திங்கள், 30 மார்ச், 2015

ஜாதகத்தில் சுக்கிரன் தரும் பலன்கள்

சுக்ரன் :

ஒருவருக்கு  பொன்,  பொருள்,   அழகமைந்த   மனைவி,   சுகமான   வாழ்க்கை,  உயர் பதவி,  கலை,   வாகன்   யோகம்   போன்றவைகளை   சிறப்புடன்   வழங்கி   வாழ  வைப்பதில்    சுப   கிரகங்களின்   வரிசையில்   குருவிற்கு   அடுத்து   சுக்ரன்    அமைகிறார்.

அசுர குரு   சுக்ரன்  ஆவார்.  இவர்   இகலோக   ஆசையை   அளிப்பவர்.   சுக்ரன்   விடி  வெள்ளி  பிரகாஷமாக   தெரியும்  - இளமையாக   இருப்பவர்கள்   ஜொலிப்பார்கள்  ஆக   இளமையும்,  ரஸனையையும்  அளிப்பவர்.  ஆடல்  பாடல்   முதலான   நளின   கலைகளுக்கு   நாயகன்,  மனைவியைக்   கொடுத்து    மகிழ்ச்சிகாரமான    இல்லற   வாழ்க்கையைத்  துவக்கி   வைத்துப்   பரிபாலனம்  செய்வர்.

வேஷக்காரன்,   நடிகர்கள்,    கலைத்துறைக்காரன்கன்,  ஒப்பனைப் பொருட்கள்,  அலங்கார   வஸ்த்துக்கள்,  ஆடம்பர  வஸ்துகள்,  சுக்ரன்  என்றால்    வெள்ளை   என்று  பொருள்,  வெண்மை   பொருள்கள்   அனைத்துக்கும்   காரகன்,    சுக்கில  பட்சம் ,  வைரம்   மிக    பிரகாஷம்  ஜொலிப்பது  போல்  எல்லாம்   சுக்கிரன் ,  இளம் பெண்   குறிப்பது  சுக்ரன், விடியற்  காலை   பொழுத்தைக்  குறிப்பவர்   இவர்,   வான்   மண்டலத்தில்   விடியல்   காலை  பொழுதில்   சுக்ரன்   தெரிகிறார்.   அதிகாலையில்   மனிதனுக்கு  காமக் கிளர்ச்சியை   ஏற்படுத்துவதும்   இவர்  தான்.  காமத்துக்   காரன்   சுக்ரன்.


சுக்ரன்    இல்லற்   வாழ்வுக்குறியவர்,  ஆணுக்கு   மனைவியைப்பற்றியும்,  பெண்ணுக்கு  மண   வாழ்க்கையைப்  பற்றியும்  சொல்லுகின்றவர்.   உலக   வாழ்கையில்     இன்பமும்  செளபாக்கியங்களையும்   சுக  போக    செளரியங்களையும்  தருபவன்  சுக்ரன்.   வாகன  வசதிகளை       அளிப்பவர்   இவர்,  மிக  உயர்ந்த    வாகனமா,  நடுத்தரமான   வாகனமா,  கடைசி   நிலை    வாகனமா,  ஒன்றுக்கு   மேற்பட்ட   வாகனமா  என   குறிப்பவர்   இவர்தான். 

ஒருவரின்   தேவைகளை  பூர்த்தி   செய்யக்  கூடியவர்  இவர்.
கையில்   காசுடையவர்களாய்   வைப்பரும்,   சொந்த  வீடு அளிப்பவரும்  இவர்தான்,  கலை  உலகில்   சிறப்பான   நிலையை  அளிப்பவர்.  பெண்களிடம்  மோகத்தை  அளிப்பவரும்,  வாழ்நாள்   முழுவதும்   அதே  நினைப்பில்   இருக்க  வைப்பவர்  இவர்தான்.


வலுப்  பெற்ற  சுக்ரன்   கலாரசனை என்கின்ற   அற்புத  உணர்வு அளிப்பவர்,  அழகு,  அழகின்   படைப்பான  ஆரணங்கு,  அந்த    ஆரணங்கத்தின்  மீது  காதல்   கொண்டு   சுகமடையும்   தகுதி, சிற்றின்பம்,    திருமணம்  முதலான  ஆணுக்கு  அளிப்பவர்.  அதே  போல்  பெண்களுக்கு   நளினத்   தன்மையையும்   அழகான  தோற்றம்,  கவர்ச்சி,   வீரியசக்தி,  அறிவாற்றல்,   மனத்துக்கிசைந்த   கணவனை   அடையும்   தகுதியையும்,  சுக  போகங்களில்   திளைத்து   மகிழும்  ஆற்றலையும்  வழங்குவார்.  மாட   மாளிகையில்     வாழ்க்கை   நடத்தும்  பாக்கியத்தை  இரு  பாலருக்கும்  அளிப்பவர்.


சுக்ரன்  என்றால்   இன்பம்   என்று பொருள்  கொள்ளலாம்.   அன்பு,  பாசம்,  காதல்  ஆகிய   மூன்று   இன்பங்களை  அளிக்கக்  கூடியவர்.   இன்பம் என்கிற   ஆனந்தத்தை  அடைவதற்குரிய    மனநிலையை   உருவாக்குகிறவர்  சுக்ரன்.   இவர் கலை   உணர்வால்  இன்பம்  உண்டாக்குவார்.    அழகு,  ஆராதனையால்   இன்பம்   ஏற்படுத்துவார்.  

                         
கலையம்சமுள்ள    பொருட்  சேர்க்கையால்  இன்பம்  தருவார்.  அழகு    வனிதையால்   ஆடவருக்கு  சுகம் ,வாசனைத்    திரவியங்களால்    உற்சாகம்   ஊட்டுவார்.    இசையால்,   இசையுணர்வால்     இன்பம்  தருவார்,  கற்பனை   வளத்தால்   மாபெரும்  இன்பம்   தருவார்

வாசனை  திரவியங்களால்  சுகானுபவம்    அளிப்பவார்.   கவியின்பம்  தருவார்.   காவிய  இன்பம்   தருவார்.    கற்பனை   வளத்தால்  மா பெரும்   இன்பம்   தருவார்.   நடன   நாகரீக   மணிகளை   உருவாக்குவார்.   நாடகக்  கலைஞர்களைத்   தோற்றுவிப்பார்.  வெண்  திரைச்   சலனப்படத்திற்கு   ஆதாரம்  அவர்.  கண்களைப்   பிரதிபலிப்பவர்,  ஜனன    உறுப்புகளைக்   காப்போன்.



மேலே   குறிப்பிட்ட   இன்பத்தை   யாருக்கு   தருவார்  என்றால்   மீனத்தில்   சுக்கிரன்  உச்சம்  பெற்று   இருக்க,   அவருக்கு   நட்பு   கிரகங்களின்    தொடர்பும்,  பகை   கிரக  தொடர்பு   இன்றி   இருத்தால் கண்டிப்பாக   கிடைக்கும்.  அதே  போல்    சுக்ரன்  ஆட்சி   வீடான    ரிஷபம்  மற்றும்   துலாமில்   இருந்தாலும்   சுக   வாழ்வு  உண்டு.    [சுக்ரனுக்கு   புதன்   நட்பு     கிரகம்.   புதனின்   வீடான  கன்னியில்   சுக்ரன்    நீசம்  அடைகிறார்.  அங்கு   நீச   பங்கம்  பெறாமல்    இருந்தால்  சுக   வாழ்வு   எதிர்பார்க்க   முடியாது...





ஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்

புதன் ;

ஒவ்வொரு   மனிதனுக்கும்  புத்தி   வேண்டும்.   ஒரு   சிறிய    விஷயமாக   இருந்தாலும்   பெரிய   விஷயமாக  இருந்தாலும்  அதை   தீர்க்க    புத்தி  என்ற   சக்தி   கண்டிப்பாக    தேவைப்படுகிறது.   மனம் [சந்திரன்]  பேதலித்தாலும்,   புத்திசாலி  தனத்தின்   [புதன்]  மூலம்   பாதுகாத்துக்   கொள்ளப்படுகிறது.  ஒரு   மனிதனை  செயல்  பட   செய்வது   எண்ணங்கள்  செயலாக   மாறுகிறது.   சிந்தனை,  சிந்திக்கும்   திறமை,   பகுத்தறிவு,   புத்தி,   பகுத்தறியும்   திறமை  இவைகள்   அனைத்தும்   மனதில்   தோன்றுகிறது.  இதற்கு   எல்லாம்  புதன்   காரணம்  ஆகிறார்.  அகத்தின்   அழகு   முகத்தில்  தெரியும்    என்று  கூறுவது   போல்   ஒருவரின்   முகத்திலிருந்து   அவரது   புத்திசாலி  தனத்தை   அறிய முடியும்.

புதன்  புத்திகாரன்,  அறிவு,  பொது அறிவு,  கல்வி அறிவு,  கல்வியில்  ஞானம்,  யூகம்,  புத்திசாலி   தனம்,  தெளிவாக   பேசுவர்,   விகடம் பேசியே  வெற்றி   காணுகின்ற   இனிய  இயல்பு,   இனிமையான  பேச்சு, மென்மையான பேச்சு,   பேச்ச்சில்  பெருந்தன்மை,  பேச்சில்  அனைவரையும் கவருதல்,  பளிச்சென்ற   உச்சரிப்பு,   நகைச்சுவை  ததும்பும்   நயமான  பேச்சு,  எதையும்   எளிமையாகவே   எடுத்துக்  கொள்ளும்  உள்ளமும்,  இரு   பொருள் படப்  பேசும்  திறன்,   எழுத்துத்  திறமை,   நடுநிலைமை,   தர்க்கம்   செய்வதில்  ஆற்றல்,  சிரித்த  முகம்,  சீரிய   பார்வை,  பலா  சுளை  பேச்சு,  கண்களால்   பேசி   கவி நடை  வீசி மயக்கும்  தன்மை இவையெல்லாம் புதன் கொடுப்பார்.

.
புதனுக்கு  மிதுனம்  மற்றும்   கன்னி  ஆகிய  இரண்டு   ராசி வீடுகள்  உண்டு.   இதில்   கன்னியில்  புத்னுக்கு   ஆட்சி,  மூலத்திரிகோணம்,   உச்சம்  ஆகிய    மூன்று   நிலைகள்  உண்டு.   கன்னியில்   புதன்  உச்சம்   பெற்று  இருந்தால்  உயர்ந்த   பண்புடையவராக   இருப்பார்.   மன்னிக்கும்   சுபாமுள்ளவராகவும்   இருப்பார்.   வாதத்தில்   யாரையும்   வெல்லும்   பாரக்கிரமத்தை  பெற்று   இருப்பார். அஞ்சாமல்   வாதிக்கக்   கூடியவர்.    இலக்கிய   கர்த்தாகவாகவும்,  இலக்கிய   விமர்ச்சகராகவும்,  கைத்திறன்  மற்றும்  கலை   இரண்டிலும்    ஆற்றல்   உடையவராக   திகழ்வார்.

கன்னியில்   உச்ச   பாகையில்   இல்லாமல்   மற்ற   பாகையில்  இருந்தால்  அந்த  ஜாதகர்   கல்வி  ஞானமும்,  எழுத்தாற்றல்,   சிறந்த   பேச்சாளாராகவும்,  கருத்தைக்   கச்சிதமாகவும்  விளக்கும்  ஆற்றல்   பெற்றவராகவும்,   நுண்கலைகளில்   தேர்ச்சி   உடையவராகவும்,  நடுநிலை   உடையவராகவும்,   பெருந்தன்மை    உடையராகவும்,  அற்பத்தனம்  இன்றி  வாழ்வார்.    அழகாக    உடை உடுத்துவார்.   அரசியல்   துறைகளிலும்,  நண்பர்களால்  ஆதாயமும்,  சுதந்திர  முள்ளவராகவும்   திகழ்வார்.   வர்த்தகத்     தொழில் வளமும்   அமையும்.  ஆனால்   கன்னியில்  இருக்கும்   அளவுக்கு  எதிர்  பார்க்க  முடியாது.

சூரியனிடமிருந்து   அதிகமாக   ஒளியை  பெறுவான்  புதன்.  அர்த்தனாரி   ஈஸ்வரன்   சங்க   நாராயணன்   பச்சை  நிறம் – புதன்   விஷ்ணு   காரகம்-  பசுமையான   இடங்கள்   எல்லாம்  புதன்   காரகம்.  மனதில்  அமைதியான   தோற்றம்  ஏற்படுகிறது.

புதன்  மிகச் சிறிய  கிரகம்.   இளமை  கிரகம் – தளிர்   இலைகள்..  மிக  இளமை  சுறுசுறுப்பானவன்,  வேகமாக  செயல்  படக் கூடியவன்.   சூரியனை  விட்டு   புதன்  பிரியாது  இருப்பது  போல்  நண்பர்களிடம்   நட்பு  விரும்பி  -அலி  கிரகம்  -  ஐயப்பன்- மோகிணி   வளர்ச்சி  அடையாத   பெண்   மனிதர்கள்  தூய   சித்தம் என்று   வரும்  போது   பால்    உணர்ச்சிக்கோ   அல்லது   லிங்க   பேதத்திற்கோ   இடமில்லை,  ஆகவே  புதன்   அலி  ஆவார்.  [நபும்சகன்]  அதாவது  12  வயது   பெண்  உடல்  உறவுக்கு   உடல்   தகுதி  பெறதாவர்  போல்  புதன்  செயல்படுகிறார்.

கிரகங்களில் புதன்  ஒருவர்  மட்டும்   தான்  தன்  வீட்டில்  உச்சம்  பெறுகிறார்.  உலகம்  அனைத்தும்   காப்பாற்றக்   கூடியவர்.  மகா விஷ்ணு.   அவர்  அடுத்த  வீட்டில்  தன்னுடைய  திறமையை  வெளிப்படுத்த   வேண்டிய   அவசியம்  இல்லை.  அறிவு   செல்வம்  உடைய   புத்திசாலி   பொருள்   செல்வத்தின்  மீது  ஆசைப்படுவதில்லை.  ஆகவே  பொருள்   செல்வத்திற்கு  அதிபதியான   சுக்ரனை    தன்  வீட்டில்   நீசம்   அடைய செய்கிறார்.  [அதனால்   தானே  புலவர்கள்  சிலர்  வறுமையில்   இருக்கிறர்களோ  போல்]
புதன்  கலகலப்பானவன்  அரட்டை  அடிப்பவர் -  மரகதப்பச்சை   -துளசி  [பச்சை]  மரிக் கொழுந்து -  கிளி   பச்சை  நிறம்  விஷயங்கள்  எல்லா  காரகம்.  புதன்   வளர்பிறை   தோற்றம் உண்டு.


ஒருவர்  ஜெனன  ஜாதகத்தில்   புதனுக்கு   குருவின்   பார்வை  பெற்ற   ஜாதகர்  கல்வியில்  சிறப்பாக   இருப்பதையும்,  புத்திசாலியாகவும்,  சரளமாக  பேசும்  திறனும்  இருப்பதை  அறிய  முடியும்.  புதன் இளமை,  இளமையாக  இருக்கும்  போது  உலக   சுகம்  அனைத்தும்  அனுபவிக்க   ஆசைப்படுகிறார்கள்.   புதன்   கேது   சேர்க்கை   நுண்ணிய  அறிவைக்காட்டும்.  மற்றும்   துறவிகளையும்  காட்டும்.   குரு  புதன்   அல்லது  புதன்  சனி  இணைவு  உள்ள   ஜாதகர்  இலாப   நோக்கம்   இன்றி   எந்த   காரியத்தையும்   செய்ய  மாட்டார்.   சூரியன்  புதன்   சேர்க்கை   விசாலமான  அறிவு  உடையவராக   இருப்பார்கள்.   

புதன் வலுவடைய மதுரை மீனாட்சி சொக்கநாதரையும், திருப்பதிபெருமாள்,குருவாயூர் கிருஷ்ணரையும் வழிபடலாம்        

திருமண பொருத்தம் -இதை முதலில் கவனிங்க..!

திருமண பொருத்தம் ;

திருமண பொருத்தம் பார்க்கும் போது,அத்தை பொண்ணு ,மாமன் பையன் என உறவு முறையாக வந்தால் திருமண பொருத்தம் பார்க்க தேவையில்லை...இருவரும் காதலித்தால் ஜாதகம் எடுத்துக்கொண்டு ஜோசியரிடம் போக வேண்டாம்..பொருத்தம் பார்க்க வேண்டாம்..இவையெல்லாம் மனப்பொருத்தம் அடிப்படையில் ராசி வசியம் அடிப்படையில் ராசிப்பொருத்தம் என வந்துவிடும். அதற்கு பொருத்தம் பார்க்க வேண்டாம்...

அந்நியத்தில் பார்த்தால் மட்டும் திருமண பொருத்தம் பார்த்தால் போதுமானது...ரோகிணி ,திருவாதிரை,பூசம்,மகம்,அஸ்தம்,திருவோணம்,இவை ஆறும் ஆண்,பெண்களுக்கு ஒரே நட்சத்திரமாக வந்தால் திருமணம் செய்யலாம்....திருவாதிரை ஆணும் ரோகிணி பெண்ணும் வந்தால் பொருத்தம் வருமா என கேட்டால் வராது ..இருவரும் ரோகிணியாக இருந்தால் செய்யலாம்..

இருவரின் பிறந்த நட்சத்திரத்துக்குண்டான மிருகங்களை பாருங்கள் ..ரோகிணி நட்சத்திரம் ஆண்நாகம்..மகம் ஆண் எலி...எலியும் பாம்பும் பகை...எலியும், பாம்பும் ஒரு வீட்டில் இருக்க முடியுமா..? பாம்புக்கு எலி கட்டுப்பட்டது...

பொருத்தம் பார்க்கும்போது சந்திரனுக்கு 8ஆம் அதிபதி கெடக்கூடாது லக்னத்துக்கு 7ஆம் அதிபதி கெடக்கூடாது..இதுபோல சுக்கிரனுக்கும்,குருவுக்கும் பார்க்கலாம்..இருவரது ராசியும்,லக்னமும் ஒன்றுக்கொன்று மறையக்கூடாது...மறையாமல் இருந்தால் ஒற்றுமை,அன்பு நிலைத்திருக்கும்..ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் கெடக்கூடாது..கெட்டால் குழந்தை பாக்ய பிரச்சினை உண்டாகும் பெண் ஜாதகத்தில் குரு கெடாமல் இருக்க வேண்டாம் இருவருக்கும் கெட்டிருந்தால் பிரச்சினை இல்லை..ஒருவருக்கு நன்றாக இருந்து ஒருவருக்கு கெட்டிருந்தால் அங்கு சந்தோசம் இருக்காது..

7ஆம் இடம் தாம்பத்யம்..12ஆம் இடம் இரவில் உண்டாகும் சந்தோசம்..12 கெட்டுப்போனால் இரவும் இல்லை உறவும் இல்லை...ஆணுக்கு 3ஆம் இடம் கெட்டுப்போனால் வீரியம் இல்லை..3ஆம் இடம் வலுத்த பெண்ணுக்கு 3 கெட்ட பையனை திருமணம் செய்து வைத்தால் தப்பாகிவிடும்...உறவு மாறிவிடும்..7ஆம் இடத்தில் இருக்கும் கிரகம்,7ஆம் இடத்தை பார்த்த கிரகம்,7ஆம் அதிபதியுடன் சேர்ந்த கிரகங்கள் எல்லாம் கணித்து திருமண பொருத்தம் பார்க்கும் முறை கடினமானது ஆனால் நம்பகமானது...வெறுமனே நட்சத்திர பொருத்தம் மட்டும் பார்த்து 8 பொருத்தம் இருக்கு ஆஹா...அருமை என கிணற்றில் தள்ளிவிடாதீர்கள்..

ஒரு பையனை தேர்ந்தெடுக்கும்போது அவன் ஜாதகம் கொண்டு மனைவி ஸ்தானம் எப்படி,மாமனார் ஸ்தானம் எப்படி,மாமியார் ஸ்தானம் ,நங்கை ஸ்தானம் எல்லாம் கணிக்க ஜாதகத்தில் கிரக அமைப்புகள் ,கணக்குகள் உண்டு...ஏழரை சனி நடக்கும் பெண்ணையும் அஷ்டம சனி நடக்கும் பையனையும் கட்டி வைத்தால் ,இருவரும் ஒரே வண்டியில் சென்று விபத்தை சந்திப்பர்.

ஒரே திசை நடந்தால் அது இருவருக்கும் யோகமாக இருந்தால் பரவாயில்லை...அப்படி அமைவது கடினம்..இருவருக்கும் ஒரே திசை இல்லை என்று மட்டும் பார்க்காமல் அந்ததிசை என்ன காரகத்துவம் யார் யாருக்கு பாதிப்பு உண்டாக்கும்..யாருக்கு நன்மை தரும்..மனைவிக்கு யோகம் தருமா என ஆராய்வது சிறப்பு.

