செவ்வாய், 31 டிசம்பர், 2013

ஆங்கில புத்தாண்டு ராசிபலன் 2014 மகரம்,கும்பம்,மீனம்

புத்தாண்டு ராசிபலன் 2014 மகரம்;
அன்பும்,பண்பும்,பாசம் நிறைந்த மகர ராசி அன்பர்களே...கடும் உழைப்பாளி.கடும் அன்பாளி நீங்கதான்..திருப்பதி பெருமாளே..உங்க ராசியில்தான் பிறந்திருக்கார்...போப் ஆண்டவர் நண்பரான ரஜினியே உங்க ராசியில்தான் பிறந்திருக்கார்!!! அப்புறம் என்னங்க கவலை..?அதனால இந்த வருசம் தைப்பொறந்தா உங்களுக்கு வழிபிறக்கும்...உங்க ராசிக்கு 7ல் குரு உச்சம் பெறுகிறார் குருபலம் தொடங்குகிறது...திருமனம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும் வருடம்...பணக்கஷ்டம் தீரும்..தொழிலில் இதுவரை இருந்த பிரச்சினைகள் அகலும்...கடன்கள் அடைபடும்...ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக இருக்கு..சனியுடன் இருந்த ராகு விலகுவதால் உச்சம் பெற்ற உங்க ஹீரோ சனி முழு பலம் அடைகிறார் அதனால் இந்த வருடம் அபரிதமான லாபம் வந்து சேரும்!!

 புத்தாண்டு ராசிபலன் 2014 ;கும்பம்;

கும்பத்தோன் சம்பத்தோன் என சொல்வாங்க...தெய்வ காரியங்கள் உங்களால் முடிக்கப்படனும்னு விதி..அதனால் ஒரு ஊரில் கும்பாபிசேகம் நடக்குதுன்னா அதுல முக்கியஸ்தர்கள் சிலருக்கு கும்ப ராசி இருக்கும்...கும்ப ராசிக்காரர்களை தலைமையில் ஒரு நல்ல காரியம் நடந்தா அது நல்லபடியாய் முடியும்..அவ்வளவு சிறப்பு பெற்றவர் நீங்க...ராசிக்கு இப்போ 5ல் குரு பலம் இருக்கு அது ஜூன் மாதம் வரை இருக்கு அதுக்குள்ள திருமணம் போன்ற சுபகாரியங்களை நடத்திக்கொள்வது நல்லது குருபெயர்ச்சியாகும்போது அது 6ஆம் இடத்துக்கு மாறிடும்...சனி 9ஆம் இடத்துல இருக்கார் தந்தை வழி ஆதாயம் உண்டு...ராகு ராசிக்கு எட்டில் மாறுகிறார் கெட்டவன் மறைந்தால் நல்லதுதான்...6க்கு குரு போவதால் கடன் கொடுக்கவோ வாங்கவோ வேண்டாம் வீண் சிக்கல் வந்து சேரும் புதிய நபர்களை நம்பி எதிலும் இறங்க வேண்டாம்..

 புத்தாண்டு ராசிபலன் 2014 ; மீனம்;

2013ல் அதிகம் துவண்டு போன ராசிக்காரங்கன்னு பார்த்தா மீனம் ராசிக்காரங்கதான்...அஷ்டம சனியால் அவ்வளவு துன்பம் அடைந்த நீங்கள்,பிறக்கப்போகும் புத்தாண்டில் புத்துணர்ச்சி அடையப்போகிறீர்கள் ஆம்..அஷ்டம சனி உங்களுக்கு முடியப்போகிரது..இதெல்லாம் ஓவர் சார் இன்னும் 11 மாசம் இருக்கு..என அப்பவும் கண்ணை கசக்காதீங்க..புத்தாண்டுல சந்தோசமான விசயம் நான் சொல்லியே ஆகனும்..2014ல் ஜூன் மாத குருப்பெயர்ச்சியும் உங்களுக்கு சூப்பரா இருக்கு 5ல் குரு உச்சம் பெற போகிறார் இது புத்தி ஸ்தானம்,வெற்றி ஸ்தானம் அப்புறம் சந்தோசத்துக்கும் வருமானத்துக்கும் வெற்றிக்கும் கேட்கவா வேணும்...சும்மா தகதகன்னு புத்தாண்டுல மின்னப்போறது நீங்கதான்...ஜூன் மாசாமே குரு பலம் பெற்று சனியின் தொல்லைகளை குறைத்திடுவார்..பணம் தாராளமா வரும்போது,முட்டுக்கட்டைகள் எல்லாம் விலகும்போது ,நினைச்சதெல்லாம் மளமளன்னு நடக்கும்போது மனசில் சந்தோசம் தாண்டவமாடாதா..?திருமனம் ஆகாதவர்கலுக்கு திருமனம் நிச்சயம் நடக்கும் வீடு கட்ட ஆரம்பித்து பாதியில் தடையாகி நிற்போருக்கு தடைகள் விலகும்..கடன்கள் வேகமாக அடைபடும் நெருக்கடி தீரும்...உறவினர் நண்பர் பகை அகலும் கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அன்பு அதிகமாகும்...தெய்வ அருள் பரிபூர்ணமாக உண்டாகும்..!!

ஆங்கில புத்தாண்டு ராசிபலன் 2014 விருச்சிகம்,தனுசு

புத்தாண்டு ராசிபலன் 2014 விருச்சிகம்;

கோபம் இருக்குமிடத்தில்தான் குணம் இருக்கும் என உங்களை பார்த்துதான் சொல்லி இருப்பாங்கன்னு நினைக்கிறேன்..பிடிவாதம் என்றாலும் அது அக்கறையின் வெளிப்பாடுதான்...அன்புள்ளம் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே..உங்களுக்கு இந்த புத்தாண்டு சந்தோசமான செய்தியை கொண்டு வருகிறது...ஆம்...பாக்யஸ்தானத்தில் குரு உச்சம் பெறுகிறார்...இதுவரை அஷ்டமத்தில் குரு இருந்து பணக்கஷ்டம்,மனக்கஷ்டம்,உறவினர் நண்பர் பகை என தொல்லை கொடுத்தார் இனி சந்தோசத்தை வாரி வழங்க காத்திருக்கிறார்...9ல் உச்சம் பெற்ற குரு உங்க ராசியை பார்வை செய்வதால் நீங்க ரொம்ப நாளா ஆசைப்பட்டது எல்லாம் கிடைக்கப்போகுது..நினைச்சது எல்லாம் நடக்கப்போகுது!!! ஏழரை சனி கவலையை விடுங்க..குரு பர்க்க கோடி நன்மை..என்பது இந்த வருசம் உங்களுக்கு புரியும்..சனியின் பாதிப்பும் இதனால் விலகும்...ஜூன் மதம் முதல் இனிப்பான செய்திகள் காத்திருக்கு..வீடு கட்டுதல்,வாங்குதல்,குழந்தை பாக்யம்,திருமணம் கைகூடுதல் ,உடல் ஆரோக்கியம் சீராகுதல்,நீண்ட நாள் சந்திக்காமல் இருந்த உறவுகளை சந்தித்தல்,அலுவலகத்தில் செல்வாக்கு பதவி உயர்வு,கடன் அடைபடுதல்,அதிக வருமானம் இதெல்லாம் நிச்சயம் நடக்கும்..சந்தோசம்தானே!!!

தனுசு; 

 புத்தாண்டு ராசிபலன் 2014;தனுசு

புத்தாண்டு பிறக்கும் ராசியே உங்க ராசிதான்..ஆமா புத்தாண்டு அன்று மூலம் நட்சத்திரம் தனுசு ராசி...உங்க ராசி அதிபதி மாசி 22 வரை வக்ரம் பெற்று இருக்கிறார் அதனால் உடல்நலனில் கவனம் தேவை..வரவு செலவில் கவனம் தேவை..ராசி அதிபதி குரு உச்சம் பெறுவது நல்லதுதான் என்றாலும் எட்டாமிட்த்தில் மறைந்துவிடுகிறார்...இந்த வருடத்தில் ஏழரை சனியும் துவங்குகிறது...சுப காரியங்கள் செய்வது,வீடு கட்டுவது வாங்குவது என சுப விரயம் ஆகும்..இதனால் கடனும் ஆகலாம்..தொழிலில் நிறைய மாற்றங்கள் உண்டாகும் சிலர் இடம் விட்டு இடம் மாறுவர்...சுப காரியம் செய்வதற்கான வருடமாக இது உங்களுக்கு அமைகிறது!!கடன் கொடுத்தால் திரும்பாது கடன் வாங்கினால் நெருக்கடி...ஜாமீன் கையெழுத்து யாருக்கேனும் போட்டால் நீங்கதான் கட்டனும்..நினைவில் வைத்துக்கொள்ளவும்...செலவுகள் அதிகம் காணப்பட்டாலும் அதற்கேற்ற வருமானமும் குறைவில்லாமல் இந்த வருடம் வந்து சேரும்

திங்கள், 30 டிசம்பர், 2013

ஆங்கில புத்தாண்டு ராசிபலன் 2014 கன்னி,துலாம்

புத்தாண்டு ராசிபலன் 2014 கன்னி,துலாம்

கன்னி ராசியினருக்கு புத்தாண்டில் சந்தோசமான செய்தி காத்திருக்கு...இந்த ஆண்டு உங்க ஏழரை சனி முற்றிலும் தீர்கிறது இனி சனி பகவான் தொந்தரவு இருக்காது..நிம்மதியா இருக்கலாம்..அதே போல 12 வருடங்களுக்கு பிறகு லாபஸ்தானத்தில் குரு உச்சம் பெறுகிறார்..இதனால் உங்கள் செல்வாக்கு கூடும்...உறவினர் மத்தியில் மதிப்பு ,மரியாதை உண்டாகும் பணம் பல வழிகளிலும் வந்து பேங்க பேலன்சை உயர்த்தும் கடன்பாக்கிகள் வேகமாக அடைபடும்..குடும்பத்தில் சந்தோசம் உண்டாகும் கல்யாணமே ஆகாம ஒத்தையா இருந்துடுவமோன்னு ஃபீல் செய்பவர்கள்,இந்த வருடம் கல்யாணம் ஆகி ஜோடியாக தேனிலவு செல்லும் காலம் நெருங்கி விட்டது..வைகாசியில் டும்டும்தான்...தொழில் மந்தமாக இருந்தவர்களுக்கு இனி பிசியோ பிசிதான்.,..நல்ல நேரம் பொறக்குதுங்க...!! பொறுமையா இருங்க!!

 புத்தாண்டு ராசிபலன் 2014;துலாம்;

சுக்கிரனின் ராசியில் பிறந்த சுகவாசி அன்பர்களே...அஎங்க சுகம் அடிதான் என ஜென்ம சனியில் துவண்டிருக்கும் நண்பர்களே....இந்த வருசம் ஜென்ம சனி முடிஞ்சிரும்..அது ஒண்ணுதான் ஆறுதல்..இருப்பினும் உங்க ராசியில் குடியிருந்து தொல்லை தரும் ராகு விலகி ஜூன் மாதம் முதல் விரயத்திற்கு செல்கிறார் அது நல்லது செய்யும்..பல கஷ்டங்கள் நெருக்கடிகள் தீரும்..இதுவரை இருந்து வந்த பகைகள் விலகும்..ஜூன் மாத குரு பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக இல்லை 10 ஆம் இட குரு பதவிக்கு சிக்கல்...இடம் மாறுதல் போன்ற பிரச்சினைகளை தரலாம் அவரவர் ஜாதகத்தில் இருக்கும் திசாபுத்திகளின் யோக அடிப்படையில் இதில் மாற்றம் இருக்கும் யோகமான திசை நடந்தா பாதிப்பு அதிகம் இருக்காது...2013 ஒப்பிடும்போது 2014 நன்றாகவே இருக்கும்..கவலை வேண்டாம்..!

