வியாழன், 30 ஜனவரி, 2014

தை அமாவாசை அன்னதானம் ,ஆடைதானம்

தை அமாவாசைக்கு அன்னதானம் செய்ய்ப்போவதாக சொல்லி இருந்தேன் இன்று காலை குமாரபாளையம் கண்பார்வையற்றோர் இல்லத்தில் 110 பேருக்கு அன்னதானம் நண்பர்கள் சார்பில் செய்யப்பட்டது...முதியோர் இல்லத்தில் அங்கிருந்த பெரியோர்களுக்கு வேஷ்டி,சேலை வழங்கப்பட்டது..



போன வாரம் பிஸ்கட் பழம் எல்லாம் கொடுக்க சென்றிருந்தபோது அந்த முதியோர் இல்லத்தில் ஒரு வயதான அம்மாவை பார்த்தேன்...அவர் புடவை மிகவும் கிழிந்து பழையதாக இருந்தது...அடுத்த முறை அன்னதானம் கொடுக்க வரும்போது,இவருக்கும் சேர்த்து எல்லோருக்கும் சேலை வேஷ்டி வாங்கி தரனும்னு ஆசைப்பட்டேன்.....இன்று அந்த அம்மவை தேடிப்போய் சேலை கொடுத்தபோது உணர்ச்சிப்பெருக்கில் என் காலில் விழுந்துவிட்டார் நான் அதிர்ச்சியாகி அம்மா உதவி செய்ய வந்த இடத்தில் என்னை பாவம் சுமக்க வைத்துவிடாதீர்கள்...என்னை உங்கள் மனதால் வாழ்த்தினாலே ரொம்ப சந்தோசப்படுவேன் என சொன்னேன்...சங்கடமான தருணம் அது..
அன்னதானம் மற்றும் ஆடை தானம் செய்வதற்கு நண்பர்கள் சிலர் பங்களிப்பு செய்தனர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி ...அவர்களும் அவர்கள் குடும்பத்தாரும் பூரண உடல்நலம் ,மனநலம் ,நிறை செல்வம் ,நீண்ட ஆயுள் பெற்று வாழ வேண்டும் ....காளியம்மன் கோயில் மற்றும் லட்சுமி நாராயணன் சுவாமி ஆலயத்தில் சிறப்பு அர்ச்சனை அவர்களுக்கும் அவர் தம் குடும்பத்தார் பெயரிலும் செய்யப்பட்டது .....அடுத்து மாசிமகம் அல்லது பங்குனி உத்திரம் செய்ய உத்தேசம்...முன்கூட்டி தகவல் நம் இணையதளத்தில் காணலாம்..சுபமஸ்து !!!

செவ்வாய், 28 ஜனவரி, 2014

ரதசப்தமி வழிபாடு; ஏழு ஜென்ம பாவம் விலக பரிகாரம்;

ரதசப்தமி வழிபாடு; ஏழு ஜென்ம பாவம் விலக பரிகாரம்;

தை 24 6.2.2014 வியாழன் காலையில் குளிக்கும்போது தலையின் மீது 3 எருக்கு இலை,சிறிது மஞ்சள் அரிசி,3 அருகம்புல்,பசுஞ்சாணம் இவைகலை வைத்து கிழக்கு முகமாக நின்று தண்ணீர் ஊற்ரி குளிக்கவும்.ஜாதி மத வித்தியாசம் இல்லாமல் அனைவரும் இதனை செய்யலாம்..நதியில் குளிப்பவர்கள் நதி செல்லும் திசையை நோக்கித்தான் தலை முழுக வேண்டும்..

இதன் பயனாக நாம் தெரிந்தும் தெரியாமலும் 7 ஜென்மங்கள் செய்த பாவங்கள் விலகும்...மாலையில் வீட்டு வாசலில் ரதம் கோலமிட்டு இரண்டு தீபம் ஏற்றி வழிபடவேண்டும்தீபம் கிழக்கு முகமே இருக்க வேண்டும்.....
சுபமஸ்து!


 தை அமாவாசை வரும் வியாழக்கிழமை வருகிறது...மீனம்,விருச்சிகம்,துலாம்,கன்னி ராசியினருக்கு அஷ்டம சனி ஏழரை சனி நடப்பதால் உங்கள் முன்னோருக்கு அன்று பிதுர் தர்ப்பணம் செய்யுங்கள் அருகில் இருக்கும் கடல்,ஆறு பக்கத்தில் இருக்கும் சிவன் கோயிலில் இதை செய்யலாம்..இதை செய்வதால் முன்னோர் ஆசி கிடைக்கும்..உங்களது பல கஷ்டங்களுக்கு தீர்வு கிடைக்கும் அன்று காலையில் உண்ணாமல் விரதம் இருந்து மதியம் காக்கைக்கு சாதம் வைத்தபின் உண்ணவும்...அன்று முழுவதும் அசைவம் கூடாது..

பிற ராசிக்காரர்கள் யார் யார் இதுவரை முன்னோர்களுக்கு திதியே கொடுத்ததில்லையோ அவர்கள் முதலில் அதை செய்யுங்கள்..திதி கொடுப்பதால் உங்கள் முன்னோர்களுக்கு ஆத்ம சாந்தி கிடைக்கும்...உங்களுக்கும் அவர்களது ஆசி கிடைக்கும்...

அன்று தான தர்மங்கள் செய்வது மிக உயர்ந்த பலன்களை தரும்...நாம் நினைத்ததை நடத்தி வைக்கும் தேவதைகளின் ஆசி கிடைக்கும்....உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் என்பதால் அன்று சில நண்பர்களின் கூட்டு முயற்சியுடன் கண்பார்வையற்றோர் மற்றும் முதியோர்களுக்கு அன்னதானம் செய்ய இருக்கிறோம் அதில் பங்களிப்போரின் குடும்பத்தார் பெயரில் லட்சுமி நாராயணன் கோயிலிலும் தம்பிக்கலையான் கோயிலிலும் அர்ச்சனை அபிசேகம் செய்ய இருக்கிறோம் அவர்கள் குடும்பத்தார் ஆரோக்கியம்,ஆயுள் பலம் ,செல்வவளம் பெற்று வாழ பிரார்த்திக்கின்றோம்..அதில் கலந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள் இணையலாம்...

 உங்கள் பங்களிப்பிற்கு நன்றி
k.sathishkumar
20010801181
State bank of India ,bhavani
Ifsc;sbin0000971

திங்கள், 27 ஜனவரி, 2014

ஜோதிடம்;திருமண பொருத்தம்,செவ்வாய் தோசம்,நாகதோசம்

திருமண பொருத்தம்;

திருமணம் பொருத்தம் பார்க்கும்போது அடிப்படையான விதிகள் என்னவென்றால்,பெண்ணின் நட்சத்திரம் பையனின் நட்சத்திரத்துக்கு ஒத்துப்போகனும்...ராசிப்பொருத்தம்,லக்னபொருத்தம் வரணும்...நட்சத்திர அடிப்படையில் யோனிப்பொருத்தம்,ரஜ்ஜுபொருத்தம்,கணப்பொஇருத்தம்,மகேந்திரபொருத்தம் போன்ற முக்கிய பொருத்தங்கள் அமையனும்..அதன்பின் ராசிக்கட்டத்தில் பெண்ணின் ஜாதகத்தில் 7ஆம் அதிபதி கெடக்கூடாது சுக்கிரன்,குரு பகை கிரகங்களுடன் கெட்டிருக்க கூடாது..(பையனுக்கு அப்படி இருந்தால் சேர்க்கலாம்..)

பெண்களுக்கு,7,8 ஆம் பாவங்களில் பாவ கிரகங்கள் இருக்க கூடாது..இருந்தால்..? கணவன் ஆயுள் பதிக்கும் என ஜோதிட விதி சொல்கிறது...எதார்த்தமான உண்மை பார்த்தால் 8ல் பாவ கிரகம் இருக்கும் பெண்ணுக்கு மொசமான குனமுடையவனோ அல்லது மோசமான கீழ்த்தரமான நடத்தை உடையவனோ கனவனாக அமைந்துவிடுகிறான் என்பதுதான் பெரும்பாலும் நடக்கிறது....குடிப்பதில் அதீத ஆர்வம் உடையவன் பெண்கள் விசயத்தில் மோசமாக நடந்துகொள்பவனும் இதில் அடங்குவான்...பாவ கிரகங்கள் எது..? சூரியன்,செவ்வாய்,சனி,ராகு,கேது,தேய்பிறை சந்திரன்,போன்றவை..இது 7ல் இருந்தாலும் எட்டில் இருந்தாலும் இந்த பாதிப்புகள் உண்டு..நல்ல கணவன் அமைவானா என கேட்டால் 7,8 சுத்தமாக இருந்தாலோ சுபர் இருந்தாலோ ஆம் நல்ல குனமுள்ள,மனைவியை கொண்டாடக்கூடிய,பாசமும் அன்பும் நிறைந்த,கணவன் அமைவான் என சொல்லலாம்..