சனி, 28 மார்ச், 2015

ஜாதகத்தில் சனி தரும் பலன்கள்

சனி ;
விதியின்    விதையைக்  குறிப்பவர்   சனி  ஆகும்.   ஈஸ்வரன்   பட்டம்  பெற்றவர்  ஆவார்.   கர்மத்தை   அனுபவிக்க    செய்பவர்  சனி,   சனி  கர்ம    காரகன்.  கர்ம   வினைக்கு  ஏற்ப   வாழ்க்கை  அமைகிறது.   ஒவ்வொரு   மனிதனும்   தன்  கர்ம    வினையை    அனுபவிக்க    பிறவி   எடுக்கிறார்.  இதிலிருந்து  யாரும்     தப்ப   முடியாது.    இதில்   விதி   விலக்கு   என்பது    கிடையாது.     பொதுவாக    சனியை    துன்பம்    அளிப்பவர்  என   கூறப்படுகிறது......   

ஆனால்   உண்மையில்   துன்பம்  அளிக்காதவர்  ஆவார்.சனி   சிறந்த  நீதிமான்.     ஒருவரின்  முன்வினை      பயனைத் துல்லியமாக   அனுபவிக்கச்  செய்வார்.  பாகு  பாடின்றி   தம்  வாழ்க்கையில்  வழி   நடத்துவார்.   அவரவர்    கரும   வினைக்கு   ஏற்ப   கஷ்டத்தையும்,   நன்மைகளையும்    கொடுக்கிறார்.   சனி   ஒரு    உண்மையாக   உழைப்பவர்.    24  மணி     நேரமும்    ஓய்வு     இன்றி    உழைப்பவர்.கடுமையான உழைப்பாளி ஒருவர் இருக்கிறார் என்றால் அவர் ஜாதகத்தில் சனி பலமாக இருப்பார்..
சனி  ஒரு   குழந்தைப்  போல்  அல்லது   கிளியை  போல் என்று   சொல்லாம்.   அதாவது   சொன்னதைத்   திருப்பிச்   சொல்லும்  கிளியைப்   போல்   செய்த    கர்மாவை      திருப்பிச்   செய்பவர்.   முப்பிறவியில்   செய்த     கர்மாவை    இப்பிறவியில்   கொடுக்கும்    கர்மாகாரன்   ஆவார்.  ஒருவருடைய     ஆயுளை   நிர்ணயிருக்கும்   அற்புதமான      சக்தியுடையவர்,   பொருள்     எப்படி   விரயமாகிறது  என்பதைக்   குறிப்பிடுவதும்    இவர்தான்.12ல் கேது மறுபிறவி இல்லையென்றாலும் எல்ல கர்மவையும் இப்போதே கொடுத்து திக்குமுக்காட செய்பவர்.

வான்   மண்டலத்தில்     மிக   தொலைவில்   இருப்பவர்.   அதனால் சனி இருள் கிரகம் ஆகிறார்..சனி இரண்டரை வருடம் ஒரு ராசியை கடக்க ஆவதால் மந்தன் ,முடவன் எனப்படுகிறார்..சனியின்   தந்தையான    சூரியனின்    வீடான   சிம்மத்திற்கு 7 வது   ராசி   கும்ப   ராசி.    சூரியனின்    மனைவியான   சாயா    தேவியுன்    வீடு.   இந்த  ராசியில்தான்       சனி   பிறந்தார்.   [கும்ப   ராசியின்  சின்னம்    குடமாகும்.   குடத்தின்    உள்ளே   நிழல்    [சாயா  தேவி]     உள்ளார்.     பகல்    பொழுது   சூரிய   ஒளி     குடத்தில்   விழுவதால்  சாயா  தேவி   வலு  பெற்றதால்    சனி  பிறந்தார்.   சனிக்கு   இந்த    ராசியில்    பலம்   அதிகம்   அதாவது     மூல   திரிகோண   இராசியாகும்.  திசை மேற்கு என்பதால் மேற்கு திசை பயணத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

சுக்கிரனின்   வீடான    துலாமில்    உச்சம்   பெறுகிறார்.   சுக்கிரன்   செல்வத்திற்கு    உரியவர்,   சனி   உழைப்பாளி,   பொதுவாக   எல்லோரும்   செல்வத்தை  அடைய    [வேலை   செய்கிறார்கள்]   உழைக்கிறார்கள்.
சனி  கிழவனுக்கு   உடைய   தோற்றம்,    சோம்பேறி,  உலக   ஞானம்     முழுமையாக   இருக்கும்,    இயலாமையால்    கவனித்துக்  கொண்டிருப்பதால்  ஞானம்   பெறுகிறார்.   கிழவனுக்கு   தாம்பத்ய  தகுதியில்லை,  அலிகிரகம், வேகமாக   செயல்  பட  முடியாது,  வயதானவர்கள்   மெதுவாகவும்,    மிக   தாமதமாக  செல்வார்கள்.   நிதனாமாக   செயல்பட்டதால்   காரியம்    நன்றாகவும்,   கண்டிப்பாகவும்  செய்து   முடிப்பார்,  

 கறுப்பாக    இருக்கும்    அனைத்துப்    பொருள்களுக்கும்   காரகன்    சனி ஆவார்.காகம்,  எருமை,   எலி,   எள்.குப்பையில்   கிடந்த    ஒருவரைச்   சனி   கோபுரத்தில்   ஏற்றி     விட்டுப்   போய்விடுவார்,  அதன்   பிறகு    அந்தக்   குடும்பம்   தலைமுறையாக    செல்வத்தையும்   சுகத்தையும்   அனுபவித்துக்   கொண்டு   இருக்கும்,  அதே   போல்   கோபுர   உச்சியிலிருந்து    ஒருவரை   தூக்கி   சாக்கடையில்   வீசி   விட்டுப்    போனாலும்  போய் விடுவார்,  அதன்  பிறகு     அந்த  மனிதர்   எப்பொழுதும்   எழுந்து    மேலே   வருவார்  என்பது   யாராலும்    அறிய   முடியாத   விஷயம்.

சனி  பகவானுக்குரிய    தேவதை    சாட்சாத்   எமதர்ம       ராஜனே. எமனுக்கு  எமனாகிய    சிவபெருமானை    சரணடைவதாலும்    சனி   பகவானால்   ஏற்படும்   தோஷங்களீலிருந்து   நிவர்த்தி   அடையலாம்  என்பதாலேயே   சிவன்   கோவில்களில்    தவறாமல்    சனி  பகவானோடு      நவக்கிரகங்களையும்    பிரதிஷ்டை   செய்து    வைக்கிறார்கள்.

ஜாதகத்தில் குரு தரும் பலன்கள்

குரு ;

அதிர்ஷ்டத்தைக்   கொடுப்பவர்  குரு.  இவர்   பார்வை   பட்ட   இடம்,   பார்வை   பட்ட   கிரகங்கள்   நன்மையையே   செய்கிறார்.    மனித   உணர்ச்சிகளையும்   எண்ணங்களையும்   ஒழுங்கப்படுத்தி    சீராக இயங்க  செய்பவர்.   குரு  ஆவார்.   சுப  கிரக   வரிசையில்   முதலிடம்  பெறுபவர்.

உள்ளத்தைப்   பொறுத்தவரையில்   மனித   உணர்ச்சிகளையும்   எண்ணங்களையும்   ஒழுங்குபடுத்தி   சீராக   இயங்கச்  செய்யும்    திறன்   குருக்கு  உண்டு.   எதையும்   சீர்தூக்கி  பார்க்கும்   மன  நிலையும்   அளிப்பவர்  குரு  ஆவார்.   நியாதிபதியாவர்,    ஆகவே   தான்  குரு   நீதி,  சட்டம்  ஒழுக்கம்  பூஜைகள்,   ஹோமங்கள்,  தியானம்,   ஆதம்   விசாரனை   இவற்றுக்கு    அதிபதியாகிறார்.

கிரகங்களில்    சுப  கிரக   வரிசையில்   முதலில்   இருக்கும்  குரு  பகவான்   விவேகத்திற்கும்,  வித்தைக்கும்,   விழிப்புணர்ச்சிக்கும்  உரியவர்.   புத்திர   காரகன்   என   பெற்றவர்.  நல்லியல்புடைய     குழந்தைகளை   பெற்றெடுத்து    ஊரார்   போற்றுகின்றவராக      திகழச்  செய்பவர்   குரு  பகவான்  ஆவார்.

  ஒருவரின்   திருமணத்திற்கும்,     ஒன்றில்   வெற்றி  பெறுவதற்கும்   இவர்  தயவு   தேவையாகும்.   சாஸ்திர    சம்பிரதாயங்களில்   மிகவும்   ஈடுபாடும்   தன்மையும்,  புனித  தன்மையை    ஆதரிக்கும்   குணமும்,  தியாகம்,.   விட்டுக்    கொடுக்கும்   தன்மையும்   இருக்கும்.

சமுதாயத்தில்      நல்ல  ஒழுக்கத்தோடு   வாழ்வார்.  பிறருக்கு    வழிகாட்டியாக   இருக்க   வேண்டும்   நம்மை  பார்த்து   மற்றவர்கள்   குறை   சொல்லக்  கூடாது என    வாழ்பவர்.   கற்புக்கு     இவர்  காரகன். பெண்கள் ஜாதகத்தில் குரு கெடக்கூடாது.

குரு  உச்சம்  பெற்று   இருந்தால் அந்த   ஜாதகர்  எல்லா    இன்பங்களையும்   அவரின்   விருப்பத்திற்கேற்றவாறு   பெற  முடியும்.  வேத  மார்க்கங்களில்     ஈடுபடுவதில்  இன்பம்   தருவார்.   பலமுள்ள குரு,  தெய்வ   வழிபாட்டிலும்   இன்பம்  தருவார்.  நற்பணிகளைச்  செய்வதன்  மூலம்   இன்பம்  தருவார்.,   செல்வம்  தருவார்.    சேமிக்கவும்   வைப்பார்.   எதிர்காலத்தைப்  பற்றி  கவலைப்  போக்குவார்.  நல்ல  கணவன்  அல்லது  மனைவியை  அளித்து   வாழ்க்கைச்   சுகத்தைப்  பெற  வைப்பார்.

கடகத்தில்   5 ம்   பாகையில்   பிறந்தவர்கள்   புனிதாத்மாக்கள்,  பூர்வ  புண்ணியம்  பெற்றவர்கள்   ஆவார்கள்.   பூவுலக    இன்பங்களை   முற்றிலும்    பெறக்   கூடியவர்கள்.  பொதுவாக    கடக  குருவால்   நன்மை  உண்டாக   உத்திரவாதம்   உண்டு

குரு  இருளை   நீக்குபவர்   என்று  பொருள்.   மெய்யுணர்வுக்கும்   ஆத்ம்   சிந்தனைக்கு    அதிபதி   குரு   ஆவார்.  முழுமையான   உடல்,   மன  ரீதியான   வளர்ச்சியடைந்த    மனிதர்,   வழிகாட்டி,   மூளைக்கு  அதிபதி,இருதயத்துக்கு அதிபதி.  தன்னறிவு,  தீப  வெளிச்சம்,   குரு  மஞ்சள்,  குருக்கு   கவர்ச்சி  உண்டு-பெண்கள்  மஞ்சள்  பூசி    கவர்ச்சியை   தக்க   வைத்துக்   கொள்கிறார்கள்.   

ஜீவ   காரகன் – மஞ்சள்   நிறம்  எல்லாம்   குரு   . மஞ்சள்   நிற  பூக்கள்   -மார்கழி   மாதம்  -குருவை குறிக்கும்..குருவுடன்    புதன்  சேர்க்கை   சின்ன  வீடு   உண்டு.குரு லக்னத்துக்கு 12ல் மறைந்தால் காதல் திருமணம்...குரு கெட்டவன் கூறு கெட்டவன்...குருதான் ஊரார் மத்தியில் செல்வாக்கு, கெளரவம் பெற்று தருகிறது...

வெள்ளி, 27 மார்ச், 2015

ஜாதகத்தில் ராகு -கேது தரும் பலன்கள்

ராகு

ராகு   நிழல்   கிரகம்,     ராகு   நிழலாக   நின்று   செயல்படும்   தன்மை   உணர்வாக   இருப்பவர்   பார்க்க   முடியாது.   ஆனால்    இல்லை   என்று  கூற   முடியாது.   உடலில்   வலி   ஏற்படுகிறது   என்றால்    உணர   முடியும்,   பார்க்க   முடியாது  அது  போல்    இரகசியமாக   செயல்படும   தன்மை.   மர்மமாக    செயல்  படும்   தன்மை.    கண்டு  பிடிக்க    முடியாத   நோய்க்கு    அதிபதி,   பிறரால்     புரிந்து  கொள்ள  முடியாத   தன்மை.    

சூழ்ச்சி,   வஞ்சகம்,   போலி   வேடம்,   கெட்ட  ஸ்தீரி   சகவாசம்,   பரத்தையர்   தொடர்பு    முதுமை இல்லாமை,  கெட்ட  பழக்கங்களுக்கு   அடிமையாதல்,   பாபங்கள்  செய்தல்,    தலைமறைவான    வாழ்க்கை,  திரைமரைவில் செயல்படுதல்,   சிறைப்படுதல்,   இருட்டில்   செயல்படுபவர்.   கர்மத்தை   இயங்கு   வைப்பவர்.

இராகு    பெரிய   இருட்டு,   சூரியனை   கவ்வி  பிடிக்கும்   இருட்டு,   இராகுவின் பிடியில்   சிக்கிய   எந்த   ஒரு    கிரகமும்  தன்   செயல்   இழந்து  விடும்.    இராகு   வாய்  அனைத்தையும்   முழுங்கும்.   இராகு   எதையும்  அளவில்லாமல்  செய்யும்   அதாவது   கொடுப்பது  என்றால்  அளவில்லாமல்   கொடுக்கும்,   அழிக்கும்   என்றால்   அனைத்தையும்  அழிக்கும்,  

சிறிய    பொருட்கள்   கிடைத்தால்   திருப்தி   அடையாது.   இவ்வுலகியலில்   நிகழ்காலத்தில்  அனுபவித்துக்   கொண்டிருக்கும்     வாழ்க்கை   நிலையையும்,   எதிர்காலத்தில்     அனுபவிக்க   இருக்கும்    நிலையையும்   குறிப்பவர்.    நிறைய   ஆசைப்படுபவர்   எல்லா    விஷயங்களிலும்  அளவில்லாத  ஆசை,   வெரைட்டி   மீல்ஸ்   சாப்பிடுவார்கள்   போல்,     கர்மத்தை   இயங்கி   வைப்பவர்.  

உயிர்     அற்ற     பொருள்கள்,   தோல்,   மனோ      விகாரத்துக்காரன்,    சிங்கம்   பசிக்கும்   போது    மட்டும்   மிருகங்களை    வேட்டை  ஆடும்.   அது  போல்     ராகு     தனக்கு    உரிய   காலத்தில்  மட்டும்   தனது   வேலையை  தீவிரமாக   செயல்படுத்துவார்.

கேது;


கேது   நிழல்   கிரகம்.   கேது   நிழலாக    நின்று     செயல்படும்   தன்மை.   உணர்வாக    இருப்பவர்   பார்க்க    முடியாது.    ஆனால்   இணர   முடியும்,   கேது   சிறிய  இருட்டு.   வெளிச்சத்துக்குள்     இருக்கும்  இருட்டு   ஆகும்.   கேது  துறவு   உலக   வாழ்க்கை   மற்றும்   அனைத்தி   சுகத்தையும்   துறக்க   ஆசைப்படும்.    மோட்சகாரன்   கேது.

ஆத்மாவை   விடுதலை   செய்பவர்.  சென்ற       பிறவியில்   செய்த  கர்ம   வினைப்பயனை   நன்மையோ   அல்லது   தீமையோ   அவை   அனைத்தையும்   குறிப்பவர்   மற்றும்  அதை  அனுபவிக்க  செய்பவர்.   செய்த    கர்மத்தை    விடுபடுவன்.   மரணத்தை   அளிப்பவர்,    மரணத்திற்கு பின்   வாழ்க்கை    என்ன   என்பதைக்   காட்டுபவர்.   மரணம்    எவ்வாறு என்பதைக்   காட்டுவார்.   

பொதுவாக    ஜோதிடத்தில்   கேது   செவ்வாயின்    குணத்தை   கொண்டவர்   என   கருத்து   உண்டு.     இறைவனது   ஆணைப்படி    நனையும்   தீமையும்   தரும்   கிரகங்களில்   இராகு,   கேது   இவர்கள்    மிக   முக்கியமானவர்கள்.  உலக   பந்த்த்திலிருந்து    விடுவிப்பவர்,   ஞான   மார்க்கத்தையும்  அளிப்பவர்.    ஒருவர்     தன்னைத்தான்   உணர்தல்   அளிப்பதும்  இவர்.   கேதுவின்     ஆதிக்கம்   பெற்றவர்கள்     சோம்பேரியாக   இருப்பார்கள்.  ஆனால்   தேவை   என்று   வந்து  விட்டால்    செயலில்    தீவிரமாக   ஈடுபாடுவார்கள்.

மனித்  மூளைக்கு   எட்டாத   செயல்கள்   எல்லாம்   இவர்களால்    வருவது.   மூதாதையர்கள்   குறிப்பவர்   இவர்கள்.
கொடி   கட்டிய     வாகனத்தில்   பயணம்   செய்ய    வைப்பவர்   கேது.   மனிதனை   செயல்   படாமல்  தடை   செய்பவர்  கேது.   ஆன்மீக   உணர்வு    அளிப்பவர்   கேது.    விரக்தி   மனத்தை   அளிப்பவர்   கேது.   எதிலும்    பிடிப்பு  இல்லாமையைக்   காட்டுபவர்    கேது.    வைராக்கியத்தை   அளிப்பவர்  கேது.    


திங்கள், 23 மார்ச், 2015

ஜாதகத்தில் செவ்வாய் தரும் பலன்கள்

செவ்வாய் ;
செவ்வாய்  பூமா    தேவியின்  மகன்.    பூமாதேவி  [பார்வதி]   சக்தியாகும்.   செவ்வாய்   பூமிக்காரன்.   பூமியும்  செவ்வாயும்  ஒன்றாக்  இருந்ததாக   விஞ்ஞானிகள்    கருதுகிறார்கள்.   பூமியிலிருந்து செவ்வாய்  பிரிந்தாகவும்  அதனால்  செவ்வாய்  பூ  புத்திரர்   அதாவது   சகோதர  காரகர்  ஆகிறார்  என்று  கூறப்படுகிறது.   செவ்வாய்   உறுதியான   இறுக்கமான  ஒரே பாறையாக  இருக்கும்.

எந்த   வேலையும்  சக்தி  இன்றி   செய்ய  முடியாது.   செவ்வாய்  உஷ்ணம்.  உடலில்  உஷ்ணமில்லை   என்றால்  உண்ணும்   உணவு  ஜீரணமாகாது.  ஆனால்   அதே   சமயம்  அதிகப்படியான  உஷ்ணம்  உடலில்  தொந்தரவுகளைத்   தரும்.  செவ்வாயின்    பகை   கிரகமான புதன், சனி  இவர்களுக்கு  கூட   குறிப்பிட்ட   அளவு  செவ்வாயின்   ஆதரவு   தேவை.  அதே  சமயம்  அதிகப்படியாகவும்   இருக்கக்  கூடாது.

உதாரணமாக   தானியம்   வேக   அளவான  நெருப்பு   தேவை.   அதே   சமயம்   அதிகப்படியான   நெருப்பும்  கூடாது.   அதிகப்படியான    நெருப்பு   தானியத்தின்   சுவைக்  கெடுத்து  விடும்.  அது போல்  ஒரு  மனிதனுக்கு    தனது   கர்மாவை   செய்ய   அளவான    சக்தி   வேண்டும்.   அளவுக்கு அதிகமான  சக்தியை    உபயோகித்தால்   தனக்கும்       தொந்தரவு.    அடுத்தவருக்கும்   தொந்தரவாக  அமையும்.

செவ்வாய்  ஈகோ.  ஒருவருக்கு  அதிகப்படியான   ஈகோ  இருந்தால்  கிரிமினல்  ஆக    மாறும்    நிலை  ஏற்படும்.  இதனால்   தன்னை   தானே  அழித்துக்  கொள்ளும்  நிலை  ஏற்படுகிறது.   அதே  சமயம்   புத்திசாலிதனத்தில்   தனி   திறமை   இருந்து   அளவான  ஈகோ  இருக்கும்  போது   மக்களுக்கு  பயன்படுவதுடன்   தனக்கும்    உபயோகமாக  இருக்கும்.
ஒருவருக்கு   மிக  அதிக  அளவில்  ஈகோ  இருந்தால்  ஏதோ  ஒரு  நாள்  இராகுவின்  தொடர்பு   ஏற்படும்  காலத்தில் ஈகோவை  [கால  புருஷனை]  அழித்து  விடுகிறது.  வலுவான    புதன்  அல்லது  இராகு  ஒரு   நாள்   ஈகோவை   அழித்து  விடும்.

ஒரிரு  புண்ணிய  ஆத்மாக்களைத்   தவிர     உலகிலுள்ள   ஒவ்வொரு   மனிதனிடமும்    மிருகத்  தன்மையும்,   அகங்காரமும்   இருக்கிறது. கீழ் நிலையில்  மிருகத்  தன்மைக்கு  அதிபதி  செவ்வாய் . உயர்  நிலையில் அகங்காரத்திற்கு   அதிபதியாக  செவ்வாய்  ஆகிறார்.  மிருகத் தன்மையும் அகங்காரமும்    வேலை  செய்யும்  போது   மனிதனிடம்   விவேகத்திற்கு  வேலை  இல்லாமல்  போய்  விடுகிறது.  சுயநலம்   காரணமாக உணர்ச்சிகளின்  வேகம்  செயல் படும்  போது  வெறி   தன்மை ஏற்பட்டு  விடுகிறது.  இதற்கு  செவ்வாய்  காரணம்  ஆகிறார்.  இந்த   இரண்டு   நிலைகளின்  எல்லைக்குள்   தான்   மனித  வாழ்க்கை   நடை பெற வேண்டும்.

ஒருவர்  பிறந்த  ஜாதகத்தில்  செவ்வாய்   உச்சமாக   இருக்கும்   ஜாதகரிடம்   கோபமும்,   ஈகோவும்  அதிகமாக   இருப்பதை  அறிய  முடிகிறது.  உடலில்  வலு  அதிகமாக   இருக்கும்.   சிற்றின்பத்தை  நுகருவதற்கு  அதிகமாக    அதில்   ஈடுபாடு    காட்டுவார்.  அதனால்   ஜனனேந்திரியத்தில்  கோளாறுகள்  ஏற்படுத்தவும்  செய்யும்.  

உணர்ச்சி  வேகம்    கட்டுபடும்  போது  தன்னம்பிக்கை,    தைரியம்,   பலம்,   சுதந்திரம்,  சக்தி,   செயல்  ஆற்றும்  திறமை,    தலைமை   தாங்கும்   திறமையும்,   சக்தியும்   கொடுக்கிறது.  இவர்கள்   தான்  போலீஸ்,   இராவணுத்தில்   பணியாற்றும்   வாய்ப்பு  பெறுகிறார்கள்.   இவர்கள்  துணிவோடு  எதிர்நீச்சல்  போட்டு  வாழ்கையின்  மேல்    மட்டத்திற்கு  எட்டி   பிடித்து  விடுவார்கள்.   புரட்சி   செய்து   வெற்றி   காணச் செய்யும்.   எப்பேர்ப்பட்ட  வல்லமை   பெற்ற   பகைவர்கள்  ஆனாலும்   அவர்களை   வெல்லும்   வீரனாக    ஆகும்  தகுதியை   ஏற்படுத்தும்.   

வழக்குகளிலும்   வெற்றி   பெற  செய்யும்.   யாருக்கும்    தலை  வணங்காமல்    தன்  மானத்துடன்   வாழ்வார்.   பொறியில்  துறையில்   சாதனை  படைப்பார்.
நான்கு  வித   உபாயங்களில்   தண்ட   உபாயத்திற்குரியவன்  செவ்வாய்.  நாம்   வாழும்   இடமோ   பூமி,   நம்மை   வாழ   வைக்கும்  பொறுப்பு பூமிக்கரான்   செவ்வாய்க்கு  உண்டு.   ஆகையால்   பூமி   காரனது  முழுமையான  பலம்  இந்த  பூமியில்  பிறந்தவர்களுக்கு   மாபெறும்   மூல  பலமாக    இருப்பதில்  வியப்பில்லை.

செவ்வாய்  ராகு  அல்லது  செவ்வாய்  குரு  அல்லது  செவ்வாய்  சூரியன்  இணைவு  பெற்ற   ஜாதகர்  பிடிவாத  குணம் – மந்த  தன்மை  போன்ற   குணங்கள்  இருக்கும்.    அதன் மூலம் பல பிரச்சினைகளை சந்திக்கிறார் ..செவ்வாயால் உண்டாகும் பிரச்சினைகள் தீர செவ்வாய் தோறும் செவ்வாய் ஓரையில் முருகணை முல்லை மலரால் அர்சித்து வழிபடவும்.

ஜாதகத்தில் சந்திரன் தரும் பலன்கள்

சந்திரன் ;

சூரியனின்   ஒளி   கிரணங்களை  பெற்று   பிரகாசிப்பவர்   சந்திரன்  ஆவார்.  இவர்  இரவுக்கு  அதிபதியாகிறார்.  உயிர்  சக்தியாக  இயங்க   சூரியன்  எவ்வளவு   முக்கியமோ   அது  போல்   உடலுக்கு   சந்திரன்   அவசியம்  ஆகிறார்.   இவர்   மதிகாரகன்   ஆகிறார்.   ஞானம்   பெறவும்   இவர்  தேவை,   சந்திரன்    மாத்ருகாரன்.   சந்திரன்   சலன  புத்தி.  சந்திரனுக்கு  மூன்று  விதமான     சலனம்  உண்டு.  ஒன்று    தன்னைத்தானே    சுற்றிக்  கொள்கிறது.   இரண்டாவது    சுற்றுவதுடன்    பூமியையும்   சுற்றுகிறது.   மூன்றாவது  பூமியோடு   சூரியனையும்   சுற்றுகிறது.   கை  குழந்தையுடைய   தாய்    மனது   எப்போதும்   குழந்தையைச்    சுற்றிக்   கொண்டு   இருப்பது  போல்   சந்திரன்   பூமியையும்  சூரியனையும்   சுற்றிக்  கொண்டே  இருக்கும்.  

மனதுக்கும்   சந்திரனுக்கும்  ஒரு  தொடர்பு   உண்டு.  சந்திரன்  வளர்ந்து     தேயும்   தன்மையுடையவர்.  ஆகவே    மனிதனின்    மன்நிலையிலும்   அடிக்கடி   மாற்றம்   ஏற்படுகிறது.    

பெளர்ணமி   காலங்களில்    கடலில்   மாற்றங்கள்    ஏற்படுகிறது.   பெளர்ணமி  மற்றும்  அமாவாசை   காலங்களில்  அறுவை  சிகிச்சை  செய்யக்  கூடாது.   பெளர்ணமியில்  ரத்தம்  அதிகமாகவும்.  அமாவாசையில்  ரத்தம்   குறைந்தும் போகும்.   அமாவாசை  மற்றும்  பெளர்ணமி   காலங்களில்  தியானம்  செய்வது  சிறப்பானது.

சந்திரன் மனம்,  ஒவ்வொரு  மனிதனிடம்   பெண்  தன்மை  உள்ளது.  ஒவ்வொரு   பெண்ணிடமும்  ஆண்  தன்மை  உள்ளது.   ஒரு  மனிதனுக்கு   பின்னால்  ஒரு  பெண்  உள்ளாள். மனிதனின்  மனம்  சுத்தமாக  [சந்திரன்]  இருக்கிறது. ஆனால்  சந்திரனுக்கு   கிடைக்கும்.கிரகத்தின்   சேர்க்கை   பார்வைக்கு  ஏற்ப   மன  நிலை   மாறுதல்  அடைகிறது.   உதாரணமாக   நீர் [சந்திரன்] சுத்தமாகவும்   நிறமில்லாமலும்,   வாசனையற்ற   நிலையிலும்,    சுவையற்ற   நிலையிலும்  இருக்கிறது.    நீருடன்   சேரும்    கெமிகல்   மினரல்  ஏற்ப   அதன்  நிறம்,  வாசனை,  சுவை  எல்லாம்  ஏற்படுகிறது.  ஆனால்  எந்த   ஒரு  செயலும்   சந்திரனின்றி       நடைபெறாது.  ஆகவே   சந்திரன்  உடல்காரகன்    என  அழைக்கப்படுகிறார்.  உடல்  அழகு  உடல்  கவர்ச்சி  அளிக்கிறார்.   வட்டமான   முகம்  அனைவரையும்   கவரும்    தன்மையை   அளிக்கிறார்.   ஒருவர்     உடல்   இன்றி     எந்த  செயலும்   செய்ய  முடியாது.

  இடப்பெயர்ச்சி,  இடமாற்றம்,  பிராயணம்  போன்றவைகள்    நடை  பெற   சந்திரன்   காரணம்  ஆகிறார்.ஜெனன   ஜாதகத்தில்   சந்திரன்    ரிஷிபத்தில்  முதல்  3  பாகைகள்  இருந்து  ,   நட்பு   கிரகங்களின்   தொடர்பும்,  பகை   கிரகங்களின்  தொடர்பு  இன்றி    இருந்தால்  அந்த  ஜாதகரின்  சரீர ஆரோகியத்திற்கு    உத்திரவாதம்   உண்டு.  முக  வசீகரம்,  இரத்த  புஷ்டி  அளிப்பவர்.  உள்ளத்தின்   உறுதிக்கும்   வாய்ப்புண்டு.   மன வளம்,  பொருளாதார  நிலையில்   உயர்வும்  கிட்டும்.   

பார்வையில்  கவர்ச்சியும்,  பெருந்தன்மையும், பெரும்  புகழ்,   பெரு வாழ்வு,  பேரானந்தம்,   பேருள்ளம், என  மகிழ   வைப்பார்,   தாயின்  நல்வாழ்த்துக்கள்  கிடைக்கும்  ,சயன்   சுகம்  உண்டு.

சந்திரனை  மையமாகக்   கொண்டு   திதி,  கரணம்,  யோகம்,   திதிசூன்யம்  போன்ற  அமைப்புகள்  ஏற்படுகிறது.   சந்திரனைக்  கொண்டு  விரதங்கள்  அனுசரிப்பதும்,  பண்டிகைகள்  கொண்டாதலும்   கோயில்களில்   திருவிழாக்கள்   உற்சவங்கள்,  சுப   காரியங்கள்   நிர்ணயிக்கப்படுகிறது.    திருமணங்கள்  நிர்ணயம்   செய்வதும்    சந்திரனின்   ஓட்டத்தை  வைத்து   முடிவு   செய்யப்படுகிறது.

moon herbals சந்திரனின்  ஒளியில்  மூலிகைகள்   வளர்கிறது.   சந்திரன்  வெண்மை  நிறம்,   வெண்மை   நிறப்  பொருட்கள்   அனைத்தும்   சந்திரன்    காரகன் ஆகிறார்.  இரவில்   சந்திரனைக்  கண்டு   மயங்காதவர்கள் பூமியில்     யாராவது உண்டா?  குளிர்ச்சிக்கு அதிபதியான சந்திரனின் நிலவொளி  எவ்வளவு   குளிர்ச்சியாய்   இருக்கிறது.   மனதில்  மகிழ்ச்சியும்  அளிக்கிறது.  தாம்பத்திய  சுகத்திற்கு  துண்டும்   காலமாகவும்  இருக்கிறது.

ஜோதிட  உலகத்தைப்  பொறுத்த வரையில்   சந்திரன்   தாய் காரகம்  பெறுகிறார்.  தாயிடமிருந்து   தான்  உடல்  தோன்றுகிறது.   ஆகவே  சந்திரன்   உடல் காரகன்  ஆகிறார்.   ஜெனன   ஜாதகத்தில்   சந்திரன்  நிலையைப் பொறுத்து தான்   சரீரம்  [உடல்]  பருத்தும்,   இளைத்தும்   காணப்படும்.   ஒருவர்   ஜெனன     ஜாதகத்தில்   சந்திரன்   வலு  பெற்று   அமைந்திருந்தால்  அந்த  ஜாதகர்  தனது  மதியால்   அனைத்தையும்   வெல்லக்   கூடிய  நிலை  உண்டாகும்.

