வியாழன், 5 செப்டம்பர், 2019

ரிசபம் ராசி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு என்ன தொழில் அமையும்..? ஜோதிடம்


                      ரிஷப  லக்கினம்

    ரிஷப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு லக்னாதிபதி சுக்கிரன் ஆகிறார். சுக்கிரன் லக்கினத்திற்கு 1,5,9 ஆகிய ஸ்தானங்களில் இருக்கும் போதும், லாப ஸ்தானத்தில் உச்சம் பெறும் போது, சுபகிரகங்கள் சேர்க்கை பெறும் போது விதத்திலும் ஏற்றம் பெறுவார்கள். சுக்கிரன் சுபகிரகம் என்பதால் கேந்திர ஸ்தானங்களில் அமையப் பெறும் போது அதிக அளவில் நற்பலனை    
   
   
    ஏற்படுத்துவது இல்லை. சுக்கிரன் கலைகுரிய காரகன் என்பதால் இந்த லக்கினக்காரர்கள் கலைதுறையில் அதிகம் ஈடுபாடு கொண்டவராக இருக்கிறார்கள். இவர்களுக்கு வாழ்வில் பெண்கள் மூலம் லாபம் அடையும் அமைப்பு ஏற்படுகிறது.
        ரிஷப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சனி 10, 9, வீட்டிற்கும் அதிபதி ஆகிறார். 9, 10 க்கு அதிபதி என்பதால் இவர்களுக்கு இயற்கையாகவே தர்ம கர்மாதிபதி யோகம் உண்டாகிறது. இது அவர்களுக்குத் தொழிலில் பல சாதனைகளைச் செய்யும் அமைப்பை ஏற்படுத்துகிறது.
    ரிஷப லக்கினத்திற்கு தொழில் ஸ்தானாதிபதி சனி என்பதால் இவர்களுக்கு இரும்பு, இயந்திரத் தொழில், பழைய பொருள்கள் விற்பனை செய்தல், வேலையாட்களை வைத்து தொழில் செய்வது, பலரை நிர்வாகம் செய்யும் அமைப்பு போன்றவை பொதுவாக ஏற்படுகிறது.  சனி பகவான் ரிஷப லக்கினத்தில் பிறந்தவர்களுக்குத் திரிகோண ஸ்தானங்களில் அமையும் போது வாழ்வில் எல்லா வகையிலும் ஏற்படுத்துகிறார்.
     ரிஷப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சனி ஜென்ம ராசியில் அமையப் பெற்றால், சுக்கிர வீடு என்பதாலும், திரிகோண ஸ்தானம் என்பதாலும், எல்லா விதத்திலும் ஏற்றம் தருகிறார். சொந்த தொழில், ஆடை, ஆபரணம் சம்பந்தப்பட்ட தொழில், பெண்கள் சம்பந்தப்பட்ட தொழில், ஜவுளி வியாபாரம் போன்றவை ஏற்படுத்துகிறது.
     கலைத்துறையில் , படப்பிடிப்பு துறையில், வேலை செய்யும் அமைப்பு ரிஷபத்தில் உள்ள சனியால் ஏற்படுகிறது. சுக்கிரன் வலுப் பெற்றால், கலைத்துறையில் ஈடுபாடு அதிகரிக்கும்.
       சனி பகவான் 2 ம் இடத்தில் அமையும் போது புதன் வீடு என்பதால் கல்வித் துறையில் சாதனை செய்யும் அமைப்பை ஏற்படுத்துகிறார்.  ஜோதிடர் ஆகும் அமைப்பு. ஆடிட்டர், ஷேர், கமிஷன் போன்றவற்றில்    