பாவ கிரகங்கள் கணவன் ஸ்தானத்தில் இருந்து திருமணம் ஆகி கணவனை பிடிக்காமல் டைவர்ஸ் போகிறவர்கள் தான் அதிகம்..

இதற்கு என்ன பரிகாரம்..? முக்கூடல் ஸ்தலமான பவானி கூடுதுறையில் ,பரிகார தோசம் நிவர்த்தி செய்து அதில் 48 தினங்களில் நினைத்த காரியத்தை கைகூடித் தரக்கூடிய ராசியான அய்யர் மூலம் மாங்கல்ய தோசம்,களத்திர தோசம்,முன்னோர் வழி சாபம்,குலதெய்வ சங்கல்பம் செய்துகொள்ள வேண்டும் அதையும் உங்கள் ஜாதகப்படி யோகமான நாளில் செய்ய வேண்டும்...அதை முறைப்படி செய்தால் தொசம் விலகும்..அதில்லாமல்,100 முறை காளஹஸ்திபோனாலும்,திருமனஞ்சேரி போனாலும் தோசம் விலகாது..இது சம்பந்தமான உதவிக்கு எனக்கு மெயில் செய்யவும் sathishastro77@gmail.com போன் செய்யவும் 9443499003

திருமண பொருத்தம் பார்க்கும்போது,இருவருக்கும் திசா சந்திப்பு இல்லாமல் இருக்க வேண்டும் இரண்டு பேருக்கும் சனி திசை நடந்தாலும் ,கேது திசை நடந்தாலும் திருமணம் செய்தால் ஒரே மாதத்தில் பிரிந்துவிடுவார்கள்...எந்த திசையும் இருவருக்கும் ஒரே நேரத்தில் நடக்க கூடாது..

நாகதோசம் என்பது லக்னத்தில் ராகு இருந்தாலும் கேது இருந்தாலும் குடும்ப ஸ்தானம் எனப்படும் லக்னத்துக்கு இரண்டாம் இடத்தில் ராகு இருந்தாலும் கேது இருந்தாலும் நாகதோசம் எனப்படும்..இப்படி இருப்பவர்கள் முன்கோபம்,பிடிவாதம்,அலட்சியம், சந்தேக குணம் ,பெரியோர்களுக்கு கீழ்படியாத குனம் கொண்டவர்கள்...இவர்கலை கண்ட்ரோல் செய்ய இன்னொரு நாகதோசம் கொண்டவர்களால் தான் முடியும் அதனால்தான் நாகதொசம் இருப்பவர்களுக்கு அதே போல் இருப்பவர்கலையே சேர்க்க வேண்டும் இல்லையே முறையற்ற தொடர்புகள் பின்னாட்களில் உண்டாகி பிரிவை தரும்.......சண்டையும் ஓயாது...

செவ்வாய் தோசம் 8ல் இருப்பவர்களுக்கு இரண்டில் செவ்வாய் இருப்பவர்களை சேர்க்க வேண்டாம்..ஒருவர் பேசுவதே கொடூரமாக இருக்கும் இன்னொருவரும் அப்படிஇருந்தால் வீடு தாங்காது...குருவோடு அல்லது சுக்கிரனுடன் செவ்வாய் இருந்தால் அது பரிகார செவ்வாய்..அவர்களுக்கு செவ்வாய் தோசம் இல்லாதவர்களை கூட திருமணம் செய்து வைக்கலாம்..

தை அமாவாசை  புனிதமான நாள் அன்று  நல்ல நேரம் வாசகர்கள் சிலருடன் இணைந்து செய்ய இருக்கிறோம்,..ஃபேஸ்புக் நண்பர்கள் சிலரின் ஒத்துழைப்பாலும் 200 கண் பார்வையற்றொர்க்கு செய்ய இருக்கிறோம்..அதற்காக போன் மூலம் விசாரித்து வாழ்த்து சொன்ன நண்பர்களுக்கு நன்றி!! நானும் கலந்துகொள்கிறேன் என தானாக முன்வந்து பனம் அனுப்பியவர்களுக்கும் நன்றி...எவ்வளவு சிறிய தொகையும் எங்களுக்கு பெரிய தொகைதான் அதனால் தொகை இதற்கு நிர்ணயிக்கவில்லை...நாம் அனைவரும் இணைந்து செய்யும்போது அதற்கு வலிமை அதிகம் நிறைய பேருக்கு செய்ய முடியும்..அதுதான் முக்கியம்..உங்கள் சார்பில் நான் செய்கிறேன் அவ்வளவுதான் வித்தியாசம்...உங்கள் பெயரிலும் உங்கள் குடுபத்தார் பெயரிலும் லட்சுமி நாராயனன் கோயிலிலும் தம்பிக்கலையான் அகோயிலிலும் சிறப்பு பூஜைகளும் செய்கிறோம்...உறுதுனையாய் இருப்போருக்கு நன்றி தொடர்புகொள்ள 9443499003


சனி, 25 ஜனவரி, 2014

மீனம் ராசி,விருச்சிக ராசி ஏழரை சனியும் அஷ்டம சனியும்

மீனம் ராசியினருக்கு அஷ்டம சனி இன்னும் 10 மாதங்கள் வரை தொடர்கிறது...விருச்சிக ராசிக்கு ஏழரை சனி ஆரம்பித்து நடந்துக்கொண்டிருக்கிறது...விருச்சிக ராசியினர் சந்திரன் நீசம் பெற்றவர்கள் அதனால் இக்காலத்தில் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது அவசியம்...மீனம் ராசியினருக்கு பனம் கொடுக்கல் வாங்கலில்தான் அதிக கவனம் செலுத்த வெண்டும் ..அஷ்டம சனியில் அவர்கள் புகழுக்கும் செல்வாக்குக்கும்தான் பங்கம் வரும் எனவே கவனமாக இருக்கனும்...திசா புத்தி மோசமாக இருந்தால் அதாவது 6ஆம் அதிபதி எட்டாம் அதிபதி திசையொ புத்தியோ நடந்தால் பன இழப்பு,தொழில் நஷ்டம்,அறுவை சிகிச்சை போன்ற பிரச்சினைகள் உண்டாகும்.கடன் தொல்லை அதிகமாக காணப்படும்.

என்னிடம் ஜாதகம் மெயில் மூலம் அனுப்பி ஒருவர் பலன் கேட்டார் ...ஜாதகம் அனுப்பி ...சார் உங்க கட்டணத்தையும் அனுப்பிட்டேன் எனக்கு ஒரு கேள்விதான் ..என் கடன் பிரச்சினை எப்போ தீரும் ஒண்ணும் சமாளிக்க முடியல...டார்ச்சராக இருக்கு என வருந்தி இருந்தார்...ஜாதகத்தை பார்த்தால் மேச லக்னம்...ராகு திசையில் புதன் புத்தி நடந்தது இரண்டாம் அதிபதி 12 ஆம் இடத்தில் இருந்தார் அதுவும் நீசம்...பனம் எவ்வளவு வந்தாலும் கையில் தங்காது..இவருக்கு எவ்ளோ பணம் வந்தாலும் போதாதே என்றுதான் தோன்றியது காலப்புருஷ லக்னத்துக்கு தனாதிபதியான சுக்கிரனும் பகை வீட்டில் இருந்தார்..புதன் புத்தி இன்னும் 6 மாசம் இருந்தது..ராசியோ விருச்சிகம்...என்ன பதில் சொல்வது அடுத்து வருவதும் கேது புத்தி..இக்கட்டான நிலைதான்...குருப்பெயர்ச்சி மட்டுமே இப்போதைக்கு கைகொடுக்கும் என்றுதான் சொல்ல முடியும் குரு ராசிக்கு 9ல் வருவதால் கொஞ்சம் பிரச்சினைகள் தீரும் எனலாம்...ஆனா திசாபுத்தி மோசமாகத்தான் இருக்கு...கடன் இருக்கும்..ஆனா வருமானம் அதிகரிக்கும் முற்ரிலும் கடன் அடையா விட்டாலும் நெருக்கடியை தீர்த்துக்கொள்வார் என்றுதான் சொல்லி இருந்தேன்..

