சூரிய திசை சுக்கிர திசைக்கு பின்னர் வரும்..சுக்கிர திசையில் சுகவாசியாக இருந்துவிட்டு சூரிய திசையில் புழுவாய் துடித்தான் என்பார்கள் சூரியனின் திசை அவ்வளவு கொடுமையானதா என்றால் சில லக்னக்காரங்களுக்கு யோகத்தையும் கொடுத்திருக்கிறது..சுபர் சேர்க்கை சுப நட்சத்திரக்கால்களில் சூரியன் நின்று திசை நடத்தினால் யோகமும் செய்திருக்கிறது.சூரியனின் நட்சத்திரங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆரம்ப திசையே சூரிய திசையாக இருக்கும்...உத்திரம்,உத்திரடம் நட்சத்திரங்களில் குழந்தை பிறக்கும்போது சூரிய திசை முதல் திசை..சூரிய திசையில் பிறக்கும்போது தந்தைக்கு ஆகாது என்பார்கள்..குழந்தைக்கு திசை முடியும் வரை மருத்துவ செலவு அடிக்கடி உண்டாகலாம்.
சிம்ம லக்னத்துக்கு லக்னாதிபதியாக வருகிறார் அவர்களுக்கு நன்மையே செய்திருக்கிறார்..தனுசு லக்னத்துக்கு பாக்யாதிபதியாக வருகிறார்.. அவர்களுக்கு யோகத்தை கொடுத்திருக்கிறார்...மேசம் லக்னத்தாருக்கு பூர்வபுண்ணியாதிபதியாகவும் ரிசப லக்னத்துக்கு சுகாதிபதியாகவும் வருகிறார் இவர்களுக்கு அதிர்ஷ்டத்தையும் கொடுத்திருக்கிறார் ..இந்த லக்னத்தாருக்கு எல்லாம் சூரியன் 6,8,1ல் கெடாமலும் ராகு,கேது,சனியுடன் சேராமலும் சூரியன் இருக்க வேண்டும்..குருவுடன் சேர்ந்தால் ரிசப லக்னத்தாரை தவிர்த்து ஏனையோருக்கு போனஸ் யோகம்தான்.
சூரியன் என்றால் ஒளி..அவர்கள் வாழ்வில் அதுவரை இருளாக இருந்தவை அனைத்தும் புதிய ஒளியாக சூரிய திசை விளங்கிடும்.ஒளியே ஓவராக போனால் எரியும்..கண்ணு கூசி தடுமாறி கீழே விழ வைத்துவிடும் அதுதான் மற்ற லக்னத்தாருக்கு உண்டாகிறது மருத்துவ செலவுகள்,அரசாங்க எதிர்ப்பு,வழக்கு போன்றவற்றை சந்திக்க நேரும்..
சூரியனுக்கு சிவனை வணங்கலாம்..குறிப்பாக திருவண்ணாமலை கிரிவலம் நல்லது.தினசரி காலை சூரிய நமஸ்காரம் அவசியம்...துளசி மாட வழிபாடு நல்லது..ஞாயிறு சிவன் கோயில் வழிபாடு உத்தமம்...சூரிய காயத்ரி தினமும் உச்சரியுங்கள் நல்லது நடக்கும்..!!