புதன், 9 மே, 2018

ஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்

10  ம் பாவகத்தில்  நிற்கும் கிரகங்கள் விபரம்
     
ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில் இந்த கிரகங்கள் இருந்தாலும் சொல்லப்பட்டுள்ள காரகத்துவ தொழில் அமையும் யார் வலிமையாக இருக்கிறார்களோ அது சம்பந்தமான தொழில் என யூகிக்கலாம் ..பத்தாம் அதிபதி 6,8,12ல் மறைந்திருந்தாலும் பாவ கிரகங்களுடன் சேர்ந்திருந்தாலும் தொழில் அடிக்கடி சரிவையும் சிக்கலையும் சந்திக்கும்...பத்தில் இருக்கும் கிரகம் பலமாக அமைந்து பத்தாம் அதிபதி வலிமை குறைந்திருந்தால் வலிமையாக இருக்கும் கிரகத்தின் தொழில் அமையும்.


சூரியன்  - அரசியல்வாதிகள்  , மந்திரிகள் , நீதிபதிகள் , அரசு ஊழியர் .

சந்திரன்  - நர்ஸ்பணிப் பெண் , உணவு சார்ந்த துறை , மதியுகம்

செவ்வாய்படை வீரர்கள் , மருத்துவர் , நிலக்கிழார்  , வியாபாரி , இன்ஜினியர் , ஆயில்  காப்பிட்டூத் துறை

புதன்ஆசிரியர்  , கணக்காளார்கள் , தணிக்கைத் துறை , ஏஜெண்டுகள் , முதல்வர்கள் , ஜோதிட நிபுணர்   ,

குருபணம் புழங்கும் , நீதிபதி , ஜீவல்லரி , அறநிலையம் , மதம் , அறிவு  சார்ந்த  தொழில் , காப்பகம் ,

சுக்கிரன் இசை , கலைஞர்கள் , நறுமணப் பொருள்கள்  , துணி , ரத்தினம் , பெண்கள் சம்பந்தம் , ஒட்டல்பத்திரிக்கை , மீடியா , வீட்டு உபயோக பொருள்

சனீஸ்வரர்  - ஆலைகள் , லேபர் காற்றை  வைத்து  செய்தல்  , கமிஷன் , தரகர் , ஏற்றுமதி , இறக்குமதி ,   எந்திரம் , பூமி ,தொடர்பு .




  10  ம் வீட்டு  அதிபதி       12  பாவங்களில் நிற்கும்  பலன் ;

1 . லக்னாதிபதி  10  ல் இருந்தால் தொழிலை இவர் தேடி செல்வார் . 10  ம் அதிபதி லக்னத்தில் இருந்தால்  தேடி வரும்  .

2 . 2 ம் அதிபதி 10  ல் அமைந்தால்  வாக்கால்  ஜீவனம் அமையும் .
10  ம் அதிபதி  2  ல் அமைந்தால் குடும்பத் தொழில் அமையும் .

3 . 3  ம் அதிபதி  10  ல் இருந்தால்  கஷ்டபட்டு தொழில்  அமையும் .
10  ம் அதிபதில் இருந்தால் தன் சொந்த முயற்சியால்  தொழில் அமையும் .

4 .  10  ம் அதிபதில் இருந்தால்  பல தொழில்கள் அமையும் . 10  ம் அதிபதி  4  லிருந்தாலும்   வாகனத் தொழில் அமையும் .

5 . 5 ம் அதிபதி 10  ல் இருந்தால் ஆன்மீகத் தொழில் மற்றும் பெரிய  பதவிகளைப் பெறலாம் .
10   ம் அதிபதி 5 ல் அமைந்தால் அரசு உத்தியோகம் அமையும் .

6 . 6 ம் அதிபதி 10 ல் இருந்தால் அடிமை  உத்தியோகம் , செய்ய முடியும் .10  ம் அதிபதி  6 ல் இருந்தால்  அடிமை தொழில் அமையும் .