ஜாதகத்தில் ராசி நல்ல பலன் கொடுத்தாலும் திசாபுத்தியும் கைகொடுத்தால் முழுப்பலன் அனுபவிக்க முடியும்.அதை ஜாதகம் பார்த்தால்தான் கண்டறியமுடியும்...சிக்கலான நேரத்தில் ஜாதகம் பார்த்துதான் எதையும் முடிவெடுக்க முடியும்...10 ஆம் இடம் கெட்டு தனதிபதியும் கெட்ட ஒருவர் சொந்த தொழில் செய்கிறேன் என பத்து லட்சம் ரூபாய் ஏமாந்த கதை சோகமானது அவரும் போன வாரம் ஜாதகம் பார்க்க வந்தவர்தான்..சார் உங்க ஜாதகத்தில் சொந்த தொழில் செய்ய முடியாத அமைப்புதான் இருக்கு திசாபுத்தி சரி இல்லாத காரணத்தால் பணத்தை இழந்துட்டீங்க என்றேன்..பூர்வீக சொத்து மூலம் பனம் வந்தது சார்...ஒரு ஜோசியர் பேச்சை கேட்டு தொழில் ஆரம்பிச்சேன் இப்படி ஆகிடுச்சு என்றார்..10 ஆம் இடத்தில் ஒரு பாவியாவது இருக்கனும் என்பார்கள் ...தனாதிபதி 6,8,12ல் கெடாமல் இருந்தால் தொழில் செய்ய முடியும் இல்லைன்னா என்ன செஞ்சாலும் விருத்தி ஆகாது..இப்படி இருப்பவர்கள் கமிசன் ஏஜன்சி தொழில் செய்யலாம் முதலீடு போடாமல் ஓனராக கல்லாவில் உட்காராமல் சரக்கு நிறைய வாங்கி போட்டுக்கொண்டு எப்ப விற்கும் என காத்திருந்தால் எப்போதும் விற்காது.

எனவே மீனம் ராசியினர் விருச்சிக ராசியினர் இக்காலங்களில் தங்கள் ஜாதகத்தில் திசாபுத்தி எப்படி இருக்குன்னு ஜாதகத்தை பார்த்துவிட்டு முக்கிய முடிவுகளை எடுங்கள்..!!

தை அமாவாசை அன்னதானம்;

தை அமாவாசை அன்று ஆதரவற்றோர் இல்லங்களில் அன்னதானம் வழ்ங்குகிறோம்.. அதில் எங்கள் பங்கும் இருக்கட்டும் என பங்களிப்பாக சில நண்பர்கள் பனம் அனுப்பினர் அவர்களுக்கு எனது நன்றி..அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் தை அமாவாசை அன்று முக்கிய கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் அர்ச்சனை செய்து அவர்களது குடும்பத்துக்காக பிரார்த்தனை செய்யப்படும்..தொடர்பு கொள்ள ;sathishastro77@gmail.com

வெள்ளி, 24 ஜனவரி, 2014

குரு சுக்கிரன் வக்ரம் எந்த ராசியினருக்கு பாதிப்பு..? ராசிபலன்


சுக்கிரன்,குரு இருவரும் இப்போது வக்ரத்தில் இருக்கிறார்கள்...மேசம்,சிம்மம்,கடகம்,விருச்சிகம்,தனுசு,மீனம் ராசியினருக்கு குரு யோகம் தருவார்...ரிசபம்,கன்னி,துலாம்,மகரம்,கும்பம் ராசியினருக்கு சுக்கிரன் யோகம் தருவார்..

இப்படி முக்கியமான கிரகங்களும் பலமிழந்து இருப்பது எல்லோருக்கும் பாதிப்புதான்..குரு மாசி 22 ஆம் தேதி வக்ர நிவர்த்தி ஆகிறார் சுக்கிரன் தை 18 ஆம் நாள் வக்ர நிவர்த்தி ஆகிறார் அதாவது இன்னும் 7நாள் ..அதன் பின் ரிசபம்,கன்னி, துலாம்,மகரம்,கும்பம் ராசியினருக்கு பிரச்சினைகள் தீரும் உடல் ஆரோக்கியம் உண்டாகும்,..வருமானம் அதிகரிக்கும்..!!

 மாசி 22 ஆம் தேதி குரு வக்ரம் முடிகிறது...அதுவரை பங்கு சந்தையில் முதலீடு செய்வோ கவனமுடன் இருப்பது நல்லது...ஜூன் மாஹம் குரு உச்சம் ஆகும்போது பங்கு சந்தை யும் இதுவரை இல்லாத வளர்ச்சியை அடையும் வாய்ப்பிருக்கிறது..இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பான வளர்ச்சியை தொடும் காலமாக இருக்கும்!!

 ஒருமுறை இறந்த ஒருவரை பார்த்து உறவினர்கள் கதறி அழுத காட்சி வடலூர் வள்ளலாரை உருக்கியது..தன் சக்தியால் இறந்தவரை உயிர்பித்தார்...ஆனந்த அதிர்ச்சியில் மக்கள் திளைத்தனர்...அடுத்த நாள் என்ன ஆனது தெரியுமா..விசயம் காட்டு தீயாக பரவியதில் சுத்து பட்டு 18 பட்டியிலும் இறந்த பிணங்களை கொண்டு வந்து வள்ளலார் ஆசிரமத்தை சுத்தி வைத்துவிட்டனர் சாமி மந்திரம் சொல்லி பிழைக்க வெச்சிடுவாரு.என காத்திருந்த மக்களை பார்த்து வள்ளலார் வேதனைப்பட்டார்

சகல சக்திகளையும் என்னை போலவேபெறும் வழிகளை நான் சொல்லி இருந்தும்.,அதை ஏறெடுத்தும் பார்க்காமல் எல்லாமெ சுலபமாக நடக்கனும்னு நினைக்கும் மக்களை பரிதாபமாக பார்த்தார்..உடனே தன் அறைக்குள் சென்று கதவை தாழிட்டுக்கொண்டு காற்றில் கரைந்தார்...காற்றில் கரையும் கலை உட்பட சகல சித்துக்களையும் அறிந்தவர் வள்ளலார்..தங்கம் செய்யும் நுட்பமும் அறிந்திருந்தார்..புத்தருக்கு நிகரான ஒரு மகான் நம் தமிழகத்தில் சமீப காலத்தில் வாழ்ந்தது நமக்கு பெருமை.

 சென்னிமலை முருகன் கோயில் கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மிக உகந்த ஸ்தலம்..ரத்த அழுத்தம்,நீரிழிவு நோயாளிகள் இங்கு வழிபட்டால் விரைவில் நோய் குறையும் ..உங்களுக்கு தகுந்த மருத்துவ சிகிச்சை கிடைத்து நோயின் தாக்கம் குறையும்..காங்கேயம் சிவன்மலை முருகன் குருவின் அம்சம்.,..கல்வியில் முன்னேற்றம் அடைய இந்த முருகனை வழிபட்டால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்..வெளிநாடு வேலைக்கு செல்ல முயற்சிப்பவர்கள் திருச்செந்தூர் முருகனை தரிசிக்க விரைவில் வெளிநாடு செல்ல வாய்ப்பு உண்டாகும்!!

 லக்னத்தில் சூரியன்,சனி,செவ்வாய்,ராகு,கேது போன்ற அசுப கிரகங்கள் இருந்தால், பெரும்பாலும் சிடுமூஞ்சியாகவும் முன்கோபியாகவும், எப்போதும் டென்சன் உடையவர்களாகவும் இருக்கிறார்கள்..

லக்னத்தில் குரு,சுக்கிரன்,சந்திரன்,புதன் போன்ற சுப கிரகங்கள் இருந்தால் மலர்ந்த முகமாகவும், பால் வடியும் முகமாகவும், சிரித்து பேசி,அன்பை கொட்டி மயக்ககூடியவர்களாக இருக்கிறார்கள்..!!

 ஜாதகத்தில் லக்னத்துக்கு 5ஆம் ராசியில் சனி,ராகு,கேது,செவ்வாய்,சூரியன் போன்ற பாவ கிரகங்கள் இருப்பின் முன் ஜென்மம் பாவங்களை குறிக்கிறது இதனால் இப்பிறவியில் போராட்டமும்,காரியதடையும்,அடுக்கடுக்கான சோதனைகளும் உண்டாகிறது.. அவர்கள் இந்த நேரத்தில் தான. தர்மங்கள் செய்யலாம்..கர்மவினை தீரும்.வரும் தை அமவாசையில் கண் பார்வையற்றோர் இல்லத்துக்கு அன்னதானம் வழங்க இருக்கிறேன்..முடிந்தால் நீங்களும் இணைந்துகொள்ளலாம்..தொடர்பு கொள்ள;sathishastro77@gmail.com

வியாழன், 23 ஜனவரி, 2014

உங்கள் மகன்/ மகள் கல்வியில் நல்ல மதிப்பெண் பெற என்ன வழிபாடு? மந்திரம்? ஜோதிட பரிகாரம்

சென்னிமலை முருகன் கோயில் கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மிக உகந்த ஸ்தலம்..ரத்த அழுத்தம்,நீரிழிவு நோயாளிகள் இங்கு வழிபட்டால் விரைவில் நோய் குறையும் ..உங்களுக்கு தகுந்த மருத்துவ சிகிச்சை கிடைத்து நோயின் தாக்கம் குறையும்..காங்கேயம் சிவன்மலை முருகன் குருவின் அம்சம்.,..கல்வியில் முன்னேற்றம் அடைய இந்த முருகனை வழிபட்டால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்..வெளிநாடு வேலைக்கு செல்ல முயற்சிப்பவர்கள் திருச்செந்தூர் முருகனை தரிசிக்க விரைவில் வெளிநாடு செல்ல வாய்ப்பு உண்டாகும்!!

