ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016

ஆசிர்வாதம் மூலம் அனைத்து செல்வங்களும் பெறும் வழி

பெரியோர் காலில் விழுந்து ஆசி பெறுங்கள் உங்கள் சக்தியை அதிகப்படுத்திக்கொள்ளுங்கள்

ஆசிர்வாதம் எனும் மிகப்பெரிய சக்தி நமக்கு பெரும் பலத்தை கொடுக்கிறது..அசிர்வாதம் பெறுவது மட்டுமல்ல..ஆசிர்வாதம் செய்வதும் உங்களுக்கு சக்தியை கொடுக்கும்..நல்ல வார்த்தைகளை தேர்ந்தெடுத்து சொல்வதில்தான் விசயம் இருக்கிறது 

108 வயது பெரியவரிடம் ஆசி வாங்னேன்..தீர்க்காயுசா இருப்பா என்றார் எவ்வளவு நாளா ஐயா இந்த வார்த்தைகளை பயன்படுத்தி ஆசி கொடுக்குறீங்க என்றேன்..அது ஒரு 60 வருசமா அப்படித்தான் ஆசி கொடுக்கிறேன் என்றார்..அவரது தீர்க்காயுளுக்கும் இதுவும் ஒரு காரணமாக இருக்கும்...

சிலர் காலில் விழுந்தால் இருக்கட்டும் எந்திரிங்க என்பார்கள்..அய்யோ என் கால்ல விழுந்துட்டு என பதறுவர்.இதெல்லாம் தவறு.நம்மை விட வயதானவர் என்றாலும் ஆசி கொடுக்காமல் புறக்கணித்தல் பாவம் என்கிறது சாஸ்திரம்.

புது மணமக்கள் காலில் விழுந்தால் தீர்க்காயுஸ்மான் பவ என ஆணுக்கும் ,தீர்க்க சுமங்கலிமான் பவ என பெண்ணுக்கும் ஆசி கொடுக்கலாம்...

வயதானவர்கள் சகல தோசங்களும் இன்றோடு நீங்கப்பெற்று சகல செல்வங்களும் பெற்று ,குடும்ப ஒற்றுமையுடன் ,நல்ல தொழில் வளத்துடன்,நீண்ட ஆயுளுடன் வாழுங்க வாழ்க வளமுடன் என்று ஆசிர்வாதிக்கலாம் ...தமிழில் அழகான வார்த்தைகளுக்கு பஞ்சமில்லை உங்களுக்கு என்னென்ன தேவையோ அதை பிறருக்கு ஆசியாக கொடுங்கள் அவர்களுக்கும் அவை கிடைக்கும் உங்களுக்கும் அவை கிடைக்கும்....

வாழ்க வளமுடன் என வாழ்த்துவதால் பிரபஞ்ச சக்தி அந்த வார்த்தைகளை உங்களுக்கும் உங்களை சார்ந்தோரையும் வளமாக வாழ வைக்கிறது என்பது பலரது அனுபவ உண்மை..மந்திரம்,உச்சாடனம்,அபிசேகம்,ஆராதனை எல்லாமே கடவுளுக்கு மட்டுமல்ல உங்களுக்கும் சேர்த்துதான் என இந்துமதம் மறைபொருளாக உணர்த்தி வருகிறது..
 நாம் ஏன் காலில் விழுகிறோம் என்பதற்கு அறிவியல் ரீதியான காரணம் உண்டு. ஆய்வின் படி மனிதனின் காலில்தான் சக்தி ஓட்டம் அதிகமாக இருக்கிறது. ஒரு ஞானியையோ அல்லது மகானையோ பார்க்கும் போது அவர்களின் காலைத் தொட்டு ஆசி பெறும் போது அவர்களின் சக்தி நமக்கும் கிடைக்கிறது. காலை தொடுதலின் மூலம் இந்த சக்தி பரிமாற்றம் நடக்கிறது
 கோயிலுக்குச் சென்றால் தரையில் விழுந்து கடவுளை வணங்குவதற்கும் காரணம் உண்டு. நீங்கள் தரையில் விழுந்து வணங்குவதை சாஷ்டாங்க நமஸ்காரம் என்பார்கள். கோயிலில் இருக்கும் சக்தி பெற்றுக் கொள்ளும் தன்மையானது அனைவரின் உடலுக்கும் இருப்பதில்லை. சக்தியை இயல்பாக பெற்றுக் கொள்ளும் தன்மை இல்லாத பட்சத்தில் உங்கள் உடலுக்கும் கோயிலில் இருக்கும் சக்திக்கும் ஒரு தொடர்பை உருவாக்க வேண்டும் என்றால் கோயிலின் தரையில் அமர வேண்டும் அல்லது இந்த சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்

சொல்லும் வார்த்தைகளில் சக்தி இருக்கிறது..மனப்பூர்வமாக ஒருவர் ஆசி வழங்கும்போது அதன் சக்தி அளவிட முடியாதது...பல பாவங்களையும்,தோசங்களையும் போக்குகிறது பெரியோர் காலில் விழுந்து ஆசி பெறுங்கள் உங்கள் சக்தியை அதிகப்படுத்திக்கொள்ளுங்கள்..

ஜோதிடம்,ராசிபலன் ,சாஸ்திரம்,மத நம்பிக்கைகள் இவற்றை கடைபிடிப்போர் கூட பலர் அடுத்தவருக்கு மரியாதை கொடுப்பதில் தயக்கம் காட்டுவர்.பெரியோர்,மகான்கள்,சதனை புரிந்தோர்,மகான்களை சந்தித்தோர்,நம் வீட்டுக்கு வரும் மூத்த தம்பதிகள் இவர்களிடம் நாம் ஆசி பெறுவதால் அவர்களின் நல்ல எண்ணங்கள் நம்மை பலப்படுத்தும்.

புதன், 24 பிப்ரவரி, 2016

எளிமையான நவகிரக தோச பரிகாரங்கள்

பிரச்சினைகளை தீர்க்கும்  நவகிரக பரிகாரங்கள்!
 
     நமது வாழ்க்கைப் பாதை நன்கு அமையவும், நம்மை நல்ல முறையில் வழிநடத்திச் செல்லவும் நவகிரக நாயகர்கள் உதவுகின்றனர். ஒவ்வொரு கிரகத்துக்கும் தொடர்புடையவராக ஒவ்வொரு கடவுள் உள்ளார். சூரியனுக்கு சிவனும், சந்திரனுக்கு பார்வதியும், செவ்வாய்க்கு முருகனும், புதனுக்கு வி~;ணுவும், குருவுக்கு தட்சிணாமூர்த்தியும், சுக்கிரனுக்கு லட்சுமியும், சனிக்கு சனீஸ்வரரும், ராகுவுக்கு துர்க்கையும், கேதுவுக்கு விநாயகரும் வழிபடு தெய்வங்களாகின்றனர். இதுபோலவே நவகிரக பூஜை, மிருத்யுஞ்சய ஜெபம், லட்சுமி பூஜை உள்பட பல்வேறு யாகங்களும் நடத்தப்படுகின்றன.

    
இவை தவிர, நவகிரக தோசம் போக்கும் சில பொதுவான வழிமுறைகளும் உள்ளன. இவ்வழிமுறைகள் எளிதானதும் எல்லாராலும் கடைப்பிடிக்கக் கூடியதுமாகும். அவற்றை இங்கு காண்போம்.

     *காய்ச்சாத பசும்பாலை ஏதேனும் ஒரு கோவிலுக்கு 15 நாட்கள் கொடுத்தல்: வெள்ளி டம்ளர்களை நீர் அருந்தப் பயன்படுத்துதல் சுக்கிரனை பலப்படுத்தும்.
     
*நீலம் மற்றும் பச்சை ஆடைகளை தவிர்த்தல் சனி, புதன் பாதிப்பிலிருந்து விலக்கும்.
     
*தினமும் நெற்றியில் மஞ்சள் திலகம் அணிதல் குருவருள் கிடைக்க வழி செய்யும்.
     
*கண் தெரியாதவர்களுக்கு இனிப்புகள் வழங்குதல் சனியை ப்ரீத்தி அடையச் செய்யும்.
    
*கைப்பிடி அரிசியை நதி அல்லது ஏரியில் போடவும். இது சந்திரனின் பலத்தை கூட்டும்.
     
*தோலில் செய்த மணிபர்சில் பணம் வைக்க வேண்டாம். சனி கெட்டிருப்பவர்களின் கெடு பலனைக் குறைக்கும்;.
    
* வாகனத்தை எப்போதும் நல்ல நிலையில் சீராக வைத்திருக்க வேண்டும். சனி பலம் நன்றாக அமையும். (ஜாதகத்தில் சனி கெட்டு, அவரது தசை நடந்தால் வாகனத்தில் அதிக பராமரிப்பு செலவு ஏற்படும் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.)
     
*வீட்டில் சூரியனுக்குரிய யாகங்கள் செய்வதும் தினமும் சூரியனுக்கு நீர் படைப்பதும் சூரிய பலத்தை அதிகரிக்கச் செய்யும்.
     
*தினமும் சரஸ்வதி மந்திரம் ஜெபிப்பது புதன் பலத்தைக் கூட்டும்: பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்தும்.
     
*வியாழக்கிழமைகளில் கோவில்களில் லட்டு வழங்குவது குரு பலத்தை அதிகரிக்கும். அதுபோல் வியாழக்கிழமைகளில் பூண்டு, வெங்காயம் தவிர்ப்பது நல்லது.
     
*பசுவின் கோமியத்தை வீட்டில் அவ்வப்போது தெளித்தால், வீட்டிலுள்ள பீடைகள் அகலும்.
    
 *16 நாட்கள் கோவிலில் கொள்ளு தானம் செய்வது கேது ப்ரீத்திக்கு உகந்தது.
     
*பையில் சிறிய வெள்ளிக்கட்டி வைத்திருப்பதும்; கையில் வெள்ளி வளையம் அணிவதும் சுக்கிரனுக்கு நல்லது.
     
*அனுமனை அனுதினமும் வணங்கினால் சனியினால் ஏற்படும் சங்கடங்கள் அகலும்.
     
*சர்க்கரை, கடலைப் பருப்பு, நெய், அரிசி ஆகியவற்றை மாதப்பிறப்பன்று தானமளித்தால், வீட்டில் அன்னபூரணியின் கடாட்சம் கிட்டும்.
     
*இரவில் ஒரு கைப்பிடியளவு பச்சைப் பயிறை நீரிலிட்டு, மறுநாள் அதனை புறாக்களுக்கு உணவாக அளித்தால் புதனால் ஏற்படும் தோசம் நீங்கும்.
     
*வெள்ளிக்கிழமைகளில் பசுக்களுக்கு புல் அளித்தால் சுக்கிரனின் அனுக்கிரகம் கிடைக்கும்.
     
*இரவில் படுக்கையில், தலை அருகே கீரை இலைகள் கொஞ்சத்தை வைத்திருந்து, அதனை மறுநாள் ஒரு பசுமாட்டிற்குக் கொடுக்கவும். இவ்வாறு மூன்று செவ்வாய்க்கிழமைகள் கொடுக்கவும். செவ்வாயினால்
உண்டாகும் தோசம் நீங்கும். ஆடுகளுக்கு உணவளித்தலும் நன்று
.
     
மேற்கண்டவை எல்லாமே எளிதான – எல்லாரும் செய்யக்கூடிய பரிகாரங்கள். வசதி உள்ளவர்கள் ஹோமம் போன்ற சற்று செலவுள்ள பரிகாரங்களைச் செய்யலாம்.
     
அனைத்து கிரக தோசத்திற்கும் நவகிரக ஹோமம் நல்லது. பாலாரிஷ்ட தோசம், அற்ப ஆயுள் தோசம் போன்றவற்றுக்கு ஆயுள்ஹோமம் சிறந்தது.
     
விபத்தை ஏற்படுத்தும் கிரக அமைப்புகள், கண்டக தோசம் போன்றவற்றை நிவர்த்தி செய்ய மிருத்யுஞ்சய ஹோமம் சிறந்தது.
     
எதிரிகள் தொல்லை, செய்வினை தொல்லைகள் உள்ளவர்கள். சுதர்சன ஹோமம் அல்லது மிருத்யுஞ்சய ஹோமம் செய்தல் நல்லது. இதே ஹோமங்களை மாரக தசாபுக்திகள் நடக்கும்போதும் செய்தால், நல்ல பலன் கிடைக்கும்.
     
ஏழரைச் சனி நடக்கும்போது நவகிரக ஹேமமும், கணபதி ஹோமமும் நடத்தினால் ஏழரைச் சனியினால் ஏற்படும் தடைகள் மட்டுப்படும்.
    
 திருமணத் தடை நீங்க சுயம்வரகலா பார்வதி ஹோமம் செய்யலாம்.
     
எதிரிகளை வெல்லவும்,அரசியல் வெற்றிக்காகவும் சண்டி ஹோமம் செய்வர்.
    