7  . 10  ம்  அதிபதி   8  ல் இருந்தால்  எந்த தொழிலும்  நிலையாக அமையாது .  10  ம் அதிபதி  9  ல் இருந்தால் தந்தை தொழில் அமையும் .
8 . 10  ம் அதிபதி 10  ல் இருந்தால் உன்னதமான தொழில்   அமையும் .


9 . 10  ம் அதிபதி  12  ல் இருந்தால்  பெரும்பாலும் இந்த  அமைப்பு  உள்ளவர்கள்  . வெளி நாட்டில்  வேலை  பார்ப்பவர்  ( ) வீட்டை விட்டு  வெகு தொலைவு  சென்று  வேலை  பார்ப்பவரகள்  .

பெண்கள் ஜாதகத்தில் மாங்கல்ய தோசம் விளக்கம் ஜோதிடம்

பெண்களுக்கு  மாங்கல்ய  தோஷம்  விளக்கம்
        
லக்னத்துக்கு 8  க்குடையவன்  சூனியம்  அடைந்தாலோ  . சூன்ய  ராசியில்  நின்றாலோ  , சூனிய  கிரகத்தின்   சாரம்  பெற்றாலோ  மாங்கல்ய தோஷம் ஏற்படும் .
       
  குடையவன்   நீசம்   பெற்றாலோ  ,  அஸ்தங்க தோஷம்  பெற்றாலோ , 6  க்குடையவன்  சேர்ந்தாலோ  , 6  க்குடையவன்  சாரம்  பெற்றாலோ  மாங்கல்ய தோஷம் ஏற்படும் .
         
8ல் ராகு  ,  கேது  , மாந்தி  , சூரியன்செவ்வாய்  , சனி அமர்ந்தால்   மாங்கல்ய தோஷமாகும் .
          
         8க்குடையவனுடன்   இராகு  ,கேது  , மாந்தி  . சூரியன்  , செவ்வாய்  , சனி  ஆகிய  கிரகங்கள்  பார்த்தால்   , இணைந்தால்  மாங்கல்ய  தோஷமாகும் .

       குடையவனையோ  , 8  மிடத்தையோ   இராகு  , கேது  , மாந்தி  . சூரியன் , செவ்வாய் , சனி   ஆகிய  கிரகங்கள்   பார்த்தால் தோஷமாகும்

         8க்கு  குடையவன்  பாதாகாதிபதி   சம்பந்தப்பட்டால்  8  ம் மிடத்தில்   பாதகாதிபதி  சம்பந்தம்  ஏற்பட்டால்   மாங்கல்ய தோஷமாகும் .

          ரிசப  லக்னத்துக்கும் , சிம்ம லக்னத்திற்கும்  , குரு  சூன்யம் அடைந்தலோ  , மாந்தி  , ராகு  , கேது  ஆகியன சம்பந்தப்பட்டாலோ  , அஸ்தங்கம்  அடைந்தாலோ  மாங்கல்ய தோஷமாகும் ,

        
 பலமான மங்கல்ய தோஷத்தை  ஏற்படுத்தும்  கிரகங்கள்  இராகு , கேது  மாந்தி  ஆகியன ஆகும் .


        “  பாம்பும்   சனியும்  உடன்  கூடில்  சேயரிடடம்
        தேள்  , தனுசு  , சிங்கம்   இவையினில்  அமர்ந்திட
      நேய ஆள்பவர்   தனக்கும்   நாட்டிற்கும்  துன்பமே “ .
  

ராஜயோகம் தரும் ஜாதகம் 2

திசா நாதனும்  , புத்தி நாதனும்  ஒருவருக்கொருவர்  எந்த  விதத்திலாவது  சம்பந்தம்   பெற்று  நட்போடும்  , பலத்தோடும்ஒற்றுமையோடும்  இருந்து  விட்டால்   தங்களின்   திசா  புத்தி  நடைபெறும்   காலங்களில்  ஜாதகருக்கு   மேன்மையான  பலன்களைத்  தருவார்கள்   என்பது உண்மை .

