வெள்ளி, 30 டிசம்பர், 2011

2012 ஆங்கில புத்தாண்டு ராசி பலன் ;மீனம்

2012 ஆங்கில புத்தாண்டு ராசி பலன் ;மீனம்


மீனம் பெண் ராசி.உபயராசி.இதன் அதிபதியான குரு சுபகிரக வரிசையிலும் ஆண் கிரக வரிசையிலும் இடம் பெறுகிறார்.மனித உடலில் பாதத்தை குறிக்கும் ராசி.இங்கு சுக்கிரன் உச்சமும்,புதன் நீசமும் பெறுகிறார்கள்.இது ஒரு குட்டை ராசி.திசைகளில் வடக்கை குறிக்கிறது.இது ஒரு நீர் ராசி.இந்த ராசிக்காரர்கள் பேசுவதை விட செய்து முடிப்பதில் வல்லவர்கள்.சொல்ல மாட்டேம் செய்வோம் என்ற கொள்கை உடையவர்கள்.முன்னோர்களின் நம்பிக்கை,ஆச்சாரங்களில் பற்றுள்ளவர்கள்.அதை கடைபிடிப்பவர்கள்.மரியாதை கொடுப்பார்கள்.மரியாதை எதிர்பார்ப்பவர்கள்.தன் மான சிங்கம்.குழந்தைகள் மீது அன்பு அதிகம்.நுணுக்கமான பார்வை உடையவர்கள்.இவர்கள் அனுமானம் பெரும்பாலும் சரியாகவே இருக்கும்.பணம் சம்பாதிப்பதில் கெட்டிக்காரர்கள்.பணம் வந்து கொண்டே இருக்கும்.தன் காரியத்தில் குறியாக இருப்பார்கள்.

அதிக செலவாளிகள்.நண்பர்களால் நிறைய விரயம் உண்டு.பேச்சுத்திறமையில் இவர்களை வெல்ல ஆள் இல்லை.வாக்குவாதம் பண்ணி ஜெயிக்க முடியாது.எல்லா விசயமும் அத்துபடி.மற்றவர்களை எளிதில் தன் பக்கம் திருப்பி விடுவார்கள்.அதே சமயம் மற்றவர்களிடம் அதிகம் ஏமாந்துவிடுவார்கள்.குறிப்பா அண்ணே நீதான் என்னை காப்பாத்தணும்.என இவரிடம் சரண் அடைந்தால் போதும் கசிந்து உருகிவிடுவார்.அண்டா,குண்டா அடகு வெச்சாவது பணம் கொடுதுருவார்.பலர் இவரை ஏமாற்றுவது இப்படித்தான்.கடக ராசிக்காரர் மாதிரி இவரும் பெரிய மனசுக்காரர்.

இவர் ரேஞ்சே வேற.இவர் யார் பேச்சையும் கேட்க மாட்டார்.யாரிடமும் அடிமையாகவும் இருக்க மாட்டார்.நான் சொல்லுவேன் ஆயிரம் பேருக்கு புத்திமதி..எனக்கு என்ன நீ அட்வைஸ் பண்றதுன்னு எகிறிடுவார்.கொஞ்சம் அதிகாரமா தான் பேசுவார்.இதை பொறுத்துக்கிட்டா குடும்பத்தாருக்கும்,நண்பர்களுக்கும் கஷ்டம் இல்ல.

அஷ்டம சனி வந்துருச்சே.சனிப் பெயர்ச்சி இப்படி சதி பண்ணிருச்சேன்னு மனசுக்குள்ள வேதனை படாதீங்க..குருவின் ராசிக்காரருக்கு சனி அதிகம் கஷ்டம் கொடுப்பதில்லை.இருப்பினும் பனம் தண்ணீர் மாதிரி விரயம் ஆகும்.கடன்படும் நேரம் இது.தொழிலில் பல மாற்றங்களை உண்டக்கும்.அது விரும்பதகாததா இருக்கும்.குரு உங்க ராசிக்கு சாதகமா இருப்பதால் பிரச்சினை இல்லை.பேச்சில் மட்டும் நிதானம் அவசியம்.ஏன்னா சனி வாக்கு ஸ்தானத்தை பார்ப்பது,உங்க பேச்சால் பகையை சம்பாதிச்சு கொடுத்துரும்..கடன் கொடுக்கவோ வாங்கவோ வேணாம்...முதலீடுகள் கவனமா செய்யுங்க..சுப செலவு ஏதாவது செய்யுங்க..இல்லைன்னா கெட்ட செலவா வந்துடும்.மருத்துவ சிகிச்சை செய்து கொள்ள நினைப்பவர்கள் தள்ளிப்போடாம உடனே செய்யலாம்..வீடு கட்ட,வாங்க செய்யலாம்..கல்யாணம் போன்ற சுப செலவுகள் செய்து பணத்தை விரயம் ஆக்கும் காலம்..இது.

திருச்செந்தூர் முருகனை தரிசனம் பண்ணிட்டு வாங்க..எல்லாம் முருகன் பார்த்துப்பார்!

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 2012 happy new year!!



புதன், 28 டிசம்பர், 2011

முகத்தை பார்த்து ஜோசியம் சொல்வது எப்படி..?

முகத்தை பார்த்து ஜோசியம் சொல்வது எப்படி..?


ஜோசியம் ஜாதகத்தை பார்த்து சொல்லலாம்..முகத்தை பார்த்து சொல்ல முடியுமா.சொல்ல முடியும்.இது சைக்காலஜி அல்ல.அஸ்ட்ராலஜி.ஜாதகத்தை பார்க்கும் போது லக்னம் என்ன சாரத்தில் இருக்கோ,அதை கவனிச்சும் லக்னத்தில் என்ன கிரகம் இருக்கோ அதை வெச்சும்,லக்னத்தை பார்க்கும் கிரகத்தை வெச்சும் அவரோட குணம் ,மணம்,முக ராசி எல்லாத்தையும் சொல்லிடலாம்..இது நல்ல அனுபவ பாடமா இருந்தா ஒருத்தர் முகத்தை பார்த்ததும் எள்ளும் கொள்ளும் வெடிக்கிற முகமா எப்பவும் சோகமா துக்கமா வாட்டமா இருந்தா செவ்வாய் சாரம்,சனி சாரம் கண்டுபிடிக்கலாம்..

லக்னம் தான் உயிர்.ஒரு ஜாதகனின் தாய் தந்தைக்கு சமமானவர்.அந்த ஜாதகனுக்கு நடக்கும் அனைத்து நல்லது கெட்டதுக்கும் இந்த இடத்துக்கு உடையவனே காரண கர்த்தா.லக்னத்தில் அமரும் கிரகத்தை பொறுத்து ஜாதகனின் குணாதிசயங்கள் அமையும் .உதாரணமாக ஆட்சி வீடில்லாத ராகுவோ,கேதுவோ லக்னத்தில் இருப்பதாக வைத்துக் கொள்வோம்.ஜாதகன் ஒரு முரண்பட்ட மனிதனாக காட்சி யளிப்பான்.செய்யக்கூடிய செயலில் இருந்து எடுக்ககூடிய முடிவுகள் வரை புரிந்து கொள்ள முடியாத புதிர்.சுருக்கமா சொன்னா இவரை நம்பக்கூடாது!படிக்கிறது ராமாயணம்,இடிக்கிறது பெருமாள் கோயில் ரகம்.எவ்வளவோ நல்ல காரியங்கள் செய்வார்.யாருக்கும் தெரியாது.சிறுசா ஒரு தப்பு பண்ணுவார்.அது தினமலர் ல வரும் அளவு பிரபலம் ஆகிடும்.

அதுவே சுபகிரகம் லக்னத்தில் நின்றால் ஆயுள் கூடும்.மலர்ந்த முகம்.முக ராசிக்காரர்.பண்பு,பழகும் விதம் எல்லாமே மென்மை தான்.இவரு ரொம்ப நல்ல மனுசன் என்ற பெயரை பெற்று தரும்,...ஒண்ணுமே செஞ்சிருக்க மாட்டாருங்கிறது வேற விசயம்.முன்ன பின்ன தெரியாதவர் இவரை பார்த்தாலும் அட..இவர பார்த்தா நல்ல மனுசனா தெரியறாரு என்பார்கள்..அந்த டயலாக் புறப்படும் இடம் முகத்தை பார்த்து மனதில் எழும் எண்ணம் தான்.அதற்கு காரணம் லக்னத்தில் இருக்கும்,பார்க்கும் கிரகம் தான்.

முகத்துல வெட்டுக்காயம் இருந்தா கிராமபகுதிகளில் திருடன் சொல்லுவாங்க..அது எப்படி../ தழும்பு,மச்சத்தோட பழைய சினிமாக்களில் ரவுடிகளை காண்பிப்பாங்க அது ஏன்..? ஏன்னா திருட்டு,சண்டை சம்பந்தமான கிரகம் செவ்வாய்.அது லக்னத்தில் இருந்தாலோ,லக்னத்தை பார்த்தாலோ,நட்சத்திர சாரம் வாங்கியிருந்தாலோ..முகத்தில் அடிபடுவான்.கீறல்,தழும்பு உண்டாகும்.திருடிட்டு ஓடுறப்ப அடிபடுறது சகஜம் அதனால கிராமத்துல அப்படி சொல்வாங்க...எப்பவும் யார்கிட்டியாவது சண்டை போட்டுகிட்டே இருக்குறவனுக்கும் லக்னத்தில் செவ்வாய் இருக்கலாம்..

ஆக,முகத்தை பார்த்ததும் அவர் எப்படிப்பட்ட குணம் உடையவர் என்பதை யூகம் செய்யமுடியும்.ராசிபலன் மாதிரி அதன் மூலம் அவர் குணாதிசயத்தையும் கண்டறிய முடியும்!

சனிப் பெயர்ச்சி பலன்களில் தனுசு ராசிக்கு எழுதிய பதிவு மட்டும் 55,000 ஹிட்ஸ் தாண்டியிருக்கிறது!! அனைவருக்கும் மிக்க நன்றி!

ஞாயிறு, 25 டிசம்பர், 2011

2012 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் -கும்பம்

2012 புத்தாண்டு பலன்கள் -கும்பம்


கும்பம்..ராசியின் அதிபதி சனி .ஆண் ராசி.ஸ்திர ராசி.மனித உடலில் கணுக்காலை குறிக்கும்.இது குட்டை ராசி.இதன் நிறம் பழுப்பு.பகலில் அதிக வலிமை உள்ள ராசி.இந்த ராசியில் எந்த கிரகமும் உச்சமோ நீசமோ அடைவதில்லை.கோவில் கோபுரம் போலவும் ,கும்ப கலசம் போன்றும் தோற்றம் உடையது.

 இவர்கள் கடுமையான உழைப்பாளிகள்.நல்ல அறிவாற்றல் உடையவர்கள்.ஜாதகம் வலு இல்லாமல் இருந்தால் தாழ்வு மனப்பான்மை அதிகம் உண்டு.சனிக்குண்டான தடங்கல்களும் அதிகம் உண்டு.குமப்த்துக்கு பூரண கும்பம் படம் போடப்பட்டிருக்கும்.இவர்கள் மங்களகரமானவர்கள் என்பதாலோ என்னவோ பல கோவில் விசேஷங்களிலும் இவர்கள் பங்களிப்பு அதிகம் இருக்கும்.உற்சாகம் வந்தால் எதையும் மின்னல் வேகத்தில் செய்து முடிப்பார்கள்.பயன்கருதா தொண்டுள்ளம் கொண்டவர்கள்.

சனி இதுவரை அஷ்டம சனியாக இரண்டரை வருடம் பல கஷ்டங்களை கொடுத்து வந்தது.இனி துன்பமில்லை.தோல்வி இல்லை.தடங்கலும் இல்லை.மர்த்துவ செலவுகள் நீங்கும்.புதிய உற்சாகத்தை தொழிலில் அடைவீர்கள்.வருமானம் கூடும்.தொழில் சுறுசுறுப்படையும்.

இன்று முதல் குரு வக்ரமும் நிவர்த்தியாவதால் இனி பணப்பிரச்சினைகள் அனைத்தும் தீரும்.உறவினர் பகை அகலும்.குழந்தைகளால் உண்டான கவலைகள் தீரும்.பெண்களுக்கு உற்சாகம் பிறக்கும்.புதிய சொத்து சேர்க்கைகள்,தொழிலில் புதிய நல்ல மாற்றம் உண்டாகும்.

குரு வக்ர நிவர்த்தியானால் ராசிக்கு மூன்றில் தான் பலனை கொடுப்பார் என்றாலும் உங்கள் ராசிக்கு தனக்காரகன் வக்ர நிவர்த்தியாவது நல்லதுதான்.

2012 சனி பகவான் அருளால் சிறப்பான பலன்களை அடைவீர்கள்.

 உங்கள் ஜாதகத்தில் கிரகங்களின் வலிமை,தற்போது நடக்கும் திசை இவை பொறுத்தும் பலன்கள் மாறுபடும்


வியாழன், 22 டிசம்பர், 2011

திருமண பொருத்தம்;வசியமான கணவன் - மனைவி

திருமண பொருத்தம்;வசியமான கணவன் - மனைவி



’’எங்கிட்ட இல்லாதது அப்படியென்ன அவகிட்ட இருக்கு..?’’

‘’கிளி மாதிரி பொண்டாட்டி வீட்ல இருந்தாலும் குரங்கு மாதிரி ஒரு வைப்பாட்டி வெச்சிருப்பான்’’

இதெல்லாம் அடிக்கடி நம் சமூகத்தில் புழங்கும் டயலாக்.

இதை பேசுபவர்களுக்கு இன்னும் ரெண்டு டயலாக் நினைவு படுத்துகிறேன்.

வீட்டு சாப்பாடு ருசியா இருந்தா அவன் எதுக்கு ஓட்டல் சாப்பாடு சாப்பிடுறான்..?

தலையணை மந்திரம்,முந்தானையில புருசனை முடிஞ்சி வெச்சிக்க..இப்படி கிராமபகுதிகளில் சொல்வார்கள்.

இதுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்..? இருக்குங்க ஒரு பொண்ணு செக்க செவேல்னு அழகா இருந்தா மட்டும் கணவனுக்கு பிடிச்சிடாது.திகட்ட திகட்ட தாம்பத்ய சந்தோசமும் கொடுக்க தெரியணும்.நல்லா ருசியா சமைக்க தெரிஞ்ச பொண்ணுக்கு அந்த விசயமும் அத்துபடியா தெரியும்.

நல்லா கைநிறைய சம்பாதிக்க தெரிஞ்சா மட்டும் நல்ல கணவன் ஆகிட முடியாது.மனைவியை காதலிக்கவும் தெரியணும்.அப்பதான் அது நல்லதொரு குடும்பம்.அங்குதான் லட்சுமியும் தாண்டவமாடுவாள்.அய்ய இதுக்கு ஏன் லட்சுமி சாமியெல்லாம் இழுக்குறீங்க..அட..ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சிக்கிட்டு காதலிக்கும் கணவன் மனைவிக்கிட்ட லட்சுமி தங்காம வேற எங்க தங்கப் போறா..? டெய்லி...லட்சுமி ஸ்தோத்திரம் லட்சம் தடவை சொல்ற அய்யர் கிட்டியா.அட போங்க சார்.

நல்ல அன்பும்,தாம்பத்யமும் பின்னி பிணையும்போது அழகான அறிவான குழந்தைகளும் அந்த பெண் பெறுவாள்.வீடு இன்னும் பல மடங்கு சுபிக்சம் அடையும்.

கணவனுக்கு மனைவியோ மனைவிக்கு கணவனோ போரடிக்க கூடாது.ஆசை 60 நாள் மோகம் 30 நாள்னு முடியக்கூடாது.அதுக்கு மேலயும் இருவரும் ஒரு வீட்டில்,குடும்பம் நடத்தணும்னா சாதரணமா..? சமூகத்துக்காக போலியாக வாழ முடியுமா..? அதுவும் எத்தனை நாளைக்கு..?

ஜாதகத்தில் பொருத்தம் பார்க்கும்போது நட்சத்திரப் பொருத்தம் மட்டும் பார்த்து திருமணம் முடித்தால் ஜாதக கட்டத்தில் இருவருக்கும் கிரக பலம் இல்லாமல் இருந்தால் 9 பொருத்தம் இருந்தாலும் அந்த தம்பதிகள் பிரிவார்கள்.

என்ன சார் சொல்றிங்க..? 9 பொருத்தம் பார்த்து கல்யாணம் பண்ணினாலும் பிரிவாங்களா..?

ஆமாய்யா.நீ பாட்டுக்கு திருமண பொருத்தம் புத்தகம் பார்த்து 9 பொருத்தம் இருக்கு தாராளமா பண்ணலாம்னு சொல்ற ஜோசியர் கிட்ட ஜாதகம் பார்த்து கல்யாணம் பண்ணுவ.பொண்ணு ஜாதகத்துல ஏடாகூடமா கிரகங்கள் இருந்தாலும் பையன் ஜாதகத்துல விவகாரமா கிரகங்கள் இருந்தாலும் ரெண்டு பேரும் முறைச்சிகிட்டு பிரிஞ்சிடுவாங்க.அப்புறம் ஜோசியக்காரன் பார்த்துதான் பண்ணினோம் இப்படி ஆயிடுச்சி.எல்லாம் ஏமாத்து வேலைன்னு உலகத்துல இருக்குற எல்லா ஜோசியக்காரனையும் கடைசி வரை பழிச்சிக்கிட்டு திரிவீங்களா..?

நான் ஒவ்வொரு ஜாதகத்துலியும் கிரகங்கள் அமைப்பு என்னென்ன செய்யும்னு வரிசையா பல பதிவுகளில் எழுதி வருகிறேன்.அந்த அமைப்புகள் பற்றி யோசிச்சு பாருங்க.கிரக அமைப்புகள் ஒரு ஜாதகத்தில் எப்படி இருந்தா என்னென்ன பலன் தருமோ அதை அப்படியே செய்யும்.நட்சத்திர பொருத்தம் என்பது திருமண பொருத்தத்தில் ஒரு பகுதியாகும்.

ஆண் பெண் இருவரது லக்னத்தில் இருந்து பொருத்தம் பார்க்கணும்

ஆண் பெண் இருவரது ராசியில் இருந்து பார்க்கணும்

ஆண் பெண் இருவரது சுக்ரனில் இருந்து பார்க்கணும்

ஆண் பெண் இருவரது செவ்வாயிலிருந்து பார்க்கணும்

ஆண் பெண் இருவரது 7ஆம் பாவத்திலிருந்து பொருத்தம் பார்க்கணும்.

அதன் பின் தான் ஆண் பெண் இருவரது நட்சத்திரத்தில் இருந்து பார்க்கணும்.

இவ்வாறு பொருத்தத்தில் பல கணக்குகள் உள்ளன...அடுத்த பகுதியில் இன்னும் எழுதுகிறேன்..

புதன், 21 டிசம்பர், 2011

சனிப் பெயர்ச்சி பலன்கள் 2011-2014 ரிசபம்

சனிப் பெயர்ச்சி பலன்கள் 2011-2014 ரிசபம்

(கிருத்திகை 2,3,4 ரோகிணி,மிருகசிரீடம்1,2)



12 ராசிகளுக்கும் சுருக்கமான பலன்கள் அறிய இங்கு க்ளிக் செய்யவும்

அழகான, அமைதியான தோற்றம்,குறும்பான கண்கள்,சிரித்து சிரித்து பேசி காரியம் சாதிக்கும் திறமையானவர் நீங்கள்.அன்பு,பாசம்,நட்பு என மற்றவர்களுக்காக மனம் உருகுவீர்கள்...இரக்க சுபாவம் அதிகம்.பணம் சம்பாதிப்பதில் கில்லாடி.மத்தவங்க 10 ரூபாயில முடிக்கிற விசயத்தை நீங்க 100 ரூபாய் வாங்கிட்டு முடிச்சி தருவீங்க.எதை செய்தாலும் பெருசா செய்யணும் நு நினைக்கிறவர்.அதாவது ஆசைப்பட்டா பெருசா ஆசைப்படு எனும் கொள்கை உடையவர்.அதில் வெற்றியும் அடைவீர்கள்.பணம் சம்பாதிப்பதில் சமர்த்தர்கள்.அதிக ஆர்வம் உடையவர்கள்.

அழகான மனைவி,நல்ல வீடு அமையும்.அறிவான குழந்தைகள்,எப்போதும் ஏதேனும் ஒரு வழியில் வந்துகொண்டே இருக்கும் ...எதிரிகள் உங்களுக்கு கிடையாது.அப்படியிருந்தாலும் அவர்களை கண்டுகொள்ள மாட்டீர்கள்.குடும்பத்தார் மீது முக்கியமாக உங்கள் மகள் மீதும்,உங்கள் தாய் மீதும் உயிரையே வைத்து இருப்பீர்கள்.அதுதான் ரிசபம் ராசியின் முக்கிய குணம்.உடனே கருணாநிதியும் கனிமொழியும் நினைவுக்கு வராங்களா.நான் அதை நினைச்சு சொல்லலை.நிறைய பேர் இந்த ராசிக்காரங்க..என் மக தான் என் உசுரு என சொல்லியிருக்கிறார்கள்.

உங்களுக்கு ஜாதகத்தில் நம்பிக்கை பெரும்பாலும் இருக்காது.பெரும்பாலும் கிண்டல்,கேலி,ஜாலி என இருப்பவர்.அதனால் ரொம்ப சீரியசா எடுத்துக்க மாட்டீங்க.ஆனா கடவுள் பக்தி உண்டு.33 வயதுக்கு மேல் வேகமான முன்னேற்றம் இந்த ராசிக்காரர்களுக்கு உண்டு.பெண் வசியம் அதிகம் உண்டு.சிரித்த முகமும்,குழந்தைத்தனமா பழகும் குணமும் அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.தொழிலை பொறுத்தவரைக்கும் கடுமையா உழைப்பீங்க..சீக்கிரமே சம்பாதிக்கணும்னு துடிப்பீங்க..எதையும் சீக்கிரம் முடிக்கிற வேகம் இருக்கும்.

சனிப்பெயர்ச்சியை பொறுத்தவரை உங்க ராசிக்கு சனி ஆறாம் இடத்துக்கு வருகிறார்.பொதுவாகவே சுக்கிரன் ராசிகளுக்கு சனி துன்பம் கொடுப்பதில்லை.உங்க ராசிக்கு சனி நல்லவர்தான் எப்போதும்.இப்போ உங்க ராசிக்கு ஆறாமிடம் வேறு வருகிரார்.இந்த ஸ்தானத்தில்தான் சனி பெரிய நன்மைகளை செய்யப்போகிறார்..? அப்படியென்ன செய்வார்.? சொந்த தொழில் செய்து வந்தால் பெரிய பெரிய ஆர்டர்கள் கிடைக்கும்.வராத பணம் எல்லாம் வசூல் ஆகும்.முன்பு இருந்ததை விட தொழில் மேலும்பல மடங்கு சுறுசுறுப்படையும்.

குடும்பத்தில் உறவினர்களுடன் இருந்துவந்த பகையெல்லாம் தீரும்.அம்மா,அப்பா,சகோதர,சகோதரிகள் உங்க அன்பை,பாசத்தை புரிந்து கொள்வார்கள்.

கடன் பிரச்சினை இப்போதே ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கும்.கடன் தொல்லைகள் இனி கொஞ்சம் கொஞ்சமாக தீரும்.கொடுத்த கடனும் திரும்பி வரும்.நெடுநாள் நினைத்திருந்த பல பெரிய காரியங்களையும் இக்காலங்களில் முடிப்பீர்கள்.

சனி ராசியில் இருந்து 3,7,10 ம் பார்வையாக 8,12,3 ஆம் இடங்களை பார்ப்பதால் சுப விரயங்களும் வருமான வகையினங்களும் எதிர்பார்த்ததை விட நன்றாக இருக்கும்.உங்கள் முயற்சிகள் அனைத்தும் இனி ஜெட் வேகத்தில் முடியும்.மந்தமாக இருந்தவர்கள் கூட இனி சுறுசுறுப்பாக பணியாற்றுவார்கள்.ஜாதகத்தில் லக்னத்துக்கு யோகாதிபதி,சுபர் திசை நடப்பவர்களுக்கு இன்னும் பலன் கூடும்.லக்னத்துக்கு பாவி,அசுபர் திசை நடப்பவர்களுக்கு வழக்கத்தைவிட கொஞ்சம் நன்றாக இருக்கும்.மொத்தத்தில் சனிப்பெயர்ச்சி உங்களுக்கு ஆனந்தத்தை அள்ளித் தரும்.

அரசியலை பொறுத்தவரை கருணாநிதி ஜாதகத்தில் ராசி ரிசபம்.அவர் ஜாதகத்தில் சனி உச்சம் பெற்ற சனி துலாம் வீட்டில் இருக்கும்போது பிறந்த அவருக்கு 30 வருடம் கழித்து அதே இடத்தில் சனி வருகிறார்.சனி வக்ர காலத்தில் சற்று கவனமுடன் இருக்க வேண்டும்.

21.12.2012 வரை வீடு கட்டும்,மனை வாங்கும் கல்யாணம் போன்ற சுப காரியங்கள் செய்யும் சுப விரயம் உண்டாகும்.

சனி வக்ரம்;

15.2.2012 -2.8.2012
26.3.2013-15.8.2013
10.4.2014-28.8.2014

சனி வக்ர காலத்தில் உங்கள் யோக நிலை குறையும்.எனவே ப்ரீதி செய்வதன் மூலம் குறைவில்லா யோகத்தையும் வெற்றியையும் அடையலாம்.உங்கள் பூஜை அறையில் கண்ணன் குழந்தையாக உள்ள உல்ள படத்தை வைத்து பூஜை செய்யுங்கள் .கிருஷ்ணர் உங்கள் ராசிப்படி அதிர்ஷ்ட தெய்வம்.குருவாயூர் ஒருமுறை சென்று வாருங்கள்.வருடம் ஒருமுறை திருப்பதி சென்று வாருங்கள்.கேட்ட வரம் கிடைக்கும்.

சனிப்பெயர்ச்சி 2011-2014 ஒரு பார்வை பதிவை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்

மற்ற ராசிகளின் பலன்கள் அறிய கீழே இருக்கும் related widjet ஐ ஸ்க்ரோல் செய்யவும்.வலது புறம் மேல் பக்கத்தில் கூகுள் சர்ச் கேட்ஜெட் பார்க்கவும்!அதில் தேடினாலும் கிடைக்கும்.sani peyarchi 2011 எனக்கொடுத்தால் கிடைக்கும்.

செவ்வாய், 20 டிசம்பர், 2011

சனிப் பெயர்ச்சி பலன்கள் 2011-2014 சிம்மம்

சனிப் பெயர்ச்சி பலன்கள் 2011-2014 சிம்மம்
(மகம்,பூரம்,உத்திரம் 1 ஆம் பாதம் வரை)


சனிப்பெயர்ச்சி இன்று 21.12.2011 காலை திருநள்ளாறு சனிபகவான் ஆலயத்திலும்,அனைத்து சிவாலயங்களிலும், சிறப்புற கொண்டாடப்பட்டது.சனிபகவான் தரிசனம் செய்ய,லட்சக்கணக்கான பக்தர்கள் திருநள்ளாறில் குளத்தில் நீராடினர்.இன்னும் ஒரு வாரம் வரை அக்குளத்திலும் கருவறையிலும் சனி கிரகத்தின் கதிர் அலைகள் நிரம்ப காணப்படும் .ஒரு வாரம் வரை வழிபடலாம்..நம் முன்னோர்கள் சனியின் தாக்கத்திலிருந்து நாம் தப்பிக்க .மிக நுணுக்கமுடன் அமைக்கப்பட்ட கோயில்தான் திருநள்ளாரு.ஒருவர் வாழ்வில் ஒருமுறையேனும் சென்று வரவேண்டும்.சனிபகவான் நீதி தவறாதவர்.சனி பகவான் அருளால் தாங்களும் தங்கள் குடும்பமும் பூரண ஆயுள்,பூரண உடல்நலம்,மனநலம் பெற நானும் பிரார்த்திக்கின்றேன்..

