·
லக்னாதிபதி அஸ்தங்கம் அடைத்து 7 ல் அமர்ந்து 7 ம் வீட்டோன் லக்கினத்துக்கு 8 , 6
( அ )
12 ல் அமர்ந்து ( மறைவு பெற்று ) சுபர்களின் பார்வை இல்லையெனில்
·
ஜாதகர் லக்னாதிபதி திசையில் 7 க்குடையவன் புத்தியில்
இரண்டு தாரம் அமைத்து விடுகிறது .
·
7 ம் அதிபதி லக்னத்தில் அமர்ந்து லக்னாதிபதி பலவீனமாகி 6 , 8 , 12
ல் அமர்ந்து
அவரை சுபகிரகம் பார்க்கவில்லையெனில் 7 ம் அதிபதி திசையில் இலக்கனாதிபதி
புத்தியில் ஜாதகனுக்கு இரண்டு தாரம் அமைந்து விடுகிறது .
·
லக்கினாதிபதி லக்னத்திலும்
7 ம் அதிபதி 7 ல் ஆட்சி பெற்று இருவரில் ஒருவர்
வக்கிரமாகி இருவரில் ஒருவர்
திசை ஒருவர் புத்தியில்
ஜாதகனுக்கு இரண்டு 2தாரம் அமைந்து விடுகிறது .
·
மேலும் பலவீனமடைந்த
லக்கினாதிபதி அமர்ந்த வீட்டோன் 2 ம் வீட்டிலோ , ( அ ) 7 ம் வீட்டிலோ அமர்ந்து அந்த வீட்டாதிபதி அஸ்தங்கமாகவோ , நீசமாகவோ , வக்கிரமாகவோ , அமைந்து விட்டால் ஜாதகனுக்கு இரண்டு தாரம் அமைந்து விடுகிறது .
·
லக்கினாதிபதி பலவீனம் அடைந்த மறைந்த ஜாதகத்தில் களத்திர ஸ்தானாமாகிய
7 ம் வீட்டில் பாவர்கள் நின்று 7 திசையில் லக்கினாதிபதி புத்தியில் ஜாதகனுக்கு இரண்டு தாரம் அமைந்து விடுகிறது .
·
லக்கனாதிபதி பலவீனம் அடைந்த ஜாதகத்தில் 2 ம் அதிபதியும் , 7 ம் அதிபதியும் பாதிக்கப்பட்ட ஜாதகனுக்கு தார தோஷம் ஏற்படுவதை தவிர்க்க இயலாது
·
7 ம் அதிபதி பாவருடன் கூடி 2 ம் வீட்டு அதிபதி 6 , 8 , 12
, ல் மறைந்து சுபகிரகங்களின் பார்வை அவர்களுக்கு இல்லாமல் இருந்து லக்கினாதிபதி பலவீனம் அடைந்து லக்கினத்துக்கு மறைந்து விட்டால் ஜாதகனுக்கு இரண்டு தாரம் அமையும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக