம்பல்,சோர்வு உண்டாகிறது சந்திரன் கெட்டால் நிம்மதி கெடுகிறது சூரியன் ஆரோக்கியம் கெடுகிறது புதன் கெட்டால் அறிவு கெடுகிறது...குரு கெட்டால் செல்வாக்கு கெடுகிறது மரியாதை கெடுகிறது..சுக்கிரன் கெட்டால் சுகம் கெடுகிறது 

..இவ்வாறு நவகிரகங்கள் தரும் தொல்லைகளை சமாளிக்க மன உறுதி உடல் உறுதி வசியம்..அதற்கு அதிகாலை எழுதல்,தியானம் ,யோகா,உடற்பயிற்சிகள் செய்தல்,வழிபாடு பிரார்த்தனைகள் இவைகள்தான் உதவும்....புலம்பிக்கொண்டே இருப்பதும்,கவலைப்பட்டுக்கொண்டே இருப்பதும் மன உறுதியை குலைத்து பிரச்சினைகளை மேலும் அதிகரிக்க செய்யும்...இதனால் உற்சாகம் கெட்டு வசிய சக்தி நீங்கி விடுகிறது...

கவலை,புலம்பலைவிட்டு தள்ளிவிட்டு உள்மனம்,உளுறுப்புகள்,மன ஆர்ரலை பெருக்கிக்கொள்ளுங்கள்..நவகிரகங்களை சமாளித்து வெற்றி பெறுவோம்...

திங்கள், 20 ஜூலை, 2015

ஜோதிடம் சூட்சுமங்கள் -1 astrology tricks

ஜோதிடம் சூட்சுமங்கள் -1 astrology tricks

ஜோதிட பாடம் என எடுத்துக்கொண்டாலும் சரி..ஜோதிட குறிப்புகள் என எடுத்துக்கொண்டாலும் சரி..சில முக்கியமான ஜோதிட குறிப்புகளை அடிக்கடி எழுதலாம் என இருக்கிறேன்...அவை எல்லோருக்கும் பெரிதும் பயன்படக்கூடியதாகத்தான் இருக்கும்..சின்ன சின்ன குறிப்புகளையோ ,பரிகாரங்களையோ தனி பதிவாக எழுத முடியாது என்பதால் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து இதில் எழுதிவிட முயற்சிக்கிறேன்..

 குரு ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்க பிறந்தவர்,
சுக்கிரன் உச்சத்தில் இருக்க பிறந்தவர் என்றெல்லாம் ஒரு ஜாதகத்தை உயர்வாக சொல்வோம்..ஆனால் அதை எல்லாம் விட முக்கியம் நாம் பிறந்த தமிழ் மாதம் சிறப்பாக இருக்க வேண்டும்..ஏனெனில் அப்போதுதான் சூரியன் நல்ல நிலையில் இருப்பார்...சித்திரை,ஆனி,ஆடி,புரட்டாசி,மார்கழி,பங்குனி போன்றவை சுமாரான மாதங்கள்..இவற்றில் சூரியன் சிறப்பானவை அல்ல..என்பது காலம் காலமாக சொல்லப்படுகிறது இவற்றில் சுபகாரியமும் செய்வதில்லை..காரணம் அது நிலைத்து, நீடித்து பலன் தராது என்பதால்தான்..சூரியன் பிதுர்காரகன் என்பதால் தந்தையையும் அவர் வம்சத்தையும் குறிப்பதால் சூரியனின் பலம் அக்குழந்தையின் தந்தை வழி எப்படிப்பட்டது இனி அந்த வம்சம் எதை நோக்கி செல்லப்போகிறது என்பதை பிறந்த தமிழ் மாதம் நிர்ணயிக்கிறது...அதன்பிறகு ஜாதகத்தில் சூரியனின் நிலை அவருடன் சேர்ந்த கிரகம்,பார்த்த கிரகம் இவற்றையெல்லாம் ஆராய்ந்து அதற்கு மேலான பலன்களை தெரிந்து கொள்ளலாம்.

.சூரியன் நமக்கு கண்ணுக்கு தெரிந்த முக்கியமான ஒளி கிரகம்..புதனையோ சுக்கிரனையோ நாம் பார்த்ததில்லை..ஆனால் சூரியனை தினமும் பர்க்கிறோம்..அவர் நம் ஜாதகத்தில் உயிருக்கு சமமானவர்...எனவே ஜதகத்தில் சூரியன் நல்ல நிலையில் இருப்பது அவசியம் என்பதில் நம் முன்னோர்கள் நிறைய முன்னெச்செரிக்கையுடன் இருந்திருக்கின்றனர்..ஆடி மாதம் புது தம்பதிகள் சேர்ந்தால் சித்திரை மாதம் குழந்தை பிறக்கும்..அது சரராசியில் இருப்பதால் தந்தை குடும்பத்துடன் தங்காமல் ஊர் ஊராக அலைய நேரிடும் என யோசித்து புது தம்பதிகளை பிரித்து வைத்தனர். ஆனால் இப்போ ,அது எல்லாம் மூட நம்பிக்கை என்கின்றனர்...என்ன சொல்ல..?அனுபவப்பட்டால் தெரிந்துவிடப்போகிறது.


சந்திரன் இல்லாவிட்டால் அன்பு ஏது..? இரக்கம் ,அம்னிதாபிமானம்,சிந்தனை ,கவி,புலமை,ரசனை ஏது..? இதுதானே மனிதனை மனிதனாக இயங்க செய்கிறது..? அழகை கொடுக்கிறது..காதலை கொடுக்கிறது..ஜனன உற்பத்திக்கு சூரியனும்,குருவும் அடிப்படை என்றாலும் உற்பத்திக்கு தூண்டுதல் காமத்துக்கு முதல் படியான காதலுக்கு சந்திரன் தானே காரணம்...மிருகத்தனமான கமத்துக்கு சுக்கிரன் காரணம் என்றாலும் ரசித்து ,ருசிக்க சந்திரன் தான் காரணம் ...அத்தயக சந்திரன்...ஜாதகத்தில் முக்கிய சுப கோள்களுக்கு கெடாமல் இருப்பது வசதியாகவும்,சுகமாகவும் வாழ வழி வகுக்கும்...

சூரியன் நெருப்பு..சந்திரன் குளிர்ச்சி..நெருப்பிலிருந்து எவ்வளவு தூரம் விலகி சந்திரன் இருக்கிறாரோ அவ்வளவு சிறப்பு...வளர்பிறையில் பிறப்பு ஆஹா..வளர்ச்சிக்கும் ,அறிவுக்கும் எல்லை ஏது..? அசுப கிரகங்கள்..சேராமல் இருந்தால் பார்க்காமல், இருந்தால் இன்னும் அருமை...புதன்,சுக்கிரன்,குரு போன்ற சுபகிரகங்களுடன் சேர்ந்தால் அல்லது  கோணங்களில் இருந்தால் அதைவிட அருமை...லக்னத்திற்கு சுபருமாகி கேந்திரம்,திரிகோணத்திலிருந்தால் ராஜயோகம்தான்...

சந்திரன் தாய்க்கு காரகம் வகிக்கிறார் ..சூரியன் தந்தைக்கு காரகம் வகிக்கிறார்...தாயும்,தந்தையும் இல்லாமல் நாம் பிறப்பதில்லை..சூரியன்,சந்திரன் கைகொடுக்காமல் வேறு எந்த கிரகம் கைகொடுத்தாலும் ஜாதகருக்கு பலம் இல்லை...புண்ணியமும் இல்லை...சூரியன் நீதி,நேர்மை,ஒழுக்கம்,கட்டுப்பாடு இவற்றை போதிக்கிறார் தந்தையின் கடமை அதுதானே....

