செவ்வாய், 22 ஜூலை, 2014

ஜோதிடம்;12 ஆண்டுகளுக்கு பிறகு வரும் புனிதமான ஆடிஅமாவாசை26.7.2014 astrology

சூரியன் சிவ அம்சம். சந்திரன் சக்தியின் அம்சம். இவ்விரண்டு அம்சங்களும் ஆடி அமாவாசை தினத்தில் ஒன்றிணைவதால் ஆடி அமாவாசை முக்கியத்துவம் பெறுகிறது.தாய்கிரகமாகிய சந்திரன் ராசியில் சூரியன் இருக்கும் மாதம் ஆடி மாதம்..வருடத்தில் மூன்று தினங்கள் நிச்சயமாக நம் முன்னோர்கள் நம் இல்லம் தேடி வருவார்கள் அது மகாளயபட்ச புரட்டாசி அமாவாசை,தை அமாவாசை,ஆடி அமாவாசை ...இந்த நாட்களில் நாம் அவர்களை வணங்கினால் நமக்கும் நம் பிள்ளைகளுக்கும் அவர்கள் ஆசி கிடைக்கும்.நம் கஷ்டங்களை தீர்த்தும் வைப்பார்கள்.. அதிகாலையில் நதிக்கரையில் நீராடி பிராமணரை கொண்டு முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்துவிட்டு,மதியம் பூஜை அறையில் தலை வாழை இலை போட்டு, பருப்பு சாதம் வாழைக்காய் பொறியல் செய்து,அவல் நாட்டுசர்க்கரை வைத்து நெய் தீபம் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி படையலிட்டு வணங்கி அதன் பின் காக்கைக்கு எள் சாதத்துடன் இதனையும் வைத்து காக்கை உண்டபின் உண்ண வேண்டும்....

ஆடி அமாவாசை சிறப்பு வாய்ந்த நாள்.அதுமட்டுமில்லாமல் எந்த வருடமும் இல்லாத சிறப்பு இந்த வருட ஆடி மாதத்துக்கு உண்டு..12 ஆண்டுகளுக்கு பின் குரு கடகத்தில் உச்சம் பெற்று இருக்கும்போது சூரியன்,சந்திரன் அங்கு கூடிகின்றனர்..இது மிகவும்  புனிதமான நாள் என்பதால் அன்று தான தர்மம் செய்வது வருடம் முழுக்க செய்ததற்கு சமமாகும்..எல்லா தோசங்களையும் நிவர்த்தி செய்து கொடுக்கும்.ஆடி அமாவாசை 26.7.2014 அன்று நான், ஆதரவற்ற ஊனமுற்ற,குழந்தைகளுக்கு 100 பேருக்கு மேல் அன்னதானமும் முதியவர்களுக்கு ஆடைதானமும் வழங்க இருக்கிறேன்...இணைந்து கொள்ள விரும்புபவர்கள்,நன்கொடை அனுப்ப விரும்புபவர்கள் 9443499003 தகவல் தரலாம்...மெயில்;sathishastro77@gmail.com

வியாழன், 17 ஜூலை, 2014

ஆடி மாதம் முன்னோர்களின் அறிவாற்றல் ஜோதிடம்

ஆடி மாதம் பிறந்துவிட்டது...வேப்பிலை,மஞ்சள் வாசனை இனி மணக்க ஆரம்பித்துவிடும்..ஆடி மாதம் சூரியன் நீர் ராசியான கடகத்த்தில் சஞ்சரிப்பதால் தொற்று நோய் கிருமிகள் அதிகரிக்கும்...குறிப்பாக நீரால் பாதிப்பு அதிகம்..புதிய நோய்கள் உருவாகும்....திருமணம் போன்ற சுபகாரியம் இந்த மாதத்தில் விலக்கு விலக்கு கொடுக்கப்பட்டது...காரணம் சூரியன் யுத்த கிரகம் அது காதல் ராசியில் இருக்கும்போது காதல் எப்படி கனியும்..? அதனால் திருமணம் ஆகாது என சொல்லப்பட்டது..

உடல் மனக்காரகனாகிய சந்திரன் ராசியில் சூரியன் வரும்போது உடலையும் மனதையும் பலவீனமாக்கும்..அதனால் குழந்தை பிறந்தால் அது மிக சிரமப்படும்...என யூகித்து ,புரட்டாசி திருமணத்தயும் மார்கழி திருமணத்தையும் தவிர்த்தனர்..அதுவும் தொற்றுகிருமிகள் உருவாகும் காலம்தான்..ஆடி மாசம் புது தம்பதிகள் சேரவும் வேண்டாம் அப்படி சேர்ந்தால் 10 மாதம் கழித்து சித்திரையில் குழந்தை பிறந்து அக்னி நட்சத்திரத்தில் தாங்காமல் குழந்தை இறந்துவிடும் என கருதி அவர்களை இந்த மாதத்தில் பிரித்தும் வைத்தனர்.நோயிலிருந்து தப்பிக்க வேப்பிலை,மஞ்சள் போன்ற கிருமி நாசினி மூலிகைகளை அதிகளவில் பயன்படுத்தும் அம்மன் திருவிழாவை ஆரம்பித்தனர்..வேப்பம்பூ போட்ட சத்தான ஆரோக்கியமான ராகி கூழை தெருவெங்கும் மக்களுக்கு வினியோகம் செய்தனர் நம் முன்னோர் எவ்வளவு அறிவாற்றலுடன் நோய் வரும் முன் மக்களை காப்பாற்றி இருக்கின்றனர்..?

மூட்டுவலி ஆயில் பற்றி நிறைய நண்பர்கள் விசாரித்தனர்..ஏற்கனவே மூலிகை சாம்பிராணி மிக பரபரப்பாக நண்பர்கள் வாங்கி ஆதரவு தரும் நிலையில் மூட்டுவலி ஆயிலும் தரமாக இருக்கும் என எண்ணி விசாரிக்கும் நண்பர்களுக்கு நன்றி இப்போதுதான் இதன் உற்பத்தி வேலைகள் தர சோதனை ஆய்வுகள் முடிந்தன....100 மில்லி கிராம் 300 ரூபய்க்கு கொடுக்க இருக்கிறேன் வேண்டும் என்பவர்கள் என் செல்லில் தொடர்பு கொள்ளலாம் உங்க முகவரியை மெயிலுக்கு அனுப்பி விடவும் sathishastro77@gmail.com cell 9443499003

இந்த ரிலாக்ஸ் ஆயில் relax oil மொத்தம் 5 வகை எண்ணெய் 3 விதமான இயற்கை உப்புகள் மூலிகை மருந்துகள் கொண்டு தயாரிக்கப்பட்ட உடனடி வலி நிவாரணி ஆகும்.... நன்றி..!!

செவ்வாய், 15 ஜூலை, 2014

தொடர்புக்கு


EMAIL;  sathishastro77@gmail.com

cell;9443499003

வங்கி கணக்கு எண்;k.sathishkumar 20010801181 State bank of India ,chithode Ifsc;SBIN0018642

  

கட்டணம் ரூ 500 மட்டும்..


ஜாதகம் மெயில் மூலம் அனுப்பி பலன்களை அறியலாம்...

ஜாதகம் ஸ்கேன் செய்ய முடியாவிட்டால் உங்கள் பிறந்த தேதி,பிறந்த நேரம்,பிறந்த ஊர் விபரங்கள் உங்கள் பெயர் எழுதி அனுப்பவும்..கேள்விகள் இருப்பின் எழுதலாம். திருமணம் பொருத்தம் பார்க்க இருவரது விபரங்களும் அனுப்பவும்....