    ஈடுபடுவார்கள். புதன் வலுப் பெற்றால் பேராசிரியர் ஆகும் அமைப்பு ஏற்படுகிறது. அரசு பள்ளியில்  வேலை  செய்யும் அமைப்பை சூரியன் ஏற்படுத்துகிறார். கணினி துறையில் சாதனை செய்யும் அமைப்பு ஆகியவற்றை சனி 2 ல் இருந்தால் ஏற்படுத்துகிறார். புதன் கல்விக்காரகன் என்பதாலும், 2 ம் வீடு வாக்கு ஸ்தனாம் என்பதாலும் பேச்சாற்றல் வாழ்வில் முன்னேற்ற நிலையை  2 ல் உள்ள சனி ஏற்படுத்துகிறார். சிலருக்குத் தீராத பணப்பிரச்சினையும் இருக்கும்.
    கடக ராசியில் சனி சஞ்சாரம் செய்தால் ஜலத்துடன் தொடர்புள்ள தொழில், வெளிநாடு செல்லும் அமைப்பு, இரயில்வே, விமானம்,போன்ற இடத்தில் வேலை செய்யும் நிலை, அடிக்கடி பயணம் செய்யும் அமைப்பு போன்றவறை 3 ல் உள்ள சனி ஏற்படுத்துவார். சந்திரன் வலுப் பெற்றால் ஜாதகர் வெளிநாட்டில் தொழில் செய்து அதிகம் லாபம் அடையும் நிலை உண்டாகும்.
    சனி, சூரியன் வீடான 4 ல் அமையப் பெற்றால் அடிமைத் தொழில்,  சிறு வியாபாரம், சிறிய உத்யோகத்தில் இருக்கும் நிலையை ஏற்படுத்துவார். சூரியன் ஜாதகத்தில் வலுப் பெற்றால் உயர்ந்த அரசு உத்யோகம், மின்சாரத் துறையில் பணிபுரியும் நிலை அரசியல் நிலையாவும் ஏற்படும்.
      கன்னியில் சனி சஞ்சாரம் செய்தால் ஜாதகர் பத்திரிக்கைகளுக்கு கதை, கட்டுரை எழுதும் நிலை, அரசுப் பள்ளியில் வேலை செய்யும் நிலை. பலருக்கு நல்வாக்கு கூறும் நிலை.  புதன் வலுப்பெற்றால் பேராசிரியர் ஆகும் நிலை ஏற்படும்.
      6 ல் சனி உச்சம் பெற்று இருந்தால் பலரை வைத்து வேலை வாங்கும் நிலை, கலை துறை மூலம் லாபம் அடையும் நிலை, கூட்டுத் தொழில் செய்யும் நிலை, போன்றவை உண்டாகும், இவர்களுக்கு பல எதிரிகள் இருக்கும் நிலை ஏற்படும். வண்டி வாகனம் மூலம் லாபம் அடையும் நிலை,    

     
     இவர்கள் பலரை வழி நடத்துபவராக இருப்பார்கள், பல வழக்குகளை சந்திக்கும் நிலையும் உண்டாகும்.
     விருச்சிக ராசியில் சனி சஞ்சாரம் செய்து செவ்வாயும் வீடு என்றால் ராணுவம், போலீஸ், ரயில்வே துறையில் வேலை செய்யும் நிலை, வீடு கட்டி விற்கும் நிலை, காண்ட்ராக்ட், பூமி  தொடர்புள்ள தொழில் செய்யும் நிலை, ரியல் எஸ்டேட், மின்சாரத் துறை, என்ஜினியர் ஆகும் நிலை, சூரியன் வலுப்பெற்றால் மின்சாரத் துறையில் உயர் அதிகாரியாக பணி புரியும் நிலை ஆகியவை ஏற்படும்.
 
     தனுசு ராசியில் சனி சஞ்சாரம் செய்தால் அஷ்டம ஸ்தானம் என்பதால் சொந்த தொழிலில் அமைவது கடினம், அமைந்தாலும், நிம்மதி இல்லாத நிலை நீடிக்கும். குரு வீடு என்பதாலும் குரு வலுப்பெற்றால் நீதி மன்றத்தில் பணிபுரியும் நிலை, வழக்கறிஞர் ஆகும் நிலை, ஏஜென்ஜி, கமிஷன் துறையில் வேலை செய்யும் நிலை.  இரும்பு சமபந்தப்பட்ட பொருட்களை வாங்கி விற்கும் நிலை ஏற்படும்.
   சனி பகவான் ரிஷப லக்கினத்தில் பிறந்தவர்களுக்குப் பாதக ஸ்தானமான 9 ல் பாதாகாதிபதியாக ஆட்சி பெற்று அமையப் பெற்ற ஜாதகருக்கு ஒன்பது திரிகோண ஸ்தானம் என்பதால் நீதி மன்றங்களில் பணிபுரியும் நிலை, சூரியன் குரு வலுப்பெற்றால் நீதிபதி ஆகும் நிலை. பெரிய அதிகாரியாக வேலை செய்யும் அமைப்பு ஆகியவை உண்டாகும்.
    கும்ப ராசி ஆட்சி பெற்று சனி சஞ்சாரம் செய்தால் நிலக்கரி, எலக்ட்ரிக்கல், இரும்பு சம்பந்தப்பட்ட தொழில் செய்யும் நிலை ஏற்படுகிறது.  பலரை வேலையில் அமர்த்தும் அமைப்பு இவர்களுக்கு இருக்கும்.       
    
   

      மீனராசியில் சனி சஞ்சாரம் செய்தால் நீதித்துறையில் பணி புரியும் நிலை, ஜோதிடம் , துறைமுகம், பைனான்ஸ், இரும்பு சம்பந்தப்பட்ட வியாபாரம் ஆகியவை செய்யும் வாய்ப்புண்டு.
    சூரியன் வலுப்பெற்றால் அரசியல் ஈடுபாடு, புகழ், பெருமை ஏற்படும் நிலை உண்டாகும்.
     சனி பகவான் மேஷ ராசியில் நீசம் பெற்று அமையப்பெற்ற ஜாதகருக்கு அடிமைத் தொழில் செய்யும் நிலை ஏற்படும். மேஷத்தில் உடன் சூரியன்       உச்சம் பெற்று நீசபங்க ராஜ யோகம் ஏற்பட்டால் அரசுத் துறையில் வேலை செய்யும் நிலை, அரசியலில் புகழ் பெறும் நிலை ஏற்படும்.  மேஷ ராசியில் சனி அமையப் பெற்று  செவ்வாய் ஆட்சி பெற்றால் , இராணுவம், போலீஸ், போன்ற துறையில் வேலை செய்யும் நிலை ஏற்படும்.
   சனி ரிஷப லக்னத்திற்கு 9 ம் அதிபதி என்பதால் 12 ல் அமையப் பெற்று செவ்வாய் ஆட்சி அல்லது லக்ன கேந்திரம் பெற்று சந்திரன் சனி உடனிருந்தாலும் சந்திரன் வலுப்பெற்றாலும் வெளி நாட்டில் அதிகம் லாபம் அடையும் நிலை, கடல் கடந்து செல்லும் நிலை உண்டாகும்.

மேசம் ராசி லக்னத்தாருக்கு என்ன தொழில் அமையும்..? ஜோதிடம்

மேஷ லக்கினம் முதல் லக்னமும் முக்கிய லக்கினமாகும். இந்த லக்கினத்தில் பிறந்தவர்கள் தொழில்ரீதியாக சாதனை செய்கிறார்கள். இஅந்த லக்கினக்காரகளுக்கு லக்னாதிபதி செவ்வாய் அட்டாமதிபதியாகிறார்

இவர் 3,6,10,11 ல் இருக்கும் போது அபரிதமான ராஜ யோகத்தை உண்டாக்குகிறார். தொழிலில் வெற்றி, அரசு வழியில் யோகம், நிலையான உத்தியோகம் போன்ற நற்பலன்கள் உண்டாகின்றன.

