வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

கஞ்சமலை சித்தர் கோயிலில் தங்கம்;இரசவாதம்வியப்பான தகவல்கள்


கஞ்சமலை சித்தர் கோயிலில் தங்கம்;


சேலம் மாநகரிலிருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது கஞ்சமலை எனப்படும் சித்தர் கோயிலாகும். இதனை அமாவாசைக் கோயில் என்றும் கூறுவர். காலங்கிநாதர் எனும் சித்தர் அமர்ந்த நிலையில் மூலவராக உள்ள அற்புதத் திருக்கோயிலாகும். இக்கோயிலின் கல் கட்டடம் 1300 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது தொல்லியல் ஆய்வாளர்களின் கருத்து. ஆனால் கஞ்சமலையின் வரலாறு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானது.

பதினெட்டு சித்தர்களில் ஒருவரான காலங்கிநாதர் வெகுகாலம் வாழ்ந்த இடம் இதுவாகும். கௌ-லன்-கீ என்ற சீனதேசத்து யோகியே கஞ்சமலை வந்து தங்கி காலங்கி ஆனார் என்று கூறுவர். எங்களுக்காக சீனாவிலிருந்து வந்த இங்கே சித்தர் தங்கிவிட்டார் என்று அப்பகுதி மக்கள் இன்றளவும் கூறிவருவதைக் கேட்கலாம். கஞ்சமலையின் மேல் மலையில் அக்காலத்தில் சித்தர்கள் கூடி பல்வேறு ஆன்மீக, மருத்துவ, இரசவாத ஆய்வுகளை நடத்தியதாக சொல்லப்படுகிறது. இன்றும் சித்தர்களின் பொருள்வேண்டி அமாவாசை, பௌர்ணமி நாட்களில் மேல்மலைக்குச் சென்று முழு இரவு தங்கி தவத்திலும், பூசையிலும் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கஞ்சமலையின் பெயர் காரணம் சற்று கவனிக்கத் தக்கதாகும். கஞ்சம் என்பது தங்கம், இரும்பு, தாமரை எனும் மூன்றுவித பொருள் கொண்டதாகும். தாமரையில் உதித்த கஞ்சன் எனும் பிரமன் உருவாக்கிய மலை இது என்பதால் கஞ்சமலை எனும் பெயர் பெற்றது எனலாம்.

மலை முழுவதும் இரும்புத்தாது மிக உயர்ந்தரகத்தில் நிறைந்துள்ளது. அதனால் கஞ்சமலை எனப் பெயர் பெற்றது எனலாம்.
இவை அனைத்திற்கும் மேலாக வரலாற்று ஆதாரங்களுடன் கூடிய ஒரு உண்மை என்னவென்றால் இம்மலையில் தங்கம் கிடைத்தது என்பதுதான். கஞ்சமலையிலிருந்து எடுக்கப்பட்ட தங்கத்தைப் பயன்படுத்தித்தான் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு (பராந்தக சோழனால்) பொன் கூரை வேயப்பட்டது.

அக்காலத்தில் கொங்கு நாடு என்பது கஞ்சமலையினை மையமாக வைத்து கிழக்கே மதிற்கோட்டைக் கரையையும், மேற்கே வெள்ளியங்கிரியையும், வடக்கே பெரும்பாலையையும், தெற்கே பழநியையும் எல்லைகளாகக் கொண்ட கொங்குமண்டலமாகும்.

சேலம், செவ்வாய்ப்பேட்டை, இராசிபுரம், குமாரபாளையம், அயோத்தியாபட்டணம் என எழுபத்தெட்டு நாடுகள் இதில் அடங்கும்.

பற்றறுத்தாளும் பரமன் ஆனந்தம் பயில்நடனஞ்செய்
சிற்றம்பலத்தைப் பொன்னம்பலம் ஆகச் செய்ச்செறும்பொன்
முற்றிலுந் தன்னகத்தேவிளை வாவதை மொய்ம்பிறையுள்
மற்றும் புகழக்கொடுத்த தன்றோ கொங்கு மண்டலமே.

(கொங்கு மண்டலச்சதகம் - கார்மேகக்கவிஞர்)

இப்பாடல் மூலம் கஞ்சமலையில் தங்கம் கிடைத்தது உறுதியாகிறது. அதுமட்டுமன்றி மலையிலிருந்து ஒடிவரும் நீரில் ஆற்றில் பொன் (பொன் தாது) கிடைத்ததால் அதனைப் பொன்நதி பொன்னிநதி என்று அழைக்கின்றனர். அந்நதியில் பொன் எடுத்தவர்கள் சமீபகாலம் வரை வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

தங்கம் மட்டுமல்லாது கருமையான கஞ்சமலையில் கருநெல்லி, கருநொச்சி, கருஊமத்தை, கருந்துளசி என பல்வேறு காயகல்ப மூலிகைகள் உள்ளன. கஞ்சமலைக் காட்டினைக் கருங்காடு என்றும் கூறுவர். அதியமான் அவ்வைக்குத்தந்த கருநெல்லிக்கனி கஞ்சமலையில் விளைந்த கருநெல்லிக்கனியே ஆகும்.
கஞ்சமலையில் தங்கத்தாது கிடைத்துள்ளது. அம்மலையில் சித்தர்கள் இரசவாதம் செய்துள்ளனர். சித்தர்களின் அருளாசி அங்கே இன்றும் பூரணமாக நிறைந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். தங்கம் வேண்டுவோர் முழு நம்பிக்கையுடன் கஞ்சமலை சித்தரை வேண்டினால் கைதேர்ந்த இரசவாதியாகிய சித்தர் அருளால் தேவையான அளவு தங்கம் பெறலாம்.

சித்தர் திருமூலர் சொன்ன செம்பை தங்கமாக்கும் ரசவாத ரகசியம்




சித்தர் திருமூலர் அவர்கள் தான் எழுதிய திருமந்திரத்தில் செம்பினைப் பொன்னாக்கும் வழிமுறையினை எளிதாக, தெளிவாக எழுதியுள்ளார்.
திருமந்திரத்தில் நான்காம் தந்திரத்தில் 903ஆம் பாடலைக் காண்போம்.
        செம்புபொன் னாக்குஞ் சிவாய நமவென்னிற்
செம்புபொன் னாகத் திரண்டது சிற்பரஞ்
செம்புபொன் னாகும் ஸ்ரீயுங் கிரீயுமெனச் 
செம்புபொன் னான திருவம் பலமே.
இப்பாடலில் திருமூலர் சிவாயநம என்று செபிக்க செம்பு பொன்னாகும் என்று சொல்கிறார். அதாவது சிவாயநம என்று சிவ சிந்தனையில் இருப்பவர்களால் செம்பினைத்தங்கமாக மாற்ற இயலும் என்கிறார். இறைசிந்தனை தவிர மனத்தில் வேறெதுவும் இல்லாமல் சிவசிந்தனையில் சிவாயநம சிவாயநம என சிந்தித்து இருப்பவர்கள் செம்பை பொன்னாக்க முடியும் என்கிறார்.

இங்கே செம்பு பொன்னாகுதல் என்றால் என்ன என்பதையும் சற்று சிந்திப்போம். செம்பு என்பது களிம்பு உண்டாகும் உலோகமாகும். களிம்பு உருவாகாத அளவுக்கு செம்பினை சுத்திப்படுத்திவிட்டால் அது தங்கமாக ஆகிவிடும்.

இப்பாடலில் வெளிப்படையாக செம்பைப் பொன்னாக்குதல் என்னும் (உலோக) இரசவாதம் தெரிகிறது. அதே சமயம் இப்பாடலில் மறைபொருளாக உள்ள ஓர் உயரிய இரகசியம் என்னவென்றால் செம்புபோல களிம்பேறி நோய்நொடிக்கு உள்ளாகி பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகிடும் உடம்பினை தங்கமாக்கி, இறவா நிலைக்கு, பேரின்ப நிலைக்கு உயர்த்துவது சிவாயநம எனும் சிவ பஞ்சாட்சரமே என்பதாகும். இது உடலின் இரசவாதம், உயிரின் இரசவாதமாகும்.

905 ஆம் பாடலிலும் இதனை மீண்டும் வலியுறுத்தி எழுதுகிறார்.
வாறே சிவாய நமச்சி வாயநம
வாறே செபிக்கில் வரும்பேர் பிறப்பில்லை
வாறே அருளால் வளர்கூத்துக் காணலாம்
வாறே செபிக்கில் வருஞ்செம்பு பொன்னே.
சிவாயநம என செபித்துவர பிறப்பில்லை. சிவனின் நடனத்தைக் (தரிசனத்தைக்) காணலாம். செம்புநிலையிலுள்ள உயிரானது குற்றங்கள் நீங்கி தங்கத்தின் நிலைக்கு உயரும் என்று எழுதுகிறார்.

அதாவது செம்பினைப் பொன்னாக்கினால் அதனால் என்ன பயன் ஒருவர்க்கு உண்டாகுமோ அத்தகைய பயனைப் பெற சிவாயநம என ஓதுவது போதுமானதாகும். அவ்வாறு தினமும் சிவசிந்தனையிலிருந்து சிவாயநம என ஓதி வந்தால் நிச்சயம் பொன்கிடைக்கும். பொன்னுக்கு நிகரான நன்மைகள் உங்களைவ வந்து சேரும். உங்கள் உடலும் பொன் உடம்பென ஆரோக்கியமான, பலமான உடலாக மாறும். உடலின் குற்றங்கள் நீங்கி நலம்பெறும்.

வியாழன், 30 ஆகஸ்ட், 2012

எம்.ஜி.ஆர் சாப்பிட்ட தங்கப்பஸ்பம் தயாரிப்பது எப்படி..?

எம்.ஜி.ஆர் தங்ட்க பஸ்பம் சாப்பிடுறார்..அதனால்தான் இப்படி சிவப்பா இளமையா இருக்குறார் என அக்காலத்தில் ஒரு நம்பிக்கை கிராமத்து மக்களிடம் உண்டு...எல்லாம் உடன்பிறப்பு பேச்சாளர்கள் கிளப்பிவிடும் வதந்திதான்...அவர் சாப்பிட்டது உண்மையா பொய்யா தெரியாது..ஆனால் இன்றளவும் தங்கப்பஸ்பம் என்றாலே நினைவுக்கு வருகிறவர் எம்.ஜி.ஆர் தான்..!!

அதனால் தங்கப் பஸ்பம் என்றாலே அக்காலத்தில் வயாகாரா போல பெரிய பிரபலம்...மதிப்பும் அதிகம்..