சந்திரன் அன்பு,இரக்கம்,மனிதாபிமானம்,பாசத்தை ஊட்டுகிறார்..தாயின் இயல்பு அதுதானே..இயற்கையாகவே நம் இந்தியாவில்தான் சூரியன்,சந்திரன் உதயம்,மறைவு சமமாக இருக்கிறது...துலாம் ராசியில் தராசு சின்னம் படம் போட்டிருக்கும்..அதன் அர்த்தம் துலாம் ராசியில் சூரியன் வரும்போது இரவும் பகலும் சமமாக இருக்கும்..காலை 6 மணி உதயம் என்றால் மாலை 6 மணி சூரியன் மறைவு என இருக்கும்..

 பருவநிலைகள் சமமாக இருக்கிறது..அதனால்தான் இங்கு அன்பும்,சமத்துவம்,பாச உணர்வு,குடும்ப அமைப்புகள்,தெய்வீக சக்தி,இயற்கை வைத்தியம்,தெய்வீக மூலிகைகள்,மகான்கள் ஆசி எல்லாம் அமைந்திருக்கிறது..உலகில் வேறு எங்கும் இவை கிடைக்காது...கிடைத்ததை உண்டு,மனம் போல வாழும் முறை கூடாது....காரணம் உலகிற்கே வழிகாட்டியாக திகழக்கூடிய கடமை இங்குள்ள மக்களுக்கு இருக்கிறது..அதுதான் இயற்கை நமக்கு இட்டிருக்கும் உத்தரவு..

(தொடரும்)


திங்கள், 13 ஜூலை, 2015

இந்த வார ராசிபலன் 13.7.2015


மேசம் -ராசியினருக்கு இரண்டில் உச்சம் பெற்ற சந்திரனால் நல்ல தன லாபம் உண்டு..தைரியம்,துணிச்சலால் பல காரியங்களை சாதிப்பீர்கள்...நாளை முதல் குரு உங்கள் ராசிக்கு ஐந்தில் மாறுவது நல்ல காலம் பிறப்பதற்கான அறிகுறி..அஷ்டம சனி கண்டு துவள வேண்டாம்..குரு பார்வை கோடி புண்ணியம் தருகிறதோ இல்லையோ , உங்களுக்கு நிம்மதியை தரப்போகிறது


ரிசபம் -ராசியினருக்கு தனாதிபதி பலம் பெற்று தன ஸ்தானத்திலியே இருப்பதால் எதிர்பாராத பண வரவுகளை இந்த வாரம் சம்பாதிப்பீர்கள்..அதை பயனுள்ள வகையில் செலவழிக்கவும்..வழக்கம்போல ஆடம்பர செலவு வேண்டாம் .அதன் மூலம் உங்கள் பிரச்சினைகளை சமாளிப்பீர்..பேச்சில் நிதானம் தேவை..


மிதுனம் -.அலைச்சல்,டென்சன் அதிகம் இருக்கும்..கோபத்தால் குடும்பத்தில் சங்கடம் உண்டாகும்..வீண் செலவுகள் காணப்படுகிறது ..சுக்கிரன் குரு ராசிக்கு மறைந்திருப்பதால் வர வேண்டிய பணம் கைக்கு கிடைக்காமல் தடுமாறுவீர்கள்...வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடு உண்டகும்..முடிந்தவரை அமைதியாக போய்விடுவது நல்லது..சொத்து வில்லங்கம் ,வாகனத்தால் நஷ்டம்,விண் செலவு வைத்தல் காணப்படும் உடல்நலனில் அதிக கவனம் தேவை...இடுப்பு,முதுகு சம்பந்தமான வலிகள் பிரச்சினைகள் உண்டாககுடும்..


கடகம் -நல்ல பண வரவு உண்டு ..மகிழ்ச்சியும் சந்தோசமும் உண்டாகும்...தந்தை வழியில் சில சிக்கல்கள் காணப்படும்...2ல் சுக்கிரன் இருப்பதால் பேச்சில் இனிமை கூடும் அதன் மூலம் நிரைய சாதிப்பீர்கள்..பெண்கள் விசயத்தில் வீண் சங்கடங்கள் உண்டாகலாம் கவனம் தேவை..பாதங்கள் சம்பந்தமான வலிகள் உண்டாகும்..ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உண்டாகும்..


சிம்மம்-எதிர்பாராத பயணம்..சுக்கிரன் உங்கள் ராசியில் இருப்பதால் பணவரவு உண்டு..2ல் ராகு இருப்பதால் அதற்கேற்ற செலவுகளும் காத்திருக்கும்...உடல்நலனில் கவனம் தேவை..அடிவயிறு சார்ந்த பிரச்சினைகள் சிலருக்கு மூலம் சம்பந்தமான பிரச்சினைகளும் வர வாய்ப்பிருப்பதால் முன் கூட்டி கவனமாக உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும்...தாயாருடன் கருத்து வேறுபாடு..வாகனத்தால் வீண் செலவு..அதிக அலைச்சல் காணப்படும்..முடிந்தவரை இரவு நேரம் தனியாக பயணம் செய்வதை தவிர்க்கவும்.


கன்னி-தொழில் ஸ்தானத்தில் ராசி அதிபதி இருப்பதால் தொழில் முன்னேற்றம் உண்டு...வருமானம் மட்டும் தடங்கலாகிட்டே இருக்கே என கவலையில் இருப்பீர்...நீண்ட நாளாக வழிபடவெண்டும் என நினைத்துக்கொண்டிருக்கும் கோயிலுக்கு சென்று வரவும்..


துலாம்-நாக்குல சனி உங்களுக்கு இருப்பதை மறக்க வேண்டாம்..இன்று சந்திராஷ்டமம் வேற சொல்லவே தேவையில்லை..பேசினாலும் பிரச்சினை பேசலைன்னாலும் பிரச்சினை..செலவு நிறைய இருக்கு வருமானம் இல்லை..தந்தை மற்றும் மூத்த சகோதர வகையில் சில சிக்கல்களையும் சங்கடங்களையும் சந்திப்பீர்கள்..அதன் மூலம் வீண் விரயங்களும் உண்டாகும்..நெருங்கிய உறவினர் இழப்பு உண்டாகும்..


விருச்சிகம் -மெத்தையை வாங்கினேன் தூக்கத்தை வாங்கலை என புதுசு புதுசா பிரச்சினைகள் அணிவகுத்தாலும் குழந்தைகளை பார்த்து மனம் ஆறுதல் அடையலாம்....எட்டில் சூரியன்,செவ்வாய் இருப்பதால் வாகன பயணம் அதிக கவனம் தேவை...தொழில் மந்தம்,வரவேண்டிய பணம் கைக்கு எட்டி வாய்க்கு எட்டா நிலை இருக்கிறது..இந்த வார கடைசியில் நல்ல செய்தி வரும்.

தனுசு- ராசிநாதன் குரு நாளை முதல் ராசிக்கு ஒன்பதில் வருவதால் சுக்கிரன் ஒன்பதாம் இடத்தில் இருப்பதால் பெரிய தன வரவை அடுத்த வாரம் எதிர்பார்க்கலாம்...வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடு உண்டக்கும்..4ல் கேது இருப்பதால் தாய்க்கு மருத்துவ செலவு,வீடு,வாகனம்  சம்பந்தமான செலவுகள் இருக்கும்...வாழ்க்கை துணை உறவுகளிடம் கவனமாக இருக்கவும் இல்லையெனில் சிறிய பிரச்சினை பெரிதாகிவிடும்..தொழில் ரீதியாக நிறைய யோசிப்பீர்கள்..பெரிய ரிஸ்க் எதுவும் எடுக்க வேண்டாம்


மகரம்-காரிய வெற்றி நினைத்தை முடிக்கலாம்...பயணத்தால் வெற்றி உண்டு..தன லாபம் உண்டு..செவ்வாய்,சூரியன்,சுக்கிரன் எல்லாம் உங்க ராசிக்கு மறைவில் இருப்பதால் இந்த மாதம் தொழில்,வருமானம் அவ்வளவு சிறப்பில்லை...வழக்கமான முயற்சிகள் செய்யுங்க..


கும்பம்-பயணம் வெற்றி தரும்..சலிச்சுக்கிட்டே போனாலும் ஒரு ஆதாயத்துடன் திரும்பி வருவீங்க..சுக்கிரன் ராசிக்கு 7ல் இருப்பதால் பண வரவு திருப்தி தரும்..தொழில் சிறப்பாகவே இருக்கும்...நெருங்கிய உறவினரின் இழப்பு அல்லது அறுவை சிகிச்சைக்காக அலைய நேரிடும்..


மீனம் -பண வரவு உண்டு...சுக்கிரன் 6ல் இருப்பதால் பெரிய பண வரவு இல்லை..குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு..அலைச்சல் அதிகமாக காணப்படும்..தாய்க்கு உடல்பாதிப்பு,சொத்து வில்லங்கம் காணப்படுகிறது...வாகனத்தால் துரதிர்ஷ்டம் கவனம் தேவை..ராகு கேது பெயர்ச்சி வரைக்கும் அதிக மனக்குழப்பத்துடன் இருப்பீங்க இதனால எல்லோரையும் பகைச்சுக்குவீங்க..மனம் தோணுகிறபடியெல்லாம் பேசாமல் அமைதி காக்கவும்..

வெள்ளி, 10 ஜூலை, 2015

குருப்பெயர்ச்சி பலன்கள் 2015-2016 மீனம்

குருப்பெயர்ச்சி பலன்கள் 2015-2016 மீனம்

பூரட்டாதி 4ஆம் பாதம், முதல் உத்திரட்டாதி,ரேவதி முடிய பிறந்த மீனம் ராசி நண்பர்களே 

வரும் 14.7.2015 ஆம் தேதி நடைபெறும் குருப்பெயர்ச்சியால் தங்களின் மீன ராசிக்கு 6ஆம் இடமான ருண ரோக சத்ரு ஸ்தானத்துக்கு குரு பகவான் பெயர்ச்சியாகிறார்...

குருபதியும் ஆறில் ஏற,கெடுதி மிக செய்வான்
மகாபலியாம் மன்னன் சீரப்பாசிறைக்கூடம் சென்றாரப்பா’’

என புலிப்பாணி முனிவர் ஆறாம் இடத்து குரு கெடுதி தரும் என பாடியிருக்கிறார்..மீனம் ராசிக்கு குரு ராசி அதிபதி மட்டுமல்ல..பத்தாம் அதிபதியும் கூட குருதான் தொழில் ஸ்தானாதிபதி மறைவதால் தொழிலில் திடீர் சிக்கல்கள் உண்டாகும்,..தொழில் மந்தமடையும் வருமானம் தடங்கலாகும் என்ற நிலை அடிக்கடி உண்டானாலும் குரு பார்வை தொழில் ஸ்தானத்தின் மீது இருப்பதால் முற்றிலும் பாதிக்காது...வாக்கு தன ஸ்தானமாகிய இரண்டாமிடத்தையும் குரு பார்ப்பதால் வருமானம் குறைவின்றி நடக்கும்...

குரு தன் ஐந்தாம் பார்வையால் தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் வியாபாரிகளுக்கு முன்னேற்றம் உண்டாகும் உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வூண்டாகும் ஆறாம் இடத்து குரு உடல் ஆரோக்கியத்தில் சிக்கலை உண்டாக்கு சிறு விபத்துக்கள் ,அறுவை சிகிச்சைகள் செய்யும் சூழல்,புதிதாக கடன் வாங்குதல்,புதிய எதிரிகளையோ பகையையோ உண்டாக்கிக்கொள்ளும் சூழல் உண்டாகும்..

குரு மறைந்தால் செல்வாக்கு மறையும் செல்வாக்கு எதனால் மறையும் கெட்ட பெயர் உண்டானால்தான் செல்வாக்கு மறையும் எனவே நெருங்கிய உறவுகளிடம் கவனமாக நடந்துகொள்ளுங்கள்..12ஆம் இடத்தை குரு பார்ப்பதால் சம்பாதிக்கும் பணமெல்லாம் சுப விரயம் ஆகும் வாய்ப்புகளே அதிகம்..வீடு கட்டுதல்,வீடு பழுதுபார்த்தல்,மனை வாங்குதல் போன்றவை செய்தால் சுப செலவுகளாகி விடும்..புதிய வங்கிக்கிடன் வாங்கினால் கூட ஆறாமிடத்து குரு தொல்லைகளில் இருந்து தப்பிக்கலாம் இல்லையெனில் மருத்துவ செலவு உண்டாக்க கூடிய தோசம் தொடரும்...பிள்ளைகளுக்கு சுபகாரியம் செய்தாலும் வீட்டில் விருந்து நடத்தினாலும்,சுபவிரயமே.

குடும்ப ஸ்தானத்தை குரு பார்ப்பதால் குடும்பத்தில் கணவன் மனைவி ஒற்றுமை உண்டாகும் பிரிந்தவர்கள் ஒன்று சேர்வர்...இருவருக்குமிடையே இருந்து வரும் பிரச்சினைகள் குறைய துவங்கும் ....உங்கள் சொன்ன சொல்லை காப்பாற்ற இக்காலகட்டத்தில் நிறைய போராட வெண்டி வரும் ..சில போராட்டத்துக்கு பின் நீங்களே வெல்வீர்கள்..முடிந்தவரை சவாலோ,வாக்கோ கொடுத்துவிடாதீர்கள் அதை காப்பது மிக கடினம்...அதிக அலைச்சல் ,பலவிதமான தடைகளை தாண்டிதான் ஒரு காரியத்தை இந்த நேரத்தில் செய்து முடிக்க முடியும்.

சிலருக்கு வீண் தொல்லைகள்,பங்காளி பிரச்சினை,முன்னோர் சொத்து வில்லங்கம்,குலதெய்வ கோயில் பிரச்சினை,சொத்து தகராறு மூலம் கோர்ட் படியேறும் சூழல் வரலாம்..அண்ணன் தம்பிகள் சித்தப்பா பெரியப்பா இவர்கள் மூலம் இப்போது வாக்குவாதம் ,கலவரம்,வாக்குவதம் உண்டாகும் கலம் என்பதால் முடிந்தவரை சுமுகமாக பேசி முடிக்கப்பாருங்கள் வீண் சவடால் விட்டு தேரை இழுத்து நீங்களே தெருவில் விட்டுவிடாதீர்கள்...

கடன் கொடுத்தால் திரும்பி வராது கடன் வாங்கினால் வட்டி கட்டுவதே பெரும் சிரமம்...ஜாமீன் கையெத்து போட்டு யாருக்கேனும் நண்பர்களுக்கு உதவி செய்யும் நோக்கில் செய்தால் ,அந்த பணத்தை நீங்கள்தான் கட்டியாக வேண்டும் உங்கள் நண்பர் கட்ட மாட்டார் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்..

உங்கள் குடும்பத்தினருக்கு பாதிப்பில்லை ஆனால் பழைய பிரச்சினைகள் எல்லாம் கிளறி விட்டு தொல்லை கொடுக்கும் ஆட்களால் உங்கள் மனதுதான் சிறிது வருத்தமுண்டாகும் காலமாக இந்த குருப்பெயர்ச்சி இருக்கும்..

குரு வக்ரமாகும் காலத்தில் 8.1.2016 முதல் 8.5.2016 வரையிலான காலகட்டம் குரு வக்ரம்...பெரிய பாதிப்புகள் இருக்காது வருமானமும் நன்றாக இருக்கும் தொழிலும் நல்ல சுறுசுறுப்பாக இருக்கும்..

29.1.2016ல் ராகு கேது பெயர்ச்சி வருகிறது அது உங்கள் ராசிக்கு மட்டும் அஷ்டலட்சுமி யோகமாக அமைகிறது...6ஆம் இடத்து குருவுடன் ராகு சேர்வது ராஜயோகம்..எனவே ராகு பெயர்ச்சிக்கு பின் சிலருக்கு ஒட்டு மொத்த கடனும் அடைந்துவிடலாம் தொழிலில் பல மடங்கு லாபம் வரும் வாய்ப்பும் உண்டு..

சிலர் வெளிநாட்டில் பெரிய சம்பளத்துடன் செட்டில் ஆவார்கள்..நீண்ட காலமாக எதிர்பார்த்து கொண்டிருக்கும் பெரிய விசயங்கள் சுலபமாக கையில் கிடைத்து உங்களை இன்ப அதிர்ச்சியில் தள்ளும்...தொழில்,வேலை இல்லாமல் அமைந்தவர்களுக்கு உறுதியா நிலையானதாக அமைத்து கொடுக்கும்..அரசு வேலை சிலருக்கு அமையும் பெரிய இடத்து வரன்கள் அமைந்து இந்த ராசி பெண்கள் மகிழ்ச்சியாக புதிய வாழ்க்கை துவங்குவர்.

செல்வவளம் உண்டாக

ஸ்ரீதனவசிய எந்திரம்,மூலிகை சாம்பிராணி,மகாலட்சுமி கலசம்  போன்ற பிரச்சினைகளை தீர்க்க கூடிய செல்வவளம் தரும் ஆன்மீக பொருட்களை உருவாக்கி விற்பனை செய்து வருகிறோம்... பல நண்பர்கள் இதனை நம்மிடம் பெற்றனர்.. அதன் மூலம் பல நன்மைகளை அடைந்தனர்..பல பிரச்சினைகள் தீர்ந்தது..  ஒரு கவசம் போல் பாதுகாப்பு தருகிறது என போனிலும், நேரிலும் பாராட்டிய நண்பர்களுக்கு நன்றி.மேலும் இதனை பெறவும்,விபரங்களை அறியவும், இங்கு க்ளிக் செய்யவும்..நன்றி..!!

புதன், 8 ஜூலை, 2015

குரு பெயர்ச்சி ராசிபலன் 2015-2016 கும்பம்

குரு பெயர்ச்சி ராசிபலன் 2015-2016 கும்பம்

அவிட்டம் 3,4 பாதங்கள்,சதயம்,பூரட்டாதி,1,2,3 பாதங்கள் வரையில் உள்ள கும்ப ராசி நண்பர்களே..நீங்கள் எப்போதும் எதார்த்தமாய் பேசுவதாக நினைத்துக்கொண்டு உண்மைகளை அப்படியே போட்டுடைக்கும் ரகம்..எல்லாமெ பாயிண்ட், பாயிண்டாக பேசுவீர்கள்..ஆன்மீக விசயத்தில் கரைத்து குடித்தவர் போல் பிரசங்கம் செய்வீர்கள்...பைனான்ஸ்,ஷேர் மார்க்கெட் என உங்களுக்கு தெரியாத விசயமே இல்லை என்பதுபோல எல்லா விசயத்திலும் டச் செய்து பேசுவதில் வல்லவர்...கும்பத்தான் இல்லாமல் கும்பாபிஷேகம் இல்லை எனும் அளவு கோயில் காரியங்களிலும் ,பொது தொண்டிலும் உங்களை ஈடுபடுத்திக்கொள்வீர்கள்..ஆனால் உங்களை பிறர் பயன்படுத்தி ஆதாயம் அடைவதோடு முடிந்துவிடுகிறது உங்களுக்கு ஆதாயம் குறைவுதான்...திறமை இருக்கிறது ஆனால் அது பிறருக்குதான் பயன்படுகிறது...தனக்கு பயன்படுத்திக்கொள்ள தெரியவில்லை...

யாரிடமும் அளவோடு பேசுங்கள்..லூஸ்டாக் உங்கள் பலவீனம்...கடந்த வருடம் இதனால் பல அவமானம்,இழப்பு,அலைச்சல்களையும்,மருத்துவ செலவுகளையும் சந்தித்திருப்பீர்கள்..இதனால் சிலர் கடும் கடன் நெருக்கடியிலும் இருப்பீர்கள்...சிலர் சொத்துக்கள் விற்கும் நிலையும்,சிலர் வம்பு,வழக்கை சந்தித்த நிலையும் உண்டாகி இருக்கும்..இருக்குமிடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைந்த கதைதான் நடந்திருக்கும்...

வருகிற 14.7.2015 முதல் உங்கள் ராசிக்கு குருபகவான் 7ஆம் இடத்துக்கு மாறுகிறார்..குருபலம் தொட்ங்க இருக்கிறது..இனி இந்த பாதிப்புகள் எல்லாமே விலகும்..உங்கள் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்..பகை விலகும்..வருமானம் அதிகரிக்கும்...சப்தம ஸ்தானத்துக்கு குருபகவான் வருவது ராஜயோகத்தை கொடுக்கும்...புகழ்,செல்வம்,செல்வாக்கு வசதிகள் ஏற்பட்டு மகத்தான வாழ்வு உண்டாகும்..கடன் தீரும்...உத்தியோகத்தில் இருப்பவருக்கு விரும்பியபடி பதவி உயர்வு,சம்பள உயர்வு கிடைக்கும்...புதிய இடம்,வீடு,வாகனம் வாங்குவீர்கள்..வீடு கட்டும் யோகமும் ,நகைகள்,சொத்துக்கள் வாங்கும் நேரமும் நெருங்கியிருக்கிறது..வருமானம் அதிகமாகும்போது வசதி வாய்ப்புகள் அதிகரிக்கத்தானே செய்யும்.

10ல் சனி வந்ததிலிருந்து வியாபாரத்துக்கு ,தொழிலுக்கு ,வேலைக்கு நல்ல வய்ப்புகள் தேடி வந்துவிட்டது..ஒரு சிலருக்கு வந்து கொண்டிருக்கிறது..குருவின் பார்வை 11 ஆம் இடமாகிய லாபஸ்தானத்தில் பதிவது மிகுந்த யோகம்..அது குருவின் வீடாக இருப்பதால் சொந்த வீட்டை பார்க்கும் குரு இரட்டிப்பான லாபத்தையே கொடுப்பார்..பிள்ளைகள் உயர்கல்வியில் சேர்வர்...தந்தைக்கு அதிர்ஷ்ட வாய்ப்பு உண்டாகும்.....உடல்நிலை பாதிப்பில் இருந்தவர்கள் மீள்வார்கள்....நல்ல ஆரோக்கியம் உண்டாகும்...

9.5.2016 முதல் 10.8.2016 வரையிலான மூன்று மாத காலங்கள் குரு வக்ரகதியில் இயங்குவதால் ஆறாமிடத்தின் பலன்களை கொடுக்க ஆரம்பித்து விடும் நல்ல பலன்கள் நடக்காது இக்காலகட்டத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்...

பரிகாரம்;திருச்செந்தூர் அல்லது திருப்பதி சென்று ரொம்ப நாள் ஆகியிருந்தால் ஒருமுறை சென்று வாருங்கள்...