ஞாயிறு, 29 டிசம்பர், 2013

ஆங்கில புத்தாண்டு ராசிபலன் 2014 கடகம்,சிம்மம்

புத்தாண்டு ராசிபலன் 2014 கடகம் ;

அந்த வானத்தை போல மனம் படைத்த மன்னவன் நீங்கதான்...ஊருக்காக உழைக்கும் உத்தமரும் நீங்கதான்..அதனால் பல வில்லங்கங்களும் வந்து சேர்ந்து குத்துதே குடையுதேன்னு கதறுவதும் நீங்கதான்!! தன்மானத்துக்கு மட்டும் ஒரு பங்கம் வந்தா தாங்கமாட்டேன் என புறப்படும் நீங்க கடைசியில் அவமானத்தை சந்திச்சிட்டுதான் இருக்கீங்க..அப்படியான நேரம்தான் இது..சரி 2014 எப்படி இருக்கும்னு பார்த்தால் ராசிக்கு யோகாதிபதியான குரு செவ்வாய் வழிவிட்டால்தான் சிறப்பு..சனி ஏற்கனவே அர்த்தாஷ்டம சனியா படுத்திக்கிட்டு இருக்கார்...ஜூன் மாசம் குரு பெயர்ச்சி ஆனால் கடக ராசியில் உச்சம் பெறும் குரு உங்களுக்கு இழந்த செல்வாக்கை மீட்டு தருவார்..வருமனத்துக்கு வழி செய்வார்...பண சிக்கலை தீர செய்வார்..அதுவரை வரவுக்கு செலவு சரியா இருக்கும்..ராகு உங்க ராசிக்கு 3ல் மாறப்போகிறார் அது உங்களுக்கு தைரியத்தையும் துணிச்சலையும் தரும்..சனிப்பெயர்ச்சி 4ல் இருந்து 5க்கு போகிறார் உங்க உடல் ஆரோக்கியத்துக்கு பாதகமா இப்போ இருக்கு இதனால் அது சரியகும் இருந்தாலும் ஒரு வருசம் சமாளிச்சுதான் ஆகணும்..5ல் சனி பிள்ளைகளால் சங்கடம்..இருப்பினும் உங்க தொழில் முன்னேற்றம் உண்டாகும்...உணர்ச்சிவசப்படாம நிதானமாக இருக்க வேண்டிய வருடம் 2014.

 புத்தாண்டு ராசிபலன் 2014 ;சிம்மம்;
 
முன்கோபமும் பிடிவாதமும் எடுத்த காரியத்தை முடிக்காமல் ஓயாத சிம்ம ராசி அன்பர்களே...பிறக்கும் 2014 உங்களுக்கு வெற்றியை தரப்போகிறது...புத்தாண்டில் சனியும் குருவும் வக்ரம்..சனி வக்ரம் ஆனா பிரச்சினை இல்லை குரு செல்வாக்கை கொடுப்பவர் அவர் வக்ரம் பெற்றிருப்பது உங்கள் ராசிக்கு யோகாதிபதி என்பதால் பாதிப்பாய் இருக்கிறது பணசிக்கல் அதிகம் இருந்தாலும் 12.3.2014 வரை தான் இந்த சிக்கல் அதன் பின் வருமானம் அதிகரிக்கும் செல்வாக்கு கூடும் நினைத்த காரியம் ஜெயம் ஆகும்.....ஜூன் மாதம் குரு பெயர்ச்சி 12ஆம் இடம் விரய ஸ்தானத்துக்கு செல்கிறது சுப விரயம் உண்டாக்குகிறது...சனி 3 ஆம் இடத்தில் இருந்து 4ஆம் இடத்துக்கு நவம்பர் மாதம் செல்கிறார் உடல்நலனில் கவனம் தேவை...2014 இறுதியில்தான் சிக்கல்..ஆரம்பம் நன்ராகவெ இருக்கிறது...இறுதியிலும் பண விரயம்தான் அதிகம் தொழில்,உத்யோகம் நன்றாகவெ இருக்கும்...மார்ச் மாதம் முதல் யோகமான காலம்...

சனி, 28 டிசம்பர், 2013

ஆங்கிலப் புத்தாண்டு ராசிபலன் 2014 மேசம்,ரிசபம்,மிதுனம்

புத்தாண்டு ராசிபலன் 2014 ;மேசம்;

இந்த ஆண்டு உங்களுக்கு அஷ்டலக்‌ஷ்மி யோகம் உண்டாகிறது ஆம்...இதுவரை ராசியில் இருந்து சிரமம் கொடுத்த கேது ஜூன் மாதம் முதல் பெயர்ச்சியாகிறார் ராசிக்கு 12ல் மறைவதால் அது கெட்டவன் கெட்டிட கிட்டிடும் ராஜயோகம்தான்..மேலும் 3ல் மறைந்து செல்வாக்கை குறைத்த குருவும் ஜூன் மாதம் முதல் 4ஆம் இடத்துக்கு மாறுகிறார் இதனால் புதிய சொத்துக்களை வாங்க..பழைய சொத்துக்களை விற்க வழிபிறக்கும்..வருமானம் அதிகரிக்கும்...வருட முடிவில் அஷ்டம சனி ஆரம்பிக்குதே என கலங்க வேண்டாம்..வீட்டில் சுப காரியங்கள் நடந்தால் தோசம் அதில் அடிபடும்...ராகு 6க்கு வந்துவிடுவதால் பெரிய பாதிப்பு வராது...வருட தொடக்கத்தில் உங்கள் ராசி அதிபதி செவ்வாய் 6ல் இருப்பதால் அதிக பண விரயம் இருக்கும்...இருப்பினும் குரு வக்ரம் இருப்பதால் செலவுக்கு ஏற்ப பணமும் வந்து சேரும்..1.3.2014 முதல் ஜூலை மாதம் வரை சனி வக்ரத்தில் இருப்பதால் சனியாலும் அப்போது பாதிப்பில்லை..தொழில் கெடாது...நல்லதே நடக்கும்!!

செவ்வாய் தோறும் முருகனை வழிபடவும்


 புத்தாண்டு ராசிபலன் 2014 ;ரிசபம்;

ரிசப ராசிக்கு 6ல் சனி..6ல் ராகு ஜம்னு இருக்கு...ராஜயோகமான காலம் அதிக பண வருவாய் கிடைக்கும் நேரமும் இதுதான்..ஆனாலும் சிலர் நொந்து போய் இருந்தா அதுக்கு காரணம் திசா புத்தி மொசம இருக்கலாம்..அவ்வளவுதான் இவங்க ராசியின் சிறப்பே பேச்சு திறமையும் முக ராசியும்தான்...அதில் முக்கால்வாசி அதிர்ஷ்டம் கிடைத்துவிடும்..வ வக்ரம் ஆகியிருக்கிறார் ..எதிர்பாலினரிடம் கவனம் தேவை.குரு சனி பெயர்ச்சி எப்படி இருக்குன்னு பார்த்தா,குரு ராசிக்கு 3ல் மறைகிறார் ஆனா அவர் பார்வை 7,9,11 என அருமையாக இருப்பதால் கல்யாணம் ஆகாதவர்களுக்கு கல்யாணம் ஆகும் நிறைய தனலாபம் உண்டாகும்...சனி இந்த வருட கடைசியில் கண்டக சனியாக மாறுகிறார் ரிசப் ராசிக்கு அஷ்டம சனி ஏழரை சனியே அதிக பாதிப்பை தருவதில்லை..அதனால் கண்டக சனியை ஏண்ணி கவலை வேண்டாம்..துணைவருக்கு கொஞ்சம் உடல் பாதிப்பு உண்டாகலாம்..மருத்துவ செலவு இருக்கும்...மற்றபடி தொழில் இந்த வருடம் டாப் தான்.. வருமானத்துக்கும் தடை இருக்காது!!

 புத்தாண்டு ராசிபலன் மிதுனம் 2014;

ஜென்ம குருவால் சங்கடப்பட்டு தவிக்கும் மிதுன ராசியினரே..இந்த வருசம் குரு உங்க ராசிக்கு இரண்டில் 12 வருடங்களுக்கு பின் உச்சம் பெற்று உங்களை குதூகலப்படுத்தப்போகிறார்..2014 அம் வருடம் உங்கள் வாழ்வில் மறக்க முடியாத வருடமாக மாறப்போகிறது!!குடும்பம் அமையாதவர்களுக்கு குடும்பம் அமையும்...ஆம் திருமணம் அமையும்...தனலாபம் அதிகரிக்கும் வருடம் 2014 தான்...ராசிக்கு இரண்டில் தன ஸ்தானத்தில் உச்சம் பெறும் குரு யோகம் உங்களுக்குதான் அமைகிறது செல்வாக்கு கூடும் வருடமாக இருக்கும்..அலுவலகத்தில் பதவி உய்ர்வு கிடைக்கும்..பணம் பல வழிகளிலும் வந்து குவியும்.சனியும் அள்ளித்தரும் விதத்தில் 5ஆம் இடத்தில் இருந்து 6ஆம் இடத்துக்கு மாறுகிறார் பகையெல்லாம் ஓடிப்போகும்..சோதனையெல்லாம் சாதனையாய் மாறும்...இதுவரை 5ல் சனி நின்று என்ன செய்வது என குழப்பத்தை கொடுத்தது..இனி தெளிவான திட்டமிடலுடன் காரியம் சாதிக்க வைப்பார்.

வெள்ளி, 27 டிசம்பர், 2013

குரு பூஜையும் அன்னதானமும்,சனிப்பெயர்ச்சி குருபெயர்ச்சி 2014

பவானி கூடுதுறையில் தட்சிணாமூர்த்திக்கு. மஞ்சள் துண்டு வேஷ்டி .....மாலைகள் முல்லை அலங்காரம் செய்து அர்ச்சனை, பூஜை நண்பர்கள் அனைவருக்குமாக செய்து வைக்கப்பட்டது.....சில நண்பர்கள் வேண்டுகோள் படி அவர்களது குடும்பத்தார் பெயரில் அர்ச்சனை செய்யப்பட்டது லிஸ்ட் பெருசு .......பொறுமையாக பூஜை செய்துவைத்த ஹரிஹரன் குருக்களுக்கு நன்றி !!!அடுத்த குரு பூஜை புத்தாண்டு அன்று கொடுமுடி பிரம்மாவுக்கு .......6ஆம் தேதி அன்னதானம்!!

பவானி கூடுதுறை தட்சிணாமூர்த்தி அழகிய முக அமைப்பு கருணை ததும்பும் புன்னகை நிறைந்தவர்... வியாழக்கிழமையில் அவருக்கு பிடித்த மஞ்சள் வஸ்திரமும் முல்லை மலர்களாலும் மஞ்சள் பூக்களாலும் அலங்காரித்து தீபம் ஏற்றி குரு ஓரையில் வணங்குவது அவர் கருணையை பெற உதவும்...இதனால் குருவால் ஏற்பட இருக்கும் தீங்கு குறையும் என்பதால் அன்னதானம் குரு பூஜைக்கு நன்கொடை அனுப்பிய சில நண்பர்களின் குடும்பத்தாருக்கு சிறப்பு வழிபாடு செய்தேன்...புத்தாண்டு இதே நண்பர்களுக்காக கொடுமுடியில் இருக்கும் பிரம்மாவுக்கு அவருக்கு பிரியமான வெண்பட்டு வஸ்திரம்,வெள்ளை தாமரை யுடன் பிரம்மசங்கல்ப பூஜை செய்யவிருக்கிறேன்....


குருர் பிரஹ்மா! குருர் விஷ்ணு! குருர் - தேவோ மஹேச்வர:

காது கேளாத வாய் பேச முடியாத குழந்திகள் பள்ளி ஈரோடு மாவட்டத்தில் ஒரே பள்ளியாக ஆர்.என்.புதூரில் மட்டும் இயங்கி வருகிறது 150 குழந்தைகள் வரை படிக்கின்றனர்..இவர்களுக்கு அன்னதானம் செய்வது குரு தோசம் போக்கும்..காரணம் குரு ஜாதகத்தில் பாதிப்பதால்தான் இவர்களுக்கு இக்குறை உண்டாகிறது எனவே குருவால் தோசம் ஏற்படாமல் இருக்க சனியின் அனுக்கிரகம் உண்டாக இவர்களை சந்தொசப்படுத்தவோ அல்லது மன நிறைவு உண்டாக்கும்படியோ சுவையான உணவை தருவது நல்லது..மேலும் அக்குழந்தைகள் அரசு தரும் உணவைதான் அன்றாடம் உண்கின்றனர்...நாம் வீட்டு சாப்பாடை மாதம் ஒருமுறையேனும் வழங்கலாம்..என்பதும் ஒரு காரணம்..இங்கு பிறந்த்நாள் ,நினைவுநாள் உறவுகளில் யாருக்கேனும் வந்தால் உடன் இங்கு வந்து தேதி பதிவு செய்து அந்நாளில் உனவு அன்னதானம் செய்வது வழக்கம்..நானும் நன் நண்பர்கலுக்காக அன்று அன்னதானத்தை  ஜோதிட பரிகாரமாக செய்து விடலம் என்றுதான் முடிவு செய்தேன் இப்போ குழந்தைகள் விடுமுறையில் இருப்பதாலும் வாக்கிய பஞ்சாங்கப்படி 2 ஆம் தேதிதான் குரு வக்கிரம் ஆவதாலும் 6.1.2014 அன்று அன்னதானம் செய்யலாம் என முடிவு செய்தேன் இதற்காக நாங்களும் பங்களிக்கிறேன் என சிறு  தொகைகளை அன்புடன் அனுப்பி வைத்த நண்பர்களுக்கு நன்றி...தானத்தில் சிறந்தது அன்னதானம்..என்பார்கள்..பசியை போக்குவதே பெரும் பரிகாரம்...

அன்னதானம் பொறுத்தவரை நான் ஹோட்டலில் வாங்கி தருவதில்லை என முடிவு செய்துவிட்டேன்..தரமான அரிசி மற்றும் காய்கறிகளை வாங்கி சமையல் ஆள் வைத்து வீட்டில் தரமாக தயாரித்து பள்ளிக்குழந்தைகளுக்கு தர முடிவு செய்துள்ளேன்...சனி கிரகத்தை பொறுத்தவரை மந்தன்,உடல் அங்ககீனன் என சொல்லப்பட்டுள்ளது உடல் ஊனமூற்றோர் என்றலெ சனியின் ஆதிக்கம் கொண்டவர்களாக எடுத்துக்கொள்ளலாம்..எனவே உடல் குறை என்பதும் சனியின் பாதிப்பு பெற்றவர்கள்தான்..எனவே சனியின் தோசம் குறையவும்..இது பரிகாரமாக எடுத்துக்கொள்ளப்படும்...

புத்தாண்டு அன்று தலை எழுத்தை மாற்றும் பிரம்மாவை வணங்குவதும் பூஜிப்பதும் மிக நல்லது 2014ல் தான் சனிப்பெயர்ச்சி குருப்பெயர்ச்சி ராகு கேது பெயர்ச்சி என முக்கியமன மூன்று பெயர்ச்சிகளுமே வருகின்றன...எனவெ 2014 பலவித மாறுதல்களை நாட்டிலும் வீட்டிலும் ஏற்படுத்த போகிறது...எனவெ 2014 முதல் நாளை ஆலயத்தில் வழிபட்டு துவங்குவது உத்தமம்..அதற்கென்று ஜாமத்தில் 12 மணிக்கு ஆலயம் சென்று வழிபடுவது தவறு...கோயில் என்றாலே பிரம்ம முகூர்த்தத்தில் விடியற்காலையில் வழிபடுவதுதான் அதுவும் சூரிய ஒளி புறப்படும்போது வழிபடுவதும் உச்சிக்காலத்தில் மாலை பொழுதில் வழிபடுவதுதான் சரியானது..இப்போ எல்லாம் ஆங்கிலப்புத்தாண்டை இரவு 12 மணிக்கு கோயிலில் சென்று வரவேற்கிறார்கள்..கோயில் ஊழியர்களும் கோயிலை திறந்து வைத்து காத்திருக்கிரார்கள் அவர்களுக்கு தட்ச்சிணை முக்கியம்...ஆனா நாம வழிபடுவது கடவுளைதான்..அவரை வழிபடும் நேரம் என ஒன்று இருக்கிறது..அதில் வணங்குவதுதான் நல்லது...

செவ்வாய், 24 டிசம்பர், 2013

தலையெழுத்தை மாற்றும் கொடுமுடி பிரம்மாவும் குருபூஜையும்

குரு வக்ரத்திற்காக சிறப்பு அர்ச்சனை வழிபாடு பவானி கூடுதுறை தட்சிணாமூர்த்திக்கு வியாழன் அன்று செய்ய உத்தேசம்..வெள்ளிக்கிழமை கடவுள் அனுக்கிரகம் இருப்பின் என் ஜோதிட வாடிக்கையாளர்கள் நண்பர்களுக்காக கொடுமுடி பிரம்மாவுக்கும் பூஜை, அர்ச்சனை செய்ய இருக்கிறேன்..எல்லாம் அஷ்டம சனி,ஏழரை ,குரு வக்ரத்தால் பாதிக்கப்பட்ட நண்பர்களின் குடும்பத்துக்காகத்தான்..இது ஒரு முதல் முயற்சி..இதையெல்லாம் செய்ய முடியாத நண்பர்களுக்காக நான் முயன்று உங்களுக்காக பிரார்த்தனை செய்து கொள்ளும் கடமை அவ்வளவுதான்...

சில நண்பர்களுக்காக..மற்றும் அன்னதானம் 6.1.2014 அன்று மாற்றி அமைத்துள்ளேன்..குழந்தைகள் விடுமுறையில் சென்று 2 ஆம் தேதிதான் வருவதால் 6ஆம் தேதி வைத்துக்கொண்டால் புத்தாண்டுக்கும் சேர்த்து அன்னதானம் செய்தது போல இருக்கும்..இப்போ குறைவான குழந்தைகள் ஆஸ்டலில் இருப்பதால் முழுமையாக எல்லா குழந்தையும் வந்தபின் சிறப்பாக செய்ய திட்டம்...நானும் இன்னும் த்யார் படுத்திக்கொள்ள வேண்டி இருக்கிறது...தனியாக சமையல் ஆள் போட்டு வீட்டில் பார்த்து சமையல் செய்து தரணும்....அன்னதானத்துக்கு யாரும் பணம் அனுப்பட்டுமா என கேட்க வேண்டாம் ..இதுவே நிறைவு..என் பங்கும் இருப்பதால் ,தேவைப்படாது..மேலும் செய்ய விரும்புபவர்களுக்கு இன்னொரு நாளில் ஸ்கூலில் தேதி பதிவு செய்து உங்கள் பெயரில் செய்து தருகிறேன்..எனக்கொன்றும் சிரமமில்லை...இதுவே பெரிய புண்ணியம்..~~!!!

ஞாயிறு, 22 டிசம்பர், 2013

அஷ்டம சனி ஏழரை சனி கஷ்டம் தீர பணக்கஷ்டம் தீர ஜோதிடம் -பரிகாரம்

துலாம்,கன்னி,விருச்சிகம் ராசியினருக்கு இப்போ ஏழரை சனி நடக்குது மீனம் ராசியினருக்கு இப்போ அஷ்டம சனி நடக்குது....இவங்களுக்கு எல்லாம் பண முடக்கம் பெஇய பிரச்சினையா இப்போ இருக்கு..நிறைய பேருக்கு திருமண தடை தாமதமும் பிரச்சினையா இருக்கு ஏழரை சனியில் திருமணம் செய்யலாம் நிறைய பேருக்கு நடந்து நல்லாவும் இருக்காங்க...சுப செலவு செய்தால் கெட்ட செலவு வராமல் தடுக்க முடியும்..அந்த வகையில் ஏழ்ரை சனி நடந்தால் திருமணம் செய்வது,வீடு கட்டுவது நிலம் வாங்குவது நல்லது...

அஷ்டம சனி நடக்கும்போது,எப்போதும் தொழில் ஆரம்பிக்கும்போது பார்ட்னர் சேர்க்கும் போது எச்சரிக்கை தேவை ஏமற்றம் உண்டாகலாம்...என் வாடிக்கையாளர் ஒருவர் பார்ட்னர் சேர்த்து தொழில் செய்து வந்தார் அஷ்டம சனி வருது பார்ட்னர் விசயத்தில் எச்சரிக்கையா இருங்கன்னு சொன்னேன் அவர் தங்கமனவருங்க...பங்கு பணத்தை தேடி வந்து வருசா வருசம் கொடுத்துடுவாரு கணக்கு துல்லியமா இருக்கும் என்றார் இந்த வருசம் கொஞ்சம் கண்காணிங்க என்றேன் அவர் அலட்சியமாக இருந்தர் இதுவரை சரியாக இருந்த பார்ட்னர் ஒரு பென்ணுடன் பழக்கம் உண்டாகி பணத்தை அந்த பெண்ணுக்காக வாரி இறைக்க இவர் பங்கு பணத்தையும் கள்ளக்காதலுக்காக வாரி இறைத்துவிட்டார் ...எப்போதும் இல்லாமல் பெரிய அளவில் நஷ்டக்கணக்கு காண்பிக்க் நொந்து விட்டார் என் வடிக்கையாளர் நீங்க சொன்னது சரியா போச்சுங்க.என்றார் என்ன செய்வது..? எதிர்பாராமல் ஏமார்ரம் தருவதே அஷ்டம சனி.மருத்துவ செலவுகள் ,அறுவை சிகிச்சைகள் எதிர்பாராமல் வருவது எல்லாம் இப்போதுதான்..நெஞ்சுவலின்னு போனேன் டாக்டர் பைபாஸ் சர்ஜரி பண்ணனும்னு சொல்லிட்டார் டாக்டர் என்பவர்கள் அநேகம்..எனவெ அஷ்டம சனி இன்னும் ஒருவருடம் இருப்பதால் எச்சரிக்கை,நிதானமுடன் செயல்படுங்கள்...

குரு வக்ர பூஜைக்காக சிலர் பணம் அனுப்பி வைத்தனர் ...அவ்ர்களது குடும்பத்தார் பெயரில் சிறப்பு அர்ச்சனை,பூஜை,அன்னதானம் செய்ய இருக்கிறோம்..குரு பூஜை,பைரவர் பூஜை....செய்து காதுகேளத உடல் ஊனமுற்ற குழந்தைகளுக்கு மதிய உணவு அன்னதானம் செய்ய இருக்கிறேன்..குரு வக்ரத்தால் பாதிக்கப்பட்ட ராசியினரும் ஏழரை சனி அஷ்டம சனியால் பாதிக்கப்பட்டோருக்கும் இது பரிகாரமாக அமையும்...இதில் கலந்துகொள்ள இருப்பவர்கள்...முடிந்தளவு நன்கொடை கொடுக்கலாம்..குறைந்த தொகையக இருந்தாலும் பரவாயில்லை...உங்கள் குடும்பத்தார் பெயர் ராசி நட்சத்திரம் அனுப்பி வைத்தால் அதன் பெயரில் பூஜைகள் செய்துவிடுகிறொம்..இதனால் உங்கள் குடும்பத்துக்கு வர இருக்கும் பெரிய பிரச்சினைகள் தீரும்....என் மெயில் sathishastro77@gmail.com போன்;9443499003

நாளை மறுநாள் குருபூஜையும் அன்னதானமும் செய்ய இருப்பதால் கலந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள் உடனே தொட்ர்பு கொள்ளவும்..!!

குரு வக்கிரம் பற்றி மேலும் அறிய இங்கு கிளிக் செய்யவும் 

வியாழன், 19 டிசம்பர், 2013

குரு வக்கிர பூஜைக்கான பரிகார விபரம்..விருச்சிகம்,மீனம்,துலாம்

குரு வக்ரத்திற்காக பாதிக்கப்பட்ட ராசியினருக்காக பரிகாரம் செய்வதாக  சொன்னீர்கள் அது பற்றி விவரம் தேவை என போனில் கேட்ட சில நண்பர்களுக்காக;அது சம்பந்தமான முழு விவரம் அறிய எந்தெந்த ராசியினருக்கு பாதிப்பு என அறிய இந்த பதிவை படிக்கவும்

வரும் 25.12.2013 அன்று புதன்கிழமை தேய்பிறை அஷ்டமியாகவும் வருகிறது அன்று காலபைரவருக்கு சிறப்பு பூஜை பவானி கூடுதுறையில் செய்யலாம்..என நினைக்கிறேன்..தட்சிணாமூர்த்திக்கு குரு ஓரையில் ஒரு பூஜை....பிறகு 150 ஊனமுற்ற குழந்தைகளுக்கு மதிய உணவு....இதுதான் எனது வக்ர பூஜைக்கான திட்டம்..இதில் கலந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள் பூஜை செலவு மற்ரும் அன்னதான நன்கொடையை அனுப்பலாம்..அப்படி அனுப்புபவர்கள் .நீங்கள் உங்கள் குடும்பத்தார் பெயர் ராசி நட்சத்திரம் குறிப்பிட்டு என் மெயிலுக்கு அனுப்பவும்...வங்கி கணக்கு விபரம் அதில் குறிப்பிட்டு அனுப்புகிறேன்...தொகை எவ்வளவு குறைவாக இருப்பினும் பரவாயில்லை...உங்கள் பங்களிப்பும் இருக்கட்டும்..அவ்வளவுதான்...நன்றி
மெயில்;sathishastro77@gmail.com இது பற்றி விவரம் அறிய என்னிடம் பேச 9443499003

குரு வக்கிரம் என்ன செய்யும்..? மேசம்,ரிசபம்,துலாம்,விருச்சிகம்,சிம்மம்,தனுசு,மீனம்

மாசி மாசம் 21 தேதி வரை குரு வக்கிரமாக இருக்கிறது .. துலாம்,விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கும் மேசம், ,ரிசபம் ராசியில் பிறந்தவர்களுக்கு எதிர்மறையான பலன் நடக்கும்.. அதிக பண நெருக்கடி ,தொழில் நெருக்கடி உண்டாகும் என்றால் இதற்கான பரிகாரம் என்ன என பலர் கேட்டிருக்கின்றனர்..மீனம் ராசியினருக்கும் தனுசு ராசியினருக்கும் பாதிப்புதான் ...காரணம் ராசிநாதன் குரு வக்கிரம் ஆகி இருக்கிறாரே..பிரச்சினை கடுமையாகதான் இருக்கும்..காரணம் குருதான் செல்வாக்கு..குருதான் வருமானம்...இந்த இரண்டும் பாதிக்கும் செல்வாக்கு இழப்பு என்றால் கெட்டபெயர் அவமானம் கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமை...அது மட்டுமில்லாமல் குரு வக்கிரம் ஆகும் போது எதிர்பாராத மருத்துவ செலவும் குடும்பத்தில் துக்க காரியமும் உண்டாகும் குருபலம் இருந்தால் நல்ல செலவு குருபலம் இல்லாவிட்டால் கெட்ட செலவுதானே..?

