ஞாயிறு, 30 டிசம்பர், 2012

உலக விஞ்ஞானிகளை வியக்க வைத்த, ஒன்பது எழுத்துக்களில் தமிழன் கணிக்கும் பஞ்சாங்கம்;


உலக விஞ்ஞானிகளை வியக்க வைத்த,
ஒன்பது எழுத்துக்களில் தமிழன் கணிக்கும் பஞ்சாங்கம்;

      
பல பிரம்மாண்டமான நவீன கருவிகளைக் கொண்டு கணிணியின் துணையுடன் துல்லியமாகக் கணிக்கப்படும் கிரகணங்களைத் தமிழர்களின் பஞ்சாங்கம் அந்தக் கருவிகளின் துணை இன்றி வினாடி சுத்தமாகக் கணித்துப் பல நூறு ஆண்டுகளாகச் சொல்லி வருகிறது என்றால் அதிசயமாக இல்லை? இதை எப்படித் துல்லியமாக தமிழர்களால் கணிக்க முடிகிறது என்று உலகெங்கிலும் உள்ள வானியல் விஞ்ஞானிகளே ஆச்சரியப்படுகின்றனர்! உலகமே வியக்கும் பஞ்சாங்கம் தமிழனின் அபூர்வ வானியல், கணித, ஜோதிட அறிவைத் தெள்ளென விளக்கும் ஒரு அபூர்வ கலை! இப்படிப்பட்ட பஞ்சாங்கம் நம்மிடம் இருப்பதை எண்ணிப் பெருமைப்படாமல் அதை இகழும் பகுத்தறிவாளர்களை தமிழர்கள் என்று எப்படிக் கூற முடியும்? இதை நாம் ‘பேடண்ட்’  எடுக்காவிட்டால் மஞ்சளைத் துணிந்து பேடண்ட் எடுக்க முயன்றது போல் இதையும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தனதுடைமையாக்கிக் கொள்ளும்!   

      தமிழர்களின் பஞ்சாங்கக் கணிப்பு அதிசயமான ஒன்று! அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ ஆகிய ஒன்பது எழுத்துக்களை வைத்துக் கொண்டே பஞ்சாங்கத்தைத் தமிழர்கள் கணித்து விடுவது வியப்புக்குரிய ஒன்று. ஐந்து விரல்களை வைத்துக் கொண்டு ஜோதிடர்கள் துல்லியமாகப் போடும் கணக்கு நேரில் பார்த்து வியத்தற்கு உரியதாகும்! தமிழர் அல்லாத இதர பாரத மாநிலங்கள் காதி ஒன்பது எழுத்துக்கள்,டாதி ஒன்பது எழுத்துக்கள்,பாதி ஐந்து எழுத்துக்கள்,யாதி எட்டு எழுத்துக்கள் ஆக 31எழுத்துக்களைக் கொண்டு பஞ்சாங்கத்தைக் கணிக்கிறார்கள்!

     சூரிய கிரகணம் சந்திர கிரகணம் ஆகியவற்றை இவர்கள் துல்லியமாகக் கணித்து பஞ்சாங்கத்தில் பதிவது உள்ளிட்ட ஏராளமான திதி,வாரம்,நட்சத்திரம்,யோகம், கரணம் பற்றிய உண்மைகளைப்  பஞ்சாங்கம் தெரிவிக்கிறது. இது இல்லாமல் நமது வாழ்க்கை முறை இல்லை!

1980ல் ஏற்பட்ட முழு சூரியகிரகணம் பற்றிய தினமணியின் செய்திக் கட்டுரை

   காலம் காலமாக கிரகணங்களைப் பற்றிய உண்மைகளைப் பஞ்சாங்கம் தெரிவித்து வருகிறதென்றாலும் கூட 1980ல் அபூர்வமாக ஏற்பட்ட முழு சூரிய கிரகணம் நமது பஞ்சாங்கம் பற்றிய அருமையை உலகம் உணர வழி வகுத்தது.16-21980 சனிக்கிழமை அமாவாசையன்று  கேது கிரஸ்தம் அவிட்ட நக்ஷத்திரம்  சென்னை நேரப்படி பகல் இரண்டு மணி 29 நிமிட அளவில் பூரண சூரிய கிரகணம் ஆரம்பமாகி மாலை 4-35க்கு முடிவடைந்தது. உலகெங்கிலும் இருந்து விஞ்ஞானிகள் அபூர்வமாக நிகழும் இந்த பூரண சூரிய கிரகணத்தைப் பற்றி ஆராய்ச்சி நடத்தவும் அனுபவபூர்வமாகப் பார்ப்பதற்கும் இந்தியாவில் சூரிய தேவன் ஆலயம் இருக்கும் கோனார்க் நோக்கி விரைந்து வந்தனர். ஏனெனில் இப்படிப்பட்ட பூரண சூரிய கிரகணம் அடுத்தாற்போல இன்னும் 360 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் ஏற்படும்!

  அந்த சூரிய கிரகணத்தை ஒட்டி தினமணி நாளேடு தனது 14-2-1980 இதழில்‘புராதனமான கணித சாஸ்திர வெற்றி’ என்ற தலைப்பில் வெளியிட்டிருந்த சிறப்புச் செய்தியின் சாரத்தை இங்கு பார்ப்போம்:

     “இந்தியர்களின் வான இயல் கணித மேன்மைகள் இன்று நிரூபிக்கப்படுகிறது. காலம் காலமாக வான இயல் வல்லுநர்கள் கிரக சாரங்களையும் அதன் சஞ்சாரங்களையும் மிக துல்லியமாக மதிப்பிட்டு பலவற்றைச் சொல்லி உள்ளார்கள்.அவர்களுக்கு இன்றைய விஞ்ஞானத்தின் வசதிகள் எதுவும் கிடையாது. கம்ப்யூட்டர்கள் கிடையாது. மிக நுட்பமான வான ஆராய்ச்சிக்கான கருவிகள் கிடையாது.அவர்களிடம் ராக்கெட் மூலம் படம் எடுத்து  பார்க்கத்தக்க கருவிகள் கிடையாது.எதுவுமே இல்லை. கணக்குத் தான் உண்டு.