 வெள்ளிக்கிழமைகளில் கோ பூஜை செய்வது மகாலட்சுமியின் கடாட்சம் பெருக வழி செய்யும்.
     
மேற்கண்ட யாகங்களை – ஹோமங்களை சொந்த செலவில் நடத்த முடியாதவர்கள், பொது இடங்கள், கோவில்களில் நடக்கும்போது அதில் கலந்துகொண்டு புண்ணியம் பெறலாம்.
     
விஷ்ணுவை மட்டுமே வணங்கும் வைஷ்ணவர்கள், சூரியனை வணங்க ராமரையும் சந்திரனை வணங்க கிருஷ்ணரையும், செவ்வாயை வணங்க நரசிம்மரையும், புதனுக்கு வேங்கடாசலபதியையும், குருவுக்கு வாமனரையும், சுக்கிரனுக்கு லட்சுமியையும், சனிக்கு கூர்ம அவதாரத்தையும், ராகுவுக்கு வராகரையும், கேதுவுக்கு மத்ஸய என்ற மீன் அவதாரத்தையும் வணங்கவும்.

திங்கள், 22 பிப்ரவரி, 2016

உங்கள் ராசிப்படி செவ்வாய் சனி சேர்க்கை ராசிபலன்


செவ்வாயும் ,சனியும் விருச்சிகம் ராசியில் கோட்சாரப்படி இப்போது சேர்ந்து இருக்கிறார்கள்..பொதுவாக செவ்வாய், சனி சேர்க்கை பற்றி ஜோதிடம் நல்லவிதமாக சொல்லவில்லை..

இப்படி ஒருவர் ஜாதகத்தில் சேர்ந்து இருந்தால் செவ்வாய்,சனி திசையோ புத்தியோநடக்கும்போதுமிகுந்ததுயரினைஅவர்அடைவார்..விபத்து,ஆபரேசன்,
சிறைவாசம்,வீண் பழி,தீவிபத்து,உறவினர் அனைவரும் பகைஅரசாங்கஎதிர்ப்பு,பூமிதோசம்,சாபம் நிறைந்த நிலத்தை வாங்கி அவதிபடுவது,வாகனத்தால் கண்டம் என பட்டியல் நீள்கிறது....

கோட்சாரப்படி இப்படி சேர்ந்து இருக்கும்போது மேற்ச்சொன்ன பிரச்சினைகள் உலகிலும் நடக்கும்தானே..அதிக மக்கள் கூடும் இடங்களில் கலவரம்,தீவிரவாதிகளால் ஆபத்து,ரயில்,விமான விபத்துகள்,நாடுகளுக்குள் சண்டைகள்,தீவிபத்துகளை இந்த சேர்க்கை குறிக்கிறது....மார்ச் மாத மத்தியில் சனி வக்ரமாகும் வரை இந்த நிலை நீடிக்கும்..

மேசம் ராசியினருக்கு  8-ல் செவ்வாய்-சனி இருக்கிறது..அஷ்டம சனி போதாது என இப்போது ராசி அதிபதியும் மறைகிறார்.. அரசாங்க விரோதம் உண்டாகும். அடுத்தவருக்கு ஜாமீன் கொடுத்து நீதிமன்றத்தில் நிற்க வேண்டும். வாழ்க்கையில் தேவை இல்லா விரக்தி அடைய வைக்கும். முன்கோபம் தவிர்க்க முடியாமல் அதனால் துன்பமே உண்டாகும். பணத்தட்டுப்பாடு அதிகம் காணப்படும்.

ரிசபம் ராசியினருக்கு 7-ல் செவ்வாய்-சனி சேர்க்கை,வருவதால், திருமண பேச்சில் தடங்கல் உண்டாக்கும். . கூட்டு தொழிலில் விரோதம் வளரும். மனைவி (அ) கணவனுக்கு உடல்நலம் குறைய வாய்ப்புண்டு. குடும்பத்தில் வாக்குவாதம் உண்டாக்கும்..

மிதுனம் ராசியினருக்கு 6-ல் செவ்வாய்-சனி இருப்பதால் தேவை இல்லாமல் கடன் பெருக செய்கிறது. விரோதங்கள் தொடர செய்கிறது. உடல்நலனில் ஒருமுறை அறுவை சிகிச்சை செய்து வைக்கிறது. 

கடகம் ராசியினருக்கு 5-ல் செவ்வாய்-சனி இருப்பதால் பிள்ளைகளுக்கு உடல்நலம், படிப்பு பாதிக்கச் செய்கிறது. பூர்வீக சொத்து விஷயத்தில் பிரச்சினை உண்டாக்கும்.. இதய பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. 

சிம்மம் ராசிக்கு 4-ல் செவ்வாய்-சனி இருப்பதால் தடைப்பட்ட கல்வி ஏற்படும். தாயாருக்கு உடல்நலம் பாதிக்கும். வாகனம் அடிக்கடி பழுது ஏற்படும். பிரயாண சமயங்களில் கவனமும் நிதானமும் தேவை. 

கன்னி ராசியினருக்கு  3-ல் சகோதர பாவம். இங்கே செவ்வாய்-சனி சேர்க்கை சகோதர பாவத்தை பாதகம் செய்கிறது. சகோதரர் ஒற்றுமை குறைக்கிறது. மாமனாருக்கு பாதிப்பு..அலைச்சல்,வாகனத்தால் பாதிப்பு,உடல்நலனில் தொண்டை பகுதியை பாதிக்கிறது. புகழ், கௌரவத்தை பாதிக்கச் செய்கிறது. 

துலாம் ராசியினருக்கு செவ்வாய்-சனி 2ல் சேர்க்கை குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் சண்டையை மூட்டுகிறது. தேவை இல்லா கருத்து வேறுபாடு கொடுக்கிறது. கண் உபாதை உண்டாக்குகிறது.

விருச்சிகம் ராசியினருக்கு செவ்வாய் சனி சேர்க்கையால், உடல்நலம் பாதிக்கிறது. கௌரவம் பாதிக்கச் செய்கிறது. தேவை இல்லாமல் குழப்பம், மன உளைச்சல் கொடுக்கிறது. 

தனுசு ராசியினருக்கு 12-ல் செவ்வாய்-சனி இணைவதால் வழக்கு- வம்பு வந்த வண்ணம் இருக்கும். நிம்மதியான தூக்கம் இருக்காது. என்னடா வாழ்க்கை என்று சலிக்க வைக்கும். ஜான் ஏறினால் முழம் சறுக்கும். விரயங்கள் விரைந்து வரும். தூர பயணத்தில் வெகு கவனம் தேவை


 மகரம் ராசியினருக்கு 11-ல் செவ்வாய்-சனி இருப்பதால்மூத்த சகோதரருக்கு பிரச்சினை உண்டாக்கும். அயல்நாட்டு விவகாரத்தில் உஷராக இருத்தல் நலம். தொழில், வேலைகளில் இரண்டிலும், ஏன் அயல்நாட்டு தொடர்பு வைத்தோம் என்று கலங்க வைக்கும். ஜாதகருக்கே உடல்நிலை சீராக வைக்காது.

 கும்பம் ராசியினருக்கு  10-ல் செவ்வாய்-சனி இருப்பதால் தொழில்துறையில் வளர்ச்சியில் நிதானம் செய்யும். போட்டிக் கடுமையாக ஏற்படுத்தும். அதேபோல் உத்தியோகத்தில் மேல்பதவி கிடைப்பது அரிது. மேல் அதிகாரி ஒத்துழைப்பு கிடைக்காது செய்யும். நிலை இல்லா தொழிலே அமையும்.

 மீனம் ராசியினருக்கு  9-ல் செவ்வாய்-சனி இணைவதால் சொத்து வாங்கும் விஷயத்தில் கவனம் தேவை. இல்லை என்றால் ஏமாற வைக்கும். அயல்நாடு சென்றால் அங்கு அவஸ்தை படவைக்கும். தந்தை – மகன் உறவில் விரிசல் உண்டாக்கும். தெய்வ நம்பிக்கை குறைய வைக்கும்.தொழிலில் சிக்கல் இருக்கும்.

பரிகாரம்;செவ்வாய் தோறும் முருகனுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடவும்..செவ்வாய் ஓரையில் வழிபடுவது சிறப்பு...முருகனுக்கு திரிசதை அர்ச்சனை செய்து வழிபடுவது இன்னும் நல்லது..செவ்வாய் அல்லது வியாழக்கிழமையிலும் வழிபடலாம்..



ஞாயிறு, 21 பிப்ரவரி, 2016

உங்கள் ஜாதகப்படி திதி சூனிய தோசம்

திதி சூன்ய தோசம்
                                
     திதி சூன்ய தோசம் - ஒரு ஜாதகத்தை எடுத்துப் பார்த்தால், ‘ஆஹா...யோக ஜாதகம், யோகதசை”  என்று சொல்பவர்கள் அந்த ஜாதகர், திதி சூன்யத்தில் பிறந்திருந்தால், யோக பலனைக் கெடுத்துவிடும் என்பதை ஆராய்ந்து பார்க்காமல் சொல்லிவிடுவார்கள்.

பொதுவாக சுக்ல பட்சம், கிருஷ்ண பட்சம் (வளர்பிறை,தேய்பிறை)என்பது அனைவரும் அறிந்ததே. ஜாதகம் எழுதுபவர்கள் நோட்டில் பட்சம் எழுத மறந்துவிடுவார்கள். சூரியன் - சந்திரன் இருவரும் அமாவாசை திதியில் இணைந்தும், பௌர்ணமி திதியில் எதிர் எதிரிலும் இருப்பது வழக்கம்.

சூரியனிலிருந்து 7ற்குள் சந்திரன் இருந்தால் சுக்ல பட்சம் ஆகும். 7ற்கு மேல் இருந்தால் கிருஷ்ண பட்சம் ஆகும். சுக்ல பட்சம் 14திதிகள், கிருஷ்ண பட்சம் 14 திதிகள்.. அமாவாசை பௌர்ணமி ஆகக் கூடுதல் 30 திதிகள்..

 ஜனனமாகும் குழந்தை, அமாவாசை அல்லது பௌர்ணமி யன்று பிறந்தால், அந்த ஜாதகம் திதி சூன்யம் அடையாத ஜாதகம் ஆகிவிடுகிறது. பிரதமை முதல் சதுர்த்தசி வரை உள்ள 14 திதிகளில் எந்த திதியில் ஜனித்தாலும், இரண்டு ராசி வீடுகளுக்கு திதி சூன்யம்
ஏற்பட்டு விடுகிறது. இதனால் அந்த ராசி அதிபதி திதி சூன்யம்  அடைகிறது. திதி சூன்யம் ஏற்பட்ட ராசி இல்லத்து அதிபதிகள் தங்களது சக்தியை இழக்கிறார்கள்.
    
     மறைவு ஸ்தானமாகிய 3,6-8-12ல் திதி சூன்யம் அடைந்த கிரஹங்கள் இருந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். வக்ரம் ஆனாலும் நல்ல பலன் கொடுக்கும்.

     திதி சூன்யம் அடைந்த கிரஹங்கள், பகையானாலும்: நீச்சம் பெற்றாலும், பாபிகளுடன் இருந்ததாலும், இயல்பான பலன்கள் அதாவது காரகப் பலன்கள் அதிகமாகவே கொடுக்கும். திதி சூன்யம் பெற்ற கிரஹங்கள் சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது உடன் இருந்தாலும் தோசம் இல்லை.

 கிரஹம், அஸ்தங்கதம் அடைந்தாலும், வக்ரமாக இருந்தாலும்; பகை, நீச்சம் பெற்றிருந்தாலும், லக்னத்திலிருந்து 3,6,8,12 இருந்தாலும் மேசம், விருச்சிகம், சிம்மம், கும்பம், ஆகிய
ராசி இருந்தாலும் திதி சூன்யம் இல்லை.

     பாபருடன் கூடி இருந்தாலும் திதி சூன்யம் இல்லை.

     எனவே திதி சூன்யம் பெறும் ராசிகளின் சந்திரன் சஞ்சரிக்கும் பொழுதும், திதி சூன்ய ராசி லக்னமாக நடைபெறும் சமயத்திலும், சுப காரியங்கள் செய்யலாகாது.     

 எந்தெந்த திதிக்கு, சூன்ய தோஷ ராசிகள், கிரகங்கள் உள்ளன என்பதைப் பார்ப்போம்.

பிரதமை திதியில் சூன்யம் பெறும் ராசி - மகரம், துலாம், கிரகம் சனி, சுக்கிரன், 

துவிதியை திதியில் சூன்யம் பெறும் ராசி - தனுசு, மீனம், கிரகம் -குரு. 

திரிதியை திதியில் சூன்யம் பெறும் ராசி- மகரம், சிம்மம், கிரகம்-சனி, சூரியன், 

சதுர்த்தி திதியில் சூன்யம் பெறும் ராசி- கும்பம், ரிஷபம், கிரகம் - சனி, சுக்கிரன். 

பஞ்சமி திதியில் சூன்யம் பெறும் ராசி - மிதுனம், கன்னி, கிரகம் - புதன், 

சஷ்டி திதியில் சூன்யம் பெறும் ராசி- மேஷம், சிம்மம் , கிரகம் -செவ்வாய், சூரியன், 

சப்தமி திதியில் சூன்யம் பெறும் ராசி - தனுசு, கடகம், கிரகம் - குரு, சந்திரன். அஷ்டமி திதியில் சூன்யம் பெறும் ராசி - மிதுனம், கன்னி, கிரகம் - புதன், 

நவமி திதியில் சூன்யம் பெறும் ராசி - சிம்மம், விருச்சிகம், கிரகம் - சூரியன், செவ்வாய், 

தசமி திதியில் சூன்யம் பெறும் ராசி - சிம்மம், விருச்சிகம், கிரகம் - சூரியன், செவ்வாய்.

ஏகாதசி திதியில், சூன்யம் பெறும் ராசி - தனுசு, மீனம், கிரகம் - குரு, 

துவாதசி திதியில் சூன்யம் பெறும் ராசி - மகரம், துலாம், கிரகம் - சனி, சுக்கிரன், 

திரயோதசி திதியில் சூன்யம் பெறும் ராசி - ரிஷபம், சிம்மம், கிரகம் - சுக்கிரன், சூரியன், 

சதுர்த்தசி திதியில் சூன்யம் பெறும் ராசி - மிதுனம், கன்னி, கிரகம் - புதன்.

அமாவாசை, பௌர்ணமி திதிகளுக்கு எவ்வித திதி சூன்யமும் இல்லை. தோஷமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

பரிகாரம் என்ன? 

பெளர்ணமி தோறும் திரிபுர சுந்தரி வழிபாடு செய்யலாம்..அருகில் இருக்கும் அம்பாள் சன்னதியில் பொங்கல் வைத்து 16 விதமான அபிசேகங்கள் செய்வித்து சுமங்கலிபெண்கள் 16 பேருக்கு மங்கலப்பொருட்கள் தானமாக கொடுக்க வேண்டும்.

சனி, 20 பிப்ரவரி, 2016

பிரதோசம் வழிபாடு அற்புதங்கள்

பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு. யார் ஒருவரது ஜாதகத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் குறைந்தது 4 தோஷங்களாவது இருக்கும். எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் பயன்பெறலாம்.


பொதுவாக பிரதோஷ தினத்தில் சிவனை அனைவரும் வணங்குகின்றனர். இந்த இடத்தில் “அனைவரும்” என்பது மனிதர்களை மட்டும் குறிக்கவில்லை. முப்பத்து முக்கோடி தேவர்கள், பிரம்மா, விஷ்ணு ஆகியோரையும் குறிக்கும். அந்த நேரத்தில் சிவனும் ஷேம நலத்திற்காக வழிபாட்டில் ஈடுபடுவ

எனவே, அனைத்து தரப்பினரும் வழிபாடு செய்யும் நேரத்தில், நாமும் பிரார்த்தனை செய்தால், இதயம் கனிந்து ஈசன் நமக்கு அதிகமான நலன்களை வழங்குவார் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

அதற்கடுத்தப்படியாக வாகனத்திற்கு மரியாதை தரக்கூடிய வழிபாடு பிரதோஷம் ஆகும். சிவனின் வாகனமான நந்தி பகவானுக்கும் மரியாதை செய்யக் கூடியது பிரதோஷ வழிபாடு.


நான்கு வேதங்கள், 64 கலைகள் என அனைத்தையும் படித்து முடித்தவர் நந்தீஸ்வரர். சிவனின் சந்தேகங்களுக்கு விளக்கமளிப்பவரும் நந்தி பகவான் என்று ஐதீகம் கூறுகிறது. எனவேதான் அவருக்கு அனைத்து வேதங்களும், இதிகாசங்களும் தெரியும் என்று கூறப்படுகிறது.

மெத்தப் படித்திருந்தாலும் நந்தி பகவான் மிகவும் அடக்கமானவர். சிவன் கோயில்களில் அவர் அமர்ந்திருக்கும் தன்மையே இதனை உணர்த்தும் விதமாக இருக்கிறது. அனைத்தையும் கற்றறிந்த பின்னர் அதனை மனதில் அசைபோடும் வகையில் அவர் அமர்ந்திருப்பது போல் தோன்றும்.

எனவே, பிரதோஷ பூஜை மேற்கொள்ளும் போது அறிவு வளரும், நினைவாற்றல் பெருகும், தோஷங்கள் நீங்குகிறது. எவ்வளவு பெரிய தோஷமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து பசுவின் கறந்த பாலைக் கொண்டு ஈசனை அபிஷேகம் செய்து, வில்வ இலை, சங்குப்பூ வைத்து வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும்.

காராம்பசுவின் பாலைக் கொண்டு நந்தியையும், சிவனையும் வழிபட்டால் பூர்வ ஜென்ம வினைகள், பிராமணனைக் கொன்ற சாபம், பெண்ணால் வந்த சாபம் உள்ளிட்டவை நீங்கும் என விரதமாலை நூல் கூறுகிறது.

திங்கள், 8 பிப்ரவரி, 2016

தை அமாவாசை அன்னதானம் 2016

வருடம் தோறும் முக்கியமான புனித அமாவாசை தினங்களில் நாம் நண்பர்கள் பங்களிப்புடன் அன்னதானம் செய்து வருகிறோம்.இன்று தை அமாவாசை.ஆதரவற்ற ,குழந்தைகள் முதியோர் இல்லங்களில் வழக்கம்போல அன்னதானம், உடைகள் தானம் செய்தோம்.

பங்களிப்பு செய்த நண்பர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தார் பூரண உடல்நலம்,மனநலம் செல்வவளம் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ்க வாழ்க என சங்கமேஸ்வரரையும் வேதநாயகி அம்மனையும் பிரார்த்தித்து வழிபாடு,அர்ச்சனை செய்துகொண்டோம்..!!


ஈரோடு காது கேளோதோர் பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு ,பேனாக்கள் வழங்கப்பட்டது.இந்த குழந்தைகளுக்கு காது கேட்காது வாய் பேச முடியாது.இதனால் மனப்பாடம் செய்ய எல்லாமே எழுதித்தான் மனப்பாடம் செய்யனும் கை ஒடிய எழுதுவர்.நோட்டுக்கள் நிறைய தேவைப்படும்.எல்லாவற்றுக்கும் அரசு உதவி கிடைக்காது. 

 இந்த அரசு பள்ளி அதுவும் ஊட்டிக்கு பிறகு இங்குதான் இந்த பள்ளி செயல்படுகிறது ..இதனை திரம்பட  நடத்துவதே பெரிது ....நூறுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு நோட்டு பேனா வழங்கினேன் தீர்ந்தவுடன் தகவல் தர சொல்லியிருக்கிறேன் நன்றி பாசூர் காளான் சுப்ரமணியம் அவர்கள்..

எப்போதும் போல வரும் புனித நாட்களிலும் அன்னதானம்,நலத்திட்ட உதவிகள் தொடரும்.நல்ல நேரம் வாசகர்களுக்கும், நமது தமிழ் ஜோதிடம் பேஸ்புக் பக்கம் நண்பர்களுக்கும் நன்றி.

உங்கள் நட்சத்திரப்படி பிரச்சினை தீர்க்கும் கோயில்கள் -விசாகம் முதல் ரேவதி வரை

 விசாகம்
      
       விசாக நட்சத்திரப் பரிகாரத் தலங்கள்
கபிஸ்தலம்: தஞ்சை மாவட்டம், பாபநாசத்துக்கு வடக்கே 3கி.மீ. தெ;hலைவில், கும்பகோணம் - திருவையாறு சாலையில் அமைந்த வைணவ திவ்ய தேசம். விளா மரங்கள் நிறைந்த வனமாக இருந்ததால் கபிஸ்தலம் என்று பெயர்பெற்றது. வாலிக்கு எம்பெருமான் காட்சியளித்த தலம். மூலவர், கஜேந்திரவரதப் பெருமாள், கிழக்கு நோக்கி, பாம்பணையில் பள்ளி கொண்டுள்ளார். தாயார் ரமாமணிவல்லி. தீர்த்தம்: கஜேந்திர புஷ்கரணி.

அத்தாளநல்லூர்: நெல்லை மாவட்டம், வீரவநல்லூருக்கு வடகிழக்கே 7கி.மீட்டரில் அமைந்துள்ளது. ஆனைக்கருள் செய்த பிரான் என்ற புகழோடு கஜேந்திரவரதப் பெருமாள் சேவை சாதிக்கிறார். இவர், வழிப்போக்கருக்கு ‘அத்தாழம்’ என்ற இரவு உணவை அருளியவர்.
தீயத்தூர்: புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோயிலுக்கு அருகில் உள்ளது. தீயும் (அக்னி) அயனும் (பிரம்மா) வழிபட்ட திருத்தலம். சகஸ்ரலட்சுமீசுவரர் அருள் பாலிக்கிறார்.

திருநின்றியூர்: மயிலாடுதுறைக்கு வடகிழக்கே 8கி.மீ தொலைவில் காவிரி ஆற்றின் வடகரையில் உள்ளது. திருமகள் வழிபட்டு நிலைபேறு எய்திய தலம். லட்சுமிபுரீசுவரர் - உலகநாயகி அருள் பாலிக்கும் தலம்.

               
    அதிதேவதை மந்திரம் 
  இந்திராக்னி ஸீபதௌஸ்யாதாம்
   விசாகா தேவதே உபௌ|
  வராவேகரதாரூடௌ வராரபீதி கராம் புஜௌ||
      ~ண்முக காயத்ரி
   ஓம் தத்புரு~hய வித்மஹே மஹாஸேனாய தீமஹி|
   தந்நோ ~ண்முக ப்ரசோதயாத்||

                               அனுசம்
   

     அனுசம்  நட்சத்திரப் பரிகாரத் தலங்கள்
திருவொற்றியூர்: சென்னைக்கு வடக்கே 8கி.மீ. தெ;hலைவில் உள்ளது. புற்றிடங்கொண்டார். ஆதிபுரீசுவரராக அருள் பாலிக்கும் தலம். தலவிருட்சம் - மகிழ மரம்.

திருவண்ணாமலை: திருமாலும், நான்முகனும் அடி – முடி தேடியபோது, அவர்களுக்கு எட்டாமல், அண்ணாமலையாக இறைவன் தோன்றிய தலம். அஷ்டவசுக்கள், பிரம்மா, திருமால் ஆகியோர் வழிபட்ட தலம்.

திருப்புனவாசல்: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கிக்கு தென்கிழக்கே 38கி.மீ. தொலைவில் உள்ளது. நான்கு யுகங்களுக்கு நான்கு தல விருட்சங்கள் உள்ள பதி. தஞ்சை பிரகதீசுவரருக்கு அடுத்ததாக பெரிய லிங்கத் திருமேனி. ஆகண்டல விநாயகர், சதுர்முக லிங்கம், விநாயகர் சபை, குடவரை காளி ஆகிய சிறப்புச் சந்நிதிகள் கொண்ட கோயில்.  

திருக்கண்ணமங்கை: திருவாரூருக்கு வடமேற்கில் 7கி.மீ. தொலைவில் உள்ளது. தல விருட்சம் - மகிழ மரம். முப்பத்து முக்கோடி தேவர்களும் தேனீக்களாக வந்து சேவிக்கும் திருத்தலம். பக்தவத்சலப் பெருமாளும், அபிசேகவல்லித் தாயாரும் சேவை சாதிக்கும் ஸப்தாம்ருத சேத்திரம்.

நீடூர்: மயிலாடுதுறைக்கு வடக்கே 5கி.மீ தொலைவில் மகிழ வனம் கொண்டது. ஊழிக்; காலத்தும் அழியாததால், நீடூர் ஆனது. லட்சுமிநாராயணபெருமாள் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார்.

நாச்சியார்கோயில்: கும்பகோணத்துக்கு தென்கிழக்கே 9கி.மீ.தொலைவில், திருமலைராயன் ஆற்றின் வடகரையில் உள்ளது. திருநறையூர், தல மரம்-மகிழ மரம். மூலவர் ஸ்ரீநிவாசப்பெருமாள், தாயாருக்கு மாலையிடும் நிலையில் கிழக்கு நோக்கி சேவை சாதிக்கிறார். யோக நரசிம்மர், சக்கரத்தாழ்வார், கல் கருடன் ஆகியவை சிறப்புச் சந்நதிகள்.
         