குழந்தைகளுக்கு நியூமராலஜி முறையில் பெயர்கள் தேர்வு செய்து அனுப்பவும் ஜாதக பலன்கள் அனுப்பவும் ,பிறந்த தேதி,பிறந்த நேரம்,பிறந்த ஊர்,தாய் ,தந்தை பெயர்கள் எழுதி ஆண் /பெண் விபரமும் குறிப்பிடவும்.

                                                             


office;செளந்தர்யா ஜோதிட நிலையம்

122,பிரகாஷ் காம்ப்ளகஸ்,கம் அருகில்,
சத்தி ரோடு,ச்ச்   சித்ோடு -638102,ஈரோடு மாவட்டம்.

  ஸ் ரூட்    ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து சத்தியமங்கலம் ,கோபி செட்டிபாளையம் செல்லும் பஸ்களில் ஏறி 12 கிமீ தொலைவில் இருக்கும் சித்தோடு வந்தடையலாம்..
                                                         

சனி, 12 ஜூலை, 2014

மூட்டுவலி நீங்க முதுகுவலி நீங்க அருமையான மருந்து

மூட்டுவலி என்பது இன்று 50 வயதை கடந்த பெரும்பாலான பெண்களுக்கும் ஆண்களுக்கும் இருக்கும் முக்கியபிரச்சினை எலும்பு ஜவ்வு தேய்மானத்தாலும்,மலச்சிக்கலாலும் கூட உண்டாகும்...மனித உடலானது எண்ணற்ற  தசை, தமனி, எலும்பு, நரம்புகளால் பின்னிப் பிணையப்பட்ட ஒரு உருவமாகும்.  உடலின் செயல்பாடுகள் அனைத்தும் வாத, பித்த, கபம் என்னும் முக்குற்றங்களால் செயல்படுகிறது.  இதில் ஏதேனும் ஒன்றின் ஆதிக்கம் அதிகரித்தாலோ, குறைந்தாலோ அது நோயாக மாறிவிடுகிறது.  இதற்கு ஆதாரமாக செயல்படுபவை தச வாயுக்கள்தான்.  இவற்றின் செயல்பாடுகளில் சீற்றம் கண்டால் அவை உடலைப் பாதிக்க ஆரம்பிக்கும்...

உட்கார்ந்தால் எழ முடியாமல்,எழுந்தால் உட்கார முடியாமல் அவதிப்படுபவர் பலர்.மாடிப்படி ஏற முடியாது....பஸ்ஸில் கூட ஏற முடியாமல் தடுமாறி விழுபவர்களும் உண்டு...இதனால் நல்லது கெட்டது என ஊறவினர் வீடுகளுக்கு கூட செல்ல முடியாமல் அவதிப்படுபவர்கள் பலர் பார்த்திருக்கிறேன்...

இதற்காக ஹோமியாபதி,அலோபதி,ஆங்கில மருத்துவம் என அடிக்கடி போய் பார்ப்பார்கள்  ..தினம் நிறைய மாத்திரை சாப்பிடுவார்கள் ஆனால் மாத்திரை சாப்பிட்டால் கொஞ்ச நேரம் நன்றாக இருக்கும். பிறகு மீண்டும் வலி ஆரம்பித்துவிடும்.....மாத்திரை அதிகளவில் சாப்பிடுவதால் குடலில் இரைப்பையில் புண் உண்டாவதும்,வயிற்று எரிச்சல் உண்டாவதும்,சிறுநீரக பாதிப்பு அடைவது என பக்க விளைவுகளும் உண்டாகிவிடும் 

