புதன், 31 ஆகஸ்ட், 2011

சனி தோசம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்

ஜோதிடம்;சனி தோசம் நீங்க..

சனி பெயர்ச்சியால் வரும் நவம்பர் 1 முதல் அதிக பாதிப்பை பெறும் கன்னி,துலாம்,விருச்சிகம்,மீனம் ராசியினர் சனி தோசம் நிங்க செய்ய வேண்டிய பரிகாரம் என்னவென்றால் ...


1.தினசரி காகத்துக்கு சாதம் வைக்கலாம்
2.சனி ஆதிக்கம் உடைய உடலூனமுற்றோருக்கு உதவ்லாம்
3.ஏழைகளுக்கு அன்னதானம் செய்யலாம்..இதுதான் தானத்தில் சிறந்தது.
4.சாம்பல் நிற ஆடைகளை அணியலாம்..
5.கீழான நிலையில் இருப்போருக்கு உதவி
6.சனிக்கிழமை தோறும் எள் தீபம் நவக்கிரகங்களுக்கு ஏற்றலாம்.
7.பிரதோசம் தோறும் சிவ வழிபாடு
8.கடுமையான உழைப்பு அவசியம்.இக்காலங்களில் உங்கள் உழைப்பு எவ்வளவு இருந்தாலும் பலன் குறைவு என்பதால் அதிக உழைப்பு மிக அவசியம்
9.ஆஞ்சநேயர்,வினாயகர் வழிபாடு மிக நன்மை தரும்.இருவரும் சனியை வென்றவர்கள்.
10.தாய்,தந்தையை வணங்குங்கள்.உறவினர்களை அழைத்து விருந்து வையுங்கள்.குலதெய்வ பூஜை செய்து விருந்து வைத்தால் மிக நன்மை உண்டாகும்.

ஜோதிடம்;செவ்வாய்,களத்திர தோச பரிகாரம்


செவ்வாய் கிரகம் சிவந்த நிறம் கொண்டது.பொதுவாக செவ்வாய் சகோதரகாரகன் என்று சொல்லப்பட்டாலும் மண் பாண்டம் செய்பவர், அக்கினி  சம்பந்தமான வேலைகள்,  ராணுவம், ரத்தம், ரணம்  எனப்படும் காயம்,   சாதனைகள், சிவந்த ரத்தினம், செம்பு முதலானவற்றுக்கும் பொறுப்பாகின்றார்.
மேலும் பவளம், துவரை, நெருப்பு பயம், துவேசம், கடன், சோரம், சுய சிந்தனை, வீரியம், உற்சாகம், ஆடு, சேனைகளின் தலைமை, அதிகாரம், இனம்தாழ்ந்த நிலைப்பாடு, ஆயுள் குறைவை ஏற்படுத்துதல், விபத்துக்கு துணை போன்ற பல  பொறுப்புகளை பெற்றிருந்தாலும் ரத்த அணுத் தொடர்பில் வம்ச வளர்ச்சிக்கு காரணகர்த்தாவாக விளங்குவது தனிச்சிறப்பு.
ரத்தத் தொடர்பில் முக்கியமானதே திருமண பந்தம் எனும் குடும்ப வாழ்க்கை. குடும்ப வாழ்க்கையின் ஆரம்பமாக அமையும் திருமணப் பந்தத்திற்கும் செவ்வாய்க்கும் முக்கிய பங்கு உள்ளது. எனவே தான் திருமணப் பொருத்தத்தில் செவ்வாய் தோஷம் அனைவரையும் பயமுறுத்துவதாக அமைகின்றது.
எல்லோராலும் கேட்கப்படுவதும், பேசப்படுவதும் ஏன் ஜோதிடம் என்றாலே என்ன எனத் தெரியாதவர்களும் கேட்கும் கேள்வி பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் இருக்கிறதாப சுத்த ஜாதகமாப மாப்பிள்ளைக்கு செவ்வாய் தோஷம் உள்ளது என்பார்கள்.
ஆக செவ்வாய் தோஷம் ஜாதகத்தில் முக்கிய சொல்லாக இருக்கிறது. வாழ்க்கையின் மூலச் சொல்லாக உள்ளது. எனவே செவ்வாய் தோஷம் என்ன என்பதை பார்ப்போம். நிவர்த்தி செய்வதையும் கவனிப்போம்.
திருமண தோஷம்:
அங்காரக தோஷம், ரத்த தோஷம், உறவு தோஷம் என்றெல்லாம் சொல்லும் சொல்லுக்கு செவ்வாய் தோஷம் என ரிஷிமார்கள் பெயர் சூட்டி உள்ளார்கள்.
ஒருவரது ஜனன ஜாதகத்தில் விதி எனப்படும் லக்கினத்திற்கும், மதி எனப்படும் சந்திரனுக்கும் அதாவது ராசிக்கும் சுகம் எனப்படும் சுக்கிரனுக்கும் அந்த ஜாதகத்தில் பதிவாகும் செவ்வாயின் இடத்திற்கும் உள்ள உறவைக் கொண்டுதான் செவ்வாயின் தோஷம் எந்த அளவு ஒருவருக்கு வேலை செய்கிறது என்பதை உணரலாம்.
அந்த வகையில் லக்கினம், ராசியில் சந்திரன், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் இருக்கும் இடத்திற்கு, இரண்டாவது இடம், நான்காவது இடம், ஏழாவது இடம், எட்டாவது இடம் என செவ்வாய் எந்த வீட்டில் இருந்தாலும் செவ்வாய் தோஷம் எனப்படும்.
மேற்கண்ட 2, 4, 7, 8, 12 என ஐந்து இடங்களில் எங்கிருந்தாலும் செவ்வாய் தோஷம் என்பது பாமரர்களுக்கும் தெரிய வந்ததால் இன்று ஏழைகளும் சுகமாக வாழ செவ்வாயின் அருள் அவசியம் என்பது புரியும். மேலும் 2, 4, 7, 8, 12-ல் பாபக்கிரகங்கள் இருந்தாலும் இதே நிலைதான். இருந்தாலும்  செவ்வாய் மேஷம், விருச்சிகம், மகர ராசிகளில்  இருந்தால் தோஷம்  இல்லை.
மேலும் சூரியன், குரு, சனி ஆகியோருடன் சேர்ந்திருந்தாலோ அல்லது பார்க்கப்பட்டாலே தோஷம் இல்லை. இதே நேரத்தில் செவ்வாய் தோஷ அமைப்பு ஆண் பெண் இரு பாலருக்கும் இருந்தால் தோஷம் இல்லை. மேலும் பல காரணங்கள் தோஷம் இல்லை என்பதை புரிந்து அப்படியும் தோஷம் இருந்தால் அதற்கு எளிய பரிகாரம் உள்ளது.
கடகம், சிம்ம லக்கினமாக இருந்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை. செவ்வாய் 2-ம்மிடம் மிதுனம் அல்லது கன்னியாகில் செவ்வாய் இருக்கும் வீடு 4ம் இடம் மேஷம், விருச்சிகம் என்றாலும் தோஷம் இல்லை. செவ்வாய் 7ம்மிடம் கடகம், மகரமாயின் தோஷம் ஏற்படாது. செவ்வாய் 8ம்மிடம் தனுசு, மீனமாகில் தோஷம் இல்லை.
செவ்வாய் 12மிடம் ரிஷபம், துலாமாக இருந்தால் தோஷம் கிடையாது. சிம்மம் அல்லது கும்பம் இருந்தால் தோஷம் இருக்காது. குருவுடன் இருந்தாலோ சந்திரனுடன் இருந்தாலோ தோஷம் இல்லை. புதனு டன் சேர்ந்து அல்லது பார்க்கப்பட்டால் தோஷம் இல்லை. சூரியனுடன் சேர்ந்து இருந்தாலோ பார்த்தாலே தோஷம் ஏற்படாது.
செவ்வாய் இருக்கும் ராசி அதிபதி 1, 4, 5, 7, 9, 10 இவைகளில் எங்கிருந்தாலும் தோஷம் இல்லை. 8, 12ல் உள்ள செவ்வாய் இருக்கும் ராசி மேஷம், சிம்மம், விருச்சிகம் மகரமா யின் தோஷம் ஏற்படாது. தனது வீடு உச்ச வீடு மகரம், மேஷம், விருச்சிகம் தோஷம் இல்லை. சனி, ராகு, கேது இவர்களுடன் கூடியிருந்தால் பார்த்தால் தோஷம் இருக்காது.

