நான் சொல்வதை தமிழர்கள் கேட்கவில்லை என்றார் கருணாநிதி.
அய்யா,உங்க பேச்சை திஹார் சிறையில் இருக்குற,கனி ,ராசாவாவது கேட்குறாங்களா..?...அதான் மூலையில உட்கார வெச்சாச்சே அப்புறம் இன்னும் என்ன முனகல்..?தமிழன் ஓட்டை போட்டுட்டு அவனவன் வேலையை பார்க்க போயிட்டான்..உங்க பேச்சை கேட்க ஒரு பய இல்லை...
இவர்தான் வருங்கால இந்திய பிரதமராம்
ஒரு சட்டம் ஊழலை ஒழித்து விடாது என ராகுல் காந்தி திருவாய் மலர்ந்தார்.
ஒரு சட்டம் ஊழலை ஒழித்து விடாது என ராகுல் காந்தி திருவாய் மலர்ந்தார்.
ஏய்யா அன்னா ஹசாரேவை மூணாவது முறையா ஏமாத்த தான் இந்த தத்துவ முத்தா..?பிரதமர் பதவியை லோக்பால் வரம்புல சேர்த்த சொன்னா,உங்க கிட்ட யாரு அறிவுரை கேட்டா..?
இன்னிக்கு எந்த ஏழை வீட்டுக்கும் ரொட்டி தின்ன போகலையா ராகுல்ஜி?
------------------------------
எங்க ஊர் பகுதியில் ஒருவர் மைசூர் மகாராஜாவுக்கு சொந்தமான 5 ஏக்கர் பூமியில் விவசாயம் பார்க்குறார்.வருசா வருசா கந்தாயம் ரொம்ப கம்மியான அமவுண்டை அரசுக்கு கட்டிடுறாராம்.நிலத்தை விக்க முடியாது..அனுபவிக்கலாம்...அதுக்கு எப்பவும்,உரிமையாளர் மைசூர் மகர்ராஜாதான்.
------------------------
மு.க.அழகிரி மீது தாசில்தாரை அடித்த வழக்கு பதிவு பண்ணியிருக்காங்க..100 பக்க குற்ற பத்திரிக்கை தயார்னு சொல்றாங்க..கிரானைட் சம்பந்தமான வழக்குல அவர் மகனுக்கும் காப்பு ரெடின்னு சொல்றாங்க...நேருவை தொடர்ந்து அழகிரியை பார்த்தும் பூமா தேவி சிரிக்க ஆரம்பிச்சிட்டா.பாளை சிறைக்கு சகாக்களை பார்க்க போனப்ப கம்முனு வந்திருக்கலாம்.நாங்கள் ஆட்சிக்கு வந்தால்,அ.தி.மு.க வினரை அரெஸ்ட் செய்வோம்னு சொன்னாரு...சொல்லி 24 மணி நேரத்துல நேரு கைது,அழகிரிக்கு குற்றப்பத்திரிக்கை...ம்..நடக்கட்டும்...அழகிரிக்கு கலைஞர் செய்த ஒரே நல்ல விசயம்...அவரை எம்.பி..ஆக்குனதுதான்..இல்லைன்னா எப்பவோ விடியக்காலை 3 மணிக்கு மதுரை போலீஸ் தூக்கியிருக்கும்.
கலைஞர் ஒரு தொலைநோக்கு பார்வையாளர்தான்னு ஒத்துக்குறேன்..
--------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக