ஞாயிறு, 9 டிசம்பர், 2018

ஜாதகத்தில் இரண்டு திருமண தோசம் பரிகாரம்


  ஜென்ம பாவம் , செய்த பாவம் நீங்க பாபநாசம்
    நெல்லை மாவட்டம் பாபநாசம் பொதிகை மலையில் இன்னும் சித்தர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் மலையாகும். அகத்திய முனிவருக்கு இறைவன் திருமண கோலத்துடன் காட்சி கொடுத்த புன்ணிய மலை தலம். அகத்திய மாமுனியின் பூரண அருள் இங்கு உண்டு. இடைக்காட்டு சித்தருக்கு ஞானம் கிடைத்த மலை. புலத்தியர் என்ற சித்தரின் அருளைப் பெறலாம். இங்கு அகத்திய அருவியில் நீராடு, கல்யாண ஈஸ்வரரை வணங்கி, பின் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் சிவ சித்தர் அம்பாளை வணங்கி, கீழே பாபநாசம் வந்த சிவன் கோவில் சென்று அர்ச்சனை செய்து வர வேண்டும். 21 ஜென்ம பாவம் நீங்கும். தோஷம் விலகும், செய்வினை விலகும். சிறப்பான கணவர் அமைவார். மகிழ்ச்சி உண்டாகும் இறையருள் கிடைக்கும். பெளர்ணமி தோறும் இன்றும் இங்கு சந்தன மழை பொழிகிறது.

 மனைவியை இழக்கும் தோஷம் மாற பரிகாரம்
    ஒரு சிலருக்கு மாடும் தார தோஷம் வந்து விடுகிறது தார தோஷம் உள்ளவர் இளம் வயதிலேயே மனைவியை இழக்கும் நிலை அமைந்து விடுகிறது. பெண்ணின் ஜாதகத்தில் கிரகங்கள் நல்ல முறையில் அமைந்திருந்தாலும், கணவன் தோஷத்தால் அந்தப் பெண் காலமாகும் நிலை ஏற்படுகிறது.
    ஒரு ஆணின் ஜாதகத்தில் லக்னத்துக்கு ஏழாம் இடம் சனி வீடாக அமைந்து அதில் சனி இருந்தாலும், அல்லது சனி பகவான் லக்னத்துக்கு 6,8, 12 ஆம் இடங்களில் இருந்தாலும் அந்த ஜாதகருக்கு  வரும்  மனைவி இளம் வயதிலேயே காலமாகிவிட நேரும். அதே போல கணவரின் லக்னத்துக்கு 2 ல் சூரியன் இருந்தால் அவர் மனைவி விஷத்தால் இறப்பார். லக்னத்துக்கு 2 ல் சந்திரன் இருந்தால் தண்ணீர் கண்டத்தினால் இறப்பார். இப்படிப்பட்ட ஜாதக அமையப் பெற்ற மணமகனைத் தேர்வு  செய்யும் பெற்றோர்கள் சில பரிகாரங்களைச் செய்து கொண்டால் தங்களது மகள் நீண்ட நாட்கள் வாழ்வார். ( மேலும் மனைவியை இழக்கும் தோஷமும் ஆண் ஜாதகருக்கு மாறும்) இது போன்ற ஜாதகர்களைத் திருமணம் செய்து கொண்டவர்களும் இந்த பரிகாரத்தைச் செய்து கொண்டால் பயன் கிடைக்கும்.
பரிகாரம்_1
   7 ம் இடம் சனி வீட்டாக அமைந்து அந்த இடத்தில் சனி இருக்கப் பெற்றவர்களும் லக்னத்துக்கு 6, 8, 12 ல் சனி இருக்கப் பெற்றவர்களும் சனி பகவானுக்குப் ப்ரீதி செய்து கொள்ள வேண்டும். திருநள்ளாறு, குச்சனூர், சிவ கங்கை சோழ வந்தான், குருவித்துறை போன்ற தலங்களுக்குச் சென்று ப்ரீதி செய்ய வேண்டும். தம்பதி சகிதம் சென்று வர வேண்டும். சனி பகவானை நேரில் சென்று ப்ரீதி செய்து வருபவர்களுக்கு மனைவியை இழக்கும் நிலைமை வராது

 இரு மனைவி  தோஷம் விலக எளிய பரிகாரம்

    Image result for முருகன் வள்ளி தெய்வானை
ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்துக்கு 7, 8 ம் வீட்டிற்குரிய கிரகம் பாவியானாலும் அல்லது  பாவ கிரகங்களின் பார்வை பெற்றிருந்தாலும் அவர் இரு தார தோஷம் உள்ளவர். 12ம் வீட்டில் குரு பகவான் செவ்வாயுடன் கூடினாலும் 2 , 7 க்குடைய கிரகம் ஏதேனும் ஒன்று பாப கிரகமாக இருந்தாலும், அந்த ராசியில் பாவ கிரகம் இருந்தாலும் 7 ம் வீட்டிற்குரியவர்  பாவ கிரகத்துடன் கூடி இரண்டாம் வீட்டிலிருக்க அந்த கிரகத்தைச் செவ்வாய் பகவான் பார்த்தாலும் அந்த ஜாதகர் இரு தார தோஷம் உள்ளவர் என்பதை அறிந்து கொள்ளலாம்.
பரிகாரம்
  இரு தார தோஷம் உள்ளவர்கள் வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு அமாவாசை அன்றும் ஆஞ்சனேயரை வணங்கி வந்தால் , இரு தார தோஷம் தலை எடுக்காமல் மறைந்து போகும்.
பரிகாரம்
   முருகப் பொருமாள் ஸ்ரீ பால தண்டாயுதபாணி என்ற பெயரில் எழுந்தளியுள்ள ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்தால் கணவர் இரண்டாம் திருமணம் செய்யும் மனநிலையில் இருந்தாலும் தடுத்து நிறுத்துவார், இது போன்ற ஆலயம் உங்கள் பகுதியில் இருந்தால் மூன்று பெளர்ணமிக்கு ஆலயம் சென்று முருகனை வணங்கி வந்தால் கணவருக்குள்ள இரு தார தோஷம் மாறிவிடும்.
   இதே போன்ற நிலையில் உள்ள ஜாதகரை மணந்து கொண்ட ஒரு பெண்ணுக்கு கணவரால் பாதிப்பு வர இருந்தது. சிவகங்கையில் உள்ள முருகப்பெருமானை  மூன்று பெளர்ணமி நாட்கள் வணங்கினால் இரு தார தோஷம் விலகும்.

திருமணத்தடை நீக்கும் கிரகதோஷப் பரிகாரங்கள்


 திருமணத்தடை நீக்கும் கிரகதோஷப் பரிகாரங்கள்
     ஆண், பெண் இருபாலருக்கும் ஜாதங்களில் தோஷம் இருப்பின் திருமணம் தள்ளிப் போகிறது.  தடைபடுகிறது. இது குரு தோஷம், சுக்கிர தோஷம்,  செவ்வாய் தோஷம் கால சர்ப்ப தோஷம் ஆகியவைகளால் ஏற்படுகிறது.

     குரு தோஷம்
   மகரத்தில் செவ்வாய் _ கடக  குரு வக்ரம் பெற தோஷம், ஆலங்குடி சென்று குரு பகவானுக்கு மஞ்சள் துணி சாற்றி அர்ச்சனை செய்து 24 நெய் விளக்கேற்றி 24 முறை வலம் வந்து வணங்க வேண்டும்.

சுக்கிர தோஷம்

Image result for manamagal
    
சுக்கிரன் சூரியன் சேர்க்கைப் பெற்று கேந்திரங்களில் நிற்க 8, 12 ல் நிற்க தோஷம். 3, 6 லும் சிறிதளவு தோஷம். இவர்கள் பரணி, பூசம், பூராடம் நட்சத்திரம் வரும் நாட்களில் ஸ்ரீ ரங்கம் சென்று, ஸ்ரீ ரங்கநாதரைத் தரிசித்து சுக்கிர தோச நிவர்த்தி சீட்டு வாங்கி  உண்டியலில் போட நிவர்த்தியாகும்.
  செவ்வாய் தோஷம்
   ஜாதகத்தில் 2 ,4,7,8, 12 ல் செவ்வாய் நிற்க தோஷமாகும். பாவர் சேர்க்கை பார்வை பெற்ற செவ்வாய் இவ்விடங்களில் நிற்க தோஷம் . இத்தோஷம் நீங்க, செவ்வாய்க் கிழமை இராகு கால வழிபாடு செய்தல் நன்று. செவ்வாய் திசையும் கூடுமானால் தசா காலம் முழுவதும் அம்மனுக்கு விளக்கேற்றி வழிபட குறை தீர்ந்து நிறை சேரும். நிம்மதி கூடும்.
கால சர்ப்ப தோஷம்
   அனைத்துக் கிரகங்களும் ராகு கேதுவின் பிடிக்குள் கட்டுண்டு செயலற்றிருப்பர். இத்துடன் நாக தோஷமும் சேர 33 வயதுக்கு மேல் நிலைத்த செளபாக்கியம் கிட்டும். இவர்கள் காளஹஸ்தி சென்று சர்ப்ப சாந்தி செய்வது நலம். சங்கரன் கோவிலுக்குச் சென்று சர்ப்ப சாந்தி செய்தல் அவசியம். வெள்ளியினால் செய்த ஒரு தலை நாகத்தை அர்ச்சனைத் தட்டில் வைத்து சங்கரர்  நாரயணார் நாகர் கோமதி அம்மனுக்கு அர்ச்சனை செய்து உண்டியலில் சேர்க்க வேண்டும். மணமான பின், வெள்ளியில் செய்த ஐந்து தலை நாகத்தை அர்ச்சனைத் தட்டில் வைத்து முன் போல் அர்ச்சனை  செய்து, கோமதி அம்மனுக்கு திருமாங்கல்யம் சூட்டி தான் முறையான பரிகாரம். எப்பிறவிகளிலும் நாக தோஷம், கால சர்ப்ப தோஷம் தொடராது என்பது திண்ணம். சூரியனார் கோயில் திங்களூர், வைத்தீஸ்வரன் கோயில் திருவெண்காடு, ஆலங்குடி, கஞ்சனூர், திருநள்ளாறு, திருநாகேஸ்வரம், கீழ் பெருபள்ளம், சென்று வர நவகிரகப் ப்ரீதி உண்டாகும். சேது ஸ்நானம் சாலச் சிறந்தது. பிரதோச காலங்களில் சிவன் கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி வழிபட, முன் ஜென்ம _ தீவினைப் பயன் அகன்று நல்வினை சூழும்.
44 . ருது தோஷம் நீங்க
  ஒரு சில பெண்கள் மட்டும் ருதுவாகமல் அப்படியே இருந்து விடுவார்கள்.  வயதுக்கு வராத பெண்ணும் வெறுப்புடன் வாழ்வாள்.
16 வயதுக்கு மேல் பெண் ருதுவாகமல் இருந்தால் அந்த நிலையை அகற்ற கருணை காடும் தெய்வங்கள் அன்னை துர்க்கை, அங்காள பரமேஸ்வரி ஆவார்கள். வளர்பிறை ஏகாதசி திதியில் உங்கள் பகுதியில் அமைந்துள்ள துர்க்கை அம்மன் அல்லது அங்காள பரமேஸ்வரி ஆலயத்திற்கு குரு ஹோரையில் ஒன்பது விளக்குகள் போட வேண்டும். இதே போல ஒன்பது வளர்பிறை ஏகாதசி திதிகளில் விளக்குப் போட்டு வர, ருது தடையை தெய்வம் நீக்கி அருளும்.
   பரிகாரம்
   ஆலயம் சென்று வேண்டுதல் செய்ய முடியாதவர்கள், அவர்கள் பகுதியில் உள்ள ஒரு திருநங்கைக்கு வெற்றிலை பாக்கு உடன் 101 ரூபாய் கொடுத்து ஆசிர்வாதம் பெற்றால் 90 நாட்களுக்குள் பூப்பெய்தி விடுவார்கள்.
  

செவ்வாய், 4 டிசம்பர், 2018

ஜோதிட சூட்சுமங்கள் அதிகம் சம்பாதிப்பவர் பொறுப்பானவர் யார்..? ஜாதகம்


திருமண பொருத்தம் ஜாதகம் பார்க்கும் போது லக்னாதிபதியை ஜோதிடர் பார்க்க வேண்டும் கணவன் மனைவி ஸ்தானம் ,செவ்வாய் தோசம்,நாகதோசம் இதை தவிர வேறு எதையும் பெரும்பாலான ஜோதிடர்கள் பார்ப்பதில்லை.பலர் நட்சத்திர பொருத்தம் பார்ப்பதை தாண்டி எதையும் பார்ப்பதில்லை என்பது வேறு விசயம்..

பையன் பொறுப்பா இருப்பானா என்பதை லக்னம் நின்ற வீட்டுக்குடையவன் லக்னாதிபதி நிலை,சந்திரன் நின்ற வீட்டு அதிபதி சந்திரன் நிலை...லக்னாதிபதியை பார்த்த கிரகம் சந்திரனை பார்த்த கிரகத்தை வைத்தும் இவர்களுடன் சேர்ந்த கிரகத்தை வைத்தும்தான் முடிவு செய்ய முடியும்....இதுதான் அடிப்படை...

 



   லக்னாதிபதி  
     முதலில் லக்னாதிபதியை எடுத்துக் கொள்வோம். லக்னாதிபதி பகை_ நீச்சமடைந்து  பலவீனப்பட்டிருந்தாலும், அல்லது லக்னாதிபதி அஸ்தங்க தோஷமடைந்திருந்தாலும், ஜாதகர் எடுப்பார்கைப்பிள்ளையாக இருப்பார் .எல்லோர்க்கும் கீழ்படிந்துயார்என்னவேலை சொன்னாலும் தட்டாமல் செய்வார் . இவர் உடல் ஆரோக்கியக் குறைவாக இருப்பார் . ஒல்லியான தோற்றமும் தலை சீவாதமுடியும், பபூன் போன்றதொளதொள உடையும் அணிவார் . எனவே இவரை எல்லோரும் அலட்சியப் படுத்துவது இயற்கை . இதனால் இவரிடம் எல்லோரும் பக்குவமாகப் பேசிவேலை வாங்கிடுவர் . இருந்தாலும், ஜாதருக்குப் பிறரை கவிழ்க்கும் குணமே அமைந்திருக்கும் . பெருமை,புகழ் முதலியவற்றிக்கு இவர்கள்  ஆசைப்படமாட்டார்கள் .

குணத்துக்கு தகுந்த விதமே இவர்களுக்கு யோகம் அமையும். அதாவது,வறுமைதான். நாவம்ஸத்தில், லக்னாதிபதி பனிரெண்டாமிடம் பெற்று விட்டால் ஓரிடத்திலும் நிலையகாத் தங்கமாட்டார்கள். ஊர் சுற்றிக்கொண்டே இருப்பார்கள். அதனால் மூளை குழப்பம்டைந்து எதிலும் முரண்படுவார்கள். இவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கலாகாது .

எந்த லக்னாதிபதியும்,இரண்டாம் வீட்டில்இரண்டுக்குடையவரோடு சேர்ந்திருந்தால்ஜாதகருக்கு அதிர்ஷ்டமுண்டு . விலைஉயர்ந்தகற்கள் பதித்த ஆபரணங்களை வாங்குவார்கள்.அந்தகற்களின் நிறம் இரண்டாம் வீட்டுக்குடையவனின் நிறமாக அமையும்.வெள்ளி, தங்க நகைகள் ஏராளாமாக வாங்குவார்ஜாதகர். ஜாதகர் ஈடுபடும் எல்லா வேலைகளிலும்வெற்றியே பெறுவார் .

ஆரம்பத்தில்சிறிதாகஇருந்தகுடும்பம்கூடஜாதகர்வளரவளர பிரமாதமாக  முன்னேறி பெரிய குடும்பமாக படர்ந்திருக்கும். குடும்பத்தில் எல்லோரிடமும்அமைதிதாண்டவமாடும். ஜாதகரின்புன்சிரிப்பும்வாக்கு சாதுரியமும்பிறரைகாந்தசக்திபோல்இழுக்கும்வல்லமை பெற்றதாக இருக்கும்

ராசி சக்கரத்தில் இது போல் லக்னாதிபதி வலுவுடன் காணப்பட்டாலும், நவாம்சசக்கரத்தில்இரண்டிற்குடையகிரகம்நின்றஇடத்துக்கு 6,8,12 ல் லக்னாதிபதிஅமைந்து விட்டால், நாம்மேலேசொல்லிய பலன் அற்பமாகப் பலனளிக்கும் . 

லக்னாதிபதி 3ம் இடத்தில்,3 க்குடையவனுடன்காணப்பட்டால், சகோதரர்கள் அதிகமாகப்பிறப்பார்கள்.

ஜாதகர்சகோதரர்களின்மேல்பாசமாகஇருப்பார்கள். சகோதரர்களும்யோகவான்களாயிருப்பார்கள்.

பல செளகரியங்களையும் பெறுவராகையால்மன அமைதி ஏற்படும். ஜாதகரைஆண்களும்பெண்களுமாக விரும்புவார்கள்.ஆனால்,ராசிக்கட்டத்தில்லக்னாதிபதிமேலேசொன்னது போலிருந்து, அம்ச சக்கரத்தில் 3 ம் அதிபதிக்கு 6,8,12ல் லக்னாதிபதி அமைந்து விட்டால் சகோதரர்களுடன்பகைமை உணர்வு ஏற்படும். சகோதரர்களுக்கு ஜாதகரால் துன்பங்கள் ஏற்படலாம்

லக்னாதிபதிநாலாமதிபதியோடுநாலாம்வீட்டில்இருந்துவவாரலுவடைந்தால், ஜாதகருக்குபலஆப்தநண்பர்கள்முன்னின்றுகாரியத்தைசெய்வார வாரகொண்டு வருவார்கள்.உறவினர்களால்ஜாதகர் கெளரவிக்கப்படுவார்கள். ஜாதகருக்கு பங்களாவாசம் கிடைக்கும். தாயாரிடம் அன்பு செலுத்துவார். தாயார் சுகம் நல்லபடியிருக்கும் . அதிகம் படித்த மேதாவிகளின் நேசம்கிடைக்கும் .அவர்களுடன்தர்க்கவாதம்செய்துகொண்டும் இருப்பார்  ஜாதகர். அதனால் அவருக்குநல்லதொருஅனுபவமுதிர்ச்சி ஏற்படும் .

அம்சசக்கரத்தில்நான்காமதிபதிஇருந்தஇடத்திற்கு 6, 8,12 ல் லக்னாதிபதி  வீற்றிருந்தால்தாயருடன்பகைமைஏற்படும்அல்லதுஜாதகர்துரோகம் செய்வார்.அதுமட்டுமல்லாமல்பந்துஜனங்களிடத்தில் விரோதம் பாரட்டுவார் . எதிர்பாராத விதமாக விபத்துகள் ஜாதகருக்குஏற்படும் .மற்றும் தேவையற்ற வழக்கு வியாஜியமும் ஏற்படலாம் .

லக்னாதிபதிஐந்தாமிடத்ததிபதியோடுசேர்ந்துஐந்தாமிடத்திலிருந்துவிட்டால் அரசாங்கசலுகைகள்பெறுவார்.அரசாங்கத்தால்பாராட்டப்படுவார்.நல்ல மனஅமைதிஏற்படும்.மதத்தலைவராகவோஅல்லதுசமூகத்தில்ஒருமுக்கிய
புள்ளியாகவோஜாதகர்திகழ்வார்.அயல்நாட்டுதூதராகும்வாய்ப்பும்கிட்டும்.ஆண் சந்ததிகள்பிறக்கும்.அரசியலில்தீவிரமாகஇறங்குவார்கள்.மந்திரி,எம்.எல்., எம்.பி யாகும்வாய்ப்பு இவர்களுக்குக் கிடைக்கும் .
அம்சசக்கரத்தில்ஐந்தாமதிபதிநின்றஇடத்துக்கு6,8,12 ல் லக்னாதிபதி நின்று விட்டால்,மேலேசொல்லியபலன்கள்தலைகீழாகமாறும்.
ஆறாமதிபதியோடுலக்னாதிபதிசேர்ந்துஆறாமிடத்திலேயேநின்றுவிட்டாஎல்லா விதமாநோய்களும்ஜாதகரைஆட்டிப்படைக்கும்.ஆறாமதிபதிசுக்கிரனாகஇருந்துவிட்டால்பெண்கள்வியாதிநிச்சியமாகஉண்டு.உடலில்வெட்டுக்காயம்ஏற்படும்

சர்க்காரின்அதிருப்திக்குஆளாவர்.அடிக்கடிசர்க்காரால்வழக்குஏற்படும் .கிரிமினல்,சிவில்வழக்குகள்ஏற்படலாம்.தாயாதிபங்காளிகளால்தொந்தரவுகள் ஏற்படும்.கோர்ட்டும்கையுமாகதிரிவார்.வறுமையும்வாட்டிப்படைக்கும். இவர்களையாராவதுமுன்னுக்குகொண்டுவரமுயற்சித்தாலும் அவர்களுக்கே ஆயினும்அம்சத்தில்ஆறுக்குடையவர்நீச்சமடைந்துலக்னாதிபதிஉச்சமடைந்துவிட்டால்சொல்லியகெடுபலன்கள்நடக்காது.

ஜாதகர்மிலிடெரி,போலீஸ் இலாகாவில்தலைமைப்பதவிபெறுவார்.ஆறாமதிபதி இருந்தவீட்டிற்கு 6,8,12 ல் அம்சசக்கரத்தில்லக்னாதிபதிவீற்றிருந்தால்ஏற்படவிருக்கும்.நண்பர்கள் குறையலாமே தவிர தீதில்லை .

லக்னாதிபதிஏழாமிடத்ததிபயுடன்சேர்ந்துஏழிலேயேஇருந்தால்,ஜாதகர்யாத்திரை செல்லுவார்.திருமணம்ஆகாதவர்களுக்குதிருமணமாகும்.ஏழாமிடம்சர ராசியானால்ஜாதகர்பலநாட்டிற்குவிஜயம்செய்வார்.ஸ்திரராசியானாலும்உள் நாட்டிலேயேகூடசுற்றிவருவார்.உபராசியானால்அயல்நாடுகளுக்குப்போய் வருவார்.ஆயினும்இங்கேஎந்தகிரகம்வலுவுள்ளதுஎன்றுபார்க்கவேண்டும். ஏழாமதிபதியைவிடலக்னாதிபதிவலுக்குன்றியிருந்தால்பிராயாணத்தில் லாபமில்லைஎன்றுதான்சொல்லவேண்டும்.

அம்சசக்கரத்தில்ஏழாமிடத்துக்கதிபதிஇருந்தஇடத்துக்கு 6,8.12 ல் லக்னாதிபதிநின்றுவிட்டால்கணவன்மனைவிஉறவுசரிப்பட்டுவராது.எந்தநேரமும்ஏதாவது பிரச்சனகள்தோன்றிக்கொண்டேஇருக்கும்.நல்லநண்பர்கள்கிடைக்கமாட்டார்கள்.நண்பர்களால்கெடுதல்கள்ஏற்படும்.பிரயாணத்தால்சிக்கல்கள்தோன்றும்
.ஜாதகருக்குஅபகீர்த்திகள்உண்டாகும்.வறுமைதொற்றிக்கொள்ளும்.
சம்பாதிப்பது சாப்பாட்டுக்குப் போதாதவையாகஇருக்கும்.பிரயாணத்தால்சிக்கல்கள்தொற்றிக் கொள்ளும்.சம்பாதிப்பதுசாப்பாட்டுக்குப்போதாதவையாஇருக்கும்.உடல்நலம் கெடும்செய்யும் தொழிலேநிம்மதிஇல்லாததுமட்டுமல்ல.தொழிலில்மந்தநிலை அடையும்.

வியாபாரம்செய்தாலும்நஷ்டம்தான்காணும்எடுக்கும்முயற்சிகள் வீண்பிரயாசையாகத்தான் முடியும்.
லக்கனாதிபதிஎட்டாமிடத்ததிபதியோடுஎட்டாமிடத்திலிருந்தால்,ஜாதகர்அதிக துன்பத்தையும்,வறுமையையும்அனுபவிப்பார்.ஏகப்பட்டகடன்ஏற்படும்பல பாபகாரியங்களைசெய்துவருவார்.கெட்டநண்பர்கள்சேர்க்கைஎப்போதும்பிறர்க்குகெடுதலைஉண்டாக்கும்எண்ணம்குடிகொண்டவராகஇருப்பார்.எட்டுக்குடைய கிரகம்,அம்சத்தில்நீச்சமடைந்து,லக்னாதிபதிவலுப்பெற்றிருந்தால்இவ்வளவு கெடுதல்கள்இல்லையென்றாலும்.
ஜாதகருடையஎண்ணம்நல்லதாகஇருக்காது. இதனால்தான்நான்பொதுவாகவேலக்னாதிபதியைவிட
ஆறு,எட்டுக்குடையவர், வலுப்பெற்றிக்கக்கூடாது என்று சொல்லிவருகிறேன் .  

லக்னாதிபதி 9 க்குடையவனோடு ஒன்பதாமிடத்தி லிருந்தால் லக்னாதிபதியின் திசையில் தகப்பனார் மிக மிக சந்தோஷமாக வாழ்ந்து வருவார்.ஜாதகர், தகப்பனாருக்கும்மற்றகுடும்பபெரியவர்களுக்கும்அடங்கிநடந்து,அவர்கள் அன்புக்குநன்றாகவேஇருக்கும்.எப்போதும்பிறர்போற்றக்கூடியநல்ல செயல்களையேஜாதகர்செய்துவருவார்.அம்சசக்கரத்தில்லக்னாதிபதி9 க்குடையவனுக்கு6,8,12ல்மறைந்திருந்தால்மேலேசொல்லியவற்றிக்கு

நேர் lஎதிரிடையானபலன்களாகவேநடந்துவரும்.பெரியவர்களுடையசொத்து விஷயமாகவழக்குவிஜியங்கள்நடக்கும்.நவாம்சசக்கரத்தில்9க்குடையவனோ அல்லதுலக்னாதிபதியோஉச்சமடைந்திருந்தால்,ஜாதகர்சுயசம்பத்தியமாகபல லட்சக்கணக்கில்பொருள்சேர்ப்பார்.செலவினங்கள்மிகநியமானதாகஇருக்கும். எவ்வளவுசெலவுசெய்தாலும்ஒருபக்கம்வரவுஇருந்துகொண்டே இருக்கும்.
லக்னாதிபதி10க்குடையவனோடுசேர்ந்துபத்தாம்மிடத்திலேயேஇருந்தால்ஜாதகர் பலநல்லகாரியங்களைச்செய்வார்.ஹோமம்,யகஞம்முதலியவற்றைச்செய்வார்.மதசம்பந்தமானஎந்தகாரியத்திலும்தீவிரசிரத்தையுடையவராகஇருப்பார்.தாய் தகப்பனுக்குசெய்யவேண்டியஎல்லாகர்மங்களையும்செய்வார்.யாரவதுசாந்திபரி
காரம்சொன்னால்தவறாமல்செய்யக்கூடியவர்.ஜாதகர்சர்க்காரில்நல்லஉயர்ந்த பதவியைபெறுவார்.நீதிபதி,மேஜிஸ்ரேட்,செகரட்டரிமுதலியபலபதவிகளைப் பெற்றிடுவார்.பெரியபுள்ளிகளின்ஆதரவுநிச்சயமாகஇவருக்குஉண்டு.அம்ச சக்கரத்தில்பத்துக்குடையவனிருந்தவீட்டுக்கு6,8,12ல்லக்னாதிபதிஇருந்து விட்டால்சொல்லியநற்பலன்கள்அனைத்தும்தலைகீழாகமாறும்.அவர்மூலமாகஜாதகரும்நன்மைபெறுவார்.எந்தவிதவியாபாரம்ஒருக்கால்நவாம்சத்தில்11 க்குடையவனின்நிலையும்,லக்கனாதிபதிநிலையும்கெட்டிருந்தால்இதற்கு பாதகமில்லை.லாபம்குறைந்திருக்குமவ்வளவுதான்.மூத்தசகோதரனுடன் பகைமைஉணர்வுதலைதூக்கும்.11 க்குடையவன்லக்னாதிபதிமுதலியவர்களின் தாரமம்மியத்தைசரியாகஎடைபோட்டபின்தான்பலன்களைச் சொல்லவேண்டும் லக்னாதிபதி12க்குடையவனுடன்சேர்ந்து,பனிரெண்டமிடத்திலிருந்தால் எவ்வளவுதான்பெரியவர்களின்சொத்துஇருந்தாலும்ஜாதகர்அழித்துவிடுவார். வறுமையால்வாடுவார்.காரணமின்றிஊர்சுற்றிவருவார்.எல்லாவிதமான பொருளாதாரத்தொந்தரவுகளும்சமாளிக்கவேண்டிவரும்.

நவாம்சத்திலக்னாதிபதி      வலுப்பெற்றிருந்தால்,அயல்நாடுகளில்பெருத்தலாபம்பெறுவார்.
சுயசம்பாத்தியத்தில்ஸ்திரசொத்துமுதலியவைகளைசேர்ப்பார்.நவாம்சத்தில் லக்னாதிபதிஇருந்தவீட்டுக்குடையவன்உச்சம்பெற்றுவிட்டால் பிரமாதம்
இந்தவிதமாகலக்னாதிபதியின்திசையில்மற்றும்லக்னாதிபதியுடன்சேர்ந்த பார்த்தகிரகத்தின்தன்மையையும்கருத்தில்கொண்டுதான்ஜோதிடர்சொல்ல வேண்டும்.

லக்கனத்திலிருக்கும்கிரகங்களுக்குச்சொல்லவேண்டும். லக்னத்திலிருக்கும்கிரகங்களுக்குச்சொல்லியபடியேமற்றபாவங்களில்நின்ற கிரகங்களுக்கும்ஆட்சி,உச்சம்,பகை,நீச்சம்முதலியவகளைக்கொண்டுஅந்தந்த திசைபுத்திஅந்தரக்காலங்களைகொண்டுஜோதிடர்சாமர்த்தியமாகபலன்களை சீர்தூக்கி,சமதட்டில்பார்த்துபலன்களைச்சொல்லவேண்டும். அப்படிகிரகபலன்சொல்லும்போதுநவாம்சத்திலும்அந்தகிரகங்களின் தன்மைகளைப்பார்த்த பின்புதான் தீர்மானிக்கவேண்டும்.

சனி, 22 செப்டம்பர், 2018

குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்

குரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை 

வாக்கிய பஞ்சாங்கபடி குரு பெயர்ச்சி 4.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 18ஆம் நாள் இரவு 10.11 மணிக்கு துலாம் ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு மாறுகிறார் 

திருக்கணித பஞ்சாங்கபடி 11.10.2018 விளம்பி வருடம் புரட்டாசி 24 ஆம் நாள் காலை 3.04 நிமிடத்திற்கு துலாம் ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு மாறுகிறார் 


கு என்றால் இருள் ரு என்றால் நீக்குவது ..நம் வாழ்வின் இருளை போக்கி வெளிச்சத்தை தரும் ஒப்பற்ற துணைவர்தான் குரு.அறியாமை இருளை போக்கும் அனைவரையும் குரு என்கிறோம் .ஒன்றை தெளிவாக்குபவர் புரிய வைப்பவர் குரு.நம் வாழ்வின் வழிகாட்டியாக வருபவர் குரு.

சூரியனில் இருந்து சந்திரனை விட செவ்வாயை விட புதனைவிட சுக்கிரனை விட தொலை தூரத்தில் இருக்கும் கிரகம் குரு ஆகும்.அதை விட அதிக தூரத்தில் இருப்பது சனியாகும்..

மிக தொலைவில் இருக்கும் குருவில் இருந்து வெளிப்படும் மகத்தான் மஞ்சள் நிற ஒளி சக்திகளும் சூரியனில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சுகளும் இணைந்துதான் புவியில் உயிர்கள் ஜனனம் ஆக முக்கிய காரணம் ஆகும்..அதனால்தான் குருவை புத்திரக்காரகன் என்கிறோம்.

முழுமையான சுபகிரகம் எனப்படுபவர் குரு.குரு பார்வை சகல தோசங்களையும் போக்கும்..ஒரு மனிதனின் செல்வாக்குக்கும் சொல்வாக்குக்கும் அதிபதி குரு.ஒரு வீட்டில் சுபகாரியம் நடக்க வேண்டுமெனில் குருபார்வை தயவு தேவை.


குருபார்வை இருந்தால்தான் மதிப்பும் மரியாதையும் கொண்ட பெரிய மனிதர்கள் நம் வீட்டில் நுழைவார்கள்..ஊருக்கும் நல்ல பெயர் பெரிய மனுசன் ஆகனும்னா ஜாதகத்தில் குரு கெடாமல் இருக்கனும் குரு கெட்டவன் கூறு கெட்டவன் என்பார்கள் குரு ஜாதகத்தில் கெடாமல் இருப்பவர்கள் நாகரீகமாக நடந்து கொள்வர்.குரு கெட்டவர்கள் பெரியவர்களையும் மதிக்க மாட்டார்கள் ..ஊரையும் மதிக்க மாட்டார்கள்.

பொண்ணுக்கு குருபலம் வந்துருச்சா என ஜாதகம் பார்க்கும்போது கேட்பார்கள் குருபலம் இருக்கும்போது திருமண முயற்சி செய்தால் எந்த தடையும் இருக்காது...நல்லபடியாக சுபகாரியம் நடந்து முடியும் என்பதற்காகதான்.

                   

துலாம் சுக்கிரனின் ஆண் ராசி ...களத்திரகாரகன் சுக்கிரனின் ராசி என்பதால் அன்பும் காதலும் நேசமும் அதிகம் நிரம்பிய ராசிக்காரர்கள்..உல்லாசம்,கேளிக்கை,நீண்ட பயணத்திலும் நிறைய விருப்பம் கொண்டவர்கள்..ரசனை மிக அதிகம்...நண்பர்கள் என்றால் உயிர்..அழகாக பேசும் வசியம் நிறைந்தவர்கள்...அழகுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்..

ஆடம்பர பொருட்கள் மீது அதிக பிரியம் கொண்டவர்கள் ..எதையும் நேர்த்தியாக செய்து முடிப்பதில் வல்லவர்கள் தங்கள் இடம் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் உடையவர்கள் ..

உங்கள் ராசிக்கு எழரை சனி முடிந்துவிட்டது அப்புறமும் ஏன் இவ்வளவு கஷ்டம் என ஒரு வருடமாக குழப்பத்தில் இருந்து வந்தீர்கள் எல்லாம் ஜென்ம குருவால் வந்த குழப்பங்கள்தான்..பணம் மட்டும் இல்லைனா வண்டி ஒரு அடி கூட நகராது அப்படிப்பட்ட உங்களுக்கு பணக்கஷ்டம்னா எவ்வளவு மனக்கஷ்டம் இருக்கும் என புரிகிறது...ஜென்ம குரு முடிந்து உங்கள் ராசிக்கு இரண்டாம் இடமாகிய தன ஸ்தானத்துக்கு குரு வருகிறார் இது குடும்ப ஸ்தானம் வாக்கு ஸ்தானம் ஆகும்..இது உங்களுக்கு குரு பலம்...

ஜென்ம ராசிக்கு இரண்டாம் இடத்துக்கு குரு வந்தால் வருமானம் இரட்டிப்பாகும். பல வழிகளிலும் பணம் வந்து சேரும்..தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
.சனிப்பெயர்ச்சியும் சாதகமாக இருக்கு, குரு பெயர்ச்சியும் சாதகமாக இருக்கு 2019 ல் உங்க ராஜ்ஜியம்தான் கவலை வேண்டாம். நினைத்த காரியங்கள் தடையின்றி முடியும்..வர வேண்டிய கடன் தொகை வசூல் ஆகும்..கொடுக்க வேண்டிய கடனை சிரமம் இன்றி கட்டி முடிப்பீர்கள் ..சிலர் வீடு மனை வாங்குவர்.ஆடம்பர பொருட்கள் சேர்க்கை உண்டாகும்..

உங்கள் ராசிக்கு குரு பார்வை எப்படி இருக்கு என பார்த்தால் ,ராசிக்கு ஆறாமிடமாகிய ருண ரோக ஸ்தானத்தை குரு பார்ப்பதால் உடல் ஆரோக்கியம் உண்டாகும் மருத்துவ செலவுகள் குறையும் பணியில் இருப்போர்க்கு பதவி உயர்வு உண்டாகும்..எட்டாம் இடத்தை குரு பார்வை செய்வதால் திடீர் அதிர்ஷ்டங்கள் உண்டாகும் எதிர்பாராத பண வரவு உண்டாகும்..

பத்தாம் இடத்தை குரு பார்வை செய்வதால் சொந்த தொழில் செய்வோர்க்கு புதிய ஆர்டர்கள் மூலம் மன மகிழ்ச்சி உண்டாகும் தொழில் அபிவிருத்தி உண்டாகும்..வியாபாரம் தொழில் சுறுசுறுப்பாக இயங்கும்..

குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும் மன மகிழ்ச்சி அதிகரிக்கும் கணவன் மனைவி ஒற்றுமை உண்டாகும்..திருமண முயற்சியில் இருப்போர்க்கு நல்ல வாழ்க்கை துணை விரைவில் அமையும்.

பொதுவாக துலாம் ராசியினர் ஆன்மீகத்தில் பெரிய ஈடுபாடு காட்டுவதில்லை குருபலம் இருப்போர் மட்டும் அதிக ஆர்வமாக இருப்பர் அதுவும் தொலைவில் இருக்கும் கோயில்களுக்கு செல்லவே விரும்புவர்.மதுரை மீனாட்சி ,ஸ்ரீரங்கம் பெருமாளை வழிபட நினைத்த காரியம் கைகூடும்

                      


செவ்வாயை ராசி அதிபதியாக கொண்ட விருச்சிகம் ராசி நண்பர்களே...நீங்கள் திறமையை மட்டும் முதலீடாக கொண்டு ஆற்றலுடன் செயல்படக்கூடியவர்கள்...தவறு நடந்தா அது யார் எவர் என பார்க்காமல் உடனே தட்டிக்கேட்கும் குணம் உங்கள் பலவீனம்..

பேச்சில் பல சமயம் கடுமை காட்டிவிடுவது உங்கள் பலவீனம்.செவ்வாய் குணம் அதுதான்.அதே சமயம் மத்தவங்க பிரச்சினைக்கு ஓடி வந்து முதல் ஆளாக உதவி செய்வீர்கள் உங்கள் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாமல் குழப்பத்தில் ஆழ்ந்துவிடுவீர்கள் .குழந்தைகள் மீது அதிக அன்பும்,பாசமும் கொண்டவர் நீங்கள்


இதுவரை உங்க ராசிக்கு மறைந்து இருந்த குரு இப்போது ராசிக்கு ஜென்மத்தில் வந்து நிற்கிறார் இது போன வருடத்தை விட ஆறுதல் தரும் விசயம்தான்.ஏனெனில் குரு மறைந்தால் தனம் மறையும் செல்வாக்கு மறையும் ஆரோக்கியம் கெடும்.

சரி ஜென்ம குரு என்ன செய்வார்..? ராமர் வனவாசம் போனது ஜென்ம குருவிலே சீதையை பிரிந்து துன்பப்பட்டதும் ஜென்ம குருவிலே என பழைய ஜோதிட பாடல் பயமுறுத்தினாலும் ஜென்ம குரு என்பது உங்கள் குணத்தை மேம்படுத்திக்கொடுக்கும்.ராசியில் குரு வந்தால் மன உலைச்சல்,மன அழுத்தம் அதிகரிக்கும் கவலைகள் மனதை குழப்பும் என்பதைதான் ஜென்ம குரு பலன்கள் சொல்கிறது ஏற்கனவே சனி அப்படித்தான் செய்து வருகிறார் இதில் குருவுமா என கலங்க வேண்டாம்...ராசிக்கு வரும் குருபார்வையால் உங்களுக்கு அதிக பலத்தை குரு கொடுத்து விடுகிறார்...


ராசிக்கு 5,7,9ஆம் இடங்களை பார்க்கும் குரு ...அந்த இடங்கள் மூலம் சனி ஏற்படுத்திய கஷ்டங்களை நீக்குகிறார் . இதுவரை ராசிக்கு பின்பக்கமே மறைந்து இருந்த குரு  ராசிக்கு முன்பக்கம் நகர்வதால் மிக சிறப்பான பலன் உண்டு என்பதால் தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள் 

குரு பார்வை 5ஆம் இடத்தை பார்வையிடுவதால் பூர்வீக பிரச்சினைகளில் நல்ல முடிவு கிடைக்கும்...குழந்தைகளால் இருந்து வந்த சங்கடங்கள் விலகும் நீண்ட காலம் இழுபறியாக இருந்து வந்த காரியங்கள் நல்லபடியாக முடியும்..7ஆம் இடத்தை பார்க்கும் குரு கணவன் மனைவி ஒற்றுமையை உண்டாக்கும்..


கூட்டாளிகள் மூலம் இருந்து வந்த பிரச்சினைகள் விலகும்..9ஆம் இடத்தை பார்க்கும் குரு தந்தை வழியில் அனுகூலம் உண்டாக்கும் உறவுகள் நட்புகள் மூலம் சந்தோசமான செய்தி தேடி வரும்..

ஏழரை சனி இன்னும் பாக்கி இருப்பதால் சனிக்கிழமை பெருமாள் கோயிலில் தீபம் ஏற்றி வழிபடவும் செவ்வாய் தோறும் முருகனை வழிபட்டு வரவும்.


                    


குருவின் ராசியை கொண்ட நீங்கள் அன்பு,அமைதி,இரக்க சுபாவம்,கடவுள் பக்தி என சாத்வீக குணத்தை கொண்டவர்.சிவ வழிபாட்டில் அதிக ஆர்வம் உடையவர்.ஒரு வில் ஒரு சொல் என சொல்வார்கள் அது போல வெச்ச குறி தப்பாது என காரியத்தில் கண்ணாயிருப்பவர்கள் என வில் அம்பை சின்னமாக கொடுத்திருக்கின்றனர்..

வில்லுக்கு அரசன் அர்ஜுனன் பிறந்த ராசியில் பிறந்த உங்களுக்கு ஏழரை சனி வந்ததும் கொஞ்சம் ஆடிப்போக வைத்திருக்கலாம் ,.அதே சமயம் குரு பெயர்ச்சியும் நம்மை கதற வைத்து விடும் போலிருக்கிறதே என கலங்க வேண்டாம்...

சென்ற வருடம் லாபத்தில் சஞ்சரித்த குரு இந்த வருடம் விரயத்தில் சஞ்சரிக்க போகிறார் ...ராசிநாதனும் அவரே என்பதால் ராசிக்கு சுக ஸ்தானாதிபதியும் அவரே என்பதால் உடல்நலனில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ளும் வருடமாக இந்த வருட குரு பெயர்ச்சி அமைந்திருக்கிறது..


சனியும் குருவும் சாதகமற்ற நிலையில் சஞ்சரிப்பதால் முதலீடுகளுக்கு ஏற்ற வருடமாக இது இல்லை....சொத்து  சார்ந்த விசயங்களில் அதிக கவனம் தேவை...சொத்துக்களின் புது வில்லங்கம் முளைக்கும் அதனால்சிலர்பஞ்சாயத்து ,கேஸ் பிரச்சினைகளை சந்திக்க நேரும்..மருத்துவ செலவுகள் விரய செலவுகள் அதிகரிக்கும் வருமானம் வருவதில் பல தடைகள் உண்டாகிறது....ஜென்ம சனி ஏற்கனவே தலையில் உட்கார்ந்திருப்பதால் அழுத்தம் அதிகமாகதான் இருக்கும் பணி புரியும் இடத்தில் அதிக சங்கடங்கள் இருக்கும் வேலையை விட்டு விடலாம் என்ற மனநிலையில்தான் பலர் இருப்பர் இருப்பினும் குரு வக்ர காலத்தில் சோதனைகள் குறையும்..ராசிக்கு குரு பார்வை எப்படி இருக்கு என பார்ப்போம்.


ராசிக்கு சுக ஸ்தானத்தை குரு பார்வை செய்வதால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டாலும் அதில் இருந்து விரைவில் குணமடைவீர்கள் ..சிலர் நிலம் வீடு வாங்குவர் சுப விரயம் செய்தால் கெட்ட செலவு வராது அடிப்படையில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் செய்தாலும் சனியின் பாதிப்பில் இருந்து தப்பலாம் சனியின் நிலையே உங்களை கடுமையாக வேலை வாங்குவதில்தான் முனைப்பாக இருக்கிறார் கடுமையாக உழைத்தால் மட்டுமே ஆதாயம் கிடைக்கும்..


குருவின் ஏழாம் பார்வை ருண ரோகத்தை பார்வை செய்வதால் கடன்கள் அடைபடும் சேமிப்பது கடினம் சேமிப்பு அதிகரித்தால் மருத்துவ செலவு வரப்போகிறது என அர்த்தம்...சுபவிரயம் நல்லது.


குருவின் ஒன்பதாம் பார்வை எட்டாம் இடத்தை பார்வை செய்தால் கடும் நெருக்கடியில் இருந்து அவ்வப்போது அதிர்ஷ்டவசமாக குரு காப்பாற்ற போகிறார் நஷ்டத்தில் இருந்து உங்களை காக்க போகிறார் கவலை வேண்டாம்..நேர்மை,நியாம்,தர்மத்தோடு நீங்கள் எப்போதும் நடந்து கொள்வதுதான் உங்கள் குணம்...இப்போது அதில் இருந்து தடம் மாறும் அளவு ச்சுழல் இருக்கு...இந்த சமயம் நீங்கள் உங்கள் உங்கள் குணத்தை மாற்றிக்கொள்ளாமல் சுய்நலம் இன்றி நடந்து கொண்டால் மட்டுமே குருவும் சனியும் உங்களை காத்து நிற்பார்கள் என்பதை மறக்க வேண்டாம்...


குறுக்கு வழியிலோ அதர்ம வழியிலோ சென்றால் சனியும் குருவும்  உங்களை காட்டிக்கொடுத்து பஞ்சாயத்தில் நிற்க வைத்து விடுவார்கள் என்பதை மறக்க வேண்டாம்  இந்த ராசி குழந்தைகளை கவனமாக பார்த்துக்கொள்ளவும் கீழே விழுதல் அடிபடுதல் அடிக்கடி டாக்டரிடம் போக வேண்டிய சூழல் உண்டாகும் கல்வியில் நாட்டம் செலுத்துவது கடினமாக இருக்கும் அதற்காக குழந்தைகளை கடிந்து கொள்ள வேண்டாம் பக்குவமாக எடுத்து சொல்லுங்கள் பருவ வயதில் இருப்போர் உடன் பழகுவோரிடம் புதிய நண்பர்களிடத்தில் அதிக கவனம் தேவை.

அனுமன் பிறந்த ராசியில் பிறந்த நீங்கள் சனிக்கிழமையில் அனுமனுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடவும் பெரியோர்களிடம் அன்புடனும் அனுசுரனையுடனும் நடந்து கொள்ளுங்கள் குலதெய்வத்தை அடிக்கடி வழிபடுங்கள் சனிக்கிழமை விரதம் அவசியம்.கந்த சஷ்டி கவசம் படித்து வாருங்கள் 



                      



சனியை அதிபதியாக கொண்ட ராசி மகரம்.சர ராசி என்பதால் எப்போதும் துள்ளும் வேகத்துடன் இருப்பீர்கள் என்பதால் ஆடு சின்னம் கொடுக்கப்பட்டிருக்கிறது...கடுமையான உழைப்பினை கொண்ட ராசி உங்களுடையது .அடுத்தவருக்காக உதவிகள் செய்வதில் அதிக ஆர்வம் உடையவர்..சின்ன பிரச்சினையும் தாங்க முடியாமல் நண்பர்களிடம் பகிரும்  அளவு மென்மையான மனம் கொண்டவர்...வேலை என்று வந்துவிட்டால் உங்களை யாரும் முந்த முடியாது..பயணத்தில் அதிக விருப்பம் கொண்டவர்...காலில் சக்கரமா எனும் அளவு பரபரப்பாக செயல்படுவதில் உங்களுக்கு நிகர் நீங்கள்தான் 


உங்கள் ராசிக்கு எழரை சனி நடந்து வருகிறது....சனியின் ராசிக்கு சொந்தக்காரர்தான் தன் ராசிக்காரரையே சனி அதிகம் படுத்தி எடுக்க மாட்டார் என்ற போதிலும் தொழிலில் மந்தத்தை உண்டாக்கி வருகிறார் என பலம்பி கொண்டிருந்த உங்களுக்கு குரு பெயர்ச்சி மகிழ்ச்சி தரும் செய்தியோடு வருகிறது இதுவரை உங்க ராசிக்கு பத்தில் குரு வந்து கடந்த வருடம் நஷ்ட கணக்கையே காட்டி வந்தது இந்த வருட குரு பெயர்ச்சி லாபக்கணக்கை காட்ட போகிறது..


லாபஸ்தானத்திற்கு வரும் குரு உங்களுக்கு நல்ல வருமானத்தை தரப்போகிறார்..சேமிப்பை ஏற்படுத்தி கொடுக்க போகிறார் சிலர் புதிய சொத்துக்களை வாங்குவர் சிலர் பழைய கடன்களை அடைத்து நிம்மதியாக இருப்பர்.வருமானம் நன்றாக இருக்கும் என்றால் தொழில் நல்ல அபிவிருத்தி ஆக ப்போகிறது என்று அர்த்தம் ...தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் புதிய முதலீடுகள் லாபம் தரும் பணியில் பதவி உயர்வு கிடைக்கும் ..சிலர் விரும்பிய இடத்துக்கு மாறுவர் குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும் ..திருமணம் ஆகாதவர்களுக்கு இந்த வருடம் நல்லபடியாக திருமணம் நடந்தேறும்..


குரு பார்வை உங்கள் ராசிக்கு ஐந்தாம் பார்வையாக சகாய ஸ்தானத்தை பார்வை செய்வதால் நண்பர்களால் உறவுகளால் ஆதாயம் உண்டு குருவின் எழாம் பார்வை உங்கள் ராசிக்கு ஏழாம் பார்வையாக பூர்வபுண்ணியத்தை பார்வை செய்வதால் முன்னோர்கள் ஆசி கிடைக்கும் பூர்வீக சொத்து கிடைக்கும்..காரிய தடைகள் விலகும் நீண்ட நாள் இழுபறியாக இருந்த பணம் வந்து சேரும்...ஒன்பதாம் பார்வையாக எழாம் இடத்தை பார்வை செய்வதால் கூட்டாளிகளால் ஆதாயம் உண்டு கூட்டு தொழில் லாபம் தரும் சிலர் புதிய கூட்டு தொழில் துவங்குவார்கள் ...


சனிக்கிழமை தோறும் பெருமாள் கோயிலில் நெய்தீபம் ஏற்றி வழிபடவும்..



                       



கும்பத்தான்சம்பத்தான்என்பார்கள்நிலையானபுகழுக்குஉடையவர்கள்கும்பம்ராசியினர் என்று அதன் அர்த்தம்..பல கோயில் கல்வெட்டுகளில்பிரபலமானவர்களின் பெயர்கள்அவர்கள்பெரும்பாலும்.  கும்பம் ராசியினர்தான்..

ஊருக்குஏதாவதுநல்லதுசெய்யனும் அது நிலையான நன்மை தரும்படி இருக்கனும் என ஆசைப்படுபவர்கள் கும்பம் ராசியினர் சம்பாதிப்பதில் ஒரு பகுதியை தர்மகாரியத்துக்காக செலவழிப்பார்கள்...குன்றில் இட்ட விளக்கு போல எரிந்து அனைவருக்கும் வழிகாட்டும்ராசிகும்பம்ராசி..

கும்பம்நீர்தழும்பாதுஎன்பதற்கேற்றவாறு திறமைகள்தகுதிகள்பலஇருந்தாலும்அலட்டிக்கொள்ளாமல்  தன் கடமையை  செய்யும் குணம் கொண்டவர்கள் கும்பம் ராசியினர்  என்பதால்  கலசம்  சின்னம் உங்கள் ராசிக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

உங்கள் ராசிக்கு இப்போது ஏழரை சனி இல்லை...சனிபெயர்ச்சி சாதகமாகதான் உள்ளதுகுருபெயர்ச்சிஎப்படிஇருக்கிறதுஎனபார்த்தால்கடந்தவருடம்பாக்யஸ்தானத்தில் சஞ்சரித்துவந்த குரு இந்த வருடம் பத்தாம் இடமாகிய கர்ம ஸ்தானத்துக்கு மாறியிருக்கிறார் ...குரு பத்தில் வந்தால் பதவிக்கு இடர் என்பது பழமொழி..சிலருக்கு தொழில் நீதியாக மாற்றம் பத்தாம் இடத்துக்கு குரு வரும்போது உண்டாகி இருக்கிறது இருப்பினும் குரு பத்தாம் இடம் மோசமானது அல்ல என்றுதான் சொல்ல வேண்டும்..சில மாற்றங்களை உண்டாக்கினாலும் அவை கெடுதலானதாக இருக்காது என்பதே உண்மை..சனி சாதகமாகஇருப்பதால் நம்பிக்கையுடன் இருக்கலாம் 

குருவின்பார்வைஉங்கள்ராசிக்குஐந்தாம்பார்வையாகதனஸ்தானத்தைபார்வையிடுகிறார் இதனால் வருமானத்துக்கு குறைவிருக்காது வருமானம் தடையில்லாமல் வந்து கொண்டிருக்கும் ...குருவின் ஏழாம் பார்வை சுக ஸ்தானத்தை பார்வை செய்வதால் சிலருக்கு புதிய சொத்துகளை வாங்கும் யோகம் உண்டாகும் சிலர் புதிய வீட்டுக்கு மாறுவார்கள் ...ஆடம்பர பொருட்கள் வாகனம் வாங்குவீர்கள்...குருவின் ஒன்பதாம் பார்வை ஆறாம் உடத்தை பார்வை செய்வதால் .உடல்ஆரோக்கியம்மேன்மையடையும்.கடன்கள்அடைபடும்..
எதிரிகள் தொல்லை விலகும்..

வியாழக்கிழமை முல்லை மலர் கொண்டு முருகனை வழிபட்டு தீபம் ஏற்றி வணங்கவும் மன சங்கடங்கள் அனைத்தும் விலகும்...


                       


குருவை ராசி அதிபதியாக கொண்ட மீனம் ராசி நண்பர்களே .நிங்கள் எங்கு இருந்தாலும் அங்கு ஒரு சலனத்தை பரபரப்பை உண்டாக்குவதில் வல்லவர்.ஓய்வறியா உழைப்பை கொண்டவர் இரவும் பகலும் மீன்களுக்கு தெரியாது.. அவை ஓய்ந்து இருப்பதும் இல்லை...அது போல உங்கள் பணிகளை ஓய்வின்றி முடிப்பது உங்கள் குணம்...

உங்கள் ராசியில்தான் உலகிற்கே சுகத்தை கொடுக்கும் சுக்கிரன் உச்சம் அடைகிறார்....குரு ஆட்சி அடைகிறார்...புதன் நீசம் அடையும் ராசி என்பதால் யோசிக்காமல் எதையேனும் செய்துவிட்டு பின்னர் அதற்காக வருந்துவது உங்கள் வாடிக்கை...இருப்பினும் குருவின் அருளாசியில் தவறை சரி செய்து கொள்வீர்கள் 

உங்கள் ராசிக்கு சனி பெயர்ச்சி பாதகமாக இல்லை...இப்போது குரு பெயர்ச்சி மிக சிறப்பாக அமைந்துள்ளது ராசிக்கு ஒன்பதாம் இடமாகிய பாக்யஸ்தானத்திற்கு வரும் குருபகவான் குரு பலமாக மிகவும் அதிர்ஷ்டமாக அமர்கிறார் ஓடிப்போனவனுக்கு ஒன்பதில் குரு என்பார்கள்...பிரச்சினைகளில் இருந்து ஒன்பதில் இருக்கும் குரு தப்பிக்க வைப்பார் என்பது அதன் அர்த்தம்..சுய ஜாதகத்தில் குரு ஒன்பதில் இருந்தால் பூர்வீக ஊரை விட்டு வெளியேறி புது ஊரில் செல்வாக்காக இருப்பர் சிலர் வெளிநாடு சென்று நன்ராக வசதியாக வாழ்வர்..கோட்சாரப்படி குரு ஒன்பதாம் இடத்துக்கு வரும்போது வருமானம் அதிகரிக்கும் வீட்டில் சுபகாரியம் நடைபெறும்...


புதிய தொழில் அமையும் தொழில் விரிவடையும்...கூட்டு தொழில் லாபம் தரும் கணவன் மனைவி ஒற்றுமை உண்டாகும்...வீடு மனை சொத்துக்கள் வாங்குவீர்கள்...பதவி உயர்வு கிடைக்கும் குழந்தைகள் கல்வியில் நல்ல மதிப்பெண் பெறுவர் ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள் தங்க நகைகள் வாங்குவீர்கள்...புதிய வாகனம் அமையும்..திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வாழ்க்கை துணை இந்த வருடம் அமையும்..

உங்களுக்கு குரு ராசிநாதன் ஆகிறார் அவர் இதுவரை எட்டில் மறைந்து இருந்ததால் உறவு நட்பு அண்டை வீட்டார் பகை...பண நெருக்கடி இருந்து வந்தது குரு ஒன்பதாம் இடத்துக்கு மாறியதால் ராசிநாதனும் நல்ல இடத்துக்கு வந்து விட்டதால் இனி மேற்க்கண்ட பிரச்சினைகள் அனைத்தும் தீரும்...


குரு பார்வை எப்படி என பார்த்தால் குருவின் ஐந்தாம் பார்வை ராசியை பார்ப்பதால் உங்கள் தன்னம்பிக்கை,தைரியம் கூடும்..மூன்றாம் இடத்தை பார்வை செய்வதால் தொலை தூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வரும்...இளைய சகோதர சகோதரிக்கு நல்ல இடத்தில் திருமணம் அமையும் அவர்கள் சம்பந்தமான பிரச்சினைகள் விலகும்..ஐந்தாம் இடத்தை பார்வை செய்வதால் முன்னோர் வழி ஆசி கிடைக்கும் பூர்வீக சொத்து பிரச்சினைகள் உங்களுக்கு சாதகமாக முடியும்..குழந்தைகளால் பெருமை உண்டாகும்


வியாழக்கிழமை முல்லை மலர் கொண்டு முருகனை வழிபட்டு வரவும்..நினைத்த காரியம் கைகூடும்!!



குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019

குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 
       

நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விளம்பி வருடம் 11.10.2018 புரட்டாசி 24ஆம் நாள் விடியற்காலை 3.16க்கு துலாம் ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு மாறுகிறார்

வாக்கிய பஞ்சாங்கபடி (இதுதான் கோயில்களில் கடைபிடிக்கப்படுகிறது ) விளம்பி வருடம் 4.10.2018 புரட்டாசி 18 ஆம் நாள் இரவு 10.11 க்கு துலாம் ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு மாறுகிறார்

கு என்றால் இருள் ரு என்றால் நீக்குவது ..நம் வாழ்வின் இருளை போக்கி வெளிச்சத்தை தரும் ஒப்பற்ற துணைவர்தான் குரு.அறியாமை இருளை போக்கும் அனைவரையும் குரு என்கிறோம் ஒன்றை தெளிவாக்குபவர் புரிய வைப்பவர் குரு.நம் வாழ்வின் வழிகாட்டியாக வருபவர் குரு

இதுவரை துலாம் ராசியில் குரு இருந்து வந்தார், துலாம் குருவுக்கு பகை வீடாகும்..

இதனால் நாட்டில் நீதி ,சட்டம்,வங்கி,கல்விதுறை,கோயில்கள் சார்ந்த ஏகப்பட்ட சர்ச்சைகள் வெடித்தன…

சிலை கடத்தல்,கோயில் உற்சவர் மாறாட்டம்,வங்கியில் மோசடி,நீதி துறையில் குழப்பங்கள் என நடந்து வந்தன..ஆகம விதிகளும் மீறப்பட்டன என செய்திகள் வந்த வண்ணம் இருந்தது.

குரு இப்போது விருச்சிகம் ராசிக்கு மாறுகிறார் அது குருவின் நட்பு வீடு ..

குரு இங்கு தன் சொந்த வீடு போல பலன்கொடுக்கும்..குருவுக்கு பலம் கிடைத்தால் நீதியும் தர்மமும் காப்பாற்றப்படும் குருவின் காரகத்துவங்கள்சிறப்படையும்..

கல்வி,கோயில்,வங்கி,நீதி சம்பந்தமான துறைகளில் ஒழுங்கு உண்டாகும்..


குரு பெயர்ச்சி மட்டுமே நம்மை இயக்குவதில்லை.உங்கள் சொந்த ஜாதகத்தில் கிரகங்களின் வலிமை..நடக்கும் திசா புத்தி,சனிபெயர்ச்சி,ராகு கேது பெயர்ச்சியும் நம்மை வழிநடத்துகிறது....

அஷ்டம சனி நடப்போருக்கு குரு பெயர்ச்சி ஒரு நிழல் தரும் மரமாக இருந்து ஆறுதல் படுத்துகிறது.....

மோசமான திசையால் விரயத்திலும்,நஷ்டத்திலும் இருப்போருக்கு கைகொடுக்கும் விதமாக குரு பெயர்ச்சி குரு பலம் சாதகமாக இருக்கும் ..

குரு பெயர்ச்சியால் எந்தெந்த ராசியினருக்கு சாதகமாக இருக்கிறது..? யாருக்கெல்லாம் குரு பலம் வருகிறது..? 

ரிசபம்,கடகம்,துலாம்,மகரம்,மீனம் ராசியினருக்கு குருபலம் வருகிறது இந்த ராசியினருக்கு எல்லாம் குரு பெயர்ச்சி அதிக சாதகமாக இருக்கிறது..இந்த ராசியினர் குருவால் அதிக நன்மைகளை பெறுவார்கள் 
குரு பெயர்ச்சி  விபரம்...

குரு விருச்சிகம் ராசிக்கு பெயர்ச்சியானாலும் அவர் பார்வை மிக முக்கியம்...

குரு பார்வை கோடி தோசம் போக்கும் அல்லவா..? அப்படி அவர் எந்தெந்த ராசியை பார்க்கிறார் என பச்சை நிறத்தில் கொடுத்திருக்கிறேன்...



குரு பார்வை பெறும் ராசிகள் உங்கள் ராசிக்கு எந்த இடம் என்பதை பொறுத்து சில நன்மைகளை செய்வார் ...இன்னொரு பெரிய நன்மையும் உண்டு...குரு பார்வை பெறும் ராசிகளாக இருந்தாலும் சரி...குரு இப்போது விருச்சிகம் ராசியாக இருந்தாலும் அந்த ராசிக்கட்டத்தில் உங்கள் ஜாதகத்தில் ஏதாவது கிரகங்கள் இருந்தால் அதன் காரகத்துவம் பலம் அடையும்...

உதாரணமாக சுக்கிரன் விருச்சிகம்,மீனம்,ரிசபம்,கடகம் ராசிகளில் இருந்தால் வீடு,கார்,ஆடை,ஆபரண சேர்க்கை ,திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும்..திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும்..

செவ்வாய் அந்த ராசிகளில் இருந்தால் நிலம் வாங்கும் யோகம்,தொழில் அபிவிருத்தி உண்டாகும்..புதன் இருந்தால் தொழில் அபிவிருத்தி,கல்வி சிறக்கும்..சனி இருந்தால் தொழில் சிறக்கும்..


12 ராசிகளுக்கான சுருக்கமான பலன்கள் 
                

ராசிகளில் முதல் ராசியில் பிறந்த நீங்கள் எதிலும் முதன்மையானவராக இருக்கவே விரும்புவீர்கள் வேகம்தான் உங்கள் பலம்..கடுமையான உழைப்பும்,சீற்றமும்,பிறருக்கு உதவுவதில் அதிக விருப்பமும் கொண்டவர்கள் நீங்கள்..

ஆடு எப்படி எட்டாத உயரத்தில் இருக்கும் இலை தழைகளையும் எட்டி எட்டி பறித்து சாப்பிடுகிறதோ அதுபோல யாருக்கும் கிடைக்காத சில விசயங்களையும் தன் கடுமையான முயற்சியால் எட்டி பிடிப்பதில் வல்லவர் நீங்கள் என்பதால்தான் உங்கள் ராசியின் சின்னம் ஆடு படம் கொடுத்திருக்கிறார்கள்..