சனி கன்னி வீட்டில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார்..இதன் மூலம் சிம்ம ராசியை சேர்ந்தவர்களுக்கு என்ன பலன்கள் நடக்கும் என்பதை பார்ப்போம்;

இதுவரை உங்கள் ராசிக்கு ஏழரை சனியாக கடந்த ஏழரை வருடங்களாக ஆட்டுவித்த சனி பகவான் இப்போது முற்றிலும் விலகிவிட்டார்.இதுவரை தொழில் தடை,விபத்து,குடும்பத்தினருக்கு மருத்துவ செலவு,கடன் தொல்லை,இடமாற்றம் என அனுபவித்து மன உளைச்சலில் இருந்து வந்தீர்கள்..குடும்பத்தினருடன் வாகுவாதம்,நிம்மதியின்மை என இருந்துவந்த உங்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி நிம்மதியை தரும்....

பொதுவாக சிம்மம் ராசிக்கு சனி அதிக பாதிப்புகளை தரக்கூடியவர்.ஆனால் சனி விலகும் போது அதிக நன்மைகளையும் அந்தந்த ஜாதகத்தின் யோக திசாபுத்தி அடிப்படையில் கொடுத்துவிடுகிறார்.ஜெயலலிதாவுக்கு ஜாதகத்தில் பல யோகங்கள் இருக்கின்றன..திசையும் வலிமையாக இருப்பதால் தமிழ்க முதல்வர் ஆனார்.உங்களுக்கு திசா புத்தி பலவீனமாக இருந்தால்..பாதிப்பு முழுமையாக விலகாது.அதே சமயம் பாதிப்புகள்,தடைகள்,தோல்விகள் போன வருடம் போல் இருக்காது...

தொழில் இனி நல்ல வளர்ச்சியை அடையும்.பணம் பல வழிகளிலும் வந்து சேரும்.இதுவரை பல டாக்டர்களையும் பார்த்தும் குணமாகாத நோயும் இனி குணமாகும்..அலைச்சல்கள் குறையும்.தொட்ட காரியங்கள் இனி துலங்கும்.உறவினர்களால் ஏற்பட்ட கசப்பனுபவங்கள் மாறும்.அவர்களே உங்களை நாடி வருவர்.மனைவி,கணவன் உறவு சீராகும்..உங்கள் எதிரிகள் அகலுவர்.இதுவரை உங்கள் கண்ணை மறைத்து வந்த ,உங்கள் முன்னேற்றத்துக்குஉங்கள் பலவீனங்களை நீங்கள் அறீவீர்கள்.களைவீர்கள்.

சனிபார்வை 5,9,12 ஆம் இடங்களில் விழுவதால் பிள்ளைகளாலும்,பெற்றோர்களாலும் ஆதாயம் கூடி வரும்..குடும்பத்திற்கு தேவையான பொருட்களோ,மனை,வீடு கட்டும்,வாங்கும் யோகமோ கூடிவரும்..திருமண முயற்சிகள் கைகூடும்.

சனி வக்ரம்;27.3.2012 முதல் 11.9.2012 வரை சனி வக்ரம் பெற்று மீண்டும் கன்னிக்கு பின்னோக்கி வருகிறார் சனி.இக்காலத்தில் மிக எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.

யாருக்கும் வாக்கு கொடுத்தால் அதை நிறைவேற்றுவது கடினம்.தொழிலில் கவனம் தேவை.பேச்சால் பல பிரச்சினைகள் உருவாகும் காலம்.கவனம்..பண நஷ்டம் உண்டாகும் காலம் இது.எச்சரிக்கை.இந்த 6 மாதமும் கவனமுடன் செயல்படுங்கள்.

சனி உங்கள் ராசியை விட்டு அகன்று விட்டாலும் இனி வரும் காலத்தில் கவனமாக இருக்க வேண்டிய காலங்கள்;அதாவது மாறிய சனி உங்கள் ராசியை பார்த்து மீண்டும் முறைக்கும் காலங்கள்;

15.2.2012 முதல் 2.8.2012 வரை
26.3.2013 முதல் 15.8.2013 வரை
10.4.2014 முதல் 28.8.2014 வரை..

இக்காலம் உங்கள் ராசிப்படி சிறப்பான காலம் அல்ல.எனவே கவனம் தேவை.

சனியின் கிரக சஞ்சாரம்; (பொதுவானது) நந்தன வருடம் ஆரம்பம் முதல் வைகாசி 5 வரை துலாத்திலும்,பின்னர் ஆடி 17 வரை வக்ர சஞ்சாரமாக கன்னியிலும் பின்னர் வருடம் முடிய துலாம் வீட்டிலும் சஞ்சரிக்கிறார்...இக்காலகட்டத்தில் கலைகள் அபிவிருத்தியாகும்.தொழில் வியாபாரங்கள் மேன்மை அடையும்.அரசு வழி ஆதரவுகள் அதிகம் மக்களுக்கு கிடைக்கும்.

பரிகாரம்;உங்க ராசிக்கு முருகன் வழிபாடும்,ஆஞ்சநேயர் வழிபாடும் மிக உன்னத பலன்களை தரும்.ஏழரை சனி முடிஞ்சிட்டதால சனி பகவானை கண்டுக்க கூடாதுன்னு இல்ல.போய் ஒரு நன்றி சொல்லிட்டு வரலாம்..திருநள்ளாறு செம கூட்டமா இருக்கும்.பெயர்ச்சியாகும் அன்னிக்கே போகணும்னு இல்ல.இன்னொரு நாள் கூட போகலாம்..திருக்கொள்ளிக்காடு திருவாரூர் பக்கத்துல இருக்கு.அங்க போயிட்டு வருவது ரொம்ப பெஸ்ட்.இது பொங்கு சனி ஆலயம்.அதாவது சனி இரண்டாவது சுற்று நடப்பவர்களுக்கு வழிபாடு செய்ய அருமையான ஆலயம்.பொங்கு சனி உங்க திறமைகளை வெளிக்கொணரும்.இதை பத்தி எழுதறேன்.

ஜெயலலிதா சிம்மம் ராசிக்கு அவருக்கு கடந்த 5 வருசமா ஆட்சியை இழந்து சனியால் பல சோதனைகளை அனுபவித்தார்.உடல்நலக்குறைவும் அடிக்கடி உண்டானது.வழக்குகளை சந்தித்தார்.இருப்பினும் சனி முடியும்போது அவருக்கு பெரும் மக்கள் செல்வாக்கை கொடுத்தது.அவருடைய கட்சி இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வாக்கு சதவீதத்தில் வெற்றி பெற்றது.இருப்பினும் சனி இன்னும் முடியலை என்பதுக்கு ஏற்ப..சனியின் முக்கிய வேலையான கோர்ட் படியேற செய்வதையும் செய்து விட்டது.காவல்நிலையமோ,கோர்ட்டோ ஏதேனும் ஒரு சூழ்நிலையில் சிம்ம ராசிக்காரர்கள் பலர் அனுபவித்து இருக்கிறார்கள்.அதுபோல ஜெயலலிதாவும் பெங்களூர் கோர்ட் அதுவும் சிறை வளாகம்...பார்த்தீங்களா.சனி தன் பணியை செவ்வனே முடிக்காம போக மாட்டார்.தன்னை சுர்றி இருந்த துரோகிகளை இனம் கண்டு இப்போதுதான் ஜெயலலிதா வெளியேற்றியிருக்கிறார்.ஏன் இத்தனை நாளா தெரியவில்லையா என்று கேட்டால்,சனி போகும்போதுதான் எதிரிகளை அழிக்க ஆயுதம் கொடுப்பார்.எதிரி நம்மிடம் வசமாக சிக்குவதும் அப்போதுதான்.

ரொம்ப டார்ச்சர் பண்ணிட்டோம் பாவம்னு பரிதாபப்பட்டு நன்மைகளையும் செய்துவிடுகிறார்.நன்மையே செய்ய வேணாம்.என்னை விட்டா போதும்னு சொல்றீங்களா.அதுவும் சரிதான்.

புதன், 14 டிசம்பர், 2011

சனி பெயர்ச்சி பலன்கள் 2011-2014 அஷ்டம சனி பயம்

சனி பெயர்ச்சி பலன்கள் 2011-2014 அஷ்டம சனி பயம்

                                                   குச்சனூர் சனிபகவான்

சனி பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கம் அடிப்படையில் 15.11.2011 அன்று முடிந்துவிட்டாலும் திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி வரும் 21.12.2011 அன்று காலை சனீஸ்வரர் ஆலயமான திருநள்ளாறில் விசேசமாக கொண்டாடப்படுகிறது.சனிப்பெயர்ச்சிக்கு முன்பே சொல்லியிருந்தேன்...சனி துலாம் வீட்டில் உச்சம் ஆகிறார்.பல புதுபுது திருப்பங்களை அரசியலிலும் ,பொருளாதாரத்திலும்,தொழில் துறையிலும் ஏற்படுத்துவார்.சனி நீதிக்காரகன்.அவன் வலுப்பெற்றால் உச்சநீதிமன்றத்தின் கை ஓங்கி இருக்கும்.மத்திய மாநில அரசுகளை நம்பாமல்,..மக்களும் அரசியல் தலைவர்களும் முன்பைவிட அதிகமாகவே நீதிமன்றங்களை நம்பியிருப்பர் என்றேன்.அதன்படி இன்று முல்லைப்பெரியார் விவகாரத்தில் மத்திய அரசு மிக மிக அலட்சியமாக நடந்துகொண்டிருக்கிறது...

இரு மாநிலத்துக்கும் பிரச்சினை என்றால் நடுநிலையோடு நடந்துகொள்ளாமல் ஆபத்தில் இருக்கும் அணைக்கு பாதுகாப்பு செய்யாமல் வேடிக்கை பார்க்கிறது.இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா மிக விவேகத்துடன், அரசியல் ராஜதந்திரத்துடன் செயல்பட்டு வருகிறார்.ஆரம்பம் முதல் முல்லப்பெரியார் அணைக்காக போராடி வரும் வைகோவே தமிழக அரசை பாராட்டி இருக்கிறார்.

ம்..சனி வலுப்பெறும்போது சனி ஆதிக்கத்தில் கறுப்புத் துண்டை அணிந்திருக்கும் வைகோவுக்கு முக்கியத்துவம் கூடுமோ..நடந்தாலும் ஆச்சர்யமில்லை.சனி சார்ந்த இரும்பு சம்பந்தமான ,வாகனம்,இயந்திரம்,ஆயில் சார்ந்த பங்கு வர்த்தகம் சிறப்பாக இருக்கும்.

அஷ்டம சனி என்ன செய்யும்..? என்ற கேள்விக்கு ஏழரை சனியில் எவ்வளவு கஷ்டம் தருமோ அந்த கஷ்டத்தை இரண்டரை வருடத்திலே சனி கொடுத்துவிடுவார் என்பதுதான் பொதுவான பதிலாக இருக்கிறது.கும்ப ராசிக்காரர்களுக்கு இப்போது அஷ்டம சனி முடிந்து மீனம் ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனி தொடங்கியிருக்கிறது.குமப ராசிக்காரர்கள் அளவுக்கு மீனம் ராசிக்காரர்கள் கஷ்டப்படுவர் என சொல்ல முடியாது.கும்பம் ராசியினர் பொதுவாகவே தாழ்வு மனப்பான்மையினர்.வாழ்வில் அதிக போராட்டம் அனுபவித்து வரக்கூடியவர்கள். ,மற்றவர்களிடமிருந்து ஒதுங்கி வாழக்கூடியவர்கள்..அடிக்கடி தடங்கல்களை அனுபவிக்ககூடியவர்கள்.அப்படிப்பட்டவர்களுக்கு அஷ்டம சனி வந்தால் கஷ்டம் அதிகமாகவே இருக்கும்.அதை அனுபவித்து,ஒருவழியாகி,முடிந்துவிட்டது.இனி கவலைப்படாதீர்கள்.

மீனம் ராசியினர் இதற்கு நேர் மாறானவர்கள்.குருவின் ராசிக்கு சொந்தக்காரர்.குருவை போல பலருக்கு வழிகாட்டியாக இருப்பவர்கள்..இவர்களால் பலன் அடைந்தவர்கள் ஏராளம்.ஆனா இவர்களுக்கு அவர்கள் உதவி செய்வார்களா என்றால் சந்தேகம்தான்...குருவின் ராசி என்பதால் பண வருவாய்க்கு குறைவிருக்காது.பணம் நஷ்டம் வந்தாலும் சமாளித்துவிடுவர்.தொழில் பாதிப்போ மந்தமோ வந்தாலும்...தன் சாதூர்யத்தால் சமாளிப்பர்.புலம்புவார்கள்.ஆனால் இவங்க புலம்பலை யாரும் மதிக்க மாட்டார்கள்..உங்களுக்கு என்ன சார்...எங்கியாவது ஷேர் மார்க்கெட்ல லம்பா போட்டு வெச்சிருப்பீங்க,.ன்னு சொல்லிடுவாங்க...

சிக்கன்,மட்டன் சாப்பிடுறவங்க இந்த ராசியில கம்மி.காரணம் இவங்க..பல பேருக்கு சிவபக்தி அதிகம்..கந்த சஷ்டி கவசம் உச்சரிச்சு முருகன் மேல ரொம்ப ஈடுபாட்டோட இருப்பவர்களும் அதிகம்.தெய்வபலம் இருப்பதால் அஷ்டம சனி தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போனமாதிரிதான்..

மீனம் ராசிக்காரங்க தொழில் விசயத்துல பணம் விசயத்துல கெட்டி.ஆனாலும் அஷ்டம சனியில ஏமாற போறாங்க..யாரால நண்பர்களால.உறவினர்களால...குழந்தைகளால்...மருத்துவ செலவும் கொஞ்சம் ஏற்படும்.அடுத்தவனுக்கு செலவு பண்ணாம தன் பணத்தை கெட்டியா வெச்சிருக்குறவங்க..டாகடருக்கு கொடுத்தே ஆகணும்.உங்க ராசி இயல்பே குரு வின் குணாதிசயம்தான்..குரு எப்படியிருக்கணும்..?அன்னதானம் செய்தல்,கோயில் கட்ட உதவி செய்தல்,.ஏழைக்குழந்தைகள் கல்வி கற்க உதவி செய்தல்,ஏழைப்பெண்களுக்கு திருமண உதவி இதுதான்.இதையெல்லாம் இதுவரை நீங்க செய்யலைன்னா இப்போ செய்யுங்க...