செல்வவளம் உண்டாக

ஸ்ரீதனவசிய எந்திரம்,மூலிகை சாம்பிராணி,மகாலட்சுமி கலசம்  போன்ற பிரச்சினைகளை தீர்க்க கூடிய செல்வவளம் தரும் ஆன்மீக பொருட்களை உருவாக்கி விற்பனை செய்து வருகிறோம்... பல நண்பர்கள் இதனை நம்மிடம் பெற்றனர்.. அதன் மூலம் பல நன்மைகளை அடைந்தனர்..பல பிரச்சினைகள் தீர்ந்தது..  ஒரு கவசம் போல் பாதுகாப்பு தருகிறது என போனிலும், நேரிலும் பாராட்டிய நண்பர்களுக்கு நன்றி.மேலும் இதனை பெறவும்,விபரங்களை அறியவும், இங்கு க்ளிக் செய்யவும்..நன்றி..!!

செவ்வாய், 7 ஜூலை, 2015

குரு பெயர்ச்சி ராசிபலன்கள் 2015-2016 மகரம்

குரு பெயர்ச்சி ராசிபலன்கள் 2015-2016 மகரம்

உத்திராடம் 2ஆம் பாதம் முதல்,திருவோணம்,அவிட்டம் 2ஆம் பாதம் முடிய ,இருக்கும் மகர ராசி நண்பர்களே..கடுமையான உழைப்பால் தானும் முன்னேறி தான் பிறந்த குடும்பத்தையும் உறவுகளையும் முன்னேற்ற துடிக்கும் நல்ல மனம் கொண்டவர் நீங்கள்...பிறந்த போது பல துன்பங்களை அனுபவித்திருந்தாலும் பிற்காலத்தில் நல்ல நிலையை அடைந்தே தீர்வீர்கள்...நேர்மை,நியாயம்,உழைப்பு ஒன்றே உங்களுக்கு தெரிந்தது என வாழ்வில் போராடி கொண்டிருப்பவர்..அதிர்ஷ்டத்தை நம்பாமல் தன்னம்பிக்கையுடன் சாதிப்பீர்கள்..

குரு உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்துக்கு 14.7.2015 முதல் பெயர்ச்சியாகிறார்... இதுவரை உங்கள் ராசிக்கு 7ல் உச்ச குருவாக இருந்த குருபகவான் ,உங்கள் மனைவிக்கு அல்லது கணவருக்கு நல்லவை நடத்தி கொடுத்தது உங்களுக்கும் பல வகையில் ஆதாயம் கொடுத்தது குடும்பத்தில் சுபகாரியங்கள் நடந்தேறின..அதே சமயம் வர வேண்டிய லாபம் எல்லாம் எங்கு போனது என தெரியாமல் குழம்பவும் வைத்தது அதற்கு காரணம் லாபத்தில் இருந்த சனிதான்...அந்த இடம் சனிக்கு பாதக ஸ்தானம் என்பதால் லாபத்தையும் கொடுத்து அதற்கேற்ற செலவையும் கொடுத்து கொடுத்தவனே பறித்துக்கொண்டார்....

குரு எட்டாமிடத்துக்கு வருவது அவ்வளவு சிறப்பான இடம் அல்ல..அதே சமயம் உங்களுக்கு விரயாதிபதி குரு மறைந்து விடுவது கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம் அடிப்படையில் கெட்டதிலும் ஒரு நல்லது கலந்திருக்கிறது...

2ஆம் இடம் வலிமை பெற்றால் தன வரவு அதிகரிப்பதை போல 8ஆம் இடத்தில் மாறியிருக்கும் குரு வழ்க்கை துணைவரின் செல்வவளத்தை அதிகரிக்க செய்வார்..உயில்கள் மூலம் முன்னோர்களின் சொத்துக்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு...எப்போதோ கிடைக்க வேண்டிய லாபம் இப்போது வந்து சந்தோசப்பட வைக்கும்..உங்கள் ராசிக்கு 3,12க்குடைய குரு எட்டில் மறைவதால் விபரீத ரஜயோகம் செயல்படும்....தன லாபம் உண்டாகும்..

குருவின் பார்வை தன குடும்ப ஸ்தாமமாகிய 2ஆம் இடத்தில் பதிகிறது இதனால் தன லாபம் அதிகரிக்கும்..உங்கள் ராசிக்கு குருபகவானின் 5,7,9 ஆம் பார்வை 12ஆம் இடமான அயன சயன போக ஸ்தானத்திலும் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்திலும் 4ஆம் இடமான வாகனம்,வீடு,மனை சுக ஸ்தானத்திலும் பதிவதால் குருபகவானே பணத்திற்கான ஆதிபத்தியம் பெற்று தன காரகன் ஆகிவிடுகிறான்...அதனால் கோட்சாரப்படி மற்றவருக்கு கெடுதல் தரும் அஷ்டம குரு உங்களுக்கு எந்த பாதகத்தையும் பெரிதாக செய்யாது..வம்பு வழக்கு வரும் எனில் சிறிய பிரச்சினைக்கு அபராதத்துடன் முடிந்துவிடும்..

சிலருக்கு பொதுத்தொண்டு ,கோயில் பணிகள் சம்பந்தமான பொறுப்புகள் வந்து ந்சேரும்..வீடு மாறுவ்து ,புதுப்பிப்பது,புதிய வீடு கட்டுவது,வகனம் வாங்குவது,சீரமைப்பது என சுப செலவுகள் அதிகரிக்கும்..கடன் வாங்கி நல்லது செய்தாலும் பிரச்சினையில்லை ஆனால் அந்த கடன் கெட்ட விசயத்துக்காக செலவாகிவிடக்கூடாதே அதர்காக சுபகாரியத்தை இழுத்து போட்டு செய்யலாம்..சில விசயங்கள் தடங்கலாகி கொண்டே இருக்கும்...அவை குரு வக்ர காலம் வரும்போது சரியாகிவிடும்.8.1.2016 முதல் 8.5.2016 வரையிலான காலகட்டம் குரு வக்ரமாகிறார் அச்சமயம் உங்களுக்கு குருவால் ஏதேனும் கெடுதல் உண்டானாலும் அவை சரியாகிவிடும்..

பரிகாரம் -செவ்வாய்,வியாழக்கிழமையில் முருகனுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடவும்...

செல்வவளம் உண்டாக

சர்வ ஜன வசிய எந்திரம்,மூலிகை சாம்பிராணி,மகாலட்சுமி கலசம்  போன்ற பிரச்சினைகளை தீர்க்க கூடிய செல்வவளம் தரும் ஆன்மீக பொருட்களை உருவாக்கி விற்பனை செய்து வருகிறோம்... பல நண்பர்கள் இதனை நம்மிடம் பெற்றனர்.. அதன் மூலம் பல நன்மைகளை அடைந்தனர்..பல பிரச்சினைகள் தீர்ந்தது..  ஒரு கவசம் போல் பாதுகாப்பு தருகிறது என போனிலும், நேரிலும் பாராட்டிய நண்பர்களுக்கு நன்றி.மேலும் இதனை பெறவும்,விபரங்களை அறியவும், இங்கு க்ளிக் செய்யவும்..நன்றி..!!



திங்கள், 6 ஜூலை, 2015

குரு பெயர்ச்சி ராசிபலன் 2015-2016 தனுசு

குரு பெயர்ச்சி ராசிபலன் 2015-2016 தனுசு

வாக்கிய பஞ்சாங்கப்படி வரும் ஜூலை 5ஆம் தேதியன்று ஞாயிறு இரவு 11 மணியளவில் மகம் நட்சத்திரம் முதல் பாதத்துக்கு அதவது சிம்மம் ராசிக்கு குரு மாறுகிறார்..திருக்கணித பஞ்சாங்கப்படி 14.7.2015 செவ்வாய்க்கிழமை காலை 6.23க்கு குரு சிம்மம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார் ..ஆலங்குடி,திட்டை போன்ற குருபகவான் ஆலயங்களில் 5 அல்லது 6ஆம் தேதியன்றே வழிபாடு,யாகம் செய்வார்கள்.