    நாள் தவறினாலும் பஞ்சாங்கம் பார்க்காத நபர்கள் மிகக் குறைவு.இந்த பஞ்சாங்கம் எத்தனையோ ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வந்து கொண்டிருக்கிறது. காகிதமும் அச்சும் வருவதற்கு முன்பு கூட ஏடுகளில் பஞ்சாங்கம் கணிக்கப்பட்டது. பஞ்சாங்கம் கணிப்பவர்கள் ஓராண்டுக்கு முன்பாகவே இன்ன தேதி, இத்தனை வினாடியில் சூரிய சந்திர  கிரகணம் தோன்றும்,  கிரகண அளவு (பரிமாணம்)இவ்வளவு,இந்தெந்த பகுதிகளில் தெரியும் அல்லது தெரியாது என்பவற்றை எல்லாம் மிக கச்சிதமாக எழுதி வைப்பார்கள்.அதில் ஒரு வினாடி தப்புவது கிடையாது.கிரகண காலத்தில் இவைகளைச் செய்யலாம் செய்யக் கூடாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன

வெள்ளி, 28 டிசம்பர், 2012

கணவன் மீது அதிக ஆசை வைத்திருக்கும் மனைவி ஜாதகம் எப்படி;குடும்ப ஜோதிடம்


கணவன் மீது அதிக ஆசை வைத்திருக்கும் மனைவி ஜாதகம் எப்படி;குடும்ப ஜோதிடம்


ஒரு பென்ணின் ஜாதகத்தில் செவ்வாய் கணவனை குறிக்கும்..சுக்கிரன் ஜாதகியை குறிக்கும்...செவ்வாயும் சுக்கிரனும் ஒரு ராசியில் இருந்தாலோ அடுத்தடுத்த ராசிகளில் இருந்தாலொ அந்த பெண் கணவன் மீது மிக பிரியமாக இருப்பாளாம்..ஆசை அதிகமாகி புருசனை அப்பான்னு கட்டிக்கிட்டாளாம் ஒருத்தி..என கிராமங்களில் சொல்வது போல,தன் கணவன் எனக்கு அப்பா போல,நண்பன் போல,தாயை போல என தன் தோழிகளிடம் புகழ்ந்துகொண்டே இருப்பாளாம்...

சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை செக்ஸ் எண்ணங்களை தூண்டக்கூடியதுதான் என்றாலும் இது கணவன் மீதான ஆசையை மட்டும் குறிக்கிறது..

பெண்களுடைய ஜாதகத்தில் சுக்கிரனுக்கு 2ல் வக்கிர கிரகம் இருந்தால் ஜாதகி மற்றும் ஜாதகியின் கணவர் இருவருமே ஒருவரையொருவர் பிரிய முடியாமல் தவிப்பார்கள் எப்போதும் ஒன்றாகவே இருப்பார்கள்..எப்போதும் ஒற்றுமையாக இருப்பார்கள்...

செவ்வாய்க்கு இரண்டில் வக்கிர கிரகம் இருந்தாலும் இருவரும் ஒற்றுமையாக அன்பாக இருப்பார்கள்..

பெண்கள் ஜாதகத்தில் சுக்கிரனுக்கு 12ல் செவ்வாய் இருந்தால் கணவர் அப்பெண்ணின் சொல்படி நடப்பார்

செவ்வாய், 18 டிசம்பர், 2012

சுக்கிரன் ஜாதகத்தில் எப்படி..மண வாழ்க்கை அப்படி;ஜோதிடம்

கணவன் மனைவி பிரிவை தரும் ஜாதகங்கள்;ஜோதிடம்

பொதுவாக களத்திரகாரகன் என சொல்லக்கூடிய சுக்கிரன் ,மேசம்,சிம்மம்,,தனுசு வீட்டில் இருக்கும்போது அசுவினி,மகம்,மூலம் என கேதுவின் சாரத்தில் நின்று விட்டால் அந்த ஜாதகருக்கு திருமண வாழ்க்கை கடும் சோதனையை தரக்கூடியதாக இருக்கிறது

இவர்கள் வெளிநாட்டில் தங்கி விட்டவர்களை மணப்பது நல்லது...அல்லது குறை இருப்பவர்களையோ விவாகரத்து ஆனவர்களையோ மணப்பதுதான் நல்லது..அல்லது இயற்கையாகவே அப்படி நிகழ்ந்து விடும்...

மேற்க்கண்ட அமைப்பில் திருமணம் செய்தவர்கள் பலர் விவாகரத்து பெற்று பிரிந்து இருக்கின்றனர்...அல்லது கணவனும்,மனைவியும் ஒருவரை ஒருவர் சந்திக்க முடியாத அளவு பிசியாக வேறு ஊர்களில் தங்கி விடுகின்றனர்...வருடத்திற்கு ஒருமுறை சந்திப்பு என இருப்பார்கள் இப்படி இருந்தால் பிரச்சினை இல்லை

சுக்கிரன் சிம்மத்தில் அமர்ந்து கேது சாரத்தில் இருந்த பெண் ஒருவர் மிக அழகானவர் வசதியானவர்..மிக அறிவானவர்..ஆனால் கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஈகோ பிரச்சினையால் இருவரும் பிரிந்தனர்...

சுக்கிரன் ஜாதகத்தில் சனியுடன் சேர்ந்தாலும்,ராகுவுடன் சேர்ந்தாலும்,கேதுவுடன்,சூரியனுடன் சேர்ந்தாலும்,சந்திரனுடன் சேர்ந்தாலும் கவனமாக பொருத்தம் பார்த்து சேர்க்க வேண்டும்


வியாழன், 13 டிசம்பர், 2012

வசிய மையும்,மாந்திரீகமும் உண்மையா.திகில் அனுபவம்

 வசிய மையும்,மாந்திரீகமும்; உண்மையா.

வசிய மை,மாந்திரீகம்,பில்லி சூனியம் என்பது பொறுத்தவரை இதை செய்து தரும் மந்திர வாதிகள் ,கேரளாவில் அதிகம்..கொல்லிமலை,சேலம் மாவட்டங்களில் அதிகமாக இருக்கின்றனர்....பிரிந்திருக்கும் கணவன் மனைவியை ஒன்று சேர வைக்கவும்,பிரிந்திருக்கும் காதலர்களை ஒன்றாக மீண்டும் சேர வைக்கவும் இருவரது போட்டோ மற்றும் நட்சத்திரங்கள்,உபயோகப்படுத்திய துணி இவற்றைக் கொண்டு சில பூஜைகளை செய்து குறிப்பிட்ட மந்திர உரு போட்டு மை தயாரிக்கிறார்கள்...


கொல்லிமலையில் இருந்து மூலிகை பறித்து வந்து,வசிய மை,மாத்திரை தயாரித்து விற்கும்  வைத்தியர் ஒருவரை  இது சம்பந்தமாக நான் சந்தித்து பேசிக்கொண்டிருந்த போது, ஜோதிடத்தில் கிரகங்களின் சக்தியை மீறி எப்படி இது வேலை செய்யும்..? பிரிவுதான் நிரந்தரம் என்றால் அவர்களை எப்படி ஒன்று சேர்க்க முடியும் என்ற போது,அவர் சொன்னார்,சுக்கிரன் கெட்டா 7ஆம் இடம் கெட்டா குடும்ப வாழ்க்கை கெடும் என ஜோதிடம் சொல்லுது...பொதுவா காம இச்சை,காம உந்துதல் இல்லாமல் இருக்கும்..இதனால் கணவன் மனைவுக்குள் பிரச்சினை வருது...தாமபத்தியத்தில் அளவு கடந்த ஈடுபாடு அல்லது ஈடுபாடே இல்லாது இருந்தால் பிரச்சினை வரும்...இதைதான் ஜோதிடம் சொல்லுது..எங்கள் வசிய மருந்து அதை சரி செய்யுது...அதைதான் முதலில் செய்கிறோம்..அதன்பின் தானாகவே இருவருக்கும் நெருக்கம் உண்டாக்கும்..

சரி..நீங்க கொடுக்குற வசிய மருந்து காம இச்சை,அதிக காம உந்துதலை தருதுன்னு வெச்சிக்குவோம்..அப்போ அந்த உந்துதலில் வேற யார்கிட்டியாவது போயிட்டாங்கன்னா..? கள்ள காதால் விவகாரம் ஆயிடுச்சின்னா என்றேன் சிரித்துக்கொண்டே,..

சார் இதை யோசிக்காம இருப்போமா...அதுக்கு தனி ஃபார்முலா இருக்கு...யாரை நினைத்து மருந்து கொடுக்கிறார்களோ அவர்கள் இவரை நாடி வருவார்கள் என உறுதியாக சொன்னார்...வசிய மாத்திரை,வசிய மருந்துகளை காலம் காலமாக நம் முன்னோர்கள் பயன்படுத்திதான் வந்துல்ளனர்..இந்த மருந்துகளோடு இப்போது கேரள மாந்திரீகமும் சேர்ந்து இருக்கிறது...ஆனால் ஒரு மண்டலத்தில் நன்கு வேலை செய்யும்...இதில் உண்மையில்லாவிட்டால் எங்கள் குடும்பம்..பல நூறாண்டுகாலமாக கொல்லிமலையில் நாங்கள் இதை தொழிலாக செய்ய முடியாது என்றார்

‎108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்...

108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்......

1. திருமூலர் - சிதம்பரம்.
2.
போகர் - பழனி என்கிற ஆவினன்குடி.
3.
கருவூர்சித்தர் கருவூர், திருகாளத்தி, ஆணிலையப்பர் கோவில்.
4.
புலிப்பாணி - பழனி அருகில் வைகாவூர்.
5.
கொங்கணர் - திருப்பதி, திருமலை
6.
மச்சமுனி - திருப்பரங்குன்றம், திருவானைக்கால்
7.
வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர் - மதுரை.
8.
சட்டைமுனி சித்தர் திருவரங்கம்.
9.
அகத்தியர் திருவனந்தபுரம், கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் கோவில்.
10.
தேரையர் - தோரணமலை (மலையாள நாடு)
11.
கோரக்கர் பேரூர்.
12.
பாம்பாட்டி சித்தர் - மருதமலை, துவாரகை, விருத்தாசலம்.
13.
சிவவாக்கியர் - கும்பகோணம்.
14.
உரோமரிசி - திருக்கயிலை
15.
காகபுசுண்டர் - திருச்சி, உறையூர்.
16.
இடைக்காட்டுச் சித்தர் - திருவண்ணாமலை
17.
குதம்ப்பைச் சித்தர் - மயிலாடுதுறை
18.
பதஞ்சலி சித்தர் - சிதம்பரம், அழகர் கோவில், இராமேஸ்வரம்.
19.
புலத்தியர் - பாபநாசம், திருஆலவுடையார் கோவில்.
20.
திருமூலம் நோக்க சித்தர் - மேலை சிதம்பரம்.
21.
அழகண்ண சித்தர் - நாகப்பட்டினம்.
22.
நாரதர் - திருவிடைமருதூர், கருவை நல்லூர்.
23.
இராமதேவ சித்தர் - அழகர் மலை
24.
மார்க்கண்டேயர் - கருவை நல்லூர்.
25.
புண்ணாக்கீசர் - நண்ணாசேர்.
26.
காசிபர் - ருத்ரகிரி
27.
வரதர் - தென்மலை
28.
கன்னிச் சித்தர் - பெருங்காவூர்.
29.
தன்வந்தரி வைத்தீஸ்வரன் கோவில்
30.
நந்தி சித்தர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி.
31.
காடுவெளி சித்தர் - திருக்காஞ்சிபுரம்.
32.
விசுவாமித்திரர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி.
33.
கௌதமர் - திருவருணை, திருவிடைமருதூர்.
34.
கமல முனி - ஆரூர்
35.
சந்திரானந்தர் - திருவாஞ்சியம்.
36.
சுந்தரர் - வாரிட்சம், திருவாரூர்.
37.
காளங்கி நாதர் - திருக்கடவூர், திருப்பணந்தாள்.
38.
வான்மீகி - எட்டிக்குடி, திருவையாறு.
39.
அகப்பேய் சித்தர் - திருவையாறு, எட்டிக்குடி.
40.
பட்டினத்தார் - திருவொற்றியூர்.
41.
வள்ளலார் - வடலூர்.
42.
சென்னிமலை சித்தர் - கேரளத்தில் உள்ள நாங்குனாசேரி.
43.
சதாசிவ_பிரமேந்திரர்_சமாதிசதாசிவப் பிரம்மேந்திரர் - நெரூர்.
44.
ராமகிருஷ்ணர், சாரதாதேவியார் - பேலூர் மடம்
45.
ராகவேந்திரர் - மந்திராலயம்.
46.
ரமண மகரிஷி - திருவண்ணாமலை, மாத்ருபூதேஸ்வரர் ஆலயம்.
47.
குமரகுருபரர் - காசி.
48.
நடன கோபால நாயகி சுவாமிகள் - காதக்கிணறு.
49.
ஞானானந்த சுவாமிகள் - அனைத்து தபோவனங்கள்.
50.
ஷீரடி சாயிபாபா - ஷீரடி.
51.
சேக்கிழார் பெருமான் - மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி சன்னதிக்கு பின்புறம்.
52.
ராமானுஜர் - ஸ்ரீரங்கம்.
53.
பரமஹம்ச யோகானந்தர் - கலிபோர்னியா.
54.
யுக்தேஸ்வரர் - பூரி.
55.
ஜட்ஜ் சுவாமிகள் - புதுக்கோட்டை
56.
ஆதி பராசக்தி திருகோவிலில் 21 சித்தர்களின் ஜீவ சமாதிகள் உள்ளன.
57.
கண்ணப்ப நாயனார் - காளஹஸ்தி.
58.
சிவப்பிரகாச அடிகள் - திருப்பழையாறை வடதளி.
59.
குரு பாபா ராம்தேவ் - போகரனிலிருந்து 13 கி.மி.
60.
ராணி சென்னம்மாள் - பிதானூர், கொப்புலிமடம்.
61.
பூஜ்ய ஸ்ரீ சித்த நரஹரி குருஜி - மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் சித்தாசிரமம்
62.
ஸ்ரீ குழந்தையானந்தர் சுவாமிகள் ஜீவ சமாதி..- மதுரை காளவாசல்
63.
முத்து வடுகநாதர் - சிங்கம் புணரி.
64.
இராமதேவர் - நாகப்பட்டிணம்.
65.
அருணகிரிநாதர் - திருவண்ணாமலை.
66.
பாடக்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள் தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோவில்.
67.
மௌன சாமி சித்தர் - தென்காசியிலிருந்து செங்கோட்டை செல்லும் வழியில் உள்ளது.
68.
சிறுதொண்டை நாயனார் - திருச்செட்டாங்குடி.
69.
ஒடுக்கத்தூர் சுவாமிகள் - பெங்களூரில் அல்சூர் ஏரிக்கரையில் உள்ளது.
70.
வல்லநாட்டு மகாசித்தர் - வல்லநாடு.
71.
சுப்பிரமணிய சித்தர் - ரெட்டியப்பட்டி.
72.
சிவஞான பாலசித்தர் - மயிலாடுதுறை முருகன் சந்நிதி.
73.
கம்பர் - நாட்டரசன் கோட்டை.
74.
நாகலிங்க சுவாமிகள் - புதுவை அம்பலத்தாடையார் மடம்.
75.
அழகர் சுவாமிகள் - தென்னம்பாக்கம்.
76.
சிவஞான பாலைய சுவாமிகள் - புதுவைக்கு வடக்கே 6 மைல் தொலைவில் உள்ளது.
77.
சித்தானந்த சுவாமிகள் - புதுவைக்கு அருகிலுள்ள கருவடிக்குப்பம்.
78.
சக்திவேல் பரமானந்த குரு - புதுவையிலுள்ள முதலியார் பேட்டை.
79.
ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள் - வில்லியனூர் செல்லும் பாதையில் வலப்புறம் அமைந்து உள்ளது.
80.
அக்கா சுவாமிகள் - புதுவையில் உள்ள குதிரைக்களம் அருகே.
81.
மகான் படே சுவாமிகள் - சின்னபாபு சமுத்திரம்.
82.
கம்பளி ஞானதேசிக சுவாமிகள் - புதுவை அருகில் ருத்திர பூமிக்கு சமீபமாக அமைந்துள்ளது.
83.
பகவந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.
84.
கதிர்வேல் சுவாமிகள் ஸ்ரீலங்கா, புதுவை அருகில் சித்தன் குடியிலும் சமாதி உண்டு.
85.
சாந்த நந்த சுவாமிகள் - ஸ்ரீ சாரதா சிவகங்கை பீடத்திற்கு அருகில் உள்ளது.
86.
தயானந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.
87.
தஷிணாமூர்த்தி சுவாமிகள் - பாண்டிசேரியடுத்த பள்ளித் தென்னல்.
88.
ஞானகுரு குள்ளச்சாமிகள் - புதுவை.
89.
வேதாந்த சுவாமிகள் - புதுவை, திருமுத்துகுமார் சுவாமிகள் தோட்டத்தில் உள்ளது.
90.
லஷ்மண சுவாமிகள் - புதுவையிலுள்ள புதுப்பட்டி.
91.
மண்ணுருட்டி சுவாமிகள் - புதுவையிலுள்ள சுதேசி காட்டன் மில் எதிரில்.
92.
சுப்பிரமணிய அபிநய சச்சிதானந்த பாரதி சுவாமிகள் - பாண்டிசேரியிலுள்ள எல்லப் பிள்ளை.
93.
யோகி ராம் சுரத்குமார் (விசிறி சுவாமிகள்) - திருவண்ணாமலை.
94.
கோட்டூர் சுவாமிகள் - சாத்தூர் அருகிலுள்ள கோட்டூர்.
95.
தகப்பன் மகன் சமாதி - கிரிவலம் வந்த நல்லூர் அருகே பனையூர்.
96.
நாராயண சாமி அய்யா சமாதி - நாகர்கோவில்.
97.
போதேந்திர சுவாமிகள் - தஞ்சை மாவட்டத்திலுள்ள மருதநல்லூர்.
98.
அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள் - சென்னை பூந்தமல்லி.
99.
வன்மீக நாதர் - எட்டிக்குடி.
100.
தம்பிக்கலையான் சித்தர் - சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவிலில் உள்ள 108 சிவலிங்கங்களில் இரண்டாவதாக உள்ள லிங்கத்தில் ஐக்கியம் ஆகியுள்ளார்.
101.
மெய்வரத் தம்பிரான் சுவாமிகள் - திருச்சி, ஜெயங்கொண்ட சோழபுரத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது.
102.
குகை நாச்சியார் மகான் - திருவண்ணாமலை.
103.
வாலைகுருசாமி - சிதம்பரத்திலுள்ள கொம்மடிக் கோட்டை.
104.
பாம்பன் சுவாமிகள் - திருவான்மியூர்.
105.
குமாரசாமி சித்தர் சுவாமிகள் - கோயமுத்தூரிலுள்ள பூராண்டான் பாளையம்.
106.
பெரியாழ்வார் சுவாமிகள் - அழகர் கோவில் (மதுரை)
107.
மாயம்மா ஜீவசமாதி - கன்னியாகுமரி.
108.
பரமாச்சாரியார் ஜீவசமாதி - காஞ்சிபுரம்.

