வியாழன், 27 ஆகஸ்ட், 2015

குபேரன் படம் பூஜையறையில் மாட்டுவது தோசமா..? யோகமா?


குபேரர் படங்கள்,சிலைகள் இப்போது மார்க்கெட்டில் அதிகம் கிடைக்கின்றன...பூஜை அறையிலும் அதிகம் பேர் பயன்படுத்துகின்றனர்..இதில் ஒரு சிக்கல் இருக்கிறது 30 வருடத்துக்கு முன்பு இல்லாத வாஸ்து பகவான் போலத்தான் குபேரனும்.50 வருடங்களுக்கு முன்பு கூட லட்சுமி படம் வைத்து வழிபட்டனர் ,,,ஆனால் குபேரன் இல்லை..குபேரனுக்கும் லட்சுமிக்கும் என்ன சம்பந்தம்..? புராணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறதா..?இதுவெல்லாம் யோசிக்க வேண்டும்

ராவணன் தம்பி குபேரன் என விக்கிபீடியா சொல்கிறது..அரக்கர் குலத்தை சேர்ந்த கடவுள்....குபேரனை விட சிறப்பு மகாலட்சுமிதான்...காரணம் அதில் இருக்கும் மங்கள சின்னங்கள்.மகாலட்சுமியின் சிரிப்பும், அழகும் ,கனிவான,கலையான , தோற்றமும் நம்பிக்கையை தருகிறது...குபேரன் தொந்தியும் ,தொப்பையுமாக இப்போதுள்ள தமிழனை போல சோமபலாக இருப்பதும் எதிர்மறை எண்ணங்களை உண்டாக்கும்.. இப்படியும் யோசிச்சு பார்த்துட்டேன் :-)

எனக்கென்னவோ  மகாலட்சுமி உருவத்தில்தான் அதிக பாசிட்டிவ் சக்திகள் கிடைக்கின்றன.....என்றுதான் நினைக்கிறேன்.குபேரரை வழிபட நினைப்போர் திருச்சி - பெரம்பலூர் சாலையில் உள்ள அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில் 12 ராசிக்கும் குபேரர் மீன் வாகனத்தில் அருள்கிறார். அங்கு சென்று வழிபட்டு வரலாம்..வீடு,அலுவலகம் முழுக்க குபேரர் படங்களாக மாட்டி வைக்காதீர்!!

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015

ஜோதிட சூட்சுமங்கள் -2 ,ஜோதிடர்கள் ஜாதகம் பார்க்க உதவும் 51 பாய்ண்ட்ஸ்

ஜோதிட சூட்சுமங்கள் 2 ஜோதிடர்கள் ஜாதகம் பார்க்கும் முறை

ஜாதகம் பார்க்கும்போது ஜோதிடர்கள் இவற்றையெல்லாம் ஆராய்ச்சி செய்ய வேண்டும் என என் குரு சொல்வார்..அதை கீழே கொடுத்துள்ளேன்.


1.லக்னம் சரம்,ஸ்திரம்,உபயம்
2.நட்சத்திரம் பாதம்,-பாகை-கலை -விகலை
3.ராசி சரம்,ஸ்திரம்,உபயம்
4.நாளும் ஓரையும்
5.ஓரையும் கெள்ரியும்
6.திதியின் இருவகை (வளர்பிறை -தேய்பிறை )
7.யோகத்தின் 27 விபரம் 
8.அயன விபரங்கள் 
9.கரணத்தின் பலாபலன்
10.லக்னத்தில் இருப்பவர்
11.லக்னத்தை பார்த்தவர்
12.லக்னாதிபதி நின்ற ஸ்தானம் 
13.லக்னாதிபதி பார்த்த ஸ்தானம் 
14.லக்னாதிபதியுடன் சேர்ந்தவர்
15.லக்னாதிபதியை பார்த்தவர்கள் 
16.லக்கின சாரம் 
17.லக்கின பாவம் இரு ஆதிபத்தியம் 
18.லக்கின பாவம் இரு ஆதிபத்தியம் 
19.லக்கின சுபர் -பாபர் -யோகர்-மாரகர்
20.ராசிக்கு சுபர் -பாபர்-யோகர்-மாரகர்கள்
21.ஒரே ராசி ஒரே லக்கினத்தில் பிறந்திருந்தால்..?
22.திசை புத்திக்கு போதக ,வேதக,பாசககாரர்கள்,நட்சத்திர சாரங்கள்
23.திசாநாதனுக்கு புத்திநாதன் எங்கே..?
24.திசாநாதனை பார்த்தவர்கள்
25.திசாநாதனை சேர்ந்தவர்கள்
26.திசாநாதன் நின்ற இடம்
27.திசாநாதன் பார்த்த இடம்
28.புத்தி நாதன் நின்ற இடம்
29.புத்தி நாதன் பார்த்த இடம்
30.திசாநாதனை எந்த கிரகமும் பார்க்க வில்லை எனில்..? என்ன பலன்..?

31.புத்திநாதனை எந்த கிரகமும் பார்க்காத போது..?


32.திசாநாதனை கிரகங்கள் சேராதபோது..?
33.புத்தி நாதனுடன் எந்த கிரகமும் சேரவில்லை எனில்..?
34.ராகுபகவானின் நிலைபாடுகள்
35.கேதுவின் நிலை
36.பருவகால விபரங்கள்
37.முக்குண வேளைகள் ஏழுவித ஹோரைகள்-திதி சூனியம் விபரம்
38.பஞ்சவித ஸ்தானம்
திரிகோணம் -1,5,9
கேந்திரம் -1,4,7,10
உபஜெயம் -3,6,10,11
அபோலிகம் -3,6,9,12
பணபரம் -2,5,8,11

39.வருஷாதிபன்
40.மாதாதிபன்
41.வாராதிபதின் 
42.ஹோராதிபன்
43.அந்த்ராதிபன்
44.தினகால திரிபாகாதிபன்
45.ஆகுல தோஷம்
46.கிரகண தோசம்-சூரிய கிரகணம்
47.கிரகண தோசம்-சந்திர கிரகணம் 
48.லக்ன தியாஷ்யம் 
49.வார தியாஷ்யம்
50.திதி தியாஷ்யம்
51.நட்சத்திர தியாஷ்யம்

திங்கள், 24 ஆகஸ்ட், 2015

12 ராசியினரும் வழிபடவேண்டிய குரு ஸ்தல பரிகாரம்

மேசம்  -திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தி

ரிசபம் -காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் தட்சிணாமூர்த்தி

மிதுனம் -சிதம்பரம் நட்சராஜர் தட்சிணாமூர்த்தி

கடகம் -திருசெந்தூர் முருகன் கோயில் தட்சிணாமூர்த்தி

சிம்மம்-கும்பகோணம் அருள்மிகு கும்பேஸ்வரர் தட்சிணாமூர்த்தி 

கன்னி -சங்கரன்கோயில் தட்சிணாமூர்த்தி

துலாம் -மதுரை மீனாட்சி கோயில் தட்சிணாமூர்த்தி 

விருச்சிகம் -திருப்புடைமருதூர் தட்சிணாமூர்த்தி (திருநெல்வேலி அருகில்)

தனுசு -ஆலங்குடி கோயில் தட்சிணாமூர்த்தி

மகரம் -திருவானைக்காவல் ஜலகண்டேஸ்வரர் கோயில் தட்சிணாமூர்த்தி 

கும்பம் -திருக்கடையூரமுதகடேஸ்வரர் தட்சிணாமூர்த்தி

மீனம் -ராமேஸ்வரம் ராமநாதசுவாமி தட்சிணாமூர்த்தி

கோட்சார சனியின் பலன்கள்

கோட்சாரத்தில் சனி பகவான் 3,6,11ஆம் ஸ்தானங்களில் அமரும்போது நல்ல பலன்களை தருகிறார்.5,9,10 ஸ்தாங்களில் ஓரளவு நல்ல பலன்களையும் தருகிறார்..

12ல் அமரும்போது விரய சனியாகவும் (தற்சமயம் தனுசு  ராசிக்கு )
1ல் அமரும்போது ஜென்மசனியாகவும்(தற்சமயம் விருச்சிகம் ராசிக்கு)
2ல் அமரும்போது பாத சனியகவும் (தற்சமயம் துலாம் ராசிக்கு) அமர்ந்து பலவித துன்பங்களை தருகிறார்

ஜோதிட பாடல்;
கண்டங்கள் நான்கில் எட்டில் கருதிய சனி வரின்
தெண்டங்கள் மிகவும் உண்டாம் திரவியங்கள் சேதமாகும்

என வீமகவி ஜோதிட நூல் சொல்கிறது.

விளக்கம் ;ஜாதகத்திலும்,கோட்சாரத்திலும் 4,7,8 ஸ்தானங்களில் சனி அமரும்போது தெண்டச்செலவுகளையும், பொருள் விரயங்களையும் ஏற்படுத்தி விடுகிறார் .அதில் அஷ்டம சனியின் பாதிப்பு அதிகமாக இருக்கும்.

 4ல் சனி தற்சமயம் -சிம்மம்
7ல் சனி தற்சமயம் -ரிசபம் 
8ல் சனி தற்சமயம் -மேசம்

30 வயதை கடந்தவர்களுக்கு ஏழரை சனி கடுமையான பாதிப்பை தருவதில்லை...திசாபுத்தி யில் சனி சம்பந்தம் வந்தால் அதிகம் பாதிக்கும்...

சனி, 22 ஆகஸ்ட், 2015

2015-2016ம் ஆண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு வீடு,வாகன யோகம்..? ராசிபலன்

 2015-2016 ஆம் ஆண்டில் சனியால் பாதிக்கப்பட்டிருக்கும் ராசியினர் ,சுப செலவுகளான வீடு கட்டுதல் மனை வாங்குதல் போன்றவை செய்து கொள்வது நல்லது இல்லையெனில் கெட்ட செலவு எனும் மருத்துவ செலவு,அறுவை சிகிச்சை என வந்து பெரிய தண்டமாக வைத்துவிடும் வய்ப்பு அதிகம்..கடன் நிறைய இருக்கே சார்..எப்படி கார் வாங்குறதுன்னு கேட்குறீங்களா..கடனே உங்களுக்கு போதும் ..அஷ்டம சனி ,ஏழரை சனி இருந்தா கடன் நல்லது.கடனை அடைச்சாதான் பிரச்சினை வரும்..