    அதிதேவதை மந்திரம்
 மித்ரம் பத்மாசனாரூடம் அனூராதேஸ்வரம் பஜே|
சூலாங்கு ச தரம் பாஹ்வோ: தேவம் ஸோநித வர்ணகம்||
     சூர்ய காயத்ரி
 ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே பத்ம ஹஸ்தாய தீமஹி|
 தந்நோ சூர்ய ப்ரசோதயாத்||
             
             கேட்டை
       

      கேட்டை நட்சத்திரப் பரிகாரத் தலங்கள்
பிட்சாணடார் கோயில்: திருச்சிக்கு வடக்கில் 6கி.மீ தொலைவில் உள்ளது. சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து அடிக்கடி பேருந்துகள் உண்டு. உத்தமர் கோயில் எனப்படும் மும்மூர்த்தித் தலம். பிட்சாண்டார் மேற்கு முகமாகவும், புருஷோத்தம பெருமாள் கிழக்கு நோக்கியும், பிரம்மா வடக்கு நோக்கியும் அருள் பாலிக்கின்றனர். திருமகளே ஈசுவரனுக்கு பிட்சை அளித்ததாக தல புராணம் கூறுகிறது. சப்த குருத்தலம் என்றும் பெருமை கொண்டது. சரஸ்வதி தேவிக்கு இங்கே தனி சந்நிதி உள்ளது. இங்குள்ள புத்திரகாமேஷ்டீஸ்வரர், தசரதனால் வழிபடப்பட்டவர். இவர், மக்கட்பேறு வழங்கிடும் மகேசன்.

வழுவூர்: ஈசன், யானையை உரித்து, முனிவர்களுக்கு ஞான உபதேசம் செய்த திருத்தலம். மயிலாடுதுறைக்கு தெற்கே 8கி.மீ தொலைவில் உள்ளது. இங்குள்ள மூகமோசனம், ஞானாம்ருத தீர்த்தம் இரண்டும் தனிச்சிறப்பு கொண்டவை. ஈசன் ‘கிருத்திவாசன்’ என்று திருநாமம் கொண்டுள்ளார். ‘கஜ சம்ஹார மூர்த்தி’ தரிசனத்தை இங்கு மட்டுமே காண முடியும். அமாவாசை நாட்களில் மக்கள் பெருமளவில் கூடுகிறார்கள். வில்லேந்;திய கோலத்தில் சனீஸ்வரனை இங்கு வழிபடலாம்.
      
  அதிதேவதை மந்திரம்
   இந்திரம் கஜவராரூடம் வஜ்ரபாச வசபயம்|
   கரே: சதுர்பி: ததம் ஜ்யேஷ்டாதீச்வர மாஸ்ரயே||

  வராஹ காயத்ரி
 
பூவராஹாய வித்மஹே வஜ்ர ரூபாய தீமஹி|
   தந்நோ வராஹ ப்ரசோதயாத்||

              மூலம்
    
          மூல நட்சத்திரப் பரிகாரத் தலங்கள்
திருமாந்துறை: திருச்சி மாவட்டம் லால்குடிக்கு மேற்கில் 5கி.மீ தொலைவில் உள்ள வடகரை மாந்துரை எனப்படும் தலம். ஆம்ரவன ஈசுவரரே திருமாந்துறை நாதர்: அன்னை அழகம்மை.

ஆச்சாள்புரம்: சீர்காழிக்கு அ;ருகில் உள்ள திருத்தலம், சிவலோகத் தியாகேசர் அருள் பாலிக்கும் தலம். இந்தக் கோயிலில் திருஞானசம்பந்கர் திருமணம் மற்றும் சிவஜோதி தரிசன ஐக்கிய நிகழ்ச்சிகள், வைகாசி மூல நட்சத்திரத் திருநாளில் நடைபெறுகின்றன.

மயிலாடுதுறை: மயூரநாதர், அபயாம்பிகையுடன் அருள் பாலிக்கும் திருத்தலம். இங்கே முடவன் முழக்கு, துலா ஸ்நானம் தனிச்சிறப்பு பெற்றவை.

பாமணி: பாதாளேச்சுரம் எனப்படும் இந்தத் திருத்தலம் மன்னார்குடியிலிருந்து 2கி.மீ. தொலைவில் உள்ளது. பாதாளத்திலிருந்து ஆதிசே~ன் தனஞ்ஜெய முனிவராக வெளிப்பட்ட தலம். சர்ப்ப தோ~ம் நீக்கும் தலம். மூலவர் கருவறையில் புற்று உள்ளது.

கோயிலூர்: திருத்துறைப்பூண்டி – ஓரத்தநாடு வழியில் உள்ள தலம். ராமபிரான், சேதுப் பாலம் கட்டுவதற்கு முன்பு, இறைவனிடம் இந்தத் தலத்திலதான் மந்திர உபதேசம் பெற்றதாக வரலாறு, மந்திரபுரீசுவரர் - பெரிய நாயகி அருள் பாலிக்கும் தலம். ‘சூதவனம்’ என்றும் அழைக்கப்படுகிறது.

குலசேகரப்பட்டினம்: திருச்செந்தூருக்கு 14கி.மீ. தொலைவில் உள்ளது. விஜயகாசிகொண்ட பாண்டீசுவரர் - அறம் வளர்த்த நாயகி அருள் பாலிக்கும் தலம்.

பொழிச்சலூர் சென்னைக்கு தெற்கில், பல்லாவரத்துக்கு மேற்கில் 3கி.மீ தொலைவில் அகஸ்தீசுவரர் - ஆனந்தவல்லி அருள் பாலிக்கும் தலம்.
              
     நட்சத்திர மந்திரம்
     கராள வதனம் க்ருஷ்ணம் ந்ருவாகனம்|
     ஊர்த்வகேசம் விருபனாஷ்ம் பஜே மூலாதி தேவதாம்||
     
ஆஞ்சநேய காயத்ரி
     ஸ்ரீஆஞ்சநேயாய வித்மஹே வாயுபுத்ராய தீமஹி|
     தந்நோ அனுமத் ப்ரசோதயாத்||

 பூராடம்;
      
        
 பூராட நட்சத்திரப் பரிகாரத் தலங்கள்

நகர்: திருச்சி மாவட்டம், லால்குடிக்கு அருகில் உள்ள திருத்தலம். அப்பிரதீசுவரர் அருளாசி வழங்கும் அற்புதத் தலம்.

சிதம்பரம்: கடலூர் மாவட்டத்தில் உள்ள திருத்தலம். பழைமையும் பெருமையும் வாய்ந்த சிவத்தலம். பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தை குறிக்கும் தலம். ‘சிதம்பர ரகசியம்’ இங்கே விசே~ம். சபாநாயகராக அருள்; பாலிக்கும் இறைவனோடு அன்னை சிவகாம சுந்தரி அருளாசி வழங்குகிறாள்.
கடுவெளி: தஞ்சை மாவட்டம், திருவையாறுக்கு வடக்கில் 3கி.மீ தூரத்ததில், கொள்ளிடம் ஆற்றின் தென்கரையில் உள்ளது. ஆகாசபுரீசுவரர் அருள் பாலிக்கும் திருத்தலம்.
              
    பூராட நட்சத்திர மந்திரம்
   அஷ்டா தேவதா: நித்யம் ஆப: ஸந்து ஸீபப்ரதா|   சமுத்ரகா: தரங்கிண்ய: பாலின்ய: ஸர்வதேஹிநாம்||
   (அஷ்டா ஸ்ரீ பூர்வாஷ்டா ஸ்ரீ பூராடம்)
 
   வருண காயத்ரி
   ஓம் பஸ்சிமேசாய வித்மஹே பாசஹஸ்தாய தீமஹி|
   தந்நோ வருண ப்ரசோதயாத்||
   
               உத்திராடம்
      
   
 உத்திராட நட்சத்திரப் பரிகாரத் தலங்கள்

கோயம்பேடு: சென்னைக்கு மேற்கில் 8கி.மீ குறுங்காலீசுவரர் - தர்மசம்வர்த்தனி அருள்பாலிக்கும் தலம். லவ குசர்கள் மண்ணை சிவலிங்கமாகப் பிடித்து வைத்து வழிபட்ட கோயில். வடக்கு திசை நோக்கிய சந்நிதி;. தலமரம் - பலா.

காங்கேயநல்லூர்: காட்பாடிக்கு தென் கிழக்கே 4கி.மீ காங்கேசுவரர் - பாலகுஜாம்பிகை அருள்பாலிக்கும் திருத்தலம். முருகப் பெருமான் வழிபட்டதால் இத்தல இறைவன் ‘காங்கேசப் பெருமான்’ என அழைக்கப்படுகறார்.
பே;ர்: சேலத்துக்கு கிழக்கே 32கி.மீ கணம்புல்ல நாயனார் இத்திருத்தலத்தைச் சேர்ந்தவர். சுயம்புலிங்கமாக தான்தோன்றீசுசரர், அறம் வளர்த்த அம்மையுடன் அருள்;;பாலிக்கும் தலம்.

திருஇன்னம்பூர்: கும்பகோணத்துக்கு வடமேற்கே 6கி.மீ. எழுத்தறி நாதேசுவரர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கும் தலம். ஐராவதம் வழிபட்ட தலம். அன்னை சுகந்த குந்தளாம்பிகை. நித்திய கல்யாணி என்றும் தனியாக அன்னையின் சந்நிதி உள்ளது.
திருப்பூவனூர்: மன்னார்குடிக்கு வடக்கே 10கி.மீ. சதுரங்க வல்லபநாதர் அருள்பாலிக்கும் தலம். கற்பகவல்லி, ராஜராஜேசுவரி என இறைவி சந்நிதிகள் இரண்டு.
திருக்கடிக்குளம்: திருத்துறைப்பூண்டிக்கு தெற்கே 12கி.மீ. ராமபிரான் ‘சேது பந்தனம்’ செய்ய முற்பட்டபோது, இங்குள்ள கற்பகநாதரை வழிபட்டு அருள்பெற்றார். அன்னை சௌந்தரநாயகி.

திருப்பூவணம்;: திருத்துறைப்பூண்டிக்கு தெற்கே 12கி.மீ ராமபிரான் ‘சேது பந்தனம்’ செய்ய முற்பட்டபோது, இங்குள்ள கற்பகநாதரை வழிபட்டு அருள்பெற்றார். அன்னை சௌந்தரநாயகி.
திருக்கோ~;டியூர்: சிவகங்கையிலிருந்து 19 கி.மீ அ~;டாங்க விமானம் அமைந்த வைணவ திவ்ய தேசம். தேவர்கள் ஒன்றாகக் கூடி, பரந்தாமனை வேண்டி, இரணியனை சம்ஹரித்திடக் கோரிய தலம். உலகோருக்கு ஸ்ரீராமானுஜர், தளங்களில் நாராயணன் சேவை சாதிக்கிறார்.

            
நட்சத்திர மந்திரம்

விஸ்வாந் தேவாநஹம் வந்தே அஷ்டா நட்சத்திரவதா|  ஸ்ரீபுஷ்டி கீர்த்தி: தீதாரூன் ஸர்வ பாபாபனுத்ரயே||
(ஆஷ்டா – உத்திராடம்)

வினாயக காயத்ரி
ஓம் ஏக தந்தாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி|
தந்நோ தந்தீ ப்ரசோதயாத்||

              திருவோணம்
  
     அம்பு வடிவில் புலியை நோக்கிப் பாய்ந்த அந்த மூன்று நட்சத்திரத் தொகுப்பே திரவோண நட்சத்திரமாகும். நாராயணனின் அவதாரத் திருநட்சத்திரமும் இதுதான் என்பதால், திருவோண நட்சத்திர அன்பர்கள் திருப்பதி பெருமாளை வழிபடலாம்.
     திருவோண நட்சத்திர அன்பர்கள் வழிபடக் கூடிய இன்னொரு கோயிலும் உண்டு. அது, திருமுல்லைவாயில், சென்னைக்கு மேற்கில் உள்ள ஆவடியை ஒட்டியுள்ள திருத்தலம். மாசிலாமணி நாதர் அருள் பாலிக்கும் இந்தத் திருத்தலத்தில், இரண்டு அதிசய ‘வெள்ளெருக்கு தூண்கள்’ உள்ளன. மூலவர் சந்நிதியின் இருபறமும் உள்ள இந்தத் தூண்கள், தொண்டைமான் சக்கரவர்த்தியால் காணிக்கையாகக் கொடுக்கப்பட்டதாம்.
     எருக்கஞ்செடியை தல விருட்சமாகக் கொண்டே கோயில்களோடு, கொடியிடை நாயகி – மாசிலாமணீசுவரர் அருள் பாலிக்கும் இந்த திருமுல்லைவாயில் திருத்தலத்தையும் வணங்கலாம்.
          