மூலம்,பூராடம்,உத்திராடம் 1ஆம் பாதம் முடிய உள்ள தனுசு ராசி நண்பர்களே..
மனிதாபிமானம்,இரக்க சுபாவம்,கடவுள் பக்தி அதிகம் நிரம்பியவர் நீங்கள்..பிறருக்கு உதவி செய்வது என்றால் நானாச்சு என நிற்பீர்கள்..பொது காரியம் என்றால் முன்னால் வந்து நிற்பீர்கள் நண்பர்களை அதிகம் விரும்புவீர்கள்..நட்புக்கு இலக்கணம் தனுசு ராசியினர்..

உங்கள் இளகிய மனதை புரிந்துகொள்ளாமல் ஏமாற்றுவர் பலர்.ஏமாந்தாலும் நாம் நல்லதுதான் செஞ்சோம் அந்த மன திருப்தி போதும் என வாழ்வீர்கள்...ஜாமீன் கையெழுத்து போட்டு கடன் வாங்கி நண்பர் களுக்கு கொடுத்துவிட்டு தான் வட்டி கட்டி கொண்டிருக்கும் பல தனுசு ராசியினரை அறிவேன்...ஓரளவுதான் பிறரை நம்பவேண்டும் என்றில்லாமல் எல்லோரையும் தன்னைப்போலவே நல்ல மனம் உடையவர்களாக எண்ண வேண்டாம்..உங்கள் ராசிக்கு ஏற்கனவே ஏழரை சனி நடப்பதால் எப்போதும் கவனமுடன் இருக்க வேண்டும்..புதிதாக எதையும் செய்யும்முன் யோசித்து முடிவெடுக்கவும்.

கடந்த ஒரு வருடமாக எட்டாமிடத்து குருவால் பத்து பைசா வருமானமில்லை என்ற நிலைதான் பலருக்கும் நடந்தது..சிலருக்கு யோகமான திசை நடந்திருந்தால் எப்போதும் போல் நல்ல வருமானம் பார்த்திருக்கலாம்..அவர்களுக்கும் வேறு வகையில் சில அதிர்ச்சி வைத்தியங்களை குரு கொடுத்திருப்பார்..திடீர் உடல்நலக்குறைவு,தொழிலில் ஏமாற்றம் ,குடும்பத்தில் நிம்மதியின்மை போன்ற பிரச்சினைகளை குரு கடந்த ஒருவருடமாககொடுத்திருப்பார்நல்லாதானேபோய்க்கிட்டிருந்துச்சி..என்னாச்சு என குழம்பி தவித்திருப்பீர்கள்..

இப்போது திருக்கணித பஞ்சாங்கப்படி 14.7.2015 முதல் குரு உங்கள் ராசிக்கு பாக்யஸ்தானத்து வருகிறது..இது அருமையான குரு பலம் ஆகும்...குரு பாக்யத்துக்கு வந்தால் பொன் பொருள் சேர்க்கை உண்டாக்கும்..செல்வாக்கும் சொல்வாக்கும் உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியம் நடந்து மகிழ்ச்சி பெருக்கை உண்டாக்கும் ...

தப்பி ஓடினவனுக்கு ஒன்பதில் குரு என்பார்கள்..அது போல பிரச்சினைகளிலிருந்து தப்பிக்கொள்ளும் குரு பெயர்ச்சியாக இது அமைந்திருக்கிறது....ஒன்பதாம் இடத்துக்கு வரும் குருவால் முன்னேற்றமான காலம் வந்து சேர்கிறது...தொழிலில் நல்ல முன்னேற்றம் ,பலவிதமான வருமானம் உண்டாகும்..எதிர்பாராத தன வரவு உண்டு..,கடன் பிரச்சினையால் தவிப்பவர்களுக்கு கடன்கள் அடைபடும்.,திருமணம் தடையாய் இருந்தவர்களுக்கு திருமணம் அமையும் ...

 தொழிலை அபிவிருத்தி செய்யும் காலம் கனிந்திருப்பதால் இதை சரியாய் பயன்படுத்திக்கொள்ளுங்கள்..ஏழரை சனி பற்றி கவலை வேண்டாம்..ஒன்பதில் குரு இருந்தால் தெய்வ அருள் நிறைய கிடைக்கும் என சொல்வார்கள் உங்கள் ராசி அதிபதியே குருவாக இருப்பதால் அவர் பலம் அடைந்து ராசிக்கு பாக்யத்தில் அமர்வதால் தந்தை வழியில் நிறைய ஆதாயங்களும் கிடைக்கும் சிலருக்கு பூர்வீக சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் தீர்ந்து சொத்துக்கள் வந்து சேரும்..வீடு கட்டுவதில் இருந்த தடைகள் விலகி புதிய வீடு அமைந்து குடியேறுவீர்கள்..குழந்தை இல்லாதோர்க்கு குழந்தை பாக்யம் உண்டாகும்..சம்பள உய்ர்வு,பதவி உயர்வு கிடைக்காமல் தவித்து வந்தவர்களுக்கு இந்த வருட்ம் நிச்சயம் கிடைத்துவிடும்..

கணவன் மனைவியரிடையே ஒற்றுமை உண்டாகும்..முழு சுபகிரகமான குருபகவான் தனது சுபபார்வையான 5,7,9 ஆம் பார்வையால் ஜென்மராசி,தைரியஸ்தனம்,பூர்வபுண்ணிய ஸ்தானத்தை அதாவது 1,3,5ஆம் இடங்களைபார்வை செய்வதால் தன்னம்பிக்கை அதிகமாகும்...இளைய சகோதரால் ,மாமனாரால் ஆதாயம் உண்டாகும்..பகை விலகும்..மனைவியால் /கணவரால் பெருமை உண்டாகும்..குழந்தைகளுக்கான சுபகாரியங்களை செய்து முடிப்பீர்கள்..

சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள்,வருமானம் வந்து சேரும்..சிலருக்கு வெளியூர்,வெளிநாடு பயணம் சென்று வரும் பாக்யம் உண்டாகும்..விற்காத சொத்துக்கள் நிலம்,வீடு,மனை ஆகியவை கூடுதல் விலைக்கு விற்று நல்ல லாபம் சம்பாதித்து தரும்..

14.7.2015 முதல் 7.1.2016 வரை குரு வக்ரமாகிறார்..அப்போது உங்க ராசிக்கு குரு சுமாரான பலன்களைதான் கொடுப்பார்...கெட்ட காரியங்கள்,நெருங்கிய உறவினர்கள், வயதானவர்களின் இழப்பை உண்டாக்கும்...காரிய தடைகள்,முட்டுக்கட்டைகள் எந்த விசயத்திலும் அதிகம் காணப்படும்...பணம் எவ்வளவு வந்தாலும் தண்ணீராய் கரையும்...தொழில் சம்பந்தமாக நிறைய அலைச்சல் உண்டாக்கும்.....

பரிகாரம்;உங்கள் பிறந்த நட்சத்திரம் வரும் நாளில் திருச்செந்தூர் சென்று வரலாம்..