அஷ்டம சனி என்பது ராசிக்கு எட்டில் சனி வருவது.கிராமத்தில் சொல்வாங்க...எட்டுல சனி புட்டுல அடி..(மர்ம உறுப்பு பாதிக்கும்).எனவே வண்டி வாகனங்களில் செல்லும்போது கவனம் அவசியம்.இரவில் வாகனத்தில் செல்லும்போது இன்னும் கவனம்.அதுவும் மது அருந்திட்டு போனா .....மறுபடி இந்த பேராவின் முதல்வரியை படிக்கவும்.

எட்டில் சனி வரும்போது ஏழாம் பார்வையாக சனி பார்ப்பது..வாக்கு ஸ்தானத்தை.அதாவது எப்போதும் மத்தவங்களுக்கு புத்திமதி சொல்வதுன்னா உங்களுக்கு சர்க்கரை கட்டி.இன்னும் இரண்டு வருசத்துக்கு இந்த சேவையை நீங்க குறைச்சுக்கணும்.நீங்க ஒண்ணு சொல்ல அது ராங்கா எதிராளிக்கு போய் சேர்ந்து உங்களுக்கு நீங்களே ஆப்பு வெச்சிக்கிட்டா மாதிரியாகிடும்...பேச்சில் நிதானம் இழத்தல் அஷ்டம சனியின் முக்கிய பாதிப்பு..பேச்சை குறைச்சிக்குங்க சார்..வீண் விவாதத்தில் வாயை கொடுத்து மாட்டிக்க வேணாம்..மனைவியிடம்..வம்பிழுப்பது பெரிய துன்பத்தில் முடியும்..அனுசரிச்சு போய்விடவும்...

குச்சனூர் சனிபகவானை வழிபட்டுட்டு வாங்க..திருச்செந்தூர் வருசம் ஒரு தடவை போயிட்டு வாங்க...

இவ்ளோதான்...அஷ்டம சனி...மலைப்பா இருக்கா..எப்பவும் போல இருங்க..நான் சொன்னது மட்டும் நினைவு வெச்சுக்குங்க..அஷ்டம சனி வந்திருச்சி இனி அவோதான்னு நீங்க..வேலை செய்யாம படுத்துக்கிட்டா அதுக்கு சனிபகவான் பொறுப்பல்ல...!!

வெள்ளி, 9 டிசம்பர், 2011

சந்திரகிரகணம் அன்று குழந்தை பிறந்தால்..?


சந்திரகிரகணம் நாளை 10.12.2011 அன்று மாலை 6.15 அளவில் தொடங்கி இரவு 9;48க்கு முடிகிறது.

அன்று இந்த நேரத்தில் கர்ப்பிணிகள் வீட்டை விட்டு வெளியே வருவதோ...சந்திரனை பார்ப்பதோ கூடாது.தண்ணீர் முதல் அனைத்து உணவு பொருட்களிலும் அருகம்புல் போட்டு வைத்து பயன்படுத்தவும்.கர்ப்பிணிகள் கிரகனம் தொடங்கும் முன்னரோ அல்லது முடிந்த பின்னரோ சாப்பிடுவதுதான் நல்லது.

கிரகணம் நேரத்தில் பிறக்கும் குழந்தையின் ஜாதகத்தில் சந்திரன் கேதுவுடன் இணைந்திருக்கும்.அக்குழந்தை வாழ்நாள் முழுவதும் உடல்பலமின்றியோ அல்லது மனபலம் இன்றியோ இருக்கும்.தாயாருக்கும் இப்படி இருக்கும் என்பதை அனுபவ புர்வமாக அறிந்திருக்கிரேன்.எனவே அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளவர்கள் முடிந்தவரை இந்த நேரத்தை தவிர்க்கவும்..!

புதன், 7 டிசம்பர், 2011

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2011-2014 ;ஏழரை சனி பயம்

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2011-2014

சனிப் பெயர்ச்சி திருக்கணிதம் அடிப்படையில் 15.11.2011 அன்று நடைபெற்றாலும் வாக்கிய பஞ்சாங்கப்படிதான் திருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் கடைபிடிக்கப்படுகிறது.அதாவது வரும் 21.12.2011 அன்று தமிழ்கத்தின் அனைத்து சனி பகவான் ஆலயத்திலும் வழிபாடுகள்,ஹோம பூஜைகள் நடத்த இருக்கிறார்கள்;

சனிப்ரீதி ஹோம பூஜையில் கலந்துகொள்ளலாமா என கேட்டால் தாராளமாக கலந்து கொள்ளலாம்.சனீஸ்வரர் அம்சமான பொருட்களால் செய்யப்படும் ஹோமங்களால் நம் தோசங்கள் சிறிதளவாவது குறையும் என்றால் கலந்து கொள்வது தவறில்லை.

சனீஸ்வரர் கண்டு நாம் பயப்பட வேண்டியதில்லை.சனி யால் கெட்டவர்களை விட வாழ்ந்தவர்கள் அதிகம் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.சுக்கிர திசையால் பல யோகங்களையும்,அதிர்ஷ்டத்தையும் பெற்று மிக சிறிய வயதில் சேலத்தில் பிரபல தொழில் அதிபர் ஆகிவிட்ட எனது நெடுநாள் வாடிக்கையாளர் அவர்.அவருக்கு நிறைய அதிர்ஷ்டத்தை கொடுத்தது அவர் ஜாதகப்படி நடக்கும் சுக்கிர திசைதான்.அது இன்னும் பல வருடங்களுக்கு அவருக்கு அதிர்ஷ்டத்தை தர இருக்கிறது.செல்வம்,புகழ் தர இருக்கிறது.ஆனால் அவர் ராசி விருச்சிகம் என்பதால் அவரை சுற்றி இருப்பவர்கள் இனி அவ்வளவுதான் என்ற ரீதியில் பயமுறுத்த குழம்பி போய்விட்டார்.என்னிடம் புலம்ப ஆரம்பித்துவிட்டார்.அவருக்கு நான் சொல்வது இதுதான்.அவர் ஜாதகத்தில் லக்கினத்துக்கு யோகமான சுக்கிர திசை மிக வலிமையுடன் சிறப்பாக திசை நடத்தி வருகிறது.எனவே எந்த பாதிப்பும் தொழில் ரீதியாக இல்லை.உங்கள் அத்தனை உழைப்பும் வீணாகிவிடாது.தொழில் ரீதியாக இன்னும் கடுமையாக உழைத்தும் இன்னும் அடுத்த கட்டத்துக்கு செல்வீர்கள்.உடல் ஆரோக்யம் கொஞ்சம் பாதிக்கலாம்..குடும்ப ரீதியாக சில சிக்கல்கள்,பண விரயம் ஆகலாம்..அதற்காக முற்றிலும் நீங்கள் அனைத்திலும் நஷ்டம் ஆகி விடுவீர்கள் என அர்த்தம் இல்லை என சொன்னேன்.