நோய்கள் விலகவும் - நோயற்ற வாழ்வு வாழவும் தன்வந்திரி மந்திரம்;

நோய்கள் விலகவும் - நோயற்ற வாழ்வு வாழவும் தன்வந்திரி மந்திரம்;

தன்வந்திரி விஷ்ணுவின் அம்சமாகக் கருதப்படுகிறார். திருப்பாற்கடலைக் கடையும்பொழுது அமிர்த கலசத்துடன் வந்தவர். கீழ்க்குறிப்பிட்ட அவருடைய மந்திரத்தை தினமும் காலை, மாலை வேளைகளில் பக்தியுடன் கூறிவந்தால் கொடிய நோய்கள் விலகும். நோயற்ற வாழ்வு கிட்டும். மேலும் மருத்துவமனைகளில் தன்வந்திரி படத்தை வைத்து இந்த மந்திரத்தையும் அதன்கீழ் எழுதி வழிபட்டால் அந்த மருத்துவமனை பிரபல்யமடையவும். தன்வந்திரியின் அருள் கிட்டும்.


ஓம் நமோ பகவதே மஹா சுதர்சன வாசுதேவாய
தந்வந்த்ரயே அம்ருத கலச ஹஸ்தாய
சர்வபய விநாசாய சர்வரோக நிவாரணாய
த்ரைலோக்ய பதயே த்ரைலோக்ய நிதயே
ஸ்ரீமஹாவிஷ்ணு ஸ்வரூப ஸ்ரீதந்வந்த்ரி ஸ்வரூப
ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஒளஷத சக்ர நாராயண ஸ்வாஹா


தன்வந்திரி ஸ்லோகம்;

சதுர்புஜம் பீத வஸ்திரம்
ஸர்வாலங்கார சோபிதம்
த்யோயேத் தன்வந்த்ரிம்
தேவம் ஸுராஸுர நமஸ்க்ருதம்.

கணபதி ஹோமம் ;ganapathi homam

கணபதி ஹோமம் ;ganapathi homam (தடைகள் நீங்க)

கணபதி ஹோமம் புதிய தொழில்கள் துவங்கும் போது நடத்தப்படும். உடல், மனம், ஆன்மிக அம்சங்களில் உள்ள தடைகள் நீங்கி வாழ்வில் வெற்றி கிடைக்கும். பொருளாதாரம், படிப்பு, ஆரோக்கியம் போன்ற அம்சங்களில் உள்ள தடைகள் நீங்கும். மற்ற ஹோமங்களை துவக்குவதற்கு முன்பு கணபதி ஹோமம் செய்ய வேண்டும்.

கணபதி ஹோமத்தின் பெருமை: மகாகணபதியின் அருளைப் பெறக் கணபதி ஹோமம் மிகவும் முக்கியமானது. வெள்ளிக்கிழமை, சதுர்த்தி ஆகிய நாட்களில் விடியற்காலையில் ஹோமம் செய்வது விசேஷம். அஷ்டத்திரவியம், தேங்காய்த்துண்டு ஆகியவை அதற்குச் சிறந்த ஹோமத்திரவியங்கள். 1000 தேங்காய்க் கீற்றினால் ஹோமம் செய்ய செல்வம் வளரும். ஸத்துமா, நெல் பொரி, திரிமதுரம் ஆகியவை ஸர்வ வச்யம் நல்கும். திரிமதுரம் கலந்த நெல்பொரி கல்யாண ப்ராப்தியைத் தரும். 

நெல் கலந்த அன்னம், நெய் ஆகியவை விருப்பத்தை ஈடேற்றும். தேன் தங்கம் தரும். நெய்யில் நனைத்த அப்பம் மந்திர சித்தி, ராஜ வச்யம் தரும். மோதகம் போரில் வெற்றி தரும். மட்டை உரிக்காத தேங்காய் (1 மண்டலம்) மந்திர சித்தி நல்கும். தாமரை செல்வ வளர்ச்சி தரும். வெண்தாமரையால் வாக் சித்தி ஏற்படும். அருகம்புல் குபேர சம்பத்து தரும். மோதகம் நினைத்ததைத் தரும். வில்வ இலை, நெய்யில் நனைத்த சமித் ஆகியவையும் அப்படியே. தேங்காய், அவல் மிளகு ஆகியவை ஸர்வ வசியம் தரும். இவ்வாறு ஹோமத்திற்குரிய ஆகுதிகள் பெருமை சேர்க்க வல்லபை. பலன் தருபவை.

ஹோமம் செய்யும் முறை:

அனுக்ஞை சுக்லாம்பரதரம்....சாந்தயே
ஓம் பூ .... பூர்புஸ்ஸுவரோம்

சங்கல்பம்:

சுபே சோபனே .... பரமேச்வர ப்ரீத்யர்த்தம்
நக்ஷ்த்ரே - ராசௌ ஜாதஸ்ய ஸ குடும்பஸ்ய
÷க்ஷமஸ்தைர்ய வீர்ய விஜய ஆயு: ஆரோக்ய
ஐச்வர்ய அபிவ்ருத்த்யர்த்தம் ஸர்வாரிஷ்ட சாந்த்யர்த்தம்
ஸர்வாபீஷ்ட ஸித்த்யர்த்தம் மஹா கணபதி ஹோமம் கரிஷ்யே.

(தேங்காய் ஒன்றினை உடைத்து, மூங்கில் இலை போல் மெல்லியதாகக் கீறி, வெல்லச் சர்க்கரை, தேன், நெய் ஆகியவை சேர்த்து 8 கீற்றுக்களை ஹோமத்திற்கு வைத்துக் கொள்க. மீதி உள்ளது மஹாகணபதிக்கும் துர்க்கைக்கும் நிவேதனம். கொட்டாங்கச்சிகளை, மூல மந்திரம் ஜபித்துக் கொண்டு அக்னிக்குத் தெற்கிலும், வடக்கிலும் கண்கள் போல வைக்கவும். மட்டைகளை யானையின் துதிக்கை போல் அக்னியின் சுற்றுப்புறத்தில் வைக்கவும்.

எட்டுத்திரவியங்கள் : கொழுக்கட்டை, அவல், பொரி, ஸத்துமா, கரும்புத்துண்டு, தேங்காய்க் கீற்று, எள், வாழைப்பழம் ஆகியவை.

(அருகம்புல்லாலும் ஹோமம் செய்ய வேண்டும்)

1. பூர்ப்புவஸ் ஸுவரோம் என்று அக்னியைப் பிரதிஷ்டை செய்க. (அதற்கு முன், அக்னியைத் தாபிக்க வேண்டிய இடத்தில் அரிசிமாவால் ஒரு சாண் அளவு தரையில் சதுரமாக மண்டலம் செய்து இரு தர்ப்பைகளால் கிழக்கு நோக்கியும், வடக்கு நோக்கியும் முறையே 3 கோடுகள் வரைந்து நீரைத் தொட்டு, தர்ப்பையைத் தென்மேற்கில் போட்டு மறுபடியும் ஜலத்தைத் தொடுக).

2. அருகில் கும்பத்தில் வருணனை ஆவாகித்துப் பூசை செய்க. அக்னிக்கு வடகிழக்கில் தீபம் வைத்து அதில் துர்க்கை ஆவாஹனம் 16 உபசார பூஜை செய்க.