 குரு வக்கிரம் ஆகி இருப்பதால் சிம்மம் ராசிக்கும் அதிக பாதிப்புகள் உண்டு..அதனால்தான் முதல்வர் ஜெயலலிதா கோயில் யானைகளை புத்துணர்வு முகாம்க்கு அனுப்பி இருக்கிறார் ..யானை குருவின் அம்சம் அல்லவா..சிம்மம் ராசியினர் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்..

இதற்கு என்ன பரிகாரம்..? உங்க ஊரில் இருக்கும் முதியோர் இல்லத்தில் அன்னதானம் செய்யுங்கள்..குரு என்றால் மரியாதைக்குரியவர்கள்,மூத்தவர்கள்,வயோதிகர்களை குறிக்கும்...

அவர்களில் குறிப்பாக முதியோர் இல்லத்தில் இருப்போருக்கு மன வருத்தம் இருக்கும் தன்மேல் அன்பு செலுத்த யாரும் இல்லைன்னு....அவங்களுக்கு சுவையான உணவு கொடுத்து ஆசி பெறலாம்..காதுகேளாத வாய் பேச முடியாத குழந்தைகள் குரு கெடுவதால் ஏற்பட்ட பாதிப்பில் பிறந்தவர்கள் அவர்களுக்கு அன்னதானம் செய்து சந்தோசப்படுத்தலாம்...அங்கு செய்ய முடிந்தவர்கள் செய்யலாம்...நான் இங்கு சில வெளிநாட்டில் இருக்கும் நண்பர்களுக்காக வரும் வியாழன் அன்று முதியோர் இல்லம் மற்றும் காதுகேளாத வாய்பேச முடியா குழந்தைகளுக்கு அன்னதானம் செய்யவிருக்கிறேன் ..மற்றும் தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜைகளும் செய்ய இருக்கிறோம்..தனியாக சிறப்பு ஹோம பூஜை செய்யலாம் என நினைக்கிறேன்...நண்பர்கள் விருப்பத்தை பொறுத்து சிறப்பாக செய்யலாம்...பூஜையில் ஒவ்வொருவர் குடும்ப அங்கத்தினர் விவரம் சொல்லி பூஜிக்க இருக்கிறோம்... அதிலும் கலந்துகொள்ளலாம்..உங்கள் அர்ப்பணிப்பை செய்யலாம்...மற்ற விவரங்களுக்கு இன்பாக்ஸ் வரவும்...அல்லது மெயில் sathishastro77@gmail.com செல்லிலும் 9443499003 தொடர்பு கொள்ளலாம்..

பரிகாரம் பற்றியும் அன்னதானம் பற்றியும் முழு விபரம் அறிய புதிய பதிவை படிக்க இங்கு க்ளிக் செய்யவும் 

கொழுப்பு சம்பந்தமான நோய்களை தீர்ப்பது எப்படி? health

இப்போ எல்லாம் டாக்டர்கள் ,தேங்காய் சட்னி சாப்பிடாதீங்க..தேங்காயை உணவில் சேர்த்துக்காதீங்க..கொழுப்பு என்கிறார்கள்...இது ஒரு செம காமெடி..தேங்காய் உலகத்திலேயே மிகச்சிறந்த ஒரு உணவு..கோயில்களில் பிரசாதமாக தேங்காயும் பழமும் கொடுக்கிறார்கள்...கெட்ட கொழுப்பு பொருளை கடவுள் பிரசாதமாக தரும் அளவுக்கு நம் முன்னோர்கள் மூடர்கள் அல்ல...

தேங்காயில் உடலுக்கு தேவையான அனைத்து தாது பொருட்களும் இருக்கின்றன....பழங்காலத்தில் எந்த நோயாக இருந்தாலும் பனங்கருப்பட்டியையும் ,தேங்காய்ப்பாலையும் தான் வைத்தியர்கள் கொடுப்பார்கள்..சுக்கு ,கருப்பட்டி சேர்ந்த அந்த கலவை மற்றும் தேங்காயை பிழிந்து எடுக்கப்பட்ட பாலுக்கு எந்த நோயையும் முறித்து குணமாக்கும் சக்தி உண்டு....அஜீரணம்தான் அனைத்து நோய்களுக்கும்
அடிப்படை...தேங்காய் அதை இல்லாமல் செய்வதால்தான் சமையலில் அது இல்லாமல் எந்த உணவும் தமிழர் உணவில் இல்லை.....

தேங்காய் கெட்ட கொழுப்பு அல்ல..நல்ல கொழுப்பு..மிருகங்களில் இருக்கும் கொழுப்பும் தேங்காயில் இருக்கும் கொழுப்பும் ஒன்றல்ல...உலகில் சுத்தமான நீர் தேங்காயில் இருக்கும் நீர்தான்..முன்பெல்லாம் சாககிடக்கும் தாத்தா,பாட்டிகளுக்கு தேங்காய்ப்பால் கொடுத்து பிழைக்க வைப்பார்கள்..இப்போது எல்லாம் மாட்டுப்பால் கொடுத்து சாகடிக்கிறார்கள்....தேங்காய் அதிகம் சாப்பிட்டால் மட்டுமே கொழுப்பு சம்பந்தமான அனைத்து நோய்களும் தீரும் என்பதே உண்மை..!!

புதன், 18 டிசம்பர், 2013

கல்யாணம் சீக்கிரம் நடக்க எந்த கோயில் போகலாம்..? ஜோதிட பரிகாரம்

கல்யாணம் ஆகலையா...உடனே திருமனஞ்சேரி போயிட்டு வராங்க..நாக தோசம் இருக்குன்னா காளஹஸ்தி போறாங்க..அதெல்லாம் சரி....ஆனா இன்னும் நுணுக்கமான திருமண தடை நீக்கும் பரிகாரம் இருக்கு...முருகன் மனைவியுடன் இருக்கும் பழைய கோயிலில் வழிபடுங்க...அப்புறம் அகத்தியர் சிவபெருமானை கல்யாண கோலத்தில் தரிசனம் செய்த பழமையான கோயில்கள் மாவட்டம் தோறும் இருக்கு அங்க போயிட்டு வாங்க...குறிப்பா ஈரோடு மாவட்டம் கொடுமுடி மகுடேஸ்வரர்..ரொம்ப விசேஷம்..காவிரி கரையில் தீர்த்த கிணருகள் சூழ மும்மூர்த்திகளும் அருளும் ஸ்தலம்..அப்பர்,சுந்தரர்,திருஞான சம்பந்தர் பாடிய ஸ்தலம்..பல மன்னர்கள் கோயிலை புதுப்பிச்சிருக்காங்க..காசிக்கு நிகரானது...

சனீஸ்வரர் காகம் மேல் உட்கார்ந்திருப்பது இந்தியாவில் இங்கு மட்டும்தான்..!! மகுடேஸ்வரர் என்பதால் இந்த சிவனிடம் நிறைய சூட்சுமங்கல் இருக்கின்றன..வேலை பறிபோனவர்கலும் இங்கு வழிபட்டால் மகுடம் மீண்டும் சூடப்படுவார்கள்...3000 வருடம் பழமையன வன்னி மரத்தின் கீழ் பிரம்மா இருக்கிறார் ரோகிணி நட்சத்திரம் ரிசப ராசியினர் வழிபட எல்லா பிரச்சினையும் தீரும் வெள்ளைத்தாமரை வைத்து 27 நெய் தீபம் ஏற்றி வணங்க வேண்டும்...ஸ்ரீரெங்கம் பெருமாள் போல சயன கோலத்தில் இருக்கும் பெருமாளை வழிபட சம்சார வாழ்வின் சோதனைகள் விலகும் கணவன் மனைவி ஒற்றுமை உண்டாகும்..

ஜாதகத்தில் 7ஆம் இடத்தில் சனி அல்லது சூரியன் என கடுமையான தோசம் இருப்பவர்கள் பவானி கூடுதுறையில் சிறப்பு பரிகாரம் செய்த பின் கொடுமுடி செல்வதே நல்லது...பரிகாரம் செய்தாலும் செய்பவர் ராசியான அய்யராக இருக்கனும் உங்க நட்சத்திரத்துக்கு தாரபலன் இருக்கும் நாளாக இருக்கனும்...பரிகாரம் செய்தவர் பல கல்யாணங்களை நடத்தி வைத்தவராக இருக்கனும்..உங்க ஜாதகப்படி இப்போ திசாபுத்தி தடையில்லாம இருக்கனும்...அதுக்கு விளக்கமாக தெரிஞ்சிக்க என் மெயிலுக்கு எழுதுங்க..விரிவா சொல்றேன்...பரிகாரம் செய்வதாக இருந்தா மட்டும் எழுதவும் sathishastro77@gmail.com


சனி, 7 டிசம்பர், 2013

ஃபேஸ்புக் ஜோதிடம் facebook astrology

ஃபேஸ்புக்கில் நான் எழுதிய ஜோதிட குறிப்புகள்;

எனது ஃபேஸ்புக் ஐடி...சதீஷ்குமார்ஜோதிடர்

நடப்பு டிசம்பர் கடைசியில் வால் நட்சத்திரம் தோன்ற போகிறது இது 60,70 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அதிசயம்...வால் நட்சத்திரம் தோன்றினால் நாட்டின் அரசியல் தலைவர்கள் உயிருக்கு ஆபத்து என்ற நம்பிக்கை பல முறை நிஜமாகி இருக்கிறது...லால்பகதூர் சாஸ்திரி இறந்ததும் வால் நட்சத்திரம் தோன்றிய காலம்தாம்..மூத்த அரசியல் வாதிகளில் தென்னகத்தை சேர்ந்தவர்கள்,மற்றும் தேசிய அரசியல் தலைவர்களில் ஒரு சிலருக்கு இது கண்டமான காலம் என சொல்லலாம்...இன்னும் சில குறிப்புகள் நாளை மற்றும்,திங்கள்கிழமை விரிவாக பார்ப்போம்

 உங்கள் ஜென்ம நட்சத்திரத்துக்கு யோகமான நட்சத்திர காலில் நின்று திசை ஜாதகத்தில் நடப்பவர்கள்தான் வேகமான முன்னேற்றத்தை அடைகிறார்கள்..மிதுன லக்னம்..குரு பாவி ஆச்சே...குரு திசை நடக்குது..உனக்கு மரண கண்டம் வாசல்ல நிற்குது..ன்னு ஒரு ஜோசியர் சொன்னார்..ன்னு ஒருவர் கலக்கமுடன் வந்தார்...பூசத்தில் நின்று குரு திசை நடக்குது..நீங்க வீடு கட்டுவீங்கன்னு சொன்னேன்...கண்டம் இல்லைன்னு சொன்னேன்...ஒரு வருசத்துக்கு முன்னாடி சொன்னது..இன்னிக்கு பழத்தட்டுகளுடன் வந்து சந்தோசமாக நீங்க சொன்ன மாதிரியே நடந்துச்சி..வீடு கட்டிட்டேன் என்றார்...ஜாதகத்தில் கிரகம் எப்படி இருப்பினும் திசை யோகமாக இருந்தால் சிறப்பு...எம்.ஜி.ஆர்..ரஜினிக்கெல்லாம் யோகமான ஜாதகம்தான்..ஆனா 30 வயது வரை கஷ்டம்தான்..யோகமான திசை வந்தபின் தான் வேகமான முன்னேற்றம் அடைந்தார்கள்...

 கோயிலுக்கு போனால் நட்சத்திரம் பெயர் சொல்லிதான் அர்ச்சனை செய்து கொள்கிறோம் ஒரு ராசிக்கு மூன்று நட்சத்திரங்கள் வருவதால் ஜென்ம நட்சத்திரம் முக்கியம்..மிருகசிரீடமும் ரிசபம் ராசிதான்..ரோகிணியும் ரிசப ராசிதான் ஆனால் இருவருக்கும் வித்தியாசம் உண்டு..ஜென்ம நட்சத்திரம் அடிப்படையில் யோகமான நாளை தேர்ந்தெடுப்பது அவசியம்..இதைதான் நம் முன்னோர்கள் கடைபிடித்தனர்..ராமாயணத்தில் ராமரே தனது புனர்பூசம் நட்சத்திரத்துக்கு நல்ல நாள் தேர்ந்தெடுத்துதான் போரும் புரிந்திருக்கிறார்....இப்போது எல்லாம் முகூர்த்தம் வளர்பிறையில் அமைந்தால் போதும் என முடிவு செய்கிறார்கள்..ஜென்ம நட்சத்திரத்துக்கு அது உகந்ததாக இல்லாவிட்டால்தான் கஷ்டமும் நஷ்டமும் தான் வந்து சேரும்...!!

