ஜோதிடம்;ராகு கேது தோசம் நீங்க - திருபாம்புரம்
கும்பகோணம் -கொல்லுமாங்குடி-காரைக்கால் சாலையில் கற்கத்தி என்ற பேருந்து நிறுத்தத்தில் இருந்து தெற்கே 3கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த தலம்.இங்கு சேஷபுரீஸ்வரர் திருக்கோயில் உள்ளது.ஒரு முறை வினாயகர் கைலாயத்துக்கு சென்று சிவபெருமானை ஆராதித்து வழிபாடு செய்தார்.அப்போது ஈசனின் கழுத்தை சுற்றியிருந்த பாம்பு.வினாயகர் தன்னையும் வணங்கியதாக கர்வம் கொண்டது.இதையறிந்த சிவபெருமான் ஆவேசம் அடைந்து நாக இனம் முழுவதும் சக்தி இழந்து தவிக்குமாறு சாபமிட்டார்.உடனே பாம்புகள் ஆதிசேஷன் தலைமையில் சேஷபுரீஸ்வரர் ஆலயத்திற்கு சென்றுசாப விமோசனம் பெற்றன.சிவபெருமானின் பஞ்சமுகங்களை குறிக்கும் வகையில் அமையப்பெற்று பஞ்சலிங்கத்தலமாக இத்தலம் விளங்குகிறது.நவகிரக தோசங்கள் யாவும் இத்தலத்தில் நிவர்த்தியாகிறது.
சனிப்பெயர்ச்சியால் துன்பப்படுபவர்களும் ,ராகு திசை,சனி திசை,கேது திசை,சூரியதிசையால் துன்பப்படுபவர்களும் இங்கு வந்து வழிபட்டால் தோசம் நீங்கும்...சினிமா நடிகர் நடிகைகள் பலர் இங்கு ரகசிய பரிகாரங்கள் செய்வதும்,ஜெயலலிதா முதல் விஜயகாந்த் வரை அரசியல் பிரபலங்களும் இங்கு வந்து செல்வதுண்டு..காரணம் நாகம் நம் வாய்ப்புகளை கொத்தி கொத்தி தடுத்துவிடுமாம்...அதனால் இங்கு வந்து செல்லும்போது நம் செயல்பாட்டை மூர்க்கத்தனமாக மாற்றும் நாகதோசம் சமாதானம் ஆகும்..ஒரு சிலருக்கு இரண்டில் ராகு இருக்கும்..அவங்க பேச்சை காது கொடுத்து கேட்க முடியாது..அந்தளவு திமிராக ஆணவமாக கொடூரமாக பேச்சு இருக்கும்..வாய திறந்தாலே சண்டைதான்..இதுக்கு காரணம் இரண்டில் ராகு...அது லக்னத்துக்கு சுபர் சாரத்தில் இருந்தால் பெருசா பாதிக்காது...சனி,செவ்வாய் சாரத்தில் இருந்தால் இன்னும் மோசம்தான்..குடும்பமும்,வருமானமும் சிறப்பில்லாமல் கடனாளியாக இருப்பார்கள்....தைரியமும், இழந்துவிடுவர்.
5ல் ,9ல் ராகு கேதுக்கள் இருந்தால் பெண் குழந்தை பிறக்கும்..இல்லையேல் கர்ப்பம் அடிக்கடி கலையும்...குழந்தைகளால் தொல்லைகளும் உண்டாகும்....இதுவும் நாகதோசமே...7ல் ராகு,கேது அந்நியத்தில் திருமணம் நடக்கும்..வேறு மதமோ ஜாதியோ உள்ளவரை மணப்பர்..காதல் திருமணமாக இருக்கலாம்..அல்லது வரப்போகும் கணவன் அல்லது மனைவியால் நிம்மதி குலையும் இருவருக்கும் நான் பெரியவனா நீ பெரியவனா என்ற சண்டை நடக்கும்...பிரிவு வரை செல்லும்..பெரும்பாலும் விவாகரத்துக்கு கோர்ட்டில் நிற்பவர்கள் இவர்கள்தான்..செக்ஸ் குறைபாடு,காமம் ஒருவருக்கு குறைவு,ஒருவருக்கு அதிகம்...படுக்கையறையில் சந்தோசம் இல்லாமல் போவதே பல குடும்பங்களில் ஓயாத சண்டைகளுக்கு காரணம்..எத்தனை நாளைக்குதான் கணவன் அமலா பால்,நயன் தாரா வை நினைச்சுக்கிட்டு இருப்பது..மனைவி சூர்யா,அஜீத்,விஜய் ந்னு நினைச்சுக்கிட்டு இருப்பா..ரெண்டு பேரும் ஒரு வீட்டில் ஏதோ வண்டி ஓடும்...நாக தோசம் அதிக பேராசையையும்,அதிக டென்சனையும்,அதிக காமத்தையும் உண்டாக்கும்...இந்த ஆலயம் செல்வது தோசம் நீங்க மேற்க்கண்ட குறைகள் நீங்க,நல்ல கணவன்,மனைவி அமையும்..