கல்வியில் நல்ல மதிப்பெண் பெற ஜாதகத்தில் லக்னத்துக்கு இரண்டாம் இடத்தில் சுபர் இருக்கனும் 4ல் சுபர் இருக்கனும் குரு,புதன் கெடாமல் பாவிகளுடன் சேராமல் இருக்கனும்...2,4ல் கேது இருக்க கூடாது புதனுடன் கேது சேரக்கூடாது.குரு திசையோ புதன் திசையோ படிக்கும் காலத்தில் நடந்தால் அக்குழந்தைகள் படிப்பில் நல்ல மதிப்பெண் பெறுகிறார்கள்.

அருகில் இருக்கும் முருகன் கோயிலில் வியாழன் தோறும் நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள்...அம்மா மட்டும் விழுந்து விழுந்து சாமி கும்பிட்டா போதாது மகன் மகளையும் அப்படி பழக்கனும்..அவனுக்கு சாமின்னாலே பிடிக்காது நீயே கும்பிடுன்னு எரிஞ்சு விழுவான் என சில பெற்றோர் பெருமையாக சொல்வார்கள்...இது தப்பு ..சின்ன வயதில் இருந்து நாம் பழக்கவில்லைஎன்று அர்த்தம்.அவன் இஷ்டத்துக்கு இன்று அவனை விடும்போது நாளை அவன் தன்னை யார் கேட்பா என துணிச்சலை கொடுத்துவிடும்.

முருகன் கோயில் அல்லது அரசு வேம்பு இணைந்து இருக்கும் வினாயகர் கோயிலில் உங்கள் குழந்தையை தினசரி காலையில் 3 முறை வலம் வந்து வழிபட்டு பின் படிக்க சொல்லுங்கள்..இது தேர்வு நேரத்தில் கூட செய்யலாம் இதனால் மனதில் தன்னம்பிக்கையும் அதிகரித்து மனதில் பயம் குறையும்...கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்..அரச மரமும் வேப்பமரமும் குருவின் அம்சம்..குரு ஞானம் எனும் கல்வியை கொடுக்கும் கிரகம்.கடவுள் பார்த்துப்பார் என்ற நம்பிக்கை வந்தால் உங்கள் மகன் பதட்டமில்லாமல் தேர்வு எழுதுவான்... நல்ல மதிப்பெண்ணும் பெறுவான்..


தை அமாவாசைக்கு அன்னதானம் வழங்க ,ஏற்பாடுகளை செய்ய ஆதரவற்ற பார்வையற்றோர் காப்பகம் சென்றேன் ...வயதான முதியவர்களும் நிறைய இருந்தனர் ...அங்கிருந்த ஒரு பாட்டிக்கு தின்பண்டம் கொடுத்தபோது உள்ளே ஒரு பாட்டி படுத்திருக்கும் அதுக்கும் கொடு தம்பி என தன் தோழி மீதான பாசத்தை காட்டிய போது நெகிழ்ச்சியாக இருந்தது ...!பாசக்காரங்க எல்லாம் தனிமையில் வாடுவது கொடுமை ..அங்கிருந்த 40 முதியோர்களுக்கும் தின்பண்டம் கொடுத்துவிட்டு பேசிவிட்டு வந்தேன் ...மனசு லேசாக இருந்தது.....தை அமாவாசை அன்னதானம் பங்களிக்க விரும்புவோர் மெயில் செய்யலாம் sathishastro77@gmail.com

புதன், 22 ஜனவரி, 2014

கடன் தீர்க்க,கடன் முற்றிலும் அடைபட, ஒரு ஜோதிட பரிகாரம் கடன் அடைக்க நல்ல நேரம்

வாங்கிய கடனை அடைக்க முடியாமல் துன்பப்படுபவர்கள் இன்று அதிகம் இருக்கிறார்கள்..ஜாதகத்தில் லக்னத்துக்கு 6 ஆம் அதிபதி எட்டாம் அதிபதி திசை நடந்தாலோ அல்லது இவர்களது நட்சத்திரத்தில் நின்று எந்த கிரகமாவது திசை நடந்தாலோ கடன் பிரச்சினை அதிகம் உண்டாகிறது 

வருமானம் இல்லை என்றால்தான் கடன் நெருக்கடி அதிகமாகிறது வருமானம் ஏன் இல்லை..? தொழில் மந்தம்...வருமானம் போத
வில்லை சம்பலம் குறைவாக இருக்கிறது என்பதுதான் காரணம்.ஜாதகத்தில் இரண்டாம் அதிபதி 6ஆம் ராசியில் இருந்தால் வட்டி கட்டவே வருமானம் சரியாக இருக்கும்.

உங்களுக்கு கடன் பிரச்சினை இருந்தால் ,செவ்வாய் கிழமை வட்டி கட்டுங்கள் அஷ்டமி நாளில்,கரி நாளிலும் வட்டி கட்டலாம்...சீக்கிரம் கடன் அடையும்.வெள்ளிக்கிழமை,வியாழக்கிழமை கட்ட வேண்டாம் நெருக்கடி உண்டாகும் கடனும் அதிகமாகும்.

இந்த மாதத்தில் எந்த நாளில் நேரத்தில் பணம் கொடுத்தால் கடன் சீக்கிரம் தீரும் என குறித்திருக்கிறேன்.கடனில் ஒரு பகுதியையோ, வட்டியையோ இந்த நேரத்தில் முடிந்தவரை கட்ட பாருங்கள்..

ஜனவரி 25 சனிக்கிழமை மாலை 3 முதல் 4 மணி வரை....வங்கி என்றால் காலையில் கட்டலாம் தவறில்லை.

ஜனவரி 28 செவ்வாய் கிழமை 2 மணி முதல் 3 மணிக்குள்

பிப்ரவரி 1 சனிக்கிழமை 12 மணி முதல் 1மணிக்குள்

பிப்ரவரி 3 திங்கள்கிழமை 12 முதல் 1.30க்குள்

பிப்ரவரி 8 சனிக்கிழமை 12 மணிமுதல் 1 மணிக்குள்

மேற்க்கண்ட நாளை கடன் அடைக்க பயன்படுத்துங்கள்..

சுவாதி நட்சத்திரம் வரும் நாளில் லட்சுமி நரசிம்மரை எலுமிச்சை மாலை அணிவித்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வனங்கினால் மனமுருக வேண்டினால் கடன் சீக்கிரம் தீரும்.

செவ்வாய், 21 ஜனவரி, 2014

முன் ஜென்மத்தில் பாவம் செய்தோர் யார்..?ஜாதகத்தில் கண்டறிவது எப்படி..? ஜோதிடம்

30.1.2014 அன்று தை அமாவாசை வருகிறது...மாதம் ஒருநாள் சிறப்பு வாய்ந்த நாளாக தமிழ்மாதத்தில் வரும்...சித்ரா பெள்ர்ணமி,வைகாசி விசாகம்,ஆவணிஅவிட்டம்,புரட்டாசி மகாளயபட்சம்,கார்த்திகை தீபம்,என தமிழ் மாதங்களில் ப்[எள்ர்ணமியை ஒட்டி வரும் நட்சத்திரங்கள் சிறப்பான புண்ணிய நாட்களாக நம் முன்னோர்கள் கொண்டடி வந்திருக்கின்றனர் தான தர்மங்கள் செய்து தம் பாவ கணக்குகளை தீர்த்து புண்ணியங்கள் சேர்த்துள்ளனர்...

ஜாதகத்தில் லக்னத்துக்கு 5ஆம் ராசியில் சனி,ராகு,கேது,செவ்வாய்,சூரியன் போன்ற பாவ கிரகங்கள் இருப்பின் முஞென்மம் பாவங்கலை குறிக்கிறது இதனால் இப்பிறவியில் போராட்டமும்,காரியதடையும்,அடுக்கடுக்கான சோதனைகளும் உண்டாகிறது அவர்கள் இந்த நேரத்தில் தான. தர்மங்கள் செய்யலாம்..கர்மவினை தீரும்.வரும் தை அமவாசையில் கண் பார்வையற்றோர் இல்லத்துக்கு அன்னதானம் வழங்க இருக்கிறேன்..முடிந்தால் நீங்களும் இணைந்துகொள்ளலாம்..

உங்கள் பங்களிப்பை அளிக்க விரும்புவோர் தொடர்புகொள்ள;sathishastro77@gmail.com
 mob;9443499003

பாவங்களை போக்கும் தை அமாவாசை அன்னதானம் 2014

தை அமாவாசை அன்னதானம்;

நண்பர்களே...வரும் தை அமாவாசை அன்று கண் பார்வையற்றோர் காப்பகம் ஒன்றிற்கு அன்னதானம் செய்ய நினைக்கிறேன்..நண்பர்கள் பங்களிக்க விரும்பினால் தொடர்பு கொள்ளவும் தை அமாவாசை மிக சக்தி வாய்ந்த நாள்..அன்று சித்தர்கள் வழிபாடு மிக சிறப்பு வாய்ந்தது...அன்றைய தானம் தர்மம் உங்கள் வாழ்வில் பெரும் திருப்புமுனையை உண்டாக்கும்..