எனவே ஏழரை சனியாக இருந்தாலும்,அஷ்டம சனியாக இருந்தாலும் சனிப் பெயர்ச்சி ஆகிவிட்டது.வழக்கம் போல நீங்கள் செயல்படுங்கள்.வீணாக நீங்களும் பயந்து பிறரையும் பயமுறுத்த வேண்டாம்...எல்லோருக்கும் ஒரே மாதிரியான பலன்கள் நடப்பதில்லை.

பலவீனமான திசை அதாவது 6,8,12 க்குடைய்வன் திசை சனி திசை,சந்திர,சூரிய,செவ்வாய் திசை,ராகு,கேது திசை நடப்பவர்கள் மாத்திரம் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

தமிழ்க முதல்வர் ஜெயலலிதா பல கோயில்கள் புனரமைக்க பல கோடி ஒதுக்கியிருப்பதும்,ஊனமுற்றோருக்கு சிறப்பு பேருந்து அறிவிப்பும்,அணையில் நீர் திறப்பும் என சனிப்பெயர்ச்சிக்குண்டான பரிகாரங்களை வேகமாக செயல்படுத்தி வருகிறார்.அவர் ராசிக்கு அவர் செய்து கொள்கிறார்.

கொட நாட்டில் சிறப்பு சனிப்பெயர்ச்சி யாகம் மிக சிறப்பாக 21.12.2011 அன்று நடக்கப்போகிறதாம்....இதெற்கெல்லாம் காரணம் அவரது தெளிவான ஜோதிட நம்பிக்கை.

அன்னதானம்,உடை தானம்,பெரியோர்களை மதித்தல் ,என சம்பாதிப்பதில் ஓரளவு தான தர்மம் செய்து வாருங்கள் அது மட்டுமே உங்களை காக்கும்.!!

வெள்ளி, 2 டிசம்பர், 2011

குழந்தை பிறப்பு அறுவை சிகிச்சையாக இருப்பின் ஜாதகம் பலன் தருமா?

ஆபரேசன் மூலம் குழந்தை பிறந்தால் அது முறையான பிறப்பு தானா..ஜாதகம் கணித்து பார்த்தால் அது சரியான பலன் தருமா என பலர் சந்தேகம் கேட்கின்றனர்.

மழைப் பேறும் பிள்ளைப் பேறும் அந்த மகேசனுக்கு கூடத் தெரியாது’’என்பது பழமொழி.மழை எப்போது பெய்யும்..? குழந்தை எப்போது பிறக்கும்..? என்பதை முன்கூட்டி அந்த மகேசனால் கூட சொல்ல முடியாதாம்.

இப்போதோ ஒரு குழந்தை பிறக்கும் முன்னரே அது பிறக்க வேண்டிய நேரத்தை ஜோதிடர்கள் மூலம் முன்கூட்டியே கணித்து ஆபரேசன் மூலம் வெளியே எடுத்து விடுகின்றனர்.இப்படி பிறக்கின்ற குழந்தைகளுக்கான ஜாதக பலன்கள் சரியாக வராது என்றும் தாயின் யோனி வழியாக முறைப்படி பிறக்கும் குழந்தைக்குத் தான் ஜாதக பலன்கள் சரியாக இருக்கும் என்பது சிலர் கருத்து.

பழைய புராணங்களையும் அரச கதைகளையும் படிக்கின்ற போது வெவ்வேறு வகைகளில் குழந்தைகள் பிறந்திருப்பதை நாம் அறிய முடிகிறது.ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குழந்தையை பிறக்க வைப்பதற்காக அக்காலத்தில் கூட வெவ்வேறு வழிவகைகள் பின்பற்றி இருக்கிறார்கள்.

சோழ மன்னனாகிய சும தேவனின் மனைவி கமலவதிக்கு பிரசவ வேதனை எடுத்த போது ஜோதிடர்கள்,இப்பிள்ளை இன்னும் ஒரு நாழிகை (24 நிமிடம்) கழித்து பிறக்குமானால் மூவுலகங்களையும் அரசு புரியும். என்றனர்.அதைக் கேட்டவுடன் கமலவதி,அதுவரை என் கால்களை கட்டி தலைகீழாகத் தூக்கி நிறுவுங்கள்’’ என்றாள்.மன்னன் ஆணைக்கினங்க காவலர்களும் அவ்வாறே மேலே தூக்கினர்.ஜோதிடர்கள் குறித்த கால எல்லை நெருங்கியதும்,உடனே கட்டவிழ்த்து விட்டனர்.உடனே அழகிய ஆண் குழந்தை சதய நட்சத்திரத்தில் பிறந்தது.அக்குழந்தை காலம் தாழ்த்தி பிறந்தமையால் கண்களில் ரத்தம் கட்டி அதன் கண்கள் சிவப்பாக இருந்தன.

அதைக் கண்ட கமலவதி,என் ’கோ’ செங்கண்ணனா..? என்று கூவியவாறு உடனே இறந்துவிட்டாள்.இந்த செங்கண் சோழனே பிறகாலத்தில் சோழ நாட்டில் கோவில்கள் பலவற்றைக் கட்டினான்.திருச்சி அருகே கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் உள்ள புகழ் பெர்ற திருவானைக்காவில் சிவபெருமானுக்கு மெய்ஞானத்தின் சார்புள்ள வெண்ணாவல் மரத்தினுடனே அரிய திருக்கோவிலை அமைத்தான்.எத்திசைகளிலும் தமது புகழ் விளங்கச் செங்கோல் ஆணை செலுத்திய செங்கன் சோழன் திருத் தில்லை கூத்தரது திருவடி நிழலை அடைந்து அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராக மாறினார்.’’கோச் செங்கட் சோழ் நாயனார்’’என்றழைக்கப்படும் இவரது திரு நட்சத்திரமானது மாசி மாதம் சத்ய நட்சத்திரத்தில் வரக் காணலாம்.

இவரைப் போலவே கரிகால் சோழனும் பிறந்தான்.கரிகால் சோழன் பிறக்க வேண்டிய நேரமானது ஜோதிடர்களால் முன்னரே குறிக்கப்பட்டு,அவன் தாயனவள் அதுவரை ஒரு மரத்தில் தலைகீழாகக் கட்டி தொங்கவிடப்பட்டாள்.ஜோதிடர்கள் குறித்த நேரப்படி பிறந்த கரிகால் சோழன் புகழ் பெற்று விளங்கினான்.கல்லணையை கட்டி அழியாப் புகழ் பெற்றான்.குழந்தையை சுப நேரத்தில் பிறக்க வைப்பதற்காக முற்காலத்தில் மூர்க்கத்தனமான முறை பின்பற்றப்பட்டது.இப்போது மருத்துவத் துறை வளர்ச்சி பெற்று விட்ட காரணத்தால் ஆபரேசன் மூலம் குழந்தையை குறிப்பிட்ட நேரத்தில் வெளியே எடுத்து தாயையும்,குழந்தையையும் காப்பாற்றிவிடுகின்றனர்.

ஆபரேசன் மூலம் குழந்தை பிறப்பது உறுதி என்றால் ஜோதிடரையும் ஆலோசனை செய்து,நல்ல நாள்,நல்ல நட்சத்திரம்,நல்ல லக்னம் வரும் நாளில் ,(மருத்துவர் குறிப்பிடும் நாட்களுக்குள்)குழந்தை பிறப்பை அமைத்துக் கொள்வது தவறில்லை.