செவ்வாய், 26 நவம்பர், 2013

ஆவி,பேய் உண்மையா..? அதை கண்டறிவது எப்படி..? ghost story

அவிட்டம்,சதயம்,பூரட்டாதி,உத்திரட்டதி,ரேவதி இந்த நட்சத்திரங்கள் வரும் நாளில் ஒருவர் இறந்துவிட்டால் 6 மாதம் வரை பேயாக அலைவார்கள்...என் உறவினர் ..அவிட்டத்தில் இறந்தார்..அவர் இறந்து 6மாதத்தில் அந்த ஊரில் 10 பேரை 6 மாதத்தில் பயமுறுத்தி உயிரிழக்க செய்தார்..தன் பேரனையும் விட்டுவைக்கவில்லை..தாத்தா வர்றார் என்னைகூப்பிடுறார் என 8 வயது குழந்தை சொல்லிக்கொண்டே இறந்தது...அவர்கள் வீட்டு வேலைக்கார பெண்,இவர் ஆவி ரூபத்தில் வந்து பயமுறுத்துவதை தாங்க முடியாமல் தூக்கிலிட்டு கொண்டாள்..அவரது நெருங்கிய நண்பருக்கு அடிக்கடி காட்சி கொடுத்ததால் அவரும் அதிர்ச்சியில் ஹார்ட் அட்டாக்கில் இறந்தார்..தன் அப்பாவின் ஜிப்பாவை ஆசையாக அணிந்துகொண்ட மகனை விரட்டி விரட்டி மேலே ஏறி அமர்ந்து மூச்சுதிணறலை உண்டாக்கினார்..

தினமும் ஆவி ரூபத்தில் வீட்டுக்கு வந்து விடுவார் இவர் வருவதை சோதனை செய்ய வீட்டில் வாயிலில் மணல் பரப்பி வைத்தனர் அதில் லேசாக பாதமும் தெரிந்தது...சொம்பில் தண்ணீர் வைக்கப்பட்டிருக்கும் காலையில் அது குறைந்திருக்கும் .பூனைகள்,நாய்கள் தினமும் வீட்டை சுற்றி சுற்றி ஊளையிட்டன..அழுதன...

மேற்க்கண்ட நட்சத்திரங்களில் ஒருவர் இறந்தால் அக்காலத்தில் மீண்டும் இறந்தவர் வரக்கூடாது எனவும் மேலோகம் சென்றுவிடவேண்டும் எனவும் வீட்டு கூரையை பிரித்து அதன் வழியாக பிணத்தை வெளியேற்றி சுடுகாட்டுக்கு கொண்டு போவார்களாம்..சிலர் வீட்டுக்கு வரும் வாசல் மறக்கனும்னு சொல்லி வீட்டு பின்பக்க சுவரை உடைத்து அதன் வழியே கொண்டு செல்வார்களாம்..இப்போது 16ஆம் நாள் காரியம் மந்திரம் சொல்லி கெட்ட சக்தியை அடங்க்யிருக்கும்படி செய்வதால் பெரிய பாதிப்பு வருவதில்லை..எனினும் மேற்க்கண்ட நட்சத்திரங்களில் ஒருவர் இறந்தால் அந்த வீட்டை 6 மாதம் பூட்டிவிடுவது முடிந்தவரைக்கும் நல்லது!!

தனிஷ்டா பஞ்சமி என்பது ஒரு துர்தேவதையாகச் சொல்லப்பட்டுள்ளது. தீய அல்லது அடைப்பு உள்ள நட்சத்திரங்களில் இறந்தவர்கள் வீட்டில் முறையான பரிகாரங்களைக் கைகொள்ளாவிட்டால் இந்த துர்தேவதை புகுந்து அந்த வீட்டில் உள்ளவர்களை ஆவிரூபமாகவோ, கனவு மூலமாகவோ, பிரம்ம ராக்ஸத ரூபமாகவோ தோன்றி பயமுறுத்தி,6மாதத்திற்குள் மரணப்படுக்கையில் தள்ளிவிடும் என்பார்கள். 
முக்தி பெற்ற உயிர்கள் கபாலம் திறந்து சூரியன் வழியாக ஒளிவடிவான இறைவனை அடைகின்றன. ஆனால் முக்திநிலையை எட்டாத உயிர்கள் மீண்டும் உடல் எடுக்க உடல்காரகனான சந்திரனையே அடைகின்றன. தனிஷ்டா பஞ்சமி நட்சத்திரங்கள் 13 ஆகும். இதில் அவிட்டம், சதயம்,பூரட்டாதி, உத்திரட்டாதி,ரேவதி ஆகிய 5 நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு ஆறு மாதங்கள் அடைப்பு. ரோஹிணியில் இறந்தவர்களுக்கு நான்கு மாதங்கள் அடைப்பு. கார்த்திகை, உத்திரம் ஆகிய நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு மூன்று மாதங்கள் அடைப்பு. மிருகசீருஷம், சித்திரை, புணர்பூசம்,விசாகம், உத்திராடம் ஆகிய ஐந்து நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு இரண்டு மாதங்கள் அடைப்பு என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.

உங்கள் ராசியும் அதற்க்குண்டான கோயிலும்;

உங்கள் ராசியும் அதற்க்குண்டான கோயிலும்;

மேசம்;ராமேஸ்வரம்
ரிசபம்;திருப்பதி
மிதுனம்;பழனி
கடகம்;ராமேஸ்வரம்
சிம்மம்;ஸ்ரீவாஞ்சியம்
கன்னி;திருக்கழுகுன்றம்
துலாம்;திருத்தணி
விருச்சிகம்;காஞ்சிபுரம்
தனுசு;மாயவரம்
மகரம்;சிதம்பரம்
கும்பம்;தேவிபட்டினம்
மீனம்;வைத்தீஸ்வரன் கோயில்

நீங்க பிறந்த நட்சத்திரம் வரும்போது இந்த கோயில்களுக்கு போயிட்டு வாங்க...நல்லது நடக்கும்!!

செவ்வாய், 19 நவம்பர், 2013

ஹோமம் வேள்வி பரிகாரம் பலன் தரும், ஆரோக்கியம் தரும், செல்வம் தரும்

உண்ண இயலா எல்லாப்பொருட்களையும் வேள்வியில் இட்டு புகையாக்கி நம் உடலுக்கு வழங்கி பல பிரச்சினைகளை தீர்த்து வைத்திருக்கின்றனர் நம் பாரத மகான்கள்...

உடல்பருமனால் அவதிபடுபவர்களுக்கு அப்பளப்பிரண்டை எனும் மூலிகையை வேள்வியில் இட்டு புகையை சுவாசிப்பதால் ஊளைசதை கரைகிறது..தாமரைப்பூவை தேனில் குழைத்து வேள்வியில் இடுவதால் கல்வியில் நல்ல தேர்ச்சி பெற முடியும்..செண்பகபூவை வேள்வியில் இடுவதால் கடன் பிரச்சினை அகலும்.,..புரசுப்பூவை வேள்வியில் இடுவதால் அரசு சம்பந்தமான பிரச்சினை வழக்குகள் சம்பந்தமான பிரச்சினை குறையும்..சிலோத்துமம் என்ப்படும் சளி மிக கொடியது நெஞ்சுசளியால் இறந்த பெரியோர்கள் அநேகம்...வேள்விகள் சிலோத்துமத்தை ஓட ஓட விரட்டுகின்றன..வாத நோய்க்கு வஜ்ரவல்லி வேள்வி நல்ல பலன் தரும்..விச ஒவ்வாமையால் அவதிப்படும் ராகு திசை நடப்பவர்களுக்கு அருகம்புல் வேள்வியில் இடுவதால் பிரச்சினை தீரும்...குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு நாயுறுவியால் யாகம் வளர்க்கப்படுகிறது..


பாரத நாட்டுக்கே உரியதான வேள்வி எனும் யாகம் வளர்ப்பது சாதாரண புரோகிதர் சமாச்சாரம் அல்ல..அதில் நிறைய மருத்துவ குணம் உள்ளது..போபால் விஷ வாயு கசிவு உண்டாகி எல்லோரும் இறந்தபோது அக்னி ஹோத்திரம் பூஜை செய்து தப்பிய குடும்பம் பற்றி படித்திருப்பீர்கள்...இப்போது இந்த அக்னி ஹோதிரம் அமெரிக்கா இங்கிலாந்தில் வேகமாக பரவி வருகிறது..தன்வந்திரி ஹோமம் வளர்ப்பதால் கடுமையான நோயும் கட்டுப்படுகிறது..வேள்வியில் இடப்படும் மூலிகைகளால் பலவிதமான பலன்கள் உண்டாகிறது..மழை வேண்டி செய்ய்ப்படும் வருண ஜபங்களில் தண்ணீர்விட்டான் கிழங்கு எனும் மூலிகையை அதிகளவில் இடுகின்றனர் இதனால் மழை அங்கு பெய்கிறது..வஜ்ரவல்லி எனும் மூலிகையை இட்டு வேள்வி செய்தால் பூப்படையாத பெண்ணும் பூப்படைவாள்..சோரியாசிஸ் எனும் வியாதியை தன்வந்திரி ஹோமம் சரி செய்கிறது..கல்யாண முருங்கை எனும் மூலிகையை வேள்வியில் இடுவதால் தோல்நோய்கள் குணமாகின்றன...

செவ்வாய், 12 நவம்பர், 2013

வீட்டில் செல்வவளம் உண்டாக..தொழில்,வியாபார நஷ்டம்,மந்தம் சரியாக அதிர்ஷ்டம் உண்டாக ஒரு வழி!

தொழில் தொடங்குகின்ற நேரத்தில் ஏழரை சனியோ பாதகம் தரக்கூடிய கிரகங்களின் திசா புக்தியோ, நடைபெறக் கூடாது. குறிப்பாக சுக்கிரனும், சனி பகவானும் ஜாதகத்தில் வலுவாக இருக்க வண்டும். சாதகமற்ற காலத்தில் தொழில் தொடங்கினால் கடன், வழக்கு, எதிரிகளின் தொல்லையால் கூட ஜாதகருக்கு வியாபாரம் நஷ்டத்தில் இயங்கும் அவல நிலை உண்டாகும். சுதர்ஷ்ண ஹோமம்,சத்ரு சம்ஹார பூஜை போன்றவர்றை வீட்டிலோ தொழில் செய்யுமிடத்திலோ செய்தால் நஷ்டம்,ஏமாற்றம்,தொழில் மந்தம் இவை அகலும்..

குரு பலம் பெற்றவர்களை வைத்துதான் இந்த பூஜை செய்யப்படவேண்டும்..குடும்பத்தில் நிம்மதி இன்மை,கஷ்டம்,தொடர் கெட்ட செலவு,சுபகாரியம் செய்ய முடியாமை போன்ற பிரச்சினைகள் வீட்டில் இருந்த கெட்ட சக்தி அந்த வீட்டில் இருக்கிறது என அர்த்தம்..அதை அழித்து தெய்வசக்தி மேலோங்க இந்த பூஜைகளை வீட்டில் செய்யலாம்..நல்ல ராசியான சிறப்பாக பூஜை நடத்தும் ஒருவர் இருக்கிறார்..தமிழகத்தில் நீங்க எங்கிருந்தாலும் இந்த பூஜை செய்ய விருப்பம் இருந்தா மெயில் பண்ணுங்க...வீட்டுக்கே வந்து சிறப்பாக பூஜை நடத்தி கொடுக்க தயாராக இருக்கிறோம்..sathishastro77@gmail.com

திங்கள், 11 நவம்பர், 2013

உங்கள் தட்டில் உணவா...விஷமா ? மட்ட அரிசியின் மதிப்பு!!

உங்கள் தட்டில் உணவா...விஷமா ?
 
ஆயிரக்கணக்கான அரிசி வகைகள் உண்டென்று கடந்த தடவை கூறினேன். அவற்றில் மூன்று வகையான அரிசிகள் நிலைத்து நின்றன - சிவப்பு, கறுப்பு, வெள்ளை. இந்த வண்ண அரிசிகளைப் பற்றிய சுவாரசியமான பழங்கதைகள் உண்டு.

இந்தோனேஷியாவின் பாலி தீவில் வழங்கும் கதை இது - கடவுள் சிவா (ciwa என்கிறார்கள் அங்கே. நம்ம ஊர் 'சிவன்’ -& sivan), ஒரு பறவையை பூமிக்கு அனுப்பினார். அந்தப் பறவை, நான்கு வகையான நெல் மணிகளைச் சுமந்து சென்றது. மஞ்சள், கறுப்பு, சிவப்பு, வெள்ளை. போகும் வழியில் மஞ்சள் அரிசியை அந்தப் பறவை தின்றுவிட்டது. மீதமுள்ள மூன்று வண்ண நெல் மட்டுமே மனிதனுக்கு கிடைத்ததாம்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய யஜுர் வேதத்தில் மூவண்ண அரிசியின் மகிமை கூறப்படுகிறது. தெய்வங்களுக்குப் படைக்க வேண்டிய தானியங்களைப் பற்றிக் கூறும்போது, கறுப்பு அரிசியை அக்னி தேவனுக்கும், சிவப்பு அரிசியை மழைக் கடவுளான இந்திரனுக்கும், வெள்ளை அரிசியை சூர்யபகவானுக்கும் படைக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.


