செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

முக்கிய அறிவிப்பு 24.8.2011

நண்பர்களே...நமது நல்லநேரம் இணையதளம் சில விஷமிகளால் முடக்கப்பட்டுள்ளது..இதனால் பழைய ஜோதிட பதிவுகள் அனைத்தும், அழிந்து விட்டன..என்றாலும் டொமைன் பெயர் மட்டும் கிடைத்துவிட்டது..மிக விரைவில் எனது பதிவுகளில் முக்கியமானவற்றை நான் திரும்ப எழுத இருக்கிறேன்...சனிபெயர்ச்சி பலன்கள்,ஜோதிட பதிவுகள் விரைவில் வெளியிடுகிறேன்...இனி நம்  நல்ல நேரம் தளம் www.astrosuper.com  என்ற அதே முகவரியில் வழக்கம் போல செயல்படும் என தெரிவித்துக்கொள்கிறேன்...

பழைய பதிவுகளில் முக்கியமானவற்றை மீட்டுக்கொண்டுள்ளேன்..ஆனாலும் நான் நான்கு வருடமாக இயங்கிய sathish777.blogspot.com என்ற முகவரியை மீட்க முடியவில்லை என்பது வருத்தம்தான்...முக்கிய பதிவுகள் அனைத்தையும்,இந்த புதிய ப்ளாக்கில் பதிவேற்றிவிடுவேன்...கொஞ்சம் கஷ்டப்படணும்.
.
தமிழ் புத்தாண்டு-முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி என நான் பதிவிட்டு சிறிது நேரத்தில் இந்த கொடுமை நடந்திருக்கிறது...உடன்பிறப்புகளின் வேலைதான் இது என்பதில் சந்தேகம் இல்லை...என் ப்ளாக் ஐடியில் நுழைந்து,மெயிலை மாற்றி அவர்கள் மெயிலை கொடுத்து,நல்லநெரம் ப்ளாக்கை மட்டும் எடுத்து சென்று,அழித்திருப்பார்கள் என்பது என் சந்தேகம்..ப்ளாக்கர் டாஸ்போர்டில் ,4 ப்ளாக்குகள் வைத்திருந்தேன் அதில் நல்ல நேரம் ப்லாக் மட்டும் காணவில்லை...உங்கள் யோசனைகளை என் மெயிலுக்கு தெரிவியுங்கள்;sathishastro@gmail.com

8 கருத்துகள்:

கோகுல் சொன்னது…

நிறைய நடக்குது எச்சரிக்கையா இருக்கணும் போல!

adiyaarkku adiyavan சொன்னது…

உங்களது தளம் முடக்கப்பட்டு உள்ளது கண்டு வேதனை அடைகின்றேன். ஜோதிடத்தில் நல்ல விஷயங்களை மிக எளிமையாக சொல்லி வருகிறீர்கள். காஞ்சி வரதராஜப் பெருமாள் தக்க பலமாயிருந்து தங்கள் தளம் மீள உதவுவார்.

ஆர்.சண்முகம் சொன்னது…

எனக்கு கூட பக்கம் கிடைக்கவில்லை என வந்தது நண்பரே.

சார்வாகன் சொன்னது…

வணக்கம் நண்பரே,
கருத்தை கருத்தால் மட்டுமே எதிர்க்க வேண்டும்.கோழைத் த‌னமான செயலுக்கு கடும் கண்டனம்.எபோதும் ஒரு பேக்கப் வைத்து கொள்ளுங்கள்.நன்றி
Be cooooooool

Sreenivasan சொன்னது…

All of the previous posting got erased??? sad... why you didn't have a backup ? Suggest you to have back-ups hereafter.

சிவன் அருள் சொன்னது…

நானும் நேற்று முதல் முயற்சி செய்து செய்து சோர்ந்து விட்டேன் ஏன் இப்படியும் மனிதர்கள் இருக்கிறர்கள் என்று தெரியவில்லை. தாங்கள் சோர்ந்து விடாமல் மிண்டும் பதிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதிலிருந்தே தெரிகிறது யாரோ உங்கள் பிளாக்கை பிடிகதவர்கள்தான் இதை செய்து இருக்கிறார்கள்.
மிண்டும் உங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கிறோம்.

உங்கள் கடவுச்சொல்லை மிக நீளமாக வைத்துக்கொண்டால் உங்கள் கணக்கை முடக்குவது கடினம்.

நன்றி
சிவனருள் பதிவன்

Vishnu Varadhan சொன்னது…

நான் உங்கள் தளத்தின் ரெகுலர் reader ... நேற்று தளம் இல்லாதது பார்த்து மிகவும் வருத்தமாக இருந்தது. இப்போது சந்தோசமாக இருக்கிறது.. உங்கள் எழுத்து தொடரட்டும் ...

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

விசமிகளால் hack செய்யப்பட்டு முடக்க பட்டால் . 80 % நம்மால் மீட்க முடியும் . ஆனால் கூகிள் உங்கள் தளத்தின் மீது spam .violation news போன்ற காரணத்தால் நீக்கினால் 20 % மீட்க முடியும் . .சரியான காரனைதை கூறுங்கள் முயற்சி செய்து பார்க்கலாம்//
என் ப்ளாக் ஐடியில் நுழைந்து,மெயிலை மாற்றி அவர்கள் மெயிலை கொடுத்து,நல்லநெரம் ப்ளாக்கை மட்டும் எடுத்து சென்று,அழித்திருப்பார்கள் என்பது என் சந்தேகம்..ப்ளாக்கர் டாஸ்போர்டில் ,4 ப்ளாக்குகள் வைத்திருந்தேன் அதில் நல்ல நேரம் ப்லாக் மட்டும் காணவில்லை...உங்கள் யோசனைகளை என் மெயிலுக்கு தெரிவியுங்கள்;sathishastro@gmail.com