சூரியன்   கால  புருஷனுக்கு   முதல்   வீட்டில்  [மேசத்தில்]   உச்சம்  பெறுவது  போல்  சந்திரன்    கால   புருஷனுக்கு   இரண்டாம்  வீட்டில் [ரிஷிபத்தில்]  உச்சம்  பெறுகிறார்.

tiruppati tirumalai சந்திரன் பலம் இழந்தவர்கள் முதியோர் இல்லத்தில் இருக்கும் முதிய்வர்களுக்கு சேவை செய்வதன் மூலமும் தாய்க்கு மனம் குளிர பார்த்துக்கொள்வதன் மூலமும்,திருப்பதி வருடம் ஒருமுறை சென்று நடந்து மலை ஏறி ஏழுமலையானை தரிசித்து  சந்திரனின் அருளை பெறலாம்..

வியாழன், 19 மார்ச், 2015

ஜாதகத்தில் சூரியன் தரும் பலன்கள்

சூரியன்

கிரகங்களில்   முதன்மையானவர்   சூரியன்.   சூரியனை  மையமாக   வைத்துக்  கொண்டு              அனைத்துக்   கிரங்களும்   சுற்றுகிறது.   சூரியன்   தலைமை    தாங்கும்          தகுதியைத்   தருகிறார்.  ஆண்மையைத்     தருகிறார்.  நிர்வாகத்    திறமை   அளிக்கிறார்.   சூரிய  ஒளி  அனைவருக்கும்   பாகுபாடு    இன்றி   அளிப்பது   போல்   எல்லோரையும்   சமமாக   நினைப்பவர்,    தயாள   தன்மை   உடையவர்.      பேதம்   கிடையாது,   சாதி  பாகுபாடு   கிடையாது.   எல்லோரையும்   சரி சமமாக     நடத்துவர்.     இரகசியம்   கிடையாது.   வெளிப்படையாக   பேசுவர்.   வள்ளல்  தன்மை  உடையவர்.   இல்லை  என்று   சொல்லாத   தன்மை   பேரும்  புகழும்  உடையவர்.

சூரியனின்    கதிர்களால்   தழுவாத   உயிர்   இனங்கள்    இல்லை.   சூரியன்   ஒளிக்கு   அதிபதி,    சூரியனிடமிருந்து   வெளிப்படும்  கிரணங்களும்,  குருவிடமிருந்து   வெளிப்படும்  மீத்தேன் என்ற   ஒளியும்  கலந்து   உலகில்   ஜீவ   ராசிகளின்   உற்பத்திக்குக்    காரணமாகின்றன.
சூரிய  ஒளியின்றி  எந்த  கரு [ உயிர்] தோன்ற   முடியாது,    உயிர்   வாழ   முடியாது.   அதனால்  சூரியனை  பித்ரு காரகன் என்று   பெயர் பெறுகிறார்.

சூரியன்   தனது   ஈர்ப்பு   சக்தியால்  மற்ற  கிரகங்கள்  ஒன்றோடு  ஒன்று  மோதிக்  கொள்ளாமல்   காப்பாற்றுகிறது.   சூரியன்   உஷ்ணத்திற்கு   அதிபதி,   உஷ்ணம்   இல்லையேல்   உயிர்   தத்துவம்  இல்லை.   சூரியன்   பிராணனைக்   கொடுக்கக்    கூடியவன்.     அதனால் தான்  சூரியன்  ஆத்மாகரகன்  என்று  அழைக்கப்படுகிறார்.

சூரியனின்   உஷ்ண    கதிர்களால்   தழுவாத    எந்த   உயிர்  இனங்களும் இல்லை.    வெளிச்சம்   [சூரியன்]   இருந்தால்தான்   கண்களால்   பார்க்க   முடியும் . ஆகவே   சூரியன்   வலது  கண்.    மனித  உடலை    தாங்கி    பிடிப்பது  எலும்பு,   சூரியன்   எலும்புக்கு  அதிபதி   சூரியனின்  ஆதிக்கம்  உடையவருக்கு    முகஸ்துதி   பிடிக்காது.  எளிமையான    தோற்றம்  உடையவ்ர்.   நம்பிக்கைக்குரியவர்.    வாக்கு   தவறாதவர்.     தந்தை    மகனுக்கு   உதவி   செய்வது   போல்   வாக்கு   கொடுத்தவருக்கு   உதவி   செய்பவர்.

அரசன்   [சூரியன்]    தன்  தளபதியான    செவ்வாயின்   வீட்டில்   உச்சம்   பெறுகிறார்.   சூரியன்   ஒருவர்     ஜெனன   ஜாதகத்தில்     நீசம்  பெற்றிருந்தால்,     அந்த    ஜாதகர்  எவ்வளவு      பாரம்பரிய   செல்வம்,   செல்வாக்கு,  அதிகார   பலம்   பெற்று    இருந்தாலும்   கால போக்கில்   குறைந்து   விடும்.

ஒருவரின்   ஜெனன  ஜாதகத்தில்   மேசத்தில்   முதல்  10   பாகைக்குள் சூரியன்  உச்சம்   பெற்று   இருந்து       ,குரு ,செவ்வாய் பார்வை பெற்றிருந்தால் அந்த  ஜாதகர்  ஒரு  நிறுவனத்தில்   அல்லது  ஒரு  இயக்கத்தில்   தலைவராக இருப்பார்.  மேலும்  அவருக்கு  பேரும்  புகழும்  கிட்டும்.  ஜாதகருக்கு  ஆன்மீக   ஞானம்   உண்டாகும்.  
ஜாதகர்   தனி   சிறப்புடையவராக   திகழ்வார்.   ஜாதகரிடம்   துணிச்சல்  அதிகமாக  இருக்கும்   கண்டிப்புடன்    நடந்துக்  கொள்வார்.   அடித்துப்   பேசுவார்.   ஏராளமான   செல்வம்   இருக்கும்.   சுகமான   பிராயணம்,   இராஜ  வாழ்வு  அமையும்.  வியாபார    வெற்றி,  வேலையில்   அதிக   ஈடுபாடு,   மலைப்பகுதி   மற்றும்   காட்டுப்பகுதியில்    சுற்ற   நேரிடும்.   
சூரியன்   உஷ்ணமயமானவர்.   ஆகவே       ஜாதகருக்கு     உஷ்ணாதிக்கத்தால்   பல  உபாதைகள்   வரும்.   ஆகவே   இதில்   எச்சரிக்கையாக   இருப்பது   நல்லது.   ஒருவருக்கு  ஆன்ம   பலம்  அளிப்பவர்   இவர்.      ஒரு  ஆணின்    ஜெனன   ஜாதகத்தில்    சூரியன்   பலம்    பெற்று   இருந்தால்  அந்த   ஜாதருக்கு        ஆண்மை   ஆற்றலில்    அவர்  சிறந்து   விளங்குவார். ஒரு  பெண்   ஜாதகத்தில்   சூரியன்   பலம்  பெற்றிருந்தால்      அந்த   ஜாதகியிடம்   ஆகர்ஷன   சக்தி    ஓங்கி  இருக்கும்.   அவள்   சிறந்த   கற்பு டையவளாகத்   திகழ்வாள்.

மேசத்தில்   10  பாகை   முதல் 30   பாகைக்குள்  சூரியன்  இருந்தால்  முதல்   10  பாகைக்குள்    அளிக்கக்   கூடிய    அளவுக்கு    நற்பலன்கள்    அளிக்கமாட்டார்.

சூரியன்   முக்குணம்  உடையவர்.  அதாவது  பிரம்மா,  விஷ்ணு,  மகேஸ்வரன்  ஆவார்.   சூரியனின்    ஆட்சி  வீடான   சிம்மத்திற்கு   7வது  ராசியான     கும்பம்.  இந்த   ராசி   சூரியனின்    மனைவியான  சாயா  தேவி  வீடு.  இந்த  ராசியில்   தான்    சூரியனின்   மகன்  சனி  பிறந்தார்.    [இந்த   ராசியின்  சின்னம்  குடமாகும்.  குட்த்தின்   உள்ளே    நிழல்  [சாயா தேவி]   உள்ளது.  பகல்  பொழுது   சூரிய  ஓளி   குடத்தில் விழுவதால்     சாயா  தேவி   வலு  பெற்றதால்   சனி  பிறந்தார்.   சனிக்கு   இந்த   ராசியில்   பலம்  அதிகம்   சனிக்கு   மூலதிரிகோன   ராசியாகும்]

அரசுக்குரிய    கிரகமான   சூரியன்   எப்போதும்   தன்னுடன்   அறிவுக்காரன்   புதனையும்,   செல்வத்திற்கு   காரகனான  சுக்ரனை  அருகில்  வைத்திருக்கிறார்.   மாசி,  பங்குனி,   சித்திரை,  வைகாசி,   ஆகிய  மாதங்களில்    சூரியனுடன்   புதன்  கூடி  இருப்பார். ஆனி,  ஆடி,  ஆவணி,  பூராட்டாசி  ஆகிய    நான்கு   மாதங்களில்    சூரியனுக்கு    முன்  ராசியில்    புதன்   செல்வார்.  ஐப்பசி,  மார்கழி,  கார்த்திகை,  தை  ஆகிய   நான்கு   மாதங்களில் சூரியனுக்கு பின்   செல்வார்.

சூரியன்   ஒரு  நாளில்  செல்லும்   தூரம்  58  கலை, 8 விகலை  ஆகும்.  சூரியன்  ஒரு  நட்சதிர  பாகத்தைக்   கடக்கும்   காலம்  3  நாள்   22  நாளிகை   55  விநாடி   ஆகும்.  புதிதாக    பிரவேசித்த   ராசியில்   சூரியன்  பூரண   பலன்  தர  எடுத்துக்  கொள்ளும்    கால  அளவு     5  நாட்கள்.

சூரியனைக்  கொண்டு  ஒருவரின்   தந்தையைப்  பற்றியும்,   ஜாதருடைய     செயல்   திறன்   தொழில்  அல்லது   வியாபாரம்   அல்லது   உத்தியோகம்   இவைகளை  அறிய  முடிகிறது.  அரசு   வழியில் நல்ல  பொருளீட்டும்  யோகமும்.  தலைமை   பதவி   வகிக்கும்   தகுதி   அமையும்.   நல்ல  நோக்கு  உடையவர்.   ஆழந்த   கருத்துடையவராகவும்,  எவருக்கும்  அடங்கிப்  போகும்   இயல்பு இல்லாதவராகவும்   இருப்பார்கள். 