சென்ற முறை நம் அன்னதானத்தில் கலந்து கொண்ட பலர் சார் நான் அனுப்பியது சின்ன தொகைதான்..ஆனால் அதன்பின் எனக்கு பெரிய லாபங்கள் கிடைத்தன..நான் எதிர்பார்த்த உதவி கிடைத்தது...எனக்கு நல்லது சில நடந்தன..என போனில் தெரிவித்தனர் ..அதுதான் நான் உங்களுக்காக செய்யும் உதவியில் பெரும் மகிழ்ச்சி...பல முஞென்ம வினைகள் அன்னதானம் செய்வதால் தீர்கின்றன..இதனால் உங்கள் வாழ்வில் பல முட்டுக்கட்டைகள் விலகி வழி பிறக்கிறது!! தானத்தில் சிறந்தது அன்னதானம் மட்டுமே...

அன்னதானம் அளிப்பதால்,உங்கள் கடும் நெருக்கடிகளை தீர்க்கும்....கூட்டுமுயற்சியுடன் செய்யும் போது பலருக்கும் ஒரே சமயத்தில் செய்ய இயலும் கூட்டு பிரார்த்தனைக்கு நிச்சயம் பலன் உண்டு...உங்கள் பாவங்களையும் தீர்க்கும்..அன்று கொங்கு மண்டலத்தில் இருக்கும் 108 சித்தர்களின் தலைவராகிய தம்பக்கலை எனும் சித்துவில் தலை சிறந்தவராகிய தம்பிக்கலை அயன் கோயில் சிற்ப்பு வழிபாடும் அர்ச்சனையும் செய்ய இருக்கிறேன் உங்கள் குடும்பத்தார் விபரங்களையும் அனுப்பலாம்..பூஜிக்கப்படும்..என்னுடன் இணைந்து அன்னதானம் செய்ய விரும்புபவர்கள், உங்கள் நன்கொடைகளை அனுப்பலாம்..அன்னதானத்துக்கு பயன்படுத்திக்கொள்ளப்படும்.30.1.2014 தேதி அன்று அன்னதானம் மற்றும் தம்பிக்கலையான் கோயிலில் உங்கள் குடும்பத்தார்க்கு அர்ச்சனை பூஜை செய்யப்படும்..தொடர்பு கொள்ள 9443499003 mail;sathishastro77@gmail.com 

k.sathishkumar
state bank of india
bhavani 
20010801181
ifsc;sbin0000971

திங்கள், 20 ஜனவரி, 2014

யாருக்கு குழந்தை பாக்யம் இருக்காது..? ஜோதிடம்

மனைவி அமைவது மட்டுமல்ல.. குழந்தை பிறப்பதும் இறைவன் கொடுத்த வரம்தான்...குழந்தை இல்லாமல் கோயில் கோயிலாக சுற்றுபவர் பலர் இருக்க ,ஆண் குழந்தை வேண்டும் என கோயில் கோயிலாக சுற்றுபவர்களும் உண்டு.
ஒரு ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் தான் விந்தணு எனும் உயிர் அணுக்களுக்கு அதிபதி அவர் கெடாமல் பகை கிரகங்களுடன் கூடாமல் இருப்பது அவசியம் பெண் ஜாதகத்தில் பாக்ய ஸ்தானத்தில் ராகு கேது செவ்வாய் சூரியன் போ
ன்ற கிரகங்களில் யாரேனும் இல்லாமல் இருக்க வேண்டும் ..ஆண் ஜாதகத்தில் 5ஆம் இடத்தில் கேது,செவ்வாய் ,சனி இவற்றில் ஒருவர் இல்லாமல் இருப்பது நல்லது.அப்படி இருப்பினும் 5ஆம் அதிபதி,குரு,சுக்கிரன் கெடாமல் இருப்பது அவசியம்...

கெள்சிக சிந்தாமணி எனும் பழைய ஜோதிட நூலில் ஒரு பாடல் குழந்தை பாக்யம் பற்றி கீழ்க்கண்டவாறு சொல்கிறது.

சத்தம தானத்தாதி சஷ்டாஷ்ட விரையஞ் சார்ந்த
மெத்த ஐந்திடத்திற் காரி மேவிடிலதுவும் தீது
சுத்தமாய் மண்முடிக்கில் சுதனிலை என்று வேத
வித்தகம் தனக்கு உண்மை விரும்பிகோசிகன்
                                                                       உரைத்தேன்

சூட்சும விதிப்படி ஒளி இழந்த கிரகம் ஐந்தில் இருந்தாலும் ஒளி இழந்த வீட்டில் ஐந்தாம் அதிபதி நின்றாலும் ஐந்தாம் வீட்டில் சனி நின்றாலும் ஏழாம் அதிபதி பலம் இழந்தாலும் தவமாய் தவமிருந்தாலும் புத்திர பேறு கிடைக்காது.

தை அமாவாசை அன்னதானம்;

நண்பர்களே...வரும் தை அமாவாசை அன்று கண் பார்வையற்றோர் காப்பகம் ஒன்றிற்கு அன்னதானம் செய்ய நினைக்கிறேன்..நண்பர்கள் பங்களிக்க விரும்பினால் தொடர்பு கொள்ளவும் தை அமாவாசை மிக சக்தி வாய்ந்த நாள்..அன்று சித்தர்கள் வழிபாடு மிக சிறப்பு வாய்ந்தது...அன்றைய தானம் தர்மம் உங்கள் வாழ்வில் பெரும் திருப்புமுனையை உண்டாக்கும்..உங்கள் கடும் நெருக்கடிகளை தீர்க்கும்.....உங்கள் பாவங்களை தீர்க்கும்..அன்று கொங்கு மண்டலத்தில் இருக்கும் 108 சித்தர்களின் தலைவராகிய தம்பக்கலை எனும் சித்துவில் தலை சிறந்தவராகிய தம்பிக்கலை அயன் கோயில் சிற்ப்பு வழிபாடும் அர்ச்சனையும் செய்ய இருக்கிறேன் உங்கள் குடும்பத்தார் விபரங்களையும் அனுப்பலாம்..பூஜிக்கப்படும்..அத்துடன் உங்கள் நன்கொடைகலையும் அனுப்பலாம்..அன்னதானத்துக்கு பயன்படுத்திக்கொள்ளப்படும்.30.1.2014 தேதி அன்று அன்னதானம் பூஜை செய்யப்படும்..தொடர்பு கொள்ள 9443499003 mail;sathishastro77@gmail.com 

k.sathishkumar
state bank of india
bhavani 
20010801181

காதலியை மனைவியாக பெறும் யோகம் யாருக்கு..? ஜோதிடம்

காதல் இல்லாமல் இன்றைய சினிமா இல்லை...புது புது ரகமாக காதலை சொல்லிக்கொடுக்கும் சினிமாக்கள் வெள்ளிதோறும் ரிலீஸ் ஆகின்றன...நாமும் காதலிக்காவிட்டால் நம்மை மனித இனத்தில் இருந்தே ஒதுக்கிவிடுவார்கள் என்ற நெருக்கடியை இன்றைய சினிமா இளம் தலைமுறை மத்தியில் உருவாக்கி விட்டது...சின்ன பொண்ணுங்க கூட அது என் ஆளு என பெருமையாக சொல்லும் அளவுக்கு இன்றைய நிலைமை இருக்கு.

பத்தாவது படிக்கும் பெண்கள் கூட,இன்று பெரும்பாலும் காதலில் விழ அஜித்,விஜய் சினிமாக்களும் முக்கிய காரணம்.கூட படிக்கிற தன் தோழிகள் காதலில் ஊறி திளைக்கும்போது தனக்கும் பாய்ஃப்ரெண்ட் வேண்டும் எனும் கெள்ரவத்துக்காக காதலிக்கும் பொண்ணுங்களும் இருக்காங்க..அப்போ பசங்க இல்லையான்னு கேட்காதீங்க..பசங்கதான் இந்த விசயத்துல மெஜாரிட்டியா இருக்காங்களே..பொண்ணுங்களும் இப்ப பசங்க அளவுக்கு வந்துக்கிட்டு இருக்காங்க பசங்கலை போல பொண்ணுங்களும் லவ் லெட்டெர் எல்லாம் கொடுத்து ப்ரப்போஸ் பண்ணும் நிலை சாதாரணமாகிவிட்டது!! 

காதல் எல்லாமே கண்ணாமூச்சி..அவன் பொழுதுபோக்குக்கு, ஒருஃபிகர பாக்கறான்.. அவ செலவு பண்ணதான் ஒரு லூச தேடுறா..என ஒரு படத்தின் பாட்டு இன்றைய காதலின் நிலையை தெளிவாக் சொல்கிறது...

சரி..இதையெல்லாம் மீறி...தெய்வீக காதல்! செய்து,காதலில் யார் வெற்றி பெறுகிறார்கள்..காதலியை யார் மனைவியாக அடைகிறார்கள்..? காதல் வாழ்க்கையை வெற்றிகரமாக யார் வாழ்கிறார்கள்..? ஜோதிடம் அதற்கு என்ன சொல்கிறது..?