  திருவோண நட்சத்திர மந்திரம்
   சாந்தாகாரம் சதுர்ஹஸ்தம் ச்ரவண நட்சத்திர வல்லபம்|
   விஷ்ணும் கமலபத்ராகூம் த்யாயேத் கருட வாகனம்||
   (ச்ரவண – திருவோணம்)
   நாராயண காயத்ரி
   ஓம் நாராயணாய வித்மஹே வாசுதேவாய தீமஹி|
   தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத்||
            
அவிட்டம்
      
      அவிட்ட நட்சத்திரப் பரிகாரத் தலங்கள்
விருத்தாசலம்: கடலூர் மாவட்டத்தில் உள்ள தேவாரத்தலம். இங்குள்ள பழமையான வன்னிமரத்தை வலம் வருவதே நற்பலன்களைத் தரும். அன்னை பாலாம்பிகை, விருத்தாம்பிகை என்று இரண்டு சந்நிதிகள். மூலவர் விருத்தகிரீசுவரர்;.
திருவான்மியூர்: சென்னைக்கு தெற்கில் 8கி.மீ. தெ;hலைவில் உள்ள கடற்கரைத் தலம். வன்மீகர், மருந்தீசுவரர், பால்வண்ணநாதர் என்ற பெயர் கொண்டு ஈசன் அருள்பாலிக்கும் தலம். அன்னை திரிபுரசுந்தரி. மார்க்கண்டேயருக்கு வன்னிமரத்தடியில் இறைவன் ரி~பாரூடராகக் காட்சி தந்த தலம்.
திருக்காட்டுப்பள்ளி: தஞ்சை மாவட்டம், திருவையாற்றுக்கு மேற்கில் 10 கி.மீ அக்னீசுவரர் அருள்பாலிக்கும் திருத்தலம்.

திருப்பூந்துருத்தி: திருவையாற்றுக்கு மேற்கில் 5கி.மீ சப்த ஸ்தானத் தலங்களில் ஒன்று. பு~;பவன நாதர், அழகாலமர்ந்த நாயகி அருள்பாலிக்கும் தலம்.

திருக்கொள்ளிக்காடு: திருவாரூர் மாவட்டம், கச்சனத்துக்கு மேற்கே 8 கி.மீ அக்னீசுவரர் அருள்பாலிக்கும் தலம், சனி பகவான் சந்நிதி தனிச்சிறப்பு கொண்டது.

திருமறைக்காடு: தஞ்சாவூருக்கு தென்கிழக்கில் 100கி.மீ. வேதாரண்யம் என்ற கடற்கரைத் தலம். வேதங்கள் வழிபட்டு, திருக்காப்பிட்டுக் கொண்ட கோயில், சப்தவிடங்கத் தலங்களில் ஒன்று.
                 

கொடுமுடி: ‘பாண்டிக் கொடுமுடி’ என்று அ;ழைக்கப்படும் கொங்கு நாட்டுத் தலம். மகுடேஸ்வரர் - சௌந்தரநாயகி அருள்பாலிக்கும் தலம். வன்னிமரத்தடியில் பிரம்மா காட்சி தருகிறார். பிரம்மதீர்த்தம் சிறப்பு கொண்டது.
       
நட்சத்திர மந்திரம்
ஸ்ரவிஷ்;டா தேவதா: வந்தே வஸீந் ரதவராஸ்ரிதான்|
சங்கம் சக்ராங்கித கரான் கிரீடோஜ்வல மஸ்தகான்||

(ஸ்ரவிஷ்டா – அவிட்டம்)                       விஷ்ணு காயத்ரி
ஓம் நாராயணாய வித்மஹே வாஸீதெவாய தீமஹி|
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத்||

                 சதயம்
 
    சதய நட்சத்திரப் பரிகாரத் தலங்கள்
கடம்பனூர்: சூரபத்மனை அழித்ததால் ஏற்பட்ட சூரஹத்தி தோ~ம் நீங்க, முருகப் பெருமான் ஐந்து தலங்களில் சிவபிரதி~;டை செய்து வழிபட்டார். அந்த திருத்தலங்கள் நாகை மாவட்டத்தில் உள்ளன. ஆவை கோவில் கடம்பனூர், அங்கெல்லாம் வடக்கு நோக்கி, எழுந்தருளியுள்ளார். முருகப்பெருமான். சுதய நட்சத்திர அன்பர்கள் அருள் வேண்டி முரகனை இங்கு வழிபடலாம்.
கடம்பர்கோயில்: கரூர் மாவட்டம் குளித்தலை அருகில் அமைந்துள்ள கடம்பை, தட்சிணகாசி என அழைக்கப்படும் தலம். தல விருட்சம் கடம்ப மரம். கடம்பவனநாதராக, ஈசன் முலையம்மையோடு அருள் பாலிக்கும் திருத்லதம்.

மேலக்கடம்பூர்: கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலுக்கு தென்மேற்கில் 5கி.மீ தொலைவில் தேர் வடிவில் அமைந்த திருத்தலம். அமிர்தகடேஸ்வரராக ஈசன் அருள் பாலிக்கிறார். இந்தத் தலத்தின் சிறப்புகளை அறிந்;த இந்திரன், தன் தாயார் தினமும் விழிபடுவதற்காக, தேருக்குச் சக்கரங்களை மாட்டி குதிரைகளைப் பூட்டி இழுத்துச் செல்ல முற்படுகையி;ல், விநாயகர் கட்டை விரலால் அழுத்திட, அது நின்றுவிட்டது. அப்போது கோடிலிங்கங்களை பிரதிஷ்டை செய்யுமாறு இந்திரனைப் பணித்தார் விநாயகர். அருகிலேயே ருத்ரகோடீசுவரரை பிரதிஷ்டை செய்து விமோசனம் பெற்றான் இந்திரன்.

பிட்சாண்டார் கோயில்: திருச்சிராப்பள்ளிக்கு வடக்கில் 6கி.மீ. தொலைவில் உத்தமர்கோவில் என அழைக்கப்படும் வைணவத்தலமும் அமைந்துள்ள மும்மூர்த்தித் தலம். பிரம்மா, சரஸ்வதிக்கு தனி சந்நிதிகள் உள்ளன.

கூடல்: மதுரை மாநகரில் அமைந்துள்ள வைணவ திவ்யதேசம். ‘கிருத மாலா’ எனும் ஆறு இரண்டாகப் பிரிந்து இந்தத் தலத்தை மாலைபோல் சுற்றி வந்து மீண்டும் ஒன்று சேருவதால், கூடல் என்று பெயர் பெற்றது. கடம்ப மரம், தல விரட்சம். அஷ்டாங்க விமானத்தில் வீற்றிருந்த, நின்ற மற்றும் சூரிய நாராயணன் ஆக மூன்று கோலங்களில் சேவை சாதிக்கிறார் வைகுந்தநாதர். தாயார்:மதுரவல்லி.
               
  நட்சத்திர மந்திரம்
 
வருணம் வரதம் வந்தே ஸீதாகலச தாரிணம்|
  பாசஹஸ்தம் சதபி~க் தேவதாம் தேவ வந்தி தம்||
  
 மிருத்யுஞ்சய மந்திரம்
  மிருத்யுஞ்சயாய ருத்ராய நீலகண்டாய சம்பN;வ|
  அமிர்தேச்வராய சர்வாய மகாதேவாய நம||
     
               பூரட்டாதி
    
     ‘திருக்கோளிலி’ எனப்படும் திருக்குவளை திருத்தலம், தஞ்சை மண்டலத்தில் பிரதானமான ஏழு சிவத்தலங்களில் ஒன்று. இவற்றை சப்தவிடங்கத்தலம் என்பார்கள். கோள்களின் (நவக்கிரகங்களின்) குற்றங்களைப் பொறுத்து அருள் செய்ததால் ‘கோளிலிநாதர்’ என்றும் இவருக்கு பெயர். நவக்கிரக தோ~ங்களை அகற்றும் பரிகாரத் தலமாகவும் இது திகழ்கிறது.
   
இந்தத் தலத்தின் நிகழ்ச்சிகள் அனைத்தையும் கண்டு, பேருவகை கொண்ட நட்சத்திரம் பூரட்டாதி. அதுதான் குபேரன் பிறந்த நட்சத்திரம். வுhனில் இரண்டு நட்சத்திரத் தொகுதியாக விளங்குகிறது. இது. இரவில் வானம் தெளிவாக விளங்கும் காலத்தில் இந்த நட்சத்திரத்தைக் காண முடியும் என்பார்கள். அன்னை வண்டமர் பூங்குழலி என்று அழகுப் பெயர் பூண்டிருக்கிறார். ‘தேற்றா’ மரமே இங்கு தல விருட்சம். பூரட்டாதி நட்சத்திரத்தின் விருட்சமும் அதுவே.
   
தியாகராஜப் பெருமான், அவனிவிடங்கராக (உலகப் பாதுகாவலராக) இங்கே அருள் பாலிக்கிறார். இந்தத் தலத்து விநாயகர் தியாக விநாயகர் என்றழைக்கப்படுகிறார்.
   
சுந்தரரின் அன்னதான சேவைக்காக குபேரன் நெல் வாரி வழங்கிய சம்பவத்தை, ‘நெல் அட்டிச் செல்லும் திருவிழா’ வாக, மாசிமக தினத்தன்று மிகவும் சிறப்பாக திருக்குவளையில் கொண்டாடுகிறார்கள். திருக்குவளை, திருவாரூர் மாவட்டத்தில், கச்சனம் அருகே உள்ளது.

             
  நட்சத்திர மந்திரம்
  ஸிரஸாஹம் அஜம் வந்தே ஏகபாதம் தமோபஹம்|
  தேவம் ப்ரோஷ்டபதேசானம் ஸர்வ தேவ நமஸ்க்ருத்||

  குபேர காயத்ரி

 ஓம் யகூராஜாய வித்மஹே வைச்ரவணாய தீமஹி|
   தந்நோ குபேர ப்ரசோதயாத்||
                          உத்திரட்டாதி
         
     திருநாங்கூர் எனும் வைணவ திவ்ய தேசத்தில், பராசவனம் என்று அழைக்கப்படும் இந்தப் பகுதியில் 11 திவ்ய தேசங்கள் உள்ளன. இந்தப் பதினோரு கோயில்களிலும் வீற்றிருக்கும் கருடாழ்வார்கள் அனைவரும் திருநாங்கூரில் கூடி, பக்தர்களுக்கு தரிசனம் அளித்து மகிழ்விக்கிறார்கள். இந்த வைபவம் தை அமாவாசைக்கு மறு நாள் நிகழும். இந்தப் பதினோரு கருட சேவைகை; கண்டு மகிழ, லட்சக்கணக்கில் மக்கள் கூடுவர்.
   
  திருநாங்கூரில் எம்பெருமான், நின்ற கோலத்தில், நிலமகள், திருமகளோடு, புருஷோத்தம பெருமாள் என்ற திருநாமம் கொண்டு சேவை சாதிக்கிறார். தாயார் புருஷோத்தம் நாயகி, தனி சந்நிதி கொண்டுள்ளாள். திருக்கோயிலின் வடக்கே உள்ள திருக்குளமே திருப்பாற்கடல் ஆகும். தல விருட்சம் வேம்பு.
   
திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாஸனம் செய்விக்கப்பட்ட திருக்கோயில் இது. எதிரில் ‘நம்பினார்க்கன்பன்’ கோயில் என்ற சிவாலயம் உள்ளது. மகாதேவ பீடம் என்று அதனை அழைப்பர். இந்தக் கோயில் தவிர வேறு பல சிவன் கோயில்களும் இந்தத் தலத்தைச் சுற்றிலும் அமைந்திருக்கின்றன. அதாவது பதினோரு வைணவக் கோயில்களுக்குச் சமமாக, பதினோரு சிவாலயங்கள் இருக்கின்றன. சைவமும் வைணவமும் ஒன்றுக்கொன்று இயைந்து தழைத்தோங்கிய திருத்தலம் இது. திருநாங்கூர் திருத்தலம் நாகை மாவட்டம், சீர்காழிக்கு தென்கிழக்கே 9 கி.மீ. தொலைவில் உள்ளது. அதன் அருகில் திருவெண்காடு, பூம்புகார் ஆகிய திருத்தலங்களும் உள்ளன.
   
உத்திரட்டாதி நட்சத்திர அன்பர்களுக்கு இன்னொரு பரிகாரக் கோயிலும் உள்ளது. அது, வைத்தீஸ்வரன் கோயில், புள்ளிருக்குவே;ர் என அழைக்கப்படும் தேவாரத் திருத்தலம் நாகை மாவட்டத்தில் உள்ளது. ‘செவ்வாய்’ பரிகாரத் தலமாகவும் இது விளங்குகிறது. இங்கு கோயில் கொண்டுள்ள செல்வமுத்துக் குமாரசுவாமி, தனிச்சிறப்பு பெற்றவர். இந்தத் திருத்தலத்தில் உள்ள வேம்படி ஆதி வைத்தியநாதரும், சித்தாமிர்த தீர்த்தமும் திருச்சாந்ருண்டை என்ற பிரசாதமும், எல்லா நோய்களையும் வினைகளையும் தீர்க்க வல்லவை என்கிறார்கள்.
       