3. பரிஷேசனம்

அதிதே அநுமன்யஸ்வ அநுமதே அநுமன்யஸ்வ
ஸரஸ்வதே அநுமன்யஸ்வ தேவ ஸவித: ப்ரஸுவ

4. அக்னியில் தியானம் செய்து, ஹோம குண்டத்தின் 8 திசைகளிலும் பூஜை செய்க. (கிழக்கிலிருந்து வரிசையாக ஒவ்வொரு திசையிலும்)

இந்த்ராய நம: அக்னயே நம: யமாய நம:
நிர்ருதயே நம: வருணாய நம: வாயவே நம:
சோமாய நம: ஈசானாய நம: அக்னயே நம: (அக்னியில்)
ஆத்மனே நம: ஸர்வேப்யோ ப்ராஹ்மணேப்யோ நம:

நெய்யில் 15 சமித்தைத் தோய்த்து, அஸ்மின் ஹோம கர்மணி ப்ரஹ்மன் இத்மம் ஆதாஸ்யே என்று கூற, பிரம்மாவானவர், ஓம் ஆதத்ஸ்வ என்று சொல்லியதும், அக்னியில் சேர்க்க. பிரஜாதிபதியை மனதில் நினைத்துக் கொண்டு வடக்கு மூலையிலிருந்து தென் கிழக்காக நெய்யைத் தாரையாக விடுக. எல்லா சமித்துக்களையும் தொடுக. பின்னர் ஸ்வாஹா, ப்ரஜாபதய இதம் ந மம என்று கூறுக. ஸ்வாஹா இந்த்ராய இதம் ந மம (தெற்கிலிருந்து வடகிழக்காக நெய்யை ஊற்றுக). அத ஆஜ்ய பாகோ ஜுஹோதி (வடகிழக்குப் பாதியில்) அக்னயே ஸ்வாஹா, அக்யை இதம் ந மம, என்றும், தென்கிழக்குப் பாதியில் ஸோமாய ஸ்வாஹா, ஸோமாய இதம் ந மம என்றும் நெய்யால் ஹோமம் செய்க. எல்லாத் தோஷங்களுக்கும் பிராயச்சித்தமாக, ஓம் பூர்ப்புவஸ்ஸுவ : ஸ்வாஹா, ப்ரஜாபதய இதம் ந மம என்று நெய் விடுக.

5. அக்னியின் மத்தியில் மகா கணபதியைத் தியானம் செய்க. அஸ்ய ஸ்ரீ மஹா கணபதி மகாமந்த்ரஸ்ய கணக ரிஷி: காயத்ரீச் சந்த : மஹாகணபதிர் தேவதா க்லாம் பீஜம் க்லீம் சக்தி: க்லூம் கீலகம் ஸ்ரீ மஹாகணபதி ப்ரஸாத ஸித்த்யர்த்தே ஹோம விநியோக: (கரநியாஸம், அங்க நியாஸம் செய்க). பூர்ப்புவஸ்ஸுவரோம் என்று திக்பந்தனம் செய்க.

6. தியானம்: பீஜாபூர கதே க்ஷú கார்முகருஜா சக்ராப்ஜ பாசோத்பல வ்ரீஹ்யக்ர ஸ்வவிஷாண ரத்னகலச ப்ரோத்யத் காராம் போருஹ: த் யேயோ வல்லப யா ஸபத்மகரயா ஸ்லிஷ்டோஜ்வலத் பூஷயா விஸ்வோத்பத்தி விபத்தி ஸம்ஸ்தித கரோ விக்நேச இஷ்டார்த்த:

7. பஞ்ச பூஜை:

லம் ப்ருதிவ்யாத்மநே கந்தம் ஸமர்ப்பயாமி
ஹம் ஆகாசாத்மநே புஷ்பம் ஸமர்ப்பயாமி
யம் வாய்வாத்மநே தூபம் ஆக்ராபயாமி
ரம் அக்னியாத்மநே தீபம் தர்சயாமி
வம் அம்ருதாத்மநே அம்ருதம் மகாநைவேத்யம் நிவேதயாமி
ஸம் ஸர்வாத்மநே ஸர்வ உபசார பூஜாம் ஸமர்ப்பயாமி

(பின் கணபதி மூல மந்திரம் ஜபம் செய்க.)

8. நெய்யால் ஹோமம்
  
ஓம் ஸ்வாஹா ஓம் ஸ்ரீம் ஸ்வாஹா ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்வாஹா ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்வாஹா ஓம் ஸ்ரீம் .... க்லௌம் ஸ்வாஹா
ஓம் ஸ்ரீம் ... .... கம் ஸ்வாஹா ஓம் ஸ்ரீம் .... கணபதயே ஸ்வாஹா ஓம் ஸ்ரீம் .... வரவரத ஸ்வாஹா ஓம் ஸ்ரீம் .... ஸர்வ ஜனம் மே வசம் ஸ்வாஹா ஓம் ஸ்ரீம் .... வசமானய ஸ்வாஹா ஸ்ரீ மகா கணபதயே இதம் ந மம

9. தேங்காய்க் கீற்றால் ஹோமம்

- நக்ஷத்ரே - ராசௌ ஜாதஸ்ய - சர்மண: ஸகுடும் பஸ்ய அனுகூலம் ப்ரயச்ச ப்ரயச்ச, ப்ரதிகூலம் நாசய நாசய, ஸம்பதோ வர்தய, வர்தய, வர்தய, ஸர்வத்ர விஜயம் ப்ரயச்ச ப்ரயச்ச,

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் .... வசமானய ஸ்வாஹா (8 முறை ஹோமம் செய்க).

