வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

அம்ம்மா,,,அம்ம்ம்மா...ஓடு..ஓடு..நிக்காம ஓடு..!!

செப்டம்பர் 9ஆம் தேதி சாந்தன்,முருகன்,பேரறிவாளனுக்கு தூக்கு என வேலூர் சிறைத்துறை அதிகாரி மூவரிடமும் தெரிவித்தார் என்ற செய்தி மனதை உலுக்குகிறது..முதலவர் ஜெயலலிதா இவர்கள் தண்டனையை நிறுத்தி வைக்கும் அதிகாரம் இருந்தால் அதை பயன்படுத்தினால் மகிழ்ச்சி.இவர்களுக்காக சட்டமன்றத்தில் ஜெ..குரல் கொடுக்க வேண்டும் என்பதே தமிழ் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.மூவரும் வை.கோ...சொன்னதன் பேரில் முதல்வருக்கு கருணை மனு அனுப்பியிருக்கின்றனர்.



---------------------------------------
100 நாளில் ஜெ..செய்த சாதனைகளில் முக்கியமனது மக்களிடம் இருந்து தி.மு.க வினரால் மிரட்டி வாங்கப்பட்ட,நிலங்களையெல்லாம் மக்களிடமே திருப்பி கொடுக்கப்பட்டதுதான்...சட்டம் தன் கடமை செய்தது.தன்னை கேட்க யாருமில்லை என்ற தைரியத்தில் ஆடிய தி.மு.க வினருக்கு ,சரியான ஆப்பு வந்தது..ஜெ..உருவில்.

இதற்கிடையில் வழக்கிற்கு பயந்து தமிழ்கம் முழுவதும் பல முன்னாள் மந்திரிகள்,விவசாயிகளிடம் பறித்த நிலத்தையெல்லாம் சத்தமில்லாமல் திருப்பி கொடுத்துவிட்டார்களாம்..மேற்க்கொண்டு குத்தகை பணம் ?என ஒரு அமவுண்டும் கொடுத்து அனுப்பினார்களாம்...அந்த பயம் இருந்தா சரி.இது ஜெ..வின் முக்கிய சாதனை இல்லையா....அம்மா ஆட்சி..மக்கள் மகிழ்ச்சி.
------------------------------------------------

கருத்துகள் இல்லை: