புதன், 24 ஆகஸ்ட், 2011

சர்க்கரை வியாதியை ஒரே நாளில் குணமாக்கும் டாக்டர் sugar


சர்க்கரை நோய் ஒரே நாளில் குணமாக்கும் டாக்டர் #அமானுஷ்யம்


சர்க்கரை வியாதிதான் இந்தியாவின் தேசிய நோய் எனும் அளவுக்கு நாடு முழுவதும் மிக வேகமாக பரவி வருகிறது.


சர்க்கரை நோய் பற்றிய சில குறிப்புகள்;
 நாம் சாப்பிடும் உணவு நமது வயிறு மற்றும் ஜீரண உறுப்புகளால் குளுகோஸ் எனும் எரிபொருளாக மாறுகிறது. இது ஒரு சர்க்கரை பொருள்.  இந்த குளுகோஸ் இரத்தத்திற்குள் சென்று பின்னர் இரத்தத்தின் மூலம் உடலில் உள்ள கோடிக்கணக்கான உடற்செல்களுக்கு எடுத்துச்செல்லப்படுகிறது.கணையம் எனும் உடல் உறுப்பு இன்சுலின் எனும் வேதிப்பொருளை உற்பத்தி செய்கிறது. இந்த இன்சுலின் இரத்தத்தின் வழியாக செல்களை சென்றடைகின்றன. அங்கு குளுகோஸ் ஐ சந்தித்து, செல்களானது குளுகோஸ்-ஐ தங்களுக்குள் எடுத்துக் கொள்ளச் செய்கிறது.குளுக்கோஸ்-ஐ செல்கள் எரித்து உடலுக்கு தேவையான சக்தியினை உற்பத்தி செய்து தருகிறது.

 குளுக்கோஸ்-லிருந்து சக்தியை உற்பத்தி செய்வதை சர்க்கரை நோய் கடினமாக்குகிறது.வயிறு போன்ற ஜீரண உறுப்புகள், உணவினை குளுகோஸ்-ஆக மாறச் செய்கின்றன. அவை இரத்தத்திற்குள் சென்று இரத்தத்தின் வழியாக செல்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் இரத்தத்திலுள்ள குளுக்கோஸ் செல்களுக்குள் செல்ல முடிவதில்லை....


சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள்;


1.அடிக்கடி சிறுநீர் கழித்தல்(இரவு நேரமும் கூட)
2.தோலி அரிப்பு ஏற்படுதல்
3.அதிகமான தாகம்
4.எப்போதும் பசியுடன் இருத்தல்
5.எடை குறைதல்

சர்க்கரை நோயை ஒரே நாளில் குணமாகிறதாம்;

சத்தீஸ்கர் மாநிலத்தில் ’’துர்க்’’ என்னும் ஊரில் உள்ள ஜும்மா மசூதி ஒன்றில் முஸ்லீம் வைத்தியர் ஒருவர் ஒட்டக பாலில் கலந்த ஒரு மருந்து மந்திரம் ஒதி, தருகிறாராம்.அதை ஒரே மடக்கில் குடித்துவிட்டால்,ஒரு மணிநேரம் கழித்து,டெஸ்ட் எடுத்து பார்த்தால் சர்க்கரை அளவு நார்மல்.கூட்டம் கட்டுக்கடங்காமல் குவிகிறது.கட்டணச் செலவு 150 ரூபாய்தான்.(ஒரு நாளைக்கு 1000 பேர்னா என்னாச்சு..ம்ஹீம்)

ஈரோட்டில் இருந்து சிலர் போய் வந்திருக்கின்றனர்...நார்மலாக இருப்பதாக சொல்கிறார்கள்.என் உறவினர் ஒருவர் அடுத்த வாரம் செல்கிறார்.அவர் சென்று வந்ததும்,இதன் உண்மை நிலையை முழுமையாக எழுதுகிறேன்.சர்க்கரை வியாதிக்காக மாதம் 2000 செலவானாலும் பரவாயில்லை.அடிக்கடி தண்ணீர் குடிப்பதும்,சிறுநீர் கழிப்பதும்,சர்க்கரை இல்லாமல் டீ குடிப்பதும் கொடுமை..என்கிறார் அவர்.


4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

Sir, what was the result for your relative ? How is his sugar level ? You didn't post any update regarding this. I want to recommend this to few of my relatives who have this Sugar problem. Kindly keep us updated.

Dhaarvi சொன்னது…

pls send me the full details to dhaarvi@gmail.com

Dhaarvi சொன்னது…

please send me the full details to dhaarvi@gmail.com

Unknown சொன்னது…

நானும் சென்று அவரிடம் மருந்து சாப்பிட்டேன் ஆனால் சர்க்கரை குறையவில்லை அங்கு சென்றவர்களில் ஆயிரம் பேருக்கு சரியானவர்கள்100 க்கு 4 பேருக்கு சரியாகும் அதுவும் உணவு கட்டுப்பாட்டால்.நாட்டு மருந்துகடைகளில் தேன்கனிக்காய் என்றொரு காய் கிடைக்கும் அதை வாங்கி அரைத்து பொடி செய்து சாப்பிட்டால் சர்க்கரை குறையும் அந்த காயை உடைத்து அதன் விதையை காலையில் நான்கு மாலையில் நான்கு சாப்பிட சர்க்கரை குறையும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் வெள்ளை சர்க்கரை(சீனி)பால்(டீ,காபி)தவிர்க்க குறையும் உப்பின் அளவையும் குறைக்க வேண்டும் நாட்டு சர்க்கரை சேர்த்துக்கொள்ள கட்டுப்பாட்டில் இருக்கும் பாக்கெட் எண்ணெய் பாமாயில் தவிர்க்கவும் அதிக கொழுப்பு உள்ள அசைவ உணவு கூடாது என்னுடைய அனுபவம்