   சூரியன்சந்திரன்  , செவ்வாய்  ,  கேது   ஆகியோர்  குருவின்  நண்பர்கள்  ஆவர் .
புதன் , சனி  , ராகு  ஆகியோர்  சுக்கிரனின்  நண்பர்கள்   ஆவர் .
குருவின்   பிரிவில்  உள்ள   நண்பரின்  லக்கினங்களுக்கு 
சுக்கிரனின்  நண்பர்கள்  தரும்  யோகங்கள்  வேலை  செய்யாது  .
அதைப்போலவே  சுக்கிரனின்  பிரிவில்  உள்ள   நண்பரின்  லக்கினங்களுக்கு


குருவின் நண்பர்கள்   தரும்  யோகங்கள்  வேலை  செய்யாது  .  குறிப்பிட்ட   லக்கினங்களுக்கு    அதன்    நட்பு  கிரகங்கள்  தரும்   யோகங்கள்   மட்டுமே    செயல்  படும்  .  மற்ற  கிரக யோகங்கள்  அவ யோகங்களாகும் .

 நட்புக்கிரகங்களின்  யோகங்களே   ஒரு  மனிதனை   முன்னுக்கு   கொண்டுவரக்   கூடியவை  .
பகைக்கிரகங்கள்   யோகத்தைத்  தரும்  சூழ்நிலையில்   இருந்தாலும்
முமுமையாக  யோகம்  செய்யாது  .

  முக்கியவிதியாக  யோகம்  தரும்  வீடுகளில்  அதாவது  அந்த   பாவங்களில்    நட்புக்கிரகங்கள்  இருக்க  வேண்டும்  ,
பகைக்கிரகங்கள்   இருக்கக்  கூடாது  .

 நட்பு  வீட்டில் , நண்பருடன்  இருக்கும்  கிரகங்கள் யோகம்  தர  வேண்டிய  சூழ்நிலையில்  மிகப் பிரதமான  யோகங்களைத்  தருகின்றன.
       பகை வீட்டிலோ  , பகைவருடனோ  இருக்கின்ற  கிரகங்கள்   யோகத்தை  தர   வேண்டிய  நிலையில்  இருந்தாலும்  சும்மா  இருந்து  விடும் .

  லக்னாதிபதிக்கு  நட்புக்கிரகங்கள்   பலவீனமடைந்து  கெட்டிருந்தாலும்  அவர்களது   திசை  நடக்கும்  போது  பகை  கிரகங்களைப்  போல்  கெடுதல்  செய்யாது  .


 குல தெய்வ  சாபம் நீங்க   திருமியச்சூர்  கோவில்  சென்று   ஸ்ரீ  லலிதாம்பிக்கை   சமேத  நாதஸ்வாமியும்  ஸ்ரீ மின்னும் மேகலை  சமேத  ஸ்ரீ  ஸகல  புவனேஸ்வரர் எனும்    இளங்கோயில்   தெய்வத்தை  வழிபட வேண்டும் .   மயிலாடுதுறை   வழி  திருவாரூர் சாலை  பேரளம்  பஸ் நிலையம்  1 , கி  .மீ  தூரம் .

செவ்வாய், 8 மே, 2018

ராஜயோகம் தரும் ஜாதகம்


குருவுக்கு   கேந்திரத்தில்   செவ்வாய்  இருந்தால்     குரு  மங்கள  யோகம்  ஏற்படுகிறது  .
இதனால்   பூமி யோகம்  , மனை  யோகம்   , அசையாத   சொத்துக்கள்     சேரும்   அற்புத   யோகம்    யாவும்  உண்டாகும் .


 . சூரிய  பகவான்  3 , 6 , 11  ல்   இருக்கும்  போது   அபரிதமான   ராஜ யோகம்  ஏற்படுகிறது  .
சூரியன் 7 ல்   இருக்கும்    போது   களத்திர தோஷம்  ஏற்படும் .
சூரியன்  5  ல்   இருக்கும்  போது    புத்திர தோஷம்   ஏற்படும் .
சூரியன்   3  ல் இருக்கும்  போது   சகோதர  தோஷம்  ஏற்படும் .

. கால சர்ப்ப  தோஷத்தால்   பாதிக்கப்பட்ட   ஜாதகர்  சர்ப்ப  சாந்தி   செய்வதன்  மூலமும்  ,    நவக்கிரக   ஹோமம்   செய்வதன்  மூலம்   ராகு  , கேது   தோஷம்  அனைத்தும்   விலகும் .

 .  ஒருவருடைய  வீடு   வளமாக   இருக்க   தென்கிழக்கு   திசையில்  சமையல்  அறை  , தென் மேற்கு  திசையில்    படுக்கை அறை  , வட  கிழக்கில்   பூஜை  அறையும்  ,  கன்னி  மூலை  , உயர்ந்து  , ஈசான்யம்  வளர்ந்து  காணப்பட்டால்   வீட்டில்   வளமாக  வாழலாம் .

 . ஜாதகத்தில்  ஒரு  கிரகத்தின்  காரகத்துவம்  மற்றும்  கிரகம் ஏற்றுள்ள  ஆதிபத்தியத்தின்    தன்மைகளைத்   தராவிடாமல்   முழுமையாகத்   தடுக்கும் .( )  குறைக்கும்  ஆற்றல்  நவகிரகங்களில்    இராகுவிற்கு   மட்டுமே   உண்டு   என்று  அறியும்  .

 .   ஜாதகத்தில்   இராகுவிற்கு   8  எட்டு   டிகரிக்குள்  நெருக்கும்  கிரகம்  இராகுவினால்   சுத்தமாக  பலவீனமாக்கப்பட்டு   தனது  இயல்புகள்  அனைத்தையும்   பறி  கொடுத்துவிடும் .


அதாவது  அதிக  ஒளியையும்  , ஒளியே  இல்லாத   இருட்டையும்  நெருங்கும்    கிரகங்கள்   தங்களின்   சுய  தன்மையை  இழப்பார்கள்  .

 .   ஜாதகத்தில்   இராகுவிடம்  மிக  நெருங்கும்   குரு  பகவான்  
குழந்தைகளையும்   , அதிகமான   பண  வசதியையும்  , நேர்மையான   குணத்தையும்  ஆன்மிக  ஈடுபாட்டையும்   தரும்  சக்தி  அற்றவர்   ஆவார்

. இராகுவிடம்  நெருங்கி இணையும்  சுக்கிர  பகவான்  பெண்  சுகத்தையும்  , உல்லாசத்தையும்  ,    காதல்   அனுபவம்  மற்றும்   சுக வாழ்வு  தர மாட்டார் .

.  செவ்வாய்  பகவான்  தன்  இயல்புகளான  கோபம் , வீரம் , வெறித்தனம்  கடின மனம்  சகோதரம்  போன்றவற்றை   இழப்பார் .

   .      இராகுவிடம்  இணையும்   சனியால்   (   சரணடையும் )   சனியால்  வறுமை , தரித்தரம்  , கடன் , நோய்  , உடல்   ஊனம் போன்றவறைத்  தர  இயலாது  .

 . சந்திரன்   மனத்திற்கும்   , மனம்  எடுக்கும்  முடிவுகளுக்கும்  காரணமானவர்  என்பாதால்  இராகுவிடம்  நெருங்கும் போது  மனத்தைக்  கட்டுபடுத்தும் ஆற்றலை  ஜாதகர்   இழந்து   மன நலம்  குன்றுவார் . தாயன்பு  பரிபோகும் .



 .  இராகு  புதனுடன்  இணையும் போது    நிபுணத்துவம்  குறையும்  அறிவாற்றல்  அளவோடுதான்   இருக்கும் .
கணிதத்  திறமை  காணாமல்  போகும் .

. இராகு  சூரியனுடன்  இணையும்  போது  அரசுத் தொடர்பு , அரச லாபம் , தந்தையின்   ஆதரவு  போன்றாவற்றைத்  தரும்  வலிமையை  இழப்பார் .

 . ஒரு  கிரகம்  உச்சம் , மூலத்திரிகோணம்  , ஆட்சி  போன்ற  எத்தகைய   வலிமை  நிலையில்  இருந்தாலும்   சரி  , அது   இராகுவுடன்  மிகவும்   நெருங்கினால்   அத்தனை  வலிமையையும்  இழக்கும் .

.   ஒரு  கிரகம்   ஒரு  ராசியில்   ராகுவுடன்   குறிப்பிட்ட   டிகரி இடை வெளி தள்ளி   இணையும் போது   அந்த   சுப    கிரகங்களின்   இயல்பை   ராகு  பகவான்  பெற்று   தனது  திசையில்   அந்த    கிரகங்களின்  காரகத்துவம்  மற்றும்   ஆதிபத்திய  பலனைத்  தருவார்  .

 .   அதே  போல்  பாபக்  கிரகங்களுடன்   இணைந்த ராகு   அவர்களின்   கெட்ட  காரகத்துவங்களை   தனது  திசையில்   பிரதிபலித்து  கஷ்டங்களுக்கு  உள்ளாக்குவார் .
குறிப்பாக   சனி  , செவ்வாயின்   பார்வைப் பெற்ற ராகு   தன்  திசையில்   நல்ல  பலன்களை  செய்வது   கடினம்   சனி  , செவ்வாய்   லக்னம்  சுபர்களாக   இருந்தாலும்   கஷ்டங்களை  கொடுத்து  விடுவார் .




வீடு புதுசா கட்டும்போது அவசியம் பாருங்க வாஸ்து


வாஸ்து

வீடு கட்டக்  கூடிய   மனை  சதுரமாகவோ  , நீள்  சதுரமாகவோ   அமைய  வேண்டும் .
முன்பாகம்  குறுகி  பின்  பாகம்  விரிவடையக்கூடாது  .  அது போல   முன் பாகம்   விரிந்து   பின் பாகம்   குறுகி  இருக்ககூடாது   .


·         வீட்டிற்கு  4  பக்கமும்   இடம்   விடு  இருக்க   வேண்டும் .
·         வடக்கு  ,  வட  கிழக்குப்  பகுதியில்   இடம்   அதிகமாக   விட வேண்டும் .
·         தெற்கு   , தென் மேற்கு  பகுதியில்   காலி  இடம்  இருக்க  கூடாது .
·         கிணறு    ,  போர் வெல்  வடகிழக்கு  பகுதியில்   அமைக்க  வேண்டும் .

·         சமையல்  அறை    தென் கிழக்கு  பகுதியில் நலம்


முடியாத  பட்சத்தில்     வட  மேற்குப்  பகுதியில்  (   திசையில் )  சமையல்  அறை  அமைக்கலாம்  .


·         வீட்டின்   பால்கனி  வடக்கு , கிழக்குப் பகுதியில்  அமைப்பது  உத்தமம்  .  முடியாத    பட்சத்தில்   வடகிழக்கு   திசை   அமைக்கலாம் .

·         வட  கிழக்கு   பகுதிகளில்   கதவுகள்  நிறைய  வைப்பது  . வென்டி லேட்டர்   குறைவாக   உத்தமம்  .

·           மேற்கு  திசையில்   ஜன்னல்  , வென்டி லேட்டர்  குறைவாக  வைப்பது  நன்மை  தரும் .
தெற்கு  , மேற்கு பகுதியில்   அகலமாக  அமைப்பது  உத்தம  பலனை   உண்டாக்கும்

·         வடக்கு  , வட   கிழக்கு  திசையில்  கதவுள்ள  வீடுகள்   அமோகமாக   இருப்பதை    பார்க்கலாம் .

·         மேற்கு  திசையில்   படுக்கை அறை  அமைக்கலாம் .

·         குளிக்கும்  அறை  வடக்கு  திசையிலோ   , தென்  கிழக்கு  ( )   வட மேற்கு  திசையிலோ அமைப்பது   கூட  உத்தம  பலனை    ஏற்படுத்தும் .

·          வட மேற்கு  வாயு  மூலை  அறை  அமைக்கலாம் .  அதை  படுக்கை  அறையாகவும்   பயன்படுத்தலாம்.
பொருட்கள்  வைத்து  பூட்டும்  செயல்  படுத்தவும் .

·         பூஜை  அறையை   வட கிழக்கில்   அமைக்க  வேண்டும் .  கிழக்கு   பார்த்து   சாமி   விக்ரங்களை   பூஜிக்க  வேண்டும் .

·         வீட்டிற்கு    தண்ணீர்த் தொட்டி   தெற்கு  , தென்  மேற்கு   திசையில்   உத்தம  பலன்  கொடுக்கும் .

வெள்ளி, 4 மே, 2018

யோனி பொருத்தம் பார்க்காம கல்யாணம் செஞ்சுடாதீங்க!!

யோனி பொருத்தம் thirumana porutham திருமண பொருத்தம் 
திருமண பொருத்தத்தில் இது முக்கியமானது இது தாம்பத்ய சுகம் எப்படி இருக்கும் என ஒவ்வொரு நட்சத்திரத்தாருக்கும் ஒரு மிருகம் அடையாளமாக கொடுத்து மறைமுகமாக உதாரணமாக ஜோதிடத்தில் சொல்லி இருக்கிறார்கள் இந்த பொருத்தம் இல்லை என்றால் ஜோதிடர் யாரும் பொருத்தம் இல்லை என்றுதான் சொல்வார்கள்..பூரம் நட்சத்திரம் எலி என கொடுக்கப்பட்டுள்ளது ரோகிணிக்கு பாம்பு என கொடுக்கப்பட்டுள்ளது இவை ஒன்றுக்கொன்று பகை என்பது தெரிந்ததுதான் எலியை கண்டால் பாம்பு விழுங்கி விடும்..எலியின் வாழ்க்கை முறை சிறியது.தன் வீட்டை விட்டு வேறு எங்கும் போக விரும்பாது.அப்படித்தான் இந்த நட்சத்திரக்காரர்களின் குணமும் இருக்கும் ..அஸ்தம் எருமை கொடுக்கப்பட்டிருக்கும் எப்போதும் எரும சேத்துல கிடக்குற மாதிரி கடுமையான உழைப்பு குறைவு..அதிக தூக்கம் ..எருமைக்கு புலியை சேர்க்க முடியாது அடிச்சு தின்னுடும்.அது வேகம் அதிகம் இது வேகமே இல்லை.

Image result for தேவ கணம்


பாம்பு ரோகிணி...பழிக்கு பழி..வாங்கும் உயிரினம் இதுவும் தன் வளையை விட்டு எங்கும் போகாது.யாராவது குறிக்கிட்டால் ஆபத்து.இதன் உறவு முறை வித்தியாசமானது..எனவே யாரும் திருப்தி படுத்த முடியாது அதனால் சுகம் எப்போதும் முழுமை அடையாது.பாம்பை கண்டால் நாய் சும்மா விடாது அதனால் நாய் நட்சத்திரங்கள் எதிரி..அதாவது திருவாதிரை.இதே நாய் நட்சத்திறத்துக்கு பூனை நட்சத்திரங்கள் எதிரி..ஆயில்யம்..நாயும் பூனையுமா அடிச்சுக்குவாங்க...உடலுறவு சந்தோசம் தராது வாழ்க்கை போர்க்களம் .வேறு துணையையே விரும்புவாங்க.எலிக்கு எலி அமைஞ்சா நல்லதுதான் அதைதான் மகத்து புருசம் பூரத்து பொண்டாட்டி மாதிரினு சொல்வாங்க..
இதையே கூட்டாளிகளுக்கும் நண்பர்களுக்கும் பொருத்திபார்க்கலாம்...புலி விசாகம் ..இதுக்கு கூட்டாளி எலி வந்தாலும் சரி வாழ்க்கை துணை அமைஞ்சாலும் சரி...ஒத்து வருமா...ஒரே நாளில் பிச்சுக்கிட்டு போயிடும்...ஒவ்வொரு மிருகத்தையும் அதன் உடலுறவு முறை உடலுறவு காலம் அதன் மர்ம உறுப்பின் நீளம் ஆழம் என மறைமுகமாக இதில் சொல்லப்பட்ட விசயங்கள் ஏராளம்..தாம்பத்யம் நன்றாக அமைந்தால்தான் குடும்ப வண்டி ஓடும்.எனவே யோனி பொருத்தம் மிக முக்கியமானது