          லக்னாதிபதி செவ்வாயும், பத்தாமதிபதியும் சனியும் இணைந்து காணப்பட்டால் கலைத்துறையில் புகழ் தொழிலில் வெற்றி யாவும்.அழகு  நிலையம் நடத்தும் தொழில், பசுமாடு தொடர்புள்ள தொழில், இனிப்பு தொடர்புள்ள தொழில்கள் யாவும் உண்டாகும்.

         சனி பகவான் விருச்சிக ராசியாகிய 8 ம் இடத்தில் அமையப் பெற்றால் அரசு உத்யோகம் அமையும். சனியும், செவ்வாயும் பகை என்பதால் போரட்டம் நடக்கும். ரியல் எஸ்டேட், பூமி சிமெண்ட் விற்கும் தொழில், கட்டிடம் கட்டும் இன்ஜியர்கள், விவாசாயப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள். சுரங்கங்களில்  வேலை செய்பவர்கள். சிற்ப கலைஞர்கள் போன்ற அமைப்பு பெற்றவராக இருப்பார்கள்.
        சனி பகவான் 9 ம் இடமாகிய தனுசுவில் இருந்தால் உயர்ந்த உத்தியோகம் அமையும். இராணுவத்தில் உயர்ந்த பதவிகள், போலீஸ் உத்தியோகம், பூர்வீக சொத்து கிடைக்கும். கமிஷன், ஏஜென்ஸி தொழில் செய்வார்கள். தொழிலில் உயர்வுகள் உண்டாக்கியபடி இருக்கும்.

        சனி பகவான் மகரத்தில் ஆட்சி பெற்று 10 ல் காணப்பட்டால் சொந்ததொழில் செய்வார்கள். அடிமைத் தொழிலை விரும்ப மாட்டார்கள். இரும்பு சம்பந்தப்பட்ட தொழில், மீன் வியாபாரம், பெட்ரோல் பங்க், எண்ணெய் வியாபாரம், தயிர் வியாபாரம், மெக்கானிக் தொழி, டிங்கர் தொழில், அச்சுத் தொழில், கலப்படம், கள்ளச் சாராயத் தொழில் எனப் பல தொழில்களைச் செய்யும் வாய்ப்புண்டு.டாஸ்மாக் பார் தொழில் என்றும் குட சொல்லலாம் 

        சனி பகவான் 11 ம் இடமாகிய லாபஸ்தானத்தில் இருந்தால் ரயில் வே, பஸ் நிர்வாகம், பஞ்சாயத்து, போன்ற இடங்களிம் வேலை கிடைக்கும். இரும்பு, செங்கல், கரும்பு பயிரிடுதல், அடுப்பு கரி, வியாபாரம், மிஷின் தொழில் யாவும் உண்டாகும்.

   சனி பகவான் 12 ம் இடமாகிய மீனத்தில் அமையப் பெற்றிருந்தால் அரசு உத்தியோகம் அமையும். தொழிலில் கூர்மையாக இருப்பார்கள். அடிக்கடி பயணம் செய்து சம்பாதிப்பார்கள். தர்ம ஸ்தாபனம், நீதிமன்றம் , மீன் தொடர்பானவை கப்பலில் ஏற்றுமதி இறக்குமதி போன்ற தொழில்கள் அமையும்
            

செவ்வாய், 3 செப்டம்பர், 2019

ஜாதகப்படி திருமணம் செய்து கொள்ளாமல் போகும் கிரக காரணங்கள்;ஜோதிடம்


திருமணம் செய்து கொள்ளாமல் போகும் கிரக காரணங்கள்


ஒருவருக்கு தன்னுடைய வாழ்வில் திருமணம் நடக்காமல் போவதற்கும்  ஜாதகத்தில் இரண்டாம் பாவமான குடும்ப ஸ்தானம் கெட்டு இருக்க வேண்டும். திருமணமே வேண்டாம் எனமன வைராக்கியத்துடன் இருப்பவர்கள் சனி அல்லது குருஆதிக்கம் கொண்டு இருக்க வேண்டும். இவை யோக திசா _ புக்திகள் சரியாக
அமையாமல் இருப்பதும் ஒரு  வகையில் காரணமாக இருக்க கூடும்