ஒரு ஜோதிட பாடல் அக்காலத்திலேயே அழகாக விளக்கி இருக்கிறது இதுதான் இன்று வரைக்கும் ஜோதிடர்களுக்கு அடிப்படை பாடம்.

கூறும் ஏழாமிடத்தான் குணமிகு நவத்தில் தோன்றிட
சீறும் பஞ்சமித்தோன் இன்பமாய் இணைந்திட்டாலும்
ஏறும் பாக்கியத்தோன் இருவரையும் கண்ணூற்றாலும்
மாறும் புவியில் பிறந்தோன் காந்தருவம் புரிவன் தானே!

ஐந்தாம் அதிபதியும் ஏழாம் அதிபதியும் ஒன்பதாம் அதிபதியும் மூவரும் கூடி திரிகோண கேந்திரத்தில் தனலாபத்தில் இருந்து சுபர் பார்வை பெற்றால் அவர்களுக்கு ஏற்படும் காதல்,திருமணத்தில் முடிந்து நீடித்த மகிழ்ச்சியை தரும் என்பது உறுதி.மத்த காதல் எல்லாம் திருமணத்தில் முடிந்தாலும் நீடிக்காது பிரிவினையை உண்டாக்கும்...5,7,9 ஆம் அதிபதிகள் கூடினால் காதல்தான்..காதல் கல்யாணத்திலும் முடியும்தான் ஆனா 5,7,9 அதிபதிகள் 6,8,12ல் மறைந்திருந்தால் கல்யானம் ஆன சில நாட்களில் இருவரும் பிரிவர்...
ஒருவருக்கு வாழ்க்கையில் ஏற்படும் வெற்றிக்கும் ,மகிழ்ச்சிக்கும்,யோகத்திற்கும் காதல் திருமணத்துக்கும் குருபகவானும் ஒன்பதாம் அதிபதியும் அருள் புரிய வேண்டும்!!


தை அமாவாசை அன்னதானம்;

நண்பர்களே...வரும் தை அமாவாசை அன்று கண் பார்வையற்றோர் காப்பகம் ஒன்றிற்கு அன்னதானம் செய்ய நினைக்கிறேன்..நண்பர்கள் பங்களிக்க விரும்பினால் தொடர்பு கொள்ளவும் தை அமாவாசை மிக சக்தி வாய்ந்த நாள்..அன்று சித்தர்கள் வழிபாடு மிக சிறப்பு வாய்ந்தது...அன்றைய தானம் தர்மம் உங்கள் வாழ்வில் பெரும் திருப்புமுனையை உண்டாக்கும்..உங்கள் கடும் நெருக்கடிகளை தீர்க்கும்.....உங்கள் பாவங்களை தீர்க்கும்..அன்று கொங்கு மண்டலத்தில் இருக்கும் 108 சித்தர்களின் தலைவராகிய தம்பக்கலை எனும் சித்துவில் தலை சிறந்தவராகிய தம்பிக்கலை அயன் கோயில் சிற்ப்பு வழிபாடும் அர்ச்சனையும் செய்ய இருக்கிறேன் உங்கள் குடும்பத்தார் விபரங்களையும் அனுப்பலாம்..பூஜிக்கப்படும்..அத்துடன் உங்கள் நன்கொடைகலையும் அனுப்பலாம்..அன்னதானத்துக்கு பயன்படுத்திக்கொள்ளப்படும்.30.1.2014 தேதி அன்று அன்னதானம் பூஜை செய்யப்படும்..தொடர்பு கொள்ள 9443499003 mail;sathishastro77@gmail.com 

k.sathishkumar
state bank of india
bhavani 
20010801181

வெள்ளி, 10 ஜனவரி, 2014

2014 ஆண்டு எப்படி இருக்கும்..? எந்த ராசியினருக்கு யோகம்..? ராசிபலன்

புத்தாண்டு ராசிபலன் எழுதுவதை பலரும் படிக்கின்றனர் காரணம் பிறக்கும் புது ஆண்டில் நமக்கு சாதகமான பலன் இருக்குமா என்ர எதிர்பார்ப்புதான் இதனால் புது வருட் காலண்டரில், முதல் தேதியில் எல்லா ராசியினருக்கு யோகம்,வரவு ,இன்பம் என போடுவதை போல நாமும் எழுத முடிவதில்லை ..

.
அந்த வருடம் நடக்கப்போகும் குரு பெயர்ச்சி,சனிப்பெயர்ச்சி,ராகு கேது பெயர்ச்சியை அனுசரித்தே சொல்ல வேண்டியிருக்கிறது..அதிலும் பல ராசிபலன் புத்தகங்கள் எதற்கு வம்பு என எந்த ராசியினருக்கும் கடுமையாக எழுதாமல், மிதமாகவே பலன் எழுதுகின்றனர்..நானும் கடுமையாக எழுதனும் என சொல்லவில்லை...ராசிபலன் மட்டுமே இந்த வருடத்தை உங்களுக்கு சாதகமாகவோ, பாதகமாகவோ மாற்றும் என சொல்லவில்லை உங்க ஜாதகத்தில் லக்னாதிபதி வலிமையாக கெடாமல் இருந்தால் ,சந்திரன் கெடாமல் இருந்தால் நல்ல புத்தியுடன், தன்னம்பிக்கையுடன் எதிலும் வெற்றி அடைவீர்கள்..

 கோட்சாரம் பெரிதாக பாதிக்காது.. மேலும் திசா புத்தி இன்னும் சாதகமாக இருந்தால் நிச்சயம் அஷ்டம சனி ஏழரை சனி யோகமே செய்கிறது. ஏழரை சனியில் கல்யானம் செய்பவர்கள் வீடு கட்டுபவர்கள் நிறைய இருக்கின்றனர்..ஏழரை சனியில் தொழில் மன்ப்தம்,கடன்படுபவர்கள் மிகவும் சிலர்தான் அதுவும் ஜாதகத்தில் சனி கெட்டவர்களுக்குதான் அந்த பாதிப்பு அதிகம்.

ஒருவர் ஜாதகம் பார்க்க வந்திருந்தார் அவருக்கு சனி லக்னத்துக்கு 12ல் மறைந்திருந்தது திசாபுத்தி யோகமாக இருக்கும்போது எல்லாம் சிரப்பாக அமைந்துவிட்டது திசை மாறும்போது சனியால் பாதிப்புகள் அதிகம் உண்டானது காரனம் சனி வலிமை இல்லாததால் தொழில் பாதிப்பு,ஆள் கிடைக்காமை இந்த பிரச்சினையால் கையில் ஆர்டர் இருந்தும் தொழிலை நடத்த முடியவில்லை...வேலையாள் இல்லாமல் செய்ய முடியாத தொழில் அது...வேலையாளுக்கு சனி தான் காரகன் அவர் வலிமையில்லாவிட்டால் என்ன செய்ய முடியும்.? தொழிலை மூடும் நிலை வந்துவிட்டது..ஆட்களுக்க பஞ்சம் என கேட்பீர்கள்...இரண்டு நாள் வேலை செஞ்சா மூணாவது நாள் வ்பர மட்டேங்கிறாங்க..புதுசு புதுசா ஆட்களை தேட முடியவில்லை என அவர் அலுத்துக்கொள்கிறார் என்ன செய்வது..?இப்படி திசாபுத்தி பாதிப்பு ஏழரை சனியை விட பாதிக்கும்.

2014ல் மீனம் ராசியினருக்கு நவம்பர் மாதத்தில் அஷ்டம சனி முடிகிறது மேசம் ராசியினருக்கு அஷ்டம சனி அரம்பிக்கிறது ...கன்னி ராசியினருக்கு ஏழரை சனி முடிகிறது..தனுசு ராசியினருக்கு ஏழரை சனி ஆரம்பிக்கிறது..துலாம் ராசிக்கு ஜெம சனி முடிந்து விருச்சிக ரசிக்கு ஜென்ம சனி தொடங்குகிறது....

ரிசப ராசிக்கு குருபலம் முடிந்து ஜூன் மாதம் முதல் மிதுன ராசிக்கு குருபலம் ஆரம்பிக்கிறது...மீனம் ராசியினருக்கும்,மகரம் ராசியினருக்கும்,விருச்சிகம் ராசியினருக்கும் குருபலம் ஆரம்பிக்கிறது..இவர்களில் திருமணம் ஆகதவர்களுக்கு திருமணம் கைகூடும்....