உத்திரட்டாதி நட்சத்திரத்தின் அதிதேவதை அஹிர்புத்னீயர். திருமாலின் அம்சத்துடன், சங்கு – சக்ரதாரியாகக் காட்சி தருபவரே அஹிர்புத்னீயர். அர்த்தநாரீசுவரர் என்று சிவசக்தி சொரூபத்தைக் கூறுவது போல, திருமாலும் திருமகளும் இணைந்த வடிவமாகவும் இதைக் கூறுகிறது. சிவபெருமானைத் துதித்து, ‘சுதர்சனம்’ என்ற சக்ராயுதம் பெற்றார் திருமால். ஜலந்திரன் என்ற அசுரனைஅழித்திட எம்பெருமான், தனது கால்விரல் நகத்தினால் பூமியில் வட்டமாகக் கிழிக்க, அதை அசுரன் பெயர்த்தெடுத்தபோது, அதுவே ஆயிரமாயிரம் பற்கள் கொண்ட சக்ராயுதமாக மாறி, அவன் தலையைக் கொய்ததாம். அந்த சக்ராயுதமே ‘சுதர்சனம்’. சுதர்சன ஹோமம் நடத்துவது பற்றிய விதிமுறைகள், ‘அஹிர்புத்னீய சம்ஹிதை’ என்ற வடமொழி நூலில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
   
உத்திரட்டாதி நட்சத்திரத்தின் அதிதேவதை, விஷ்ணுவின் அம்சமானதால், திருமாலையும், திருமகளையும், காமதேனுவையும் உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் இஷ்டதெய்வங்களாகக் கொள்ளலாம்.      
                
    நட்சத்திர மந்திரம் 
   அஹிர்மே புத்னியோ பூயாத்முதே ப்ரோஷ்டபதேச்வர:|
   சங்க சக்ராங்கித கர: கிரீடோஜ்வல் மௌலிமான்||
   
காமதேனு காயத்ரி
   ஓம் காம காமாய வித்மஹே சர்வஜித்யை ச தீமஹி|
   தந்நோ தேனு ப்ரசோதயாத்|
                               
 ரேவதி
   
   
ரேவதி நட்சத்திரப் பரிகாரத் தலங்கள்  

இலுப்பைப்பட்டு: நாகை மாவட்டம், மயிலாடுதுறைக்கு மேற்கில் 13கி.மீ தொலைவில் மணல்மேடு என்ற ஊரக்கு அருகில் உள்ளது. தலவிருட்சம் இலுப்பை ஆனதால் இலுப்பைப்பட்டு என வழங்கப்படுகிறது. பஞ்சபாண்டவர்கள் பூஜித்த ஐந்து லிங்கங்கள் இங்கு உள்ளன. இதில் தருமபுத்திரர் பூஜித்த லிங்கம் நீலகண்டேசுவரர். அம்மன் - அமுதகரவல்லி.
இரும்பை மாகாளம்: திண்டிவனத்திலிருந்து 30கி.மீ தொலைவில்
உள்ளது. கடுவெளிச்சித்தர் தவம்புரிந்த தலம். இலுப்பை என்பதே இரும்பை என்று ஆயிற்று என்பர்.

திருவனந்தபுரம்: கேரள மாநிலத் தலைநகரம். அனந்தபத்மநாப
சுவாமி ஆலயம். தல விருட்சம் இலுப்பை.
            
   நட்சத்திர மந்திரம்
    பூஷ்ணம் பரமம் வந்தே ரேவதீசம் ச ம்ருத்யே|
    வராப யோஜ்வயகரம் ரத்ன சிம்ஹாசனே ஸ்திதம்||;
    
 மகாவிஷ்ணு காயத்ரி
    ஓம் நாராயணாய வித்மஹே வாஸீதேவாய தீமஹி|
    தந்நோ வி~;ணு ப்ரசோதயாத்||  

வெள்ளி, 5 பிப்ரவரி, 2016

பிறந்த நட்சத்திரப்படி ,பிரச்சினை தீர்க்கும் கோயில்கள் -மிருகசீரிடம் முதல் சுவாதி வரை

    27 நட்சத்திரத்திற்கு பரிகாரத் தலங்கள்; மற்றும் மந்திரங்கள்;.

 பிரச்சினை தீர்க்கும் கோயில்கள் -மிருகசீரிடம் முதல் சுவாதி வரை

 மிருகசீரிடம்

           
 பிறைச் சந்திரனை அணிந்தவாறு இறைவன் அருள்பாலிக்கும் தலங்கள் பலவும் மிருகசீரிட நட்சத்திரக்காரர்கள் வழிபட சிறந்த தலங்கள் ஆகும். அந்தத் தலங்களில்  சில:

ஒசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள சந்திரசூடேசுவரர் - மரகதாம்பிகை திருக்கோயில். பஞ்சலிங்கத் தலமாகவும் திகழும் தலம்.
கிருஷ்ணகிரி: தர்மபுரிக்கு வடக்கே 48கி.மீ தொலைவில் சந்திரமௌலீசுவரர் - பார்வதியம்மை திருக்கோவில்.

முசிறி: கரூர் மாவட்டம், காவிரியின் வடகரையி;ல் உள்ள தலம். கற்பூரவல்லி  சமேதராக சந்திரமௌலீசுவரர் அருள்பாலிக்கிறார்.
தாழமங்கை: தஞ்சை – பாபநாசம் சாலையில், அய்யம்பேட்டை அருகில் உள்ளது சந்திரமௌலீசுவரர் கோயில்.

எண்கண்: திருவாரூர் - தஞ்சாவூர் சாலையில் முகுந்தனூருக்கு
வடக்கே உள்ளது. இங்குள்ள ஆதிநாராயணப் பெருமாள் திருக்கோயில், கருடவாகனராக, மூலவர் பெருமாள் காட்சி தரும் ஒரே திருத்தலம்.
           

         மிருகசீரிட நட்சத்திர மந்திரம்

     ஸ்வேதவர்ணா க்ருத்: ஸோமோ த்வி புஜோ
      வரதோ அஸ்துமே,
    தஸாஸ்வர தமாருடோ மிருகசீர்~;ய தேவதா,
        சந்திர காயத்ரி மந்திரம்
     ஓம் பத்மத்வஜாய வித்மஹே ஹேம ரூபாய தீமஹி,
         தந்நோ ஸோம ப்ரசோதயாத்.
 
              திருவாதிரை

    
     திருவாதிரை நட்சத்திரத்துக்கு உரிய பரிகார மரம் ‘செங்காலி’ ஆகும். தன் வியாபாரத்துக்;காக சேந்தனார் சேகரித்து வைத்திருந்தாரே, அந்த செங்காலி மரம்தான். மிகவும் அபூர்வமாகவே  எந்தக் கோயிலிலும் தல விருட்சமாக இந்த மரம் அமையும். சென்னை, பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோயிலில் 27 நட்சத்திரங்களுக்கான பரிகார விருட்சங்களைப் பராமரிக்கிறார்கள். இது போல் இருக்கக் கூடிய தலங்கள் தவிர, செங்காலி மரத்தைத் தல விருட்சமாகக் கொண்ட கோயில்களைக் காண்பது அபூர்வமே.
     
இந்த நட்சத்திரக்காரர்கள் ஆடலரசன் அருள் பாலிக்கும் திருத்தலங்கள் அனைத்தையும் வழிபடலாம்.
     
சிவபெருமானுக்கு உரிய இதே திருவாதிரை நட்சத்திரத்தில் தான், திருமாலின் வாகனம் எனப் போற்றப்படும் பறவையரசன் பெரிய திருவடியான கருடனும் அவதரித்திருக்கிறார். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவன் கோயில் செல்லும்போது திருமாலின் வாகனமான கருடபகவானையும் மனதார வழிபடலாம்.

           
      திருவாதிரை நட்சத்திர மந்திரம்

    ருத்ர: ஸ்வேத வ்ருஷ்ருடே: ஸ்வேதமால்ய: சதுர்புஜ:மி
    சூல கட்க அபயவரான் ததானோ மே ப்ரஸீதது மிமி
         ருத்ர(சிவன்) காயத்ரி
      ஓம் தத்புருஷ்ய வித்மஹே
         மஹாதேவாய தீமஹி-
     தந்நோ ருத்ர ப்ரசோதயாத்--

          புனர் பூசம்

     இந்த நட்சத்திரக்காரர்கள் ராமபிரானையே பரிகார தெய்வமாகக் கொள்ளலாம்;. கடக ராசிக்காரர்களுக்கு அருள் பாலிக்கும் கர்க்கடேசுவரர், கும்பகோணத்துக்கு அருகில் நண்டாங்கோயில் என்று அழைக்கப்படும் திருந்துதேவன்குடியில்; காத்திருக்கிறார். அவரையும் வணங்கலாம். வாழ்க்கையில் சந்திக்கும் கடுமையான பிரச்னைகளிலிருந்து அவர் காத்திடுவார். மூங்கிலை, தல விருட்சமாகக் கொண்டுள்ள பிற தலங்களிலும் வழிபடலாம்.
     
ராமபிரானை மையமாகக் கொண்டுள்ள திருவள்;ர் வீரராகவப் பெருமாள் கோயில், தில்லைவளாகம், வடுவூர், அதம்பார், குடந்தை ராமசாமி கோயில் ஆகியவற்றில் ராமபிரானை வணங்கியும் இவர்கள் பரிகாரம் பெறலாம். திருவள்;ர், மதுராந்தகம், முடிகொண்டான் ஆகிய தலங்களில் கோதண்ட ராமனாக ராமபிரானை சேவிக்கலாம்.
    ;
    மூங்கிலை தல மரமாகக் கொண்ட தலங்கள்!

திருப்பாசூர்: சென்னைக்கு மேற்கில் 50 கி.மீ தொலைவில் உள்ளது. தீண்டாத திருமேனியாக, மூங்கில் அடியில் முளைத்தெழுந்தவர், பாசூர்நாதர்.சோழன் கரிகாலனுக்கு உதவ, இறைவன் பாம்பாட்டியாக வந்த தலம். திருமால், மது – கைடபரைக் கொன்ற பாவம் தீர, ஈசுவரனை வழிபட்ட தலம். தேவாரப்பதிகம் கொண்டது.

திருவெண்ணெய்நல்லூர்: விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூருக்கு தென்கிழக்கில் 20கி.மீ. தொலைவில் உள்ளது. கிருபாபுரீசுவரர் - மங்களாம்பிகை அருள் பாலிக்கும் திருத்தலம். சிவபெருமான், சுந்தரமூர்த்தி சுவாமிகளோடு வழக்காடி, தடுத்தாட் கொண்ட தலம். சுந்தரர், இறைவனை ‘பித்தா பிறைசூடி’ என அழைத்து, பதிகம் பாடிய திருத்தலம்.

சீர்காழி: நாகை மாவட்டம், மயிலாடுதுறைக்கு வடக்கே உள்ள தேவாரத் திருத்தலம். திருஞானசம்பந்தரது அவதாரத் தலம். அம்பிகையிடம் ஞானப்பால் அருந்தி, ‘தோடுடைய செவியன்’ எனும்; தேவார முதல் பதிகம் பாடிய தலம். ஊழிpக்காலத்திலும் அழியாத தலம் எனப் புகழ்பெற்றது. பிரம்மபுரீசுவரர் - திருநிலை நாயகி அருள் பாலிக்கும் தலம்.
திருவேட்களம்: கடலூர் மாவட்டம், சிதம்பரத்துக்கு கிழக்கில் 3கி.மீ. தொலைவில் உள்ளது. இறைவன் பாசுபதேசுவரர். அன்னை நல்லநாயகி, வேடனாக எழுந்தருளி, அர்ஜூனனோடு போரிட்டு, அவனுக்கு பாசுபதாஸ்திரம் அருளிய தலம். இங்கு எழுந்தருளியுள்ள கிராதமூர்த்தி கோலம் காணற்கு அரியது.

திருந்துதேவன்குடி: கும்பகோணத்துக்கு அருகில் ‘நண்டாங்கோயில்’ என்று அழைக்கப்படும் திருத்தலம். அருமருந்துடையார் - அருமருந்து நாயகி அருள் பாலிக்கும் தலம். கடக ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய திருத்தலம்.
       
        புனர்பூச நட்சத்திர அதிதேவதை மந்திரம்

  அதிதி பீதவர்ணா ச ஸ்ருக்ஸ்ருவெள தர்ப்ப சம்யுதௌமி

ததானா ஸீபதா பூயாத் புனர்வசு க்ருதாஹ்வயா
ராம காயத்ரி
ஓம் தஸரதாய வித்மஹே சீதாவல்லபாய தீமஹி
தந்நோ ராம: ப்ரசோதயாத். 


            பூசம்
     

அரச மரத்தைத் தல மரமாகக் கொண்ட தலங்கள் எல்லாம் உங்களுக்கு வரம் தரும் கோயிலாக இருக்கும்.


ஒழுந்தியாப்பட்டு: திண்டிவனத்திலிருந்து புதுச்சேரி செல்லும் சாலையில் உள்ள தலம். தேவாரப் பதிகம் பெற்றது. அரசடி தீர்த்தமும், அரச மரமும் கொண்டது. அரசிலி நாதர் என்று திருநாமம் கொண்டுள்ள ஈசுவரன், பெரிய நாயகியுடன் அருள் பாலிக்கிறார்.

ஆவூர்: கும்பகோணம் - திருக்கருகாவூர் சாலையில் உள்ள திருத்;தலம். பசுபதீசுவரர் - மங்களாம்பிகை அருள் பாலிக்;கும் தலம். காமதேனு வழிபட்ட தலம் என்பதால் ஆவூர் எனப்படுகிறது. ஐந்து பைரவர்கள் சந்நிதி கொண்ட சிறப்பு பெற்றது.

கோனேரிராஜபுரம்: கும்பகோணம் - காரைக்கால் சாலையில் எஸ்.புதூர் என்ற ஊரிலிருந்து 2கி.மீ தூரத்தில் உள்ளது. உலகப் புகழ்மிக்க மிகப்பெரிய நடராஜர் சிலை இங்கு உள்ளது. உமாமகேஸ்வரர் - மங்களாம்பிகை அருள் பாலிக்கும் தலம்.

பரிதிநியமம்: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடுக்கு வடக்கே 4கி.மீ. பரிதி (சூரியன்) வழிபட்ட தலம். பாஸ்கரேசுவரர் - மங்களாம்பிகை அருள் பாலிக்கும் தலம். பாஸ்கரேசுவரர் - மங்களாம்பிகை அருள் பாலிக்கும் தலம். பருத்தியப்பர் என்றும் அழைக்கப்படுகிறார்.

திருச்சுழி: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டைக்கு தென்மேற்கில் உள்ள தேவாரத் திருத்தலம். திருமேனிநாதர் - துணைமாலை நாயகி. ருமண மகரி~p அவதாரத் தலம்.

அழகர்கோயில்: திருமாலிருஞ்சோலை என அழைக்கப்படும் தலம். மதுரைக்கு வடக்கிழக்கில் 20கி.மீ. தொலைவில் உள்ளது. கோட்டையுடன் கூடிய பெரிய கோயில். பஞ்சாயுதங்களுடன் பரமசுவாமி, ஸ்ரீதேவி – பூதேவியுடன் சேவை சாதிக்கிறார். உற்சவர், ‘அழகர்’ எனும் சுந்கரராஜப் பெருமாள். 108திவ்ய தேசங்களில் ஒன்று.

திருச்சேறை: கும்பகோணம் - திருவாரூர் சாலையில் 15கி.மீ. தொலைவில் உள்ளது. சாரநாதப் பெருமாள் சேவை சாதிக்கிறார். காவிரித்தாய் அரச மரத்தடியில் வீற்றிருக்கிறாள். ஐந்து தேவியருடன் பரந்தாமன் காட்சி தரும் ஒரே திருத்தலம்.
         
           பூச நட்சத்திர மந்திரம்

  வந்தே ப்ரஹஸ்பதிம் பு~;ய தேவதாம் திவ்ய விக்ரஹம்,
  ஸர்வாபரண ஸம்பன்னம் ஸக்ர மந்த்ரிணமாதராத்,
          அதிதேவதை பிரகஸ்பதி மந்திரம்
            ஓம் பராவரசாய வித்மஹே
               குருவ்யக்தாய தீமஹி,
             தந்நோ குரு ப்ரசோதயாத்.
             
             ஆயில்யம்

         
      ஆயில்ய நட்சத்திரப் பரிகாரத் தலங்கள்

திருப்புறம்பயம்: தஞ்சை மாவட்டம்;, கும்பகோணத்துக்கு வடமேற்கில் 8கி.மீ. தொலைவில் உள்ள திருத்தலம். சுயம்புலிங்கமாக  சாட்சிநாதர் அருள் பாலிக்கிறார். தட்சிணாமூர்த்தி உரிய 24 தலங்களில் இதுவும் ஒன்று.

திருப்புகலூர்: திருவாரூர் மாவட்டம், நன்னிலத்துக்கு கிழக்கே 8கி.மீ. தொலைவில் உள்ளது. அக்னீசுவரர் அருள் பாலிக்கும் தலம். ‘வாஸ்து கோயில்’ எனப் புகழ்பெற்றுள்ளது.

சங்கரன்கோவில்: திருநெல்வேலிக்கு வடக்கே 50கி.மீ. தொலைவில் உள்ள திருத்தலம். சங்கரலிங்கத்துக்கும் கோமதி அம்மனுக்கும் இடையில் சங்கர நாராயணர் சந்நிதி உள்ளது. இங்கு வழங்கப்படும் புன்னை மரப்பட்டை செல்லரித்து உருவான புற்றுமண் பிரசாதம், எல்லா நோய்களையும் தீர்க்கவல்ல அருமருந்து.

திருப்புனவாசல்;: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கிக்கு தென்கிழக்கில் 40கி.மீ. தொலைவில் உள்ளது. நான்கு யுகங்களுக்கும் சாட்சியாக இருக்கும் சதுரக்கள்ளி, குருந்த மரம், மகிழ மரம் மற்றும் புன்னை மரங்களை தல விருட்சமாகக் கொண்ட பழம்பதி.

புள்ளபூதங்குடி: கும்பகோணத்துக்கு வடமேற்கில் 11கி.மீ. தொலைவில் உள்ளது. ‘வல்வில் ராமன்’ புஜங்க சயனராக சேவை சாதிக்கிறார். புன்னை மரம் தல விருட்சம்.

திருவிடந்தை: சென்னைக்கு தெற்கில், கிழக்கிக் கடற்கரைச் சாலையில் 42கி.மீ. பயணித்து இந்தத் தலத்தை அடையலாம். ஆதிவராகப் பெருமாள் அகிலவல்லி நாச்சியாருடன் சேவை சாதிக்கிறார். நித்யகல்;யாணப் பெருமாள் என்றும் இவர் அழைக்கப்படுகிறார்.

நாகூர்: நாகை மாவட்டம், நாகப்பட்டினத்துக்கு வடக்கே 4கி.மீ. புன்னாகவனம் என்றழைக்கப்பட்ட, நாகநாதர் - நாகவல்லி அருள் பாலிக்கும் தலம். தல மரம் புன்னை.
            
   ஆயில்ய நட்சத்திர மந்திரம்

ஸர்ப்போ ரக்தஸ் த்ரிநேத்ரஸ் ச பலஸோபி கரத்வய:
ஆஸ்லே~h தேவதா பீதாம்பர த்ருத் வரதோ அஸ்துமே,
     ஸர்ப்ப காயத்ரி
ஓம் ஸர்ப்பராஜாய வித்மஹே
   சுக்லபாதாய தீமஹி,
தந்நோ அனந்த ப்ரசோதயாத்.

                மகம்
      
மக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய தலங்கள்

திருவெண்காடு: நாகை மாவட்டம், சீர்காழிக்குத் தென்கிழக்கே 10கி.மீ. தொலைவில் உள்ள தலம். சோம, சூரிய, அக்னி தீர்த்தங்களும், ருத்ரபாதமும் உள்ள தலம். திருவெண்காட்ட{சுவரர் - பிரம்ம வித்யாம்பிகை, அகோர மூர்த்தி, சௌம்யகாளி சந்நதிகள் சிறப்பு பெற்றவை. நவக்கிரகங்களில் புதன்; தலமாக, தனி சந்நதியோடு விளங்குகிறது.;  காசிக்கு சமாமன ஆறு தலங்களில் திருவெண்காடும் ஒன்று.

திருக்கச்சூர்: காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டிலிருந்து வடக்கே 12கி.மீ. திருமால் ஆமை வடிவில் ஈசனை வழிபட்டதால் கச்சூர் எனப்பெயர் கொண்டது. அஞ்சனாட்சி தனி சந்நதியில் கூர்ம தீர்த்தம் புனிதமானது.
திருவரத்துறை: கடலூர் மாவட்டம், திட்டக்குடிக்கு கிழக்கே 10கி.மீ. அறத்துறை நாதர், தீர்த்தபுரீசுவரர் என்றும்; பெயர் கொண்டுள்ளார். அன்னை ஆனந்தநாயகி. சுப்தரி~pகள் வழிபட்ட, திரு ஆலந்துறை உள்ளிட்ட ஏழு தலங்கள் இதனைச் சுற்றி அமைந்துள்ளன.

கீழப்பழுவூர்:; அரியலூர் மாவட்டம், அரியலூருக்கு தெற்கே 10கி.மீ. ஆலந்துறை நாதராக ஈசுவரன் அருந்தவநாயகியுடன் அருள்பாலிக்கிறார். தாயைக் கொன்ற பழிநீங்கிட பரசுராமர் பூசித்த பெருமை கொண்டது.

திருஆலம்பொழில்: தஞ்சை மாவட்டம், திருவையாறுக்கு அருகில் 5 கி.மீ. மேற்கு நோக்கியபடி ஆத்மநாதேசுவரர் அருள்பாலிக்கிறார். ஞானாம்பிகை தனி சந்நதி கொண்டுள்ளாள். அ~;டவசுக்களால் பூசிக்கப்பட்ட தலம்.

திருஅன்பிலாந்துறை: திருச்சி மாவட்டம், லால்குடிக்கு கிழக்கே 8கி.மீ. சத்யவாகீசுவரர், சௌந்தரநாயகி அருள்பாலிக்கும் தலம். செவிசாய்த்த விநாயகர் தனிச்சிறப்பு பெற்றவர். திவ்விய தேச வைணவத் தலங்களில் ஒன்றாகத் திகழும் அன்பில், திருமாலயன்துறை என்றும் அழைக்கப்படுகிறது. ஆழகிய மணவாளராக சுந்தரராஜப்பெருமாள் சேவை சாதிக்கும் தலம். தாயார் - அழகியவல்லி நாச்சியார்.

திருவாலங்காடு;: (இதே பெயரில் உள்ள இன்னொரு தலம்) கும்பகோணம் - மயிலாடுதுறை பாதையில் உள்ளது. மூலவர், வடாரண்யேஸ்வரர்.

                   பூரம்

        
       பூர நட்சத்திரப் பரிகாரத் தலங்கள்

 நாலூர்: தஞ்சை மாவட்டம், கும்பகோணம் - திருவாரூர் சாலையில் உள்ள திருச்சேறைக்கு அருகில் உள்ளது. மாடக்கோயில். பலாசவன நாதர் - பெரியநாயகி அருள் பாலிக்கும் தலம்.

கஞ்சனூர்: கும்பகோணம் - மயிலாடுதுறை (கல்லணை சாலையில்) உள்ள திருத்தலம்;. சுக்கிரன் பரிகாரத் தலமாகப் புகழ் பெற்ற வைப்புத் தலம். அக்னீசுவனரர் - கற்பகாம்பிகை அருள் பாலிக்கும் தலம்.

தலைச்சங்காடு: நாகை மாவட்டம்;, மயிலாடுதுறை – திருக்கடையூர் சாலையில் உள்ள ஆக்கூருக்கு வடக்கில் (சீர்காழி – நாகை சாலையில்) 1கி.மீ தூரத்தில் உள்ளது. கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில், சங்கருணாதேசுவரர் - சௌந்தரநாயகி அருள் பாலிக்கும் தலம். தல மரம் - புரசு என்ற பலாசமரம்.

சிவபெருமானை வழிபட்டு ‘பாஞ்சஜன்யம்’ பெற்ற திருமால், இங்கு தனிக்கோயில் எழுந்தருளியுள்ளார். வெண்சுடர்ப் பெருமாள், நாண்மதியப் பெருமாள் என்பவை அவரது திருநாமங்கள். தலைச்சங்க நாச்சியார் என்ற திருநாமத்துடன் தாயார் தனி சந்நிதி கொண்டுள்ளார். சோழ நாட்டு வைணவ திவ்ய தேசங்களில் ஒன்று இது.
              
பூர நட்சத்திர அதிதேவதை மந்திரம்

ஸம்பூஜயாமி அர்யமாணம் பல்குனி தார தேவதாம்,
தூம்ரவர்ணம் ரதாரூடம் ஸஸக்திகர சோயினம்.
   
                உத்திரம்           

            
        உத்திர நட்சத்திர பரிகாரத் தலங்கள்

காஞ்சிபுரம்: நெல்லுக்காரத் தெருவில் உள்ள உரட்டை மண்டபம் அருகில் உள்ள அரிசாபந்தீர்த்தார் திருக்கோயில், பிருகு முனிவரால் ஏற்பட்ட சாபத்தை நீக்கிக்கொள்ள திருமால் வணங்கிய தலம்.

திருவக்கரை: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அ;ருகில் 25கி.மீ. தொலைவில் உள்ள தலம். கோயிலின் உள்ளே பிரயோகச் சக்கரத்துடன் கூடிய வரதராஜப் பெருமாள்.

செய்யூர்: காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகத்துக்கு தென்கிழக்கே 24கி.மீ. தெ;hலைவில் உள்ள செய்கையம்பதி. தேவேந்திரன் மற்றும் கௌதமர் வழிபட்ட வன்மீகநாதர் தல இறைவன்.