சூரியன்  அக்கினிக்குரியவர்,   சூரியனின்   நிறம்  இளம்     சிவப்பு  அதாவது    ஆரஞ்சு    நிறம்,  கிழக்கு   திசைக்குரியவர்.  பகல்   நேரத்தை  ஆள்பவர்,  கோதுமைப்  பிரியர்.  எருக்கு   சமித்து  மூலம்   திருப்பதிப்படுபவர்,   செந்தாமரையை  மலர  வைப்பவர்,     மாணிக்க    கல்லுக்குரியவர்,  செம்பு   உலோகத்தைப்  பிரதிப்பலிப்பவர்.   செம்பட்டு  உடையால்  அலங்கரிக்  கப்படுகிறார்.  சிவப்பு   நீலப்  பொருட்களால்  நலம்   அளிப்பவர்.  சத்தியர்,  வீர   புருஷர்,   ஞாயிற்றுக்  கிழமைக்குரியவர்.    
இத்தனைக்கும்   சிறப்பு      முத்திரையாக  ருத்ரனை  அதிதேவதையாக்  கொண்டவர்.   சூரியனின்  அனுகிரகத்தைப்  பெற   வேண்டுமானால்   அவருக்குரிய    மேலே   குறிப்பிட்ட   பொருட்களைக்   கொண்டு     சிரத்தையுடனும்,  முழு   ஈடுபாடும்,   நம்பிக்கையும்     கொண்டு  ஆராதிக்க  வேண்டும்.   மேலும்   அதிதேவதையான   ருத்ரனையும்    வழிபட   வேண்டும்.  இவ்வாறு    செய்தால்   சூரிய  பலனை  பெறலாம்.  சூரியனுடைய    அதிகாரத்துக்குட்பட்டவை  அனைத்திலும்  அனுகூலம்  கிடைக்கும்.

சகலரையும் வசியமாக்கும் வசிய மந்திரம்

வசிய மந்திரம்;

ஒரு புரோஹிதரிடம் கேட்டேன் உங்களுக்கு மட்டும் இவ்வளவு கூட்டம் வருதே...எப்படி என்றேன்....தினமும் காலையில் வசிய மந்திரம் சொல்கிறேன் என்றார் மந்திரத்தை சொல்லுங்க என்றால் அப்புறம் சொல்றேன் என ஒரு மாதம் இழுக்கடித்தார் அப்புறம் ஒருநாள் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருக்கும் போது சொன்னார்..

சிம்பிள்தான்..நிறைய மந்திர புத்தகங்களிலும் இருக்கிறது..ஆனால் அவர் கண்ணாடியில் இதை எழுதி வைத்துக்கொண்டாராம் தினம் காலையில் கண்ணாடியை பார்ப்போம் அப்ப முகத்தை கண்ணாடியில் பார்த்துக்கொண்டே சொல்ல வேண்டும்..

வசி வசி..வசி..
சகலமும் வசி...
சர்வமும் வசி..
சகலரும் வசி...

12 முறை இதனை சொல்லிவிட்டு வீட்டை விட்டு கிளம்புவேன் என்றார்..என் நண்பர்கள் யாருக்கேனும் இது பயன்பட்டால் அதை விட சந்தோசம் எனக்கு எதுவும் இல்லை!!

உண்மையில் ஒருவருக்கு நிறைய மக்கள் செல்வாக்கு உண்டாகவேண்டுமெனில் மக்கள் தொடர்பு ஸ்தானமான 9ஆம் இடத்தில் லக்னத்துக்கு சுபர் அல்லது இயற்கை சுபர் இருக்க வேண்டும்...அவரது திசாபுத்தி நடக்க வேண்டும் அல்லது நான்காம் அதிபதி திசையோ ஐந்தாம் அதிபதி திசையோ நடக்க வேண்டும்..அந்த காலத்தில் அவர் தன் வாழ்க்கை முழுமைக்குமான செல்வத்தை சேர்த்துவிடுகிறார்...லக்னத்துக்கு நான்காம் இடம் சுகாதிபதி..அவர் திசை நடக்கும்போது தம்பி பணக்காரர் ஆகிவிடுகிறார் ..மாமனார் செல்வாக்கு பெறுகிறார் ...ஜாதகரும் சொந்த வீடு கட்டிவிடுகிறார்...அல்லது மாமனாராவது சொந்த வீடு கட்டி கொடுத்து விடுவார்..பாக்யாதிபதி திசை நடக்கும்போது தந்தை இருந்தால் தந்தையால் செல்வம் வந்து சேரும்..அல்லது திடீரென புகழ் பெற்று ஓவர் நைட்டில் பெரிய ஆளாகிவிடுகிறார்..

நான் பார்த்த புரோகிதருக்கு சுக்கிர திசை நடந்து கொண்டிருந்தது....சுக்கிரன் ஒன்பதாம் இடத்தில்.மிதுன லக்னம் வேறு..பாவகிரக தொடர்பும் இல்லை..அம்சத்திலும் கெடவில்லை..சுக்கிரன் நின்ற வீட்டுக்கதிபதி சனி 2ஆம் பாவகத்தில்...பேசியே ..அல்லது மந்திரம் சொல்லியே சம்பாதிக்கிறார்..

ஒரு ஜாதகத்தில் லக்னம் ,ராசி,ராசி அதிபதி கெடாமல் இருந்தாலே போதும் அவர் யோகமான ஜாதகர் ஆகிவிடுகிறார்..சனி வலுத்து ஆட்சி உச்சம் பெற்றுவிட்டால் அவர் நிறைய சிரமங்களை அனுபவிக்கிறார்...ஆட்சி,உச்சம் பாவர்கள் அடைய கூடாது..லக்னத்துக்கு யோகர் மறைய கூடாது..லக்னத்துக்கு பாவர் பலம் பெற கூடாது...எதிரிகளுடன் போராடவே நேரம் சரியாக இருக்கும்.7ஆம் அதிபதி வலுத்துவிட்டால் எல்லாம் மனைவி பார்த்துப்பார் என வேலையை மட்டும் பார்க்க வேண்டியதுதான்.. அஷ்டம சனி,ஏழரை சனி எது வந்தாலும் திசை எது நடக்கிறது என்பதுதான் முக்கியம்..மோசமான திசை நடந்தாலும் சனிப்பெயர்ச்சி,குருப்பெயர்ச்சி ஓஹோ என இருந்தாலும்...முடியல சாமி..குரு என்னத்த கொடுத்தார் என புலம்புவதாக இருக்கும்!!

புதன், 18 மார்ச், 2015

தெய்வங்களை நேரில் காண வழி காட்டும் சித்தர்

தெய்வங்களை நேரில் காண வழி காட்டும் சித்தர்

விண்வெளியில் பெரிய சூரிய மண்டலங்களில் உள்ள பெரிய பூமிகளில் வாழ்ந்துகொண்டிருக்கும் எட்டு,ஒன்பது அறிவுள்ள மனிதர்களையே நமது சித்தர்கள் தெய்வங்கள் என்றனர்.

அவர்களின் உதவி பெற தொடர்பு பெற நமது மூளையில் மின்காந்த சக்தி கூட வேண்டும் கண் ,காது,மூக்கு,தோல் இவைகளில் காந்த வசியம் கூடினால் அவர்களை காணலாம்..பேசலாம்..அவர்களின் மீது அன்பும்,நட்பும் செலுத்தலாம்..

அவர்களின் உதவி இல்லாமலும் நமது ஹார்மோன் சுரப்பி,மூளை,கண்,காது,குரல்நாண்,தோல்,மூக்கு ஆகிய ஐம்புலன்களும் ஒன்றாக வலுவுடன் (ஹைபோதலாமஸ்) செயல்பட்டால்,நாம் சர்வஜனவசியம் பெற்று ,புகழ்,அதிகாரம்,ஆரோக்கியம்,செல்வம்,பதவி இவைகளை பூமியில் திட்டமிட்டு அடையலாம்..

விதையையும் மதியால் வெல்லலாம்..
ஊழையும் உட்பக்கம் இழுக்கலாம்..
கிரகங்களை மனக்கயிற்றால் கட்டலாம் 

என சமண வள்ளுவர் கூறுகிறார்.

அணுவை பிளந்தால் வரும் பெரும் சக்தியை போல் நம் உடலை பிளந்தால் பெரும் ஆன்ம மனோ சக்தி வரும்.மனமகிழ் கூட்டு பிரார்த்தனையும்,,தானதர்மமும், போதும் என இயேசுவும்,நபிகள் நாயகமும்,புத்தரும்,மகாவீரரும் கூறியிருக்கின்றனர்.

இறைவனை மனதில் உயிரில் ஏற்றி தியானம் செய்ய உருவங்களை பார்க்காமல் இமயத்தில் முனிவர்கள் தவம் செய்தனர்..முக்கோண பட்டங்களிலும் மழித்துளி நீரிலும் சூரிய ஒளியில் உல்ள நவவானவில் நிரங்கள் விலகும்.எனவே முனிவர்கள் நவகிரக சக்திகள் இல்லாத நீர்மேகங்கள் சூழ்ந்த முக்கோண மலை உச்சியிலும் கடலுக்கடியிலும் பாதாளத்திலும் தவம் செய்து சூரிய நியூட்ரினோ சக்தியை கிரகித்து ஞான சக்தியை பெற்றனர்.

-----------------------------------------

நம் பிரச்சினைகளை தீர்த்துகொள்வது எப்படி..?

தினமும் காலையில் கடவுளிடம் உரையாடுங்கள்..ஒரு தீபம் ஏற்றி வைத்து உங்கள் இஷ்ட தெய்வமோ,குருவோ அவர்களிடம் பேசுங்கள். உங்கள் ஆசைகளை சொல்லுங்கள் நீங்கள் இன்று செய்து முடிக்க வேண்டிய வேலைகளை சொல்லி அதற்கு பக்க துணையாக இருக்கும்படி வேண்டுகோள் வையுங்கள். உங்கள் இலக்கு எது என தீர்மானித்து,அதைநோக்கிசெல்லதைரியம்,தன்னம்பிக்கை,முயற்சி,உழைப்பு எப்போதும் குறையாமல் பார்த்துக்கொள்வேன் என உறுதிமொழி எடுங்கள்
அதன் பின் உங்கள் அன்றாட வேலைகளை செய்யுங்கள்..பிரபஞ்ச சக்தி உங்கள் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றி தரும்..இது பலரது அனுபவ நம்பிக்கை...முயற்சி செய்யுங்கள் நீங்கள் நினைத்தது நிறைவேறும்..கேட்டது கிடைக்கும்!!!