இயற்கையான மூலிகை மருந்துகளும் எண்ணெய்களும் மட்டுமே வலியை குறைக்கும் நிரந்தரமாக தீர்க்கும்...இதற்காக வேப்ப எண்ணெய் ,விளக்கெண்ணெய்,நல்லெண்ணெய் சம அளவு எடுத்து நொச்சி இலை,முடக்கத்தான் இலை சாறும் இன்னும் சில மூலிகை சாறுகளும் கலந்து,இத்துடன் பச்சைக்கற்பூரம் மற்றும் புதினா உப்பு போன்ற சில இயற்கை உப்புகளும் கலந்து இந்த வலி நிவாரண எண்ணெய் தயாரிக்கப்பட்டுள்ளது..இதனை வலி உள்ள இடத்தில் தடவினால் சிறிது நேரத்தில் வலி குறையும் ..சில தினங்களில் நிரந்தர குணமும் உண்டாகும்..கடைகளில் கிடைக்கும் எண்ணெய்கள் பெரும்பாலும் நல்லெண்ணெயில் பச்சைக்கற்பூரம் மட்டும் கலந்து விற்பார்கள்...அது வாசனையாக இருக்குமே தவிர பலன் தராது..ஆனால் இது முழுக்க வீரியமானது..வலியை உடனே நிறுத்த செய்யும்..நிரந்தர குணத்தை உண்டாக்கும்..முதுகுவலி,கழுத்துவலி,இடுப்புவலி,மூட்டுவலி,தோள்பட்டை வலி என எல்லாவற்றுக்கும் பயன்படுத்தலாம்..!!

இதன் விலை 100 மில்லி கிராம் 300 ரூபாய் மட்டும்.வங்கி கணக்கு விபரம் வலது பக்க மேல்புறம் இருக்கிறது..தேவைப்படுபவர்கள் 
மெயில் மூலம் முகவரி அனுப்பி 
பெற்றுக்கொள்ளலாம்....sathishastro77@gmail.com 
cell;9443499003

வியாழன், 10 ஜூலை, 2014

செய்வினை,இடுமருந்து உண்மையா..?புஷ்பக விமான உண்மைகள்

செய்வினை ,ஈடு மருந்து இதுவெல்லாம் உண்மை.பொய் கிடையாது...பலரும் இதை ரகசியமாக செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்..ஆனால் போலிகள் அதிகம்.ஆனால் உண்மை என்னெவெனில் இது மிக கொடூரமானது..அடுத்தவருக்கு மிக தீங்கு விளைவிக்ககூடியது..இதை செய்வது பாவம்.இதை யாருக்கு வேண்டுமானாலும் செய்ய முடியும்..எதிரிகளை அழிக்க பயன்படுத்த கூடியது..எதிரியின் மனநிலையை பாதிக்க செய்யக்கூடிய மூலிகைகளை உணவில் கொடுப்பதுதான் ஈடுமருந்து,செய்வினை எனப்படுகிறது.

அளவு க்டந்த கோபம் அடுத்தவரை கெடுக்க வேண்டும் அவன் வளரக்கூடாது என பொறாமைகுணம் உடையவர் தான் இதை செய்கிறார்கள்.சுழல் வண்டு,புல்லாமணக்கு,இந்திரகோபம்,குழியானை போன்றவை மனநிலையை மாற்றிவிடுகின்றன...சில ரசாயனங்கள் மனநிலையை எப்படி மாற்றுகிறதோ அதுபோல இந்த இயற்கை பொருட்களும் மாற்றும்.இதை எல்லோரும் தெரிந்துகொண்டால் ஆபத்து என்று எண்ணி குருவழிபாடமாக எப்படி தயாரித்து பயன்படுத்துவது என்பதை ஓலைச்சுவடியாக்காமல் மறைத்து வைத்தனர்..இல்லையெனில் எல்லோரும் பைத்தியமாகத்தான் சுற்ற வேண்டும்!!


ராவணன் சீதையை கவர்ந்து சென்று விடுகிறான்.சீதையை கவர்ந்த இடத்துக்கு ராமனும், லட்சுமணனும் வருகிறார்கள்.அங்கே தேர் சக்கரங்களின் தடம் மட்டும் தென்படுகிறது.சிறிது தூரம் அதனை பார்த்துக்கொண்டே நடக்கிறார்கள்.ஓரிடத்தில் அது மறைந்துவிடுகிறது..அப்படியானால் தேர் என்னவாயிற்று..?பூமியில் புதைந்திருக்க வேண்டும் அல்லது வானில் பறந்திருக்க வேண்டும்..புதைய வாய்ப்பில்லை...வான்வெளிப்பயணம் மட்டும்தான் இலங்கைக்கு ஒரே வழி.அப்படியெனில் சிறிது தூரம் ஒடி வானில் எழும்பி பறக்கிற விமானம் ராவணன் பயன்படுத்தி இருக்க வேண்டும்.கனரக விமானக்களுக்கெல்லாம் முன்னோடியாக ராவணனின் தேர் இருந்திருக்கிறது...பண்டைய இந்தியாவில் புஷ்பக விமானம்,மயில் பொறி என்ற பெயர்களில் ஹெலிகாப்டரை தயாரித்து, பயன்படுத்தி இருக்கிறார்கள் ....ரைட் சகோதரர்களுக்கெல்லாம் முப்பாட்டன் இந்தியாவில் இருந்திருக்கிறார்கள்!!

சனி, 5 ஜூலை, 2014

தமிழகத்தின் சக்தி வாய்ந்த கோயில்கள் -பரிகாரங்கள்

 பரபரப்பு விற்பனையில் ..முதலில் நான் தயாரித்த 5 கிலோ மூலிகை சாம்பிராணி தீர்ந்துவிட்டது ....இனி தயாரித்துதான் கொடுக்கனும் .என் மேல் வைத்த நம்பிக்கையால் வாங்கிய நண்பர்களுக்கு நன்றி. நீங்கள் கொடுத்த விலைக்கு 100 சதவீதம் நான் சொன்னபடி 23 மூலிகைகள்,வாசனை பொருள்கள் கொண்டு தரமாகவே தயாரித்து கொடுத்திருக்கிறேன் ...ஆதரவு அளித்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி ...இது கெட்ட சக்தியை வீட்டில்,தொழில் செய்யுமிடத்தில் இருந்து விரட்டும் செல்வவளம் உண்டாக்கும்..சாம்பிராணி புகை போல பயன்படுத்தலாம் தெளிவாக அறிய முந்தைய பதிவை படிக்கவும்./.தேவைபடுவோர் இன்பாக்சில் சொன்னால் போதும் ..இல்லையேல் மெயில் செய்யவும்.sathishastro77@gmail.com.அடுத்த முறை தயாரிக்கும்போது அனுப்புகிறேன் ...!!இதன் விலை 250 கிராம் 500 ரூபாய்...தேவைப்பட்டால் செல்லில் அழைக்கவும் 9443499003





மரகத பச்சையால் தெய்வ சிலைகள் இருக்கும் கோயில் மிக சக்தி வாய்ந்தது...அதனை நாம் கண்களால் பார்த்து வழிபடும்போது, அதன் சக்தி நமக்குள் ஊடுருவி நமக்குள் வசீகர சக்தியை உண்டாக்குகிறது..சென்னையில் மிக சக்தி வாய்ந்த கோயில்களில் முக்கியமானது சிறுவாபுரி முருகன்..உங்கள் வேண்டுதல்கள் எதுவானாலும் அது உடனே நிறைவேறுகிறது...காரணம் மிகப்பெரிய மரகத பச்சை லிங்கம் ..இதைப்போல வேறு உலகில் எங்கும் இல்லை எனலாம்..அதனை வழிபடுவதே பெரும்புண்ணியம் செய்திருக்க வேண்டும்.இங்கு பெரும்பாலான சிலைகள் பச்சைக்கல்லால் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. இக்கோயில் 12 விதமான சிறப்புகள் பெற்றது...!!