பின்வரும் ஜாதகம்
பெயர்_ சுரேஷ் குமார் பிறந்த தேதி_ 19.3.1978 பிறந்த நேரம்._ 2.50


சூபு

/

செ கேது


   ராசி
குரு
சுக்
ராகு சனி


சந்


செவ்
கேது
சந்



   அம்சம்
/

குரு
சுக்
சனி
சூரி

ராகு
பு




















ஜாதகத்தை பார்க்கும் போது நமக்கு தெரிவது. இரண்டாம் பாவ அதிபதி புதன் நீசம் பெற்று 4 க்குடையவன் சேர்வது. இவர்க்கு 7 ம் பாவாதிபதி செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து இருப்பது இல்லற பற்று இல்லாமல் தனிதேஇருக்க பிரியபட்டு தனித்து வாழ்க்கை நடத்துகிறார். ரிஷப லக்னத்திற்கு மகா பாவியான குரு உச்சம் பெற்று மன வைராக்கியத்தோடு ஒரு யோக சாமியார் மடத்தில் தங்கி ராகுவோடு இருப்பதும், 7ம் பாவாதிபதி செவ்வாய் _ சனி மக்கள், குடும்பம் என்று தேடிக் கொள்ளாமல் ஆன்மிக பாதையில் சென்று இருக்கிறார்.


ஜாதகர் பெயர்_ முத்துகுமார், பிறந்த தேதி_ 25.9.1976
காலை 8.00 மணிக்கு

சூ குரு





  அம்சம்
கேது
பு சனி ராகு
சந்

/சுக்

செவ்


கேது
குரு




ராகு

சனி




/சுக் ராகு
செவ் சந் சூபு








செவ்வாய் திசை இருப்பு _ 5 வருடம் 3 மாதம் 30  
நடப்பு திசை இருப்புகுரு திசை . சுக்ர புக்தி 7.8. 2010 வரை.

 இவரது ஜாதகத்தில் 2 க்குடைய செவ்வாய் 12 ல் மறைவதும், 7 ல் கேது தனதுசுயசாரம் பெற்று வலுவாக இருப்பதும் இவருக்கு மணவாழ்க்கை கசந்து திருமணம்செய்யாமல் தனித்து இருந்து வருகிறார். பின்வரும் சனி திசையும், புதன் திசையும் திருமண யோகத்தை கொடுக்காமல் தொழில் யோகத்தை கொடுக்கலாம். மேலும் இவர் சிற்றின்ப பிரியராக இருப்பதால் இவரது இளமையை பல பெண்ணுடன் பகிர்ந்து கொள்கிறார். தவிர திருமண வாழ்க்கையில் வெறுப்பாக தான் இருக்கிறார்.


பெயர் _ செல்வ ராஜ் பிறந்த தேதி _ 12-3-1973
பிறந்த நேரம் _ 11. 15 இரவு


  

பு

/ சனி
சந் கேது
சூசு

   ராசி

குரு

செவ் ராகு



குரு
சு கேது
/
சூ


 அம்சம்
பு சனி



செவ்
சந் ராகு















செவ்வாய் திசை இருப்பு _ 2 வருடம் 1 மாதம் 23 நாள்.

தற்போது நடப்பு திசை இருப்பு ._ குரு திசை ராகு புக்தி 5.3.2010 வரை.
இவர் அரசு துறையில் காவலராக உயர்பதவியில் இருக்கிறார். போலீஸ்காரர் என்பதால் இவர்க்கு யாரும் பெண் கொடுக்கவில்லையோ என்னவோ இவரும் தனித்து வாழ்க்கை வாழ்ந்து விட்டார். இதற்கு கிரக காரணங்கள் . 2 ம் பாவத்தில் கேது, சந்திரன் இருப்பதும், 2 க்குடையவன் செவ்வாய் ராகுவுடன் சேர்ந்து 8 ல் மறைவதும் திருமணம் நடைபெறாமல் போய் விட்டது. சனி 7 ம் இடத்தை பார்ப்பதும் திருமண பந்தத்தில் விருப்பம் இல்லாமல் போய் விட்டது.



ஜாதகி பெயர் _ செல்வி பிறந்த தேதி _ 7_ 11_ 1976



சந் கேது
குரு



   ராசி

/
சனி

சுக்
சூ செ பு ராகு

சு
சூ பு

செ கேது
குரு

   அம்சம்

சனி

ராகு
சந்

/













சுக்ரன் திசை இருப்பு _ 2 வருடம் 0 மாதம் 14 நாள் தற்போது நடப்பு திசை _ ராகு திசை. சனி புக்தி 3- 11- 2009


      தன்னுடைதாய்,தந்தையின்கெட்டநடத்தைகளால்மனவிரக்தி அடைந்து இந்து மதத்திற்கு மாறி மதசேவைகள் செய்து வருகிறார். இவர்களது ஜாதகத்தில் லக்னாதிபதியும் 2 க்குடையவன் 7 ம் பாவத்தில் பகை பெற்று இருப்பதும் இருக்கிறார். 7 க்குடையவன் சந்திரன் 4 ம் பாவத்தில் கேதுவுடன் இருப்பதும் இருக்கிறார். மண வாழ்க்கையில் வெறுத்து மதசேவையே பெரிது என இருக்கிறார்.  பொதுவாக திருமண வாழ்க்கையை வெறுக்க செய்யும் சில பெற்றோர்கள் உண்டு. இவர்களது நடத்தைகளால் தினமும் வீட்டில் சண்டை சச்சரவுகள் கண்டு மனம் வெறுத்தார்.
ஜாதகர் பெயர் _ திருமூர்த்தி , பிறந்த தேதி _ 5.10. 1972
பிறந்த நேரம் _ 6.00 மாலை
  


/

சனி
கேது


ராசி



சந் சுக்
குரு
ராகு

பு
சூசெ

செவ்


சூ சுகே குரு


அம்சம்



/சந் ராகு

பு
சனி












ஜெனன கால திசை இருப்பு 5 வருடம் 3 மாதம் 30 நாள்
நடப்பு கால திசை இருப்பு _ ராகு திசை சுக்ரன் புக்தி _ 23. 8. 2009

இவரது ஜாதகத்தில் 2 க்குடையவன் 7 ல் சூரியனோடு சேர்க்கை. சூரியன் 6 க்குடையவனாக இருக்கிறார். 7 க்குடையவன் புதன் 8 ல் மறைவு பெறுகிறார். மன வைராக்கியத்தை தரக்கூடிய 3 ம் பாவத்தில் சனியே உள்ளார். இவர் இதுவரை திருமணத்தின் மீதுதோ குடும்ப வாழ்க்கையை பற்றியோ கவலையின்றி ஒண்டிக்குடித்தனம் செய்து வருகிறார்.
    இதுவரை பார்த்த வரையில் 2 ம் பாவம், அதன் அதிபதி , 7ம் பாவம் ,அதன் அதிபதி இவர்கள் கெடாமல் , கெட்ட கிரகங்களுடன் சேர்க்கை பெறாமல் இருக்க வேண்டும். மனைவி அமைந்தால் தான் மண வாழ்க்கை. மனைவியின்றி மன வாழ்க்கை என்பது இருக்காது.