பரிகார இடங்கள்:
பொதுவான எல்லாப் பரிகாரங்களையும் இடம், பொருள், காலம் இந்த மூன்றையும் தெரிந்து கொண்டு தான் செய்ய வேண்டும். இடம் என்பது பரிகாரம் செய்யக் கூடிய இடத்தைக் குறிக்கும். பொருள் என்பது பரிகாரத்திற்கு உதவும் பொருள்களைக் குறிக்கும்.
காலம் என்பது பரிகாரத்திற்கு ஏற்ற காலத்தை குறிக்கும். சுபமான பரிகாரங்களை வளர்பிறைகளிலும் துயர் கட்டுக்கள், நீக்கும், அதாவது துக்கஹர பரிகாரங்களை கிருஷ்ண பட்சத்திலும் செய்ய வேண்டும்.
குளக்கரை, கிணற்றங்கரை, நதிக்கரை, கோசாலை, சிவாலயங்கள், விஷ்ணு சந்நிதி, பிரும்ம சமூக மத்தி, சமுத்திர க்ஷத்திரம், அருவிக்கரை, குருமுகம், குருபாது காஸ்தலம், குரு ஆலயம் இந்த இடங்களில் எல்லாம் சுபமான பரிகாரங்கள் செய்து நற்பலன்களை நிரம்ப அடையலாம். ஒரு சிலர் பரிகாரங்களை உருத்திர பூமியிலும் செய்வதுண்டு.
பலன் தரும் பரிகாரங்கள்:
துவரை தானம்:
உடைக்காத முழுத்துவரையை சிகப்புத்துணியில் பொதி கட்டிக் கொள்ள வேண்டும், வெற்றிலைப் பாக்கு, மஞ்சள், பழம் இவைகளுடன் கண் சிவந்த வேதியரிடம் தானம் கொடுக்க வேண்டும்.
வாழைப்பூத் தானம்:
முழு வாழைப்பூ அதே மரத்தில் காய்த்த பழம், அதே மரத்தில் கிழக்கு நோக்கிய நுனி இலை இவைகளை எடுத்துக் கொண்டு இந்த நுனி இலையில் இவைகளை வைத்துத் தானம் வாங்குபவனை நடு வீட்டில் அமரச் செய்து வெற்றிலைப் பாக்கு, மஞ்சள் துணி இவைகளுடன் தானம் செய்ய வேண்டும். இந்த இரண்டு தானங்களும் திருமணத் தடங்கலைத் தீர்த்து வைக்கும் தானங்கள்.
வழிபாட்டு முறை:
செவ்வாய் தோஷம் ஒரு சிலர் நினைப்பது போல திருமணத் தடங்கலை மட்டும் செய்து போவது அல்ல. பல்வேறு வகையான இடைïறுகளும் இதனால் விளைவதுண்டு.  செவ்வாய் க்கு அதிபதியான முருகனை செவ்வாய் கிழமை நெய்தீபம் 9 ஏற்றி வழிபடவும்..திருச்செந்தூர் சென்று ஒரு இரவு தங்கி வியாழக்கிழமை அவரை வழிபடவும்...
கோபமான வார்த்தைகளினால் தனக்கு வர வேண்டிய நன்மைகளைத் தானே கெடுத்துக் கொள்வது, கல்யாண வீடுகளில் போன இடங்களில் சண்டையிட்டுக் கொள்வது, கல்யாணக் காரியங்களில் சண்டையிட்டுக் கொள்வது, கல்யாணக் காரியங்கள் பேசப் போனால் தடங்கல் இவராலேயே ஏற்படு வது, இப்படிப் பல கோணங்களில் செவ்வாய் தோஷம் தன்னு டைய குணத்தை வெளிப்படுத்தும்.
பரிகார காலம்:
செவ்வாய்க் கிரகம் அவரவருடைய ஜாதகத்தில் எந்த இடத்தில் இருக்கிறதோ அந்த இடத்துக்குரிய கிரகங்களின் நாட்களில் செய்வது சிறப்பு. பொதுவாகச் செவ்வாய்க் கிழமையிலும் செய்யலாம். ஜென்ம நட்சத்திரத்தன்று பரிகாரம் செய்வது ஒத்துக் கொள்ளப்பட்டது. இதைத் தவிர உள்ள சிறப்பு விதிகளை சுக்குல பக்ஷ பரிகாரத்தில் கூறுவோம்.
பரிகாரம் செய்ய  ஆகாத நேரம்:
ஜென்ம நட்சத்திரத்துக்கு நான்கு எட்டு பன்னிரண்டு இந்த நட்சத்திரங்களில் பரிகாரங்கள் செய்வது நல்லதல்ல.

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

புதிய பதிவர்கள் கவனிக்கவும்!


புதிய பதிவர்கள் கவனிக்கவும்!
நாளுக்கு நாள் புதிய பதிவர்கள் பதிவுலகத்திற்க்கு வருகை தருவது மகிழ்ச்சி தருகிறது(புது ஃபாலோயர்ஸ் கிடைப்பாங்களே-;)) அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
ஒரு வருசமா பதிவுலகத்தில் சிக்கி சின்னா பின்னாமாகி ,காசை நிறைய விட்டு(பிரவுசிங் செண்டர்ல..இப்ப கம்ப்யூட்டர் வாங்கிட்டென்),முக்கி திணறி 100 ஃபாலோயர்ஸ் கிடைச்ச அருகதையில உங்ககிட்ட சில வார்த்தைகள்.....
நான் அட்வைஸ் பன்ணல..ஒரு சில ஐடியாக்கள் அவ்வளவுதான்...
புதிய பதிவர்கள் முதலில் செய்ய வேண்டியவை......
1.
எல்லாமே ஹிட்ஸ்க்காகத்தான்.என்றாலும் ஹிட்ஸை எதிர்பாராமல் அவ்வப்போது சமூகத்திற்க்கும் மெசேஜ் கொடுங்கள்.

2.
காப்பி பேஸ்ட் தவிர்த்து விடவும்..இதனால் எந்த பெயரும் நமக்கு கிடைக்க போவதில்லை.சமூகத்திற்க்கு பயன்படும் என்றால் போடலாம்.முக்கிய செய்தி என்றால் போடலாம் தவறில்லை.ஆனால் அதை வைத்தே பதிவுலகத்தில் காலம் ஓட்ட முடியாது...(சொந்த அனுபவம் நிறைய இருக்கு ஹி..ஹி)

3.
ரொம்ப ஹாட்டா எதுவும் எழுதிட வேண்டாம்..கவிதையை எழுதி தள்ளாதீங்க..இங்க முக்காவாசி வைரமுத்து..வாலி தான்..
.
4.
பதிவின் பக்கங்களை அழகாக்குறேன் பேர்வழின்னு கலர்கலரா எழுத்தை மாத்தாதீங்க..கண்ணுக்கு கெடுதல்..இது போல பல தளங்களுக்கு சென்று நான் ஓடி வந்துவிட்டேன்....ஃப்ளாஷ் விளம்பரங்களை பக்கம் முழுவதும் தோரணம் கட்டாதீங்க..அதுவும் எரிச்சலை தரும்..அது மூலமா ஆதாயம் இருந்தா ஓகே.