கடனே இல்லை என்பவர்கள் உடனே ஒரு பேங்க் லோன் போட்டு ஏதேனும் நீண்ட கால முதலீடை செய்து கொள்ளவும்..இது யாருக்கெல்லாம் பொருந்தும்..? மேசம்,துலாம்,தனுசு,விருச்சிகம் ராசியினருக்கு இது பொருந்தும்..இவங்க எல்லாம் சொகுசு வாகனம் வாங்கி ஜாலியா ஊர் சுத்த கிளம்பினா என்னாகும்..? புளிய மரத்தில் உங்களை மோத வைக்க சனிபகவான் .காத்துக்கொண்டிருக்கிறார் என்று அர்த்தம்..எனவே நீங்க வகனம் வாங்குதல் வீடு கட்டுதல் என்பதை கவனமுடன் செய்ய வேண்டும்..ஆடம்பர விடு கட்டுறேன் என ஆரம்பித்தால் கட்டிக்கிட்டே இருக்க வேண்டியதுதான் முடிக்க முடியாது..கட்டின வீட்டை வாங்கிக்கொள்வது நல்லது.கார் வாங்கியே ஆகனும்னா..வீட்ல யாருக்கு நல்ல நேரம் என பார்த்து அவங்க பேர்ல வாங்கிக்கலாம்..அல்லது பழைய வாகனமா வாங்கிக்கலாம்.


கும்பம்,கடகம்,துலாம்,விருச்சிகம்  ராசிக்காரங்க சொகுசு வாகனம் வாங்குவதில் அதிக ஆர்வமுடன் இருப்பார்கள்.ஆடம்பர வீடு கட்டுவதிலும் வாங்குவதிலும் ஆசை அதிகம். இவங்களுக்கு அந்த யோகம் அதிகம்.ஆனாலும் ஜாதகப்படி சில விதிமுறைகள் படிதான் இதன் பலம் அதிகரிக்கும்.

சொந்த வீடு,வாகனம் அமையணும்னா சுக்கிரன் நட்பு,ஆட்சி,உச்சம் இருக்கணும். நாலாமிடமும்,சுக்கிரனும் முக்கியம்.சுக்கிரன் நல்லா இருந்தா சொகுசான வண்டி அமையும்.இல்லைனா கொஞ்சம் ஓட்டை ஒடைசலான வண்டி அதாவது செகண்ட்ஸ் அமையும்.வீடும் அதே மாதிரிதான் சுக்கிரன் நல்லாருந்து, நான்காம் இடமும் பாவர் சம்பந்தம் இல்லைனா தார்ஸ் வீடு மாடி வீடு அமையும் இல்லைனா ஓட்டு வீடுதான்.அதிலும் வில்லங்கம் வந்து சேரும்.நாலாம் இடத்தில் சனி சம்பந்தம் ஆச்சுன்னா அந்த வீட்டை பூதம் காவல் காக்கும்.அதாவது முனி,கருப்பண்ண சாமி நடமாட்டம் இருக்கும்னு கிராமப்புறத்துல இருந்து வருபவர்களுக்கு சொல்வோம்.அது உண்மையும் ஆகியிருக்கிறது! அப்படி இருப்பின் அந்த வீட்டில் இருக்கும் வரை சுபகாரியம் நடத்த விடாது..தொழில் பாதிக்கும்...பணம் தங்காது!4ல் பாவர் இருந்தால் வீடு,வாகனம் சந்தோசத்தை தருவதில்லை...பிரச்சினையையும் கொடுக்கும்...

 2015-2016ல் மிதுனம்,கடகம்,கும்பம்,ரிசபம்,ராசியினருக்கு வாகனம் ,வாங்கும் யோகமும்,வீடு வாங்கும் யோகமும் உண்டு.அவர்களுக்கும் கீழ்க்கண்ட விதிமுறைகள் பொருந்தும்..இது பொருந்தாதவர்களுக்கு அமையாது.

 லக்னத்துக்கு நான்காம் இடத்துக்கு எட்டாம் இடமாகிய 11 ஆம் அதிபதி கெடாமல் இருந்தால் கார்,வீடு தங்கும்..அல்லது வாங்கி வாங்கி வித்துக்கிட்டே இருக்கனும்..லக்னத்துக்கு 6,8,12ல் செவ்வாய் இருந்தால் மனை ,வீடு தங்காது...

வாகனம்,வீடு யார் பெயரில் இருக்கோ அவர்கள் ஜாதகப்படி அந்த வீட்டின் சக்தியும்,கூடும் குறையும்.ராசியான வாஸ்து அமைப்புள்ள வீடு அமையும்.

கார் வாங்கும் யோகம் நான்காம் இடம் நன்கு அமைந்தவர்கலுக்கு விரைவிலேயே அமையும்.அத்ற்கு நல்ல திசா புத்தியும் வரணும்.கேது திசை,செவ்வாய் திசை,சூரிய திசையில் கார் வாங்கி விபத்தால் உடல் பாதிப்புகளை அடைந்தவர்கள் அநேகம் பேரை பார்த்திருக்கிறேன்!!

வாகனம்,வீடு வாங்குபவர்கள் நீங்கள் எந்த ராசியாய் இருப்பினும் ஜோதிடரிடம் ஆலோசனை பெறுவது உத்தமம்.யாருக்கு நல்ல நேரம் இருக்கோ,யாருக்கு நான்காம் இடத்தில் அசுபர் இல்லாமல் சுபர் இருக்கோ அவர்கள் பெயரில் வாங்கலம்..சந்திரனுக்கு நான்கு,ராசிக்கு நான்கு இரண்டையும் பார்க்க வேண்டாம்...6,8க்குடையவன் திசை நடந்தால் பழைய வாகனம் வாங்கி கொள்வது நல்லது புதியது வாங்கினால் உடனே பெரிய செலவு வைத்துவிடும்..விபத்தை சந்திக்க நேரும்.3ஆம் அதிபதி திசை நடந்தாலும் நான்காம் அதிபதி திசை நடந்தாலும் வீடு,வாகனத்துக்காக செலவு செய்வர்..சுக்கிரன் ஆட்சி,உச்சம் பெற்றிருந்தல் விலை உயர்ந்த கார் வாங்கும் அமைப்பு உண்டாகும்..ஆடம்பர பங்களா அமையும்..ஆனால் சுக்கிரனும் நல்லாருக்கும் 4ஆம் அதிபதியும்,செவ்வாயும் கெடாமல் இருக்கனும்.

 வாங்கும்போது ..வாகன எண் கவனிங்க.வீடாக இருந்தால் வாசல் திசை பாருங்க....வாங்கும் நாளை கவனிங்க..வாஸ்து நாலு பேரை வெச்சு நல்லா செக் பண்ணிக்குங்க..,உங்க ராசிக்கு சந்திராஷ்டமத்தில் வாங்கிவிட வேண்டாம்..

நட்சத்திர பொருத்தம் பார்ப்பது எப்படி?திருமண பொருத்தம்

 ஆண், பெண் இருவருடைய நட்சத்திரப்படி இருவருக்கும் எத்தனை பொருத்தம் இருக்கிறது என பார்ப்பது எப்படி..? 10 பொருத்தங்களில் எத்தனை பொருத்தம் வருகிறது என பார்க்கும் சூத்திரம் இங்கு சொல்லப்பட்டிருக்கிறது.இது தவிர ஜாதக பொருத்தமும் பார்க்க வேண்டும் அது சம்பந்தமாக 10 கட்டுரைகளுக்கு மேல் எழுதி இருக்கிறேன் .அதையும் ஒருமுறை படிக்கவும்...


1) தினம்:- பெண் நட்சத்திரம் முதல் பிள்ளை நட்சத்திரம் வரை எண்ணி அதை 9 ஆல் வகுத்து மிச்சம் 2, 4, 6, 8, 9 என வந்தால் தினப்பொருத்தம் உண்டு. மற்றவை வந்தால் பொருத்தம் இல்லை.

2) கணம்:- ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் என்ன கணம் என பஞ்சாங்கத்தில் அறியலாம். ஆண், பெண் இருவருக்கும் ஒரே கணம் ஆனாலும், தேவ கணம், மனுஷ கணமானாலும் கணப் பொருத்தம் உண்டு. பெண் மனுஷ கணமும் பிள்ளை ராட்சஷ கணமானாலும் பொருத்தம் உண்டு.

3) மகேந்திரம்:- பெண் நட்சத்திரம் முதல் பிள்ளை நட்சத்திரம் வரை எண்ணும்பொழுது 4, 7, 10, 13, 14, 19, 22, 25 என வந்தால் மகேந்திரப் பொருத்தம் உண்டு.

4) ஸ்திரீ தீர்க்கம்:- பெண் நட்சத்திலிருந்து பிள்ளை நட்சத்திரம் 7க்கு மேல் இருந்தால் ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம் உண்டு.

5) யோனி:- நட்சத்திரங்களுக்குரிய விலங்குகள் பஞ்சாங்கத்தில் உள்ளன. பகை விலங்குகளின் விளக்கம் கீழே உள்ளது.

குதிரை - எருமை, யானை - சிங்கம், ஆடு - குரங்கு, பாம்பு - எலி, பசு - புலி, எலி - பூனை, கீரி - பாம்பு, மான் - நாய், ஆண் - பெண் நட்சத்திரங்களின் விலங்குகள் பகையாக இல்லாமல் இருந்தால் யோனிப் பொருத்தம் உண்டு.

6) ராசி:- பெண் பிள்ளை இருவருக்கும் ஒரே ராசியாக இருந்தாலும் பெண்ணிற்கு பிள்ளை ராசி 7, 9, 10, 11. 12 இருந்தாலும் ராசிப் பொருத்தம் உண்டு.

7) ராசி அதிபதி:- பெண் ராசிக்கு அதிபதி பிள்ளை ராசி அதிபதிக்கு நட்பு அல்லது சமமாக இருந்தால் ராசி அதிபதி பொருத்தம் உண்டு.

வசியம்:- பெண் ராசிக்கு பிள்ளை ராசி வசியமாக இருந்தால் வசியப் பொருத்தம் உண்டு. வசிய ராசிகளில் விளக்கம் பஞ்சாங்கத்தில் காணலாம்.

9) ரஜ்ஜு (மாங்கல்யம்):- நட்சத்திரங்களுக்கு உண்டான ரஜ்ஜுக்கள் பஞ்சாங்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. பெண் ரஜ்ஜுவும் பிள்ளை ரஜ்ஜுவும் ஒன்றாக இல்லாமல் இருந்தால் ரஜ்ஜு அல்லது மாங்கல்யப் பொருத்தமுண்டு.

10) நாடி:- 27 நட்சத்திரங்களும் மூன்று பிரிவுகளாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

அ) அஸ்வினி, திருவாதிரை புனர்பூசம், உத்திரம், அஸ்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி.

ஆ) பரணி, மிருகசிரிடம், பூசம், பூரம், சித்திரை, அனுஷம், பூராடம், அவிட்டம், உத்திரட்டாதி.

இ) கிர்த்திகை, ரோகிணி, ஆயில்யம், மகம், சுவாதி, விசாகம், உத்திராடம், திருவோணம், ரேவதி.

பெண், ஆண் நட்சத்திரங்கள் ஒரே பிரிவில் இல்லாமல் வெவ்வேறு பிரிவில் இருந்தால் நாடிப் பொருத்தம் உண்டு.

எனவே மொத்தம் 10 பொருத்தங்களில் 6-க்கு மேல் இருந்தால் திருமணப் பொருத்தம் உண்டு. எனினும் கீழே கொடுத்துள்ள பொது விதிகளையும் கவனிக்க வேண்டும்.