மீனம் ராசியினருக்கு அஷ்டம சனியும் முடிந்து குருபலமும் தொடங்குவது யோகமன காலம்தானே...அவர்களுக்கு 2014,2015 இரண்டுமே சிறப்பான வருடங்களாகத்தான் இருக்கப்போகிறது திசாபுத்தியும் சாதகமாக இருந்தால் வெற்றிமேல் வெற்றிதான் இதை உறுதி செய்ய உங்கள் ஜாதகத்தை எனக்கு மெயில் செய்யுங்கள்..பலன் எழுதி அனுப்புகிறேன் (கட்டனம் உண்டு..விளம்பரம் காணவும்)

ஐம்பொன் மோதிரம்  அணிவதால் உண்டாகும் பலன் பற்றி ஏற்கனவே எழுதி இருக்கிறேன்..ஐம்பொன்னில் மோதிரம் அணிவதால் நல்ல அதிர்ஷ்டம்,செல்வாக்கு உண்டகும்.. கடன் அடைய,தொழில் அமைய,கணவன் மனைவி ஒற்றுமை உண்டாக இது நல்ல பலன் கொடுக்கிறது...உங்கள் ஜாதகப்படி கல் தேர்வு செய்து மோதிரம் செய்து பூஜித்து உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்...sathishastro77@gmail.com என்ற முகவரிக்கு உங்கள் பிறந்த தேதி நேரத்துடன் அனுப்பி வைக்கிறோம்..மோதிரம் செய்துகொள்ள விருப்பம் இருந்தால் மட்டும் அனுப்பவும்.. என் நேரத்தை வீணாக்க வேண்டாம்.


தை அமாவாசை அன்னதானம்;

நண்பர்களே...வரும் தை அமாவாசை அன்று கண் பார்வையற்றோர் காப்பகம் ஒன்றிற்கு அன்னதானம் செய்ய நினைக்கிறேன்..நண்பர்கள் பங்களிக்க விரும்பினால் தொடர்பு கொள்ளவும் தை அமாவாசை மிக சக்தி வாய்ந்த நாள்..அன்று சித்தர்கள் வழிபாடு மிக சிறப்பு வாய்ந்தது...அன்றைய தானம் தர்மம் உங்கள் வாழ்வில் பெரும் திருப்புமுனையை உண்டாக்கும்..உங்கள் கடும் நெருக்கடிகளை தீர்க்கும்.....உங்கள் பாவங்களை தீர்க்கும்..அன்று கொங்கு மண்டலத்தில் இருக்கும் 108 சித்தர்களின் தலைவராகிய தம்பக்கலை எனும் சித்துவில் தலை சிறந்தவராகிய தம்பிக்கலை அயன் கோயில் சிற்ப்பு வழிபாடும் அர்ச்சனையும் செய்ய இருக்கிறேன் உங்கள் குடும்பத்தார் விபரங்களையும் அனுப்பலாம்..பூஜிக்கப்படும்..அத்துடன் உங்கள் நன்கொடைகலையும் அனுப்பலாம்..அன்னதானத்துக்கு பயன்படுத்திக்கொள்ளப்படும்.30.1.2014 தேதி அன்று அன்னதானம் பூஜை செய்யப்படும்..தொடர்பு கொள்ள 9443499003 mail;sathishastro77@gmail.com 

k.sathishkumar
state bank of india
bhavani 
20010801181


வியாழன், 9 ஜனவரி, 2014

2014 ஆம் ஆண்டு எப்படி இருக்கும்..? ஜோதிட கணிப்பு

கர்மகாரகன் சனியும் சுபகிரகமான குருவும் உச்சமாக ஒரே நேரத்தில் இருக்கப்போகும் ஆண்டு 2014 தான்.இதற்கு முன் முப்பதாண்டுகளுக்கு முன்பு,.1984ல் சனி மட்டுமே உச்சமாக இருந்தது ....84ல் தான் இந்திரா காந்தி கொல்லப்பட்டார் நாடு முழுவதும் கடும் கலவரம் பல்லாயிரம் சீக்கியர் படுகொலை நடந்தது..ஆனால் சனி மட்டும் உச்சமாக இருந்ததால் அந்த விளைவுகள் உண்டானது ...சனி உச்சமாகும்போது ஒரு பெரிய விளைவை உண்டாக்குவார்..அந்த ஆண்டுதான் போபால் விஷ வாயு வால் 20,ஆயிரம் மக்கள் பலியாகினர்...2013ல் சனி உச்சமானதும்,நடந்த பெரும் கோர விபத்து என்றால் உத்ரகாண்ட் தான்...50,000 மக்களாவது பலியாகி இருப்பர்...1954 ஆம் ஆண்டுதான் சனியும் குருவும் உச்சமாகி இருந்தது..அந்த ஆண்டு எப்படி இருந்தது என பார்த்தால் 2014 ஓரளவு அனுமானிக்க முடியும்...

 காமராஜர் தமிழகத்தின் முதலமைச்சர் ஆன் ஆண்டு 1954...அவர் கர்மவீரர் என போற்றப்பட்டவர்..அதாவது கர்மகாரகன் எனப்படும் சனி உச்சம் ஆன ஆண்டில்.முதல்வர் ஆகியிருக்கிறார்...இவர்தான் பல பாலங்கள்,அணைகள்,பள்ளிக்கூடங்களை கட்டியவர்..பல அரசு நிறுனங்களை தமிழகத்துக்கு கொண்டு வந்தார்..அனல்மின் நிலையம்,துப்பாக்கி தொழிற்சாலை,பெல் எல்லாம் இவர் கொண்டு வந்தவை.அதன்பின் இப்போதுவரை இவர்போல யாரும் தமிழகத்தை கட்டமைத்தது இல்லை...அந்த 1954 இல் தான் சனியும் குருவும் உச்சம் ஆகி இருந்தது..அதாவது இக்கிரகங்கள் முழுமையான சக்தியுடன் இருக்கும் காலம்...அதன்பின் 2014 ல் தான் சனியும் குருவும் உச்சமாகப்போகிறது!!

 நவகிரகங்களில் நல்ல கிரகங்களின் ஹீரோ குருதான்..அவர் உச்சம் ஆகும்போது நல்லது பல மக்களுக்கு நடக்கனும் என்பது விதி..அப்போ மே மாதத்தில் தேர்தல் முடிந்து ,நல்ல பிரதமர் ஒருவர் நமக்கு அமைவார் அவர் இந்த உலகமே வியக்கும்படியான இந்திய மக்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தும்படியான நல்ல காரியங்களை செய்வார் என எதிர்பார்க்கிறேன்..லஞ்சம்,ஊழல்,காலதாமதம் இல்லாத அரசு நிர்வாகம்,வறுமை இல்லாத செல்வவளம் கொழிக்கும் இந்தியாவாக மாறும் என நம்புகிறேன்...!!!


ராசிப்படி குருப்பெயர்ச்சி பலன்கள் எழுதுவதுதான் வழக்கம் ஆனால் லக்னப்படியும் குரு பெயர்ச்சி எப்படி இருக்குன்னு பார்ப்பது அவசியம்..லக்னமும், ராசியும் ஒண்ணா இருப்பவர்களுக்கு அந்த சலுகையும் போச்சு..உதாரணமா ஜெயலலிதா அவர்களுக்கு சிம்ம ராசி...ராசிக்கு குரு 12ல் மறையப்போகிறார்..ஆனா லக்னத்துக்கு 2ல் உச்சம் அடைகிறார் இது சாதகம்தான்..கருணாநிதிக்கு ராசிக்கு 3ல் குரு மறைகிறார்...தீதிலாதொரு மூன்றிலே துரியோதனன் படை மாண்டதும்' என ஜோதிட பாடல் சொல்கிறது..துரியோதனின் அத்தனை ராஜதந்திரமும் பலிக்காமல் அவன் படை மாண்டுவிட்டதாம்...அவர் லக்னப்படி ஜென்மத்துக்கு வருகிறார் ஜென்ம ராமர் சீதையை வனத்திலே சிறைவைத்ததும் ஜென்ம குருவில்தான் என பழம்பாடல் சொல்கிறது.அதாவது ஜென்ம குரு சிறைபடுவது போல இருக்குமாம்...இருவரில் யாருக்கு திசாபுத்தி சாதகமா இருக்கோ அவங்களுக்கு இன்னும் பலம் உண்டாகும் இது பெருசா பாதிக்காது..திசாபுத்தி பாதகமா இருந்தா அவங்களுக்கு இன்னும் பலவீனம்தான்!!


தை அமாவாசை அன்னதானம்;

நண்பர்களே...வரும் தை அமாவாசை அன்று கண் பார்வையற்றோர் காப்பகம் ஒன்றிற்கு அன்னதானம் செய்ய நினைக்கிறேன்..நண்பர்கள் பங்களிக்க விரும்பினால் தொடர்பு கொள்ளவும் தை அமாவாசை மிக சக்தி வாய்ந்த நாள்..அன்று சித்தர்கள் வழிபாடு மிக சிறப்பு வாய்ந்தது...அன்றைய தானம் தர்மம் உங்கள் வாழ்வில் பெரும் திருப்புமுனையை உண்டாக்கும்..உங்கள் கடும் நெருக்கடிகளை தீர்க்கும்.....உங்கள் பாவங்களை தீர்க்கும்..அன்று கொங்கு மண்டலத்தில் இருக்கும் 108 சித்தர்களின் தலைவராகிய தம்பக்கலை எனும் சித்துவில் தலை சிறந்தவராகிய தம்பிக்கலை அயன் கோயில் சிற்ப்பு வழிபாடும் அர்ச்சனையும் செய்ய இருக்கிறேன் உங்கள் குடும்பத்தார் விபரங்களையும் அனுப்பலாம்..பூஜிக்கப்படும்..அத்துடன் உங்கள் நன்கொடைகலையும் அனுப்பலாம்..அன்னதானத்துக்கு பயன்படுத்திக்கொள்ளப்படும்.30.1.2014 தேதி அன்று அன்னதானம் பூஜை செய்யப்படும்..தொடர்பு கொள்ள 9443499003 mail;sathishastro77@gmail.com 

k.sathishkumar
state bank of india
bhavani 
20010801181

திங்கள், 6 ஜனவரி, 2014

குருபூஜை அன்னதானம்..ராசிபலன் பரிகாரம் ஜோதிடம்

காது கேளாத,வாய்பேச முடியாத குழந்தைகள் பள்ளியில் குருபூஜை பரிகாரமாக அன்னதானம் செய்யப்போவதாக சொல்லி இருந்தேன்.. அது இன்றைக்கு உங்களின் ஆதரவால் சிறப்பாக நடைபெற்றது.......



சாதம்,சாம்பார்,ரசம்,பொறியல்,வடை என அனைத்தையும் வீட்டிலியே சமைத்து எடுத்து சென்றிருந்தோம்..சுமார் 82 குழந்தைகள் ..மதியம் 2 மணிக்கு உணவு வழங்கப்பட்டது...குரு கிரகத்தின் பாதிப்பால் அவதியுறும் சில ராசியினருக்கு அன்னதானம் செய்வது நல்லது என சொல்லி இருந்தோம் அஷ்டம சனி ஏழரை சனியால் பாதிக்கப்பட்டுள்ள மீனம்,துலாம்,கன்னி,விருச்சிகம் ராசியினருக்கும் பரிகாரமாக இதை சொல்லி இருந்தோம் இதை செய்யமுடியாதவர்கள் எங்களுடன் கலந்துகொள்ளலாம் என சொல்லி இருந்தேன் அதன் பேரில் உதவி செய்த நண்பர்களுக்கு மிக்க நன்றி...அக்குழந்தைகள் உங்களுக்காக உங்கள் குடும்பத்துக்காக பிரார்த்தனை செய்தபின் உணவு உண்டது மனதை நெகிழ செய்தது...!! நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!!

வெள்ளி, 3 ஜனவரி, 2014

திருப்பதி பெருமாள் கோயில் பிரசாதமும்,தமிழக கோயில்கள் பிரசாதமும்..~~~

தினம் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை தரும் திருப்பதியில் வழங்கப்படும் அனைத்து பிரசாதங்களும் மூலவரான வெங்கடாஜலபதி சன்னதிக்கு எடுத்து சென்று அமுது செய்வித்து அதாவது படைக்கப்பட்டு அதன்பின்பே விநியோகம் செய்யப்படுகிறது..ஆனால் பிரபலமான தமிழக கோயில்களில் அப்படி செய்கிறார்களா..? இல்லை..காண்ட்ராக்ட் எடுத்தவர் எந்த சோற்றை மடித்து தருகிறாரோ அதுதான் பிரசாதம்..அநியாயம்!!!

திருநள்ளாறு செல்பவர்கள் சனிபகவானையே நினைத்து செல்ல வேண்டாம்...சிவன் கோயில் அது.தர்பாரண்யேஸ்வரர்,தியாகராஜர்,மரகதலிங்கம் என மூன்று சிவ ரூபங்கள் உள்ளன..மூன்றையும் தரிசனம் செய்துவிட்டு,ப்ராணாம்பிகை அம்பாளை தரிசனம் செய்தபின் சனீஸ்வரரை வழிபட வேண்டும்..நளனுக்கு சனிதோசம் நீங்க அருள் செய்தவர் தர்பாரண்யேஸ்வரர்...ஆகவே அந்த சிவனை வழிபட்டால்தான் சனி தோசம் நீங்கும்!!!!

 ரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தரணி ஆள்வார்களா..என கேட்கிறார்கள்...புனர்பூசத்தில் பிறந்தவர்கள் அனைவரும்,ராமரை போல ஏகபத்தினி விரதனாகவா இருக்கிறார்கள்..?

 மது நாட்டின் மூலிகை வளங்களை அழிக்கவும்,நம் மண்ணின் உயிர்ப்பு சக்தியை சீர்குலைக்கவும் ஏவப்பட்ட உயிர்மை ஆயுதம்தான் பார்த்தீனியம் செடி..இந்த செடியின் விசத்தன்மை காற்றில் பரவி நம்மை நோயுற செய்து நமது நோயை போக்கக்கூடிய மூலிகைகளையும்,விவசாயத்தையும் அழிக்கிறது.இதன் மூலம் நாம் நோயாளியாகி,தினம் மருத்துவமனையை நாட வேண்டிய நிலை...இது கிராமங்களில் மிக வேகமாக பரவி வருகிறது...நமது கிராமங்களை அழிக்க ஏவப்பட்ட அணுகுண்டை விட மோசமான பையோ வெப்பன்ஸ் அதாவது உயிர்மை ஆயுதமான இதனை அழிப்பது மிக அவசியம்.அவசரம்!!

 மத்தம்பூ,அரளிப்பூ,எருக்கம்பூ எல்லாம் விஷ செடிகள்...நம் நாட்டு விஷ செடிகள் நன்மை செய்பவை...காலரா,பிளேக்,அம்மை போன்ற காற்றில் பரவும் நோய்கள் வராமல் தடுக்க நம் முன்னோர்கள் கடவுள் சிலைகளுக்கு இவற்றை மாலைகளாக கட்டி அணிவித்தும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றியும் நோய்கிருமிகளை காற்றிலேயே அழித்தனர்..இதுதான் உண்மையான பகுத்தறிவு..கடவுள் சிலைகளை உடைப்பதும்,பார்ப்பானை அடித்து கொல்லு என்பதும் பகுத்தறிவு அல்ல..!

 னிகளில் உணவு கனி ,காற்றுக்கனி என நம் பெரியவர்கள் பிரித்து வைத்திருக்கிறார்கள்...மா,கொய்யா,வாழை,போன்றவை உனவுகனிகள் ஆகும்,நுணா,கொன்றை போன்றவை காற்றுக்கனிகள்..காற்றில் மூலம் பரவும் நோய்க்கிருமிகளை அழிக்க இந்த கனிகள் உதவும்..அந்தகாலத்தில் கோபுரமாடங்கள் போன்ற உய்ரமான இடங்களில் ஏறி நின்று முரசில் நுணா கனியை தடவி முரசை அடித்து அதன்மூலம் காற்றில் பரவும் பிளேக் போன்ற நோய்க்கிருமிகளை விரட்டினர்..

துபோலவே சின்னக்குழந்தைகளுக்கு நுணா காய்களை கொடுத்து பிள்ளையார் பந்து விளையாட்டு என சொல்லி ஒருவர் மீது ஒருவர் எறிந்து விளையாட செய்தனர் இதனாலும் கார்ரில் அது வீசப்படும்போது நோய்க்கிருமிகளை அழிக்கும் ..நுணா மரத்தால் செய்யப்பட்ட விவசாயகருவிகளை பயன்படுத்தினர்..உழவு மாடுகளுக்கு நுகத்தடி போன்றவை நுணா மரத்தால் செய்யப்பட்டன..இதனால் விவசாய வேலை செய்து கைகள் புன்ணானால் அந்த கைப்பிடியே மருந்தாக செயல்படும்..மாடுகளுக்கும் கழுத்தில் காயம்பட்டால் அந்த நுகத்தடியே மருந்தாக வேலை செய்யும்..குணமாக்கும்..நுணா கனியை சாப்பிடுவது கடும் விசம்...ஆனால் இப்போது நோனி எனும் கெமிக்கல் கலந்த மருந்த இதில் இருந்துதான் தயாரிக்கப்படுகிறது..நுணா பற்றி அறியாமல் பலரும் வாங்கி அருந்துகின்றனர்...இதனால் புதிய நோய்கள்தான் உண்டாகும்!!

 கொன்றை மலருக்கும்... தமிழ் வருடம் பிறக்கும் சித்திரை மாதத்துக்குமான தொடர்பு... பல ஆயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்டது. ஆம்... சித்திரை முதல் தேதியன்று கண் விழித்ததும் பார்க்க வேண்டிய மங்கலப் பொருட்களின் வரிசையில் பொன்னுக்கு அடுத்தபடியாக இடம்பிடித்திருப்பது கொன்றை மலரே! அந்தளவுக்குச் சிறப்பு பெற்றது கொன்றை.
 
 கொன்றை மலரைக் கொண்டு வழிபட்டால் பொன்னை வைத்து வணங்கிய பலன் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அதனால்தான் இதற்கு 'சொர்ண புஷ்பம்' என்கிற பெயரும் உண்டு!