திங்கள், 29 செப்டம்பர், 2014

சனி பெயர்ச்சிப்பலன்கள் 2014 -2017 ராசிபலன் -மேசம்-அஷ்டம சனி

சனிப்பெயர்ச்சி ராசிபலன் 2014 -2017 மேசம் -அஷ்டம சனி

astrologer in erode,salem,coimbatore ,tamil astrology ,tamil jothidam ,nalla neram,astrologer sathishkumar,rasipalan,raasipalan,elarai sani,thanusu,mesam

சனிபகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி 16.12.2014 முதல் விருச்சிகம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார்..இது திருநள்ளாறு கோயிலில் அனுஷ்டிக்கும் தேதியாகும்..துல்லியமான கணக்கு எனில் திருக்கணித பஞ்சாங்கப்படி ஐப்பசி மாதம் 16 ஆம் நாள் 2.11.2014 ஞாயிற்றுக்கிழமை இரவு 8.54 மணிக்கு துலாம் ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு மாறுகிறார்.மேசம் ராசிக்கு அதுமுதல் அஷ்டம சனியும் ,ரிசபம் ராசிக்கு கண்டச்சனியும் ,சிம்மம் ராசிக்கு அர்த்தாஷ்டம சனியும்,துலாம் ராசிக்கு ஏழரை சனியில் பாத சனியும் ,விருச்சிக ராசிக்கு ஏழரை சனியில் ஜென்ம சனியும்,தனுசு ராசிக்கு ஏழரை சனியில் விரய சனியும் ஆரம்பிக்கிறது...19.12.2017 வரை இது நீடிக்கும்...

சனி செவ்வாய் ராசியில் குருவின் நட்சத்திரமான விசாகத்தில் செல்வதால் இந்தியா தொழில் துறையில் புதிய உச்சத்தை தொடும்...பொருளாதாரம் உயரும்...ஏற்றுமதி,இறக்குமதி சிறப்பாக இருக்கும்....நாட்டின் பலம் அதிகரிக்கும்..

மேசம் ;

மேசம் ராசியினர் எப்போதும் வேகம்,சுறுசுறுப்பு மிகுந்தவர்கள்..கடுமையான உழைப்பாளிகள்..எதையும் செய்து முடிக்கும்வரை ஓய மாட்டார்கள்...உங்கள் ஜென்ம ராசிக்கு 10,11 க்கு அதிபதியான சனிபகவான் வரும் 16.12.2014 முதல் 19.12.2017 வரை அஷ்டம ஸ்தானத்தில் செல்ல இருப்பதால் அஷ்டம சனி தொடங்குகிறது.....சனி ஏழரை சனியில் கொடுக்கும் துன்பத்தை இரண்டரை வருடங்களில் கொடுப்பதுதான் அஷ்டம சனி என்பார்கள்..... விரய செலவுகள் அதிகம் கொடுக்கும்..கடன் தொல்லையை உண்டாக்கும் ஏற்கனவே இருப்பவர்களுக்கு தீவிரப்படுத்தும் .இது பொதுவான கருத்தாகும்....

அஷ்டம சனி நடந்தவர்கள் பலர் அந்த நேரத்தில் செல்வந்தர்கள் ஆனவர்களும் உண்டு..தடைபட்டிருந்த திருமணம் அஷ்டம சனி காலத்தில் நல்லவிதமாக நடந்ததும் உண்டு...தொழிலே இல்லாமல் இருந்தவர்களுக்கு அஷ்டம சனி வந்தபின் தொழிலும் அமைந்திருக்கிறது..காரணம் சனி விருச்சிகத்துக்கு வரும்போது அதன் பார்வை படும் இடம்,பிறக்கும்போது உங்கள் ஜாதகத்தில் விருச்சிகத்தில் இருக்கும் கிரகங்கள் சனி பார்வையை பெறுவதால் உண்டாகும் மாற்றங்கள்...தான் திடீர் மாறுதல்களுக்கு காரணம்..வரப்போகிற  சனி குருவின் நட்சத்திர காலத்தில்தான் சஞ்சரிக்கப்போவதால் குரு உங்கள் ராசிக்கு சுபர் என்பதால் அஷ்டம சனி உங்களுக்கு பாதிப்பை தராது..சிலருக்கு திடீர் யோகத்தையும் கொடுக்கும்.

 சிலருக்கு மட்டும் தொழில் மந்தம்,முடக்கம்  உண்டாக்கும்..தொட்ட காரியங்கள் தடங்கல், தாமதம் உண்டாக்கும்...எதிரிகள்,போட்டியாளர்கள் தொல்லை அதிகமாகும் குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் அதிகரிக்கும்...இதை எப்படி சமாளிப்பது..? விரயங்கள் அதிகரிக்கும் காலம் என்பதால் சுப செலவுகளை செய்யுங்கள்....வீடு வாங்குதல்,குடும்பத்தில் சுபகாரியங்கள் செய்தல்,நிலம் வாங்குதல்,நீண்ட கால முதலீடுகள் செய்தல் இவையெல்லாம் கடன் வாங்கியோ அல்லது சேமிப்பை கரைத்தோ செய்யும்போது தோசம் விலகும்..
 

ஏற்கனவே ரொம்ப பிரச்சினையில இருக்கேன் ..இதுல வெந்த புண்ல வேலை பாய்ச்சுறீங்களே என்பவர்கள்...கவலையோ, விரக்தியோ அடைய வேண்டாம்...சலிப்பும்,சோர்வும்,அலட்சியமும் தான் சனியின் நண்பர்கள்...கடுமையான உழைப்பு,முயற்சிகள் இப்போதுதான் அதிகம் தேவைப்படும்.....ஜாதகத்தில் சனி பகை,நீசம்,பகை கிரகங்களுடன் சேர்க்கை பெற்றிருந்தால் கொஞ்சம் பாதிப்பு அதிகம் இருக்கத்தான் செய்யும்...மற்றவர்களுக்கு பாதிப்பு குறைவு....லக்னத்துக்கு அசுபர் திசை நடந்தாலும் கேது,சனி,செவ்வாய்,திசை நடந்தாலும் சுமாரான பலன்களே நடக்கும்...வருமானம் குறையும்.. இதனால் செலவுகளும் அதிகரித்து கடன் தொல்லையை உண்டாக்கும்..

பணியில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகள்,உடன் வேலை செய்பவர்களால் பல தொல்லைகள் புதிதாக உருவாகும்...இடமாறுதல் உண்டாகலாம்....குறைந்த பட்சம் வீடு மாறுதல் செய்துகொண்டால் தோசம் அதில் அடிபடும் பணியில் பாதிப்பு வராது....மருத்துவ செலவுகள் ஏதேனும் வழியில் வந்துகொண்டே இருக்கும் அதற்கு நீங்கள் செலவு செய்து சேமிப்பை கரைக்க செய்யும்......

பெண்கள் அறிமுகமில்லாதவர்களிடம் பழகும்போது கவனம் தேவை..குடும்பத்தினருடன் அதிக மனக்கசப்புகள் உண்டாகும் இதனால் அதிக மன உளைச்சல் உண்டாக்கும்...பேச்சில் நிதானம் தேவை....இரண்டுமுறை யோசித்து பேசுங்கள்..ஏற்கனவே மேச ராசிக்காரங்க தடாலடி டைப்..இப்ப நாக்குல சனி உட்கார்ந்துக்கிட்டு இருக்கு...எவ்ளோ எச்சரிக்கையா இருக்கனும்னு யோசிச்சுக்குங்க...சனி குரு சாரம் பெற்றதால் பேச்சால் லாபமும் உண்டு...அதுக்குன்னு நாக்குல சனின்னு வாயே பேசாம இருந்துடாதீங்க...கெட்டது பேசுவதை தவிர்த்தால் போதும்.