இப்போது நாம் பேசப்போவது... சிவப்பு அரிசியைப் பற்றி. சிவப்பு அரிசி ஓர் அற்புதமான அரிய உணவு. இதன் மருத்துவ விசேஷங்களைப் பற்றி கி.மு. 700-ல் சரகரும், கி.மு.400-ல் சுஸ்ருதரும் நிறையக் குறிப்பிட்டுள்ளார்கள். இவர்கள் இந்திய மருத்துவத்தில் ஆயுர்வேதத்தின் முன்னோடிகள். வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று நாடிகளில் ஏற்படும் மாற்றங்கள்தான் சகல நோய்களுக்கும் காரணம் என்பது ஆயுர்வேத சித்தாந்தம். இந்த மூன்று நாடிகளின் தோஷங்களையும் அறவே நீக்கும் ஆற்றல்... சிவப்பு அரிசிக்கு உண்டு என்று இவர்கள் கூறியுள்ளார்கள்.

சீனாவில் 3,000 ஆண்டுகளாக செந்நெல் பயிரிடப்படுகிறது. ஜப்பான், கொரியா, பிலிப்பைன்ஸ், இலங்கை, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் சிவப்பு நெல் பயிராகிறது. கொரியாவில் உள்ள சில புத்தர் சிலைகளின் உள்ளே சிவப்பு நெல் விதைகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் மதுரை, திருநெல்வேலி, தஞ்சா வூர் போன்ற மருத நிலங்களில் செந்நெல் அமோகமாக விளைந்தது. 'மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று, ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான தென் மதுரை’ என்ற பழம் பாடலே இதற்கு சாட்சி.


சிவப்பு நெல், விவசாய முறையில் மட்டுமின்றி தானாகவே காடுகளிலும் மலைகளிலும் மானாவாரியாக விளைந்தது. ஆகவே, இதை, 'காட்டு அரிசி’ (Wild Rice) என்று சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன. அதனால்தானோ என்னவோ, சமுதாயத்தின் கீழ்த்தட்டு மக்களே பெரும்பாலும் இதை உணவாகப் பயன்படுத்தினர். நம் நாட்டில் கர்நாடகா, பீகார், ஒடிசா, மத்தியப் பிரதேசம், வங்காளம் முதலிய மாநிலங்களில் இது பயிரிடப்பட்டாலும், கேரளாவில் இந்த அரிசி மிகவும் பிரசித்தம். இந்த அரிசிக்கு அவர்கள் கொடுத்துள்ள பெயர் - 'மட்ட அரிசி’. ஆனால், அவர்கள் இதை மிகவும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள் என்பதுதான் உண்மை.

சபரிமலை செல்லும்போது அங்குள்ள ஹோட்டல்களில் சிவப்பு அரிசி சாதம் பரிமாறப்படும். என்னோடு வரும் நண்பர்கள் முகம் சுளித்து, ''வேண்டாம், வேண்டாம்... வொயிட் ரைஸ் போடு...'' என்று சொல்வதையும், பக்கத்து மேஜையில் அமர்ந்திருக்கும் கேரளவாசிகள் பச்சரிசி சாதம் பரிமாறப்பட்டால் முகம் சுளித்து, ''மட்ட அரிசி போடு...'' என்று சொல்வதையும் ஆண்டுதோறும் கண்டு வருகிறேன்.

இமாச்சல பிரதேசத்தில் குலு பள்ளத்தாக்கில் மட்டலி என்ற சிவப்பு நெல் பயிராகிறது. ஆங்கிலேய ஆட்சியில் அங்கிருந்த ஒரு கவர்னர் இந்த அரிசியை மிகவும் விரும்பி சாப்பிட்டதோடு, லண்டனில் உள்ள அவர் வீட்டுக்கு இந்த அரிசியைத் தவறாமல் அனுப்பி வந்தார் என்ற செய்திக் குறிப்புகள் உள்ளன.
நீங்கள் யாரும் இதை இதுவரை சாப்பிடாவிட்டாலும், இப்போது நான் பட்டியலிடப்போகும் சிவப்பு அரிசியின் மருத்துவச் சிறப்புகள், உங்களை அதை நாட வைக்கும்!

பொதுவாக நெல்லில் நான்கு பகுதிகள் உண்டு - வெளியே இருக்கும் உமி (Husk); உள்ளே இருக்கும் தவிடு (Bran), கரு (EMbryo); கடைசியாக வெகு உள்ளே இருக்கும் மாவுப்பொருள் (Starch). இவற்றுள் நல்ல சத்துக்கள் அனைத்தும் வெளிப்பகுதியிலும், வெறும் சக்கை மட்டும் உள்பகுதியிலும் இருக்கின்றன. நாம் சத்துப்பகுதியை மாடுகளுக்குத் தீவனமாகக் கொடுத்துவிட்டு, சக்கையை மட்டுமே சாப்பிடும் விநோதப் பிறவிகள்!

சிவப்பு நெல் மட்டும் இந்த அமைப்பில் விசேஷமானது. இதன் சத்துக்கள் அனைத்தும் மாவுப்பகுதி வரை உட்சென்று சேமிக்கப்படுவதால், இது தீட்டப்பட்ட பின்பும் அதை நாம் பெற முடியும். மேலும் எந்த அரிசியிலும் இல்லாத அளவுக்கு பி-1, பி-3, பி-6 ஆகிய வைட்டமின்கள் - எந்த அரிசியிலும் காணமுடியாத அளவுக்கு இரும்புச் சத்து - ஜிங்க் (Zinc), மாங்கனீஸ், மெக்னீஷியம், செலினியம், பாஸ்பரஸ் போன்ற கனிமங்கள் - மிகுதியான நார்ச்சத்து (Fibre) என சிவப்பரிசியில் அடங்கியிருக்கின்றன. தன்னிடம் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட் குணங்களால் இதய வியாதிகளுக்கு அற்புதமான மருந்தாகும் ஆன்த்தோசயனின், பாலிஃபீனால் போன்ற வேதிப்பொருட்களும் இதில் சங்கமித் திருக்கின்றன.


இதையெல்லாம்விட, சிவப்பு அரிசியில் மானோகோலின் - கே (Monacolin K) என்கிற அற்புத வேதிப்பொருள் உள்ளது. இதைத்தான் மருத்துவத்துறையில் இப்போதும் 'லோவாஸ்டேடின்' (Lovastatin) என்ற பெயரில் ரத்தத்தில் கொழுப்பைக் குறைப்பதற்காக உலகெங்கும் கொடுத்து வருகிறோம். செந்நெல்லின் மீது வளரும் ஒரு வகை பூஞ்சணம்தான் (Yeast), இந்த லோவாஸ்டேடினை உற்பத்தி செய்கிறது. அதனால் சீனாவில், செந்நெல் மீது இந்த பூஞ்சணத்தை இவர்களாகவே வளர்க்கிறார்கள். 'சிவப்பு பூஞ்சண அரிசி' (Red yeast rice) என்று இதற்குப் பெயர். இதைத் தவிர, சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, ஈரல் வியாதிகள், பித்தப்பை கற்கள், ஆஸ்துமா மற்றும் பலவித ஒவ்வாமைக்கும் (Allergy) சிவப்பு அரிசி நல்ல மருந்து.

இவ்வளவு பெருமைகள் வாய்ந்த சிவப்பு அரிசி... இப்போது காணாமல் போன மர்மம் என்ன?

சிவப்பு நெல்லுக்கு உரம் இட்டாலும் சரி, இடாவிட்டாலும் சரி, பூச்சிக்கொல்லி மருந்துகள் எதுவுமே இல்லாமல், பூச்சிகளை அண்டவிடாமல் அமோகமாக வளரும் தன்மை உண்டு. ஆனால், ஆங்கிலேயர்கள், குறிப்பாக அமெரிக்கர்கள், பல சத்துகள் நிறைந்த இந்த அரிசியை களைப்பயிர் (Weed) என்றார்கள். சிவப்பு நெல்லை சிவப்பு அரக்கன் (Red Menace) என்றும், கொழுத்த பிச்சைக் காரர்கள் (Fat beggars) என்றும் அழைத்தார்கள்.

ஏன்..?

ரசாயன உரங்கள் மூலமும், பூச்சிக்கொல்லி மருந்துகள் மூலமும், விவசாயத்துறையில் உலகெங்கும் ஒரு ராட்சத பொருளாதார சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ள அமெரிக்கர்களுக்கு, எந்த உரங்கள், பூச்சிக்கொல்லிகளின் தேவையும் இன்றி வளர்ந்த இந்த செந்நெல் பிடிக்கவில்லை. தங்கள் தொழிலை தக்கவைத்துக் கொள்ள இதை எப்படியாவது அழிக்க வேண்டும் என்றும், சிவப்பு நிறத்தை எப்படியாவது திட்டியே தீர்ப்பதென்றும் முடிவெடுத்தனர். 'பட்டை தீட்டப்பட்ட வெள்ளை அரிசி’ என்ற கவர்ச்சியை மக்களிடம் ஏற்படுத்தினர். நம் ஊர் மக்களும் வெள்ளை அரிசியின் நிறத்திலும், மணத்திலும் சுவையிலும் மயங்கி, சிவப்பு நெல் விவசாயத்தை 1930-க்குப் பிறகு பெருமளவில் கைவிட்டனர்.

தண்ணீர் அதிகம் தேவையில்லாத, உரம் தேவையில்லாத, பூச்சிக்கொல்லிகள் தேவையில்லாத, பல்வேறு அற்புத மருத்துவ குணங்களை உடைய, ருசியான, மலிவான சிவப்பு அரிசிக்கு நாம் ஏன் மாறக்கூடாது?!

நன்றி : அவள் விகடன் May 21, 2013

திங்கள், 4 நவம்பர், 2013

குரு வக்ர ராசிபலன் 2014 எந்த ராசிக்கு யோகம்..?ஜோதிடம்

குரு வக்ர ராசிபலன்கள் ஜோதிடம் 2014 astrology

ஐப்பசி 21 முதல் மாசி 22 வரை குரு வக்ரம் அடைகிறார்...இதனால் மிதுனத்தில் இப்போது இருக்கும் குரு ரிசபத்தில் இருப்பது போல கணக்கிட்டால் குருப்பெயர்ச்சியில் பாதிக்கப்பட்ட ராசிகளுக்கு எல்லாம் நல்ல பலன்கள் உண்டாகும்..என எடுத்துக்கொள்ளலாம்..அப்போ நல்ல பலன் நடக்கும் ராசிகளுக்கு பாதிக்குமா என கேட்டால் முழுமையா கெட்டது என சொல்ல முடியாது..

மகரம்,விருச்சிகம்,மேசம் ராசியினருக்கும் ரிசபம் ராசியினருக்கும் நல்ல பலன்கள் குரு வக்ர காலத்தில் உண்டாக்கும்..மிதனம் ராசியினருக்கும்நல்ல பலன்களே என சொல்லலாம்..வருமான தடை அகலும்..வருமானம் பெருகும் எடுத்த காரியங்கள் தடையின்றி முடியும்...எதிர்பார்த்த பண வரவு தடையின்றி கிடைக்கும் பகை விலகும்...வீட்டில் சுபகாரியங்கள் வேகமாக நடைபெறும்.

கன்னி,சிம்மம்,கடகம் ராசியினருக்கும் இந்த மாசி முடியும் வரை அதிர்ஷ்டமான காலம் என்றே சொல்லலாம்...இதுவரை மந்தமாக இருந்து வந்த தொழில் வளரும்..செல்வாக்கு கூடும் கடன் அடையும்..பணம் வந்து சேரும்..

உங்க ரசி எதுவனாலும் ஜாதகத்தில் திசாபுக்தி எப்படி இருக்கிறது...என்பதன் அடிப்படையில் பலன்கள் மாறும் அதுபற்ரி அறிய மெயில் செய்யுங்கள் பலன்கள் அனுப்புகிறேன்.....பிறந்ததேதி,பிறந்த நேரம்,பிறந்த ஊர் எழுதி அனுப்புங்கள்...கட்டணம் ரூ 500 மட்டும்..ஜாதகத்து ஏற்றவாறு ஐம்பொன் மோதிரம் செய்து பூஜித்து அனுப்பி வைக்கிறோம்..




சர்க்கரை நோய் ஒரு மாதத்தில் குணமாக சித்தர் சொன்ன மருத்துவம்

சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில்

சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்:

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்;

வரக்கொத்தமல்லி --அரை கிலோ
வெந்தயம் ---கால் கிலோ
தனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.

இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு தம்லராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சப்ப்பிட்டு வரவும்.
இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும்(குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.

ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும். சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனைக்கூட சோதனையில் உறுதி செய்யுங்களேன்.

செவ்வாய், 29 அக்டோபர், 2013

சிதம்பரம் நடராஜர் கோயில் மர்மங்களும் ,உண்மையான ரகசியங்களும்!!


சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ஆச்சர்யங்கள் இவைகள் தான்."

சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேலையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்.

முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்களை ஏற்கனவே உங்களிடம் பகிர்ந்திருக்கிறேன், அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்."

(1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Centre Point of World's Magnetic Equator ).

(2)பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUTE ) அமைந்துள்ளது, இன்று google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.

(3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.

(4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).

(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.

(6) திருமந்திரத்தில் " திருமூலர்"

மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே

என்று கூறுகிறார், அதாவது " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது.

(7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,

(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.

(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.

(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது

வெள்ளி, 25 அக்டோபர், 2013

குருப்பெயர்ச்சி 2014ல் எப்போது வரும்..?

குருப்பெயர்ச்சி வருடம் ஒரு முறை நிகழ்கிறது..இப்போது குரு மிதுனத்தில் இருக்கிறது...மிதுனம் ராசியினருக்கு ஜென்ம குருவாகவும்,கடகம் ராசியினருக்கு விரய குருவாகவும்,சிம்மம் ராசியினருக்கு லாப குருவாகவும் ,கன்னி ராசிக்கு 10 ஆமிட குருவாகவும் ,துலாம் ராசிக்கு பாக்ய குருவாகவும்,விருச்சிக ராசிக்கு அஷ்டம குருவாகவும்,தனுசு ராசிக்கு களத்திர லாப குருவாகவும்,மகரம் ராசிக்கு ருண ரோக குருவாகவும்,கும்பம் ராசிக்கு ஜெய குருவாகவும்,மீனம் ராசிக்கு சுகஸ்தான குருவாகவும்,மேசம் ராசிக்கு வீரிய குருவாகவும்,ரிசபம் ராசிக்கு தன குருவாகவும் இருக்கிறார்...

இந்த குருவால் அதிகம் பாதிக்கப்பட்ட ராசிகள் ;கடகம்,கன்னி,விருச்சிகம்,மகரம்,மீனம்,மேசம் ஆகும்

மிதுன க்ருவால் அதிகம் நன்மை பெற்ற பெறும் ராசிகள்;ரிசபம்,சிம்மம்,துலாம்,தனுசு,கும்பம் ஆகும்..


அடுத்து மிதுனம் ராசியில் இருந்து குரு எப்போது கடகம் ராசிக்கு செல்கிறார் என பார்த்தால் 19.6.2014 அன்று பெயர்ச்சியகிறார்..

அப்போது கடகத்தில் குரு உச்சமாகி இருப்பார்..உலகில் அதிகம் கோயில் கொண்டுள்ள பகுதி தமிழகம் ஆகும்..கோயில்களை குறிக்கும் கிரகம் குருவாகும்...குரு அதிர்ஷ்டத்தை குறிப்பவர் ..செல்வாக்கை குறிப்பவர்...குரு கடகத்தில் உச்சமாகும்போது தமிழகத்துக்கு உலக அளவிலும் இந்திய அளவிலும் அதிக செல்வாக்கும் உண்டாகும் ஆன்மீக புரட்சியும் உண்டாகும்...

தமிழர்களும் கடல் பயணமும் சிலிர்ப்பான வரலாற்று உண்மை

தமிழர்களும் கடல் பயணமும்.

The Conquest of Mexico and Peru என்கிற வரலாற்று நூலை எழுதிய William H. Prescott என்பவரே முதன் முதலில் செவ்விந்தியர் தமிழர் தொடர்பை பற்றி பேசுகிறார். ஐரோப்பியர்கள் எப்படி செவ்விந்தியர்களை, மெக்சிகோ மற்றும் பெரூ நாடுகள் முழுவதிலிருந்தும் ஒழித்துகட்டினார்கள் என்பதை விலாவாரியாக இந்த நூல் விவரிக்கிறது. இந்த நூலின் தொடக்கத்தில் செவ்விந்தியர்களின் பூர்வீகம் குறித்து பேசும் Prescott தமிழர் தொடர்பை அடித்து கூறுகிறார். வரலாற்று ஆராய்ச்சியாளர் இல்லையென்றாலும் சே குவேராவும் தன்னுடைய தென் அமெரிக்க பயண குறிப்புகளில் இதை பற்றி எழுதியிருக்கிறார்.

இன்காகள் (Incas) தென் அமெரிக்க சோழர்கள்’ என்கிற ஆராய்ச்சி நூல் ஒன்று தமிழிலும் இருக்கிறது. பத்து வருடங்களுக்கு முன்னால் நூலகத்தில், யாரும் திரும்பி பார்க்க கூட யோசிக்கும் புத்தக அடுக்கில், தூசி தும்பட்டைகளுக்கு மத்தியிலிருந்து எடுத்து இந்த புத்தகத்தை நான் படித்திருக்கிறேன். இந்த புத்தகத்தை எழுதிய ஆராய்ச்சியாளரின் பெயரை நான் மறந்துவிட்டதின் காரணமாக என்னால் அது குறித்த தகவலை தர இயலவில்லை. இது வருத்தமளிக்க கூடி விசயம். இந்த கட்டுரை எழுதும் பொறுட்டு இந்த அறுமையான புத்தகத்தை நூலக்கத்தில் எவ்வளவோ முயன்று தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த புத்தகத்திற்கு மறுபதிப்பு இல்லை என்பதும் வேதனையான விசயம். தமிழ் அறிஞர்களின் ஆராய்ச்சி அறிவு இப்படிதான் கண்டுகொள்ள ஆளில்லாமல் காணாமல் போகிறது.

செவ்விந்தியர்களின் கலாச்சார கூறுகள் மிகத் தெளிவாக தமிழர்களின் கலாச்சார கூறுகளை உள்ளடக்கி இருக்கின்றன. தமிழர்களின் வானியியல், செவ்விந்தியர்களின் வானியியலோடு ஒத்துப்போகின்றன. செவ்விந்தியர்களின் வானியியல் நுட்பத்தை ஆராய்ந்த வரலாற்று ஆராய்ச்சியாளர்கள், பல்லாயிரம் ஆண்டுகள் அனுபவத்தின் மூலமாகே இத்தகைய நுட்பங்களை பெற முடியும் என்றும் செவ்விந்தியர்களுக்கு இது ஒரே இரவில் கைவர சாத்தியம் இல்லையென்றும் கணிக்கிறார்கள். காரணம் செவ்விந்தியர்கள் ஒரிடத்தில் நிலைத்து வாழ்பவர்கள் கிடையாது அவர்களுடையது நாடோடி கலாச்சாரம். நாடோடி இனம் வானியியலில் தேர்ச்சி பெறுவது சாத்தியம் அற்றது. தமிழர்களுடனான தொடர்பே இவர்கள் வானியியலில் தேர்ச்சி பெறுவதற்கு உதவியிருக்கும் என்று கருதுகிறார்கள். மெசப்பத்தோமியா, எகிப்பது நாகரீகங்களின் தொடர்புகள் செவ்விந்தியர்களிடம் கிடையாது.

செவ்விந்தியர்கள் ஏறக்குறைய 3000 ஆண்டுகளாக அமெரிக்க கண்டங்களில் வாழ்ந்தாலும் அவர்களுடைய வாழ்க்கை, நிலையான விவசாய முறை சார்ந்த நிலவுடமை கலச்சாரம் கொண்டது கிடையாது. காடு சார்ந்த பொருட்களும், கால் நடைகளுமே அவர்களுடைய சொத்துகள். தென் அமெரிக்காவில் காடுகளிலும், வட அமெரிக்காவில் இடம் விட்டு இடம் நகரும் வகையிலுமே அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை அமைத்துகொண்டார்கள். அமெரிக்கா போன்ற இயற்கை வளம் நிறைந்த நாட்டில், செவ்விந்தியர்கள் நிலையான விவசாய சமூகத்தை ஏற்படுத்தாதது ஆச்சரியமான விசயம். Mel Gibson-னின் Apocalypto படம் தென் அமெரிக்க செவ்விந்தியர்களின் சமுதாய அமைப்பை மிகத் துள்ளியமாக காட்சி படுத்தியிருக்கும். Hollywood-ன் இனவெறிப் பிடித்த Cowboy படங்களில் வெள்ளையர்களுக்கும் செவ்விந்தியர்களுக்கும் இடையிலான சண்டை காட்சிகளில் வட அமெரிக்க செவ்விந்தியர்களின் சமுதாய அமைப்பை தெரிந்து கொள்ளலாம்.


 
ஐரோப்பியர்களுக்கு அமெரிக்கா என்று ஒரு கண்டம் இருப்பதே கி.பி. 12, 13 நூற்றாண்டுகளுக்கு பிறகுதான் தெரியவந்தது. ஆனால் 2500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களுக்கு அமெரிக்கா கண்டத்தோடு தொடர்பு இருந்திருக்கிறது. இது கற்பனை கதைப் போல இருந்தாலும் இதற்கு வலுவான சான்று உண்டு. தென் பசிபிக் மகாகடலில் (Pacific Ocean) ஆஸ்திரேலிய கடல் பகுதியில் கடல் அகழ்வாராய்ச்சி(Ocean Archeology) மேற்கொண்ட சமயத்தில் மிகப் பெரிய சரக்குக் கப்பல் ஒன்றை கண்டுபிடித்தார்கள். முழுவதும் மரத்தால் கட்டப்பட்டிருந்த இந்த கப்பல் வணிகப் பொருட்களுடன் முழ்கியிருக்கிறது. Carbon-Dating முறையின்படி இந்த கப்பலின் வயது இன்றிலிருந்து 2500 வருடங்களுக்கும் மேல் என்று தெரிந்திருக்கிறது. தரவுகளை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள், தமிழர்கள் வணிகத்திற்கு உபயோகப்படுத்திய கப்பல்களில் ஓன்று ஆஸ்திரேலிய கண்டத்தைத் தாண்டி அமெரிக்கா செல்லும் வழியில் பசிபிக் கடலில் முழுகியிருக்கிறது என்ற முடிவிற்கு வந்தார்கள்.


தமிழர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு கடலில் கப்பல் செலுத்தி பயணம் புறிந்திருக்கிறார்கள் என்பதற்கான ஆதாரம் புறநானூற்று பாடல்களிலும் காணலாம். அதில் ஒரு பாடல்தான் இந்தப்பாடல்.

நளியிரு முந்நீர் நாவா யோட்டி

வளிதொழி லாண்ட வுரவோன் மருக - (புறம் - 66)

இதன் பொருள்:-

நீர் செறிந்த பெரிய கடலில் மரக்கலம் (கப்பல்) செலுத்தியும், அது அசையாதபோது காற்றினை ஏவல் கொண்டு செலுத்தும் வலிமையுடையவனின் வலித்தோன்றலே

என்று வெண்ணிக் குயத்தியார் சோழன் கரிகாற் பெருவளத்தானைப் பார்த்துப் பாடுகிறார்.

ஆராய்ச்சியார்கள் கண்ணை மூடிக்கொண்டு இந்த கப்பல் தமிழர்களுடையது என்கிற கணிப்பிற்கு வந்துவிடவில்லை. முதலில் இந்த கப்பல் எந்த மரத்தால் கட்டப்பட்டது என்று ஆராய்ந்தபோது தேக்கு மரத்தால் ஆனது என்று தெரிந்திருக்கிறது. தேக்கு தென்னிந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டுமே கிடைக்க கூடியது. அதுமட்டும் இல்லாமல் 3000 ஆண்டுகளுக்கு முன்னால் கடல்களில் மிகப் பெரிய கப்பல்களை வைத்து வாணிபம் செய்த நாகரீகம் இரண்டே இரண்டுதான். ஒன்று தமிழர்களுடைய நாகரீகம் மற்றது எகிப்திய நாகரீகம். மூழ்கிய அந்த கப்பலின் கட்டுமான அமைப்பு எகிப்தியர்களின் சரக்கு கப்பல்களோடு பொறுந்திபோகவில்லை. மேலும் எகிப்தியர்கள் கறையோரமாகவே பயணித்து செல்லக் கூடியவர்கள். அவர்களுக்கு நடுகடலில் கப்பல் செலுத்தத் தெரியாது. அதன் காரணமாக அவர்களுடைய கப்பல்களின் கட்டுமானமும் கரையோரமாக பயணிக்க ஏற்ற வகையில்தான் இருக்கும்.