10. நெய் ஹோமம்

கணானாம் த்வா கணபதிம் ஹவாமஹே ... ஸீத
ஸாதனம் ஸ்வாஹா (8 முறை சொல்லி ஹோமம்)

11. நெல் பொரியால் ஹோமம்

உத்திஷ்ட புருஷ ஹரித பிங்கல லோஹி தாக்ஷ ஸர்வாபீஷ்டம் தேஹி தேஹி தா பய தா பய ஸ்வாஹா (8 முறை ஹோமம்) அக்னிரூபாய ஸ்ரீ மஹாகணபதயே இதம் ந மம.

12. தேங்காய் மூடியால் ஹோமம்

ஜாத வேத ஸே....துரிதாய க்னி: ஸ்வாஹா (இரு முறை)

13. நெய்யில் தோய்த்த அருகம்புல்லால் ஹோமம்

மூல மந்திரத்தால் 8 முறை செய்க.

14. 8 திரவியத்தால் ஹோமம்

ஓம் நமோ வ்ராதபதயே நமோ கணபதயே நம: ப்ரமதபதயே நமஸ்தேஸ்து லம்போதராய ஏக தந்தாய விக்னவிநாசினே சிவஸுதாய ஸ்ரீ வரத மூர்த்தயே நமோ நம: ஸ்வாஹா (8முறை) ஸ்ரீ மஹாகணபதய இதம் ந மம

15. கணேச காயத்ரீ ஜபம் - 10 முறை.

16. கணேச மாலாமந்திரம் சொல்லி ஹோமம்.

17. கணபதி அதர்வசீர்ஷம் சொல்லி ஹோமம்.

18. உத்தராங்கம்

பூ : ஸ்வாஹா அக்யை இதம்
புவ : ஸ்வாஹா வாயவ இதம்
ஸுவ : ஸ்வாஹா ஸுர்யாய இதம்

அஸ்மிந் ஹோம கர்மணி மத்யே ஸம்பாவித ஸமஸ்த தோஷ ப்ராயச்சித்தார்த்தம் ஸர்வ ப்ராயச் சித்தார்த்தம் ஹோஷ்யாமி ஓம் பூர்புவஸ்ஸுவ : ஸ்வாஹா ப்ரஜாபதய இதம் ஸ்ரீ விஷ்ணவே  ஸ்வாஹா விஷ்ணவே பரமாத்மன இதம் நமோ ருத்ராய பசுபதயே ஸ்வாஹா ருத்ராய பசுபதயே இதம் (நீரால் கைகளை நனைக்க)

19. பூர்ணாஹுதி

அஸ்மின் ஹோமகர்மணி பூர்ணாஹுதிம் கரிஷ்யே

பூர்ணாஹுதி தேவதாப் யோ நம: ஸர்வோபசார பூஜாம் ஸமர்ப்பயாமி

மூலமந்திரம் + வெளஷட்

பூர்ணாஹுதிம் உத்தமாம் ஜுஹோதி ஸர்வம் வை பூர்ணாஹுதி : ஸர்வம் ஏவாப்நோதி அதோ இயம் வை பூர்ணாஹுதி : அஸ்யாமேவ ப்ரதி திஷ்டதி

பூர்ணமத : பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணம் உதச்யதே.... அவசிஷ்யதே

ப்ரஹ்மார்ப்பணம் ..... ஸமாதி நா

பிராணாயாமம் செய்க.

20. பரிஷேசனம்

அதிதே அன்வமங்ஸ்தா : அநுமதே அன்வமங்கஸ் தா : ஸரஸ்வதே அன்வ மங்ஸ்தா :
தே ஸவித : ப்ராஸாவீ :
வருணாய நம : ஸகலாராதனை : ஸ்வர்ச்சிதம்

21. பிரம்ம உத்வாஸனம்

ப்ரஹ்மன் வரம் தே த தா மி ப்ரஹ்மணே நம:
ஸகல ஆராதனை ஸ்வர்ச்சிதம்
(நான்கு பக்கங்களிலும் உள்ள தர்ப்பைகளை அக்னியில் சேர்க்க).

22. உபஸ்தானம்

ஸ்வாஹா அக்னேர் உபஸ்தானம் கரிஷ்யே அக்னயே நம:
மந்த்ரஹீநம் க்ரியாஹீநம் பக்திஹீநம் ஹுதாசன
யத் து தம் து மயா தேவ பரிபூர்ணம் தத ஸ்து தே
ப்ராயஸ்சித்தானி அசேஷானி தப : கர்ம ஆத்மகானி வை
யாநி தேஷாம் அசேஷாணாம் க்ருஷ்ணாணுஸ்மரணம் பரம் (நமஸ்காரம் செய்க)
அக்னிம் ஆத்மனி உத் வாஸயாமி (இதயத்தில் அஞ்சலி செய்க)

23. øக்ஷ

ப்ருஹத் ஸாம க்ஷத்ரப் ருத் வ்ருத் த வ்ருஷ்ணியம்: த்ரிஷ்டு பௌஜ: ஸுபி தம் உக்ர வீரம் இந்த்ர ஸ்தோமேன பஞ்சதஸேன மத்யம் இதம் வாதேன ஸகரேண ரக்ஷ

24. ஸமர்ப்பணம்

குஹ்யாதி குஹ்ய கோப்தா த்வம் க்ருஹாணா ஸ்மத் க்ருதம் ஹவம்
ஸித்தி : பவது மே தே வ த்வத்ப்ரஸதான் மயி ஸ்திரா
ஓம் தத்ஸத் ப்ரஹ்மார்ப்பணம் அஸ்து.