 சனி வக்ரம்;15.3.2015 முதல் 2.8.2015 வரையிலும் ,26.3.2016 முதல் 13.8.2016 வரையிலும் சனி இரண்டு முறை வக்ரகதி அடைகிறார்..இக்காலங்களில் அஷ்டம சனி பாதிப்பு இருக்காது....எனவெ சந்தோசப்படுங்கள்...கிட்டத்தட்ட 10 மாசம் சனி தொந்தரவில் இருந்து தப்பிக்கிறீர்கள்...மேசம் ராசியில் சனி நீசம் அடைவார் அந்த காலகட்டத்திலும் உங்களுக்கு சனியால் பிரச்சினை இருக்காது...3.11.2014 முதல் 4.12.2014 வரையிலும் 14.11.2015 முதல் .16.12.2015 வரையிலும் கெட்டவன் கெடுகிறான் இதனால் ராஜயோகம் உண்டாகும்...

 பரிகாரம்; சனிக்கிழமை அன்று திருநள்ளாரு சென்று அதிகாலையில் அங்குள்ள நள தீர்த்த குளத்தில் நல்லெண்ணெய் தேய்த்து நீராடி ,சனிபகவானை வழிபட்டுவிட்டு மரகத லிங்க தரிசனமும் பார்த்து வரவும்...

ச்னிக்கிழமை தோறும் காகத்துக்கு சாதம் வைத்த பின் மதியம் உணவு உண்ணவும்..சனிக்கிழமையில் அசைவம் வேண்டாம்...

சனிக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலையில் கிராம்பு வைத்து அதை மடித்து உங்கள் கையால் 48 வெற்றிலையை  மாலையாக கட்டி அனுமனுக்கு நெய்தீபம் ஏற்றி வெற்றிலை மாலையை போட்டு வழிபடவும்..

வசதி இருப்பவர்கள் ஏழைகள் 50 பேருக்கு செருப்பு தானம் செய்யவும்....ஊனமுற்றவருக்கு உடைகள் வாங்கி தரவும்..

குழந்தைகளுக்கு சனிக்கிழமையில் எள்ளுருண்டைசாப்பிடக்கொடுக்கலாம்

சர்வ ஜன வசிய எந்திரம்;

இது இருபக்கமும் வசிய மந்திரம் எழுதப்பட்டது பாக்கெட்டில் வைத்துக்கொள்ளக்கூடியது மணிபர்சிலும் வைத்துக்கொள்ளலம்..பணப்பெட்டியில் வைத்துக்கொள்ளலாம்...இதனை என் குரு எனக்கு வரைந்து கொடுத்தார் இதனை உங்களுக்கு நான் வரைந்து பூஜித்து தருகிறேன்..காரியம் வெற்றி அடைய சகலரும் வசியம் ஆக,பணம் எப்போதும் கையில் தங்க ,கடன் பிரச்சினை தீர இது பெரிதும் உதவுகிறது...நான் பெற்ற அதிர்ஷ்டம் எல்லோரும் பெற வேண்டும்..தேவைப்பட்டால் தொடர்புகொள்ளவும் 9443499003 மெயில் ;sathishastro77@gmail.com


தெய்வீக மூலிகை சாம்பிராணி;

லட்சுமி வசியம் உண்டாக,நோய்கள் நீங்க,வீட்டில் கெட்ட சக்திகள் விலக 23 மூலிகைகளை கொண்டு நான் உருவாக்கியதுதான் தெய்வீக மூலிகை சாம்பிராணி..

இதில்சாம்பிராணி,குங்கிலியம்,மருதாணி,அகில்,தேவதாரு,வெண்கடுகு,கோஷ்டம்,
அரசவிதை,கெடாமஞ்சள், வெட்டிவேர்,விளாமிச்சை வேர்,கோராஜனம்,புனுகு,சந்தனம் என தெய்வீக வசியம் உண்டாக்கும் மூலிகைகள் அனைத்தும் அரைத்து கலக்கப்பட்டுள்ளன...தேங்காய் மூடியை நெருப்பில் காட்டி அதை தனலாக பயன்படுத்தி இந்த பொடியை சாம்பிராணி போல உபயோகிக்கவும்...நவகிரக ஹோமம்,லட்சுமி ஹோம்,கணபதி ஹோமம் வளர்த்தால் என்ன பலன் உண்டாகுமோ அந்த பலன் முழுமையாக கிடைக்கும்..நோய் விலகும்...கடன் தீரும்.வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள்,செய்வினை பாவங்கள் விலகி வீட்டில் தெய்வ சக்தி அதிகமாகும்..

தேவைப்படுபவர்கள் மெயில் செய்யவும் அல்லது போன் செய்யவும்.. வீடுகளில் ,அலுவலகங்களில் சாம்பிராணி புகை போடுவது போல உபயோகியுங்கள் நல்ல பலனை அடைவீர்கள்..கணபதி ஹோமம்,லட்சுமி ஹோமம் வளர்ப்பதற்கு இணையானது..மெயில்;sathishastro77@gmail.com


புதன், 24 செப்டம்பர், 2014

குடிப்பழக்கம் ,பந்தயத்தால் துன்பப்படுவோர் ஜாதகம் ;மங்கள்யான் -செவ்வாய்-ஜோதிடம்

ஜோதிடத்தில் பொதுவாக குடிப்பழக்கம் என வைத்து சொல்லும்போது செவ்வாய் தான் முக்கிய காரணமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது....செவ்வாய் தான் குணத்தை கெடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது...தமிழ்நாடு செவ்வாய் பூமியாக இருப்பதால்தான் செவ்வாய்க்கு அதிபதியான முருகன் சிலைகளை அதிகம் வைத்து வழிபட வைத்தனர் நம் முன்னோர்.இன்று மங்கள்யான் விண்கலம் செவ்வாயை ஆய்வு செய்துவரும் நிலையில் ,செவ்வாய் கிரகம்தான் இதுக்கெல்லாம் காரணம் என சொல்லலாமா என கேட்காதீர்கள் ..சந்திராயன் விண்களம் சந்திரனை  ஆய்வு செய்தாலும் பெள்ர்ணமி அன்று கடல் பொங்கத்தான் செய்கிறது காரணம் சந்திரனின் ஈர்ப்பு சக்திதான்...எத்தனை அறிவியல் வளர்ந்தாலும் இயற்கைதான் எப்போதும் வெல்லும். அதைப்பற்றி தெரிந்துகொள்ளலாமே தவிர அதை வெற்றிக்கொள்ள முடியாது..

குடிப்பழக்கம்,சூதாட்டம் பற்றி ஒரு ஜோதிட பாடல் இவ்வாறு சொல்கிறது.

மங்களன் ராசிதன்னில்
மாபுதன் வாசம் செய்ய
அங்கவன் தன்னைச் செவ்வாய்
அனைத்திட நோக்க வந்தோர்
பந்தய போட்டியாலே
பணமதை விரயமாக்கி
நிந்தனை போதையாலே
நெறியிலா துழல்வாராமே !’’

செவ்வாயின் ராசிகளான மேசம்,விருச்சிகம் ஆகிய ஒன்றில் புதன் இருக்க அப்புதனுடன் செவ்வாய் சேர்ந்திருந்தாலும் அல்லது பார்த்தாலும் போட்டி பந்தயம்,சூதாட்டம்,போன்றவற்றில் பணத்தை இழப்பதோடு குடிக்கு அடிமையாகி நெறி தவறியும் நடப்பர் என்று சொல்கிறது இந்த பாடல்...

செவ்வாய் சக்தியை குறிக்கிறது...அதனுடைய இருக்குமிடம் ,பார்வை பொறுத்து ஆக்கம் மற்ரும் அழிவை தருபவராக இருக்கிறார்..செவ்வாய் உணர்ச்சிபூர்வமான கிரகம்..ஒருவருக்குள் இருக்கும் மிருக உணர்ச்சியை ஆட்சி செய்கிறது.....குழப்பம்,சண்டை,வாக்குவாதம்,விபத்து,கலவரம் இவற்றுக்கு செவ்வாய்தான் அதிபதி..புதன் ஒரு சஞ்சலம் நிறைந்த கிரகம் மாறிக்கொண்டே இருக்கும் குணத்தை சொல்கிறது...சிற்றின்பத்தில் நாட்டம் கொண்டது யாருடன் சேர்கிறாரோ அதற்கேற்ப ஆட்டி வைக்கும்...தீயவரோடு சேர்ந்தால் தீயவராகிவிடுவார்...இவர்கள் இருவரும் சேர்ந்தால் எல்லா தீய செயல்களிலும் ஈடுபடுவார்கள் அதாவது ஜாதகரை ஈடுபட செய்வார்கள்...

புரட்டாசி மகாளயபட்ச அமாவாசை அன்னதானம்;நண்பர்களுக்கு நன்றி

புரட்டாசி அமாவாசை எனும் புனிதமான நாள் அன்று நாம் செய்யும் தானம் தர்மம் நமக்கு அளவில்லாத நன்மைகளையும் புண்ணியத்தையும் அள்ளித்தரும் என நம் பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள்....மகாளயபட்சம் 15 நாட்கள் இறந்துபோன நம் முன்னோர்கள் சூரியன்,சந்திரன் அருளால் பூமியில் உலவும் காலம் ஆகும்...பல புண்ணிய ஆத்மாக்கள் நம்மை அணுகும் காலமும் இந்த புரட்டாசி அமாவாசையில்தான் அப்படிப்பட்ட மகா உன்னத நாளில் வருடம் தோறும் சில தர்மங்களை நண்பர்களின் உதவியுடன் செய்து வருகிறேன்...பலருக்கும் அதை நேரில் செய்ய முடியாத சூழ்நிலை..ச்லர் வெளிநாட்டில் இருப்பதால் கலந்துகொள்ள முடியாத நிலை என்பதால் என் உதவியுடன் அதை நிறைவேற்ற விரும்புகின்றனர்....அதற்காக நானும் கடந்த மூன்று புரட்டாசி அமவாசையிலும் செய்து வருகிறேன்...அடுத்து தை அமாவாசையிலும் செய்ய இருக்கிறேன்.

நேற்று செவ்வாய்க்கிழமை 23.9.2014 கண்பார்வையற்றோர் இல்லம் சென்று 150 பேருக்கு அன்னதானம் செய்தோம்...முதியோர்களுக்கு உடைதானம் செய்தோம்...ஆதரவற்றோர் இல்லத்துக்கு பொருட்கள் வாங்க உதவி செய்தோம்.....ஆதரவளித்த நண்பர்களுக்கு நன்றி....அவர்களுக்காக சிறப்பு அர்ச்சனை வழிபாடு செய்யப்பட்டது....அவர்களது குடும்பம் பூரண உடல்நலம்,மனநலம்,செல்வவளம் பெற்று நீடூழி வாழ பிரார்த்தனை செய்யப்பட்டது....திருவருள் துணையுடன் நல்லதே நடக்கும்!!






செவ்வாய், 16 செப்டம்பர், 2014

சொர்க்கம் நரகம் இருக்கிறதா ..நம்ப முடியாத உண்மைகள்

சொர்க்கம் ,நரகம் இருக்கிறதா...நிச்சயம் இருக்கிறது....நம்முடைய உயர்ந்த ,நல்ல எண்ணங்கள் ,செயல்பாடுகள் பொறுத்து இறந்த பின் அந்த ஆத்மா அதாவது ஆவி உருவம்..சந்திரனை நோக்கி சென்றால் வைகுண்டம்..மறுபிறப்பு உண்டு....அப்பிறவியில் சுகமான வாழ்க்கையுண்டு ....சூரியனை நோக்கி சென்றால் சொர்க்கம் மறுபிறவி இல்லை....இருள் கிரகமாகிய சனியை நோக்கி சென்றால் நரகம்....!! பல நூறு ஆண்டுகள் கஷ்டம் உண்டு....கருட புராணம் இதை சொல்கிறது .இந்த சட்டங்கள் வயோதிகம்,நோய்வாய்ப்பட்டு இறப்பவர்களுக்கு மட்டும்..விபத்து,தற்கொலை என இறப்பவர்களுக்கு அப்படி அல்ல...அவர்கள் ஆவி,பிசாசு எனப்படுகின்றனர்...இறந்த 20 அடிக்குள் அந்த ஆவி அலையும்..உயரக்கிளம்பவும் முடியாது..வெளியே செல்லவும் இயலாது..அருளாளர்களின் ஆசி கிடைத்தால்தாம் மோட்சம்.
 ------------------------------------------
தார்த்த குண சிந்தாமணி எனும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட வைத்திய நூல் என்னென்ன உணவு சாப்பிட்டால் என்னென்ன நோய் தீரும் மற்றும் குணநலன் எப்படி மாறும் என விளக்கி உள்ளது.

உப்பு அதிகம் சேர்த்தால் ஆணவம் அதிகரிக்கும்...புளி அதிகமானால் பொறாமை குணம் அதிகரிக்கும்.தயிர் அதிகம் உண்டால் சோம்பேறித்தனம் உண்டகும்.மாமிசம் அதிகம் உண்டால் காம உணர்வை அடக்க முடியாது.காரம் அதிகமானால் கோபம் அதிகரிக்கும்.பச்சரிசி சாதம் மூளைக்கு பலம் கொடுக்கும்.கோதுமை உடலுக்கு பலம் கொடுக்கும்.இவற்றை சமமாக எடுத்துக்கொண்டால் பக்குவமாக வாழ முடியும்!!
 --------------------------------------------
 ல்லா கோயில்களிலும் இப்போதெல்லாம் கோயில் கர்ப்ப கிரகத்தில் அதிக வெளிச்சம் கொண்ட லைட்டுகளை போட்டிருக்கின்றனர்....டியூப்லைட் ,மற்றும் பாதரச விளக்குகளின் பாதிப்பால் தேவதைகள் சக்தி இழக்கும்..இதனால் கோயிலில் இருக்கும் நன்மை செய்யும் தேவதைகள் வெளியேறக்கூடும்....நெய்தீபம்,மற்ரும் நல்லெண்ணெய் தீபம் மட்டுமே தேவதைகளை மகிழ்ச்சி படுத்தும்..அந்த இடத்தை சுற்றி சுற்றி வரும்!! வணங்குவோர்க்கு ஆசியும் கிடைக்கும்!!.

 -----------------------------------------------
ஜாதகத்தில் செவ்வாய்,சனி நன்றாக இருப்பவர்கள் கடுமையாக உழைத்து முன்னேறுகிறார்கள்..குரு,சுக்கிரன் நன்றாக இருப்பவர்கள் உழைக்காமல் அதிர்ஷ்டவசமாக சுலபமாக முன்னேறிவிடுகிறார்கள்...மாமனார் சொத்தோ ,தந்தை சொத்தோ அவர்களுக்கு இயல்பிலேயே சுகவாசியாக வாழ வைத்துவிடுகிறது..அல்லது பினாமியாக கூட இருக்கலாம் 
 ------------------------------------------------
 தாங்க முடியாத அளவிற்கு எதிரிகளால் துன்பம் அடைபவர்களையும் , விபத்து , துர்மரணம் இவற்றிலிருந்தும் காப்பவர் பைரவர் மட்டுமே . இத்துன்பங்களில் இருந்து விடுபட பைரவரை தான் சரணடைய வேண்டும்
பைரவரிடம் பிரார்த்தனை செய்து கொண்டு உங்கள் பிரார்த்தனை நிறைவேரும் வரை ஒவ்வொரு சனி கிழமையும் வெண்பூசணி யில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும்
சனி கிழமை காலை 6 மணி முதல் மாலை 8 மணிக்குள் அல்லது கோவில் நடை சாத்துவர்க்குள் வெண்பூசணி யில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும்

திறந்திருக்கும் பைரவருக்கு தான் விளக்கு போட வேண்டும் , கண்டிப்பாக பைரவர் சிலையை திரை இட்டு மூட்டி இருந்தாலோ , கதவு சாத்தி இருந்தாலோ அந்த பைரவருக்கு விளக்கு போட கூடாது..
 -----------------------------------------
 ஜாதகத்தில் மாந்தி என இருப்பதை பார்த்திருப்போம்..மாந்தி என்பது சனியின் புத்ரன் அகும்..மாந்தி பற்றி கேரள ஜோதிடர்கள் அதிகம் பயப்படுவர்..அதை பற்றியே பலன் சொல்வர்..தமிழகத்தில் சனிக்குதான் அதிக முக்கியத்துவம்..மாந்தி சனியின் பலன்களை ஒட்டியே இருக்கும்...சனி போலவே மாந்தி லக்னத்துக்கு மறைந்து இருந்தால் நல்லது 2,7 ஆம் இடங்களில் இருந்தால் திருமணம் லேட் ஆகும் ..குடும்பம் அமையாது என சொல்லப்படுவதுண்டு..6,10,11 ல் இருந்தால் நல்ல யோகத்தை தருகிறது

வியாழன், 11 செப்டம்பர், 2014

பராசக்தியை நேரில் காண வேண்டுமா..? தெய்வ தரிசனம்


பராசக்தியை நேரில் காண வேண்டுமா..? ஒரு ஆன்மீக பெரியவர் இம்முறையை பயன்படுத்தி தரிசனம் செய்ததாக சொன்னது;

ஒரு சனிக்கிழமை அன்று குளித்து விட்டு 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வேப்பமரம் இருக்கும் இடம் செல்ல வேண்டும்.அதில் ஏறி ஆயுதம் உபயோகிக்காமல் கையினால் பெருவிரல் தடிமனாக இருக்கும் ஒரு வேப்பங்குச்சியை ஒடித்து எடுக்க வேண்டும்.குச்சி வளையாமல் கோணல் இல்லாமல் இருக்க வெண்டும்.குச்சி இரண்டு அடி இருக்க வேண்டும்.கருங்கல்லில் தேய்ஹ்து அதன் தோல் பிசிறுகளை எடுத்துவிட்டு வழுவழுப்பாக்கி கொள்ளவும்.அதன் மேல் சந்தனம் பூசிக்கொள்ளவும்....

அமாவாசை அன்று காலையில் சிவப்பு நிற பட்டுத்துணியில் குச்சியை மூடி வைக்கவும்..இரவு 9 மணிக்கு மேல் மூடிய குச்சி மேல் தலையணை வைத்து படுக்கவும்..வடக்கே பார்த்து படுக்கவும்.

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஆதிபராசக்தியே நமஹ ‘’ என மந்தால் ஜெபித்துக்கொண்டே தூங்கி விடவும்...பெள்ர்ணமி வரை இதை கடைபிடிக்கவும் 12 நாட்களில் நட்சத்திரக்கூட்டங்கள் கனவில் தோன்றும்....பெளர்ணமி அன்று நட்சத்திர ஒளியில் பராசக்தி தோன்றுவாள்...

60 நாட்கள் இதை கடைபிடித்தால் வருங்காலம் உங்கள் மனத்திரையில் காணலாம்...!!

கன்னி,துலாம்,விருச்சிகம்,தனுசு ராசியினருக்கு..ஜோதிடம்

கன்னி ராசிக்கு ஏழரை சனி முடிகிறது..மீனம் ராசியினருக்கு அஷ்டம சனி முடிகிறது...இனிமேல் இதையே சொல்லி புலம்பி கொண்டிருந்த நீங்கள் இனி தெம்பாக உற்சாகமாக உழையுங்கள்...அப்புறம் இந்த விருச்சிக ராசிக்காரங்க.துலாம் ராசிக்காரங்க...இன்னும் 3 மாசத்துல ஏழரை சனி ஆரம்பிக்கப்போகும் தனுசு ராசிக்காரங்களுக்கு ஒரு வேண்டுகோள்.....இன்னும் 5 வருசத்துக்கு சனி பகவானை திட்டிக்கிட்டே இருக்காதீங்க..உங்க கடமையை எப்போதும் போல் செய்ங்க..
தடுக்கி விழுந்தாலும் ஏழரை சனி நடக்குது அதான் இப்படின்னு புலம்பாதீங்க...

கோட்சாரம் என்பது சனி மட்டுமல்ல இன்னும் 8 கிரகங்களும் இருக்கு...உங்க குணாதிசயம்,வாழ்க்கை முறை,பழகும் குணத்தாலும் உங்கள் வாழ்க்கையில் பல துன்பங்கள் உண்டாகும்...எல்லாவற்றுக்கும் சனி மட்டுமே காரணமல்ல...சனியை போல கொடுப்பார் இல்லை..அவர் நீதிமான். உங்கள் உழைப்புக்கேற்ற பலன் தான் கொடுப்பார் எனவே உங்கள் முழு திறமையை வெளிப்படுத்துங்கள்.. கடுமையாக உழையுங்கள் எல்லோரிடமும் அன்பாக பழகுங்கள்..யாரையும் பழி வாங்காதீர்கள்..பனிப்போர் புரியாதீர்கள்..
குடும்பத்தாரை எப்போதும் கரித்து கொட்டாதீர்கள்..சக ஊழியர்களுடனும் ,பக்கத்து வீட்டினரிடமும் வெறுப்பாக பழகாமல் ,புன்னகையுடன் வாழுங்கள்...பிறரையும் சந்தோசப்படுத்துங்கள் எல்லாம் இனிதாகும்!!

ஒரு அறிவிப்பு;

 23.9.2014 புரட்டாசி மகாளயபட்ச அமாவாசை க்கு ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் மூன்றாம் ஆண்டாக அன்னதானம் செய்ய இருக்கிறேன்..ஆதரவற்ற முதியவர்களுக்கு உடைகள்,செருப்புகள்,போர்வைகள்,படுக்கை (பாய்) தானம் நண்பர்கள் உதவியுடன் செய்யலாம் என இருக்கிறேன்....உங்கள் குடும்பத்தார் பெயரில் அன்று மூன்று சிறப்பு கோயில்களில் அர்ச்சனை வழிபாடு பிரார்த்தனை செய்யப்படும்..குடும்பத்தார் நட்சத்திர விபரத்துடன் மெயில் செய்யலாம் ...

உங்கள் பங்களிப்பையும் எதிர்பார்க்கிறேன் நன்றி!!

பேச ;9443499003 /மெயில்;sathishastro77@gmail.com

செவ்வாய், 9 செப்டம்பர், 2014

புரட்டாசி மகாளயபட்ச அமாவாசை 23.9.2014 அன்னதானம்

புரட்டாசி மகாளயபட்ச அமாவாசை 23.9.2014

வான நட்சத்திர மண்டல விஞ்ஞானத்தின்படி சூரியன், சந்திரன் ஆகிய இரண்டு கிரகங்கள் சுழற்சி முறையில் ஒரே ராசியில் சேர்வதே ‘அமாவாசை’ ஆகும். ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசிக்குள் சூரியன் பிரவேசிக்கிறது. இதன்படி ராசி சக்கரத்தில் தென்மேற்கில் உள்ள கன்னி ராசிக்குள் சூரியன் செல்லும்போது புரட்டாசி மாதம் பிறக்கிறது. புரட்டாசி மாதத்தை ஆன்மிக மாதம் என்றே சொல்லலாம்.

புரட்டாசி மாதம் அமாவாசை மகாளயபட்ச அமாவாசை எனப்படும்...மற்ற அமாவாசையை விட புரட்டாசி அமாவாசை சிறப்பு வாய்ந்தது...மகாளய காஅம் இன்று முதல் அமாவாசைக்கு அடுத்த நாள் வரை தொடர்கிறது அதாவது 9.9.2014 முதல் 24.9.2014 வரை.புரட்டாசி அமாவாசைக்கு முன் பதினான்கு நாட்களாக விரதம் இருந்து அமாவாசை அன்று நம் மூதாதயருக்கு தரும் தர்ப்பணம் நம் குலத் தோன்றல்களுக்கும் எதிர்வரும் சந்ததியர்களுக்கும் செல்வச் செழிப்பையும் நற்பண் புகளையும் தரவல்லது. மகாள பட்ச காலத்தில் நமது பித்ருக்கள் (மூதாதையர்கள்) தங்க ரதத்தில் சூரியனின் ஒளிக்கதிர்களின் வழியாக பித்ரு தேவதைகளின் அனுமதியுடன் பூலோகத்தில் உள்ள தங்கள் சந்ததியர்களை காணவருகின்றார்கள்.

இறந்தவர்களின் போட்டோவுக்கு வீட்டில் மலர் மாலைகள் சூட்டி, அவர்கள் விரும்பி சாப்பிட்ட உணவு வகைகளை படைத்து வணங்கலாம். இறந்த அப்பா, அம்மாவுக்கு திதி, சிரார்த்தம் செய்யாமல் விட்டவர்கள், அப்பா, அம்மா
இறந்த தேதி, திதி போன்றவற்றை மறந்தவர்கள் இந்த மகாளய அமாவாசையில் அவர்களை நினைத்து வணங்கலாம். துர்மரணம், விபத்து, அகால மரணம்
அடைந்தவர்கள் ஆத்மா சாந்தியடைந்து முக்தி கிடைப்பதற்கு இந்த நாள் மிகவும் உகந்ததாகும்.


தானம், தர்மம் செய்வதற்கு மிக உகந்த நாள் என்பதால் 3 ஆம் வருடமாக இந்த ஆண்டும் ,நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகள் மற்ரும் முதியவர்களுக்கு அன்னதானம்,உடைதானம் வழங்க இருக்கிறோம்..என்னுடன் இணைந்து அன்னதானம்,உதவிகள் செய்ய விரும்பும் நண்பர்கள் மெயில் செய்யவும்..sathishastro77@gmail.com ...போன் 9443499003

நன்கொடை அனுப்ப விரும்புகிறவர்களுக்கான  வங்கி விபரம்;

k.sathishkumar 20010801181 State bank of India ,bhavani Ifsc;sbin0000971

திங்கள், 8 செப்டம்பர், 2014

வளர்ச்சியும் ,முன்னேற்றமும் உண்டாக என்ன வழி..?



நம் பெரியோர்கள், நமது வீட்டில் எப்போதும் சிரிப்பும் ஆனந்தமும் பெருக வேண்டும் என்பதை வலியுறுத்தினார்கள் குழந்தைகள் விளையாடும் சந்தோச ஒலி,பறவைகள் எழுப்பும் இனிய கீதம்,வீணை,மிருதங்கம்,புல்லாங்குழல் இசை நம் இல்லங்களில் நிறைந்திருந்தால் லட்சுமி அருள் நிறைந்திருக்கும்...வளர்ச்சியும் ,முன்னேற்றமும் நாளுக்கு நாள் வளரும்...டிவி அழுகை சேஇயல்களை தினமும் மாலையில் பார்த்து மன அழுத்தத்துக்கு ஆளானால் ரத்த அழுத்தம் உட்பட நோய்கள் பெருகுவதுடன் வீட்டில் தரித்திரம் உண்டாகும்....நெகடிவ் அலைகள் பெருகி உங்கள் வளர்ச்சி முடங்கி கடன் தொல்லை அதிகமாகும்..இனியேனும் இதனை உணர்ந்து செயல்படுங்கள்..

  விருச்சிகம் ராசியில் செவ்வாய் சஞ்சரிக்கும் இக்காலத்தில் செவ்வாய் அங்கு ஆட்சி பெறுவதால் ,விருச்சிகம் ராசியினருக்கு நல்லது நடக்கும்...மனபலம்,பணபலம் உண்டாகும்...சிம்மம்,மேசம் ராசியினருக்கும் செவ்வாய் கரிய அனுகூலத்தை உண்டாக்குவர் இதுவரை இருந்த பயம் விலகி தெளிவு பிறக்கும்..தடங்கல்கள் விலகும்.....செப்டம்பர் 26 முதல் சுக்கிரன் நீசம் ஆவதால் ரிசபம்,துலாம்,கன்னி ராசியினருக்கு அச்சமயம் விரய செலவுகள் ,சுப செல்வௌகள் அதிகமாகலாம்..இப்போதே அதற்குண்டான வகையில் திட்டமிட்டு செயல்படுவது நல்லது..வானில் இருந்த கண்டம் விலகி இப்போதூ நீரால் கண்டம் உண்டாகும் என சொல்லி இருந்தேன்....நீர் ராசியான விருச்சிகத்தில் செவ்வாய் நுழைய ஆரம்பித்ததும்,ஜம்மு காஷ்மீரில் 500 கிராமங்கள் நீரால் மூழ்கி இருக்கிறது..9 ராணுவ வீரர்கள் உட்பட 200 க்கும் மெற்பட்டவர்கள் பலியாகி இருக்கின்றனர்..தண்ணீருக்கு நம் ஊரிலும் பஞ்சம் இல்லை..மேட்டூர் அணை 100 அடியை எட்டி இருக்கிறது....அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு..அது தண்ணீராக இருந்தாலும் சரி..


 ஆணுக்கும் பெண்ணுக்கும் 10 பொருத்தம் அமைந்தாலும் ஜனன ஜாதக கட்டத்தை பொறுத்தே வாழ்க்கை இன்பமா துன்பமா என்ற முடிவு தெரியும்...இதை சரியாக ஆராயாமல் திருமணம் செய்தால் பத்து பொருத்தம் இருந்தாலும் குடும்ப வாழ்வில் மனநிம்மதி இருக்காது....எதுக்கு கல்யாணம் செய்தோம் என விரக்தி உண்டாகிவிடும்...

 ஜாதகத்தில் லட்சுமி ஸ்தானம் ,விஸ்ணு ஸ்தானம் என்றெல்லாம் புகழப்படுபவை 5,9ஆம் இடங்கள் தான் இவற்ரில் சுப கிரகங்கள் இருந்தால் போதும் வாழ்வில் வெற்றிமேல் வெற்றி உண்டாகும்..சொத்துக்கள் சேர்க்கை நிறைய உண்டாகும்...நினைத்தது தடையில்லாமல் நடக்கும்...5 பூர்வபுண்ணியம் 9 பாக்யஸ்தானம்..மனைவி அமைவதும்,நல்ல பிள்ளைகள் கிடைப்பதும் நல்ல வீடு அமைவது எல்லாம் பாக்யம் தான்...நினைச்சது வெற்றிகரமா முடியனும்னா பூர்வபுண்ணியம் நல்லாருக்கனும் ....இல்லைன்னா தோல்வி மேல தோல்விதான்..