ராசிக்கு எட்டாம் இடத்திற்கு புரட்டாசி 25ஆம் நாள் குரு வருகிறார் ..ராசிக்கு நான்காம் இடத்தில் ராகு ஏற்கனவே உங்கள் சுகத்தை கெடுத்து கொண்டிருக்கும் நிலையில் அஷ்டம குரு என்ன செய்வாரோ என கலங்க வேண்டாம் அஷ்டம சனி காலத்தில் கடும் சூழலில் எவ்வளவோ தடைகளை சமாளித்த உங்களுக்கு இது பெரிய பிரச்சினை அல்ல...குரு பார்வை உங்களை காத்து நிற்கும்..

எட்டில் குரு வருமானத்தை தடங்கல் செய்கிறது அதிக விரய செலவுகளை கொடுக்கிறது..ஆனால் குருவின் பார்வையே அதை சரி செய்கிறது குரு நின்ற பலனை விட பார்வை பலன் அதிக நன்மைகளை செய்யும் என்பதால் குரு தன் ஏழாம் பார்வையால் உங்கள் தன ஸ்தானத்தை பார்வை செய்வதால் அதிக கெடுதல்களை செய்யாது வருமானம் சீராக இருக்கும்..

செலவுக்கு ஏற்ற வருமானம் வந்து சேரும்...தன் ஒன்பதாம் பார்வையால் சுக ஸ்தானத்தையும் குரு பார்வை செய்வதால் சுகம் உண்டாகும் உடல் ஆரோக்யம் சீரடையும் தாய் வழி உறவால் ஆதாயம் உண்டாகும்..

 உறவினர் வழியில் இருந்த பகைகள், தடைகள் விலகும்.குருவின் ஐந்தாம் பார்வை உங்கள் விரய ஸ்தானத்தை பார்வை செய்வதால் வீண் விரயங்கள் கட்டுக்குள் இருக்கும்..

2019 பிப்ரவரியில் ராகு கேது பெயர்ச்சிக்கு பின் இன்னும் சில நன்மைகளையும் பெறுவீர்கள்...ராசிக்கு ஒன்பதில் சனி இருக்கிறார் குரு எட்டில் இருக்கிறார் சமூகத்தில் கெட்ட பெயர் உண்டாகாமல் இருக்க வீண் வாக்குவாதங்களை தவிர்த்துக்கொள்ளுங்கள் இதனால் உறவுகள் பலப்படும்..

தந்தையை நன்கு கவனித்துக்கொள்ளுங்கள்..குலதெய்வம் கோயில் அடிக்கடி சென்று வாருங்கள்..முதியோர் இல்லங்கள் சென்று வரவும் உறவுகளில் பெரியவர்களிடம் ஆசி பெறுங்கள் திருச்செந்தூர் முருகனை ஒருமுறை தரிசனம் செய்து வரவும்..





ரிசபத்தானோடு தோரேல் ..ரிசபம் ராசிக்காரர்களிடம் பக்குவமாக நடந்து கொள்ளுங்கள் என ஜோதிட பழமொழியே இருக்கிறது...பக்குவமான ஆட்களிடம் மட்டுமே பழக விரும்பும் பக்குவமான ஆட்கள்தான் ரிசபம் ராசியினர்.

எதிலும் திட்டமிட்டு செயல்பட வேண்டும் என எப்போதும் யோசிப்பீர்கள். எதை செய்தாலும் அதில் நமக்கு என்ன பலன் இருக்கிறது என்பதில் தெளிவாக இருப்பவர் நீங்கள் ..பணம் சம்பாதிப்பதிலும் அதை சேமிப்பதிலும் தொலை தூர சிந்தனையுடன் நடந்து கொள்வீர்கள்.. தானும் மகிழ்ச்சியாக இருந்து தன்னை சார்ந்தோரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்பக்கூடியவர்..

அழகான வசியமான பேச்சுதான் உங்கள் பலம்..காலப்புருச லக்னத்துக்கு இரண்டாம் வீடு உங்கள் ராசி என்பதால் நீங்கள் கொஞ்சம் பேசினாலும் எல்லோருக்கும் பிடிக்கும்.

உங்கள் ராசிக்கு குரு ஏழாவது ராசிக்கு வருகிறார்.. இது உங்கள் ராசிக்கு குரு பலம்...குருபலம் வந்தால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும்..வீட்டில் சுபகாரியம் கைகூடும்..ஆடை ,ஆபரணம்,சொத்துக்கள் சேர்க்கை உண்டாகும்..வருமானம் பெருகும்..சேமிப்பு உயரும் குரு பலம் என்பது தெய்வீக பலம்.சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உண்டாகும்.. 

கணவன் மனைவி ஒற்றுமை உண்டாகும் .ராசிக்கு அஷ்டம சனி ஒரு பக்கம் தொல்லை கொடுத்து கொண்டிருந்தாலும் குரு பார்வை சில தோசங்களை நீக்கி சனியை கட்டுப்படுத்துகிறார்....

உங்கள் ராசிக்கு குரு பார்வை அதிக பலம்..ராசிக்கு ஏழில் குரு வந்தாலும் குரு நின்ற இடம் பலன் தருவதை விட பார்த்த இடம் அதிக பலன் தரும்...

மீனம்,ரிசபம்,கடகம் ராசிகளை குரு பார்வை செய்வதால் அந்த ராசிகளில் உங்கள் ஜாதகத்தில் இயற்கை சுபர்கள் இருப்பின் அதிக நன்மைகளை செய்வார்கள் ..காரணம் குரு பார்வை அந்த கிரகங்களை அதிக வலிமைபடுத்தும்..

உங்கள் ராசிக்கு குரு லாபஸ்தானத்தை பார்வை செய்வதால் சேமிப்பு அதிகம் உண்டாகும்...வருமானம் பெருகும்...உங்கள் ராசியையே குரு பார்வை செய்வதால் தன்னம்பிக்கை பெருகும்..புதிய முயற்சிகள் கைகூடும்..உடல் ஆரோக்கியம் மேம்படும்...ராசிக்கு மூன்றாம் இடத்தை குரு ஒன்பதாம் பார்வையாக பார்வை செய்வதால் சகோதர வழி ஆதாயம் உண்டாகும் தைரியம் பெருகும் ..தொலை தொடர்புகளால் அதிக ஆதாயம் உண்டாகும்..

திருப்பதி பெருமாளை வழிபடவும்..குலதெய்வம் கோயில் சென்று வழிபட்டு வரவும் உங்கள் ஜென்ம நட்சத்திர நாளில் இஷ்ட தெய்வ கோயில் சென்று வழிபட நன்மைகள் பெருகும் ..


            

மிதுனம் ஒரு இரட்டை ராசி..எதிலும் இரட்டை பலன்களை அடைய கூடியவர் நீங்கள்தான்...அறிவுகிரகமான புதனை ராசி அதிபதியாக கொண்டவர் நீங்கள் என்பதால் உங்களால் நேரடியாகவோ மறைமுகமாகவோ பலன் பெற்றவர்கள் ஏராளம்..அந்த அறிவு அளவுக்கதிகமாக போனால் யாரையும் எதையும், நம்பாமல் மனதை போட்டுக்குழப்பி கொள்வீர்கள் .....

ராசிக்கு ஐந்தாம் இடத்தில் இதுவரை சஞ்சரித்து வந்த குருபகவான் இப்போது ராசிக்கு ஆறாம் இடத்தில் சஞ்சரிக்க போகிறார். இது ருண, ரோக ஸ்தானம் ஆகும்..ருணம், ரோகம் என்றால் கடன்,நோய்...ஏற்கனவே அப்படித்தானே இருக்குமா இன்னுமா எனக்கேட்பவர்களுக்கு இது உங்கள் கணவன் அல்லது மனைவிக்காக கூட இருக்கலாம் அல்லது வீட்டில் உள்ள பெரியவர்களுக்காகவும் இருக்கலாம் ..

ஏதேனும் ஒரு வகையில் அடிக்கடி மருத்துவரை சந்திக்க நேரும்...விரய செலவுகள் அதிகமாக இருக்கும்..ராசிக்கு கண்டக சனியும் நடந்து கொண்டிருப்பதால் வாகனங்களில் செல்கையில் அதிக கவனம் தேவை..தொழிலில் புதிய முதலீடுகளை தவிர்க்கவும்...கடன் வாங்குதல் கொடுத்தல் புதிய சிக்கலை உண்டாக்கும்.கூட்டாளிகள் விசயத்தில் கண்காணிப்பு அவசியம்.உடற்பயிற்சி,மனபயிற்சி இக்காலகட்டத்தில் அவசியம்.உணவு விசயத்தில் அதிக கவனம் தேவை.

ராசிக்கு குரு பாதகமான இடத்தில் இருந்தாலும் அவரது பார்வை உங்கள் ராசிக்கு சாதகமாகவே இருக்கிறது..ராசிக்கு தன ஸ்தானத்தை குரு பார்வை செய்வதால் செலவுக்கு ஏற்ற வகையில் வரவும் நன்றாகவே இருக்கும் ராசிக்கு 12ஆம் இடத்தை குரு ஏழாம் பார்வை செய்வதால் விரயம் கட்டுப்பாட்டில் இருக்கும்...தொழில் ஸ்தானத்தை குரு ஐந்தாம் பார்வையாக பார்ப்பதால் தொழில் சிறப்பாக இருக்கும். 

ஆறில் குரு வரும்போது பலர் வட்டி கட்டும் சூழல் உண்டாகி இருக்கிறது சிலருக்கு அபராதம் கட்டும் நிலையும்,உறவினர்கள் பகையும்,உறவினர்களோடு பஞ்சாயத்து செய்யும் நிலையும் உண்டாகி இருக்கிறது..இது ராசிக்கு மனைவி ஸ்தானத்துக்கு குரு மறைவதால் கணவன் அல்லது மனைவிக்கு மருத்துவ செலவினமும் கருத்து வேறுபாடும் உண்டாக்கும்.மிதுனத்துக்கு குடும்ப வாழ்வு எப்போதும் சச்சரவுதான் இந்த முறை கொஞ்சம் அதிகமாகவே இருப்பதால் கோபத்தை கட்டுப்படுத்துவதை தவிர வேறு வழியில்லை..

புத்திரகாரகன் குரு மறையும் போது குழந்தைகளால் கவலையும் உண்டானாலும் தன் உச்ச வீட்டை குரு பார்ப்பதால் பெரிய பாதிப்பில்லை..குடும்ப ஸ்தானத்தை குரு பார்ப்பதால் திருமண முயற்சிகளில் இருப்போருக்கு திருமணம் முடிந்து நல்ல குடும்பம் அமையும்.