5.
குறைந்த பட்சம் 100 பதிவர்களிடமாவது உறுப்பினர்களா சேருங்க அப்பதான் உங்களுக்கும் 50 உறுப்பினர்கள் சேருவாங்க..எனக்கு யார் ஃபாலோயர் சேர்ந்தாலும் அவர்களிடம் நானும் ஃபாலோயர் ஆகிறேன்.....இது நல்ல பலன் தருகிறது...நீங்கள் யாரிடமாவது ஃபாலோயராக இணைந்து அவர்கள் உங்களிடம் ஃபாலோயராக சேரவில்லை என்றால் அவர்கள் பிரபல பதிவர்கள் என அறிந்துகொள்க..அவர்களிடம் நமக்கு எதுவும் தேறாது..பின்னூட்டம் உட்பட.

6.
நம்மை போல..புது பதிவர்கள் யார் வந்தாலும் ஃபாலோயராக சேருங்கள்.ரொம்ப நல்லா அவங்க எழுதினாத்தான் ஃபாலோயர் ஆகணும்னு இல்லை.உடனே அவர்கள் போடும் பதிவுகளுக்கு சென்று மறுமொழி இடுங்கள்.குறைந்தபட்சம் ஸ்மைலி யாவது போடவும்...

7.
யாருடைய பதிவையாவது நீங்கள் எடுத்து கையாண்டால் அவர்களுக்கு லின்க் கொடுத்து விடவும் அல்லது நன்றி என போட்டு விடவும்..இது பதிவுலக சட்டம்.

8.
நீங்கள் மொக்கை பதிவர் என்றால் அதான் என்னை பொல..ஹிட்ஸ் மட்டுமே எதிர்பார்ப்பவர் என்றால் சீசனுக்கு தகுந்தாற்போல பதிவு போட வேண்டும்..எந்திரன் சீசன் இது ..எந்திரன் சம்பந்தமாக ஒரு பதிவு போட்டு விட்டீர்களா...அதுக்கு தான் இப்ப மார்க்கட்.ஒரு நாளைக்கு 500 ஹிட்ஸ் குறைந்தது நிச்சயம்...

9.
நிறைய புது பதிவர்களில் மறுமொழி நாம் போட்டால் ,உங்கள் மறுமொழி சேமிக்கப்பட்டுள்ளது. பதிவு ஓனர் சொன்னால் வெளியிடுகிறோம்..என வருகிறது.. இது செம கடுப்பை கிளப்புகிறது..நீங்க என்ன பெரிய வினவா,சவுக்கா ..அல்லது பிரபல பதிவரா.. நமக்கு தேவை மறுமொழி..அப்பப்ப அது வந்தாதான் அப்பப்ப தமிழ்மணம் மறுமொழி திரட்டியில உங்க பேரு வரும் யாராவது ஒண்ணு ரெண்டு நல்ல உள்ளம் உள்ளே நுழையும்..அதனால் செட்டிங் சென்று கமெண்ட் மாடரேசன் .டிக் பண்ணி விடவும்..அதே போல நாலு இங்கிலீஸ் எழுத்து வரும் அதை டைப் பண்ணாத்தான் உள்ளே போக முடியும்..அதற்காகவே நான் கமெண்ட் போடாமல் திரும்பியது நிறைய..அதையும் நீக்கவும்.
.
10.
நம்ம பதிவை எல்லாம் பிரபல பதிவர்கள் படிப்பாங்களா என சோர்ந்து போக வேண்டாம் எல்லாமே உள்ளே வரும் ஆனா எதுவும் கமெண்ட் போடாது... ஏன்னா அவங்களுக்கு இமேஜ் இருக்குதுன்னு அவங்களே நினைச்சுகிறாங்க..
.
11.
அப்புறம் கூட்டு களவாணிங்க..இங்க ஜாஸ்தி.மெயில் சாட்டிங்க் ல பேசிக்குவாங்க..என்னோட பதிவு போட்ருக்கேன்..இதுல பின்னூட்டம் ஓட்டு போட்ரு..உனக்கும் போட்டுடறேன் னு பேசிக்குவாங்க...அதே மாதிரி 6 பெரு ஓட்டு போட்டா போதும் ஹிட்ஸ் தான்..நல்ல பதிவு நாம போடல..அதனால் நமக்கு ஓட்டு விழலை ந்னு ஏமாந்துடாத..மக்கா..சூதானமா பொழச்சுக்க...

12.
உங்களுக்கு யாராவது கமெண்ட் போட்டா உடனே அவங்க பதிவுக்கு போயி கமெண்ட் போட்ரு...அதுதான் நல்லது...கமெண்ட் போடறவன் உன் எழுத்து அமர காவியம் நு நினைச்சா போடறான்..ஏதோ.. அண்ணன் நமக்கும் கமெண்ட் போடுவாருன்னு நம்பிதானே போடுறான்.. அவனுக்கு நீ துரோகம் பண்ணலாமா..?
நன்றே செய் அதை இன்றே செய் னு எதுக்கு சொன்னாங்க...இதுக்குதான்....அப்படி மறுமொழி போடலன்னா ,தனிப்பட்ட முறையில் அவங்க மெயில் ஐடிக்கு போய் அண்ணே..நான் உனக்கு இத்தனை பதிவுல..இத்தனை கமெண்ட் மொய் வெச்சிருக்கேன்..எனக்கு நீ இத்தனை பதிவுல  இத்தனை கமெண்ட் போடல...அதனால ஒழுக்கமா வந்து மொய் கணக்கு தீருன்னு சொல்லு தம்பி..அண்ணன் அலறிக்கிட்டு வருவான்.. 
-
இன்னும் அரசியல் இருக்கு...சொல்வேன்.அடுத்த பதிவுல...

சனிப் பெயர்ச்சி பலன்கள் 2011- 2014 கடகம்

சனிப் பெயர்ச்சி பலன்கள் 2011- 2014 கடகம்


திருக்கணிதம் பஞ்சாங்கப்படி,கர வருடம் ஐப்பசி மாதம் 15 ஆம் தேதி,(15.11.2011)செவ்வாய்க்கிழமை காலை 10.12 மணிக்கு சனிபகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு சென்றார்.வாக்கிய பஞ்சாங்கப்படி 21.12.2011 அன்று பெயர்ச்சியானார்.

இந்த பெயர்ச்சியால் ஒவ்வொரு ராசியினருக்கும் ஏற்படும் நன்மை தீமை பற்றி எழுதி வருகிறேன்.அதன் வரிசையில் இன்று கடகம் ராசியினருக்கு சனி பகவான் என்ன செய்வார் என பார்ப்போம்.கடகம் சந்திரன் பகவானின் ராசி.குளிர்ந்த நீர் ராசி என்பதாலோ என்னவோ இவர்களும் குளிர்ந்த மனம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.பிறருக்கு நன்மை செய்யவே பிறந்தவர்கள் போல ஓடி வந்து உதவும் நற்குணமும் எப்போதும் சிரித்த முகத்துடனும் காட்சி தருபவர்கள்.சந்திரன் தாயை குறிக்கும் கிரகம் மட்டுமல்ல.....அழகுக்கும்,அறிவுக்கும் நாயகியாக திகழும் கிரகம் அல்லவா சந்திரன்? அதனால் இவர்கள் அழகும்,அறிவும் மிக்கவர்களாக,அதிக பாசம் அன்பும் கொண்டவர்களாக இருப்பார்கள்.