செவ்வாய், 17 மார்ச், 2015

ராசிபலன் 18..3.2015

ராசிபலன் 18.3.2015

வருமானமே இல்லையே என கலங்கி கொண்டிருப்பவர்கள் ரிசபம்,கன்னி,துலாம்,ராசியினர் தான்..காரணம் சுக்கிரன் மேசம் ராசிக்கு வந்துவிட்டார் ரிசபம்,கன்னி ராசியினருக்கு மறைந்து இருக்கிறார்...எனவே இந்த மாசம் கையை பிசைந்துதான் ஆகவேண்டும்.

வாயை திறந்தாலே பிரச்சினை மேல பிரச்சினை வருதே என திகிலில் இருப்போர் மீனம் ,மேசம்,விருச்சிகம் ராசியினர்.காரணம் மீனம் ராசிடில் செவ்வாய்,சூரியன் இணைவு..கோபம் கொப்பளிக்கும்..உணர்ச்சிவசப்பட்டு பிரச்சினையில் சிக்கிக்கொள்வர்...

சிம்மம்,கும்பம்,தனுசு ராசிக்கு குருப்பெயர்ச்சி வரை பணமுடக்கம்,அலைச்சல் இருக்கவே செய்யும் உடல்நலனில் கவனம் தேவை...எதிர்பார்க்காத செலவுகள் வந்து வந்து நிலை தடுமாறச்செய்யும்.

மருத்துவ செலவு ,தொழில் குழப்பம் இருக்கும் ராசியினர் கடகம்,மிதுனம்..கொஞ்சம் மருத்துவ செலவு இருக்கு..குடும்பத்தில் மன இறுக்கம் அதிகமாகிட்டே போகுது...சொந்தக்காரங்களை அப்பப்போ பார்த்துட்டு வாங்க..வீடே கதின்னு இருக்காதீங்க..குற்றம் பார்த்தால் சுற்றம் இல்லை...எல்லோரையும் ஒதுக்கிட்டு என்ன பண்ண ப்போறிங்க.., மிதுன ராசியினரே...!!

மகரம் ராசியை பொறுத்தவரை 10 ல் சனி இருக்கிறார் 7ல் குருபலத்துடன் இருக்கிறார்..என்றெல்லாம் நினைத்தாலும் இவர்கள் வக்கிர பலனில் இருக்கும்போது அதன் சுபத்துவம் குறைகிறது...திசாபுத்தி சரியில்லாமல் இருப்பின் இவர்களும் போராட்டத்தில்தான் இருப்பார்கள்..லாபாதிபதி செவ்வாய் மறைந்திருப்பதால் லாபம், இக்காலத்தில் குறைவுதான்..

  ------------------------------------------------------------------------------
மூளையின் செயல் திறனை அதிகரிக்கும்
தோப்புக்கரணம் !!
---------------
-இடது கையால் எந்த பணியை செய்தாலும் வலது பக்க மூளை செயல்திறன் அதிகரிக்கும்.வலது கையால் எந்த பணியை செய்தாலும் இடது பக்கமூளை செயல்திறன் அதிகரிக்கும்.
 

உடற்பயிற்சி செய்யும் பொழுது இடதின் ஆற்றாலும்,யோகா செய்யும் பொழுது வலதின் ஆற்றலும் அதிகரிக்கும்.இடது மூளையின் செயல்பாடு தர்க்கஅறிவு, வலதுமூளையின் செயல்பாடு ஆழ்மன,ஞானஅறிவு இந்த இரண்டு பக்க மூளையும் சமபலத்துடன் செயல்படவேண்டுமானால் இரண்டு கைகளையும் சமமாக செயல்படுத்த வேண்டும்,அல்லது தினமும் 50 தோப்புக்கரணங்கள் போடவேண்டும்.

ஏனெனில் கைகளை மாற்றி,காதைப்பிடித்து தோப்புக்கரணம் போடும்போது இரண்டு பக்க மூளையும் சிறப்பாக வேலை செய்வதை ஆராய்ந்து கண்டறிந்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.

தற்போது மேற்கு நாடுகளில் பிரெய்ன் யோகா என்று நமது தோப்புக்கரணம்பிரபலமாக இருக்கிறதாம், ஆனால் …நம்மவர்கள்
பலருக்கு காலை மடக்கி அமர்ந்து எழவே முடியவில்லை.! நம்முன்னோர் பழக்கங்கள், ஆற்றலின் கவசங்கள் என்பதை உணர்ந்து, அவர்களின்
பழகங்களை, காரணம் அறிந்து பின்பற்றி... நலமோடும்... வளமோடும் வாழ்வோம்...‪#‎brainyoga‬

திங்கள், 16 மார்ச், 2015

ராகு கேது தோசம் மறைந்திருக்கும் உண்மைகள்

 ராகு கேது தோசம் மறைந்திருக்கும் உண்மைகள்
 
கும்பத்தில்   ராகுவும்   சிம்மத்தில்   கேதுவும்  இருக்க    இறைவழிபாடும்,   கிரகங்களின்   வழிபாடும்   மிகுந்த    நன்மைத்   தரும்.

கும்பத்தில்   ராகுவும்     சிம்மத்தில்  கேதுவும்   இருக்கப்   பிறந்தவர்கள்   ஒரு  அதீதமான   சக்தியைப்   பெறுகின்றார்கள்.   பெரும்பாலும்     நாளை  நடப்பதை   முன் கூட்டியே   சொல்லக்கூடிய   ஆற்றலைப்  பெற்றிருப்பார்கள்.

ஆனால்  குடும்ப   பிரிவினையை அதிகம்   சந்திக்கக்   கூடிய  சூழ்நிலை  ஏற்படும்.   அண்ணன்   தம்பி   உறவு  சரியில்லை,    தகப்பனார்  உறவுகளை   சரி  செய்ய  இயலாது.   தாம்பத்ய   சுகம்  கானல்   நீர்  போல்  ஆகும்.   எடுப்பார்   கைப்பிள்ளை  போல்   ஆவார்கள்.   தேவையற்ற   பயம்,   மனதில்    சஞ்சலம்      முதலியவைகள்   ராகு,   கேதுக்கள்  ஏற்படுத்தும்.

சில   வீடுகளில்  புள்ளி  வைத்துக்   கோலம்  போடுவார்கள்.  அது   இருபாம்புகள்  இணைந்த்து  போல்   காணப்படும்.   இந்த  மாதிரி  கோலமிடும்   வீடுகளில்  கால சர்ப்ப தோசம்   பெற்றவர்கள்   இருக்கிறார்கள்  என்பதை  நாம்  அறியலாம்.

ஒரு  பெண்ணுக்கு   அடி   வயிற்றில்   பாம்பு  போல்  மச்சம்  இருந்தால்,   அவளது   கணவன்  இடி  விழுந்து    மரணம்  அடைகிறார். அது  போல   பாம்பு  போன்ற  மச்சம்   தொடையிலிருந்தால்,   அவர்களுக்கு   குழந்தைகள்   இறந்தே  பிறக்கிறது.     

முக்கிய   விஷயமாக  வெளியூர்  அல்லது   வெளி  இடங்களுக்கு  நாம்  செல்கின்ற   போது,   ராகு,  கேதுகளான   சர்ப்பங்கள்,   கிழக்கிலிருந்து   மேற்கில்   சென்றாலும்,   தெற்கிலிருந்து   வடக்கு   நோக்கிச்  சென்றாலும்   காரியம்   பலிதமும்,   பிரச்சனைக்களுக்கு   தீர்வு  ஏற்படும்   எனவும்,  மேற்கிலிருந்து   கிழக்கு   நோக்கியும்   வடக்கிலிருந்து  தெற்கு   சென்றால்   உயிர்  கண்டங்களும் ,  தேவையற்ர  பிரச்சனைகளால்    பாதிப்புகள்   ஏற்படும்   என்ற   நம்பிக்கையும்   மக்களிடையே   உள்ளது.


யாத்திரை   அல்லது   வெளியூர்   பயணங்கள்  செல்லும்   போது   மாறுபட்ட   நிலைகளில்  சர்ப்பங்களை   கண்டால்  மக்கள்  வீடுகளுக்கு   திரும்பி  வந்து   கற்றாலை  செடியின்  மூலம்   செய்யப்பட்ட   கரிவலம்  என்னும்    பொருளை  சாம்பிராணியில்  கலந்து   வீடு  முழுக்க    தூபம்   காட்டிய  பின்னரே   பயணத்தை  தொடர்ந்தனர்.

ஒரு   சிலருக்கு   முதுகில்  பிடிப்பு  அடிக்கடி  ஏற்படும்.  இவர்களுக்கு   மட்டும்   ஏன்   இப்படி   நிகழ்கிறது  என பார்த்தால்,   இவர்கள்  எப்பொழுதாவது   பாம்புகளை  அடிக்கும்  ட்த்தில்  இருந்திருப்பார்கள்.   அடிபட்ட   பாம்பு    தன்  உயிரை   விடும்   கடைசி   நேரத்தில்   அதன்  மூச்சுக்காற்று   காற்றில்   கலக்கும்  போது,   யார்,  யார்   அதை   சுவாசிக்கிறார்களோ   அவர்களுக்குத்   தான்   மேற்படி    பிடிப்பு    உடலில்   ஏற்படுகிறது   என்பது   அதிசயத்திலும்  அதிசயமாகும்.

ராகு கூட பலருக்கு யோகத்தை கொடுத்திருக்கிறது ஆனால் கேது சில முக்கியமான இடங்களில் அமர்ந்துவிட்டால் அந்த ச்தானத்தை கெடுத்து விடுகிறது சுபர் இருந்தால் தப்பிக்கலாம்...4ல் கேது இருப்பின் ஒழுக்கம் இருக்கும்,சுகம் இருக்காது சுகபோகமாக வாழ முடியாது ..கார்,பங்களா,என இருந்தாலும் தீராத நோயுடையவர்களாகவும் இருதய கோளாறு உடையவர்களாகவும் இருப்பர்..5ல் கேது இருந்தால் குழந்தை இல்லை என்பார்கள் ஆனால் பலருக்கு குழந்தை இருக்கிறது ஆனால் அக்குழந்தையால் பல தொல்லைகள் நிம்மதியை கெடுக்கிறது..

இவ்வாறு 2ல் கேது இருப்பின் வருமான தடை,11ல் கேது இருப்பின் பணம் தங்காமை,7ல் இருப்பின் மனைவியுடன் வாக்குவாதம்,9ல் இருந்தால் தந்தையுடன் ஒத்து போகாமை,ஊராருடன் ஒத்துப்போகாமை ,3ல் இருப்பின் சகோதரருடன்,மாமனாருடன்  கருத்து வேறுபாடு என இருக்கும். 6ல் இருந்தால் நல்லது எதிரி,கடன் இருக்காது..12ல் இருந்தாலும் பாதிப்பில்லை..