மீனம் ராசிக்கு அஷ்டம சனி என்ன செய்யும்..?
அஷ்டம சனி என்பது சந்திரன் நின்ற ராசிக்கு எட்டாம் இடத்தில் கோட்சாரப்படி சனி வருவது ஆகும்..சனி ராசிக்கு எட்டில் வந்தால் என்ன ஆகும்..? எதற்கு இந்த பயம் என பார்த்தால் சந்திரன் உடல்காரகன்,மனசுக்கு அதிபதி..அதாவது சிந்தனை,செயல்,அழகு,உடல்,தாய் என இவற்றிற்க்கெல்லாம் பொறுப்பு வகிக்கிறார்...அதுக்கு எட்டில் சனி வரும்போது சனி சந்திரனௌக்கு இரண்டாம் இடத்தையும் பார்வை செய்கிறார்..இதனால் இவர் பொறுப்பு வகிக்கும் இடங்கள் எல்லாம் முடங்கிப்போகும்..காரணம் சனி இருள் கிரகம்..முடக்கும் கிரகம் .
நம்ம மனசு முடங்கிப்போறதுன்னா என்னாகும்..? பயம் அதிகமா இருக்கும்..நினைச்சது சரியா நடக்காது தன்னம்பிக்கை குறைஞ்சு போகும்..கவலை,சோகம் அதிகமா இருக்கும்..உடல் ஸ்தானம் பாதிப்பதால் வயசானவங்களுக்கு உடல்கோளாறுகளும்,நடு வயது இருப்பவர்களூக்கு சிந்தனை தடுமாற்றத்தால்,கவனக்குறைவால் விபத்துகளும் உண்டாகும்..
சில ஜோசியர்கள் அஷ்டம சனியா...அப்போ கொள்ளி வைக்கிறது,வக்கீலை பார்க்குரது,போலீஸை பார்க்குறது,ஆஸ்பிடல் போறது எல்லாம் நடந்துச்சா என ஜாதகத்தை விரித்ததும் சொல்வார்கள்..இதை கேட்டதும் ஜாதகம் கேட்க வந்தவர் தலை சுர்றி விழுந்துவிடுவார்...
ஒரு வீட்டில் அண்ணன் ,தம்பி..இவர்களது குழந்தைகள் அனைவருக்கும் மீனம் ராசி...மொத்தம் 7 பேர் ஒரே குடும்பம்..அதில் நாலு பேர்க்கு அஷ்டம சனி...போன மாதம் அண்ணனுக்கும் அவரது மனைவிக்கும் ஏதோ சண்டை..அந்த பெண் தன் இரு குழந்தைகள் உட்பட தானும் தீக்குளித்து தர்கொலை செய்து கொண்டார்...அதில் அந்த தாய்க்கும் பெரிய குழந்தைக்கும் மீன ராசி...இந்த செய்தி தின மலர்,தினத்தந்தி யில் எல்லாம் வந்தது..விபரீத முடிவு எடுக்க அதிக மன உளைச்சல்,அதிக மன இறுக்கம்,அதிக மன தளர்ச்சி,அதிக அவ நம்பிக்கை ,தாழ்வு மனப்பான்மைதான் காரணம் ...இதை அஷ்டம சனி கொடுத்து விடுகிறது..இதுதான் காரணம்.
கொஞ்சம் தொழில் மந்தமானவுடன் அஷ்டம சனியால் இது நேர்ந்தது என தெரிந்து இன்னும் 2 வருசத்துக்கு இப்படித்தான் இருக்கும் என ஜோசியர் சொல்லிட்டார் என அதே குழப்பத்தில் இன்னும் தொழில் படுத்துவிடும்..
அஷ்டம சனி எல்லோருக்கும் அப்படி செய்து விடுகிறதா என பார்த்தால் இல்லை..சிலர் வீடு கட்டுகிறார்கள்..சிலர் கல்யாணம் செய்கிறார்கள்..இவர்களுக்கு நல்ல திசா புத்தி நடப்பது ஒரு காரணம்..இவர்கள் குழந்தைகளுக்கு நல்ல திசையும்,ராசிக்கு யோகமாக குரு,சனி கோட்சாரம் இருப்பதும் ஒரு காரணம்...
பழைய ஜோதிட நூல்களில் மீனம் ராசிக்கு அதிக பாதிப்பாக அஷ்டம சனி பற்றி சொல்லவில்லை...சனி வீடன மகரம்,கும்பம் இவர்களுக்கு லாபம்,விரயம் இரண்டுக்கும் பொறுப்பாவதால் வருகிற பணம் விரயமகும்...கடன் உண்டாகலாம்..அதை வீடு கட்டுதல்,திருமணம் செய்தல் போன்ற நல்ல செலவாக கடன் வாங்கியாவது செய்தால் நல்லது..இல்லையே ஏமாற்றம்,நஷ்டத்தால் இழக்க நேரலாம் என சொல்லப்பட்டிருக்கிறது..புதிய தொழில் ஆரம்பிக்கவும் அஷ்டம சனி நல்ல காலம் ஆகும்..சிலர் அஷ்டம சனி நடக்குது புது தொழில் ஆரம்பிக்கக்கூடாது என முடிவில் இருப்பர் தொழில் ஆரம்பிக்கலாம்..கூட்டாளிகள் விஷயத்தில் கவனமுடன் இருக்க வேண்டும்..
அன்னதானம் செய்தல்,செருப்புகள் வாங்கி ஏழைகளுக்கு கொடுத்தல்,ஊனமுற்றோர் பள்ளிகள்,காப்பகம் சென்று பொருளுதவி செய்தல் அவசியம்..சிலர் குடை வாங்கி தருவர்..கறுப்பு நிற காராம் பசு வாங்கி தருவர் இவை எல்லாம் நல்ல பலன் கொடுத்த அருமையான பரிகாரம் ஆகும்..அன்னதானம் செய்ய பரிகாரங்கள் செய்ய உதவி தேவைப்பட்டால் என் மெயிலுக்கு எழுதுங்கள்..sathishastro77@gmail.com என் தொலைபேசியிலும் அழைக்கலாம் 9443499003 உங்களுக்கு தேவையான உதவிகளை,உங்கள் பரிகாரம் முறைப்படி சென்று சேர உதவி செய்ய தயாராக இருக்கிறேன்...ஜோதிடத்தை நம்புபவர்களுக்கு இது சிறந்த வழிகாட்டியாகும்..வருமுன் காப்பது போல பெரும் துன்பங்கள் வரும் முன் சிறு பரிகாரங்கள் மூலம் தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போனாற்போல தடுக்க முயற்சிக்கலாம்..
புரட்டாசி 20 அக்டோபர் 6 முதல் குரு வக்ரம் ஆகிறார்..இதனால் இதுவரை பணப்பிரச்சினை,வருமானம் இன்மை,கடும் கடன் நெருக்கடியில் இருந்த மீன ராசிக்காரர்கள் அன்று முதல் அப்பிரச்சினைகளில் இருந்து மீள்வீர்கள்....இது ஒரு மகிழ்ச்சியான செய்தியாகும்..