கடக ராசி அன்பர்கள் எனக்கு நிறைய ஜோதிட வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.பணிவும்,மனிதனுக்கு மதிப்பு கொடுக்கும் அவர்கள் பண்பும் என்னை பல சமயம் மெய் சிலிர்க்க வைத்ததுண்டு.

குடும்பத்தினர் மீது அதிக அக்கறை கொண்டுள்ள இவர்களுக்குத்தான் கடவுள் அதிக சோதனைகளை கொடுக்கிறார்.இருப்பினும் இவர்கள் அதையெல்லாம் மீறி வெற்றி பெறக்கூடியவர்கள்.

உங்கள் கடக ராசிக்கு சனிபகவான் என்ன செய்யபோகிறார்..?

உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டிற்கு செல்லும் சனிபகவான் ,அர்த்தாஷ்டம சனியாக பலன் தருகிறார்.4 ஆம் இடம் சுக ஸ்தனம்.அர்த்தாஷ்டம சனி என்றாலே வீட்டைக் கட்டு அல்லது வைத்தியம் பார் என்பதே சரி.உடல் ஆரோக்கியம்,சுகம்,தாயார்,வண்டி வாகனங்கள்,சொத்துக்கள் சம்பந்தமான இடத்தில் வந்து நிற்கிறார்.இவற்றில் சில பாதிப்புகளை செய்யும்படி உள்ளார். கவனம் தேவை.

குரு சாதகமாக இல்லாத அமைப்பு இருப்பினும்,சனி 4 ல் இருப்பதாலும் தொழில்,வருமானம் சற்று மந்தமாகவே காணப்படும்.இடமாற்றம் உண்டாகும்.வீடு அல்லது தொழில் செய்யுமிடத்தில் சில மாற்றங்கள் உண்டாகும்.குருப்பெயர்ச்சி வரை சமாளிக்கத்தான் வேண்டும்.சுய ஜாதகத்தில் 1,4,7,10 க்குடையவர் திசை நடந்தால் பிரச்சனை இல்லை.நன்றாக்வே இருக்கும்.மாணவர்களுக்கு அடிக்கடி உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.இடம்,தொழில் மாற்றம் செய்ய நேரலாம்.வீடு மாற எண்ணம் கொண்டவர்கள் உடன் மாறிக்கொள்வது நல்லது.

அதிர்ஷ்ட எண்கள்;5,6

சனி வக்ரம்;
15.2.2012 -2.8.2012
26.3.2013-15.8.2013
10.4.2014-28.8.2014
சனி வக்ரகலம் உங்களுக்கு நன்மையானதே .உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும்.முன்னேற்றமான சூழ்நிலை தென்படும்.

பரிகாரம்;திருப்பதி.சந்திரனின் ராசியில் பிறந்ததால் சந்திரன் திருத்தலம் திருப்பதி சென்று வந்தால் பூரண உடல்நலம்,மனநலம்,நீண்ட ஆயுள் உண்டாகும்.

சமயபுரம் மாரியம்மன்,திருச்செந்தூர் மூன்றில் உங்கள் இஷ்ட தெய்வம் எதுவோ அங்கு சென்று வரலாம்.
வசதி படைத்தவர்கள் ,இஷ்டம் இருப்போர்,நேரம் இருப்போர் ஷீரடி சாய்பாபாவை தரிசனம் செய்யுங்கள்.உங்கள் மனக்குறை அனைத்தும் தீரும்.

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

சனி தோசம் நீங்க வழிபடவேண்டிய கோயில்;கொடுமுடி

சனிபெயர்ச்சி 2011 வரும் நவம்பர் 1 ஆம்தேதி திருக்கணித பஞ்சாங்கப்படி வருகிறது.திருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் வாக்கிய பஞ்சாங்கப்படிதான் சனி பெயர்ச்சி அனுசரிக்கப்படும். வாக்கிய பஞ்சாங்கப்படி 21.12.2011 புதன்கிழமை அன்றுதான் பெயர்ச்சியாகிறார்.நாடு முழுவதும் அன்றுதான் கொண்டாடப்படும்.துல்லியமான கணிதம் திருக்கணிதம் மட்டுமே.எனவே திருநள்ளாறு கோயில் செல்ல நினைப்பவர்கள் நவம்பர் 1ஆம் தேதியே சென்ரு வழிபடுவது இன்னும் அதிக பலன்களை கிடைக்கப்பெறுவது மட்டுமில்லாமல்,நெரிசலில் சிக்கிக்கொள்ளாமலும் வழிபடலாம்.


                                                    நளதீர்த்தம்,திருநள்ளார்

திருநள்ளாறு சனீஸ்வரர் காக வாகனத்தில் அமர்ந்து சிவனுக்கு இடப்புறத்தில் அமர்ந்திருக்கும் அதே அமைப்பில் ஈரோடு மாவட்டம் கொடுமுடி மகுடேஸ்வரர் ஆலயத்திலும் சனிபகவான் அருள்பாலிக்கிறார்.கொடுமுடி மகுடேஸ்வரர் ஆலயம் திரேதா யுகத்தில் அதாவது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கோயிலாகும்.இங்கு சிவன்,பிரம்மா,விஸ்ணு ஆலயங்கள் தனித்தனியே உள்ளன.இரண்டாயிரம் ஆண்டுகள் ப்ழமையான வன்னி மரத்தின் அடியில் பிரம்மா வீற்றிருக்கிறார்.தமைழகத்தின் மிக பழமையான பிரம்மன் ஆலயம் இது.

இக்கோயிலின் எதிரில் தென்வடல் முகமாக திரும்பி பாயும் காவிரி ஆறு கண்கொள்ளாகாட்சி.இக்கோயில் காசி யில் இருக்கும் காசி விஸ்வநாதர் கோயில் அமைப்பை கொண்டுள்ளது என்பர்.

அகத்தியருக்கு சிவபெருமான் தன் திருமணகோலத்தை காட்டிய இடம்.அப்பர்,சுந்தரர்,திருஞானசம்பந்தர் பாடல் பாடிய ஸ்தலம்.கொங்குகோயில்களில் முக்கியைடம் பெற்ற சிவதலம்.கொங்கேழு தலங்கள் என போற்றப்படும் தலகங்களில் இதுவும் ஒன்று.

                                            மகுடேஸ்வரர் கோயில்,கொடுமுடி
  
இங்குள்ள பிரம்மாவை,சிவனை மட்டுமல்ல,பெருமாள் ஸ்ரீரெங்கம் பெருமாளின் சயன கோலத்தில் அருள் பாலிப்பதை காண்பதும் மெய்சிலிர்க்கவைக்கும்.சனிப்பெயர்ச்சியில் கொடுமுடி வழிபாடு மிக சிறப்பு வாய்ந்தது.திருநள்ளாறு செல்ல முடியாதவர்கள் இங்கு சென்றுவரலாம்.
ஆலயம் அமைந்துள்ள இடம்;ஈரோடு டூ கரூர் செல்லும் பாதையில் பஸ் பயணம் ஒருமணிநேரம்..45 கிலோமீட்டர்.

ரஜினியின் குழந்தை பருவம்


ணா


தீபாவளி,பொங்கல், மாதிரி டிசம்பர் 12ம் தேதி ரஜினி ரசிகர்களுக்கு பண்டிகை திருநாள்... சூப்பர் ஸ்டார் பிறந்த அன்று நடந்த நிகழ்சியை பற்றி அவரது அண்ணன் சத்யநாரயணராவ்கெய்குவாட் அவர்களிடம் பேசினோம்.