அ) ரஜ்ஜு அல்லது மாங்கல்யப் பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்யக்கூடாது.

ஆ) தினம்,கணம், யோனி, ராசி, ரஜ்ஜு - இந்த ஐந்தும் முக்கியமானப் பொருத்தங்கள்.

இ) பெண், பிள்ளை இருவரும் ஒரே ராசியாக இருந்தால் 10 பொருத்தங்களும் உண்டு.

ஈ) பெண், பிள்ளை இருவருக்கும் ஒரே நட்சத்திரமாக இருந்து பரணி, ஆயில்யம்,சுவாதி, கேட்டை,மூலம், அவிட்டம், சதயம், பூரட்டாதி ஆக இல்லாமல் இருந்தால் 10 பொருத்தங்களும் உண்டு.

இவற்றுடன் செவ்வாய் தோஷம் சமமாக இருப்பின் திருமணம் செய்யலாம்.

108 சித்தர்களின் ஜீவ சமாதி இடங்களின் பட்டியல்

1. திருமூலர் - சிதம்பரம்.
2. போகர் - பழனி என்கிற ஆவினன்குடி.
3. கருவூர்சித்தர் – கருவூர், திருகாளத்தி, ஆணிலையப்பர் கோவில்.
4. புலிப்பாணி - பழனி அருகில் வைகாவூர்.
5. கொங்கணர் - திருப்பதி, திருமலை
6. மச்சமுனி - திருப்பரங்குன்றம், திருவானைக்கால்
7. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர் - மதுரை.
8. சட்டைமுனி சித்தர் – திருவரங்கம்.
9. அகத்தியர் – திருவனந்தபுரம், கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் கோவில்.
10. தேரையர் - தோரணமலை (மலையாள நாடு)
11. கோரக்கர் – பேரூர்.
12. பாம்பாட்டி சித்தர் - மருதமலை, துவாரகை, விருத்தாசலம்.
13. சிவவாக்கியர் - கும்பகோணம்.
14. உரோமரிசி - திருக்கயிலை
15. காகபுசுண்டர் - திருச்சி, உறையூர்.
16. இடைக்காட்டுச் சித்தர் - திருவண்ணாமலை
17. குதம்ப்பைச் சித்தர் - மயிலாடுதுறை
18. பதஞ்சலி சித்தர் - சிதம்பரம், அழகர் கோவில், இராமேஸ்வரம்.
19. புலத்தியர் - பாபநாசம், திருஆலவுடையார் கோவில்.
20. திருமூலம் நோக்க சித்தர் - மேலை சிதம்பரம்.
21. அழகண்ண சித்தர் - நாகப்பட்டினம்.
22. நாரதர் - திருவிடைமருதூர், கருவை நல்லூர்.
23. இராமதேவ சித்தர் - அழகர் மலை
24. மார்க்கண்டேயர் - கருவை நல்லூர்.
25. புண்ணாக்கீசர் - நண்ணாசேர்.
26. காசிபர் - ருத்ரகிரி
27. வரதர் - தென்மலை
28. கன்னிச் சித்தர் - பெருங்காவூர்.
29. தன்வந்தரி – வைத்தீஸ்வரன் கோவில்
30. நந்தி சித்தர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி.
31. காடுவெளி சித்தர் - திருக்காஞ்சிபுரம்.
32. விசுவாமித்திரர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி.
33. கௌதமர் - திருவருணை, திருவிடைமருதூர்.
34. கமல முனி - ஆரூர்
35. சந்திரானந்தர் - திருவாஞ்சியம்.
36. சுந்தரர் - வாரிட்சம், திருவாரூர்.
37. காளங்கி நாதர் - திருக்கடவூர், திருப்பணந்தாள்.
38. வான்மீகி - எட்டிக்குடி, திருவையாறு.
39. அகப்பேய் சித்தர் - திருவையாறு, எட்டிக்குடி.
40. பட்டினத்தார் - திருவொற்றியூர்.
41. வள்ளலார் - வடலூர்.
42. சென்னிமலை சித்தர் - கேரளத்தில் உள்ள நாங்குனாசேரி.
43. சதாசிவ_பிரமேந்திரர்_சமாதிசதாசிவப் பிரம்மேந்திரர் - நெரூர்.
44. ராமகிருஷ்ணர், சாரதாதேவியார் - பேலூர் மடம்
45. ராகவேந்திரர் - மந்திராலயம்.
46. ரமண மகரிஷி - திருவண்ணாமலை, மாத்ருபூதேஸ்வரர் ஆலயம்.
47. குமரகுருபரர் - காசி.
48. நடன கோபால நாயகி சுவாமிகள் - காதக்கிணறு.
49. ஞானானந்த சுவாமிகள் - அனைத்து தபோவனங்கள்.
50. ஷீரடி சாயிபாபா - ஷீரடி.
51. சேக்கிழார் பெருமான் - மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி சன்னதிக்கு பின்புறம்.
52. ராமானுஜர் - ஸ்ரீரங்கம்.
53. பரமஹம்ச யோகானந்தர் - கலிபோர்னியா.
54. யுக்தேஸ்வரர் - பூரி.
55. ஜட்ஜ் சுவாமிகள் - புதுக்கோட்டை
56. ஆதி பராசக்தி திருகோவிலில் 21 சித்தர்களின் ஜீவ சமாதிகள் உள்ளன.
57. கண்ணப்ப நாயனார் - காளஹஸ்தி.
58. சிவப்பிரகாச அடிகள் - திருப்பழையாறை வடதளி.
59. குரு பாபா ராம்தேவ் - போகரனிலிருந்து 13 கி.மி.
60. ராணி சென்னம்மாள் - பிதானூர், கொப்புலிமடம்.
61. பூஜ்ய ஸ்ரீ சித்த நரஹரி குருஜி - மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் சித்தாசிரமம்.
62. குழந்தையானந்த சுவாமிகள் - மதுரை காளவாசல்.
63. முத்து வடுகநாதர் - சிங்கம் புணரி.
64. இராமதேவர் - நாகப்பட்டிணம்.
65. அருணகிரிநாதர் - திருவண்ணாமலை.
66. பாடக்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள் – தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோவில்.
67. மௌன சாமி சித்தர் - தென்காசியிலிருந்து செங்கோட்டை செல்லும் வழியில் உள்ளது.
68. சிறுதொண்டை நாயனார் - திருச்செட்டாங்குடி.
69. ஒடுக்கத்தூர் சுவாமிகள் - பெங்களூரில் அல்சூர் ஏரிக்கரையில் உள்ளது.
70. வல்லநாட்டு மகாசித்தர் - வல்லநாடு.
71. சுப்பிரமணிய சித்தர் - ரெட்டியப்பட்டி.
72. சிவஞான பாலசித்தர் - மயிலாடுதுறை முருகன் சந்நிதி.
73. கம்பர் - நாட்டரசன் கோட்டை.
74. நாகலிங்க சுவாமிகள் - புதுவை அம்பலத்தாடையார் மடம்.
75. அழகர் சுவாமிகள் - தென்னம்பாக்கம்.
76. சிவஞான பாலைய சுவாமிகள் - புதுவைக்கு வடக்கே 6 மைல் தொலைவில் உள்ளது.
77. சித்தானந்த சுவாமிகள் - புதுவைக்கு அருகிலுள்ள கருவடிக்குப்பம்.
78. சக்திவேல் பரமானந்த குரு - புதுவையிலுள்ள முதலியார் பேட்டை.
79. ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள் - வில்லியனூர் செல்லும் பாதையில் வலப்புறம் அமைந்து உள்ளது.
80. அக்கா சுவாமிகள் - புதுவையில் உள்ள குதிரைக்களம் அருகே.
81. மகான் படே சுவாமிகள் - சின்னபாபு சமுத்திரம்.
82. கம்பளி ஞானதேசிக சுவாமிகள் - புதுவை அருகில் ருத்திர பூமிக்கு சமீபமாக அமைந்துள்ளது.
83. பகவந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.
84. கதிர்வேல் சுவாமிகள் – ஸ்ரீலங்கா, புதுவை அருகில் சித்தன் குடியிலும் சமாதி உண்டு.
85. சாந்த நந்த சுவாமிகள் - ஸ்ரீ சாரதா சிவகங்கை பீடத்திற்கு அருகில் உள்ளது.
86. தயானந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.
87. தஷிணாமூர்த்தி சுவாமிகள் - பாண்டிசேரியடுத்த பள்ளித் தென்னல்.
88. ஞானகுரு குள்ளச்சாமிகள் - புதுவை.
89. வேதாந்த சுவாமிகள் - புதுவை, திருமுத்துகுமார் சுவாமிகள் தோட்டத்தில் உள்ளது.
90. லஷ்மண சுவாமிகள் - புதுவையிலுள்ள புதுப்பட்டி.
91. மண்ணுருட்டி சுவாமிகள் - புதுவையிலுள்ள சுதேசி காட்டன் மில் எதிரில்.
92. சுப்பிரமணிய அபிநய சச்சிதானந்த பாரதி சுவாமிகள் - பாண்டிசேரியிலுள்ள எல்லப் பிள்ளை.
93. யோகி ராம் சுரத்குமார் (விசிறி சுவாமிகள்) - திருவண்ணாமலை.
94. கோட்டூர் சுவாமிகள் - சாத்தூர் அருகிலுள்ள கோட்டூர்.
95. தகப்பன் மகன் சமாதி - கிரிவலம் வந்த நல்லூர் அருகே பனையூர்.
96. நாராயண சாமி அய்யா சமாதி - நாகர்கோவில்.
97. போதேந்திர சுவாமிகள் - தஞ்சை மாவட்டத்திலுள்ள மருதநல்லூர்.
98. அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள் - சென்னை பூந்தமல்லி.
99. வன்மீக நாதர் - எட்டிக்குடி.
100. தம்பிக்கலையான் சித்தர் - சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவிலில் உள்ள 108 சிவலிங்கங்களில் இரண்டாவதாக உள்ள லிங்கத்தில் ஐக்கியம் ஆகியுள்ளார்.
101. மெய்வரத் தம்பிரான் சுவாமிகள் - திருச்சி, ஜெயங்கொண்ட சோழபுரத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது.
102. குகை நாச்சியார் மகான் - திருவண்ணாமலை.
103. வாலைகுருசாமி - சிதம்பரத்திலுள்ள கொம்மடிக் கோட்டை.
104. பாம்பன் சுவாமிகள் - திருவான்மியூர்.
105. குமாரசாமி சித்தர் சுவாமிகள் - கோயமுத்தூரிலுள்ள பூராண்டான் பாளையம்.
106. பெரியாழ்வார் சுவாமிகள் - அழகர் கோவில் (மதுரை)
107. மாயம்மா ஜீவசமாதி - கன்னியாகுமரி.
108. பரமாச்சாரியார் ஜீவசமாதி - காஞ்சிபுரம்.