 குளிகை காலம் நம் ஊரில் அதிகம் பயன்படுத்தப்படுவது இறந்தவர்களை இடுகாட்டுக்கு தூக்கும்போது இந்த நேரத்தில் எடுக்ககூடாது என்பதற்காகத்தான்...இந்த நேரத்தில் எடுத்தால் திரும்ப திரும்ப கெட்டது நடக்கும் என ஒரு நம்பிக்கை உண்டு...அதை தவிர வெகுஜன மக்களதிகம் வேறு எதற்கும் இதனை பார்க்க மாட்டார்கள்....எனக்கு தெரிந்த ஒருவர் இந்த குளிகை நேரத்தை நல்ல காரியத்துக்கு அதிகம் பயன்படுத்துவார் குளிகையில் நிலம் சொத்துக்களும் வாங்குவார் ..கேட்டால் அப்பதானே திரும்ப திரும்ப வாங்க முடியும்...இந்த நேரத்தில் கடன் வாங்கிடாதீங்க திரும்ப திரும்ப வாங்கும்படி ஆகிடும்!!

கிழமை = குளிகை நேரம் :: பகல் பொழுதில்

ஞாயிறு = 03.00 - 04.30

திங்கள் = 01.30 - 03.00

செவ்வாய் = 12.00 - 01.30

புதன் = 10.30 - 12.00

வியாழன் = 09.00 - 10.30

வெள்ளி = 07.30 - 09.00

சனி = 06.00 - 07.30

கிழமை = குளிகை நேரம் :: இரவுப் பொழுதில்

ஞாயிறு = 09.00 - 10.30

திங்கள் = 07.30 - 09.00

செவ்வாய் = 06.00 - 07.30

புதன் = 03.00 - 04.30

வியாழன் = 01.30 - 03.00

வெள்ளி = 12.00 - 01.30

சனி = 10.30 - 12.00


சனி, 6 செப்டம்பர், 2014

லட்சுமி கடாட்சம் உண்டாக செல்வவளம் பெருக எளிய பரிகாரம் ;ஜோதிடம்

சம்பளம் வாங்கியவுடன் வாங்கவேண்டிய மங்களப் பொருட்கள் இனிப்பு,பால்,மல்லிகைப்பூ, இவற்றில் ஒன்றையாவது வாங்கினால் செல்வம் பெருகும்..வீண் செலவுகளை குறைக்கும்..விருத்தியாகும்...

பூமிகாரகன் ,ரத்தத்துக்கு அதிபதி,ஆரோக்கியத்துக்கு பாதுகாவலன்,தொழிலுக்கு கர்த்தாவான முருகனின் விருப்பமான செவ்வரளி மரத்தை வீட்டில் வளர்த்தால் வீட்டுக்கடன் விரைவில் அடைபடும்..நோய்கள் பாதிப்பு குறையும்..மருதாணி வளர்த்தால் கெட்ட சக்திகள் அண்டாது பன்னீர் ரோஜா,மல்லிகைப்பூ செடி ,வளர்த்தால் கணவன் மனைவி வசியம் உண்டாகும்...முல்லைச்செடி வளர்த்தால் பெரியோர்கள் ஆசி கிடைக்கும்..செல்வாக்கு வளரும்..செம்பருத்தி வள்ர்த்தால் பெண்களுக்கு அதிர்ஷ்டம்..மாதுளை வளர்த்தால் அறிவான குழந்தைகள் பாக்யம் உண்டாகும்....!!

கஜலட்சுமி உருவத்தை மரத்தில் செதுக்கி தலைவாசலுக்கு மேல்புறம் வையுங்கள் வாஸ்து மீறல்கள் நீங்கி தோசம் நீங்கி முன்னேற்றம் உண்டாகும் கண் திருஷ்டி போகும்..யனை என்பது குருவின் வாகனம் இதனை வாசல் பகுதியில் சிலையாக வைக்கும்போது செல்வாக்கு அதிகரிக்கும்..முன்பெல்லாம் வீட்டு படியில் யானை சிலையை இருபுறமும் செதுக்கி இருப்பார்கள் இது களிற்றுப்படிகள் எனப்படும் இப்போதெல்லாம் நிறைய மாடர்ன் டிசைன்கள் வந்துவிட்டன...ஆனால் அந்த களிற்றுப்படிகள் விசேஷ சக்தி கொண்டது..

தெரு வழியே யானை போனால் தண்ணீர் கொடுத்து வீட்டின் மீது தெளிக்க செய்யலாம்...இதனால் தரித்திரம் விலகி அதிர்ஷ்டம் உண்டாகும்..வெல்ளிக்கிழமை மாலையில் உப்பு வாங்கினால் அதிர்ஷ்டம்...கரி ,விறகு ,பஞ்சு  போன்றவை வாங்கக்கூடாது..


பெளர்ணமி தினத்தில் இரவு குளித்துவிட்டு,மொட்டை மாடியிலோ நதிக்கரையிலோ அல்லது மலை மீதோ அமர்ந்து , சந்திர ஒளியில் காயத்ரி மந்திரம் ,கனகதாரா ஸ்தோத்திரம்,சொல்லலாம் அல்லது நல்ல கருத்துக்கள் உடைய தெய்வீக துதிகள் படிக்கும்போது அதற்கு சக்தி அதிகம்....அந்த ஸ்லோகத்தில் சொல்லப்பட்டிருக்கும் பலன்கள் உங்களுக்கு பலிக்க ஆரம்பித்து நன்மைகள் வந்து சேரும்...கணவன் மனைவி இருவரும் சேர்ந்து இதை படிக்கலாம்....நீங்கள் எதிர்காலத்தில் என்னவெல்லாம் அடைய விரும்புகிறீர்களோ அதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கலாம்...உரத்து பேசக்கூடாது....உங்கள் கனவுகளை பலமுறை விவாதித்து பேசும்போது ஆழ்மனதில் பதியும் அது பிரபஞ்ச சக்தியால் கிரகைக்கப்பட்டு அது உங்களை வந்தடையும் விரும்பியதை கிடைக்கச்செய்யும்....பெளர்ணமி அன்று கந்த சக்தி பூமியில் அதிகம்..தேவதைகள் பூமிக்கு வருகை தரும் நாள்...அமைதியான சுத்தமான இடத்தில் நல்ல வார்த்தைகளை பேசும்போது அந்த தேவதைகள் உங்கள் உடன் அருகில்  இருந்து அப்படியே ஆகட்டும் என்பார்கள்...

வெள்ளி, 5 செப்டம்பர், 2014

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்

பலருக்கும் கண் திருஷ்டியில் நம்பிக்கை கிடையாது...நம்பிக்கை இருப்பவர்களுக்கு இந்த தகவலை பகிர்கிறேன்..
இல்லாதவன் இருப்பவனை பார்த்து பெருமூச்சு விடுவதும்..ஏக்கப்பார்வை பார்ப்பதும்,கண்களால் கண்டு பொறாமைப்படுவது கண்பார்வை திருஷ்டி எனப்படும்...கிராமங்களில் இதனை எப்படி கழிக்கிறார்கள் என பார்ப்போம்..
சிலர் கல் உப்பு கொஞ்சம் எடுத்து 3 முறை சுற்றி ஓடும் தண்ணீரில் போடுவார்கள்..பிறந்த குழந்தைகளுக்கு ஒரு வேஷ்டி துணி சிறிது கிழித்து திரி செய்து திரியை தலை முதல் கால் வரை வலது புறம் தடவி மற்றொரு திரியை இடதுபக்கமாக தடவி அதனை சுவர் ஓரமாக வைத்து எரிய விடவும்...குழந்தை அழாமல் தூங்கி விடும்.

குடும்பத்தில் இருக்கும் அனைவரின் தோசம் நீங்க,தெருமண் கொஞ்சம் எடுத்து கடுகு,உப்பு,மூன்று மிளகாய்,எல்லாம் சேர்த்து கிழக்கு பார்த்து அமர்ந்து மூன்று முறை எல்லோரையும் சுற்றி எரியும் விறகு அடுப்பில் போட்டுவிடவேண்டும்..இது கண் திருஷ்டியை போக்கும் இதை செவ்வாய் அல்லது ஞாயிற்றுக்கிழமையில் செய்வார்கள்..

நம் வீட்டிற்குள் கெட்ட சக்தி நுழையாமல் தடுக்கவும்,கெட்ட எண்ணம் உடைய மனிதர்களின் தாக்கம் பாதிக்காமல் இருக்கவும்,கண் திருஷ்டி விலகவும் வீட்டு வாசலில் பெள்ர்ணமியில் நீர் பூசணி கட்டி தொங்கவிடலாம் வளர்பிறை வெள்ளிக்கிழமையில் காலை 9 மணிக்கு கற்றாழை கட்டி தொங்கவிடலாம்...வாசலுக்கு மேல்...ஒரு எலுமிச்சை,ஒரு பச்சை மிளகாய் என மார்ரி மாற்றி 3 எலுமிச்சை நான்கு பச்சை மிளகாய் என கெட்டியான கயிறில் கோர்த்து தொங்கவிடலாம்...செவ்வாய் கிழமையில் இதை செய்யலாம்..!! சிலர் படிகாரக்கல்,வெள்ளெருக்கு வேர்,மருதாணிக்கட்டை சேர்த்தும் தொங்க விடுவர்...

மூன்று வயது குழந்தை வரை கன்னத்தில் கறுப்பு பொட்டு வைத்துவிடுவர்..இதுவும் கெட்ட கண் பார்வையை தடுக்கும்...நாமும் வெளியே செல்லும்போது கறுப்பு பொட்டு சிறிது வைக்கலாம்..அந்த கறுப்பு பொட்டு ஹோம குண்டத்தில் எடுக்கப்பட்ட சாம்பலாக இருக்க வேண்டும் அதனை நெய்யில் கலந்து இட்டுக்கொள்ள வேண்டும்...வீட்டு நிலையில் வெள்ளி தோறும் மஞ்சள் சிறிது பூசி குங்குமம் இடவேண்டும்..இது நோய்கிருமிகளை அண்டாமல் பாதுகாப்பது மட்டுமில்லாமல் கண் திருஷ்டியையும் போக்கும்....

வியாழன், 4 செப்டம்பர், 2014

வேண்டியது வேண்டியபடி கிடைக்கச்செய்யும் கோயில்கள்

சூரிய ஒளி சுவாமி சிலை மீது வருடத்தின் குறிப்பிட்ட நாளில் நேரத்தில் விழுவது போன்ற நுணுக்கமான கட்டிடக்கலை அமைப்பு உலகில் வேறு எங்கும் இல்லை..நம் தமிழகத்தில் முன்னோர்கள் அப்படி பல கோவில்களில் வடிவமைத்துள்ளனர்..அப்படிப்பட்ட கோயில்களில் சூரியன் கர்ப்பகிரகத்தில் ஒளிப்பாய்ச்சும் மாதத்தில் அந்த ஆலயம் சென்று வழிபட்டால் வேண்டியது வேண்டியபடி நடக்கும்....கிருஷ்ணகிரி புதுப் பேட்டை வடக்கு மாடவீதியில் ஸ்ரீ ஞானராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது.
இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் 1ம் தேதி முதல் ஒரு வார காலத்துக்கு அம்மன் மீது சூரிய ஒளி படும் அதிசயம் நடந்து வருகிறது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த பின்னத்தூர் கிராமத்தில் ராமநாத ஈஸ்வரன் கோவில் உள்ளது. மிக பழமையான இக்கோவிலில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் மூலவர் மீது சூரிய ஒளி நேரடியாக படும் நிகழ்வு நடைபெறும்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த செல்லபிராட்டியில் பார்வதி, லட்சுமி, சரஸ்வதி தேவியர் ஒரே உருவமாய், லலிதா செல்வாம்பிகையாக அருள்பாலிக்கின்றனர். கருவறையில் உள்ள அம்மன் சிலை மீது, ஒவ்வொரு ஆண்டும், தட்சணாயண காலத்தில், மூன்று நாட்களும், உத்ராயண நாட்களில் மூன்று நாட்களும், சூரியஒளி நேரடியாக பாயும்.உத்ராயண காலத்தில் சூரியஒளி, காலை, 6:35 மணி முதல், 6:39 மணி வரை, ராஜகோபுர வாசல் வழியாக, சூரியஒளி அம்மன் மீது விழுகிறது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் மீதும் வருடத்தில் குறிப்பிட்ட நாளில் மூலவர் மீது சூரிய ஒளி படுகிறது...

விழுப்புரம் மாவட்டம் திருநாவலூரில் வரலாற்று சிறப்புமிக்க பக்த ஜனேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. சுந்தரர் கயிலையில் பெற்ற சாபம் நீங்க அரூரராக அவதரித்த இத்தலத்தில் சிவன் சுயம்புவாக காட்சியளிக்கிறார். நவக் கிரகங்களில் ஒன்றான சூரியன் இத்தலத்தில் ஈசனை நோக்கி (மேற்கு திசை நோக்கி) பங்குனி மாதம் 23 முதல் 27-ம் தேதி வரை வழிபட்டுள்ளார். அதனால் இந்த தேதிகளில் பக்த ஜனேஸ்வரர் (சிவன்), மனோன்மணி அம்பாள் (பார்வதி) ஆகியோர் மீது காலை சூரிய உதயம் படுவது ஒர் அற்புதமான நிகழ்வாகும்.

திருக்கண்டியூர் பிரமசிரக்கண்டீசுவரர் கோயில் சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றான இது தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு வட்டத்தில் அமைந்துள்ளது. சூரியன் வழிபட்டதலமாதலின், மாசிமாதம் 13, 14, 15-ஆம் நாள்களில் மாலையில் 5 . 45 மணிமுதல் 6 . 10 மணிவரை சூரிய ஒளி சுவாமிமீது படுகிறது..

கொடுமுடி மகுடேஸ்வரர் சன்னதியில் ஆவணி மாத கடைசியிலும்,பங்குனி மாத கடைசியிலும் சூரிய ஒளி மூலவரை தரிசனம் செய்யும்...

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த பின்னத்தூர் கிராமத்தில் ராமநாத ஈஸ்வரன் கோவில் உள்ளது. மிக பழமையான இக்கோவிலில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் மூலவர் மீது சூரிய ஒளி நேரடியாக படும் நிகழ்வு நடைபெறும்.

அருள்மிகு பாலசுப்ரமணியர் திருக்கோவில், ஆயக்குடி ,திருநெல்வேலி மாவட்டம்.
இது மிகவும் பழமையானதும் சக்தி வாய்ந்ததும் ஆன கோவில் ஆகும். இது 1900 வருடம் பழமை வாய்ந்தது. இந்த கோவிலின் சிறப்பு அம்சம் என்னவென்றால், சித்திரை மாதம் பிறந்தவுடன் ஒரு வாரத்திற்கு மூலவரின் மீது சூரியனின் ஒளி பாய்ந்து வெளிச்சம் தருவது அதிசயமாக கருதப்படுகிறது. மற்ற நாட்களில் இங்கு சூரிய ஒளி வருவதில்லை.

 தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி பிப்ரவரி 21, 22, 23 ஆகிய மூன்று நாட்களில் சூரியன் மறைவதற்கு முன் 5..45 முதல் 6.10 வரை விழும்

 மலையப்பாளையம் உதயகிரி முத்துவேலாயுதசுவாமி சித்திரை 15,16,17 தேதிகளில் விழும் அதனாலேயே அவருக்கு உதயகிரி என பெயர் வந்ததாக திருக்கோவில் வரலாறு

 கடத்தூர் அர்ச்சுனேஸ்வரர் கோவிலில் சூரியனின் ஒளிக்கதிர்கள் மகாமண்டபம், அர்த்த மண்டபத்தை கடந்து கருவறையில் இருக்கும் சிவலிங்கத்தின் மீது படுவதையும், விளக்குகள் ஏதுமில்லாத நிலையில் சூரிய ஒளியில் ஒளிரும் சிவலிங்கத்தையும் படத்தில் காணலாம்.

 விழுப்புரம் மாவட்டம்,பனையபுரம் சத்யாம்பிகை(புறவாம்பிகை,மெய்யாம்பிகை)உடனுறை பனங்காட்டீஸ்வரர் ஆலயம். சித்திரை மாதம் முதல் தேதி-யில் இருந்து ஒரு வாரம் காலை வேளையில் சூரியனின் ஒளிக்கதிர்கள் மகாமண்டபம், அர்த்த மண்டபத்தை கடந்து கருவறையில் இருக்கும் சிவலிங்கத்தின் மீது படுவதும், இங்குள்ள சிவசூரியனாரை வழிபட்டால் கண் சம்பந்தமானா பிரச்சனைகள் தீருவது திண்ணம். இவ்விரண்டும் இக்கோவிலின் சிறப்பு விழுப்புரம் to திருக்கனுர்-புதுச்சேரி-------விக்கரவாண்டி to பண்ருட்டி ----- இந்த இரண்டு சாலைகள் சந்திக்கும் கூட்டுரோடுதான் இந்த பனையபுரம் இக்கோவிலை அனைவரும் தரிசனம் செய்யுங்கள்


செவ்வாய், 2 செப்டம்பர், 2014

அமெரிக்கர்களை வியக்க வைத்த வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் அற்புதம்

வைத்தீஸ்வரன் கோயில் அற்புதம்

1.9.2014 நேற்றிரவு 9 மணி முதல் 10 மணி வரை, "Miracles decoded" என்ற நிகழ்ச்சி ஹிஸ்டரி சானலில் ஒளிபரப்பாகியது.. இந்த நிகழ்ச்சியின் நோக்கம், அற்புதங்கள் இல்லை என்று அறிவியல் பூர்வமாக நிருபிப்பது (decoding).

அதில் தமிழ்நாட்டில் ஒரு 10 வயது சிறுவனுக்கு பித்தப்பையிலோ அல்லது கல்லீரலிலோ ஏதோ பிரச்சனை. அவனை வைத்தீஸ்வரன் கோயிலுக்கு அழைத்து செல்கிறார்கள், அங்குள்ள குளத்தில் சிறுவன் குளித்து வருகிறான். கோவிலுக்கு செல்லும் முன் ஸ்கேன் எடுக்கிறார்கள், அப்பொழுது அதில் பிரச்சனை இருப்பதை காட்டுகிறது. பிறகு, அவன் குளத்தில் குளித்த மூன்று நாட்களுக்கு பிறகு, அவன் உடல் பரவாயில்லை என்கிறான், மீண்டும் ஸ்கேன் எடுக்கிறார்கள். அந்த ஸ்கேன் நார்மலாக வருகிறது. அவன் மீண்டும் அந்த  கோவிலுக்கு சென்று மொட்டை அடித்து, மீண்டும் குளத்தில் குளித்து தன் பிராத்தனையை நிறைவேற்றுகின்றான்.

இந்த நிகழ்ச்சியின் நோக்கமே, அற்புதங்களை, அவை அற்புதங்கள் அல்ல என்று அறிவியல் ரீதியாக நிருபிப்பது. ஆனால், இந்த சிறுவனுக்கு ஏற்ப்பட்ட அற்புதத்தை இந்த டிவி நிகழ்ச்சியை நடத்தியவர்களால் அறிவியல் என்று நிருபிக்க முடியவில்லை...


இது ஒரு செவ்வாய் ஸ்தலம்...செவ்வாய் தான் ரத்தத்துக்கு அதிபதி...சகோதரனுக்கு அதிபதி யுத்தத்துக்கு அதிபதி..வெட்டு,குத்து,காயம்,அறுவை சிகிச்சை செய்யும் நிலைக்கு இவரே காரணமாகிறார்..விபத்துக்கள் இவர் சனி,சூரியன்,கேது,போன்ற பாவ கிரகங்களுடன் சேர்வதால் உண்டாகிறது...வயிறு நோய் முதல் உடல் உஷ்ணத்தால் உண்டாகும் நோய்களுக்கும்,கடும் விஷ ஜுரத்துக்கும் இவர் ஜாதகத்தில் பாதிப்பதால் உண்டாகிறது...இதன் அதிபதியான முருகனை வழிபட்டால் "இத்திருக்குளத்தில் குளித்தெழுந்தால்
சகல நோய்களும் தீரும் என்பது திண்ணம். இந்தக்கோயில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலத்தின் மூலவர் வைத்தியநாதர், தாயார் தையல்நாயகி. அருணகிரிநாதர், குமர குருபரர், படிக்காசு தம்பிரான், சிதம்பர முனிவர், காளமேகப்புலவர், ராமலிங்க அடிகள், வடுகநாத தேசிகர், தருமையாதீனம் ஆகியோரும் இத்தலம் பற்றி பாடியுள்ளார்கள். இக்கோயிலில் உள்ள முருகப்பெருமான் பெயர் முத்துக்குமார சுவாமி. இவன்மீது முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் என்னும் நூல் பாடப்பட்டுள்ளது..இக்கோயிலில் அமைந்திருக்கும் சித்தாமிர்தக் குளத்தின் நீர் புனித நீராக கருதப்படுகின்றது. இக்குளத்தில் நீராடினால் நோய் நீங்கும் என்று அங்கு வழிபடும் மக்களால் நம்பப்படுகின்றது...சிவன் ஸ்தலமாக இருப்பினும் முருகன் இங்கு பிரபலம்..மருத்துவ கடவுள் தன்வந்திரிக்கு இங்கு தனி சன்னதி உண்டு...மருத்துவர்கள் பெரும்பாலும் செவ்வாய் கிழமையில் அதிகம் வந்து வழிபடுவர்.

இத்தலத்தில் காலடி வைத்தாலே பில்லி சூனியம்
முதலானவையும் கூட அகலும் என்பர்."
 
தென் நாட்டின் தலைசிறந்த பிரார்த்தனைத் தலங்களுள் ஒன்றானது. புள்ளிருக்கு வேளூர் எனப்படும் பாடல் பெற்ற தலம். பலராலும் பொதுவாக வைத்தீஸ்வரன் கோயில் என்றே அழைக்கப்பெறுகின்றது. சோழ வளநாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் காவிரியின் வடகரைத் தலங்களில் 16வது தலமான இத்திருத்தலம் இந்திய இருப்புப் பாதையில் வைத்தீஸ்வரன் கோயில் எனும் பெயருடன் புகை வண்டி நிலையமாகவும் அமைந்துள்ளது.
 
 ஒன்பது கிரகங்களுள் (நவக்கிரகம்) ஒன்றான அங்காரகன், தொழுநோயால் மிகத்தீவிரமாக பாதிக்கப்பட்டதின் விளைவாக கடவுள் சிவனார் வைத்தியநாத சுவாமியாக எழுந்தருளி அவரின் பிணிதீர்த்தார். ஆகையால் இக்கோயில் ஒன்பது கிரக கோயில்களில் இது செவ்வாய் கிரகத்தை குறிக்கும் கோயில் தலமாக விளங்குகின்றது.  என்னும் அப்பர் பெருமானின் தேவாரப் பகுதியில் இறைவன் வைத்திய நாதர் என்னும் பெயர் பூண்ட காரணத்தை சொல்கிறது.