'' நல்லா ஞாபகம் இருக்கு... 1950, டிசம்பர் 11ம் தேதி ராத்திரி. அம்மா பிரசவ வலியால துடிக்குறாங்க அப்படியும், இப்படியும் புரண்டவங்க கொஞ்ச நேரத்துல கண்ணசந்து தூங்கிட்டாங்க. அப்போ அவங்க  கனவுல மகான்கள் வர்றாங்க... கடவுள், 'கவலைப்படாதே... உனக்கு நல்லபடியா மகன் பிறப்பா..' என்று ஆசீர்வாதம் பண்றார். மறுநாள் காலை மறுபடியும் பிரசவவலி. அப்போ எனக்கு 19வயசு... அப்பா ராமோஜிராவ்கெய்குவாட் போலீஸ்காரர். கார்ல கூப்பிட்டு போகணும்னு ஆசை... ஆனா அதுக்கு கையில காசு, பணம் இல்லை. தனியார் ஆஸ்பத்திரியில சேர்க்கிற அளவுக்கு எங்க குடும்பத்துல அப்படி ஒண்ணும் வசதி கிடையாது. பெங்களூர்ல இருக்குற வாணிவிலாஸ். அரசு மருத்துவனைக்கு அம்மாவை நானும், அப்பாவும் அழைச்சிட்டு போனோம்.

காலைல 11 மணிக்கு அம்மாவுக்கு வலி வந்துடுச்சு... 12.12.1950 மதியம் 12 மணிக்கு பொறந்தார் ரஜினி.. நான், நாகேஸ்வரராவ், சகோதரினு இருந்த எங்க குடும்பத்தோட கடைக்குட்டி ரஜினி...

அம்மா கண்விழிச்சு பார்க்குறாங்க... பக்கத்துல என் தம்பி சிணுங்கலோட... மலங்க... மலங்க முழிச்சு பார்க்குறான். அப்பத்தான் நான் ஆரம்பத்துல சொன்ன கனவு என்கிட்டேயும், அப்பாவிடமும் அம்மா சொன்னாங்க... அம்மாவை பார்க்கறதுக்கும், தம்பி பொறந்ததை பார்க்கறதுக்கு சொந்த பந்தம், சாதி சனம் எதுவுமே வரலை.. என்னையும், அப்பாவையும் தவிர அம்மாவுக்கு ஆறுதலா யாருமே இல்லை..

ஒண்டியா படத்துக்கிட்டு என்னை உத்து உத்து பார்த்துட்டு பொக்கை வாய் காட்டி சிரிச்சான்... இன்னிக்கு டிசம்பர் 12ம் தேதி ரஜினி பொறந்த நாள் அன்னிக்கு உலகமே திருநாளா கொண்டாடுது... ஆனா அவன் பொங்களுரூ அரசு மருத்துவமனையில பொறந்தப்ப ஒருத்திரும் வரலை... அன்னிக்கும் சரி... இன்னைக்கும் சரி ஏழைக்கு ஏதுங்க நாதி...

11 வயது பிரைமரி ஸ்கூலு அஞ்சாங்கிளாஸ் படிக்கிறான். அப்பத்தான் அம்மா இறந்துட்டாங்க. எங்க வீட்டு கடைக்குட்டி ரஜினி, அப்பவுமே துறுதுறுன்னு இருப்பான் அம்மாவுக்கு ரொம்ப பிடிக்கும். அதுபோல அம்மான்னா ரஜினிக்கு உசுரு... ரஜினிக்கு உயிர் கொடுத்த அம்மா உடம்பு உயிர் இல்லாம இருந்துச்சு... ஸ்கூல் விட்டு வந்த ரஜினி அப்படியே அம்மா முகத்தை பார்த்து உறைஞ்சு போயிட்டான்.. எப்பவும் சுறுசுறுப்பா வேகமா இருக்கிறவன் அம்மா இறந்த சோகத்துல கொஞ்சநாள் அமைதியாகிட்டான்.

சென்னைக்கு வந்து சினிமாவுல நடிக்க ஆரம்பிச்சார். அப்பாவை அடிக்கடி சென்னைக்கு அழைச்சுட்டு போய் பாசமா தன்னோட தங்க வச்சுக்குவார். ரஜினிக்கு 30வயது இருக்கும்... அப்பா ராமோஜிராவ் இறந்துட்டார். 'அபூர்வராகங்கள்' 'மூன்று முடிச்சு' படங்கள்ல தம்பி நடிப்பை பார்த்து ரசிச்சார்.  என்ன ஒண்ணு... வில்லனா நடிச்சத பார்த்தவர், பிற்காலத்துல ... ஹீரோவா... இப்போ சூப்பர் ஸ்டாரா உசந்து நிக்கறதை பார்க்காம போயிட்டார்...

எந்த சூழ்நிலை பொறந்தோம்னு அவருக்கு நல்லாத் தெரியும்... இப்பக்கூட ஒவ்வொரு டிசம்பர் 12ம் தேதி அன்னிக்கு தன்னோட பழைய ஞாபகத்துல மூழ்கிடுவார்... அதனால் தான் முன்னாடி எல்லாம் 'என் பிறந்த நாள் அன்று வெளியூரில் இருப்பதால் ரசிகர்கள் என்னைத்தேடி வரவேண்டாம்' என்று  அறிக்கையை பேப்பர்ல கொடுத்து வந்தார்.

கடைக்குட்டி ரஜினிமேல் எங்கம்மாவுக்கு ரொம்ப பிரியம். நல்ல உத்தியோகத்தில் கை நிறை சம்பாதிக்கனும் என்பது அம்மாவோட ஆசை.. இன்னிக்கி என் தம்பி சூப்பர் ஸ்டாரா இருக்கற காட்சியை பார்க்கரத்துக்கு  எங்கம்மா உயிரோட இல்லையேனு நினைக்கும் போது கண் கலங்குது... மனசு பதறுது...

ரசிகருங்க எல்லாம் ரஜினி அரசியலுக்கு வரனும்னு ஆசைப்படுறாங்க... அவருக்கு என்னவோ அதிலே அவ்வளவு இஷ்டம் இல்லை.. சாதாரண நடிகனா நாலு படத்துல தலையை காட்டணும்னுதான் சினிமாவுல நடிக்க சென்னைக்கு வந்தார்.. இப்போ பெரிய நடிகரா உசந்து நிக்கிறான்.. எல்லாத்துக்கும் ஆண்டவனோட ஆசீர் வாதம் தான் காரணம்.  அதுபோல அரசியலுக்கு வரணும்னு அவர் தலையில ஆண்டவன் எழுதியிருந்தா அதை யாரால தடுக்க முடியும்...'' என்று மனமுருகினார்..
thanks;vikatan

ராஜீவ் கொலை வழக்கு..விடை தெரியாத கேள்விகள்-அதிர்ச்சி ரிப்போர்ட்



ராஜீவ் கொலை வழக்கு ..விடை தெரியாத கேள்விகள்-அதிர்ச்சி ரிப்போர்ட்
ராஜீவ்-காந்தி-கொலை
இன்று மின்னஞ்சலில் பரபரப்பாக அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கும் செய்தி ரஜீவ் படுகொலை அதிரும் உண்மைகள் என்ற செய்தியாகும். இந்த மின்னஞ்சல் அப்படியே இங்கே தரப்படுகிறது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை நிகழ்ந்து 20 வருடங்கள் ஆகிவிட்டன. படுகொலை தொடர்பாக விடுதலைப்புலிகளை குற்றவாளிகளாக கைது செய்து அவர்கள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். ஆனால், அதில் இன்னும் மர்மங்கள் தீராமல் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன.

