சனிபெயர்ச்சி 2011 வரும் நவம்பர் 1 ஆம்தேதி திருக்கணித பஞ்சாங்கப்படி வருகிறது.திருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் வாக்கிய பஞ்சாங்கப்படிதான் சனி பெயர்ச்சி அனுசரிக்கப்படும். வாக்கிய பஞ்சாங்கப்படி 21.12.2011 புதன்கிழமை அன்றுதான் பெயர்ச்சியாகிறார்.நாடு முழுவதும் அன்றுதான் கொண்டாடப்படும்.துல்லியமான கணிதம் திருக்கணிதம் மட்டுமே.எனவே திருநள்ளாறு கோயில் செல்ல நினைப்பவர்கள் நவம்பர் 1ஆம் தேதியே சென்ரு வழிபடுவது இன்னும் அதிக பலன்களை கிடைக்கப்பெறுவது மட்டுமில்லாமல்,நெரிசலில் சிக்கிக்கொள்ளாமலும் வழிபடலாம்.
நளதீர்த்தம்,திருநள்ளார்
திருநள்ளாறு சனீஸ்வரர் காக வாகனத்தில் அமர்ந்து சிவனுக்கு இடப்புறத்தில் அமர்ந்திருக்கும் அதே அமைப்பில் ஈரோடு மாவட்டம் கொடுமுடி மகுடேஸ்வரர் ஆலயத்திலும் சனிபகவான் அருள்பாலிக்கிறார்.கொடுமுடி மகுடேஸ்வரர் ஆலயம் திரேதா யுகத்தில் அதாவது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கோயிலாகும்.இங்கு சிவன்,பிரம்மா,விஸ்ணு ஆலயங்கள் தனித்தனியே உள்ளன.இரண்டாயிரம் ஆண்டுகள் ப்ழமையான வன்னி மரத்தின் அடியில் பிரம்மா வீற்றிருக்கிறார்.தமைழகத்தின் மிக பழமையான பிரம்மன் ஆலயம் இது.
இக்கோயிலின் எதிரில் தென்வடல் முகமாக திரும்பி பாயும் காவிரி ஆறு கண்கொள்ளாகாட்சி.இக்கோயில் காசி யில் இருக்கும் காசி விஸ்வநாதர் கோயில் அமைப்பை கொண்டுள்ளது என்பர்.
அகத்தியருக்கு சிவபெருமான் தன் திருமணகோலத்தை காட்டிய இடம்.அப்பர்,சுந்தரர்,திருஞானசம்பந்தர் பாடல் பாடிய ஸ்தலம்.கொங்குகோயில்களில் முக்கியைடம் பெற்ற சிவதலம்.கொங்கேழு தலங்கள் என போற்றப்படும் தலகங்களில் இதுவும் ஒன்று.
மகுடேஸ்வரர் கோயில்,கொடுமுடி
இங்குள்ள பிரம்மாவை,சிவனை மட்டுமல்ல,பெருமாள் ஸ்ரீரெங்கம் பெருமாளின் சயன கோலத்தில் அருள் பாலிப்பதை காண்பதும் மெய்சிலிர்க்கவைக்கும்.சனிப்பெயர்ச்சியில் கொடுமுடி வழிபாடு மிக சிறப்பு வாய்ந்தது.திருநள்ளாறு செல்ல முடியாதவர்கள் இங்கு சென்றுவரலாம்.
ஆலயம் அமைந்துள்ள இடம்;ஈரோடு டூ கரூர் செல்லும் பாதையில் பஸ் பயணம் ஒருமணிநேரம்..45 கிலோமீட்டர்.
1 கருத்து:
Brother you take class in simple method and it is easy to understand.I read your blog and now website daily . I use mobile thats not supporting to put comments.i Wish you to continue your astro services for ever
கருத்துரையிடுக