எனக்கு என்ன வேணும்னு கடவுளுக்கு தெரியும். அதனால எதையும் கேட்டு வேண்ட மாட்டேன் என்பது அறியாமை..உண்மையில் தன் அம்மாவிடம் குழந்தை இது வேண்டும் என அடம்பிடித்து வாங்குவது போல, மனம் உருக கடவுளை வேண்டி,நமக்கு தேவையானதை கேட்டு வணங்க வேண்டும். நிச்சயம் அது கிடைக்கும் என மகான்கள் அருளுரை பலவற்றில் இருந்து நான் கற்ற பாடம்.

 தினம் மாலை 6 மணிக்கு மண் சட்டி விளக்கில் இலுப்பை எண்ணெயில் விளக்கு ஏற்ற அந்த வீட்டில் துர் சக்திகள் விலகி, நல்ல சக்திகள் வந்தடையும்..!!

 காலபைரவர்கள் மொத்தம் 64.இந்த 64 பைரவர்களில் முதன்மை வாய்ந்த பைரவர் உன்மந்திர பைரவர். உன்மந்திர பைரவர் ஆலயம் காசிக்கு அடுத்து தர்மபுரி அதியமான் கோட்டையில்தான் இருக்கிறது...சக்திவாய்ந்த முஸ்லீம் படையெடுப்பை சமாளிக்க முடியாதே என மன்னன் அதியமான் கவலையில் இருந்தபோது, ஆஸ்தான ஜோதிடர்கள் அறிவுரையின் பேரில் காசியில் இருக்கும் பைரவர் சிலையில் ஒன்றை எடுத்து வந்து தன் கோட்டையில் அதியமான் பிரதிஷ்டை செய்தார்..அந்த போரில் முஸ்லீம்களையும் வென்றார்..எனவே எதிரி தொல்லை இருப்பவர்கள்,கடன் தொல்லை,நோய் தொல்லை,வழக்கு பிரச்சினை இருப்பவர்கள் இவரை வணங்கினால் தேய்பிறை அஷ்டமி பூஜை செய்தால் விடுதலை அடையலாம்..!!

இக்கோவில் கட்டப்பட்டு 1200 வருடங்களாகின்றன. இவர் கோவிலில் 9 நவகிரக சக்கரத்தை புதுபித்து மேல் கூரையில் ஸ்தாபித்துள்ளார்.

அதன் வழியாக வந்தால் நவகிரக தோஷங்கள் விலகும். ஜாதக தோஷங்கள் விலகும்

இவரின் விஷேசம் 27 நட்சத்திரமும், 12 இராசியும், இவர் திருமேனியில் அடக்கம்.

மேஷராசிகாரர்கள் இவர் சிரசினை பார்த்து கும்பிட்டால் தோஷம் தீரும், ரிஷபம் கழுத்து, மிதுனம் தோல் புஜம், கடகம் மார்பு, சிம்மம் வயிறு, கன்னி குறி, துலாம் தொடை, விருச்சிகம் முட்டி, தனுசு மகரம் முட்டியின் கீழ்பகுதி, கும்பம் கனுக்கால், மீனம் பாதம் ஆகிய பகுதிகளை பார்த்து கும்பிட்டால் தோஷம் தீரும்.

 செங்கல்பட்டு அருகில் இருக்கும் திருக்கழுகுன்றம்...இங்குள்ள குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சங்கு உற்பத்தியாகிறது என்கிறார்கள் ..கன்னி ராசியில் குரு வரும்போது இங்கு பெரிய விழாவாகவாக கொண்டாடுவது ஐதீகம் கன்னி ராசி லக்னக்காரர்கள் இங்கு வழிபட்டால் பல பிரச்சினைகள் தீர்கிறது!! இரு முனிவர்கள் கழுகாக பிறந்து இங்குள்ள குளத்தில் நீராடி உச்சிக்கால பூஜை பிரசாதத்தை உண்டு சாப விமோசனம் பெற்றனர்..அந்த இரு கழுகுகள் தினசரி மதியம் வந்து பிரசாதம் உண்டு வந்ததை பலரும் கண்டுள்ளனர்.

 -தொடரும்-