திங்கள், 30 நவம்பர், 2015

ஓரையை பயன்படுத்தி வெற்றி பெறும் சூட்சுமம்

தமிழர் ஒரு நாளினை தற்காலத்தில் உள்ளதைப் போல நொடி, நிமிடம், மணிநேரம் என்று அளக்காமல் தற்பரை, வினாடி, நாழிகை, ஓரை, பொழுது என அளந்தனர்.


ஒரு நாளின் பொழுதுகளை ஆறு சிறு பொழுதுகளாகவும், ஒவ்வொரு சிறும்பொழுதும் 4 ஓரைகளாகவும் பகுத்தனர். மொத்தம் ஒரு நாள் 24 ஒரைகளைக் கொண்டிருக்கும். சூரியன் உதிக்கும் நேரத்திலிருந்து(காலை) ஒரு நாள் தொடங்குகிறது. அந்நேரத்திலிருந்து தான், அந்நாளின் ஓரையும் கணக்கிடப்படுகிறது. ஒரு நாளின் தொடக்க ஓரை எவ்வகை ஓரையாக வருகிறதோ அந்நாள் அவ்வோரையின் பெயரில் அழைக்கப்படுகிறது. உதாரணமாக சனி ஓரை முதலில் தொடங்கினால் அன்று சனிக்கிழமை.இவ்வாறுதான் கிழமை முறை வந்திருக்க வேண்டும்.

அதன் பின் ஒவ்வொரு மணி நேரமும் மேலே கூறப்பட்டுள்ள வரிசைப்படி ஓரை கணக்கிடப்படும். உதாரணமாக, ஞாயிற்றுக்கிழமை காலை முதல் ஒரு மணி நேரம் (6-7 மணி) சூரியனின் ஓரை. இதையடுத்து 7-8 மணி வரை சுக்கிரன்(வெள்ளி) ஓரை, 8-9 மணி வரை புதன் ஓரை, 9-10 வரை சந்திரன் ஓரை, 10-11 வரை சனி ஓரை, 11-12 மணி வரை குரு(வியாழன்) ஓரை, 12-1 மணி வரை செவ்வாய் ஓரை. இதையடுத்து மீண்டும் சூரியன் ஓரை துவங்கும். இதேபோல் செவ்வாய்க்கிழமை என்றால் அன்று காலை 6 முதல் 7 மணி வரை செவ்வாய் ஒரை, புதன்கிழமை என்றால் காலை 6-7 மணி வரை புதன் ஓரை. பொதுவாக காலை 6 மணி என்பதனை சராசரி சூரிய உதய நேரமாகக் கொண்டு ஓரைகள் கணக்கிடப்படுகின்றன..

ஒரு நாளில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் அடுத்து என்ன நடக்கும் என கணிதம் செய்திட இந்த ஓரைகள் பயன்படுகின்றன..ஒரு நல்ல காரியம் செய்ய அசுப கிரக ஆதிக்கம் பெற்ற ஓரைகளை தவிர்த்து ,சுப கிரக ஓரைகளில் அக்காரியத்தை நம் முன்னோர் செய்து வந்தனர்..பொண்ணு பார்க்க போனால்கூட சுக்கிர ஓரையில் போனால் நல்லது நடக்கும்...

ஒரு காரியத்தை செய்ய நினைக்கும்போது,அந்த நேரம் ராகு காலமா ,எமகண்டமா,குளிகை நேரமா..அன்று என்ன கிழமை ,திதி என்ன,நட்சத்திரம் என்ன ,என ஜோதிடரிடம் ஆலோசிக்க வேண்டும்..ஆனால் அவசரத்துக்கு , நல்ல ஓரையா இருந்தால் போதும் என முடிவு செய்து விடுவர்.

எந்த காரியத்துக்கு என்ன ஓரை என கணக்கு இருக்கிறது....சனி,செவ்வாய்,சூரியன் ஓரைகள் அசுப ஓரையாக இருந்தாலும் முற்றிலும் தவிர்ப்பதில்லை...அரசாங்க காரியம் நடக்க வேண்டும் எனில் சூரிய ஓரையில் முயற்சிக்கலாம்...நெருப்பு,கோர்ட் ,வழக்கு சார்ந்த பிரச்சினைகள் ,எதிரி சார்ந்த பிரச்சினைகள் என்றால் செவ்வாய் ஓரையில் செய்யலாம்..