கூவத்தூர்: செய்யூருக்கு வடக்கே 14கி.மீ சிதம்பரேசுவரர் கோயில்.

மயிலாடுதுறை: கௌரி மாயூரம் என அழைக்கப்படும்; மயிலாடுதுறை நாகை மாவட்டத்தில் உள்ளது. மயிலுருவில் அன்னை, ஈசனை பூஜித்த தலம்;. துலா ஸ்நானம் - முடவன் முழுக்கு சிறப்பு பெற்றது.
(மேலே குறிப்பிட்ட தலங்கள் எல்லாம் கழுதை சுமை தூக்கிக் கடந்து வந்த ஊர்கள்)
                             
             
          அதிதேவதை மந்திரம்

   பகம் ரதவராரூடம் த்விபுஜம் சங்க சக்ரிணம்,
   பல்குனி தேவதாம் த்யாயேத் பக்;தாபீ~;ட வரப்ரதம்,
             மகாலட்சுமி காயத்ரி
 ஓம் மஹாலகூ;மியை ச வித்;மஹே வி~;ணுபத்ந்யை ச தீமஹி,
 தந்நோ லகூ;மி ப்ரசோதயாத்.
 
              ஹஸ்தம்

       
      ஹஸ்த நட்சத்திரப் பரிகாரத் தலங்கள்

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத் தலைநகரான இங்கு அமைந்துள்ளது. கோட்டை கோயில் என்றழைக்கப்படும், நாயகன் குடவேல மரத்தின் கீழ் கோயில் கொண்டதால், வேளாலீசுவரர் எனப்படுகிறார். இங்கு கல்யாண காமாட்சியாக அன்னை அருள் பாலிக்கிறாள்.

இங்கு மற்றொரு சிறப்பம்சம், ராஜதுர்கை அம்மன். சூலமும் சங்கும் ஏந்தி, சூலத்தால் மகி~hசுரனை வதம் செய்த நிலையில், அவன் தோள் மீது ஒரு திருப்பாதத்தை வைத்தபடி காட்சி தருகிறாள். ஆண்டுக்கு ஒரு முறை ஆடி மாதம், மூன்றாவது செவ்வாய் அன்று மட்டுமே, அவளது அழகுக் கோலத்தை முழமையாக தரிசிக்கலாம். மற்ற நாட்களில் முகதரிசனம் மட்டுமே.

செய்யாறு: காஞ்சிபுரத்துக்கு தெற்கே 28கி.மீ தொலைவிலுள்ள, திருவத்திபுரம் னெ;று அழைக்கப்படும் தலம். சம்பந்தர் பெருமான் ஆண் பனையை பெண் பனையாக்கிய அற்புதம் நிகழ்ந்த தலம். இறைவன்; - வேதபுரீசுவரர், இறைவி - இளமுலை நாயகி. வேத தீர்த்தம்.

புவனகிரி: கடலூர் மாவட்டம், சிதம்பரத்துக்கு வடமேற்கில் 7கி.மீ. தொலைவில் உள்ளது. வேதபுரீசுவரர் - மீனாட்சியம்மன் அருள் பாலிக்கும் தலம்.

ஏமப்பூர்: விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூருக்கு அருகில் 2கி.மீ. தொலைவில் உள்ளது. இதுவும் வேதபுரீசுவரரின் திருக்கோயில்தான்.
எழிலூர்: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டிக்கு மேற்கில் 4கி.மீ தொலைவில் உள்ள வேதபுரீசுவரர்; ஆலயம்.
திருவாதவூர்: மதுரைக்கு வடகிழக்கில் 18கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மாணிக்கவாசகர்  அவதாரத் தலம். புரு~h மிருக தீர்த்தம், இங்கு தனிச்சிறப்பு வாய்ந்தது. வேதநாதர் - ஆரணிவல்லியம்மை அருள் பாலிக்கும் தலம்.



              
             அதிதேவதை மந்திரம்

  ஸவிதா ரமஹம் வந்தே ஸப்தாஸ்வ ரதவாகனம்,
  பத்மாஸனஸ்தம் சாயே~ம் ஹஸ்த நஸ்ஸத்ர தேவதாம்,
             சூரிய காயத்ரி
  ஓம் ஆதித்யாய வித்மஹே மார்த்தாண்டாய தீமஹி,
   தந்நோ சூர்ய ப்ரசோதயாத்.

           சித்திரை

   
 சித்திரை நட்சத்திர அன்பர்கள் வழிபடக் கூடிய தலங்கள்

அண்ணன்கோயில்: நாகை மாவட்டம் சீர்காழிக்கு தென்கிழக்கே 8கி.மீ. தொலைவில் உள்ளது. அண்ணன் பெருமாள் கோயில், வில்வமரத்தடியில் திருமால், சூரியவம்ச சுவேதனுக்கு காட்சி தந்த தலம்.
தாடிக்கொம்பு: திண்டுக்கல்லுக்கு வடக்கே 8கி.மீ.தொலைவில் உள்ள சௌந்தரராஜப் பெருமாள் கோயில். நாயக்கர் கால சிற்பக் கலைக்கு புகழ்பெற்ற திருத்தலம்.

திருநாராயணபுரம்: கரூர் மாவட்டம், முசிறிக்கு மேற்கில் 15கி.மீ. தொலைவில் உள்ளது. காளமேகப் பெருமாள், பூதேவி - ஸ்ரீதேவி சமேதராக சேவை சாதிக்கிறார். சக்கரத்தாழ்வார் சந்நதி தனிச்சிறப்பு உடையது.
நாச்சியார் கோயில்: தஞ்சை மாவட்டம், கும்பகோணத்துக்கு தென்கிழக்கே 9கி.மீ. தொலைவில் உள்ளது. ஸ்ரீநிவாசப் பெருமாள், தாயாரை மணம் புரியும் கோலத்தில் காட்சி தரும் தலம்.

திருவல்லம்: சென்னை – காட்பாடி ரயில்பாதையில் திருவல்லம் ரயில் நிலையத்துக்கு 3கி.மீ. வடகிழக்கே உள்ளது. திருவல்லநாதர், வல்லாம்பிகையுடன் அருள் பாலிக்கும் தலம்.

திருவக்கரை: திண்டிவனம் - புதுச்சேரி பாதையில் உள்ள புகழ்பெற்ற வக்ரகாளி தலம். சந்திரசேகரர், வடிவாம்பிகையுடன் கொலுவீற்றிருக்கிறார்.
திருக்கோயிலூர்: பெண்ணையாற்றின் தென்கரையில் அமைந்த தலம். அட்டவீரட்டத் தலங்களில் ஒன்று. வீரட்டேசுவரர் - சிவானந்தவல்;லி இருவரும் தல நாயகர்கள்.

திருவையாறு: தஞ்சாவூருக்கு வடக்கே 11கி.மீ தொலைவில் உள்ள தலம். பஞ்சநதீசுவரர் - அறம் வளர்த்த நாயகி, ஆடி அமாவாசை நாளில் அப்பர் பெருமானுக்கு எம்பெருமான் கயிலாயக் காட்சி அருளிய தலம்.
திருவெறும்பூர்: திருச்சிராப்பள்ளி – தஞ்சை சாலையில் 10கி.மீ. தொலைவில் உள்ளது. தேவர்கள் எறும்பு வடிவம் கொண்டு எறும்பீசரை பூஜித்த தலம்.
திருநெடுங்களம்: திருவெறும்பூருக்கு கிழக்கே 10கி.மீ. தொலைவில் உள்ளது. நித்ய சுந்தரர் - ஒப்பிலாநாயகி.

திருப்பூந்துருத்தி: தஞ்சாவூருக்கு வடக்கே, கண்டியூருக்கு மேற்கில் 3கி.மீ. தொலைவில் உள்ளது. சப்தஸ்தானத் தலங்களில் ஒன்று. பு~;பவன் நாதர் - சௌந்தரநாயகி.

திருக்கண்டியூர்: தஞ்சைக்கு வடக்கில் 10கி.மீ. தொலைவில் உள்ளது. அட்ட வீரட்டத் தலங்களிதல், பிரம்மாவின் தலையைக் கொய்த தலம். பிரம்ம சிரக்கண்டீசுவரர்; - மங்களநாயகி.

திருவலஞ்சுழி: கும்பகோணத்துக்கு மேற்கில் 6கி.மீ. தொலைவில் உள்ளது. வெள்ளைப் பிள்ளையாரால் புகழ்பெற்ற தலம். சுவாமிமலைக்கு அருகில் உள்ளது. செஞ்சடைநாதர் - பெரிய நாயகி.

நன்னிலம்: மயிலாடுதுறை – திருவாரூர் இடையே அமைந்த திருத்தலம். தேவர்கள் தேனீக்களாக வழிபட்ட தலம். மதுவனேசுவரர் - மதுவனநாயகி.
இடும்பாவனம்: திருத்துறைப்பூண்டிக்கு தென்மேற்கில் 16கி.மீ. தொலைவில் உள்ளது. சற்குணநாதர் - மங்களநாயகி.
        
         அதிதேவதை மந்திரம் 

   த்வஷ்டாரம் ரதமாரூடம் சித்ரா நகூத்ர தேவதாம்|
    சங்க சக்ரான்விதகரம் கிரீடிநமஹம் பஜே||
            சக்கரத்தாழ்வார் காயத்ரி
     ஓம் சுதர்சனாய வித்மஹே மகா ஜ்வாலாய தீமஹி|
     தந்நச் சக்ர ப்ரசோதயாத்||

    சுவாதி
    
     சுவாதி நட்சத்திரப் பரிகாரத் தலங்கள்

திருவிடை மருதூர்: குடந்தை – மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் கும்பகோணத்துக்கு வடகிழக்கே 9 கி.மீட்டரில் உள்ளது. இது ஒரு பஞ்சலிங்கத் தலம். வரகுண பாண்டியனுக்கு ஏற்படடிருந்த பிரம்மஹத்தி தோ~த்தை விலக்கியருளிய திருத்தலம். அஸ்வமேத பிராகாரம், பிரணவப் பிராகாரம், கொடுமுடிப் பிராகாரம் ஆகியவற்றை பக்தி சிரத்தையுடன் வலம் வருவதால், முன்வினை தோ~ம் அனைத்திலிருந்தும் விடுபட முடியும். தல மரம் - மருத மரம். மகாலிங்கசுவாமி, மருதவாணராக அருள்பாலிக்கும் தலம் இது. தல நாயகி, பிருஹத்குஜாம்பிகை, தனிச் சந்நதி கொண்டுள்ளார். சந்திர பகவான்; பிரதிஷ்டை செய்து வழிபட்ட 27 நட்சத்திர லிங்கங்களும் ஒரே மண்டபத்தில் அமையப் பெற்றிருப்பது தனிச்சிறப்பு.

திருப்புடை மருதூர்: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்துக்கு வடகிழக்கே 7கி.மீ. தொலைவில், தாமிர பரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இந்திரன் வழிபட்ட தலம். தைப்பூசத்தன்று தரிசனம் செய்தல் தனிச் சிறப்பு வாய்ந்தது.
பெரிய திருக்கோணம்: அரியலூருக்குத் தென்கிழக்கே 17 கி.மீ மருதையாற்றின் கரையில் அமைந்துள்ள திருத்தலம், ஆதிமத்யார்ஜூனேசுவரர் - பிருஹத்குஜாம்பிகை அருள்பாலிக்கும் தலம்.

கடத்தூர்: கோவை மாவட்டம், உடுமலைப்பேட்டைக்கு வடகிழக்கே 18கி.மீ. தொலைவில், அமராவதி ஆற்றின் கரையில் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கும் அர்ஜூனேசுவரர் திருக்கோயில்.
பிள்ளையார்பட்டி: சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூருக்கு கிழக்கே 8கி.மீட்டரில் உள்ள மருதங்குடி எனப்படும், மருதீசுவரர் அருள்பாலிக்கும் திருத்தலம். இத்தலத்தில் கற்பக விநாயகர் மிகவும் பிரசித்தி பெற்;றவர்.

நயினார் கோயில்: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடிக்குக் கிழக்கே 12கி.மீ தொலைவில் மருதமரத்தை தலவிருட்சமாகக் கொண்ட நாகநாதர் திருக்கோயில், வாசுகி தீர்த்தம், மங்கள தீர்த்தம் என்று இருதிருக்குளங்கள்.
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தருகில் உள்ள காட்டழகிய சிங்கர் திருக்கோயில்.
 
          வாயு பகவான் மந்திரம்

    வாயும் மிருக வராரூடம் ஸ்வாதி நட்சத்திர தேவதாம்|                 சர்மோஜ்வலகர த்விதயம் ப்ரணமாம்யஹம்||
              
நரசிம்ம காயத்ரி

    ஓம் வஜ்ரநகாய வித்மஹே தீகூ;ண தம்~;ட்ராய தீமஹி|
     தந்நோ நரசிம்ஹ ப்ரசோதயாத்||