தங்கபற்பம் வாங்க வாய்ப்பில்லாதவர்கள் கீழ்கண்ட முறையினைச் செய்து நல்லபலனைப் பெறலாம். தங்கம் பற்பமாக ஆக்கப்படும்போது முறைப்படி செய்யப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அந்த பற்பத்தை சீரணிக்க முடியாமல் உடல் உள்உறுப்புகள் (கல்லீரல், சிறு நீரகங்கள்) பாதிப்படைய வாய்ப்பு உள்ளது. ஆனால் கீழ்க்கண்ட முறையில் அப்படிப்பட்ட பிரச்சனை நடக்க வாய்ப்பே இல்லை.

உங்கள் வசதிக்கு ஏற்ப 10 கிராம், 5 கிராம், 1 கிராம் என ஏதேனும் ஒரு எடை அளவில் தங்கக்காசு ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் 2 குவளை தண்ணீர் ஊற்றி அதில் தங்கக்காசினை இட்டு அடுப்பில் வைத்து சிறுதீயில் கொதிக்க விடுங்கள். தண்ணீரானது பாதியளவு ஆகும்வரை நன்றாக காய்ச்சுங்கள். (புதிய தங்கக் காசினைப் பயன்படுத்தும் போது முதன்முதலாகக் காயச்சும் தண்ணீரைப் பயன்படுத்த வேண்டாம். அதனை ஊற்றிவிட்டு மறுமுறை அதேபோல் 2 குவளை நீரை ஊற்றி தங்கக் காசினை இட்டு காய்ச்சி எடுத்துக் கொள்ளவும்.

இவ்வாறு கிடைத்த காய்ச்சியநீர் தங்கச் சத்து நிறைந்த தண்ணீர் ஆகும். தினமும் காலை, இரவு என இரண்டு வேளை இதுபோல தங்கநீரைத் தயாரித்து குடித்துவர உடல் நல்ல ஆரோக்கியம் பெறும். பெரியவர்கள், சிறியவர்கள் என எவர் வேண்டுமானாலும் இதனைப் பயன்படுத்தலாம்.

 இவ்வாறு பயன்படுத்தவதால் தங்கக்காசு உருவத்திலோ, உடை அளவிலோ சிறிதும் மாறுபடாது. எனவே தைரியமாகப் பயன்படுத்தலாம். புதிதாக தங்கக்காசு வாங்க எண்ணமில்லாதவர்கள் தாங்கள் அணிந்துள்ள தங்க மோதிரம், தங்கச்சங்கிலி, தங்கவளையல் போன்றவற்றையும் பயன்படுத்தலாம். அவ்வாறு பயன்படுத்தும் நகைகள் கற்கள் ஏதுமில்லாத நகையாக இருப்பது அவசியமாகும். அவ்வாறு நகையினைப் பயன்படுத்தும் முன்பு நன்றாக சுத்தமாகக் கழுவிவிட்டு தண்ணீரில் இட்டு காய்ச்சி பயன்படுத்த வேண்டும்.

உடலில் தங்கநகைகள் அணிவது என்பதே இதுபோன்ற சிகிச்சைப்பலனைப் பெற ஆரம்பிக்கப்பட்டதுதான். தங்கம் உடலில் பட்டபடி இருப்பது தங்கத்தின் ஆற்றல் உடலுக்குள் எந்நேரமும் சென்றுகொண்டிருக்க வழிவகுக்கும். அதற்காகத்தான் அக்காலத்தில் தங்கநகைகளை மக்கள் அணிந்தனர். பிற்காலத்தில் அந்த நகைகள் ஒரு அலங்காரப் பொருளாகவும், கௌரவத்தைக் கொடுப்பதாகவும், வசதி செல்வாக்கைப் பிரதிபலிப்பதாகவும் மாறிவிட்டது.

அக்காலத்தில் அரசர், அரசியர் தலை, கழுத்து, தோள்கள், மார்பு, இடுப்பு, கைகள், கால்கள் என பல பகுதிகளில் தங்கத்தை அணிந்தது செல்வச்செழிப்பை வெளிப்படுத்த அல்ல. முக்கியமாக உடல் ஆரோக்கியத்தை முன்னிட்டே ஆகும்.

மன்னர் மட்டுமல்லாது மக்களும் இதனை முடிந்தவரை பயன்படுத்திவந்தனர். நாளாக நாளாக தங்கத்தின் விலை அதிகமாக அதிகமாக அதன் பயன்பாடு குறைந்துகொண்டு வருகிறது. அவரவர் சக்திக்குத் தக்கபடி சிறிதளவு வாங்கி அணிகின்றனர்.

நகை அணியாவிட்டாலும், தங்கபற்பம் சாப்பிடாவிட்டாலும் முன்னர் நான் குறிப்பிட்டபடி தங்கநீரைத் தினமும் தயாரித்து சாப்பிட நல்ல ஆரோக்கியம் நிச்சயம் கிடைக்கும். இது செலவே இல்லாத முறை என்பதால் எவரும் பயன்படுத்திப் பலன் பெறலாம்.

இவ்வாறு காய்ச்சிய தண்ணீரைக் குழந்தைகள் முதல் பெரியவர் வரை எவரம் அருந்தலாம். 2 மாதக்குழந்தைவரை 2 தேக்கரண்டியும், 2 வயத வரை கால் டம்ளர் அளவும், 5 வயது வரை ½ டம்ளர் அளவும், பத்து வயதுவரை ஒரு டம்ளர் அளவும் பத்துவயதக்கு மேற்பட்டவர்கள் இரண்டு டம்ளர் அளவும் குடிக்கலாம். இந்த சிகிச்சை முறை எந்தவித பக்கவிளைவோ, பின்விளைவோ இல்லாதது என்பதால் தாராளமாக அனைவரும் பயன்படுத்தலாம

சனி, 25 ஆகஸ்ட், 2012

குரு ஜாதகத்தில் இருக்கும் ராசி பலன்


குரு ஜாதகத்தில் இருக்கும் ராசி பலன்;


தேவகுருவாகிய குரு பகவான் லக்னத்தில் இருப்பாராகில் ஜாதகருக்கு அவருடைய பூரண கிருமையுண்டு. இவருக்குத் தெரியாத சாஸ்திரமே இல்லை என்று சொல்ல வேண்டும். பலரும் போற்றும் பாண்டித்யம் பெற்றிருப்பார். தீர்க்காயுள் உண்டு. தர்க்க சாஸ்திரம் அறிந்தவர். வாக்கு வன்மையுள்ளவர். சுக ஜீவனம் உண்டு.சகல தோசங்களும் நிவர்த்தி..
இரண்டாவது இடத்தில் குரு இருக்கப் பிறந்தவர் மிகவும் நிதானமாகப் பேசுபவர். நீதிமான். இவருக்கு பாலயத்திலயே விவாகமாகிவிடும். சுற்புத்ரர் பாக்கியம் உண்டு. மிகுந்த தனங்கள் சேர்ப்பார்.பிறருக்கு அறிவுறை வழங்குவதில் வல்லவர்
மூன்றாவது இடத்தில் குரு இருக்கப் பிறந்தவர் தன் சரீரத்தை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்பவர். தாஷண்யத்திற்காக பலதையும் செய்யக்கூடியவர். பந்து ஜனங்களுக்குப் பிரியமானவர். வுpத்தையில் அபிவிருத்தியடைபவர். சகோதரர்களுக்கு உதவிகள் செய்பவர்.நண்பர்கள் அதிகம் உண்டு..தனித்து இருந்தால் இல்லை
நான்காவது இடத்தில் குரு இருக்கப் பிறந்தவர் தர்ம குணம் உள்ளவர். சுக ஜீவனம் செய்பவர். வாஹன யோகம் உடையோர். பந்துக்களுக்கு இனியவர். சுக சரீரம் உள்ளவர். பசுக்கள் பாக்கியம் உண்டு.வண்டி வாகன்ங்களில் செல்கையில் கவனம் தேவை தனியாக குரு இருந்தால் வீடு அமைவதில் சிக்கல் உண்டாகும்
ஐந்தாவது இடத்தில் குரு இருக்கப் பிறந்தவர் புத்திமான் என்னும் பெயர் பெறுவார். புத்திரர்கள் குறைவு. சேனைத்தலைவராக வரும் பாக்கியம் உண்டு. அதிகமாக செலவு செய்பவர். ஆனால், தனம் சேர்ப்பதில் கருத்துள்ளவராகவும் இருப்பார்.பித்ரு தோசம் உடையவர்
ஆறாவது இடத்தில் குரு இருக்கப் பிறந்தவர் ஞான ஹீனராக இருப்பார். பவுத்திர ரோகங்கள் பீடிக்கும். சந்துருக்களை ஜெயிப்பார். சாஸ்திர ஞானவிருத்தியுள்ளவர். செல்வம் அதிகமாகச் சேராது.பணம் தங்காமல் விரயமும் ஆகும்..
ஏழாவது இடத்தில் குரு இருக்கப் பிறந்தவர் சிறுவயதில் விவாகம் செய்துக்கொள்ளவேண்டியதாக ஏற்படும். வியாபாரத்தில் நல்ல லாபத்தை அடைவார். நல்ல மனைவியை அடைவார். அடிக்கடி விசனங்களால் பாதிக்கப்படுவார்.
எட்டாவது இடத்தில் குரு இருக்கப் பிறந்தவர் மூலரோகத்திற்கு ஆளானவர். புத்திமான். ஆசாரம் உள்ளவர். வெகு ஜனப்பிரியர்.நல்ல பேச்சுதிறனும் உடையவர்
ஓன்பதாவது இடத்தில் குரு இருக்கப் பிறந்தவர் தான தருமங்களைச் செய்வார். தீர்க்காயுள் உண்டு. விரதங்களை அனுஷ்டிப்பவர். தனவான். ஆசார அனுஷ்டானங்களில் ஈடுபாடு உண்டு.சட்டம்,நீதிதுறையில் புகழ்பெறுவார்
பத்தாவது இடத்தில் குரு இருக்கப் பிறந்தவர் எடுத்த காரியத்தை செய்து முடிக்கும் திறன் பெற்றிருப்பார். கல்வியில் தேர்ச்சியுண்டு. வேசிப்பிரியர். தனவான். ஆஸ்வயோகமும் உண்டு.
பதினோராவது இடத்தில் குரு இருக்கப் பிறந்தவர் ஞான சிகாமணியென்னும் பெயர் பெறுவார். தனவான் சங்கீதத்தில் ஈடுபாடு உண்டு. புத்திரப்பேறு உள்ளவர். ராஜ சன்மானம் பெறுவார்.
பன்னிரெண்டாவது இடத்தில் குரு இருக்கப் பிறந்தவர் மனைவி வார்த்தை கேட்பவர். தயவு தாஷண்யம் இல்லாதவர். வீட்டை விட்டோ ஊரை விட்டோ நெடுங்காலம் வாசம் செய்பவர். அற்பு புத்தியும் உள்ளவர்.


ஜாதகத்தில் புதன் இருக்கும் ராசிபலன்


ஜாதகத்தில் புதன் இருக்கும் நிலை

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்ற சொல்லை அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். அவர் ஒரு ஜாதகத்தில் எந்தெந்த ஸ்தானத்தில் இருந்தால் எந்தெந்த பலன்களைக் கொடுப்பார் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
புதபகவான் லக்னத்தில் இருக்கப்பிறந்தவர் நல்லவிதமாக கல்விகேள்விகளில் சிறந்தவராகவும், சமயோசித புத்தியுடன் பேசவல்லவராகவும், ஞானவானாகவும், தனதான்ய சுகங்கள் உள்ளவராகவும், சரீர பூஷணம் உள்ளவராகவும் இருப்பார்.
இரண்டாவது இடத்தில் புதன் இருக்கப் பிறந்தவர் புத்ர பாக்யம் உள்ளவர். செல்வச் செழிப்பு உள்ளவர். சகோதரர் சகோதரிகள் உள்ளவர். ராஜாக்களின் சபையில் வெகுமதி வாங்கும் யோக்கியதை பெற்றிருப்பவர். எடுத்த காரியத்தில் வெற்றியடையும் நோக்கமும் மனஉறுதியும் உள்ளவர்.
புதன் மூன்றாவது இடத்தில் இருக்கப் பிறந்தவர் ஸ்தீரிகள்பால் பிரியம் உடையவர். அறுசுவை உண்டி புசிப்பவர். அக்காள் உண்டு. இனியவர்.
நான்காவது இடத்தில் புதன் இருக்கப் பிறந்தவர் கல்விமான். கீர்த்தியுள்ளவர். ராஜசபையில் வெகுமானம் பெறும் யோக்கியதையுள்ளவர். சுகபோஜனம் செய்யும் பாக்கியம் பெற்றவர். பண்டிதர் என்று பலராலும் போற்றப்படும் பாக்கியம் பெற்றவர்.
ஐந்தாவது இடத்தில் புதன் இருக்கப் பிறந்தவர் வித்தைகளுக்குக் குறைவில்லாமல் இருப்பார். சுக ஜீவனம் செய்து நல்ல பதார்த்தங்களுடன் போஜனம் செய்யும் பிராப்தியுண்டு. செல்வந்தர்கள், அரசர்கள் போற்றுதலுக்குரியவர். அதே நேரத்தில் கலகப் பிரியராகவும், டாம்பீகம் உள்ளவராகவும் இருப்பார்.
ஆறாவது இடத்தில் புதன் இருக்கப் பிறந்தவர் சத்துருக்களை எளிதில் வெல்வார். அற்ப வித்தையிருந்தாலும் அதை வைத்தக்கொண்டே பிரகாசிப்பார். திரவியம் நாசம் செய்பவராகவும் இருப்பார். பித்தரோகங்கள் அடிக்கடி தோன்றும்.
ஏழாவது இடத்தில் புதன் இருக்கப் பிறந்தவர் சரீர காந்தியு;ளளவர். பெண்கள் மூலம் திரவியம் அடைவார். வாஹன யோகம் உண்டு. குதிரைகளைப் பராமரித்து யோகம் அடையக்கூடும்.
எட்டாவது இடத்தில் புதன் இருக்கப் பிறந்தவர் நல்ல குணம் உடையவர்தான். ஆனால் அற்பபுத்தியும், அடிக்கடி தலைதூக்கும். தீர்க்காயுளுடன் இருப்பார். திரவியங்கள் சேர்ப்பதில் கருத்துடன் இருப்பார்.
ஒன்பதாவது இடத்தில் புதன் இருக்கப் பிறந்தவர் நல்ல வித்யா பாக்கியம் ஆசாரமுள்ளவர். செல்வந்தன் பலரும் சிலாகித்து விரும்பும் நிலையை அடைவார்.
பத்தாவது இடத்தில் புதன் இருக்கப் பிறந்தவர் நல்ல ஞானமுள்ளவர். தர்ம சிந்தனையுள்ளவர். கீர்த்தியுள்ளவர். ஆசார சீலர். நேத்திர ரோகம் பாதிக்கும். திரவியம் சம்பாதிப்பதில் கருத்தூன்றியிருப்பார்.
பதினோராவது இடத்தில் புதன் இருக்கப் பிறந்தவர் யோகவான். பாக்கியங்கள் பெற்று வாழ்வார். வீடு, வாசல் பாக்கியங்களும் உண்டு. அதிகாரம் உள்ளவர். ஆனால் சற்று மூர்க்க குணமும் காணப்படும். மங்களகரமும் இவரைச் சூழ்ந்திருக்கும்.
பனிரெண்டாவது இடத்தில் புதன் இருக்கப் பிறந்தவர் காமாந்தகாரர் என்னும் பெயர் பெற்றுவிடுவார். பலருக்கு விரோதியாவார். அளவுக்கு மிஞ:சி அனாவசிய செலவுகள் செய்வார். புத்திரபாய்கியம் குறைந்திருக்கும்.

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2012

ஜோதிடம்;நாகதோசம் இருந்தால் திருமணம் நடக்காதா?

ஜோதிடம்;ராகு-கேது ஏற்படுத்தும் திருமண தடை;


திருமணம் ஒருவருக்கு தாமதம் ஆகிக்கொண்டிருப்பதில் பல காரணங்கள் இருக்கலாம்..அதில் ஒன்று நாகதோசம் .ராகு கேது லக்னத்துக்கு 1,2,5ல் இருக்கும்போது நாகதோசம் உண்டாகும் இதில் 5 ஆம் இடத்தில் இருக்கும் ராகு கேது புத்திர ஸ்தானத்தை பாதிக்கிறார்..இதனாலும் பெண் வீட்டார் பெண் கொடுக்க முன்வருவதில்லை..குழந்தை பாக்யம் இல்லாமல் போய்விடுமோ என்ற பயம் தான் காரணம்..5ல் கேது இருந்தால் பிள்ளை இல்லை என சொல்லிவிட முடியாது குரு,சுக்கிரன் கெட்டுப்போகாமல் இருந்தால் 5 ஆம் இடத்துக்கு சுபர் பார்வை இருந்தால் நிச்சயம் குழந்தை பாக்யம் உண்டு..

7ல் கேது இருந்தால் திருமணம் நடக்காதா சார் என சிலர் கேட்கிறார்கள்...7ஆம் இடம் களத்திர ஸ்தானம்..மனைவியுடன் தாம்பத்யம்,இன்பம் பற்றி சொல்லும் இடம்..அங்கு கேதுவாகிய துறவி கிரகம் இருந்தால் திருமணம் தாமதம் என்பது சரிதான் ஆனால் நடக்காது என சொல்லமுடியாது

சுக்கிரன் 6,8,12 ல் மறைந்து,7 ஆம் அதிபதியும் 6,8,12ல் மறைந்து,ஸ்தான பலம் கெட்டுப்போயிருந்தால் மட்டுமே அப்படி சொல்ல முடியும்...சுக்கிரன் நல்ல நிலையில் இருந்தால் திருமணம் நடக்கும்..

7ல் கேது இருந்தால் திருமண விசயத்தில் குழப்பம்,சந்தேகம் அடைந்து தள்ளிப்போட்டுக்கொண்டே இருப்பார்கள் ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டிருப்பார்கள்...இதனால் திருமணத்தின் மீது அதிக விருப்பம் இருக்காது..

7ல் ராகு இருந்தால் பலருக்கு அவசர திருமனம்,காதல் திருமணம் ,பிரச்சினையில் திருமணம் நடந்திருக்கிறது..திசா புத்தி மோசமாக இருந்தால் இப்படி நடந்துவிடும்...சந்திரன்,சுக்கிரன் பார்வையும் ஒரு காரணம்..7ல் இன்னொரு கிரகம் ஏதாவது இருந்தால் அதற்கு ஏற்றவாறு பலன் மாறும் ..7ல் இருக்கும் கேதுவுடன் குருவோ,சுக்கிரனோ சேர்ந்திருந்தால் நல்லபடியாக திருமணம் நடப்பது அரிது....

குருபார்வை இருந்தால் இனிமையாக திருமணம் நடைபெறும்!!

ஆவணி மாத ராசிபலன் பாகம் 2

ஆவணி மாத விசேஷ தினங்கள்,முகூர்த்த நாட்கள்,சுப நாட்கள் விபரம்;



01 (ஆக.17): காயத்ரி ஜெபம்

04 (ஆக. 20): சங்கடஹர சதுர்த்ததி

06 (ஆக. 22): சஷ்டி விரதம்

07 (ஆக. 23): கிருத்திகை/ கோகுலாஷ்டமி
08 (ஆக. 24): கிருஷ்ண ஜெயந்தி
12 (ஆக. 28): பிரதோஷம்
13 (ஆக. 29): சிவராத்திரி
14 (ஆக. 30): அமாவாசை
17 (செப். 02): ரம்ஜான் நோன்பு ஆரம்பம்
18 (செப். 03): வினாயகர் சதுர்த்ததி
22 (செப். 07): துர்க்காஷ்டமி
26 (செப். 11): சர்வ ஏகாதசி
27 (செப். 12): ஓணம் பண்டிகை/ சிரவண விரதம்/ பிரதோஷம்



23.8.2012 வளர்பிறை சஷ்டி திதி சுவாதி நட்சத்திரம் அமிர்த யோகம் கன்னி லக்னம் 7.30 முதல் 9 மணி வரை 

27.8.2012 வளர்பிறை திங்கள் ஏகாதசை மூலம் நட்சத்திரம் சித்த யொகம் சிம்ம லக்னம் 6 மணி முதல் 7.30 மணி வரை

29.8.2012 புதன்கிழமை வளர்பிறை திரதோதசி உத்திராடம் நட்சத்திரம், அமிர்த யோகம் சிம்ம ல்க்னம் 5.30 ம்ணி முதல் 7.00 மணி வரை

30.8.2012 வளர்பிறை சதுர்தசி அவிட்டம் சித்த கன்னி லக்னம் 7,30 முதல் 9.00 மணி வரை


ஆவணி மாத ராசி பலன்;

முந்தைய பாகம் படிக்க க்ளிக் செய்யவும்

கன்னி;

கன்னி ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி நடந்து வந்தாலும் இந்த காலகட்டத்தில் ஒரு பெரிய நன்மையை சனி செய்வார் என நம்பலம்..சோதனையை கொடுத்த சனி உங்களுக்கு ஒரு நன்மையையும் செய்துவிட்டுத்தான் போவார் சிலர் வீடு கட்டும் வேலையை தொடங்கி இருப்பீர்கள்..திருமணம் போன்ற சுப காரியங்களில் தீவிரமாக ஈடுபட்டிருப்பீர்கள்..மன சஞ்சல் கொள்ளாமல் தைரியமாக செயபடுங்கள் நன்மையே நடக்கும்..மாத தொடக்கத்தில் சாதகமாக இருக்கும் புதன் பிற்பகுதியில் விரயத்தில் சஞ்சரிக்கிறார்..இரண்டில் சனி செவ்வாய் உலவுவதல் பேச்சில் நிதானம் தேவை  உறவுகளுக்குள் பகை உண்டாகலாம் கவனம் தேவை...அதிக செலவுகள் காத்திருப்பதால் சிக்கனம் தேவை

துலாம்;

ஏழரை சனியில் ஜென்ம சனி நடந்துகொண்டிருக்கிறது..எதிர்பலினரிடம் அதிக கவனம் தேவை உங்கள் ராசியில் செவ்வாய்,சனி உலவுவதால் உங்களிடம் அதிக கோபம் ,விட்டுக்கொடுக்கா தன்மை,வெளிப்படும் காலம்..குடும்பத்தில் அமைதி இல்லாமல் இருக்கும்..பொறுமையுடன் செயல்பட வேண்டிய மாதம் இது...ராசிக்கு பாக்யத்தில் ராசிநாதன் சுக்கிரன் இருப்பதால் தந்தை வழி மூலம் அனுகூலமான நல்ல செய்திகள்,வந்து சேரும்..லாபங்கள் வந்து சேரும் தொழிலில் அதிக அலைச்சல் இருந்தாலும் உழைப்பிற்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும்..

விருச்சிகம்;

ஏழரை சனி தொடங்கி விட்டதே என மன உளைச்சல் அடைய வேண்டாம் தொட்டதெற்கெல்லாம் இது ஏழரை சனியாலதான் ஆச்சு என பயப்பட வேணாம்...நமக்கு டைம் சரியில்லை அதனால் எதையும் செய்ய வேணாம்..புது முயற்சிகள் எதையும் செய்யாமல் முடங்கி இருக்க வேணாம்..கடுமையக உழையுங்கள்..உங்கள் உழைப்புக்கு ஏற்ற பலனை சனிபகவான் கொடுப்பார்..இந்த மாதம் ராசிநாதன் செவ்வாய் சனியுடன் சேர்ந்து விரயத்தில் சஞ்சரிப்பதால் அலைச்சல்,மனக்குழப்பம் அதிகமாகவே காணப்படும் தேவையில்லா பிரச்சினைகள் வீடு தேடி வரும்..உடல்நலனில் அதிக அக்கறை தேவை..பணம் தண்ணீராய் செலவழியும்..கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு தலைதூக்கும் என்பதால் உங்கள் பேச்சை முடிந்தவரை குறைத்துக்கொள்ளுங்கள்..முஎருகனுக்கு அர்ச்சனி செய்து வழிபடவும் சுக்கிரன்,புதன் சாதகமாக இருப்பதால் தொழில்,வருமானம் சிறப்பாகவே இருக்கும்..

தனுசு;

உங்கள் ராசிநாதன் குரு பகை வீட்டில் இருப்பதால் மளமளன்னு வந்துக்கிட்டிருந்த வருமானம் மந்தமாகி இருக்கும்..கவலை விடுங்க சீக்கிரம் சரியாகிடும்..6ல் இருக்கும் குருவால் தொழிலில் பலவித சவால்களை எதிர்கொள்ள நேரும்...அடுத்தடுத்து வீண் செலவுகள் வந்துகொண்டே இருக்கும்..வீடு கட்டுவது போன்ற சுப செலவுகள் செய்தால் கெட்ட செலவுகள் வராது...தந்தை வழியில் சில பிரச்சினகள் எதிர்கொள்ள நேரும் உறவினர்களுடன் பகை உண்டாகும் மாதம்..இது..கணவன் மனைவி ஒற்றுமை உண்டாகும்..

மகரம்;

எடுத்த காரியம் முடியும் வரை தளரமல் போராடுபவர்கள் நீங்கள்..உழைப்பு உழைப்பு கடுமையான உழைப்பு இதுதான் உங்கள் தாரக மந்திரம்..ஆனால் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்குதான்னு பார்த்தா ஒண்ணுமில்ல..எல்லாம் புல்லுக்கு பாய்ந்த நீர்தான்...10 இருக்கும் சனி,செவ்வாய் உங்கள் தொழிலில் பலவித புது முயற்சிக ஏற்படுத்தி முன்னேற்றம் தருவார்கள் ..தொழிலில் இதுவரை இருந்து வந்த தேக்க நிலை மாறி லாபம் உண்டாகும்..குருபலம் இருப்பதால் தொட்டது துலங்கும்..வெற்றியாகும்..புதிய முயற்சிகளை தயங்காமல் செய்யுங்கள் வெற்றி உங்களுக்கே...

கும்பம்;

ராசிநாதன் சனி பலமாக இருப்பதால் தன்னம்பிக்கை,தைரியம் அதிகரிக்கும் மாதம்..10 இருக்கும் ராகு பலவிதங்களிலும் வருமானத்தை தேடி தருவார்..10 ல் ராகு இருந்தால் பணம் பறந்து வரும் என்பார்கள்..சுக்கிரன் ராசிக்கு பஞ்சம ஸ்தானத்தில் இருப்பதால் எடுக்கும் முயற்சிகள் யாவும் வெற்றி கொடுக்கும்..கும்பத்துக்காரர்கள் கோவில்,குளம் கட்டுவதிலும் புண்ணிய காரியங்களிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டே இருப்பவர்கள் என்பதால் புண்ணியம் நிரம்ப உடையவர்கள்..இதுவரை இல்லாவிட்டாலும் தான தர்மம் செய்யுங்கள் உங்கள் லட்சியங்கள் நிறைவேறும்..

மீனம்;

அஷ்டம சனி வந்துவிட்டதே என கலங்கி நிற்க வேண்டாம்..கடன்,தொழில் மந்தம் என புலம்பி தவிக்க வேண்டாம்...உடல் பாதிப்புகள் எதுவும் இன்றி இருந்தாலே போதுமானது உங்கள் ஜாதகத்தில் வலுவான கிரக அமைப்புகள் இருந்து நல்ல திசாபுத்தி நடப்பில் இருந்தால் அஷ்டம சனி பெரிய பாதிப்பை தந்து விடாது..ராசி அதிபதி குரு 3ல் மறைந்தாலும் சுக்கிரன் 4ல் இருப்பதால் சுகங்கள் அதிகரிக்கும் வருமானம் இந்த மாதம் தாராளமாக இருக்கும்5ல் இருக்கும் புதன் வாழ்க்கை துணை சாதூர்யதால் ஆதாயம் பெற வைப்பார்...இக்கட்டான சூழில் இருந்து விடுபடுவீர்கள்...8ல் சனி செவ்வாய் இருப்பதால் பேச்சில் நிதானம் தேவை..உற்சாகமாக செயல்படுங்கள் நல்லதே நடக்கும்..முருகனுக்கு அர்ச்சனை செய்து செவ்வாய் கிழமையில் வழிபடுங்கள்!!







ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012

ஆவணி மாத ராசிபலன்

12 ராசிகளுக்கும் ஆவணி மாத ராசி பலன்


ஆவணி மாத கிரக நிலைகள்;

ஆவணி ஸ்திர மாதம் என்றைழைக்கப்படுகிறது..சிம்மத்தில் சூரியன் ஆட்சியாக இருப்பதால் இந்த மாதத்தில் எந்த சுப காரியம் செய்தாலும் அது நீண்ட நாள் நிலைத்து பலன் கொடுக்கும்..திருமணம்,கிரஹபிரவேசம் போன்றவை இந்த மாதத்தில் செய்வதால் மிக நல்லது...இந்த வருட ஆவணி மாதம் இரு அமாவாசை வருவதால் இது மலமாதம் அதனால் சுப காரியம் செய்யக்கூடாது என பஞ்சாங்கங்களில் போட்டிருந்தாலும்,சூரியனுக்கு 3ல் சனி இருப்பதால் எந்த தீங்கும் இல்லை என தணிகை பஞ்சாங்கம் விளக்கம் போட்டிருக்கிறார்கள்...

காலப்புருச லக்னத்துக்கு 7ல் சனி செவ்வாய் சேர்ந்திருப்பது குரு பார்வை இல்லாமல் இருப்பது திருமணம் போன்றவற்றுக்கு உகந்ததாக இருக்குமா என்பது ஆய்வுக்குறியது...இந்த நிலை சனி,செவ்வாய் சேர்க்கை நாட்டில் கல்வரம்,வறுமை,தொழில் ஸ்தானங்களுக்கு பாதிப்பு,மின் பற்றாக்குறையை உண்டாக்குகிறது..ஆட்சியாளர்களுக்கு பலவித பிரச்சினை...அதுவும் இன்று நிலக்கரி ஊழல் பெரிதாக பேசப்படுகிறது...நிலக்கரி என்பது சனி,செவ்வாய் தானே....தீவிபத்துகள் அதிகம் நடந்ததும் இந்த மாதத்தில்தான் என நினைக்கிறேன்...காரணம் சனி ,செவ்வாய் சேர்க்கையே..முக்கிய தலைவர்களுக்கு பாதிப்பும்,கண்டமும் உண்டாகும் மாதமாக இருக்கிறது..மூத்த அரசியல்வாதிகளுக்கு  உடல்நல பாதிப்புகள்,கண்டம்  வரலாம்...

மேசம்;

உங்கள் ராசிக்கு அதிபதி செவ்வாய் சனியுடன் இணைந்து சுபர் பார்வை இல்லாமல் இருப்பது சுமாரான பலன்களை கொடுக்கும்..இந்த மாதம் தொழில் ரீதியாகவும்,வருமான ரீதியாகவும் பல தொல்லைகளை சந்திக்க நேரும்..உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை...குரு சாதகமாக இருப்பதால் பெரிய பாதிப்புகள் இல்லை சமாளிக்கலாம்..மன சோர்வு இல்லாமல் செயல்படுங்கள்

ரிசபம்;

உங்கள் ராசிக்கு அதிபதி சுக்கிரன் இரண்டாம் இடமான தன ஸ்தானத்தில் அமர்ந்ததால் தாராள வருமானம் வந்து சேரும்..இதுவரை இருந்து வந்த பணக்கஷ்டம் தீரும்..நினைத்தது நடக்கும்..குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்..குரு சாதகமாக இல்லாவிட்டாலும் சுக்கிரன் அள்ளிக்கொடுப்பார்..

மிதுனம்;

ராசி அதிபதி புதன் மாத பிற்பகுதியில்  3ல் இருந்தாலும் சுக்கிரன்,ராகு,சூரியன் உங்களுக்கு சாதகமாகவே இருக்கிறார்கள்..ஆவணி 13 ஆம் தேதி தாராள பண வரவு இருக்கும்...கவலை வேண்டாம் தொழில் செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் அகலும்..குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்படி நல்ல செய்திகள் வந்து சேரும்

கடகம்;

உங்கள் ராசிக்கு அதிபதி சந்திரன் உங்கள் ராசியில் ஆட்சி பெற்று துவங்குவதால் இந்த மாதம் சுறுசுறுப்பாகவே செல்லும் பண வரவு தாராளமாகவே இருக்கும்..வீடு,நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இழுபறியாக இருந்தாலும் மாத இறுதியில் சாதகமான முடிவுகள் உண்டாகும்...உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை

சிம்மம்;

வக்கிர சனி நிவர்த்தியான பின் நிம்மதி பெருமூச்சு விட்டிருப்பீர்கள்..ராசிக்கு அதிபதி சூரியன் உங்கள் ராசியில் ஆட்சி பெறும் மாதம் இது..எனவே தைரியம்,தன்னம்பிக்கை அதிகமாகவே காணப்படும்...செவ்வாய் சனியுடன் இருப்பதால் எதிரிகள் தொழில் ரீதியாக குழப்பம் இருந்தாலும் முன்பு அளவுக்கு இருக்காது..பண வரவு தாராளமாக வந்து சேரும்...குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்..

(தொடரும்)




வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

ஜோதிடம்;ஜாதகத்தில் புதன் இருக்கும் ராசியின் பலன்;


ஜோதிடம்;ஜாதகத்தில் புதன் இருக்கும் ராசியின் பலன்;

பொன் கிடைத்hலும் புதன் கிடைக்காது என்ற சொல்லை அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். அவர் ஒரு ஜாதகத்தில் எந்தெந்த ஸ்தானத்தில் இருந்தால் எந்தெந்த பலன்களைக் கொடுப்பார் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
புதபகவான் லக்னத்தில் இருக்கப்பிறந்தவர் நல்லவிதமாக கல்விகேள்விகளில் சிறந்தவராகவும், சமயோசித புத்தியுடன் பேசவல்லவராகவும், ஞானவானாகவும், தனதான்ய சுகங்கள் உள்ளவராகவும், சரீர பூஷணம் உள்ளவராகவும் இருப்பார்.
இரண்டாவது இடத்தில் புதன் இருக்கப் பிறந்தவர் புத்ர பாக்யம் உள்ளவர். செல்வச் செழிப்பு உள்ளவர். சகோதரர் சகோதரிகள் உள்ளவர். ராஜாக்களின் சபையில் வெகுமதி வாங்கும் யோக்கியதை பெற்றிருப்பவர். எடுத்த காரியத்தில் வெற்றியடையும் நோக்கமும் மனஉறுதியும் உள்ளவர்.
புதன் மூன்றாவது இடத்தில் இருக்கப் பிறந்தவர் ஸ்தீரிகள்பால் பிரியம் உடையவர். அறுசுவை உண்டி புசிப்பவர். அக்காள் உண்டு. இனியவர்.
நான்காவது இடத்தில் புதன் இருக்கப் பிறந்தவர் கல்விமான். கீர்த்தியுள்ளவர். ராஜசபையில் வெகுமானம் பெறும் யோக்கியதையுள்ளவர். சுகபோஜனம் செய்யும் பாக்கியம் பெற்றவர். பண்டிதர் என்று பலராலும் போற்றப்படும் பாக்கியம் பெற்றவர்.
ஐந்தாவது இடத்தில் புதன் இருக்கப் பிறந்தவர் வித்தைகளுக்குக் குறைவில்லாமல் இருப்பார். சுக ஜீவனம் செய்து நல்ல பதார்த்தங்களுடன் போஜனம் செய்யும் பிராப்தியுண்டு. செல்வந்தர்கள், அரசர்கள் போற்றுதலுக்குரியவர். அதே நேரத்தில் கலகப் பிரியராகவும், டாம்பீகம் உள்ளவராகவும் இருப்பார்.
ஆறாவது இடத்தில் புதன் இருக்கப் பிறந்தவர் சத்துருக்களை எளிதில் வெல்வார். அற்ப வித்தையிருந்தாலும் அதை வைத்தக்கொண்டே பிரகாசிப்பார். திரவியம் நாசம் செய்பவராகவும் இருப்பார். பித்தரோகங்கள் அடிக்கடி தோன்றும்.
ஏழாவது இடத்தில் புதன் இருக்கப் பிறந்தவர் சரீர காந்தியு;ளளவர். பெண்கள் மூலம் திரவியம் அடைவார். வாஹன யோகம் உண்டு. குதிரைகளைப் பராமரித்து யோகம் அடையக்கூடும்.
எட்டாவது இடத்தில் புதன் இருக்கப் பிறந்தவர் நல்ல குணம் உடையவர்தான். ஆனால் அற்பபுத்தியும், அடிக்கடி தலைதூக்கும். தீர்க்காயுளுடன் இருப்பார். திரவியங்கள் சேர்ப்பதில் கருத்துடன் இருப்பார்.
ஒன்பதாவது இடத்தில் புதன் இருக்கப் பிறந்தவர் நல்ல வித்யா பாக்கியம் ஆசாரமுள்ளவர். செல்வந்தன் பலரும் சிலாகித்து விரும்பும் நிலையை அடைவார்.
பத்தாவது இடத்தில் புதன் இருக்கப் பிறந்தவர் நல்ல ஞானமுள்ளவர். தர்ம சிந்தனையுள்ளவர். கீர்த்தியுள்ளவர். ஆசார சீலர். நேத்திர ரோகம் பாதிக்கும். திரவியம் சம்பாதிப்பதில் கருத்தூன்றியிருப்பார்.
பதினோராவது இடத்தில் புதன் இருக்கப் பிறந்தவர் யோகவான். பாக்கியங்கள் பெற்று வாழ்வார். வீடு, வாசல் பாக்கியங்களும் உண்டு. அதிகாரம் உள்ளவர். ஆனால் சற்று மூர்க்க குணமும் காணப்படும். மங்களகரமும் இவரைச் சூழ்ந்திருக்கும்.
பனிரெண்டாவது இடத்தில் புதன் இருக்கப் பிறந்தவர் காமாந்தகாரர் என்னும் பெயர் பெற்றுவிடுவார். பலருக்கு விரோதியாவார். அளவுக்கு மிஞ:சி அனாவசிய செலவுகள் செய்வார். புத்திரபாய்கியம் குறைந்திருக்கும்.

வியாழன், 16 ஆகஸ்ட், 2012

புலிப்பாணி ஜோதிடம்;ராகு தரும் ராஜயோகம்

புலிப்பாணி ஜோதிடம்;ராகு தரும் ராஜயோகம்;


கேளப்பா யின்னமொரு புதுமை கேளு
கனமான கரும்பாம்பு கேந்திரகோணம்
ஆளப்பா அத்தலத்தோன் சுபரைக் கூட
அப்பனே சேர்ந்தாலும் கண்ணுற்றாலும்
சீரப்பா சென்மனுக்கு யோகம் மெத்த 
சிவசிவா கிளர்யோகம் திடமாய் செப்பு
கூறப்பா குடிநாதன் சேர்ந்து நிற்க
குமரனுக்கு அனுதினமும் பலனைக் கூறே.

-புலிப்பாணி ஜோதிட பாடல்

விளக்கம்;

கரும்பாம்பு எனப்படும் ராகு ஜாதகத்தில் லக்னத்திற்கு 1,4,7,10 ஆகிய கேந்திர ஸ்தானங்களிலோ, அல்லது 1,5,9 ஆகிய திரிகோண ஸ்தானங்களிலோ சுப கிரகங்களின் பார்வை இருக்குமானால் இந்த ஜாதகர் பெரும் யோகம் பெற்றவராவார்..சிவனருளினால் இவர் பெரும் செல்வந்தராக இருப்பார்..இதனை லக்னாதிபதி இருக்கும் இடத்தை கணித்து பலன் கூற வேண்டும்..

என்னுடைய கருத்து;

மேற்கண்ட அமைப்பு இருந்து ராகு திசை வந்தால் திடீர்னு பெரிய யோகத்தை ராகு கொடுத்துவிடும்..கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு ஒரே நாளில் ஆனவர்களை பார்த்திருக்கிறோம்..அதெல்லாம் ராகு திசை தரும் யோகம்தான் இது புதையல் யோகம் எனப்படும்...கிரானைட் மூலம் செல்வந்தர்,சாதாரணமாக ஆரம்பித்த வியாபாரத்துக்கு பெரிய பெரிய ஆர்டர்களாக வந்து குவிவது...திடீர்னு கிடைக்கும் மந்திரி பதவி போல..ராகு தரும் யோகம் இன்ப அதிர்ச்சியாக இருக்கும்...!

ராகு 4ல் இருந்து சுபர் பார்வையும் இல்லைன்னா,அம்மாவுக்கு பாதிக்கும்..உங்க பேர்ல மாடி வீடு என்ன ஓட்டு வீடு கூட இருக்காது..இருந்தா அங்கு கெட்ட சக்தி நடமாட்டம் இருக்கும்..அவருக்கு எந்த சுகமும் கிடைக்காது..மனைவி கூட இவர்க்கு எந்த சுகமும் தரமாட்டார்...எல்லாம் குறுக்கு வழி சுகம்தான்...சைக்கிளில் போனால் கூட கீழே விழுவார்....மாடு வளர்த்தால் நோயில் படுக்கும்...அடிக்கடி உடல் பாதிக்கும்..சுபர் பார்வை இல்லைன்னா இது மாதிரி பக்க விளைவும் உண்டு..!!


திருமணம் லேட்டாக காரணம் சனி? ஜோதிட விளக்கம்


திருமணம் தாமதம், தடை உண்டாக்குமா சனி?


ஜாதகம் பார்க்கப்போனல் இப்போ கல்யாணம் ஆகிவிடும்..ஆவணி வந்தால் கல்யானம் ஆகிவிடும் ஆனா அப்படி ஒரு சம்பவம் நடக்கவே மாட்டேங்குதே..ஜோசியரை பார்த்தாலே கடுப்பா வருது...100 ரூபா சும்மா கேட்டாலும் கொடுத்துடலாம்..இப்படி போகும்போதெல்லாம் ஆகிடும் ஆகிடும்னு சொல்றாரே..எல்லா பரிகாரமும் பண்ணியாச்சு..சொல்லாத மந்திரமும் இல்ல..என சலித்துக்கொள்வோர் பலரை பார்த்திருக்கிறேன்....

கோயில்,கோயிலாக சென்று  பரிகாரம் செய்தாலும்,எத்தனை திருமண தகவல் நிலையம்,மேட்ரிமோனியலில் பதிவு செய்தாலும் திருமணம் ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்பின் படி வழி கிடைத்தால்தான் நடக்கும்..அப்படி கிரகங்கள் கூடி வரும்போது பரிகாரம் செய்துகொண்டால்தான் தோசங்களும் விலகும்...

பவானிகூடுதுறை,திருச்செந்தூர்,கொடுமுடி,முடிச்சூர், திருவிடந்தை, திருமணஞ்சேரி, திருவீழிமழிசை, நல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர், உப்பிலியப்பன் கோவில், மதுரை மீனாட்சி சுந்தர்ரேஸ்வரர், திருவேடகம் ஏடகநாதர், மற்றும் திருக்கருகாவூர்,காளகஸ்தி போன்ற கோயில்கள்,தலங்களுக்கு சென்று வந்தும் பலன் இல்லையே தவிப்பவர்கள் அநேகம்..

ஜாதகத்தில் செவ்வாய் தோசம்,நாகதோசத்தால் மட்டும் திருமனம் தாமதம் ஆவதில்லை..இன்னும் பல காரணங்களும் இருக்கின்றன..சனி ஒரு மந்த கிரகம்...முடக்கம் தரும் கிரகம்..இவர் எந்த ஸ்தானத்தை பார்வையிடுகிறாரோ.,எந்த கிரகத்துடன் சேர்கிறாரோ அந்த ஸ்தானம்,கரகத்துவம் வலு இழக்கும்..அல்லது அந்த செயல்கள் மந்தம் அடையும்...உதாரணமாக புத்திர ஸ்தானம் எனப்படும் லக்கினத்தில் இருந்து 5 ஆம் இடத்தை பார்த்தாலோ இருந்தாலோ,புத்திர அதிபதியுடன் சேர்ந்தாலோ பெண் குழந்தைகள் அதிகம் பிறக்கும்..அபார்சன் கருச்சிதைவு உண்டாகும்...குழந்தை பாக்யம் தாமதம் ஆகும்...

7ஆம் இடத்தில் சனி இருந்தால்,7 ஆம் இடத்தை சனி பார்த்தால்,லக்னத்தில் சனி இருந்தால்,7க்குடையவனுடன் சனி இருந்தால்,7க்குடையவனை சனி பார்த்தால்,சுக்கிரனுடன் சனி இருந்தால் திருமணம் தாமதம் ஆகும்...முயர்சி செய்தாலே பல தடங்கல்கள் வரும்...இது போன்ற தோசம் இருப்பவர்கள் சிலர் 40 வயதளவில்தான் திருமனம் செய்திருக்கின்றனர்..அதிலும் சிலர் வேற வழியே இல்லை..இதுதான் அமைஞ்சது என மனசுக்கு பிடிக்காத துணையை திருமணம் செய்கின்றனர்,....குடும்ப வாழ்வும் குழப்பமாகவே இருக்கிறது..சனிதான் பார்த்துட்டாரே....துணையும்...அதுக்கேத்த மாதிரிதான் இருப்பார்...கொஞ்சம் முதிர்ச்சியா....!!

ஏழரை சனி நடக்குது,அஷ்டம சனி நடக்குது..இது திருமண தடையை உண்டாக்குமா எனக்கேட்டால் உண்டாக்காது...குரு பார்வை செவ்வாய்க்கோ,சுக்கிரனுக்கோ,7ஆம் இடத்துக்கோ இருந்தால்,சுக்கிரன்,செவ்வாய்,7க்குடையவன் புத்தி நடந்தால் திருமணம் தடங்கல் இல்லாமல் நடக்கும்!!

ஜாதகத்தில் செவ்வாய் அமர்ந்த ராசிபலன்


ஜாதகத்தில் செவ்வாய் அமர்ந்த ராசிபலன்;
ஒருவர் ஜாதகத்தில அதாவது அவர் பிறக்கும்போது செவ்வாய் இருக்கும் ஸ்தானத்தைக் கொண்டு பலன்களைப் பொதுவானதாகக் கவனிக்கலாம்.
செவ்வாய் லக்னத்தில் இருக்கப் பிறந்தவர் கருணையில்லாதவராகவும், கடின சித்தராகவும், திடீரென்று கோபாவேசமே காட்டுபவராகவும், திருட்டு புத்தியுடையவராகவும் இருப்பார். மற்றும் அதிகமாக வித்தையில்லாதவர் என்றும் கூறலாம். சிறுவயதில் தந்தைக்கு பீடை தருபவராகவும் இருப்பார்.
இரண்டாவது ஸ்தானத்தில் செவ்வாய் இருக்கப் பிறந்தவர் அதிக படிப்பு இல்லாவிட்டாலும், செல்வம் உள்ளவராக இருப்பார். சுபகாரியத்தில் பிhயம் உள்ளவராக இருப்பார். நேத்ர வியாதிகள் இவரைப் பிடிக்கும். முன்கோபி, துஷ்டன் என்றும் பலர் சொல்ல நேரிடும்
செவ்வாய் மூன்றாவது ஸ்தானத்தில் இருக்கப் பிறந்தவர் செல்வ விருத்தியுள்ளவர். ஆனாலும் திடீர் திடீர் என்று கோபம் பொங்கும் ஸ்பாவமுள்ளவராக இருப்பார். பிறரை நிஷ்டூரம் செய்து பேசுவதில் பிரியம் உள்ளவர். பந்துக்கள் சிநேகிதர்களுக்கு விரோதியாகவும் இருப்பார்.
நான்காவது இடத்தில் செவ்வாய் இருக்கப் பிறந்தவர் களத்திர பீடையுள்ளவராக இருப்பார். தீர்க்காயுள் உள்ளவர். மாதுர் கண்டம் உள்ளவர். ஐதரியசாலி. ஸ்திரீகள் இவரை வெறுக்க நேரிடும்.
செவ்வாய் ஐந்தாவது இடத்தல் இருக்க பிறந்தவர் தாய்க்கு ரோகம் கொடுப்பவர். தாய் மாமனுக்கும் தோஷம், புராணக் கதைகளில் வல்லவராகவும் இருப்பார். ஆனால் துஷ்டன் என்றும் பெயர் வாங்க வேண்டிய நிலை ஏற்படும்.
ஆறாவது இடத்தில் செவ்வாய் இருக்கப் பிறந்தவர் அற்ப ஆயுள் உள்ளவராக இருப்பார். மனைவிக்குப் பீடை சிறுவயதிலேயே இரண்டாவது விவாகம் செய்து கொள்ளநேரிடும். சுகஜீவனம் என்றும் சொல்லலாம்.
செவ்வாய் ஏழாவது இடத்தல் இருக்கப் பிறந்தவர் கூஷய ரோகத்தினால் கஷ்டப்படவேண்யவராக இருப்பார். களத்திர தோஷம் உண்டு என்றும் சொல்லவேண்டும். சகோதரர்கள் அநேகர் உண்டு.
எட்டாவது இடத்தல் செவ்வாய் இருக்கப் பிறந்தவர் அரசர்களால் வெகுமதியளிக்கப்படும் நிலையடைவார். மாதுர் கண்டம். அற்ப ஆயுள். ஆயுதங்களால் ஆபத்து உடையவர். கடினமான மனநிலையுள்ளவர் என்றும் சொல்லலாம்.
செவ்வாய் ஒன்பதாவது இடத்தில் இருக்கப் பிறந்தவர் வியாபாரியாயிருப்பார். ஆனால் பாக்ய நாசம் உண்டு. பிறரிடம் சேவகம் செய்யவேண்டிய நிலை ஏற்படும். தெய்வ பக்தியில்லாதவர் என்றும் சொல்ல வேண்டும்.
பத்தாவது இடத்தில் செவ்வாய் இருக்கப் பிறந்தவர் பலவித உபாயங்கள் தெரிந்தவராகவும், ஆசாரமுள்ளவராகவும் இருப்பார். அவருடைய குலத்தவர்கள் பெருமைப்படக்கூடிய நிலையில் இருப்பார். பேசுவதில் வல்லவராகவும். தைரியசாலியாகவும் இருப்பார்.
பதினோராவது இடத்தில் செவ்வாய் இருக்கப் பிறந்தவர் நல்ல வசனம் உள்ளவராகவும், செல்வம் சேர்;ப்பதில் கருத்துடையவராகவும் பிதுர் சகோதரர் உடையவராகவும் இருப்பார்.

பனிரெண்டாவது இடத்தில் செவ்வாய் இருக்கப் பிறந்தவர் களத்திரபீடையுள்ளவராக இருப்பார். சகோதரர் பீடை உண்டு. வாத சரீரியாகவும் இருப்பார். அல்ப புத்திரர்கள் உடையவர்.