சுபகாரியம் செய்யும்போது முக்கியமான விசயம் ஒருவரிடம் பேச முயற்சிக்கும்போதும் ,இப்போது ராகு காலமா,எமகண்ட நேரமா,சுப கிரகத்தின் ஓரையா எனா ஒருமுறை காலண்டரில் கவனிப்பது நல்லது.சுக்கிரன்,புதன்,குரு இவற்றின் ஓரைகள் எல்லா சுப காரியங்களுக்கும் சிறப்பு.
சிலர் மிதுன லக்னத்துக்கு யோகாதிபதி ,லக்னாதிபதி புதன் எனில் புதன் ஓரையையே பயன்படுத்தி வெற்றி பெறுவர்.இவ்வாறு நுணுக்கமாக எல்லோராலும் பார்க்க முடியாது.அவர்கள் சுக்கிரன்,புதன்,குரு ஓரையை கவனித்தாலே போதுமானது.

செவ்வாய், 24 நவம்பர், 2015

பாவம் போக்கும் திருவண்ணாமலை தீபம்;உலகை அச்சுறுத்தும் தீவிரவாதம்,தமிழகத்தை அச்சுறுத்தும் மழை


பாவத்தை போக்கும்,திருவண்ணாமலை தீபம் ;tiruvannamalai deepam

நாளை  திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்படுகிறது..தீப தரிசனம் பாவம் போக்கும்...!! வாய்ப்பு இருப்பவர்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்..
உலகில் உள்ள மனிதர்களில் நாம் மட்டுமே கடவுளுக்கு நெருங்கியவர்களாக இருக்கிறோம்...

திருவண்ணாமலை எனும் புனித தெய்வீக ஸ்தலத்தின் அருகில் இருக்கிறோம்..அமெரிக்கா,இங்கிலாந்து பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கில் செலவு செய்து வெளிநாட்டவர் வரும்போது சில நூறு ரூபாய் செலவில் நாம் தரிசிப்பது தவறில்லை..

நோய்களை நீக்கும்...சூரிய,செவ்வாய் சக்திகளை பலப்படுத்தி ,உங்கள் துன்பங்களை தீர்க்கும்...கடன் தீர்க்கும் ,நோய் தீர்க்கும்..பாவம் தீர்க்கும் அண்ணாமலையார் தரிசனம் பெறுவோம்..!!
  ----------------------------------

 டிசம்பர் 1 வரை சுக்கிரன் பலவீனமாக இருப்பதால் அதுவரை மழையால் பாதிப்பு இருக்கும் என போன வாரம் பேஸ்புக்கில் எழுதி இருந்தேன்.
காலப்புருஷ லக்னத்துக்கு 6,8 அதிபதிகள் பரிவர்த்தனை ஆகியிருக்கிறது.6,8 என்றாலே போர்,வன்முறை,வன்கொடுமைகள்,தீவிபத்து இவற்றை குறிக்கும்.காலப்புருஷ லக்னம் எனில் பொதுவாக உலகை குறிப்பதாகும். இதனால் வரும் 26 ஆம் தேதியில் உலகில் சில தீவிரவாத செயல்கள் மீண்டும் அதிர்ச்சியை உண்டாக்கலாம் ..தீவிரவாதத்துக்கு எதிரான போரும் உச்சக்கட்டத்தை எட்டும் .
அன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழையும் கனமாக இருக்கும் என்றே கருதுகிறேன்..
 ----------------------------------------

 இன்று மதியத்துக்கு மேல் பரணி வருகிறது.சுக்கிரன் நட்சத்திரம் என்பதால் மழை நீரால் இன்னும் அச்சுறுத்தல் உண்டாகும்.பரணி மழை தரணி எங்கும் உண்டு என பழமொழி உண்டு.