உண்மையில் அந்தக் கொடூரம் யாரால் நடத்தப்பட்டது? என்பது பற்றி இன்றுவரை தெளிவான பதில் இல்லை. இருபது வருடங்களாக புதிது புதிதாக தகவல்களும், புத்தகங்களும் வெளியாகியபடியே இருக்கின்றன.

உண்மையில் நடந்தது என்ன? நடப்பவை என்ன? என்ற சந்தேகங்களோடு ராஜீவ்காந்தி படுகொலை குறித்து ஜெயின் கமிஷனில் நேர் நின்று பல உண்மைகளை அம்பலப்படுத்திய திருச்சி வேலுசாமியை சந்தித்தோம்..

என்ன நோக்கத்திற்காக ஜெயின் கமிஷன் சென்றீர்கள்?

1991- மே 21ம் தேதி இரவு ராஜீவ் படுகொலை நடக்கிறது. அன்று இரவு பத்து மணிக்கு நான் டெல்லியில் இருந்த சுப்ரமணியன் சுவாமியை தொடர்பு கொண்டேன். அப்போது நான் ஜனதா கட்சியில் இருந்தேன். தேர்தல் பிரசார உச்சகட்ட நேரம். அடுத்த நாள் மதுரையில் நடக்க இருக்கும் பொதுக்கூட்டத்திற்கு அவர் வரவேண்டியிருந்தது. அது பற்றி பேசுவதற்காக இரவு 10.25 மணிக்கு தொடர்பு கொண்டேன். எடுத்த எடுப்பிலேயே ‘‘என்ன ராஜீவ்காந்தி செத்துட்டாரு. அதைத்தானே சொல்ல வரே… தெரியுமே.. என்றார்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்போது தகவல் தொடர்பு வசதி ஏதும் இல்லை. பதட்டமடைந்த நான், திருச்சியில் உள்ள உளவுத்துறை அதிகாரிகளிடம் தகவலை உறுதிப்படுத்திக் கொள்ளக் கேட்டேன். ‘அப்படி ஏதும் தெரியவில்லையே’ என்றார்கள். அந்த நேரத்திற்கெல்லாம் ராஜீவ்காந்தி இறந்தாரா இல்லையா என்பதையே உறுதிப்படுத்த முடியவில்லை. இரவு 10.10 க்கு குண்டு வெடிக்கிறது. பெரும் புகை மூட்டம். கூச்சல்.. குழப்பம்.. கொஞ்ச நேரம் கழித்து ஜெயந்தி நடராஜன்தான் தனியே கிடந்த ராஜீவ் காலை பார்க்கிறார். மூப்பனாரிடம் சொல்லி கத்துகிறார். அவர் வந்து மற்ற சடலங்களுக்கு இடையே தேடுகிறார். கடைசியில் ராஜீவின் எல்லா பாகத்தையும் பார்த்து உறுதிப்படுத்தவே அரை மணி நேரம் ஆனது என்று அடுத்த நாள் மாலை நாளேட்டிற்கு பேட்டி கொடுத்தார். ஆக 10.40 மணிக்குதான் படுகொலையான தகவலை உறுதிப்படுத்த முடிந்தது.

அப்படியிருக்கும்போது சுப்ரமணிய சுவாமிக்கு மட்டும் எப்படி முன்பாகவே தெரியும்? யார் சொன்னார்கள்? முதன்முதலாக அவர்தான் மீடியாவிற்கு ‘விடுதலைப்புலிகள்தான் இந்த படுகொலையை செய்தார்கள்’ என்று செய்தி தருகிறார். அடுத்த நாள்தான் விசாரணையே தொடங்குகிறது. திடீரென்று புலிகள் மீது ஏன் பழி போட வேண்டும்? இதெல்லாம் என்னை சந்தேகிக்க வைத்தது. அது மட்டுமின்றி அந்த படுகொலை சம்பவத்திற்கு முன்னும் பின்னுமாக பார்த்தால் சுவாமியின் நடவடிக்கைகளில் பல சந்தேகம். மர்மம். அதிர்ச்சி. இதுவெல்லாமும்தான் என்னை ஜெயின் கமிஷனுக்கு போக வைத்தது.’’

சுப்பிரமணியன் சுவாமி மேல் சந்தேகித்து மனு கொடுத்ததை ஏற்றுக் கொண்டார்களா? அந்த அனுபவங்கள் பற்றி சொல்லுங்கள்..

நான் எதிர்த்து நிற்பது சாதாரண ஆட்களை அல்ல என்பது எனக்கு நன்றாகத் தெரியும். இருந்தாலும், துணிந்து ஜெயின் கமிஷன் முன்பு நின்றேன். எனது மனுவை வாங்கிப் பார்த்த கமிஷனின் செகரட்டரி மனோகர் லால் என்னை மேலும் கீழுமாக பார்த்தார். படித்துவிட்டு நிமிர்ந்தவர் முகத்தில் கடுகடுப்பு. ‘சுப்ரமணியன் சுவாமி மீதா குற்றம் சொல்கீறீர்கள். சந்தேகிக்கிறீர்கள்?’ என்றார். ‘ஆமாம்’ என்றேன். அந்த மனுவை அப்படியே டேபிள்மீது போட்டுவிட்டு, ‘நாளை வாருங்கள்.. பார்க்கலாம்’ என்றார். என்னுடைய மனுவை ஏற்கமாட்டர்கள் என்று எனக்கு சந்தேகம்.

பெரிய மன உளைச்சல். என்னுடைய பாதுகாப்புக் காரணம் கருதி, சாதாரணமான ஓட்டல்களில்.. வேறு பெயரில் தங்கினேன். அந்த நேரத்தில்தான் மூத்த காங்கிரஸ் எம்.பியான ரஜினி ரஞ்சன் சாகு என்னை சந்திப்பதற்காக தேடி அலைந்திருக்கிறார். இவர் சோனியாவின் குடும்பத்திற்கு நெருக்கமானவர். இது பற்றி எனது தஞ்சை நண்பர் என்னிடம் சொன்னார்.

நானே ரஜினி ரஞ்சன் வீட்டிற்கு நேராக சென்றேன். ‘உங்களை சந்திக்க வேண்டும் என்று சோனியாஜி வீட்டில் தேடுகிறார்கள்’ என்றார். பிறகு, அங்கிருந்து ரஜினி ரஞ்சனுடன் சோனியாவின் வீட்டிற்கு சென்றேன். ‘மேடம் இல்லை’ என்று என் பெயரைச் சொன்னதும் பதட்டமாய் சொன்னார்கள். ஏமாற்றத்தோடு அடுத்த நாள் காலையில் வருவதாக சொல்லி திரும்பிவிட்டேன்.’’

அதன் பிறகு சோனியா காந்தியை சந்தித்தீர்களா?

இதுவரை எந்த ஊடகத்திற்கும் சொல்லாத செய்தியை உங்களிடம் கூறுகிறேன். அடுத்த நாள் நான் சோனியாவை சந்தித்தேன். அந்த வீடே ஒருவித நிசப்தமாக இருந்தது. இப்போதும் அங்கே இருக்கும் மாதவன், பிள்ளை என்ற சோனியாவின் உதவியாளர்கள் என்னை உள்ளே அழைத்துச் சென்றார்கள். ஜெயின் கமிஷனில் நான் அபிடவிட் தாக்கல் செய்யப் போவதைப்பற்றி கேட்டார்கள். படுகொலைக்கான சந்தேகம் யார் மீது? அதற்கான பின்னணி? வேறு பல சந்தேகம்? என்று ஒவ்வொன்றையும் கேட்டார்கள். மாதவனும், பிள்ளையும்தான் நான் பேசியதை சோனியாவிற்கு மொழி பெயர்த்தார்கள். நான் பேசப் பேச பென்சிலால் குறிப்பெடுத்துக்கொண்டே இருந்தார். டேபிளில் இருந்த டேப் ரிக்கார்டரும் பதிவாகிக் கொண்டிருந்தது.