பதினெண் சித்தர்களும் சமாதியான ஸ்தலங்களைப் பற்றி குறிப்பிடும் பழைய ஓலைச்சுவடி :
ஆதி காலத்திலே தில்லை திருமூலர்
அழகுமலை இராமதேவர்
அனந்த சயன கும்பழனி திருப்பதி கொங்கணவர்
கமலமுனி ஆரூர்
சோதி அரங்க சட்டமுனி கருவை கருவூரார்
சுந்தரானந்தர் கூடல்
சொல்லும் எட்டிக்குடியில் வான்மீகரோடு நற்
றாள் காசி நந்திதேவர்
ப்லாதி அரிச்சங்கரன் கோவில் பாம்பாட்டி
பழனி மலை போகநாதர்
திருப்பரங்குன்றமதில் மச்சமுனி
பதஞ்சலி இராமேசுவரம்
சோதி வைத்தீஸ்வரம் கோவில் தன்சந்திரி பேரையூர்
கோரக்கர் மாயூரங்குதம்பர்
திருவருணையோர் இடைக்காட சமாதியிற்
சேர்ந்தனர் எமைக் காக்கவே.
இது நெற்கட்டும் செவல் மன்னர் பூலித்தேவர் காலத்தில் உள்ள ஓலைச்சுவடியின் சான்று.
மதுரை அழகர் கோவிலின் முன்பாக 18-ம் படி கருப்பண்ணசாமியாக உள்ள 18 படிகளும், 18 சித்தர்கள் ஆவார்கள். ஆடி 18 அன்று சிறப்பு பூசை நடைபெறுகிறது.

கரூர் அருகில் உள்ள அய்யர் மலையில் உள்ள சுனையில் பஞ்சமாசித்தர்களான

பஞ்சமுக சுரேஸ்வர சித்தர்,
சதுர்முக சுரேஸ்வர சித்தர்,
திரிபலாதர சுரேஸ்வர சித்தர்,
ஸ்கந்த பதுமபலாதி சித்தர்,
திரி மதுர நீற்று முனீஸ்வர சித்தர் வசிக்கிறார்கள்.

சித்தர்களின் அருள் கிடைக்க சொல்ல வேண்டிய மந்திரம்

சித்தர்கள் ஜீவ சமாதி செல்லும்போது, பெளர்ணமி அல்லது அமாவாசை நாளில் செல்லலாம் ...அங்கு சென்று ரோஜாப்பூ மாலை அணிவித்து நெய் தீபம் ஏற்றி,கல்கண்டு,பேரிச்சை ,பழங்கள் நிவேதனம் செய்து ,வழிபட்டு அதன் பின் அங்கு வழிபட வந்தவர்கள் நிவேதனத்தை பிரசாதமாக கொடுக்கலாம்..கீழே இருக்கும் மூல மந்திரங்களை அவர்களுக்கு நோட்டீஸ் போல வினியோகிக்கலாம்..நீங்களும் இதனை ஜீவ சமாதியில் உச்சாடனம் செய்யலாம். சித்தர்களின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்...



நந்தீசர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ நந்தீச சித்த சுவாமியே போற்றி!
 
அகத்தியர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி!
 
திருமூலர் மூல மந்த்திரம்
ஓம் ஸ்ரீம் கெம் ஸ்ரீ மூலநாத சித்த சுவாமியே போற்றி!
 
போகர் மூல மந்திரம்
ஓம் ஆம் ஊம் ஸ்ரீ மகாபோகர் சித்த சுவாமியே போற்றி!
 
கோரக்கர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் க்லம் ஸ்ரீ கோரக்க சித்த சுவாமியே போற்றி!
 
தேரையர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் லபம் நசீம் ஸ்ரீ தேரைய சித்த சுவாமியே போற்றி!
 
சுந்தரானந்தர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் ஆம் ஊம் ஸ்ரீ சுந்தரானந்த சித்த சுவாமியே போற்றி!
 
புலிப்பாணி மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் கிலீம் ஸ்ரீ புலிப்பாணி சித்த சுவாமியே போற்றி!
 
பாம்பாட்டி சித்தர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் வசி ஸ்ரீ பாம்பாட்டி சித்த சுவாமியே போற்றி!
 
காக புசண்டர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் லம் ஸ்வம் ஸ்ரீ காக புசண்ட சித்த சுவாமியே போற்றி!
 
இடைக்காடர் மூல மந்திரம்
ம் ஸ்ரீம் ருணம் ஸ்ரீ இடைக்காட்டு சித்த சுவாமியே போற்றி!
 
சட்டைமுனி மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் சம் வம் சட்டைமுனி சுவாமியே போற்றி!
 
அகப்பேய் சித்தர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் சௌம் ஸ்ரீ அகப்பேய் சித்த சுவாமியே போற்றி!
 
கொங்கணவர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் நசீம் ஸ்ரீ கொங்கண சித்த சுவாமியே போற்றி!
 
சிவவாக்கியர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ சிவவாக்கிய சித்த சுவாமியே போற்றி!
 
உரோமரிஷி மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் கிலம் ஸ்ரீ உரோம ரிஷி சுவாமியே போற்றி!
 
குதம்பை சித்தர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் சம் ஸ்ரீ குதம்பைச் சித்த சுவாமியே போற்றி!
 
கருவூரார் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் வம் லம் ஸ்ரீ கருவூர் சித்த சுவாமியே போற்றி!
இதை பௌர்ணமி தோறும் சித்தர் ஓன்றுக்கு மூல மந்திரம் 16 முறை விதம் கூறிவரவும் அனைத்து காரியம் சித்தி அடையும்.

ஆயுளை நீடிக்க செய்ய, சித்தர்கள் கடைபிடித்த கேசரி யோகம்

★பதஞ்சலி மாமுனிவரைப் போலவே திருமூலரும் அஷ்டாங்க யோகத்தைப் பற்றித் தனது திருமந்திரத்தில் பாடியிருக்கிறார். அவர் மேலும் நான்கு உன்னதமான யோகங்களைப் பற்றியும் பாடியிருக்கிறார். அனேகமாக வேறு யாரும் அதற்கு முன்னால் இவற்றைப் பற்றி சொல்லியிருப்பதாகத் தெரியவில்லை. அதில் ஒன்று கேசரி யோகம். மற்றவை சந்திர யோகம், பரியங்க யோகம், அமுரி தாரணை என்பதாகும். அஷ்டாங்க யோகத்தைப் பொறுத்தவரை பகீர்முகம் எனப்படும் வெளிபமுகமான நான்குபடிகள் இயமம், நியமம், ஆசனம், பிராணயாமம் ஆகும். அந்தர் யோகமாக அதாவது உள்முகமான படிகள் பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்பவைகள் சொல்லப் பட்டுள்ளன.

★பொதுவாக இது இராஜயோகம் என்று சொல்லப்பட்டுள்ளது என்றாலும் முதல் நான்கு கிரியாயோகம் , அடுத்த நான்கும் இராஜயோகமாகும்.முதல் நான்கும் உடலையும் மனதையும் ஆரோக்யமாக வைக்க உதவும். முதல் நான்கையும் பயின்றவர்களுக்கு மட்டுமே அடுத்த நான்கு படிகளும் நலம் பயக்கும். அது போலவே திருமூலர் தந்திருக்கின்ற உன்னதமான மற்ற நான்கு யோகங்களை கைகொள்வதற்கு முன்னும் கிரியாயோகம் என்கிற முதல் நான்கு படிகளையும் பயிற்சி மேற்கொள்வது கட்டாயப் படுத்தப்பட்டுள்ளது.

கேசரி யோகம்.
◆◆◆◆◆◆◆◆◆◆◆

★கட்டக் கழன்று கீழ்நான்று வீழாமல்
அட்டத்தைக் கட்டி அடுப்பை அணைகோலி
விட்டத்தைப் பூட்டி மேற்பையைத் தாட்கோத்து
நட்ட மிருக்க நமனில்லை தானே. திருமந்திரம் - 779.

★அண்ணாக்கை ஊடே அடைத்து அமுதுண்ணேன்
அந்தரத்தை அப்பொழுதே பண்ணேன். -இடைக்காடார்.

★சூல் கொண்ட மேகம் என ஊமை நின்று சொறிவதைப்
பால் கொண்டு கொண்டனன் மேலே அமிர்தம் பருகுவேனே. - தாயுமானவர்.

★கோஎன முழங்கு சங்கொலி விந்து நாதம் கூடிய
முகப்பில் இந்துவான அமுதத்தை உண்டு ஒரு
கோடி நடனப்பதம் காண என்று சேர்வேன் - அருணகிரிநாதர்.

★மேலும் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சித்தர் பெருமக்கள் பலரும் இந்த யோகத்தைப் பற்றி பாடியுள்ளார்கள்.

★கேசரி யோகம் பயில ஆரம்பிப்பதற்கு முன் கண்நரம்புகளை வலுப்படுத்தும் பயிற்சி செய்திருப்பது அவசியம். மேலும் நாவின் அடிப்பாகத்திலுள்ள தசையை கொஞ்சம் கொஞ்சமாக அறுத்து புண்களை ஆற்றி பயிற்சி செய்து வரவேண்டும். நாக்கை இழுத்து, நீட்டி மூக்குக்கு மேல் நாக்கு ஒரு அங்குலம் நீளுமாறு பயிற்சி மேற் கொள்ள வேண்டும். வஜ்ஜிராசனத்தில் அமர்ந்து தினமும் அரைமணி நேரம் பயிற்சி செய்துவர வேண்டும். பார்வையை புருவ மத்தியில் குவிக்க வேண்டும். பெருவிரலை உட்பக்கமாக வைத்து விரல்களை மடிக்கி தொடைமீது கைகளை வைத்துக் கொள்ள வேண்டும். நாக்கை உட்புறமாக மடித்து நாக்கின் நுனி அண்ணாக்கில் தொடும்படி வைத்துக் கொண்டு சுழுமுனை தியானம் செய்து வரவேண்டும்.

★நீண்ட நாள் பயிற்சிக்குப் பிறகு அமிர்தம் சுரக்கும். அமிர்தம் உண்டால் ஞானம் சித்திக்கும். தொலைவில் நடக்கும் விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடியும். வான சஞ்சாரம் செய்யலாம் என்று திருமூலர் சொல்கிறார்.

★நாக்கு இயல்பாகவே அண்ணாக்குவரை செல்லுமானால் நாக்குக்கு கீழே உள்ள தசயை அறுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு சிலருக்கு
அண்ணாக்கின் மேல் துவாரத்தில் நாக்கை நுழைத்தவுடன் உடல் மறதி ஏற்பட்டுவிடும். மூச்சு நின்று எத்தனை கோடி ஆண்டுகள் ஆனாலும்
உடல் அழியாது, உயிரும் பிரியாது. இயற்கை சீற்றங்களினால் அல்லாது வேறெதினாலும் உடலை அழிக்க முடியாது. நகமும், முடியும் வளர்ந்து கொண்டே இருக்கும்.கண்களிலுள்ள கருமணி தூய்மையாக இருக்கும். சித்தர்கள் ஜீவசமாதியில் இருப்பது இவ்வாறே என்று சொல்லப் படுகிறது. தேரை, கருநாகம், நல்லபாம்பு போன்ற உயிரினங்களும் உணவு கிடைக்காத போது இந்த பயிற்சியை மேற்கொள்வதாக சொல்லப் பட்டுள்ளது. இவைகளுக்கு கண், காது, உடல் உணர்ச்சி இருக்கும் என்றும், உணவு கிடைக்கும் போது நாவை எடுத்து புசிக்கும் என்றும் சொல்கிறார்கள்.

★அனுபவம் உள்ள சித்தர்கள் தாமாகவே பயிற்சியிலிருந்து விடுபட்டுக் கொள்வார்கள். அனுபவமில்லாதவர்கள் பிறர் உதவியோடு மெதுவாக வாயைத் திறந்து நாவை இழுத்து எடுத்துவிட்டு கை கால்கள் முடங்கி இருப்பதை மெதுவாகத் தட்டி உணர்ச்சி உண்டாக்கினால் இயல்பான மூச்சு போக்கு வரத்து உண்டாகிவிடும்.

சந்திர யோகம்.
◆◆◆◆◆◆◆◆◆◆◆

★காணும் பரிதியின் காலை இடத்திட்டு
மாணும் மதியதன் கால் வலத்திட்டு
பேணியே யிவ்வாறு பிழையாமல் செய்வீரேல்
ஆணி கலங்காதவ் வாயிரத்தாண்டே. திருமந்திரம் - 866.

சந்திர கலையை ஒளிர வைத்து சந்திர மண்ணடலத்தில் அமுதம் உண்ணும் யோகம். மூலத்தில் உள்ள மூலாக்கினியை நாபிச்சக்கரத்தில் உள்ள சூரியனோடு இணைத்து, அந்த சூரியனை இடது மூளை பாகத்தில் ஒளிர வைத்து, அந்த ஒளியை வலது மூளை பாகத்தில் உள்ள சந்திரன் மீது பட வைத்தால், சந்திரன் ஒளிரும். சூரியனும், அக்கினியும் உஷணமானவை. சந்திர ஒளி குளுமை தரும். சந்திர மண்டலம் குளிரும் போது அமுதம் சுரக்கும். அமுதம் உண்டால் காலத்தை வெல்லலாம், சிவகதி அடையலாம். சந்திர யோகத்தை பிழையில்லாமல் செய்தால் ஆணியாகிய உடல் ஆயிரம் ஆண்டு கெடாமல் விளங்கும்.

★சந்திர யோகி காமத்தை வெல்வார். அவரது விந்து விரையமாகாமல் மூலாதாரத்தில் கட்டுப்பட்டு மூலாக்கினியால் எரிக்கப்பட்டு மேலேறி சந்திரனில் ஒளியேற்றும்.


★ ஸ்தூல உடலில் இடை, பிங்கலை என்னும் இருநாடி வழியாக பிராணன் இயங்குவது போல, சூக்குமத்தில் இடநாடி வழியாக பிராணன் இயங்கிக் கொண்டிருக்கும். அதுவே சந்திரயோகம்.சந்திர யோகியர்களுக்கு மரணமே இல்லை என்று திருமூலர் சொல்லுகிறார். உலகில் ஞானமார்க்கத்தில் ஈடுபட்ட பெரியோர்கள் பெரும்பாலும் சந்திர யோகத்தில் திளைத்தவர்கள்தான். விஸ்வாமித்திரர் சூரிய கலையையும், வசிஷ்டர் சந்திரகலையையும் பயன்படுத்தியதாகச் சொல்வார்கள்.

★சந்திர யோகத்தில் அமரும் விதம்.
வலது காலை அடியில் வைத்து, இடது காலை மேலே வைத்து முதுகுத்தண்டு நேரே இருக்கும்படியாக அமர்ந்து கொள்ள வேண்டும்.இப்படி அமரும் போது சுவாசம் இடது பக்கமாக ஓட ஆரம்பிக்கும். கண்கள் மூக்கு நுனியை பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். உடல் குளிர்வது போலத் தோன்றினால் ஐந்து நிமிடம் சூரியகலை போட்டு அமர வேண்டும். சூரிய கலையில் அமர்வது எப்படி என்றால், வலது காலை மேலே வைத்து, இடது காலை கீழே வைத்து பருவ மத்தியை பார்த்தபடி அமர வேண்டியது. வலது மூக்கில் சுவாசம் வரும் வரை இடது மூக்கை பிடித்துக் கொள்ள வேண்டும். சுவாசம் வந்து ஐந்து நிமிட நேரம் ஆன பிறகு சந்திர கலைக்கு மாறிக் கொள்ளலாம்.

★ பயிற்சியின் ஆரம்பத்தில் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும். குரு அருகில் இல்லை என்றால் மரணம் கூட ஏற்படக்கூடும் எனச் சொல்லப் பட்டுள்ளது .சந்திர கலை பயிற்சியை யார் வேண்டுமானாலும் தினமும்இருவேளை அதாவது சுமார் ஒருமணிநேரம் செய்யலாம். சித்தராகவோ, ஞானியாகவோ விரும்புபவர்கள் 24 மணி நேரமும் சந்திர கலையில் இயங்கிக் கொண்டிருக்க வேண்டும். சந்திர யோகம் எனப்படும் சந்திர கலையைப்பற்றி விளக்க மிக நீண்ட பதிவு தேவைப்படும், எனவே சுருக்கமாகத் தரப்பட்டுள்ளது.

★ஊழி பிரியாது இருக்கின்ற யோகிகள்
நாழிகை ஆக நமனை அளப்பர்கள்
ஊழி முதலாய் உயர்வார் உலகினில்
தாழவல்லார் இச் சசிவன்னராமே. திருமந்திரம் - 874.

சந்திர யோகியாகிய சசிவன்னர் பல ஊழிகள் மரணமில்லா பெருவாழ்வு வாழ்வர். இவர்கள் ஊழி முதலான சிவனாகவே மாறிடுவர்.-திருமூலர். திருமந்திரம் 851-883 வரை சந்திர யோகம் பற்றி விளக்குகிறது. படித்து உணர்ந்து பயனடையுங்கள்.

★குடும்ப வாழ்வில் இருந்து கொண்டே விந்து விரையமாகாமல் சிவநிலை அடைய பரியங்க யோகம் உதவும். இல்வாழ்வையும், யோகவாழ்வையும் இணைக்கும் அற்புதமான யோகம் பரியங்க யோகம். யோகம் என்றால் ஐக்கியம் என்பர். ஆத்மா சிவனோடு ஐக்கியமாவது போல, ஆணும் பெண்ணும் விந்து விரையமாகாமல் ஐக்கியமாவதே பரியங்க யோகம். இதைக்குறித்து திருமந்திரம் - 825- 844 வரையுள்ள மந்திரங்கள் விளக்குகின்றன.

★அமுரி தாரணை என்றால்சிறுநீர் வைத்தியம் என்றும், சுக்கில சுரோணிதத்தை மூலாதாரத்திலிருந்து சகஸ்ராரத்திற்கு ஏற்றும் பயிற்சி என்றும் இருவேறு கருத்துக்கள் உண்டு. பெண்களுக்கும் யோகமார்க்கம் சித்திக்கும் என்பதை தெளிவு படுத்தவே சுரோணிதமும் சொல்லப் பட்டுள்ளது. திருமந்திரம் -845-850 வரை இதைக்குறித்த விளக்கங்களைக் காணலாம்

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள‍ வேண்டிய ஜோதிட விதிகள்




திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள‍ வேண்டிய ஜோதிட விதிகள்

1. முதல் விதி

திருமணம் செய்யும் மணமக்களின் நட்சத்திர பொருத்தம் மட்டுமல்ல..இருவருக்கும் ஜாதக பொருத்தமும் பார்க்க வேண்டும்..ரெண்டு பேருக்கும் ஒன்பது பொருத்தம் இருந்தாலும் ஜாதக பொருத்தம்,லக்னபொருத்தம்,ராசி பொருத்தம் இல்லாவிட்டால்,8 மாதம் கூட குடும்ப வாழ்க்கை நீடிக்காது..ஒன்பது பொருத்தம் இருந்தாலும் ஒத்து வராது....ஒன்போது பொருத்தம் இருக்குன்னு அந்த ஜோசியன் சொன்னானே என புலம்பி பிரயோஜனம் இல்லை.நட்சத்திர பொருத்தம் வேறு..ஜாதகத்தில் கிரகங்களின் வலிமை வேறு.

இருவரது ராசியும் ஒருவருக்கொருவர் 6,8,12ல் மறைய கூடாது..இருவரது லக்னமும் ஒருவருக்கொருவர் 6,8,12ல் மறைய கூடாது..இருவரது குருவும்,சுக்கிரனும் மறைய கூடாது கெடக்கூடாது....அப்போதுதான் இருவருக்கும் ஒற்றுமையும்,அன்பும்,பாசமும் பலமாகும்..இருவருக்கும் குடும்ப ஸ்தானம் எனும் லக்னத்துக்கு இரண்டாம் இடம் கெடாமல் இருந்தால் குடும்பம் எப்போதும் கெடாது.இருவருக்கும் ஒரே திசை நடக்க கூடாது.இருவருக்கும் ஏழரை சனி நடக்க கூடாது...இருவருக்கும் குருபலம் இருந்தால் நல்லது.அல்லது மணப்பெண்ணுக்காவது குருபலம் இருக்க வெண்டும்.


திருமணம் மல மாதத்தில் இடம்பெறக்கூடாது. மலமாதம் என்பது இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருவது.

2. இரண்டாவது விதி
வைகாசி,  ஆவணி, ஐப்பசி,கார்த்திகை,தை, மாசி,மாதங்களில் திருமணம் செய்யலாம்..

3. மூன்றாவது விதி
இயன்றவரை வளர்பிறை  காலத்திலேயே திருமணம் செய்வது நல்லது

4. நான்காவது விதி

தமிழகத்தில் செவ்வாய்,சனி திருமணம் செய்வதில்லை..திருமணம் செய்ய வேண்டிய லக்னங்கள் -
ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு,கும்பம்,திருமனம் செய்ய வேண்டிய நட்சத்திரங்கள்-ரோகிணி,மிருகசிரீடம்,மகம்,உத்திரம்,அஸ்தம்,சுவாதி,அனுஷம்,மூலம்,உத்திராடம்,
திருவோணம்,சதயம்,உத்திரட்டாதி,ரேவதி,அசுவினி,புனர்பூசம்,பூசம்,
சித்திரை,அவிட்டம்,சதயம்

5. ஐந்தாவது விதி

துவிதியை, திரிதியை, பஞ்சமி, ஸப்தமி, தசமி, திரயோதசி ஆகிய சுப திதிகள்நல்லது.