.நாளை மதியம் கிருத்திகை வருகிறது.இது சூரியன் நட்சத்திரம்.அணையாத ஜோதியை  குறிக்கும். முதல் ராசியான மேசம் ராசிக்கு விருச்சிகம் ராசி எட்டு.அதில் சூரியன் மறைந்துவிடுவதால்,நீர் ராசியான விருச்சிகத்தில் சூரியன் மூழ்கிவிடுவதால்,சூரியனை அடையாளப்படுத்தும் விதமாக பெரும் தீபம் ஏற்றப்படுகிறது.விடு தோறும் தீபம் ஏற்றி ஜோதி மறையாது என உனர்த்துகிறோம்.பெரும் தீவிபத்துக்கள்,பெரும் தொற்று நோய்களை தவிர்க்கவும் அன்று திருவண்ணாமலை தீபம் ஏற்றப்படுகிறது.

சூரியன் நட்சத்திரம் வரும் அந்த நேரத்தில்,சூரியனுடன்,சனி இருப்பதால் பல நாடுகளின் அரசாங்களுக்கு பெரும் சவாலாக இருக்கும். உலகின் சில பகுதிகளில் தீவிரவாதிகளால் நாசவேலைகள் நடக்கும்.பெரும் அச்சுருத்தல் தரும் சம்பவங்கள் நடக்கலாம்.அடுத்து இன்னும் 2 நாள் கழித்து செவ்வாய் நட்சத்திரம் வரும் மிருகசிரீடம் நாளிலும் பிரச்சினைதான்.
-------------------------------------
சூரியன்,சனி,ராகு மூவரும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போதுதான் உலகில் தீவிரவாத அச்சுருத்தல்கள் அதிகம் உண்டாகும்....தீவிரவாதிகளுக்கு வெறி உணர்வும் அதிகம் உண்டாகும்.வன்முறை உண்டாக்குபவர்கள்,அதிக வெறி உணர்வு அதிகம் கொண்டவர்கள் ஜாதகத்தில் செவ்வாய்,ராகு இணைந்து இருக்கும்.
கார்த்திகை மாதம் பிறந்தது முதல் சனி ,சூரியன் இணைந்துவிட்டது.எந்த நாடாக இருப்பினும் ,மாநிலமாக இருப்பினும் தலைநகரங்களில் வசிப்போர் எச்சரிக்கையுடன்,பாதுகாப்புடன் இருங்கள்.கூட்டம் அதிகம் கூடும் பொது இடங்களுக்கு செல்ல வேண்டாம்.நீண்ட தூர பயணம் தவிர்த்துவிடவும்,பஸ்,ரயில் பயணங்கள் தவிர்க்கவும்.


வெள்ளி, 6 நவம்பர், 2015

குறைந்த செலவில் கணபதி ஹோமம் செய்த பலன்கள் பெறும் வழி? பரிகாரம்

தெய்வீக மூலிகை சாம்பிராணி மகிமை;
ஏற்கனவே வாங்கியவர்களுக்கு குறைந்த விலையில்;

புகை பட்டால் பகை விலகும்....வீட்டில் ,தொழில் செய்யுமிடத்தில் செவ்வாய்,வெள்ளிதோறும் நமது தயாரிப்பான தெய்வீக நவகிரக சாம்பிராணி புகை போடுங்கள் ..பிரச்சினைகள் தீர,கடன் தீர,கண் திருஷ்டி தீர,செல்வவளம் உண்டாக இதை உபயோகிக்கலாம்...முக்கியமான தெய்வீக மூலிகைகளை அரைத்து,அதனுடன்வெண்கடுகு,சாம்பிராணி,குங்கில்யம்,சேர்த்திருக்கிறோம்.
வீட்டில் கணபதி ஹோமம் வளர்த்தால் என்ன பலன்கள் கிடைக்குமோ அதன் பலன்கள் இதில் நிச்சயம் கிடைக்கும்...

முதன்முறையாக இதை தயாரித்தபோது மூலிகை பொருட்கள் அதிக தாக்கத்தால் ,புகை குறைவாக வருகிறது என சொன்னவர்களுக்காக,சதுரகிரி மலை சென்று வாங்கி வந்த ஒரிஜினல் முதல் தர சாம்பிராணி இதனுடன் முக்கால் பாகம் கலந்திருப்பதால் நறுமணம்,புகை அதிகளவில் வரும்படி தயாரித்திருக்கிறோம்....