செல்வவளம் உண்டாக

சர்வ ஜன வசிய எந்திரம்,மூலிகை சாம்பிராணி,மகாலட்சுமி கலசம்  போன்ற பிரச்சினைகளை தீர்க்க கூடிய செல்வவளம் தரும் ஆன்மீக பொருட்களை உருவாக்கி விற்பனை செய்து வருகிறோம்... பல நண்பர்கள் இதனை நம்மிடம் பெற்றனர்.. அதன் மூலம் பல நன்மைகளை அடைந்தனர்..பல பிரச்சினைகள் தீர்ந்தது..  ஒரு கவசம் போல் பாதுகாப்பு தருகிறது என போனிலும், நேரிலும் பாராட்டிய நண்பர்களுக்கு நன்றி.மேலும் இதனை பெறவும்,விபரங்களை அறியவும், இங்கு க்ளிக் செய்யவும்..நன்றி..!!


குரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016 விருச்சிகம்


குரு பெயர்ச்சி ராசிபலன் 2015-2016விருச்சிகம்

வாக்கிய பஞ்சாங்கப்படி வரும் ஜூலை 5ஆம் தேதியன்று ஞாயிறு இரவு 11 மணியளவில் மகம் நட்சத்திரம் முதல் பாதத்துக்கு அதவது சிம்மம் ராசிக்கு குரு மாறுகிறார்..திருக்கணித பஞ்சாங்கப்படி 14.7.2015 செவ்வாய்க்கிழமை காலை 6.23க்கு குரு சிம்மம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார் ..ஆலங்குடி,திட்டை போன்ற குருபகவான் ஆலயங்களில் 5 அல்லது 6ஆம் தேதியன்றே வழிபாடு,யாகம் செய்வார்கள்.

விசாகம் 4அனுஷம் கேட்டை நட்சத்திர பாதங்களுடைய விருச்சிகம் ராசி நண்பர்களே..குரு  உங்கள்  ராசிக்கு பத்தாம் இட்த்துக்கு பெயர்ச்சியாகிறார்..பத்தாம் இடம் கர்ம ஸ்தானம் என்றும் உபஜெயன ஸ்தானம் என்றும் சொல்லப்படும் இடமாகும்...

அன்பு, அமைதி,கடவுள் பக்தியில் அதிக ஈடுபாடு கொண்ட உங்களுக்கு குரு ராசிக்கு மறையவில்லை என்றாலும், குரு பத்தில் சஞ்சரிக்கும்போது..பரமனே பிச்சை எடுத்தான் என பழைய ஜோதிட நூல்கள் சொல்கின்றன...தற்போதைய காலகட்ட்த்தில் தொழில் இழப்பு உண்டாகும்...பத்தில் குரு பதவியை பறிக்கும் என்பார்கள்.ஆனால் உங்கள் விருச்சிகம் ராசிக்கு குரு யோகாதிபதி..தனாதிபதி...அவர் கெடுக்க வாய்ப்பில்லை என்பதால் நீங்கள் தைரியமாக இருக்கலாம்..

ராசிக்கு ஜென்ம சனியும் நடப்பதால் இது சோதனையன காலம்தான் என்றாலும் திசாபுத்தி ஜாதகத்தில் மோசமாக இருந்தால் மட்டுமே இது ஓரளவு பொருந்தும்..மற்ற ராசியினருக்கு குரு பத்தில் வரும்போது பதவியை பறிக்கலாம்..தொழில் மாற்றம் உண்டாகலாம்..ஆனால் உங்கள் ராசிக்கு அப்படியே பலிக்காது..தொழிலில் சிறிய இடற்பாடுகள் வரலாம் அவ்வளவுதான்..
குரு உங்கள் ராசிக்கு 5,7,9 ஆம் பார்வைகளாக உங்களின் தனம் வீடு மனை,சுகம்,ருண,ரோக ,சத்ரு ஸ்தனத்தை பார்வை செய்வதால் இவையெல்லாம்பாதிக்கப்படாமல்இருக்கும்...உங்கள்,மனைவி,குழந்தைகள் வீடு,சொத்துக்கள் ரீதியாக எந்த பாதிப்பும் இல்லை...வருமானம் திருப்திகரமாக இருக்கும்...தொழில் புதிதாக தொடங்குவதோ அபிவிருத்தி செய்வதோ இருந்தால் சொந்த ஜாதகத்தை தகுந்த ஜோதிடரிடம் தீர ஆலோசனை செய்தபின் முடிவெடுக்கவும்...அதற்கு இது கோட்சார ரீதியாக உகந்த காலம் அல்ல...கடன் கொடுத்தாலும் திரும்பாது..என்பதையும் கவனத்தில் கொள்ளவும்..
14.7.2015 முதல் 7.1.2016 வரை உங்க ராசிக்கு குரு சுமாரான பலன்களைதான் கொடுப்பார்...கெட்ட காரியங்கள்,நெருங்கிய உறவினர்கள், வயதானவர்களின் இழப்பை உண்டாக்கும்...காரிய தடைகள்,முட்டுக்கட்டைகள் எந்த விசயத்திலும் அதிகம் காணப்படும்...பணம் எவ்வளவு வந்தாலும் தண்ணீராய் கரையும்...தொழில் சம்பந்தமாக நிறைய அலைச்சல் உண்டாக்கும் அதன் மூலம் வரும் பலன்களோ மிக குறைவாக இருக்கும்...சிலருக்கு இட மாறுதல்,ஊர் மாறுதல் உண்டாக்கும்..8.1.2016 முதல் 8.5.2016 வரையிலான காலகட்டம் குரு வக்ர காலம் என்பதால் அது சமயம் உங்களுக்கு குருவின் அருள் உண்டாகும்...வரவு அதிகமாகும், வீண் செலவு குறையும்..நினைத்தவை தடையின்றி முடியும்..நிம்மதியான காலகட்டம் இது என்றே சொல்லலாம்..

பத்தில் குரு பாடாய் படுத்தும் என சொல்வதற்கான காரணம்...குரு பத்தில் கேந்திராதிபத்திய தோசம் பெற்றுவிடுகிறார் அதனால் அவர் இயங்குவதற்கே வாய்ப்பில்லை..இதனால் இக்காலகட்ட்த்தில் புதிய கடன் பிரச்சினைகளோ பழைய கடன்களுக்கு வட்டி கட்ட முடியாமல் திணரும் நிலை உண்டாகலாம்..புதிய கடன் கள் வாங்க வேண்டிய நிர்பந்தம் உண்டாகி அதன்மூலம் புதிய பிரச்சினைகளில் சிக்கி கொள்ள நேரலாம்..எனவே க்வனமுடன் நிதானமுடன் செயல்படுவது அவசியம்..

திருமணம் ஆகாதவர்களுக்கு களத்திரகாரகன் புத்தியோ,சுக்கிர புத்தியோ, பாக்யாதிபதி புத்தியோ நடந்தால் திருமணம் ஆகிவிடும்..குருபலம் இல்லை என்றாலும் குடும்ப ஸ்தானத்தை குரு பார்ப்பதால் குடும்பம் அமைத்து கொடுத்துவிடுவார் குரு..அதனால் கவலை வேண்டாம்..

பரிகாரம்-வயதானவர்களுக்குமுதியோர் இல்லங்களில் இருப்போருக்கு உங்கள் பிறந்த நட்சத்திரம் வரும் நாளில் உணவு,உடை,அத்தியாவசிய பொருட்களை வாங்கி கொடுத்து மகிழ்ச்சிப்படுத்துங்கள்..குரு உங்களை காப்பார்

செல்வவளம் உண்டாக

சர்வ ஜன வசிய எந்திரம்,மூலிகை சாம்பிராணி,மகாலட்சுமி கலசம்  போன்ற பிரச்சினைகளை தீர்க்க கூடிய செல்வவளம் தரும் ஆன்மீக பொருட்களை உருவாக்கி விற்பனை செய்து வருகிறோம்... பல நண்பர்கள் இதனை நம்மிடம் பெற்றனர்.. அதன் மூலம் பல நன்மைகளை அடைந்தனர்..பல பிரச்சினைகள் தீர்ந்தது..  ஒரு கவசம் போல் பாதுகாப்பு தருகிறது என போனிலும், நேரிலும் பாராட்டிய நண்பர்களுக்கு நன்றி.மேலும் இதனை பெறவும்,விபரங்களை அறியவும், இங்கு க்ளிக் செய்யவும்..நன்றி..!!

வெள்ளி, 3 ஜூலை, 2015

குரு பெயர்ச்சி ராசிபலன் 2015-2016 துலாம்

குரு பெயர்ச்சி ராசிபலன் 2015-2016 துலாம்

வாக்கிய பஞ்சாங்கப்படி வரும் ஜூலை 5ஆம் தேதியன்று ஞாயிறு இரவு 11 மணியளவில் மகம் நட்சத்திரம் முதல் பாதத்துக்கு அதவது சிம்மம் ராசிக்கு குரு மாறுகிறார்..திருக்கணித பஞ்சாங்கப்படி 14.7.2015 செவ்வாய்க்கிழமை காலை 6.23க்கு குரு சிம்மம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார் ..ஆலங்குடி,திட்டை போன்ற குருபகவான் ஆலயங்களில் 5ஆம் தேதியன்றே வழிபாடு,யாகம் செய்வார்கள்...

இந்த குருபெயர்ச்சியால் மேசம்,கடகம்,துலாம்,தனுசு,கும்பம் ஆகிய ஐந்து ராசிக்காரர்களுக்கு மிகவும் யோகமாக அதிர்ஷ்டமாக இருக்கிறது...ரிசபம்,சிம்மம்,விருச்சிகம் ஆகிய மூன்று ராசியினருக்கு சுமாரான பலன்களும்,மிதுனம்,கன்னி,மகரம்,மீனம் ஆகிய நான்கு ராசிக்காரர்களுக்கு விசேஷமாக இல்லை என்பதும் குரு பெயர்ச்சியின் மேலோட்டமான பலனாகும்..

துலாம் ராசியினருக்கு இந்த குரு பெயர்ச்சி எப்படி பலன்கள் கொடுக்கும் என பார்ப்போம்..

சித்திரை 3,4ஆம் பதம்,சுவாதி,,விசாகம் 1,2,3 பதங்கள் வரையிலான துலாம் ராசி நண்பர்களே..கடந்த ஓராண்டாக பாத சனியாலும்,10 ஆம் இடத்து குருவாலும் படு சிரமங்களை அனுபவித்து வந்திருப்பீர்கள்..அலைச்சல்,காரிய தடை,தொழில் இட மாறுதல்,அதிக செலவுகள்,கடன் தொல்லை என கவலையும்,பயமுமாக கடந்த வருடம் போனது... சிலருக்கு குடும்பத்தில் பிரச்சினை,கணவன் ,மனைவி ஒற்றுமையில் சிக்கல் என இருந்திருக்கும் குழந்தைகளால் மருத்துவ செலவுகளும்,உறவினர்கள் பகை என்றும் அடுக்கடுக்கான பல சோதனைகளை சந்தித்திருப்பீர்கள்..

இப்போது மாற இருக்கும் குரு பகவான் உங்கள் ராசிக்கு 11ஆம் இடத்தில் லாப ஸ்தானத்தில் அமர்வதால் இதுவரை இருந்து வந்து விரய செலவினங்கள் கட்டுப்படுத்தப்பட்டு சேமிப்பு அதிகரிக்கும் கையில பணமே தங்கல...என்ற கவலை தீரும்...பல வழிகளிலும் வருமானம் வந்து சேரும் தொழில் சுறுசுறுப்படையும்... தொட்டதெல்லாம் தடங்கல் இன்றி முடியும்.

முதல் ஆறு மாத காலங்கள் உங்களுக்கு என் காட்டுல மழை பெய்யுது என சந்தோச கூச்சல் போடும் அளவுக்கு நல்ல நேரம் ஸ்டார்ட் ஆகுதுங்க...இதுவரை பகையாக இருந்த சொந்தங்கள் நெருங்கி வருவர்...உத்தியோகத்தில் இருப்பவருக்கு பதவி உயர்வு கிடைக்கும் வீட்டில் ஆடம்பர பொருட்கள்,தங்கம் சேரும்...குழந்தைகள் கல்வியில் நல்ல மதிப்பெண் பெறுவர் திருமணம் ஆகாத ஆண்,பெண்களுக்கு திருமணம் விரும்பியபடி கூடி வரும்...சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபம் அமோகமாக இருக்கும்..நீண்ட நாள் எதிர்பார்த்த காரியங்கள் சட்டுன்னு உங்களுக்கு சாதகமாக முடியும்,கோர்ட் வழக்குகள் இருந்தால் அது உங்களுக்கு சாதகமாக முடியும்...

உடல் ஆரோக்கியம் சரியில்லாமல் மருத்துவ செலவுகள் செய்து வந்தவர்களுக்கு இனி நல்ல ஆரோக்கியம் உண்டாகும் குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள் அது போல உங்க ராசிக்கு குரு ராசிக்கு மூன்று,ஐந்து,ஏழாம் இடத்தை பார்வை செய்வதால் இளைய சகோதரர்களால் ஆதாயம்,வீடு,வாகனம் வாங்கும் யோகம்,கணவன்,மனைவியால் யோகம்,ஆதாயம்,வருமானம் உண்டாகுதல்,தொழில் கூட்டாளியால் லாபம் உண்டாகுதல்,தொழில் அபிவிருத்தி ,புதிய தொழில் ஆரம்பித்தல் போன்ற நல்லவை எல்லாம் சுபமாக நடக்கப்போகிறது இறையருள் உங்களுக்கு துணையாக இருக்கும்..


ஜாதகத்தில் நல்ல திசாபுத்தி நடந்தால் இன்னும் பல யோகங்கள் உண்டாகும்..வீடு கட்டுதல்,வாங்குதல் நடக்கும்.. 8.1.2016 முதல் 8.5.2016 வரையிலன காலகட்டம் குரு வக்கிரம் என்பதால் அப்போது உங்களுக்கு பத்தாமிட குரு செயல்படுவார் ..அது உங்களுக்குசுமாரான காலம்...இக்காலத்தில் விரய செலவுகள்,கெட்ட செலவுகள் உண்டாகும்...வாகனங்களில் செல்கையில் கவனமாக செயல்படவும்...

முதல் 6மாத காலங்கள்  இந்த குரு பெயர்ச்சி மிக யோகமாக செயல்படும்  செவ்வாய் அல்லது வியாழக்கிழமையில் முருகன் கோயிலில் நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடவும் நல்லதே நடக்கட்டும்..


செல்வவளம் உண்டாக

சர்வ ஜன வசிய எந்திரம்,மூலிகை சாம்பிராணி,மகாலட்சுமி கலசம்  போன்ற பிரச்சினைகளை தீர்க்க கூடிய செல்வவளம் தரும் ஆன்மீக பொருட்களை உருவாக்கி விற்பனை செய்து வருகிறோம்... பல நண்பர்கள் இதனை நம்மிடம் பெற்றனர்.. அதன் மூலம் பல நன்மைகளை அடைந்தனர்..பல பிரச்சினைகள் தீர்ந்தது..  ஒரு கவசம் போல் பாதுகாப்பு தருகிறது என போனிலும், நேரிலும் பாராட்டிய நண்பர்களுக்கு நன்றி.மேலும் இதனை பெறவும்,விபரங்களை அறியவும், இங்கு க்ளிக் செய்யவும்..நன்றி..!!