மூன்று மணி நேர சந்திப்புக்குப் பின், ‘இதில் உங்களுக்கு என்ன ஆர்வம்? கட்சியிடம் இருந்து ஏதாவது எதிர்பார்க்கிறீர்களா? எதிர்பார்ப்பு ஏதுமில்லாமல் இதை நீங்கள் ஏன் செய்ய வேண்டும்?’ என்றெல்லாம் கேட்டார். ‘எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. உண்மை வெளிவந்தால் போதும்.’ என்பதை விளக்கினேன்.

வாசல் வரை வந்துவிட்டு, மிகவும் தயங்கியபடியே அவரைப் பார்த்தேன். ‘உங்களுக்கு என்ன உதவி வேண்டும் என்றாலும் தயங்காமல் கேளுங்கள்’ என்றார்கள். ‘என் முயற்சி எல்லாம் வீணாகிவிடுமோ என்ற அச்சமாக இருக்கிறது. நேற்று மனு கொடுத்த போதே கமிஷனின் செகரட்டரி ஒரு மாதிரியாகத்தான் பார்த்தார். அந்த மனு ஏற்கப்பட்டால்தான் நான் என் தரப்பு கேள்விகளை எழுப்ப முடியும். பல உண்மைகளை வெளிகொண்டுவர முடியும். அதற்கு ஏதாவது நீங்கள் உதவ முடியுமா?’ என்றேன்.

என்றைக்கு உங்கள் மனு ஏற்பு விசாரணை வருகிறது?’ என்று கேட்டார். நான் தேதியைச் சொன்னேன். குறித்துக்கொண்டு ‘சரி போய் வாருங்கள்’ என்றார். சட்டென்று என்ன நினைத்தாரோ தெரியவில்லை. அங்கே இருந்த டைரியில் ஒரு தாளை கிழித்து பென்சிலால் அந்த வீட்டில் இருந்த ஐந்து தொலைபேசி நம்பரை எழுதி, ‘எப்போது வேண்டுமானாலும், எங்கிருந்தாலும் சரி. எந்தவிமான அவசரம் என்றாலும், உதவி என்றாலும் கேளுங்கள்’ என்று கூறியபடியே அந்த தாளை நீட்டினார். வாங்கி வைத்துகொண்டேன்.

அதோடு சரி. அதன் பிறகு நான் அவரை சந்திக்கவே இல்லை. இருபது ஆண்டுகள் ஓடிவிட்டது. அவர்களிடம் உதவி வேண்டிதான் அல்லது ஏதாவது பதவியை வேண்டிதான் நான் இந்த காரியத்தை செய்தேன் என்று தவறாக நினைத்துவிடக்கூடாது. அந்த ஒரே காரணத்திற்காக தொலைபேசியில்கூட பேசாமல் விட்டுவிட்டேன்.’’

சோனியாவிடம் என்ன பேசினீர்கள் என்பதை சொல்லவில்லையே? அதன்பிறகு டெல்லியில் என்ன நடந்தது?

அதை எந்த காலத்திலும் சொல்ல மாட்டேன். அது நாகரீகமாக இருக்காது. ஆனால், அதன் பிறகு என்ன மாதிரியான உதவி கிடைத்தது என்பதையும் சொல்ல வேண்டும். என்னுடைய மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதா? வேண்டாமா? என்ற குழப்பம் வந்த நாளில் திடீரென்று பார்த்தால் அந்த பகுதியே பெரும் பரபரப்பானது. அதிரடிப்படை போலீசாரின் பதட்டம். கருப்பு பூனை பாதுகாப்பு வீரர்கள் சூழ பிரியங்கா உள்ளே வந்துகொண்டிருந்தார். வந்தவர் அமைதியாக உட்கார்ந்துகொண்டார். என் மனு மீதான விசாரணை வந்தது.

நான் என்னுடைய காரணங்களை சொன்னேன். ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதோடு சரி. பிரியங்கா என்னை பார்த்து சிரித்தபடியே கிளம்பிவிட்டார். எனக்கு செய்த ஒரே உதவி அதுதான்.

பிறகு, நான் சுப்ரமணியன் சுவாமியை குறுக்கு விசாரணை செய்த மூன்று நாட்கள் பிரியங்கா காந்தி மீண்டும் நேரில் வந்திருந்தார். அந்த மூன்று நாட்களும் நடப்பவற்றை குறிப்பெடுத்து கொண்டிருந்தார். புறப்படும்போது என்னை பார்த்து சிரித்தபடியே போவார்.’’

சுப்ரமணியன் சுவாமியிடம் நடந்த அந்த குறுக்கு விசாரணை எப்படி அமைந்தது?

ராஜீவ் படுகொலை உங்களுக்கு மட்டுமே எப்படி முன் கூட்டியே தெரிந்தது.? கொலை செய்தது விடுதலைப்புலிகள்தான் என்று எதை வைத்து சொன்னீர்கள்? லண்டனில் இருந்து புலிகள் சார்பாக அறிக்கை கொடுத்த கிட்டு ‘கொலைக்கு காரணம் புலிகள் இயக்கம் இல்லை’ என்ற போது நீங்கள் விடு தலைப்புலிகள்தான் காரணம் என மீடியாவிற்கு செய்தி கொடுக்கக் காரணம் என்ன? என்றெல்லாம் கேட்டேன். சுப்பிரமணியன்சாமியோ ‘எனக்கு இலங்கையில் இருந்து தகவல் வந்தது.’ என்றார்.

சம்பவ இடத்தில் இருந்த அதிகாரிகளால் உறுதிப்படுத்த முடியவில்லை. தமிழக காவல்துறை உறுதி யாக சொல்லவில்லை. மத்திய அரசும் உறுதியாக தகவலை பெறவில்லை. அப்படியிருக்கும்போது இலங் கைக்கு தெரிகிறதென்றால் யார் அந்த நபர்?‘ என்றேன். திருதிருவென முழித்தார். அதே போன்று ராஜீவ் படுகொலை நாளான மே- 21 க்கு அடுத்த நாள் சுவாமிக்கு மதுரையில் ஒரு பொதுக்கூட்டம் இருந்தது. மாலை நாளேடுகளில் பெரிய விளம்பரம் எல்லாம் கொடுத்திருந்தார்கள்.

மதுரை பொதுக்கூட்டத் துக்கு நீங்கள் வருவதற்கு விமானத்திற்கு முன்பதிவு செய்த டிக்கெட் எங்கே?’ என்று கேட்டதும் அவருக்கு வியர்த்து கொட்ட தொடங்கியது. அது தேர்தல் காலம். விமான டிக்கெட் எல்லாமே முன்பதிவு செய்யப்பட்டிருக்கும். சுவாமி அப்படி ஒரு விமான டிக்கெட்டை பதிவு செய்யவே இல்லை. காரணம், ராஜீவ் படுகொலை திட்டம் அவருக்கு தெரிந்திருக்கிறது. அசம்பாவிதம் நடக்கப் போகிறது. எதற்கு போகவேண்டும்? என நினைத்திருக்கிறார்.