புரட்டாசி மாதத்தில் மதுரை மீனாட்சியை வழிபடுவதும்,வெள்ளிக்கிழமையில் அம்மன் தரிசனமும் திருப்பதி பெருமாள் வழிபாடும் செல்வம் குறையாதிருக்கும் வழிகளாகும்.

                                          

உலகில் தாய் அன்புக்கு ஈடு இணை எதுவுமில்லை..அத்தயக தாய் அன்புக்கு அதிபதி சந்திரன்..இவர்தான் உலகில் இருக்கும் தாய்க்கெல்லாம் அதிபதி.அன்பு என்றால் கடக ராசி...தாய் மீதும் குழந்தைகள் மீதும் அதிக அன்பும் பாசமும் கொண்டவர் நீங்கள்..அவர்களுக்காக எந்த தியாகமும் செய்வீர்கள்...மனிதாபிமானம்,இரக்க சுபாவம் அதிகம் இருப்பதால் உங்களை பயன்படுத்தி காரியம் சாதித்து கொண்டவர்கள் பலர் உண்டு.

மற்றவர்கள் உங்களிடம் சுயநலத்துடன் பழகினாலும் அதையும் தெரிந்து கொண்டே அன்போடு அவர்களுக்கு உதவிகள் செய்வீர்கள்..ஏமாத்திட்டான் என கவலைப்படாமல் அவன் நேரம் அப்படி என கரிசனம் காட்டும் குணம் உங்களுக்கு மட்டுமே உண்டு.

உங்கள் ராசிக்கு போன வருடம் நான்காம் இடத்தில் சஞ்சரித்து வந்த குரு இப்போது ராசிக்கு ஐந்தில் வருகிறார் அதுவும் உங்க பூர்வ புண்ணியஸ்தானத்தில் குரு பலமாக வந்து அமர்கிறார் உங்களுக்கு தொல்லை தந்து வந்த ராகுவின் பாதிப்புகள் குறையும்...ராசியில் அமர்ந்து கொண்டு உங்களுக்கு பெரும் மன உளைச்சலையும் மன அழுத்தத்தையும் தந்து வந்த ராகுவுக்கு குரு பார்வை விழுவதால் ராகு சுபராகி நன்மை செய்வார்..

ராசிக்கு ஐந்தில் குரு வந்தால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடி வரும்.வருமானம் பெருகும்..சமூகத்தில் அந்தஸ்து உண்டாகும் பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும் பதவி உயர்வு கிடைக்கும் ஆடை,ஆபரணம்,பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்..வாழ்வில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்....

சனிப்பெயர்ச்சியும் உங்கள் ராசிக்கு சாதகமாக இருக்கும் நிலையில் குரு பெயர்ச்சியும் உங்களுக்கு சாதகமாக அமைகிறது...குரு தன் ஐந்தாம் பார்வையால் உங்கள் பாக்ய ஸ்தானத்தையும்,லாபஸ்தானத்தையும் ஜென்ம ராசியையும் பார்வை செய்வது மிக சிறப்பானது இதனால் சமூகத்தில் உறவினர் மத்தியில் மதிப்பு மரியாதை கூடும்...லாபம் சேமிப்பு பெருகும் காலி மனை சிலர் வாங்கும் யோகமும் சிலர் வீடு கட்டும் யோகமும் பெறுவர்.

கடக ராசியினர் பெரும்பாலும் தெய்வ வழிபாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பர் சிலர் நீண்ட தூரம் பயணம் செய்து வழிபடவே விரும்புவர் சீரடி,ராகவேந்திரா,திருப்பதி,சபரிமலை பலருக்கு விருப்பமான இடமாக இருக்கும்..உங்கள் இஷ்ட தெய்வத்தை உங்கள் நட்சத்திரம் வரும் நாளில் வழிபட்டு வாருங்கள் குலதெய்வத்தை வருடம் ஒருமுறை வழிபடுங்கள் 



                                      


உலகிற்கெல்லாம் ஒளி வழங்கும் சூரியனின் சொந்த ராசியில் பிறந்த சிம்ம ராசி நண்பர்களே...உங்கள் பலமே உங்கள் உழைப்புதான்.நேர்மை,நியாயம்,தர்மபடி வாழவே விரும்புவீர்கள் எதையும் சரியான முறையில் சரியான நேரத்தில் செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவர் நீங்கள் ...தொழிலை தெய்வமாக மதிப்பீர்கள்..மனதில் அன்பு நிறைய இருந்தாலும் அதை சரியானபடி வெளிக்காட்ட மாட்டீர்கள்..இதனால் முன்கோபகாரர் போலவும்..கறாரானவர் போலவும் பிறருக்கு தோற்றமளிப்பீர்கள் ...

உங்கள் ராசிக்கு ஏழரை சனி,அஷ்டம சனி எதுவும் இல்லை ..கண்டக சனி,அர்த்தாஷ்டம சனி எதுவும் இல்லை...உங்கள் ஜாதகத்தின் படி ஏதாவாது திசாபுத்தி மோசமாக இருந்தால் மட்டும் இப்போது துன்பத்தில் இருப்பீர்கள் ..குருபோன வருடம்முழுவதும் ராசிக்கு மூன்ராம் இடத்டல் இருந்து அதிக அலைச்சல்,விரயம் ,இட மாறுதல் என கொடுத்து வந்தார் இப்போது குரு உங்கள் ராசிக்கு நான்காம் இடத்துக்கு மாற இருக்கிறார்..

நான்காம் இடம் சுக ஸ்தானம்...இது சிலருக்கு இடமாற்றம் கொடுத்தாலும் அது அவர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வுடன் கூடிய இட மாறுதலாகவே இருக்கும்...சிலருக்கு புதிய வாகனம்,சொத்துக்கள் அமையும்...சிலர் காலிமனை வாங்குவர் சிலர் புது வீடு கட்டுவர் சிலர் புதிய வாகனம் வாங்குவர்...நான்கில் குரு சொத்து ,சுகத்துக்காக சுப விரயம் செய்தலை குறிக்கும்..புதிதாக கடன் உண்டானாலும் அது குடும்பத்தின் சுப செலவாகவே இருக்கும் நான்காம் இட குரு பெரிய நன்மையும் இல்லை பெரிய தீமையும் இல்லை சென்ற வருடத்தை ஒப்பிட்டு பார்த்தால்  அதிக நன்மைகளை கொடுக்கும்படியாகவே இருக்கிறது ...வீடு வாஸ்து படி சரி செய்ய விரும்புவோர் இதை பயன்படுத்தி கொள்ளலாம் 

உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தை குரு பார்ப்பதால் திடீர் அதிர்ஷ்டங்களால் சேமிப்பு உயரும்..தொழில் ஸ்தானத்தை குரு பார்வை செய்வதால் தொழிலில் எந்த ஆபத்தும் இருக்காது பதவி உயர்வு அகூடுதல் வருமானம் கிடைக்கும்..விரய ஸ்தானத்தை குரு பார்ப்பதால் வீண் விரயங்கள் இனி குறையும் 

முருகனை செவ்வாய் தோறும் வழிபடலாம் சூரியனின் ராசிக்காரர் என்பதால் சூரியன் உதிப்பதற்கு முன் எழுவதே நல்ல வழிபாடுதான்..சூரியனை நீங்கள் உதிக்கும்போது பார்த்தால் அதிர்ஷ்டம்...
திருச்செந்தூர் ,பழனி,திருவண்ணாமலை உங்களுக்கு நல்ல வழி காட்டும் திருத்தலங்களாகும்..


                                    

கன்னி மகனை கைவிடேல் என ஒரு பழமொழி இருக்கு..இதுக்கு என்ன அர்த்தம்..கன்னி ராசிக்காரங்க நட்பு மற்ற எல்லா ராசிக்காரங்க நட்பை விட உயர்வானது எனமுன்னோர்கள் சொல்லி வெச்சிருக்காங்க...அத்தயக நல்ல மனசுக்கு சொந்த காரங்க கன்னி ராசியினர்..புதனை ராசி அதிபதியாக கொண்டிருப்பதால் நல்ல அறிவாற்றல் நிரம்பியவர்கள் ..புதனை உச்ச வீடாக கொண்டவர்கள் சுக்கிரன் இந்த ராசியில் நீசம் அடைவதால் சுயநலம் இல்லாதவர்கள் ...

கன்னி ராசிக்கு இப்போது அர்த்தாஷ்டம சனி நடப்பதால் வாகனங்களில் செல்கையில் அதிக கவனம் தேவை பணம் கொடுக்கல் வாங்கலில் அதிக கவனம் தேவை...குடும்பத்தினர் மற்றும் உறவு வகையில் வீண் பிரச்சினைகள் எதிர்ப்பு பகை உண்டாகும் காலம் என்பதால் உங்கள் பேச்சில் கவனம் தேவை...மருத்துவ செலவுகள்.வீண் விரயங்கள் ஏதேனும் ஒரு வகையில் குடும்பத்தாரால் உண்டாகும்...சனிக்கிழமையில் அனுமனை வழிபட்டு வாருங்கள்..தொழில் செய்யுமிடத்தில் உடன் இருப்போரால் தொல்லைகள் அதிக வேலை பளு இருப்பினும் சமாளிப்பீர்கள்..காலில் அடிபடுதல்,இடுப்பில் பிரச்சினை போன்ற தொல்லைகளும் இருதய கோளாறுகளும் நான்கில் சனி வரும் போது பலருக்கு நடந்திருக்கிறது ..முன்கூட்டி விழிப்புணர்வுடன் இருந்து கொண்டால் வரும் முன் காக்கலாம் 

குரு உங்கள் ராசிக்கு இதுவரை தன வாக்கு ஸ்தானமாகிய இரண்டில் சஞ்சரித்து வந்தார்..இப்போது குரு உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்துக்கு மாறுகிறார் ..மூன்றாம் இடம்..தைரியத்தை இழக்க செய்யும் என பழைய நூல்களில் சொல்லப்பட்டாலும்..குரு பார்வை நம்மை காத்து நிற்கும்..குரு தன் ஏழாம் பார்வையாக பாக்யஸ்தானத்தை பார்ப்பதால் உங்கள் குரு அருளினாலும்,குலதெய்வ அருளினாலும் முன்னோர்களின் ஆசியாலும் பெரிய தீங்கு உண்டாகாது...ஏழாம் பார்வையாக களத்திர ஸ்தானத்தை பார்வை செய்வதால் நண்பர்கள்,கூட்டாளிகள்,மனைவி வழியில் ஆதாயம் ,உதவிகள் கிடைக்கும்..லாபஸ்தானத்தை குரு ஒன்பதாம் பார்வையாக பார்வை செய்வதால் ஏதேனும் ஒரு வகையில் லாபம் உண்டு...

கன்னி ராசியினர் சபரிமலை ஐயப்பன் வழிபாடு ,ஸ்ரீரங்கம் பெருமாள்,வழிபாடு செய்வதால் பண சிக்கல் ,தொழில் சிக்கல் தீர வழி  பிறக்கும்..


துலாம் முதல் மீனம் ராசி வரை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்