6. ஆறாவது விதி
முகூர்த்த லக்கினத்துக்கு 7ம் இடம். முகூர்த்த நாளன்று சுத்தமாக இருக்க வேண்டும்.முகூர்த்த லக்னத்துக்கு 3,6,11 பாபர் நல்லது.8ல் குரு ஆகாது,6,8ல் சுக்கிரன்,புதன் கெடுதல்,2,3ல் சந்திரன் மிக நல்லது.7ஆம் இடத்தில் பாவர் இருந்தால் கெடுதல்

7. ஏழாவது விதி

அக்கினி நட்சத்திரம் காலகட்டத்தில் திருமணம் நடத்தக்கூடாது.வைகாசியில் எவ்வளவு காலம் அக்னி நட்சத்திரம் இருக்கிறது..அதில் முகூர்த்தம் வந்தால் தவிர்த்துவிடவும்.தனிய நாள்,கரிநாள் ,மரணயோகம்,இவைகள் ஆகாது

8. எட்டாவது விதி
திருமணத்தின் போது குரு, சுக்கிரன் போன்ற சுபகிரகங்கள் திருமண லக்கினத்துக்கும் மணமக்களின் ஜனன ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம் பெற்றிருக்க கூடாது.

9. ஒன்பதாவது விதி

திருமணநாள் மணமக்களின் சந்திராஷ்டம தினமாக இல்லாமல் இருப்பது மிகமிக முக்கியமான விதி.தாரா பலன் பார்த்துதான் முகூர்த்த நாளை குறிக்க வேண்டும் எல்லா முகூர்த்தமும் எல்லோருக்கும் ஏற்றது அல்ல..

10. பத்தாம் விதி.

மணமக்களின் ஜனன நட்சத்திர நாளிலும்,.பிறந்த கிழமை,மணப்பெண் பிறந்த தமிழ் மாதம் ஆகாது..மணப்பெண்ணின் 10,19 ம் நட்சத்திரங்களிலும் ஆணின் 10 வது நட்சத்திரத்திலும் திருமணம் செய்யலாம்..

11. பதினொன்றாம் விதி

கடைசியாக மணமக்களின் பிறந்த தேதி அல்லது கிழமைகளிலும் கல்யாணம் பண்ணக்கூடாது.சாந்தி முகூர்த்தம் நேரம் மிக முக்கியம்..திருமணம் நடக்கும் நாள் முகூர்த்த நாளாக இருப்பதால் அன்றே வைப்பதும் நல்லதுதான்..வேறு நாளில் வைப்பதாக இருப்பின் ஒரு லக்னம் குறித்துதான் நேரம் வைப்பார்கள் அந்த லக்னத்துக்கு 1,7,8ஆம் இடம் சுத்தம்..ஜென்ம நட்சத்திரம் அன்று ஆகாது...எமகண்டம்,ராகுகாலம் ஆகாது,,இரவிலும் எமகண்டம் உண்டு..அதை கவனித்து நேரம் குறிக்க வேண்டும்...முதல்முறை நல்ல நேரத்தில் தாம்பத்யம் கொள்வதே நல்லது...

. அவரவர் குலதெய்வத்தை மனதில் வேண்டிக்கொண்டு உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆசியுடன் நல்லதொரு நாளை
குறியுங்கள்...காலண்டரில் பார்த்து வளர்பிறை முகூர்த்தம் அருமை என குறிக்க கூடாது..மணமக்களின் இருவர் ஜாதகத்தையும் தகுந்த ஜோதிடரிடம் கட்டி அவர் ஆலோசனையின் பேரில் நள் குறிப்பதே சிறப்பு.

ஆவணி மாதத்தில் சிசேரியன் மூலம் குழந்தை பிறக்க நல்ல நேரம்

ஆவணி மாதத்தில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறக்க நல்ல நேரம்

ஆஸ்பிடல்ல,சிசேரியன்னு சொல்லிட்டாங்க, தேதி முடிவு செய்யனும் சார்,
டாக்டர் ஒருவாரம் டைம் கொடுத்திருக்கார்...அதுக்குள்ள ஒரு நல்ல நாள் பார்த்துட்டு வாங்க சிசேரியன் செஞ்சிடலாம் என சொன்னார்...நல்ல நேரம் சொல்லுங்க என போன் செய்தும் ,மெயில் மூலமும்,நேரிலும் கேட்பவர்கள் அதிகமாகிவிட்டனர்..அவர்களுக்காக இந்த ஆவணி மதத்தில் நல்ல நேரம் கொடுத்துள்ளென்...ராசி நட்சத்திரம் கூட இதில் இருக்கிரது...குழந்தையின்,தந்தை,தாய் ,மூத்த குழந்தை இருப்பின் அவர்களது நட்சத்திரம் இடம் பெறாமல் பார்த்துக்கொள்ளவும்...ஒரே ராசி தந்தைக்கும் குழந்தைக்கும் தவிர்க்கவும்.

ஆவணி 4 -வெள்ளி -சுவாதி -துலாம் ராசி-துலாம் லக்னம் -10.00 முதல் 10.30 வரை காலை 

ஆவணி 9 -26.8.2015 -புதன் -பூராடம் -தனுசு ராசி-துலாம் லகனம் -காலை 10 முதல் 11 வரை 

ஆவணி 10 -27.8.2015 -வியாழன் -உத்திராடம் -மகரம் ராசி -துலாம் லக்னம் -காலை 10 முதல் 11 வரை 

ஆவணி 12 -29.8.2015 -சனி-அவிட்டம் -கும்பம் ராசி-துலாம் லக்னம் -10.30 முதல் 11 காலை வரை 

ஆவணி 13 -30.8.2015 ஞாயிறு -சதயம் -கும்பம் -துலாம் லக்னம் -10 முதல் 11 வரை காலை 

ஆவணி 14 -31.8.2015 -திங்கள் -உத்திரட்டாதி -மீனம் -துலாம் லக்னம் -10 முதல் 10.30 வரை 

ஆவணி 15 -1.9.2015 -செவ்வாய்-ரேவதி -மீனம் ராசி -துலாம் லக்னம் -10.30 முதல் 11.00 காலை

ஆவணி 18 -4.9.2015 -வெள்ளி -கிருத்திகை -ரிசபம் ராசி-விருச்சிகம் லக்னம் -12 முதல் 1.00 பகல்

ஆவணி 21-7.9.2015-திங்கள் -திருவாதிரை -மிதுனம் ராசி-துலாம் லக்னம் -9.00 முதல் 10 காலை

ஆவணி 22-8.9.2015 செவ்வாய்-புனர்பூசம்-மிதுனம் -விருச்சிகம் லக்னம் -11 முதல் 12 வரை

ஆவணி 23 -9.9.2015 -புதன் -பூசம்-கடகம்ராசி  -துலாம்-9.00 முதல் 10 வரை காலை

ஆவணி 28-14.9.2015-திங்கள் -உத்திரம்-கன்னிராசி-துலாம்-காலை 9 முதல் 10 வரை

ஆவணி 29-15.9.2015-செவ்வாய்-ஹஸ்தம்-கன்னிராசி -விருச்சிகம் லக்னம் -காலை 11 முதல் 12 வரை

ஆவணி 31-17.9.2015-வியாழந்சுவாதி-துலாம்ராசி -விருச்சிகம்- காலை 11 முதல் 12 வரை

வியாழன், 20 ஆகஸ்ட், 2015

பசியின்றி ,உணவின்றி வாழ வைக்கும் சூரிய யோகா

★சூரிய யோகி என்று ஒரு மகான் இருக்கிறார். அவர் சூரியன் உதிக்கும் போது சூரிய ஒளியை தினமும் 20 நிமிடங்கள் பார்த்து அதிலிருந்து சக்தியை எடுத்து கொள்வார். பத்து வருடமாக உணவும் கிடையாது, தண்ணீரும் குடிப்பதில்லை. எத்தனையோ பல்கலைக்கழகங்கள் அவரை வைத்து ஆராய்ச்சி செய்தார்கள்.

★ஒரே அரையில் நான்கு நாட்கள் அடைத்து வைத்து உணவும் தண்ணீர் கொடுக்காமல் அவரை பரிசோதனை செய்துவிட்டார்கள். தண்ணீர் குடிக்க மாட்டார். தண்ணீர் உணவு சாப்பிடாத காரணத்தால் மலம் வராது எந்த கழிவும் வராது . ஆனால் சிறுநீர் வரும். அப்படி என்றால் தண்ணீர் குடிக்க மாட்டார் சிறுநீர் மட்டும் எப்படி வருகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கேட்பார்கள். அவர் என்ன சொன்னார் என்றால் நான் தண்ணீர் குடிப்பதில்லைதான் ஆனால் தண்ணீரை வாய் வழியாக குடிப்பதில்லையே தவிர உடம்பு atmospheric என்று சொல்ல கூடிய வளிமண்டலத்தில் இருக்க கூடிய நீர் ஆவியை தானாகவே உறிஞ்சி கொள்வேன்.

★சாதாரண ஒரு மரம் 14 லிட்டர் தண்ணீர் உறிஞ்சும். 14 லிட்டர் தண்ணீரையே வளிமண்டலத்தில் எடுத்து கொள்கிறது என்று சொன்னால் மனித உடம்பிற்கு தேவையானது 1 1/2 லிட்டர் தான் , ஏன் அது எடுக்காது என்று சூரிய யோகி கேட்பார். உண்மையாக அவரை பரிசோதனை செய்தவர்கள் எப்போதெல்லாம் தண்ணீர் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் தோல் வெளியில் இருந்து தண்ணீரை உறிஞ்சும் என்று கண்டுபிடித்தார்கள்.

★இந்த உடம்பே நீர் ஆவியை உறிஞ்சுகிற அளவிற்கு உறிஞ்சும் சக்தி இருக்கிறது. ஆற்றல் குறையும்!!!!. எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் நடந்து செல்வார். அவர் வேகத்திற்கு நம்மால் நடக்கவும் முடியாது. கழிவு வெளியேற்றமும் கிடையாது. உணவும் தேவையில்லை. கையில் பணம் எடுத்து கொள்ளாமல் வெரும் கையோடு போவார். டீ குடிப்பதற்கு கூட 5 ரூபாய் வேண்டும். நாளு பேர் கிட்ட கை நீட்டி பிச்சையாவது எடுக்கனும். எதுவுமே தேவையில்லைனா!!!!!!!!. அவரை வீட்டுக்கு வரவேற்று மரியாதையா தண்ணீர் கொடுக்கிறேன் என்று கூட சொல்ல முடியாது.

★ அப்படினா தனக்கு தேவையானதை ஐம்புலன்களில் இருந்து உறிஞ்சி கொள்ளுதல் அந்த அளவிற்கு இந்த உடம்பில் ஆற்றல் உள்ளது என்பதை அந்த சூரிய யோகி நிரூபித்து உள்ளார். இன்னும் உயிரோடு தான் இருக்கிறார். இப்போது கல்கத்தாவில் இருக்கிறார். அடிக்கடி தமிழ்நாட்டுக்கு நினைத்தால் வந்துவிடுவார். வந்து சும்மா ஒரு நாள் கூடவே இருந்து சூரிய சக்தியை எப்படி ஈர்ப்பது என்று கற்றுத்தருகிறார்.