அது மட்டுமல்ல. மே-21 -க்கு முன்பாக தமிழக பிரசாரத்தில்தான் இருந்தார் சுவாமி. நான்தான் அவருக்கு மொழிபெயர்ப்பாளர். அப்போது அவருக்கு தமிழ் தெரியாது. படுகொலைக்கு முதல் நாள் 20 -ம் தேதி சேலத்தில் தங்கியிருந்தோம். ‘கட்சி செலவுக்கு பணம் இன்னும் வரவில்லையே?’ என்று நிர்வாகிகள் கேட்டார்கள். அதற்கு சுவாமி ‘தேர்தல் நடந்தால் பார்த்துக்கொள்ளலாம். என்ன அவசரம்?‘ என்று சொன்னார். அதைப் பற்றிக் கேட்டும் பதில் இல்லை.

அதைவிட முக்கியம், அன்று இரவு ஒரு மணிக்கு சேலம் ஆத்தூரில் கூட்டம். முடிந்தவுடன் அவசர வேலை, டெல்லிக்கு போக வேண்டும் என்று சென்னைக்கு பறந்தார். இது திடீரென்று நடந்தது. அந்த நேரத்திற்கு விமானம் இல்லையே என்றபோது பரவாயில்லை நான் பார்த்துக்கொள்கிறேன் என காரில் பறந்தார். அவருக்கு பின்னால் வந்த நிர்வாகிகளின் கார் அச்சிரப்பாக்கம் அருகே விபத்தில் சிக்கியது. முன்னாள் எம்.எல்.ஏ குருமூர்த்தி சேலம் மாவட்ட ரத்தினவேல், காஞ்சிபுரம் ஏகாம்பரம் ஆகியோருக்கு படுகாயம். சுவாமி அதைக்கூட பொருட்படுத்தாமலே சென்னைக்கு ஓடினார்.

இதைப்பற்றி கேட்பதற்கு நான் டெல்லிக்கு போன் செய்தேன். காலை ஃபிளைட்டில் சுவாமி சென்றிருந்தால் ஒரு ஒன்பது மணிக்குள்ளாக வீட்டில் இருக்க வேண்டும். அதை மனதில் வைத்து பேசினேன். சுவாமியின் மனைவிக்கு என்னை நன்கு தெரியும். அவரது குடும்பத்தில் ஒருவராக பார்த்தார். ‘என்ன வேலுசாமி.. அவர் அங்கதானே இருக்கிறார்.. இங்கு கேட்கிறீர்களே?’ என்றார்.
எனக்கு குழப்பம். உடனே அவரது அலுவலகத்திற்கு பேசினேன். அங்கிருந்தும் அதே பதில்தான். சென்னையில்தான் இருக்கிறாரோ என்று சென்னைக்கு பேசினேன். சுவாமிக்கு வேண்டிய நண்பர்களிடம் எல்லாம் பேசினேன். எல்லோரும் அவர் டெல்லியில் இருப்பதாக சொன்னார்கள். சுவாமி அப்போது மத்திய அமைச்சராக இருந்தார்.

தினசரி ‘மூவ்மெண்ட் ரிப்போர்ட் பைல்’ என்பது அமைச்சர்களுக்கு கட்டாயம் உண்டு. அது எங்கே என்று கேட்டால் தொலைந்துவிட்டது என்றார். என்னவென்றால் அன்றைய தினம் சுவாமி டெல்லிக்கே போகவில்லை. சென்னையில் உள்ள பிரபலமான மருத்துவமனை அருகில் இருக்கும் ஒரு ஓட்டலில் சந்திராசாமி பதிவு ஏதும் செய்யாமல் ரகசியமாக தங்கியிருந்தார். அவரோடுதான் சுவாமியும் இருந்துள்ளார். அங்கிருந்து காரிலேயே பெங்களூருவுக்கு சென்றிருக்கிறார்கள்.

ராஜீவ் படுகொலைக்கு ஒரு நாள் முன்பு அந்த இரண்டு சாமிகளின் நடவடிக்கை மர்மாகவே இருந்தது. இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் சுப்பிரமணியன் சுவாமியிடம் பதிலே இல்லை. அவரது சட்டையெல்லாம் நனைந்து, வேர்வை கொட்டியது. அமைதி என்றால் அப்படி ஒரு அமைதி அங்கே. பிரியங்கா என்னையும் பார்க்கிறார். சாமியையும் பார்க்கிறார். பிரியங்காவின் முகத்தில் அப்படி ஒரு ஆவேசம். கோபம். நீதிபதி ஜெயின் சுவாமியையே உற்று பார்த்தபடி கோர்ட் கலைகிறது என்றுகூட சொல்லாமல் எழுந்து போய்விட்டார்.

ராஜீவ் படுகொலையை செய்தது விடுதலைப்புலிகள்தான் என்று சி.பி.ஐ அதிகாரி கார்த்திகேயன், ரகோத்தமன் கூறியிருக்கிறார்களே?

அதை மறுக்கின்றேன். என்னுடைய வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் ஜெயின் கமிஷன், ‘சந்திராசாமி, சுப்ரமணியன் சுவாமி ஆகியோரை விசாரிக்க வேண்டியிருக்கிறது. அவர்கள் போதிய ஒத்துழைப்பை தரவில்லை’ என்றது. அதை ஏற்று பல்முனைநோக்கு புலன் விசாரணை குழு போட்டார்கள். அந்த குழு சுப்ரமணியன் சுவாமியையும், சந்திராசுவாமியையும் 20 வருடங்கள் ஓடியும் இன்றுவரை அழைத்து விசாரிக்கவே இல்லை.

சுப்ரமணியன் சுவாமியுடன் எப்போதும் ஒரு பெண் இருப்பார். சுவாமி போகும் பொதுக் கூட்டங்களில் அந்த பெண்ணும் இருப்பார். அவர் ஈழத்தைச் சேர்ந்த புலிகளின் எதிர்ப்பு குழுவை சேர்ந்தவர். அந்தப் பெண் ராஜீவ் படுகொலைக்கு பிறகு சுவாமியுடன் இல்லை. எங்கு போனார் என்றே யாருக்கும் தெரியவில்லை. அதற்கான புகைப்பட ஆதாரத்தை நான் பல்முனைநோக்கு புலன் விசாரனை குழுவிடம் கொடுத்தேன்.

சி.பி.ஐ அதிகாரி கார்த்திகேயனும், சி.பி.ஐ. விசாரணை அதிகாரியான ரகோத்தமனும் எழுதி வெளியிட்ட புத்தகம் எல்லாம் சி.பி.ஐ தயாரித்த ஆவணங்களை வைத்துதான் எழுதப்பட்டது. அது அவர்களே உருவாக்கியது.

என்னுடைய வாக்குமூலம், என்னுடைய சந்தேகம். அதற்கான ஆதாரங்கள் எல்லாம் சொல்வது ‘இந்த படுகொலையை விடுதலை புலிகள் செய்யவில்லை’. அந்தளவிற்கு அது முட்டாள்தனமான இயக்கமும் அல்ல. அதை செய்தது வேறு ஒரு போராளி குழு. அந்த குழுவுக்குதான் வெளிநாட்டு சதி தொடர்பு இருக்கிறது. அவர்களை இங்கே வழிநடத்தியது எல்லாம் இரண்டு சாமிகளும்தான் என்பதே என் கருத்து!

நன்றி – சூரியகதிர்,எள்ளாளன்

மூவர் தூக்கு தண்டனையை ரத்து செய்க;
ராஜீவ் கொலை வழக்கு விசாரணை தீர்ப்பில் 20 வருடம் சிறையில் கழித்து செப்டம்பர் 9 ஆம் தேதி தூக்கு தண்டனைக்கு காத்திருக்கும் மூவரையும் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தன் அதிகாரத்துக்குட்பட்டு தண்டனை அளவை குறைக்க வேண்டும் என வேண்டுகிறேன்.