கல்வி,தொழில் தடங்கல் நிவர்த்தியாக மன உளைச்சல் தீர குடும்பத்தில் கஷ்டம் தீர முன்னோர்கள் காலம் முதல் நாம் விட்டில் கணபதி ஹோமம் வளர்ப்பது வழக்கம்..அதில் சேர்க்கப்படும் மூலிகைகள் அனைத்தும் ,இதில் சாம்பிராணியுடன் கலந்திருப்பதால் அந்த பலன்கள் ,இந்த நமது லட்சுமி குபேரர் தெய்வீக மூலிகை சாம்பிராணி புகை போடுவதால் கிடைக்கும்...செவ்வாய்,வெள்ளி தோறும் இதை வீடு மற்றும் தொழில் செய்யுமிடத்தில் ,நெருப்பில் போட்டு புகை உண்டாக்கினால் போதும்.

நெருப்பு சுலபமாக உண்டாக்க கரிக்கட்டை தேட வேண்டாம்,தேங்காய் மூடியை கேஸ் ஸ்டவ்வில் காட்டி எரிய விடவும்.அந்த தணலை சாம்பிராணி கரண்டியில் போட்டு,அதில் இந்த மூலிகை சாம்பிராணி இரண்டு ஸ்பூன் போட்டால் போதுமானது..


சாம்பிராணி புகை படும் இடத்தில் நோய் கிருமிகள் அண்டாது.

நோய்கள் பரவும் இந்த மழைக்காலத்தில் மூலிகை சாம்பிராணி அவசியம் தேவை.செல்வவளம் உண்டாக,நோய் தீர இதை உபயோகித்து பாருங்கள்.ஏற்கனவே வாங்கியோருக்கு சலுகை விலையில் தருகிறோம்.
இந்த வாரம் தயாரிக்கப்பட்ட புதிய தெய்வீக மூலிகை சாம்பிராணி தேவைப்படுவோர்
செல்லில் தொடர்பு கொள்ளவும் 9443499003 
மெயில்;sathishastro77@gmail.com

திங்கள், 2 நவம்பர், 2015

தொழிலதிபர் ஆகும் யோகம் யாருக்கு..?#ஜோதிட சூட்சுமம்

சொந்த தொழில் செய்ய வேண்டுமெனில் லக்னத்துக்கு தொழில் ஸ்தானமாகிய 10 ஆம் இடத்து அதிபதி,லக்னத்துக்கு வரவு செலவு ஸ்தானமாகிய 2ஆம் இடம்,லக்னத்திற்கு சேமிப்பு ஸ்தானமாகிய 11 ஆம் இட அதிபதி இவர்கள் லக்னத்திற்கு 3,6,8,12ல் மறையாமல் பாம்பு கிரகங்களுடன் சேராமல் இருக்க வேண்டும்.அப்படி மறைந்திருந்தால் முதலீடு போட்ட பணம் எல்லாம் கடலில் கரைத்த பெருங்காயம்தான்..கூட்டு தொழில் செய்ய வேண்டும் எனில் லக்னத்துக்கு 7ஆம் அதிபதி 6,8 ,12ல் மறையாமலிருக்க வேண்டும் இல்லையெனில் நம் பார்ட்னர் நமக்கு பட்டை நாமம் சார்த்திவிடுவார்....

மிதுன லக்னமாக இருப்பின் அவருக்கு குரு பத்தாம் அதிபதியாக வருவார்...குரு செவ்வாய்,சனியுடன் சேராமல் இருப்பது நல்லது.செவ்வாய் 6ஆம் அதிபதி...தொழில் நிறைய பிரச்சினைகளை சந்திக்கும்.தொழில் மூலம் கடன் உண்டாகும்.குரு சனியுடன் சேர்ந்தால் அவர் எட்டுக்கும் ஒன்பதுக்கும் அதிபதி.அவர் பாக்யாதிபதி ஆச்சே என்று நினைக்கலாம்..9,10 ஆம் அதிபதி சேர்ந்தால் தரமகர்மாதிபதி யோகம் ஆச்சே என நினைக்கலாம்..ஆனால் சனி எட்டுக்கும் அதிபதி ஆச்சே அதனால் முதலில் நல்ல முன்னேற்றம் கொடுத்து நல்ல உயரத்துக்கு கொண்டு போய் அப்புறம் குப்புற தள்ளுவார்.குரு சுக்கிரனுடன் சேராமல் இருக்க வேண்டும்.சுக்கிரன் 5ஆம் அதிபதி பூர்வபுண்ணியாதிபதி ஆச்சே அவருமா அப்படி பண்ணுவார்..ஆம் .அவர் விரயதிபதியும் ஆச்சே தொழில் மூலம் பல வேற்றிகளை கொடுத்து அகலக்கால் வைக்க வைத்து ,பெரும் கடனாளி ஆக்குவார்.