கண்டுபிடிக்கப்பட்ட கப்பலோ மிகப் பெரியதாக நிறைய சரக்குகளை கையாளக் கூடியதாக இருந்ததோடு நடுகடலில் பயணம் செய்வதற்கு ஏற்றபடியும் கட்டப்பட்டிருக்கிறது. இந்த கப்பலில் இருந்த சரக்குகளும் தென்னிந்தியாவில் மட்டுமே கிடைக்ககூடியவைகள். தமிழ் இலக்கியங்கள் மட்டுமே கடலில் பயணிக்கும் களங்களுக்கு உபயோகத்தின் அடிபடையில் அமைந்த பெயர்களைப் பற்றி கூறுகிறது. இவைகள் மூலம் தமிழர்களின் கடலோடும் அனுபவத்தை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் இது தமிழர்களுடைய வணிக கப்பல்தான் என்று உறுதி செய்திருக்கிறார்கள். ஆக வெள்ளையர்கள் நாடோடிகளாக சுற்றிதிரிந்த காலத்திலேயே தமிழன் ஆஸ்திரேலிய கண்டத்தையும், அமெரிக்க கண்டத்தையும் கண்டு அறிந்துவைத்திருந்தான். இந்த கண்டங்களோடு வணிகத் தொடர்புகள் அவனுக்கு இருந்திருக்கிறது. நம்முடைய சாபக்கேடு இவற்றை பற்றிய முறையான வரலாற்று ஆவணங்கள் இல்லாதது. 3000 ஆண்டுகளுக்கு முன்பே நடுகடலில் பயணிக்கத் தெரிந்த தமிழன், தன்னுடைய சிறப்புகள் பற்றி பதிய தவறியது கேடுகாலமே.



உலக நாகரீகங்களுடனான நம்முடைய தொடர்புகளைப் பற்றி பேச இன்று நாதியில்லை. ஆங்கொன்றும் இங்கொன்றுமாக நம்முடைய சிறப்புகள் குறித்து வரலாற்று ஆதாரங்கள் கிடைத்தாலும் வெகு மக்களிடம் அதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழர்கள் தவறிவிடுகிறார்கள். தவறிவிடுகிறார்கள் என்பதை விட அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. ஆயிரம் ஆண்டுகளாக தொடரும் இந்த அக்கறையின்மை, நாடு இழப்புகளிலும், இனப் படுகொலைகளிலும் தமிழனை கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.

நன்றி-சித்தர்கள் தமிழின் முதல் விஞ்ஞானிகள் ஃபேஸ்புக் பக்கம்


ஞாயிறு, 6 அக்டோபர், 2013

கைலாய மலைக்கு நிகரான பொதிகை மலை அகத்தியர் அதிசய அனுபவங்கள்

பொதிகை மலை -

ஆத்மார்த்மாக செய்யும் எந்த தொழிலிலும் ஜெயிக்கலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குபவர். சேர்மராஜ்...கம்ப்யூட்டரின் உதவியோடு மிக வித்தியாசமாக விளம்பரங்கள் வடிவமைப்பதில் இவருக்கு நிகர் இவரே.

மூச்சுவிட நேரமில்லாத இவரது களப்பணியில் இவர் இளைப்பாறவும்,களைப்பை போக்கிக் கொள்ளவும் அவ்வப்போது செல்வது, மலைப்பிரதேசங்களில் உள்ள ஆன்மிக தலங்களுக்குதான்.

அப்படிப்பட்ட இடம்தான் அகத்திய மாமுனி எழுந்தருளியிருக்கும் பொதிகைமலை. தமிழக கேரளா மாநிலங்களின் எல்லையில் இருந்தாலும் இப்போதைக்கு கேரளா வழியாகத்தான் செல்ல முடியும்.


பொதிகை மலையின் உச்சியில் உள்ள அகத்தியரை தரிசனம் செய்யவேண்டும் என்றால் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் சென்று, அங்கிருந்து ஒன்றரை மணிநேர வாகன பயணத்திற்கு பின், பொதிகை மலைக்கு செல்லும் மலைப்பாதையில் வனத்துறையின் சோதனைச் சாவடியை அடையலாம்.

சோதனைச் சாவடியில் ஒருவருக்கு முன்னூற்று ஐம்பது ரூபாய் வீதம் பணம் கட்டிவிட்டு, தங்கள் சொந்த பொறுப்பில் போய்வருவதாகவும், பயணத்தின் போது உயிருக்கோ, உடமைக்கோ பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு தாங்களே பொறுப்பு என்றும் எழுதிக் கொடுத்துவிட்டு செல்ல வேண்டும்.

நான்கு பேர் கொண்ட குழு என்றால் ஒரு வழிகாட்டியை வனத்துறையே ஏற்பாடு செய்து அனுப்பி வைக்கிறது. அங்கு இருந்து காலையில் கிளம்பினால் சூரியனைக்கூட பார்க்கமுடியாத அடர்ந்த காட்டிற்குள் ஒன்றரை நாள் பயணத்திற்கு பிறகு அகத்தியரை தரிசித்துவிட்டு, மீண்டும் ஒன்றரை நாள் பயணம் செய்து திரும்பவேண்டும்.

அவரவருக்கான உணவுப்பொருள், இரவில் தூங்க தேவைப்படும் போர்வை, மழைவந்தால் பாதுகாத்துக் கொள்ள ரெயின்கோட், அட்டை கடியில் இருந்து காப்பாற்றிக் கொள்ள மூக்குப்பொடி, வேப்பெண்ணெய், மற்றும் மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டும், வழியில் யானை போன்ற காட்டினங்களை எதிர்கொண்டும் போய்வரவேண்டும்.

பல இடங்களில் காணப்படும் செங்குத்தான பாறைகளில் தொங்கவிடப்பட்டுள்ள கயிறை அல்லது கம்பியை பிடித்துக் கொண்டுதான் ஏற வேண்டும், அதே போல இறங்க வேண்டும், கொஞ்சம் கவனம் தவறினாலோ, கால் பிசகினாலோ பல ஆயிரம் அடி உயரத்தில் இருந்து மீள முடியாத பள்ளத்தில் விழவேண்டியிருக்கும்.

இதை படிக்கும் யாருக்கும் போகத் தைரியம் வராது தயக்கம்தான்வரும் ஆனால் இதைவிட அதிகமாகவே “ரிஸ்க்குகளை’ எதிர்பார்த்து சேர்மராஜ் கிளம்பிவிட்டார், காரணம் தனது ஞானகுருவான அகத்தியரை சந்திக்க போகிறோம் என்று மனதிற்குள் மழைபோல பெய்த சந்தோஷம், இவரது கருத்தையொத்த நண்பர்கள் பதினோரு பேர் சேர்ந்து கொள்ள பயணம் சிறப்பாக அமைந்துவிட்டது.

சிறப்பு என்று சொல்வதைவிட அளவில்லாத மனத்திருப்தி, ஆன்மிக மகிழ்ச்சி, உள்ளத்தினுள் ஒருவகை எழுச்சியை உணர்ந்தோம்.

காரணம் தொட்டு விளையாடும்படியான மேகக்கூட்டம், மூக்கினுள் நுழைந்து அடிவயிறு வரை ஆழப்பாயும் மூலிøக்காற்று, காட்டுக்குள் தூக்கம், கலவை உணவு, இப்படிக்கூட குடிநீருக்கு சுவை இருக்குமா என ஆச்சரியம் தரும் குடிநீர், பளிங்கு போன்ற தண்ணீரைக் கொண்டு வற்றாமல் ஒடும் காட்டாறு, அழகும், சுகமும்தரும் அருவிகள், இப்படி பசுமையும், இயற்கையும் பின்னிப் பிணைந்த அடர்ந்த வனம், விதவிதமான மலர்களின் மணம், ஆகா,ஆகா அது ஒரு அளவில்லாத ஆனந்தம்.

செல்போன் எடுக்காது, வாகன சத்தம் கேட்காது, அவசரமாய் செல்லும் மனிதர்கள் கிடையாது, அரக்கபரக்க சாப்பிட வேண்டியது இருக்காது, நவீனம் என்ற பெயரிலான எந்த எலக்ட்ரானிக் குப்பைகளும் கிடையாது, எங்கு பார்த்தாலும் இயற்கை அன்னை அள்ளித்தந்த பொக்கிஷமே. கைலாஷ் மலைக்கு போனவர் ஒருவர் எங்களுடன் வந்திருந்தார், அவர் இந்த பொதிகை மலையைப் பார்த்துவிட்டு, அதற்கு நிகரான பரவசத்தை, பிரமிப்பை இந்த மலை தனக்கு தருவதாக சொன்னார் என்றால் பாருங்களேன்.

அவ்வளவு கடுமையான மலைப்பாதையிலும் நாங்கள் மறக்காமல் கூடை, கூடையாக கொண்டு சென்ற மலர்களால் ஆராதித்து, தேன் முதல் சந்தனம் வரையிலான பொருட்களால் அபிஷேகம் செய்தபோது, அகத்தியரின் முகத்தில் மின்னல் கீற்றாய் வெளிப்பட்ட புன்னகையை பார்க்க, அந்த மாமுனியை தரிசிக்க, இன்னொரு முறை மட்டுமல்ல, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பல முறை போய்பார்த்துவரவே ஆசை என்று சிலிர்ப்புடன் கூறி முடித்தார் சேர்மராஜ்.
நன்றி -

சனி, 5 அக்டோபர், 2013

நண்பர்களுக்கு நன்றி..மகாளயபட்ச அமாவாசை அன்னதானம்

காலை 6 மணிக்கெல்லாம் பவானி கூடுதுறை கோயிலில் ஒரு லட்சம் மக்கள் திரண்டிருந்தனர்..கோயிலுக்கு செல்லும் பெரிய பாதையெங்கும் சிறிதும் இடமில்லாமல் மக்கள் நெருக்கமாக வந்துக்கிட்டே இருந்தனர்...போன வருசத்தை விட இந்த வருடம் கூட்டம் இரு மடங்கு அதிகம் இருந்தது..மீடியாக்களுக்கு நன்றி...

200 க்கும் மேற்பட்ட பிராமணர்கள் தர்ப்பணம் செய்து கொடுத்துக்கொண்டே இருந்தனர்...நான்,என் அப்பாவை கூட்டிட்டு போயிருந்தேன்..அவர் எங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தார்...வீட்டில் தயார் செய்து கொண்டு போயிருந்த எலுமிச்சை சாதம் அன்னதானம் பாக்கெட் 100 இருந்தது..கோயிலுக்குள் சிலருக்கு கொடுத்தேன் ஒவ்வொருத்தரும் 50 பாக்கெட் சாதம் வெச்சிருந்தாங்க..சிலர் அதை வாங்கி பாதி விலைக்கும் விற்கவும் ஆரம்பிச்சிருந்தாங்க...கஷ்டப்பட்டு செஞ்சு கொண்டு போன சாதத்தை இவங்கக்கிட்ட கொடுத்து வீணாக்க கூடாது என நண்பர் மூலம் அப்படியே முதியோர் இல்லத்துக்கு கொடுத்து அனுப்பினேன்.

இரண்டு நாளைக்கு அந்த சாதத்தை வைத்து சாப்பிடலாம்..எலுமிச்சை,புளிசாதம் மகிமை அதுதான்..பிறகு மதியம் காதுகேளாத,வாய்பேசாத குழந்தைகள் பள்ளிக்கு அன்னதான உணவை தயார் செய்யும் வேலை..குடும்பத்துடன் செய்தோம்..சப்பாத்தி 300 இட்லி 400 ,குருமா என அந்த வேலை தொடங்கியது..மாலை நன்கொடை அனுப்பிய நண்பர்களுக்கு சிறப்பு அர்ச்சனை செய்ய மறுபடி கோயிலுக்கு பயணம் ....

அதை முடித்து இரவு வந்து தயார் ஆகியிருந்த உணவை ஆட்டோவில் கொண்டு சென்று,80க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பரிமாறிவிட்டும் வந்தேன்..காதும் கேட்காது வாயும் பேச முடியாது..ஆனா அந்த குழந்தைகளுக்கு அன்பும்,அறிவும் ஆண்டவன் நிறைய கொடுத்திருக்கான்..பக்கத்து இலை பையனுக்கு இன்னும் இரண்டு இட்லி வைங்க..அவனுக்கு இட்லின்னா பிடிக்கும்னு ஜாடையில் சொல்கிறான் ஒரு பையன்..சப்பாத்தி என் தோழிக்கு வேண்டாம் அவள் சாப்பிட மாட்டாள் என இன்னொரு பொண்ணு ஜாடையில் சொல்லுது..ஒவ்வொரு முறை உணவு வைக்கும்போது அந்த குழந்தைங்க கையெடுத்து கும்பிட்டு நன்றி சொல்றாங்க...அவங்க ஒருத்தருக்கொருத்தர் ஆதரவா இருக்காங்க..சின்னப்பசங்க மேல பெரிய பொண்ணுங்க எல்லாம் அம்மா மாதிரி அக்கறையா இருக்காங்க..ஒரு பொண்ணு சின்னப்பையனுக்கு அன்பா,அக்கறையாஇட்லி ஊட்டிய காட்சி நெகிழ்ச்சியா இருந்தது..இவங்களுக்கு உறவுன்னு சொல்லிக்க உறவா இருக்குறது அவங்களேதான்!! உணவுக்கு நன்கொடை அனுப்பிய நண்பர்களுக்கு மிக்க நன்றி..அவர்களுக்கு சங்கமேஸ்வரரின் அருள் கிடைக்க எப்போதும் பிரார்த்திக்கின்றேன்..!!