★செல்போனுக்கு battery down ஆகும் போது charge செய்வது போல மனிதனுக்கும் சக்தி குறையும் போது கண்களின் மூலமாக சூரியனில் இருந்து charge செய்துகொள்ளலாம்.

★ உயிரையும் மனதையும் பார்க்க முடியாது என்று சொல்வார்கள். ஆனால் அதை பார்கலாம்.

★சூரிய தியானம் செய்துவிட்டு கண்களை மூடி புருவமத்தியை கவனிக்கும் போது உயிர் என்பது ஜோதி வடிவத்தில் தெரியும். உயிர் என்பது கண்ணுக்கு தெரியாத ஒரு மிக மிக நுண்ணிய பொருள். ஒரு பசு மாட்டின் ரோமத்தை எடுத்து 1000 துண்டுகளாக வெட்டி அந்த ஆயிரம் துண்டில் ஒரு துண்டை எடுத்து 10000 துண்டுகளாக வெட்டி கிடைக்கும் ஒரு துண்டின் அளவே உயிர். இதுவே இறைதுகள், பரமணு, வெட்டவெளி, கடவுள்துகள், சுத்தவெளி என பல பெயர்களில் கூறப்படுகிறது.

★உயிரின் படர்க்கை நிலையே மனம். உயிரில் இருந்து வெளிபடும் சீவகாந்த ஆற்றலே மனமாக இயங்குகிறது. சூரிய தியானம் செய்துவிட்டு கண்ணை மூடி புருவமத்தியை கவனிக்கும் போது மனம் என்பது spiral shape ல் சுற்றும். யார் வேண்டுமானாலும் மனதையும் உயிரையும் பார்கலாம்.

★உணவு தேவைப்பட்டால் தான் காசு தேவை உணவே தேவையில்லை என்றால் பணம் என்ற அத்தியாவசிய தேவையே இல்லாமல் போய்விடும்.

தேங்காய் எண்ணெய் கலப்படம் ஒரு சர்வதேச மோசடி

தேங்காய் இன்று உடைத்து வைத்து மிச்சம் இருந்தால் குளிர்சாதனத்தில்வைக்கிறோம். வெளியே வைத்தால் என்ன ஆகும்?...அப்படியானால் லட்சக்கணக்கான தேங்காயை உடைத்துவியாபாரிகள் எப்படி பயன் படுத்துவார்கள்?

தேங்காய் எண்ணைதயாரிப்புக்கு அடி நாதமாக விளங்கும் இந்த கொப்பரையை பதப்படுத்த இயற்கையான முறையில் தயார் செய்ய இயற்கையாக காய வைத்தாலே போதும்.நியாயமாக தொழில் செய்ய மக்களுக்கு நன்மை தர நல்ல தரமான கொப்பரை இருந்தால் தானே சுத்தமானதேங்காய் எண்ணை கிடைக்கும்?

ஆனால் பணம் செய்ய எதையும் செய்யலாம்?எப்படியும் செய்யலாம்?என்ற சிந்தனை அரசியல்வாதிகளிடம் இருந்து வியாபாரிகளுக்கும் பரவியதால் கொப்பரையில் பட்டாசு தயாரிக்க பயன்படும் கந்தகத்தைத் தடவி இருப்புவைக்கிறார்கள்.

 தேங்காய் விலை ஏறும்காலத்தில் இவர்களுக்குவிலை அதிகமாக கிடைக்க
இந்த முறை பயன் படுகிறது.

சபரி மலை ஐயப்பன்கோவிலில் வெடி வழிபாடு நடக்கும்.கோடிக்கணக்கான தேங்காய்உடைத்து வழிபாடும் நடக்கும்.

கீழே கொண்டு போய்சேர்த்து எண்ணெய் கம்பெனிகளிடம் சேர்க்ககாலதாமதம் ஆகும்.

அதனால் வெடி வழிபாடுசெய்யும் இடத்திலேயேகந்தகம்(SULPHUR) பூசப்படுகிறது.

 கந்தகத்தால் பாதுகாக்கப்பட்டகொப்பரைகள் பலமாதங்களானாலும் ஒன்றும்
ஆகாது.

ஒரு பொருளில் புழுவந்தாலோ,வண்டு வந்தாலோ,பூசனம்பூத்தாலோ உயிர்த்தன்மைஇருக்கும்.புழு,பூச்சி சாப்பிட்டதுபோக மீதி கிடைப்பதை நாம்
எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதுதான்நியதி...ஆனால் நமக்கு இரண்டுவருடம் ஆனாலும்ஹார்லிக்ஸ் மாதிரிகெடாமல் இருக்கணும்.அப்புறம் கெமிக்கலை கலந்தால்தான்கெடாது.
கெமிக்கலில் முக்கினால்என்னவாகும்!?கொப்பரையில் உள்ள அமில
கந்தகம் உடம்புக்குள்போனால் என்னவாகும்? 
  
கேன்சர் வரும்....வயிறு கோளாறு வரும்....ரத்த ஓட்டம் அதிகரித்துரத்தக்கொதிப்பு வரும்....சுரப்பிகள்சீர்கெட்டுநீரிழிவு நோய் வரும்.... உடல் பருமன்மாறுபடும்...

கிட்ணி பழுதடையும்......இருதய துடிப்புஎண்ணிக்கை மாறுபடும்....புத்தி வேறுபடும்....சோரியாசிஸ் தோல் வியாதிகள் வரும்....சரி...இதோடு போனால்
பரவாயில்லை.தேங்காய் விலை உயர்வு...எள் விலை உயர்வு...கடலை விலை உயர்வு... சூரியகாந்திவிதைஉற்பத்தி குறைவு...இதனால் எண்ணெய் விலைகள்
கடும் விலை உயரவேண்டும்.

ஆனால் அப்படி உயராமல் விலைகுறைவாகதான்உள்ளது.

ஒரு சிறிய பார்வை....

ஒரு லிட்டர் எண்ணெய்தயாரிக்க சுமார் மூன்றுகிலோ விதை தேவைப்படும்.
நிலக்கடலை கிலோரூ70*3kg=Rs210எள் கிலோ ரூ90*3kg=Rs 270
சூரியகாந்தி விதைரூ55*3kg=Rs 165 மேலே சொன்ன விலை ஒருகிலோவுக்கு என்றாலும்ஆட்கள் சம்பளம்,கரண்டு பில்
,கழிவு,லாபம் கணக்கிட்டால்விலை எங்கே போகும்!?

இப்படி விலை பிரச்சனையால் எல்லாஇடத்திலும் ஒரு தந்திரத்தனம்உருவாகிறது.

அதனால் மனித இனத்திற்கேகேள்விக்குறி ஆகிறது?!

எப்படி?!...

இனிதான் உங்களுக்குஅதிர்ச்சி...???!!!

வளைகுடா நாடுகளில்பெட்ரோலிய இன்டஸ்ட்ரியல்கழிவு Liquid Paraffin ( திரவ நிலை மெழுகு )லிட்டர்ரூபாய் 11 க்கு பெறப்படுகிறது.
அதை இங்கு கூலிங்பிராசஸ் செய்து லிட்டர்ரூபாய் 30க்கு எண்ணெய்தயாரிப்பு
கம்பெனிகளுக்கு விற்பனைசெய்கிறார்கள்.

இதை இறக்குமதி செய்வது"பாமாயில்" என்கிற பெயரில்இங்கு வருகிறது.

பால்ம் என்ற மரத்தில் இருந்துஎடுக்கப்படும் பாமாயில் உண்மையில் மிக
நல்லஎண்ணெய் தான்.பனை மரம்,பேரீச்ச மரம்
போன்று பால்ம் ஒரு சிறந்தமரம்.

ஆனால் உலகம் முழுவதும் பாமாயில்எண்ணெய் சப்ளை செய்ய இயலுமா?

பால்ம் மரங்கள் உள்ளதா?!சூரிய காந்தி எண்ணெய்வியாபாரம் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் விற்பனை ஆகிறது.

அதற்கு ஏற்ப சூரியகாந்திசாகுபடி தோட்டங்கள்உள்ளதா?..

..இல்லையே!

சரி விடுங்கள்...250 சூரியகாந்தி பூவில் உள்ள விதையில் 50 mlசன்பிளவர் ஆயில் தான் கிடைக்கும்.

125 கோடி மக்களுக்கு சன்பிளவர் ஆயில் தயாரிக்கஎங்கே விவசாய சாகுபடி நடக்கிறது?!

அதுபோலதான் பாமாயிலும்...சரி.நன்றாக போய் கொண்டு இருந்த நேரத்தில் நாம் நல்லெண்ணை,கடலை எண்ணெய்,தேங்காய் எண்ணெய் பயன் படுத்தி
வந்தோம்.இதயத்தை பாதுகாக்கசூரியகாந்தி எண்ணெய் என்று நமக்குபொய் சொல்லி,விளம்பரம் செய்து நம்மை ஏமாற்றியதை நாம்அறிந்தோமா!?

உண்மையில் கொழுப்புசத்து நம் உடலுக்கு கட்டாயம் வேண்டும்.

ஒரு மிருகத்தில் இருந்துஎடுக்கப்படும் நெய்யேநமக்கு நன்மை தந்தால் ஒரு
இயற்கையான தாவரத்தில்இருந்து கிடைக்கும் எண்ணை நமக்கு
செரிமானம்ஆகாதா!?

சிந்தனை செய்யுங்கள் மக்களே!!!

பெண்களுக்கு மாதவிடாய் தொந்தரவு, குழந்தைபாக்கியம் இன்மை,ஆண்மைகோளாறு,சிறுவயதிலேயே வயதுக்கு வருதல்,கேன்சர்,சிறு வயதில் சர்க்கரை நோய் போன்றஅனைத்து வராத நோய் வந்தபிரச்சனைக்கும் காரணம் பாழாய் போன சன் பிளவர் ஆயில் வந்த பிறகுதானே!!!!.

அந்த எண்ணெயை தொட்டுப்பாருங்கள்.
அது பச பசன்னு கிரீஸ் மாதிரி இருக்கும்...

எள்,நிலக்கடலை,தேங்காய்,சூரியகாந்தி எண்ணெய் என்ற பெயரில் கந்தகமும்,பெட்ரோலிய கழிவுகளும்,அதே எண்ணெய் போல தயாரித்த வாசனைகளும்கலந்தால் நம் உடல் என்னவாகும்!?

மனிதச் செயலா இது?!

எண்ணெய் கலப்படம் ஒரு சர்வதேச மோசடி...

கொலை பாதக செயல்... நூடில்ஸ் மோசடியை விடஇது கோடிக் கணக்கானமடங்கு விஷக் கொலைச்செயல்!?

இது உயிர் உடலா?!கெமிக்கல்பேரலா?!

அரசின் தீர்வுதான் என்ன?

ஆதிசங்கரர் அருளிய,உங்கள் பிறந்த நட்சத்திரப்படிசொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த மந்திரம்

ஆதிசங்கரர் அருளிய 27 நட்சத்திரங்களுக்கும் சிறப்பு மந்திரம் 

27  நட்சத்திரத்திற்கும்    ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர நட்சத்திர மாலா ஸ்தோத்திரம் ொடுக்கப்பட்டுள்ளு..இஸ்ரீ ிசங்கால் இயற்றப்பட்டக்ி வாய்ந்தந்திராகும்..கீழே உள்ள ஸ்லோகத்தை தினம் பாராயணம் செய்து வர சகல காரியங்களும் வெற்றி உண்டாகும் 
.
கல பாக்யங்களையும் அளிக்கும் ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்திரம்
 
1. அஸ்வினி
 
 

ஸ்ரீமதாத்மனே குணைகஸிந்தவே நம:சிவாய 
 
தாமலேச தூதலோக பந்தவே நம: சிவாய
  
நாம சோஷிதா நமத் பவாந்தவே நம: சிவாய
 
பாமரேதர ப்ரதாத பாந்தவே நம: சிவாய
 

2. பரணி
 
 
கால பீதவிப்ரபால பாலதே நம: சிவாய 
சூல பின்ன துஷ்ட தக்ஷபாலதே நம: சிவாய
மூல காரணீய கால காலதே நம: சிவாய
பாலயாதுனா தயாலவாலதே நம: சிவாய

3. கிருத்திகை
 
இஷ்ட வஸ்து முக்யதான ஹேதவே நம: சிவாய 
துஷ்ட, தைத்யவம்ச, தூமகேதவே நம: சிவாய
ஸ்ருஷ்டி ரக்ஷணாய தர்ம ஸேதவே நம: சிவாய 
அஷ்ட மூர்த்தயே வ்ருஷேந்ர கேதவே நம: சிவாய
 

4. ரோஹிணி
 

ஆபதத்ரி பேத டங்க ஹஸ்ததே நம: சிவாய 
பாப ஹாரி திவ்ய ஸிந்து மஸ்ததே நம: சிவாய
பாப தாரிணே லஸன்ந மஸ்ததே நம: சிவாய 
சாப தோஷ கண்டன ப்ரசஸ்ததே நம: சிவாய
 

5. ிருகிரீடம்
 

வ்யோம கேச திவ்ய ஹவ்ய ரூபதே நம: சிவாய 
ஹேம மேதி னீ தரேந்ர சாப தே நம: சிவாய
நாம மாத்ர தக்த ஸர்வ பாபதே நம: சிவாய 
காமிநைக தாந ஹ்ருத்துராபதே நம: சிவாய
 

6. திருவாதிரை

ப்ரம்ம மஸ்தகாவலீ நிபத்ததே நம: சிவாய 
ஜிம் ஹகேந்ர குண்டல ப்ரஸித்ததே நம: சிவாய
ப்ரம்மணே ப்ரணீத வேத பந்ததே நம: சிவாய 
ஜிம்ஹ கால தேஹ தத்த பந்ததே நம: சிவாய
 

7. புனர்பூசம்
 

காமநாசனாய சுத்த கர்மணே நம: சிவாய 
ஸாம கான ஜாயமான சர்மணேநம: சிவாய
ஹேம காந்தி சாக சக்ய வர்மணே நம: சிவாய 
ஸாம ஜாஸூராங்க லப்த சர்மணே நம: சிவாய
 

8. பூசம்
 

ஜன்ம ம்ருத்யு கோரதுக்க ஹாரிணே நம: சிவாய 
சின்மயை கரூப தேஹ தாரிணே நம: சிவாய
மன்மனோ ரதாவ பூர்த்தி காரிணே நம: சிவாய 
மன்மனோகதாய காம வைரிணே நம: சிவாய
 

 9. ஆயில்யம்
 

யக்ஷராஜ பந்தவே தயாளவே நம: சிவாய 
ரக்ஷ பாணி சோபி காஞ்ச நாளவே நம: சிவாய
பக்ஷிராஜ வாஹ ஹ்ருச் சயாளவே நம: சிவாய 
அக்ஷி பால வேத பூத தாளவே நம: சிவாய
 

10. மகம்
 

தக்ஷ ஹஸ்த நிஷ்ட ஜ்õத வேதஸே நம: சிவாய 
அக்ஷராத்மனே நமத்பி டௌ ஜஸே நம சிவாய
தீஷித ப்ரகாசிதாத்ம தேஜஸே நம: சிவாய 
உக்ஷராஜ வாஹதே ஸதாம் கதே நம: சிவாய
 

11. பூரம்
 

ராஜிதாசலேந்ர ஸாநு வாஸிநே நம: சிவாய 
ராஜமான நித்ய மந்த ஹாஸினே நம: சிவாய
ராஜகோர காவ தம்ஸ பாஸினே நம: சிவாய 
ராஜராஜ மித்ரதா ப்ரகாசினே நம: சிவாய
 

12. உத்திரம்
 

தீனமான வாளி காம தேனவே நம: சிவாய 
ஸூந பாண தாஹ த்ருக் க்ருசானவே நம: சிவாய
ஸ்வாநு ராக பக்த ரத்ன ஸானவே நம: சிவாய 
தானவாந்தகார சண்ட பானவே நம: சிவாய
 

13. ஹஸ்தம்
 

ஸர்வ மங்களா குசாக்ர சாயினே நம: சிவாய 
ஸர்வ தேவதா கணாத் சாயினே நம: சிவாய
பூர்வ தேவ நாச ஸம்விதாயினே நம: சிவாய 
ஸர்வ மன் மனோஜ பங்க தாயினே நம: சிவாய
 

14. சித்திரை
 

ஸ்தோக பக்திதோபி பக்த போஷிணே நம: சிவாய 
மாகரந்த ஸாரவர்ஷ பாஸிணே நம: சிவாய
ஏகபில்வ தானதோபி தோஷிணே நம: சிவாய 
நைகஜன்ம பாப ஜால சோஷிணே நம: சிவாய
 

15. ஸ்வாதி
 

ஸர்வ ஜீவரக்ஷணைக் சீலினே நம: சிவாய 
பார்வதீ ப்ரியாய பக்த பாலினே நம: சிவாய
துர்விதக்த தைத்ய ஸைன்ய தாரிணே நம: சிவாய 
சர்வரீச தாரிணே கபாலினே நம: சிவாய
 

16. விசாகம்
 

பாஹிமாமுமா மனோக்ஞ தேஹதே நம: சிவாய 
தேஹிமே பரம் ஸிதாத்ரி தேஹதே நம: சிவாய
மோஹி தர்ஷி காமினீ ஸமுஹதே நம: சிவாய 
ஸ்வேஹித ப்ரஸன்ன காம தோஹதே நம: சிவாய
 

17. அனுஷம்
 

மங்களப் ரதாயகோ துரங்கதே நம: சிவாய 
கங்கையா தரங்கி தோத்த மாங்காதே நம: சிவாய
ஸங்கத ப்ரவிருத்த வைரி பங்கதே நம: சிவாய 
அங்கஜாரயே கரே குரங்கதே நம: சிவாய
 

18. கேட்டை
 

ஈஹித க்ஷண ப்ரதாந ஹேதவே நம: சிவாய 
அக்னி பால ச்வேத உக்ஷ கேதவே நம: சிவாய
தேஹ காந்தி தூத ரௌப்ய தாதவே நம: சிவாய 
கேஹ துக்க புஜ்ஜ தூமகேதவே நம: சிவாய
 

19. மூலம்
 

திரியக்ஷ தீன ஸத்க்ருபா கடாக்ஷதே நம: சிவாய 
தக்ஷ ஸப்த தந்து நாச தக்ஷதே நம: சிவாய
ருக்ஷராஜ பானு பாவகாக்ஷதே நம: சிவாய 
ரக்ஷமாம் ப்ரஸன்ன மாத்ர ரக்ஷதே நம: சிவாய
 

20. பூராடம்
 

அந்ரி பாணயே சிவம் கராயதே நம: சிவாய 
ஸங்கடாத் விதீர்ண கிம்கராயதே நம: சிவாய
 
பங்க பீஷிதா பயங்கராயதே நம: சிவாய 
பங்க ஜாஸனாய சங்கராயதே நம: சிவாய
 

21. உத்ிராடம்
 

கர்மபாச நாச நீலகண்டதே நம: சிவாய 
சர்ம தாய நர்ய பஸ்ம கண்டதே நம: சிவாய
 
நிர்ம மர்ஷி ஸேவி தோப கண்டதே நம: சிவாய 
குர்மஹே நதீர்ந மத்விகுண்டதே நம: சிவாய
 

22. திருவோணம்
 

விஷ்ட பாதிபாய நம்ர விஷ்ணவே நம: சிவாய  
சிஷ்ட விப்ர ஹ்ருத்குஹா வரிஷ்ணவே நம: சிவாய
 
இஷ்ட வஸ்து நித்ய துஷ்ட ஜிஷ்ணவே நம: சிவாய 
கஷ்ட நாசனாய லோக ஜிஷ்ணவே நம: சிவாய
 

23. அவிட்டம்
 

அப்ரமேய திவ்ய ஸூப்ரபாவதே நம: சிவாய 
ஸத்ப்ரபன்ன ரக்ஷண ஸ்வபாவதே நம: சிவாய
 
ஸ்வப்ரகாச நிஸ்துலா நுபாவதே நம: சிவாய
விப்ர டிம்ப தர்சிதார்த்ர பாவதே நம: சிவாய
 

24. சதயம்
 

ஸேவ காயமே ம்ருட ப்ரஸாதினே நம: சிவாய 
பவ்ய லப்ய தாவக ப்ரஸீத தே நம: சிவாய
 
பாவ காக்ஷ தேவ பூஜ்ய பாததே நம: சிவாய
 
தாவ காங்க்ரி பக்த தத்த மோத தேநம: சிவாய
 

25. பூரட்டாதி
 

 
புக்தி முக்தி திவ்ய தாய போகினே நம: சிவாய 
 
சக்தி கல்பித ப்ரபஞ்ச பாகினே நம: சிவாய
 
பக்த ஸங்கடாபஹர யோகினே நம: சிவாய 
யுத்த ஸன்மனஸ் ஸரோஜ யோகினே நம: சிவாய
 

26. உத்தரட்டாதி
 

 
அந்த காந்த காய பாப ஹாரிணே நம: சிவாய 
 
சம்தமாய தந்தி சர்ம தாரிணே நம: சிவாய
 
ஸந்த தாச்ரிவ்யதா விதாரிணே நம: சிவாய 
 
ஜந்து ஜாத நித்ய ஸெளக்ய காரிணே நம: சிவாய
 

27. ரேவதி
 
சூலினே நமோ நம: 
கபாலினே நம: சிவாய 
பாலினே விரிஞ்சி துண்ட மாலினே நம: சிவாய
லீலனே விசேஷ முண்ட மாலிநே நம: சிவாய 
சீலினே நம ப்ரபுண்ய சாலினே நம: சிவாய