குரு கேதுவுடன் சேர்ந்தால் ,தொழில் அமையாமல் சிரமப்படுவார்கள்..ராகுவுடன் சேர்ந்தால் மோசமான ஆட்களால் நஷ்டத்தை சந்திப்பர்.குரு 1,4,7,10,11ல் இருந்தால் நன்மையை செய்யும்.கேந்திராதிபத்திய தோசத்தை குரு கொடுப்பார் என்றால் தொழிலில் பிரச்சினை இல்லை.அடுத்தது வரவு செலவுக்கு அதிபதி மிதுன லக்னத்துக்கு யார் என பார்த்தால் சந்திரன்.அவர்3, 6,8,12ல் மறையாமல் இருக்க வேண்டும். 6ல் இருந்தால் தொழில் மூலம் வந்த பணம் வட்டி கட்டவே சரியாக இருக்கும்.12ல் இருந்தால் ஓட்டைப்பானைக்குள் தண்ணீர் ஊற்றியது போல ஆகிவிடும்.8ல் இருந்தால் தொடர்ச்சியாக வீண் செலவுகளாலும் தண்டச்செலவுகளாலும் நஷ்டத்தை சந்திக்க நேரும்.

11 ஆம் திபதியாக செவ்வாய்தான் வருகிறார் அவரே கடனை நோயை உண்டாக்கும் 6ஆம் அதிபதியாக இருக்கிறார் என்பதால் மிதுன லக்னத்தாருக்கு சேமிப்பு என்பது குதிரைக்கொம்புதான்..மனைவியே எல்லா வரவு செலவையும் பார்த்துக்கொண்டால் நல்லது.11ஆம் அதிபதி செவ்வாய் கெட்டவர் என்பதால் மூத்தவராக இவரே வீட்டில் இருப்பார்.இவருக்கு மூத்தவர் இருந்தால் பகை ஆவார்.பணம் கொஞ்சம் இருந்தால் அதை எப்படி செலவழிப்பது என்பதில்தான் கவனம் இருக்கும்.11 ஆம் அதிபதிதான் சேமிப்பை குறிக்கும்.2க்கு எட்டாம் அதிபதி வலுத்தால் வரவு செலவு நிரந்தரமாக பலன் தரும்.

10க்கு எட்டாம் அதிபதியாக பாக்யஸ்தானம் வலுத்தால்தன் தொழில் நிரந்தரமாக இருக்கும்...பாக்யாதிபதி மிதுன லக்னத்துக்கு சனியாக வருவதால் அவர் 6,8ல் மறையாமல் இருந்தால் தொழில் நிரந்தரமாக இருக்கும் இல்லையெனில் தொழில் மாறிக்கொண்டே இருக்கும்.

10 ஆம் இடத்தில் எந்த கிரகமும் இல்லையெனில் 10ஆம் இடத்தை எந்த கிரகமும் பார்க்கவில்லையெனில் சம்பளத்துக்கு வேலைக்கு போவதே நல்லது.சனி வக்ரமாக இருந்தால் சனி கெட்டிருந்தால் வெளிநாடு சென்று விடுவதே சிறப்பு.

தொழிலில் முன்னேற்றம் அடைய நடப்பு திசையும் முக்கிய பங்கு வகிக்கிறது.ஜாதகத்தில் என்ன திசை நடக்கிறதோ,அந்ததிசை அதிபதி லக்னத்தில் எத்தனாம் இடத்தில் இருக்கிறாரோ அதை பொறுத்து வாழ்வில் மாற்றமும், முன்னேற்றமும் உண்டாகும்.லக்னத்திற்கு அவர் நல்லவராகவும் இருக்க வேண்டும்.3,6,8,12ல் மறையாதவராகவும் இருக்க வேண்டும்...அப்போதுதன் அவர் ஊரும்,உறவும் வியக்கும்படி முன்னேறுகிறார்