புதன், 15 ஆகஸ்ட், 2012

ஜாதகத்தில் சந்திரன் நிலை..அவர் இருக்கும் ராசிபலன்


ஜாதகத்தில் சந்திரன் நிலை
பொதுவாக சந்திரன் அழகன். கீர்த்தியுள்ளவன். புத்திசாலி. மனையாளுக்கினியவன். இவர் லக்கினத்திலேயே இருந்தால் சந்திரனுடைய பூர்ண குணங்கள் ஜாதகரைச் சாரும். லக்னத்தில் சந்திரன் இருக்கப் பிறந்தவர் ஆண் அழகன். மனையாளுக்கு இனியவர். சந்திரன் குளுமை பொருந்தியவனாகவும், எப்போதும் இவருக்கு ஜலதோஷத்தால் உபாதை இருந்து கொண்டேயிருக்கும்.
சந்திரன் இரண்டாவது இடத்தல் இருக்கப் பிறந்தவர் தனவந்தராகவும், ஸ்திரிபோகம் அதிகம் உள்ளவராகவும், கீர்த்தியுள்ளவராகவும் இருப்பார். புத்தி சாதுர்யம் உள்ளவராகவும் இருப்பார்.
மூன்றாவது இடத்தில் இருக்கப்பிறந்தவர் கல்வி கேள்விகளில் தேர்ச்சி பெற்றவராயிருப்பார். ஆனால் சபைக்கூச்சம் இவருக்கு அதிகம் இருக்கும். சபை முன் கோழையாகவே இருப்பார். மூலரோக உபாதை இருக்கும். ஆனால் சௌக்கியமுடையவர் என்றும் கூறலாம்.
சந்திரன் நான்காவது இடத்தல் இருக்கப் பிறந்தவர் விசாலமான வீடு உடையவராக இருப்பார். பலருக்கு ஆதரவு கொடுத்துக் காப்பாற்றும் நல்ல குணம் உடையவர். பரிமளவாசனை திரவியாதிகளை அதிகமாக உபயோகிப்பவர். பல இனிய குணங்களைக் கொண்டவர்.
சந்திரன் ஐந்தாவது இடத்தில் இருக்கப் பிறந்தவர் அழகான மனைவியுடையவர். மாந்திரீகத்தில் ஈடுபாடு உடையவர். தற்பெருமை அதிகம் உள்ளவர். நல்ல வார்த்தைகளை இனிக்க இனிக்க பேசக்கூடியவர். எல்லோரும் விரும்பக் கூடியவர். செய்தொழிலில் லாபம் காண்பவர்.
ஆறாவது இடத்தல் சந்திரன் இருந்தாலோ மதுபான விஷயத்தில் ஆசையுள்ளவர். மனைவியர் ஒன்றுக்கும் அதிகமாக உண்டு. காம இச்சையுடையோர் என்றும் சொல்லாம். ஞாபக சக்தி குறைந்தவர் என்றும் சொல்லவேண்டும். தொழில் விருத்தியுள்ளவர்.
சந்திரன் ஏழாவது இடத்தில் இருக்கப் பிறந்தவர் மனைவி உயிரோடு இருக்கும்போதே வேறு பெண்ணை மணந்தகொள்வார். புpற மாதர் பேரில் இச்சையுடையவர். இந்தக் காரணத்தைக் கொண்டு களத்திர தோஷம் உண்டு என்று சொல்வார்கள். வாழ்க்கையில் சற்று தாறுமாறாக நடப்பதால் பெண்களே இவரைக் கேலி செய்யும் அவல நிலையை அடைவார்.
எட்டாவது இடத்தில் சந்திரன் இருக்கப் பிறந்தவர் ஆயுளின் பின்பாகத்தில் வசதிகள் நிறைந்து காணப்படுவார். அற்ப ஆயுள் என்றும் சொல்லலாம். பித்த சாரீரமுள்ளவர். நல்ல குணங்கள் உள்ளவர். பிறர் இவரை விரும்பும் நல்ல தன்மையுடையவர். 
சந்திரன் ஒன்பதாவது இடத்தில் இருக்கப் பிறந்தவர் புத்திமான். பாக்கியவான். எந்த காரியத்தையும் நினைத்தபோதே ஆரம்பித்து முடிக்கவேண்டுமென்னும் ஆர்வம் உள்ளவர். சுக சரீரம் உள்ளவர். புத்திரபாக்கியம் உண்டு. ஆனால் இவருக்கும் அற்ப ஆயுள் பிரதானம் என்றே சொல்லலாம்.
பத்தாவது இடத்தில் சந்திரன் இருக்கப் பிறந்தவர் எந்த காரியத்தைத் தொடங்கிய போதிலும் அதை முடித்துவிட்டே மறுவேலை பார்ப்பது என்னும் தீவிரம் உள்ளவர். நல்ல குணங்கள் உள்ளவர். ஆனால் மனைவியை விரோதம் செய்து கொள்வார். காமக் கனல் இவரிடம் உண்டு. பெரும்பான்மையாக விதவைகளையே காமக் கிழத்திகளாக வைத்துக் கொள்வார்.
பதினோராவது இடத்தில் சந்திரன் இருக்கப் பிறந்தவர் பலவகை வித்தைகளில் தேர்ந்தவர். புத்திமான், கீர்த்தியுள்ளவர். திரவியம் உள்ளவர். ஆள் அடிமையுள்ளவர்.
சந்திரன் பன்னிரெண்டாம் இடத்தி;ல் இருக்கப் பிறந்தவர். தரித்திரம் உள்ளவர். பெருமைப்படக்கூடிய சரீர சம்பத்து இல்லாதவர். பரதேசம் திரிவார். ஸ்திரீ சம்பந்தத்தால் தொத்திக் கொண்டே நோய்களால் கஷ்டப்படுவார்

ஜாதகத்தில் சூரியன் இருக்கும் ஸ்தான ராசி பலன்


ஜாதகத்தில் சூரியன் இருக்கும் ஸ்தான ராசி பலன்

சூரிய பகவான் லக்னமாகிய முதல் ஸ்தானத்திலிருந்தால் ஜாதகர் சுறுசுறுப்புடையவராகவும், ஆரோக்கியமானவனாகவும், நேத்திர ரோகம் உடையவராகவும், வீர்யமுள்ளவராகவும் இருப்பார்.

சூர்ய பகவான் இரண்டாவது இடத்தில் இருக்கப் பிறந்தவர். ஆயுள் உள்ளவராக இருப்பார். ஆனால் வித்தையில் மந்தமும், அகலமான முகம் உள்ளவராகவும் முகத்தில் உள்ள உறுப்பு ஒன்றிய ரோகம் உள்ளவராகவும் இருப்பார்.

சூரிய பகவான் மூன்றாவது இடத்தில் இருக்கப் பிறந்தவர் கவலை இல்லாதவராகவும், நற்புத்தியுடையவராகவும், சகோதரர்கள் உடையவராயும், தனவானாகவும் இருப்பார். இவருக்குச் சிற்றுண்டியின் பால் அதிக பிரேமையுண்டு.

நான்காவது இடத்தில் சூரியபகவான் இருக்கப் பிறந்தவர் உத்தியோகம் செய்பவராக இருப்பார். ஈவிரக்கம் சிறிதும் இல்லாதவராக இருப்பார். தரித்திர தசையில் கஷ்டப்பட வேண்டியவராக இருப்பார்.

சூரிய பகவான் ஐந்தாவது இடத்தில் இருக்கப் பிறந்தவர் உத்தியோகம் செய்பவராக இருப்பார். ஈவிரக்கம் சிறிதும் இல்லாதவராக இருப்பார். தரித்திர தசையில் கஷ்டப்பட வேண்டியவராகவும் இருப்பார்.

சூரிய பகவான் ஆறாவது இடத்தில் இருக்கப் பிறந்தவர் புகழும், கீர்த்தியும் அடைவார். விரோதிகளை லட்சியம் செய்யமாட்டார். அவர்களைச் சுலபத்தில் ஜெயிப்பார். புத்திசாலியாக இருப்பார். அரசர்கள் இவரை விரும்புவார்கள்.

சூரிய பகவான் ஏழாவது இடத்தில் இருக்கப் பிறந்தவர் பெண்கள் மூலம் பொருள் அடைவார். சாஸ்திரங்களின் ஆராய்ச்சியில் ஈடுபடுவார். அயல்வீடுகளில் புசிக்க இச்சையுள்ளவர். பெண்களுடைய வார்த்தையைக் கேட்க பிரியம் உள்ளவராவார்.

சூரிய பகவான் எட்டாவது இடத்தில் இருக்கப் பிறந்தவர் கல்வி கேள்விகளில் பிரியம் உள்ளவர். ஆனால் திரவியம் இல்லாதவர். அழகுள்ளவர். தரும சிந்தனை இல்லாதவர்.

சூரிய பகவான் ஒன்பதாவது இடத்தில் இருக்கப் பிறந்தவர் நல்லகுணம் உள்ளவர். ஆனால் கலகப்பிரியர் என்று பெயர் எடுப்பார். தர்ம சிந்தனையுள்ளவர். வியாபாரத்தில் ஈடுபடுவார். பிதுரார்ஜித சொத்துக்களில் ஜீவிப்பார். பூமிகள் உடையவர்.

சூரிய பகவான் பத்தாவது இடத்தில் இருக்கப் பிறந்தவர் வித்தையில் தேர்ந்தவராக இருப்பார். யுக்தியும், சாமர்த்தியமும் இவருக்கு இருக்கும். சாமர்த்தியமாக பேசுவார். செல்வம் சேர்ப்பவர். பந்துக்களை விரோதித்துக் கொள்ளமாட்டார்.

சூரிய பகவான் பதினோறாவது இடத்தில் இருக்கப் பிறந்தவர் வெகுதனவந்தனாக இருப்பார். வாஹன ப்ராப்தியும் உண்டு. கீர்த்தியுள்ளவர். பலருக்கு எஜமானராக இருப்பார். தைரிய லட்சுமி இவரிடம் குடிகொண்டிருப்பான்.

பன்னிரெண்டாம் இடத்தல் சூரியபகவான் இருக்கப் பிறந்தவர் செல்வமில்லாதவர். மனைவியின் சொற்படி நடப்பவர். செலவுகள் அதிகமாகச் செய்து வருபவர். கண்களைப் பொறுத்த ரோகம் இருந்து வரும்.



செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

ஜோதிடம் என்றால் ரொம்ப பிடிக்கும்


எனக்கு ஜோதிடம் என்றால் ரொம்ப பிடிக்கும்..ஜோதிடம் ஒரு அறிவியல்..ஜோதிடம் ஒரு கணக்கு...காலம் கணித்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம்..அதே சமயம் நம்,உழைப்பும்,முயற்சியும் அவசியம்..திறமை இருந்தும் ஜெயிக்காதவன்,கடுமையாக உழைத்தும் ஜெயிக்காதவன்,முயற்சி செய்தே ஓய்ந்தவன் பல கோடி...காலம் பார்த்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம்..எனக்கு ஜோதிடத்தின் மீது அதிக நம்பிக்கை உண்டு..அது பற்றி நிறைய புத்தகம் ஆர்வமாக வாங்கி படிச்சிக்கிட்டே இருக்கிறேன்..என் அலுவலகத்தில் 2000க்கும் மேற்பட்ட ஜோதிட புத்தகங்களை அடுக்கி வைத்திருக்கிறேன்..தினசரி ஒன்றை படிக்கிறேன்..ஜோதிடம் பிறருக்கு சொல்வதையும் தொழிலாகவும் மாற்றிக்கொண்டு விட்டேன்..பிடிக்காத வேலையை செய்வதை விட பிடிச்ச வேலையை செய்வது,அதன் மீது பொருள் ஈட்டுவது தான் சரி என நினைக்கிறேன்..ஜோதிடம் என்பது ஏமாற்று,பொய் என அதை பற்றி சிறிதும் முயற்சித்து ஆராயாமல் பொத்தாம் பொதுவாக பேசுபவர்களை நான் ..அவர்களது அறியாமை என ஒதுங்கிவிடுவேன்..

நான் இன்னும் செய்ய வேண்டியது என யோசிக்கும்போது நான்
 படிச்சதுல பிடிச்சது,ஜோதிடத்தில் முக்கியமான சின்ன சின்ன தகவல்களை இங்கு பகிர ஆரம்பிச்சிருக்கேன்..ஏன்னா என் பக்கத்துல எனக்கு பிடிச்சதை தான் எழுத முடியும்.என்னைபோல ஜோதிடத்தில் ஆர்வமாக இருக்கும் நண்பர்களுக்கு இது பயன்படும்..ஜோதிடம் பற்றி முடிந்தளவு எளிமையக பகிரும்போது,அதை பற்றி சிறிதும் அறியாதவர்களுக்கு கொஞ்சம் புரியவும் தொடங்கும்...ஜோதிடத்தை அவநம்பிக்கையாக பார்ப்பவர்களுக்கு கொஞ்சம் நம்பிக்கை உண்டாக்க முடியும் என்றாலும் மகிழ்ச்சியே..அது 10 பேரா இருந்தாலும் சரி..

வெறும் ராசிபலன் மட்டும் ஜோதிடம் அல்ல...பிறந்த ஜாதகம் மட்டும் ஜோதிடம் அல்ல..உலகில் ஒவ்வொரு அசைவிலும் ஜோதிடம் இருக்கிறது..முக்காலமும் சொல்ல முடியும்..நான் அந்தளவு மகான் அல்ல...ஆனால் முக்காலமும் சொல்வது ஒரு கணக்குதான்....கணக்கிடும் திறமை,வேகத்தை பொறுத்து எதையும் முன்கூட்டியே கணித்து சொல்ல முடியும்..அதற்கு இறையருள் ஆசியும் வேண்டும்..நான் தொடர்ந்து பயிற்சி பெறுவேன்..ஜோதிடம் என்பது ஜோதி திடம்..மனதை திடப்படுத்துவது..நம்பிக்கை அற்றவர்களுக்கு நம்பிக்கை உண்டாக்குவது..அதுதான் என் நோக்கமும்..

திருமணம் உடனே நடைபெற ஒரு சக்திவாய்ந்த மந்திரம்



நம் வீட்டில் திருமணம் ஏதாவது பிரச்சினை காரணமாக தடைபட்டுகொண்டே செல்கிறதே இதற்கு தீர்வு ஏதும் உண்டா என்று கேட்கும்நமக்கு கலியுக்கடவுளான முருகனின் திருப்புகழில் ஒரு பகுதியைநமக்கு எடுத்துத் தருகிறார் நம் கிருபானந்த வாரியார் சுவாமிகள்.வெறும் வார்த்தையாக இல்லாமல் உறுதியாகவும் நிச்சயமாகவும்கூறுகிறார். 
1 மண்டலம் அதாவது 48 நாட்களுக்குள் திருமணம் நடக்கும் இதற்கு அருணகிரி நாதர் முருகனைப் பற்றிப் பாடி அருளியமந்திர திருப்புகழை திருமணம் ஆகாதவர்கள் தினமும் காலை அல்லதுமாலை வேளையில் ஒரு நாளைக்கு 6 முறை வீதம் , 48 நாட்கள்தொடர்ந்து பாராயணம் செய்தால் கண்டிப்பாக எந்த விதமான திருமணதோசங்கள் இருந்தாலும் அத்தனையையும் நீக்கி 48 நாள் முடிவதற்குள்நல்ல பதில் கிடைக்கும்.
திருமணம் ஆனவர்கள் இந்தத்திருப்புகழை படித்தால் குடும்பத்தில்விட்டு சென்ற உறவுகள் சேரும் என்பதும் நிதர்சனமான உண்மை.
விறல்மார னைந்து மலர்வாளி சிந்த 
மிகவானி லிந்து வெயில்காய 
மிதவாடை வந்து தழல்போல வொன்ற 
வினைமாதர் தந்தம் வசைகூற


குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட
கொடிதான துன்ப மயில் தீர 
குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து 
குறைதீர வந்து குறுகாயோ


மறிமா னுகந்த இறையோன் மகிழ்ந்த
வழிபாடு தந்த மதியாளா 
மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச 
வடிவே லெறிந்த அதிதீரா


அறிவா லறிந்த னிருதா ளிறைஞ்சு
மடியா ரிடைஞ்சல் களைவோனே 
அழகான செம்பொன் மயில்மே லமர்ந்து
அலைவா யுகந்த பெருமாளே.

திங்கள், 13 ஆகஸ்ட், 2012

சித்தர்கள் சொன்ன மருத்துவக் குறிப்புக்கள்


சித்தர்கள் சொன்ன மருத்துவக் குறிப்புக்கள்..!

மூலிகை மருந்துகள்

1. சோற்றுக் கற்றாழையைச் சித்த மருத்துவத்தில் ‘குமரி’ என அழைப்பர். காய கல்பத்தில் அதுவும் ஒரு மூலிகையாகச் சேர்க்கப்படுகின்றது. அதன் நடுப்பகுதியைப் பிளந்து அதன் கசப்பான சாற்றை எடுத
்துச் சற்றே அலசிப் பின் மோரில் கலந்து தினம்தோறும் உண்டு வந்தால், அல்சர் போன்ற நோய்கள் குணமாகும். மேலும் உடலில் இளமைத் தன்மை அதிகரிக்கும்.

2. தினம் தோறும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் நாள் பட்ட தோல் நோய்கள் குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிப்பதுடன், முகப்பொலிவும் உண்டாகும்.

3. சர்க்கரை நோய் கட்டுப்பட வெந்த்தயத்தைப் பொடி செய்து தினம்தோறும் ஒரு டீஸ்பூன் வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். மேலும் சிறியாநங்கை, பெரியாநங்கையின் சாற்றையும் பயன் படுத்தலாம்.

4. செம்பருத்திபூவைக் காயவைத்து பொடி செய்து தலையில் சீயக்காய்போலத் தேய்த்துக் குளித்து வந்தால், பொடுகுத் தொல்லை போகும். நன்கு தலை முடி வளரும். முடி கொட்டுவதும் நின்றுவிடும். மேலும் கண்களுக்கும் உடலுக்கும் குளிர்ச்சி தரும்.

5. தேனை தினமும் வெந்நீரிலோ, பாலிலோ சிறிதளவு கலந்து குடித்து வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். நாள் பட்ட இருமல், சளி குணமாகும்.

6. மூச்சுக்கூட விடமுடியாமல் அதிகப்படியான இருமலாலும் சளியாலும் சிரமப்படும் குழந்தைகளுக்கு, குப்பை மேனியின் சாற்றைப் பிழிந்து சிறிதளவு கொடுத்தால் உடன் அனைத்துச் சளியும் வாந்தியாக வெளியில் வந்து விடும். ஆனால் சரியான அளவில் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.

7. ஆண்மைக்குறைவைப் போக்க விரும்புபவர்கள் முருங்கை விதையைப் பொடி செய்து, பாலில் கலந்து, இரவில் படுக்கப் போகும் முன் சாப்பிட்டுவர விரைவில் பலன் கிடைக்கும். துரித ஸ்கலிதம் ஆகுபவர்களுக்கு இம்மருந்து கை கண்டதாகும்.

8. இரவில் தினந்தோறும் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் சிறிதளவு வெந்நீரை அருந்திப் பின் படுக்கைக்குச் செல்ல வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் சிறிதளவு கருப்பட்டி அல்லது வெல்லம், அல்லது சர்க்கரையைச் சாப்பிட்ட பின் உறங்கச் செல்லலாம்
9. அருகம்புல்லைச் சாறாகவோ அல்லது பொடியாகவோ வாரம் ஒருமுறை சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாவதுடன், உடல் உஷ்ணமும் தணியும்.

10. எந்த மருந்துகளை உட் கொள்பவராக இருந்தாலும் மது அருந்தும் பழக்கம் உடையவராகவோ அல்லது புகைப்பிடிப்பவராகவோ இருந்தால் அது உடலில் மருந்தின் செயல்பாட்டு வீரியத்தைக் குறை
க்கும்.

11. உடல் வெளுப்பு மற்றும் தேமல் குணமாக வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்துக் குளித்து வரக் குணமாகும்.

12. குருதிக் கொதிப்பு எனப்படும் இரத்த கொதிப்பு நோய் குணமாக இரண்டு அல்லது மூன்று நாளைக்கு ஒருமுறை அகத்திக் கீரையை உணவில் சேர்க்க குணம் ஏற்படும்.

நன்றி: சித்தாந்தம்
 

சனி, 4 ஆகஸ்ட், 2012

சனி வக்ர நிவர்த்தி ராசிபலன்

16.5.2012ல் துலாம் ராசியில் இருந்து பின்னோக்கி கன்னி ராசிக்கு சென்ற சனி மீண்டும் இன்று முதல் துலாம் ராசிக்கு மாறியிருக்கிறார்..அதாவது சனி வக்ர நிவர்த்தி ஆகியிருக்கிறார்..சனி பெயர்ச்சி அன்று உங்கள் ராசிக்கு என்ன பலன் படித்தீர்களோ..அது இனிமேல்தான் பலன் தரும்..மீன ராசிக்காரங்களுக்கு தலை சுத்துதா..? கவலைப்படாதிங்க..தைரியம்,தன்னம்பிக்கையால் சமாளிப்போம்..இன்று மாலை முடிந்தால் அனுமன் ஆலயத்திலோ,விநாயகர் ஆலயத்திலோ நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள்!!!